எம்ஏசிசி இன்னும் இசா சொத்துக்களை முடக்கவில்லை

நேற்று   கைது    செய்யப்பட்ட   பெல்டாவின்   முன்னாள்  தலைவர்    முகம்மட்  இசா   சமட்டின்   சொத்துக்களை  முடக்குவது   தொடர்பில்  மலேசிய   ஊழல்தடுப்பு   ஆணையம் (எம்ஏசிசி)  இன்னும்  முடிவு   செய்யவில்லை.  பெல்டாவின்  துணை  நிறுவனமொன்று    இரண்டு  ஆடம்பர ஹோட்டல்கள் வாங்கியதன்   தொடர்பில்  அவர்  கைது   செய்யப்பட்டார். விசாரணை   அதிகாரிகளிடமிருந்து    மேலும்    தகவல்கள்   வந்த …

பிகேஆர்: இசா நீதிமன்றத்தில் நிறுத்தப்பட வேண்டும்

ஃபெல்டாவின்  முன்னாள்   தலைவர்   இசா   சமட்   கைது   செய்யப்பட்டது  ஓரு  பெரிய    விசயம்போல்    தெரிகிறது.  ஆனால்,  அது   வெறும்  கண்துடைப்பாக  அமைந்து  விடக்கூடாது     என்கிறார்   பிகேஆர்     தலைவர்    ஒருவர். இசா  நீதிமன்றத்தில்  நிறுத்தி   விசாரிக்கப்பட    வேண்டும்.  அதை   அரசாங்கம்   உறுதிப்படுத்த   வேண்டும்    என   பிகேஆர்   உதவித்    தலைவர்    ஷம்சுல்   …

ஐஜிபி: மறைப்பதற்கு ஏதுமில்லை 2-க்கு போலீஸ் அழைக்கப்படவில்லை

மறைப்பதற்கு   ஏதுமில்லை   கருத்தரங்கு   நடைபெற்ற  மண்டபத்துக்குப்   பாதுகாப்பு  வழங்க  போலீஸ்   அழைக்கப்படவில்லை  என   இன்ஸ்பெக்டர்- ஜெனரல்   அப்   போலீஸ்   காலிட்   அபு   பக்கார்   கூறினார். “மண்டபப்  பாதுகாப்புக்கு   நாங்கள்  பொறுப்பேற்கவில்லை.  போலீஸ்   அதிகாரிகள்     மண்டபத்துக்கு   வெளியில்தான்   இருந்தனர்.  ஏனென்றால்   அந்நிகழ்வுக்கு   வருமாறு   போலீசுக்கு   அழைப்பு   இல்லை. “வெளியில்   மட்டும்  …

சிருல் பாதுகாப்பு விசாவுக்காக ஆஸ்திரேலிய அரசிடம் மேல்முறையீடு

தப்பியோடிய  கொலைக்குற்றவாளியான   சிருல்   அஸ்ஹார்   உமர்,  மலேசியாவுக்குத்  திருப்பி   அனுப்பப்பட்டால்   தன்னைத்  தூக்கிலிட்டு   விடுவார்கள்    என்பதால்   தன்னுடைய   பாதுகாப்பு   விசாவை   நிராகரிக்கக்   கூடாது    என்று  ஆஸ்திரேலிய   அரசாங்கத்திடம்   கேட்டுக்கொண்டிருக்கிறார். அந்த  முன்னாள்  போலீஸ்  அதிரடிப்  படைவீரர்   ஆஸ்திரேலியாவில்   தங்குவதற்கு    விசாவுக்காக   செய்துள்ள    மனு   நிராகரிக்கப்படலாம்    என்று    குடிநுழைவு,  எல்லைப் …

பாஸ்: மெமாலிச் சம்பவம்மீது ஆர்சிஐ தேவை

1985  மெமாலிச்  சம்பவத்தை   விசாரிக்க   அரச   விசாரணை    ஆணையம்    அமைக்கப்பட    வேண்டும்    என்று  பாஸ்   கோரிக்கை   விடுத்துள்ளது. ஆர்சிஐ   அமைக்கப்பட்டால்    அது   அன்று   உண்மையில்   நடந்தது  என்ன   என்பதைக்   கண்டறியும்   பாஸ்   துணைத்  தலைவர்   துவான்   இப்ராகிம்  மான்   கூறினார். “உண்மைக்கு   முரணான   பல்வேறு   கூற்றுக்களையும்  பார்க்கையில்  மெமாலிச் …

நஜிப் : மகாதீரால் என்னை சுலபத்தில் துரத்த முடியாது

அம்னோ தலைவர்களுடன் தனக்கு இருக்கும் நெருக்கம் போன்று டாக்டர் மகாதீருக்கு இல்லை. அதனால், தன்னைப் பதவியிலிருந்து விரட்ட, அவரால் முடியாது எனப் பிரதமர் நஜிப் ரசாக் கூறியுள்ளார். “அந்த முன்னாள் பிரதமர், மாநில மந்திரி பெசார்களின் வழியே ஒவ்வொரு மாநிலத்தையும் இயக்கி வந்தார். அம்னோ பிரிவு தலைவர்கள் யாரையும்…

மலாய்க்காரர்களின் வாக்குகள் மாறிவிட்டன, பக்காத்தான் ஹராப்பான் புத்ரா ஜெயாவைக் கைப்பற்றும்

222 நாடாளுமன்றச் சீட்டுகளில் 113 சீட்டுகளைப் பிடிக்க, மலாய்க்காரர்களின் 10% ஓட்டும், மலாய்க்காரர் அல்லாதோரின் 5% ஓட்டும் போதுமென, ஜனநாயக செயல் கட்சியின் மூத்தத் தலைவர் லிம் கிட் சியாங் கோடி காட்டியுள்ளார். சாதாரணப் பெரும்பான்மையில், 5 மாநிலங்களோடு புத்ரா ஜெயாவையும் பக்காத்தான் ஹராப்பான் கைப்பற்றும் வாய்ப்புள்ளது என…

“பிரதமர் நஜிப்பை வீழ்த்த நினைக்கும் எனது ஆதரவாளர்கள் நடுங்கக்கூடாது…யாருக்கும் பயப்படக்கூடாது”,…

  மறைப்பதற்கு ஏதுமில்லை 2.0 கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ஏற்பட்ட அமளி தமது வாயை அடைப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சி என்று மகாதிர் நம்புகிறார். அச்சுறுத்தலை ஏற்றுக்கொள்ள மறுத்த அவர், தாம் தொடர்ந்து உண்மையைப் பேசப் போவதாக சூளுரைத்தார். "என் வாயை அடைப்பதற்கு ஒரு கட்சி வன்முறையைப் பயன்படுத்தப் பார்க்கிறது, அது…

இஸா சாமாட் ஹோட்டல்கள் வாங்கிய விவகாரம் சம்பந்தமாகக் கைது செய்யப்பட்டார்

  மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையம் (எம்எசிசி) பெல்டா முன்னாள் தலைவர் இஸா சாமாட்டை இன்று பிற்பகல் மணி 4.24 அளவில் கைது செய்தது. பெல்டா இன்வெஸ்ட்மென்ட் கார்ப்பொரேசன் வாங்கிய இரண்டு ஹோட்டல்கள் சம்பந்தமாக அவர் கைது செய்யப்பட்டதாக ஒரு தகவல் கூறுகிறது. 2014 மற்றும் 2015 ஆம்…

ஜாஹிட்: ‘கிழவர் காலத்து’ ஐஎஸ்ஏ அளவுக்கு மோசமானதல்ல பொக்கா

முன்னாள்   பிரதமர்  டாக்டர்  மகாதிர்   காலத்து  நிர்வாகத்தைச்   சாடிய   துணைப்  பிரதமர்   அஹமட்   ஜாஹிட்  ஹமிடி,   1959 குற்றத்தடுப்புச்   சட்டம் (பொக்கா)   உள்நாட்டுப்   பாதுகாப்புச்   சட்ட(ஐஎஸ்ஏ)த்தின்    அளவுக்கு   மோசமானதல்ல    என்றார். பொக்கா   சட்டத்தில்    உள்துறை   அமைச்சரின்    அதிகாரம்   வரையறுக்கப்பட்டிருப்பதாக   ஜாஹிட்  கூறினார். “முந்தைய   ஐஎஸ்ஏ-யில்   பேசிக்கொண்டிருக்கும்   நானே   ‘ஒரு  …

சிலாங்கூர் குடியிருப்பாளர்களுக்கு மாநில அரசின் செயல்பாட்டில் திருப்தி

சிலாங்கூர்   குடியிருப்பாளர்களில்   72  விழுக்காட்டினர்   மாநில   அரசின்   செயல்பாடுகாளில்   மனநிறைவு   கொண்டுள்ளனர். மெர்டேகா   மையம்   ஜனவரி   23  தொடங்கி    ஜூன்  29வரை   12,001   குடியிருப்பாளர்களிடாம்   ஆய்வு   மேற்கொண்டதாகவும்   அந்த   ஆய்வில்   மேற்காணும்   முடிவு   கிடைத்ததாகவும்   ஊராட்சி   மன்றங்களுக்குப்  பொறுப்பான    மாநில     ஆட்சிக்குழு   உறுப்பினர்   இயான்   யோங்   ஹியான்   கூறினார்.…

சைட் : ஹராபான் தலைவர்கள் ‘மறைப்பதற்கு ஏதுமில்லை’ நிகழ்ச்சிகளை நிறைய…

முன்னாள்  சட்ட   அமைச்சர்   சைட்   இப்ராகிம்,  “பல    விசயங்களை  மறைத்து  வைத்துள்ள  கயவர்களை  அம்பலப்படுத்த”  பக்கத்தான்   தலைவர்கள்  “மறைப்பதற்கு   ஏதுமில்லை”   போன்ற   நிகழ்ச்சிகளை   நிறைய    நடத்த   வேண்டும்  என்று  வலியுறுத்தினார். மற்ற    ஹராபான்    தலைவர்களும்   டாக்டர்  மகாதிர்  முகம்மட்டைப்  பின்பற்றி   அச்சமின்றி   கடுமையான   கேள்விகளுக்குப்   பதிலளிக்க   வேண்டும்.   வெளிப்படையாகவும்  …

முஹிடின் : ஜொகூரைப் பக்காத்தான் ஹராப்பான் கைப்பற்றும்

எதிர்வரும் பொதுத் தேர்தலில், ஜொகூர் மாநிலம் பக்காத்தான் ஹராப்பான் கைவசமாகுமென்று முஹிடின் யாஷின் ஆருடம் கூறியுள்ளார். ஜொகூர் மக்கள் ‘பல்வேறு சம்பவங்களால்’ தற்போதைய பாரிசான் நேசனல் நிர்வாகத்தின் மீது விரக்தி அடைந்துள்ளனர் என்று பிரிபூமி பெர்சத்து மலேசியா கட்சியின் தலைவருமான முஹிடின் தெரிவித்தார். “ஜொகூர் மாநிலத்தில் அதிகப் பிரச்சனைகள்…

பீயின் ரிமாண்ட் உத்தரவு நீக்கப்பட்டது விசாரணையை சிரமமாக்கும், எம்எசிசி கூறுகிறது

பினாங்கு மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் பீ பூன் போவுக்கு எதிரான தடுப்புக் காவல் உத்தரவை பினாங்கு உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது அவருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டிருக்கும் விசாரணைக்கு சிரமத்தை ஏற்படுத்தும் என்று மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையம் (எம்எசிசி) கூறுகிறது. பினாங்கு உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக எம்எசிசி செய்யத் திட்டமிட்டுள்ள…

சிலாங்கூர் பறிபோனதற்கு கீர் தோயோதான் காரணம்- தெங்கு அட்னான்

சிலாங்கூர்   பிஎன்,   பொதுத்   தேர்தலில்   வெற்றிபெற   நினைத்தால்   அதன்  பலவீனங்களையும்   கடந்த   பொதுத்   தேர்தலில்   மாநிலத்தைக்  கைப்பற்ற  முடியாமல்   போனதற்கான   காரணங்களையும்    கண்டறிய    வேண்டும்  என   அம்னோ    தலைமைச்   செயலாளர்    தெங்கு   அட்னான்   துங்கு   மன்சூர்   கூறினார். பிஎன்  12வது   தேர்தலில்   சிலாங்கூரில்   தோற்றுப்போனது.  அதற்கு   மந்திரி   புசார்  …

குவான் எங், நோர்லேலா ஆகியோரிடம் எம்ஏசிசி வாக்குமூலம் பதிவு செய்யும்

மலேசிய   ஊழல்தடுப்பு   ஆணையம் (எம்எசிசி),  புக்கிட்   மெர்தாஜாம்,  கம்போங்   சுங்கை   லெம்பு-வில்    செயல்பட்டுவரும்   சட்டவிரோதத்   தொழிற்சாலை   தொடர்பாக    முதலமைச்சர்    லிம்   குவான்   எங்கையும்    பெனாந்தி   சட்டமன்ற    உறுப்பினர்     டாக்டர்   நோர்லேலா   அரிப்பினையும்  விசாரணைக்கு   அழைக்கும். இதைத்   தெரிவித்த    எம்ஏசிசி   துணைத்   தலைமை   ஆணையர் (நடவடிக்கை)  அஸாம்   பாகி,    சரியான  …

பினாங்கு அம்னோ நோர்லேலாவுக்கு ஆதரவு: பிகேஆர் அவரைக் கைவிட்டதாகவும் சாடியது

மலேசிய   ஊழல்தடுப்பு   ஆணையம் (எம்ஏசிசி),  புக்கிட்   மெர்தாஜாமில்  ஒரு   சட்டவிரோதத்   தொழிற்சாலைக்கு   எதிராக   நடவடிக்கை   எடுத்ததற்கு   நன்றி  தெரிவித்த   பெனாந்தி    சட்டமன்ற   உறுப்பினர்   நோர்லேலா  அரிப்பினைத்   தட்டிக்கொடுத்துப்   பாராட்டாமல்   ஒதுங்கிக்கொண்ட  பிகேஆரின்   செயலைக்  கண்டு   பினாங்கு   அம்னோ     அதிர்ச்சி   அடைந்துள்ளது. எம்ஏசிசி  மேற்கொண்ட    நடவடிக்கையால்  மாநிலச்  சுற்றுச்சூழல்,   நலவளர்ச்சி, …

கருத்தரங்கில் நிகழ்ந்த வன்செயல்கள் வருத்தம் தருகின்றன- துணைப் பிரதமர்

துணைப்    பிரதமர்    அஹ்மட்   ஜாஹிட்   ஹமிடி,  நேற்று  மறைப்பதற்கு   ஏதுமில்லை  2.0  கருத்தரங்கில்  நிகழ்ந்த  வன்செயல்களுக்கு  வருத்தம்  தெரிவித்தார். “மறைப்பதற்கு   ஏதுமில்லை  கருத்தரங்கில்  நிகழ்ந்ததை  நினைக்கையில்   வருத்தமாக   இருக்கிறது.  ஒரு  ஜனநாயக   நாட்டில்  இப்படியெல்லாம்   நடக்கக்  கூடாது. “போலீசார்  விசாரணை   செய்து   தக்க   நடவடிக்கை   எடுப்பார்கள்,  அதற்குக்  காரணமானவர்கள்  …

முன்னாள் பிரதமருக்குக் கொஞ்சமும் மரியாதை இல்லையா? நேற்றைய சம்பவத்தை போலீசார்…

 நேற்றைய   மறைப்பதற்கு   ஏதுமில்லை  2.0  கருத்தரங்கில்   நடந்த  வன்செயல்களைக்   குறிப்பாக   முன்னாள்   பிரதமருக்கும்   அவரின்  துணைவியாருக்கும்   எதிராக     நடந்த  சினமூட்டும்   செயல்களைப்   பல  தரப்பினரும்   கண்டித்துள்ளனர். “ அங்கு   நடந்த   எதுவுமே  சரியல்ல.  பொதுக்   கருத்தரங்குகளில்   சண்டையிடுவதையும்   சுடரெரிகளைக்  கொளுத்திப்போடுவதையும்  யாரும்  நியாயமான   செயல்கள்   என்று   கூற  மாட்டார்கள்.…

நஸ்ரி: அம்னோ வெற்றிபெறக்கூடிய வேட்பாளர்களையே களமிறக்க வேண்டும்

அம்னோ  உறுப்பினர்கள்    “ஜாலியாக”  இருந்தது  போதும்,  இனி    தீவிரமாக   சிந்திக்க   வேண்டும்  என   அம்னோ   உச்சமன்ற   உறுப்பினர்   முகம்மட்  நஸ்ரி   அசிஸ்   வலியுறுத்தினார். பொதுத்  தேர்தல்    நெருங்கிக்   கொண்டிருக்கிறது.  கட்சி   உறுப்பினர்கள்   ஏற்கனவே   செய்தவையே   போதும்   என்று  இறுமாந்து  இருந்துவிடக்  கூடாது,  அம்னோ  மற்றும்   பாரிசான்   வெற்றிக்குக்  கடுமையாக  …

‘மறைப்பதற்கு ஏதுமில்லை 2.0’ வன்முறை, தலைவர்கள் கண்டனம்

‘மறைப்பதற்கு ஏதுமில்லை 2.0’ நிகழ்வில் நடந்த வன்முறை பற்றியச் செய்தி பரவியதைத் தொடர்ந்து, தலைவர்கள் சிலர் தங்கள் கண்டனத்தைப் பதிவு செய்யத் தொடங்கியுள்ளனர். சிலாங்கூர் மந்திரி பெசார் அஸ்மின் அலி, இந்தச் சம்பவத்திற்குப் பிரதமர் நஜிப் ரசாக்தான் சூத்திரதாரி எனக் குற்றம் சுமத்தினார். “டாக்டர் மகாதீர், நஜிப்புடன் ஜனநாயக…

டாக்டர் மகாதீரைத் தாக்கிய சந்தேக நபருக்கு இலவச ‘பெர்சத்து’ டி-சட்டை

டாக்டர் மகாதீரைக் காயப்படுத்த எண்ணிய சந்தேக நபருக்கு, பெர்சத்து கட்சியின் ஆர்மாடா டி-சட்டை இலவசமாகக் கொடுக்கப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. இன்று, ஷா ஆலாமில் ‘மறைப்பதற்கு ஏதுமில்லை 2.0’ நிகழ்வு தொடங்குவதற்கு முன்னதாக, அச்சட்டைகள் இலவசமாக வழங்கப்பட்டதாகத் தெரிகிறது. தாங்கள் ஏற்பாடு செய்திருந்த மண்டபத்திற்குள் நுழைய ஏதுவாக, கலகக்காரர்கள் அச்சட்டைகளை…

‘மறைப்பதற்கு ஏதுமில்லை 2.0’ நிகழ்ச்சியில் மகாதீரை நோக்கி காலணி வீச்சு

இன்று ஷா ஆலாம், இளைஞர் & கலாச்சார காம்ப்ளக்ஸில் அமைந்துள்ள, ராஜா மூடா மூசா மண்டபத்தில், டாக்டர் மகாதீர் கலந்துகொண்ட ‘மறைப்பதற்கு ஏதுமில்லை 2.0’ நிகழ்ச்சி வன்முறையில் முடிந்தது. பங்கேற்பாளரின் மெமாலி தொடர்பான கேள்விக்கு, டாக்டர் மகாதீர் பதிலளித்த போது அவரை நோக்கி காலணிகள் வீசி எறியப்பட்டன. அதனைத்…