மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ஹங் மூய் லீ, இத்தகைய பொம்மைகள் இரவு சந்தைகளிலும் இணையதளங்களிலும் வெளிப்படையாக விற்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார். பினாங்கு மாநில நிர்வாகக் குழு (Exco) உறுப்பினர் ஹங் மூய் லியே (வலது), புகார்களை உறுதிப்படுத்துவதற்காகத் தனது குழுவினர் அந்த பொம்மைகளின் மாதிரிகளை வாங்கியுள்ளதாகத் தெரிவித்தார். பாதுகாப்பு அபாயங்கள்…
ஜம்ரி: ‘மலாய் சுனாமி’யா? தப்புக்கணக்கு போடுகிறது ஹராபான்
அதன் தலைவர்கள் சிலர் கட்சியை விட்டு விலகி பார்டி அமனா நெகராவை அமைத்தார்கள் என்பதற்காக பாஸ் பலவீனமடைந்திருப்பதாக பக்கத்தான் ஹராபான் நினைப்பது தவறு என்கிறார் பேராக் மந்திரி புசார் ஜம்ரி அப்துல் காடிர். பிகேஆர், அமனா, பார்டி பிரிபூமி பெர்சத்து மலேசியா (பெர்சத்து) ஆகிய கட்சிகளின் மூலமாக எதிர்வரும் …
மாணவி வளர்மதியை விடுதலை செய்க, ‘சிறகுகள்’ மாணவர் அமைப்பு கோரிக்கை
கடந்த ஜூலை 12-ல் கைது செய்யப்பட்ட, தமிழ்நாடு, பெரியார் பல்கலைக்கழக மாணவி வளர்மதியை உடனே விடுதலை செய்ய வேண்டும் என ‘சிறகுகள்’ மாணவர் அமைப்பு கேட்டுகொண்டது. வளர்மதிக்கு ஆதரவாக, அமைதி ஒன்றுகூடல் நிகழ்வு ஒன்று சற்றுமுன் சுங்கை சிப்புட்டில் நடந்தது. சமூக விழிப்புணர்வுக்கான மாணவர் எழுச்சி இயக்கத்தைச் சேர்ந்த…
ஹிஷாமுடின் : மகாதீருக்கு சிந்தனை வறட்சி ஏற்பட்டுவிட்டது
நஜிப் பிரதமர் பதவியிலிருந்து விலகினாலும், தான் அம்னோவில் இணையப்போவதில்லை என்று முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் கூறியுள்ளது, அவருக்குச் சிந்தனை வறட்சி ஏற்பட்டுள்ளதையேக் காட்டுகிறது என ஹிஷாமுடின் உசேன் கூறினார். அம்னோவிலிருந்து பதவி விலகுவதும், மீண்டும் சேர்ந்துகொள்வதும் மகாதீருக்குப் புதியதல்ல. இதற்கு முன் பலமுறை இது நிகழ்ந்துள்ளது என…
நஜிப்: ஓன் ஜாபார் இல்லாமலும் அம்னோ தொடர்ந்தது; மகாதிர் இல்லாமலும்…
அம்னோவின் பலம் தலைவர் போன்ற தனிப்பட்டவர்களின் கையில் இல்லை. அது அதன் உறுப்பினர்களிடம் இருக்கிறது என்று அம்னோ தலைவர் நஜிப் ரசாக் கூறுகிறார். ஆகவே, கட்சி அதன் வலிமைமிக்க முன்னாள் தலைவர் டாக்டர் மகாதிர் முகமட் இல்லாமலும், சிறப்பாக இருக்கும் என்றாரவர். அம்னோவை தோற்றுவித்த காலஞ்சென்ற ஓன்…
சுஹாகாமுக்கு அமலாக்க அதிகாரம் சந்தேகமே: முன்னாள் தலைவர்
மலேசிய மனித உரிமை ஆணைய (சுஹாகாம்) முன்னாள் தலைவர் அபு தாலிப் ஒத்மான், அந்த ஆணையத்துக்கு அமலாக்க அதிகாரம் வழங்கப்படும் என்று நம்பத் தயராக இல்லை. ஏனென்றால் மனித உரிமைகள் என்கிறபோது அது தனிப்பட்ட ஒருவரின் உரிமைகளைக் குறிக்கிறது ஆனால், அரசாங்கம் சமுதாய உரிமைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டியுள்ளது.…
பக்கத்தான் விருந்தில் மகாதிர் ஓவியம் ரிம4,900க்கு விலை போனது
நேற்றிரவு பக்கத்தான் ஹராபான் நிதி திரட்டும் விருந்து ஒன்றில் அக்கூட்டணியின் ஐந்து தலைவர்களின் உருவப் படங்களைக் கொண்ட ஓவியங்கள் ஏலம் விடப்பட்டதில் மொத்தம் ரிம16,700 திரட்டப்பட்டது. முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டின் ஓவியமே அதிக விலைக்கு, ரிம4,900க்கு, ஏலம் போனது. இரண்டாவது நிலையில் அதிக விலைக்கு ஏலம் …
பிஎன்னுக்கு வாக்களிக்காதீர்: முன்னாள் டிஏபி ‘சூப்பர்மேன்’ சீனர்களுக்கு வேண்டுகோள்
செல்லமாக ‘சூப்பர்மேன்’ என்று அழைக்கப்படும் டிஏபி முன்னாள் உறுப்பினர் ஹுயு குவான் யாவ், சீனர்கள் பக்கத்தான் ஹராபானைத்தான் ஆதரிக்க வேண்டும், பிஎன்னை அல்ல என்று வலியுறுத்தினார். பிஎன்னின் நீலநிறம் அதற்கு வாக்களிக்க வேண்டாம் என்கிறது என்றாரவர். “பொதுத் தேர்தலில் இரண்டு அணிகள்தான் மோதிக்கொள்ளப்போகின்றன. சிவப்பு நிற ஹராபானும், நீலநிற …
கிட் சியாங்: உடல் சார்ந்த வீழ்ச்சிதான், அரசியல் வீழ்ச்சியல்ல
நேற்றிரவு குளுவாங்கில் ஒரு நிதி திரட்டும் நிகழ்ச்சிக்கு வந்த டிஎபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங் அவரது தலையில் காயத்திற்கான ஒரு பிளாஸ்டருடன் காணப்பட்டார். ஆனால், அதைப் பொருட்படுத்தாத அவர், அச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அவரது அரசியல் போராட்டத்தை வலியுறுத்தினார். தமது தலையில் ஏற்பட்டுள்ள காயத்தை உடல்…
ஜசெக-விடம் ஏமாறாதீர்கள், சீன வாக்காளர்களுக்குத் துணைப் பிரதமர் அறிவுரை
ஜனநாயக செயற்கட்சியினால் (ஜசெக) தொடர்ந்து ஏமாற்றப்படுவதிலிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ளும்படி, துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் ஷாஹிட் ஹமிடி சீன வாக்காளர்களைக் கேட்டுக்கொண்டார். கடந்த 12 மற்றும் 13-ம் பொதுத் தேர்தல்களில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத சூழ்நிலையில், இன்னும் அக்கட்சியைத் தொடர்ந்து நம்பியிருக்க வேண்டாமென அம்னோ…
சரவாக்கில் நுழைய, ‘லிசன்’ கே.எஸ்.பவானிக்குத் தடை!
இன்று காலை, மலேசிய சோசலிசக் கட்சியின் (பி.எஸ்.எம்) தேசியத் துணைச் செயலாளர் பவானி கன்னியப்பன் சரவாக் விமான நிலையத்தில், குடிநுழைவுத்துறை அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார். சரவாக் மாநிலத்தினுள் நுழைய அவருக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அவ்வதிகாரிகள் தெரிவித்ததாக கே.எஸ்.பவானி கூறினார். பேராக் , கம்பாரிலிருந்து புறப்படுவதற்கு முன்னதாக தனது போக்குவரத்து…
சுஹாகாம் : ஜி25-ன் இஸ்லாமியப் புத்தகத்தின் தடையை அகற்றுக
மலேசிய மனித உரிமை ஆணையம் (சுஹாகாம்), ஜி25 வெளியிட்டுள்ள ‘மௌனத்தை உடைப்போம் : மிதவாதக் குரல்கள் - அரசியலமைப்பு ஜனநாயகத்தில் இஸ்லாமியம்’ (Breaking the Silence: Voices of Moderation - Islam in a Constitutional Democracy) எனும் புத்தகத்தின் தடையை அகற்றும்படி உள்துறை அமைச்சைக் கேட்டுக்கொண்டது.…
2013 இல் பேராக் சட்டமன்றப் பேரவையில் அளித்த வாக்குறுதி என்னவானது?
துரோனோவில் தங்கமீன்கள் வளர்க்கும் 39 விவசாயிகள், தாங்கள் எதிர்நோக்கும் நிலப் பிரச்சனைக்குத் தீர்வு காண, இரண்டாவது முறையாக பேராக் முதல்வருக்கு மகஜர் வழங்கியுள்ளனர். பத்துகாஜா தொகுதியில் உள்ள துரோனோ, கம்போங் பாலி எனும் கிராமத்தின் அருகிலுள்ள அரசு நிலத்தில், 1980-ஆம் ஆண்டு முதல், தங்கமீன்கள் வளர்த்து வரும் இவ்விவசாயிகளின்…
நஜிப் பதவி துறந்தாலும், அம்னோவுக்கு திரும்பமாட்டேன், மகாதிர்
பிரதமர் நஜிப் ரசாக் பதவியிலிருந்து விலகிக் கொண்டாலும், தாம் அம்னோவுக்கு மீண்டும் திரும்பப் போவதில்லை என்று முன்னாள் பிரதமர் மகாதிர் வலியுறுத்திக் கூறினார். அவர் அம்னோவை நிராகரித்து விட்டதாகவும், ஏனென்றால் அது ஓர் அழுகிப்போன கட்சி என்றும், அதன் கவனமெல்லாம் இலஞ்சம் வாங்குவதுதான் என்றும் சமூக ஊடகத்தில்…
பிஎன் நண்பர்கள்: அன்வாருக்கு மகாதிர் கொடுத்த ‘அன்பளிப்பு’ நினைவிருக்கிறதா?
எதிர்க்கட்சிகள் மிகவும் வெறுத்தொதுக்கிய தலைவர் என்றால் அது டாக்டர் மகாதிர் முகம்மட்டாகத்தான் இருக்க வேண்டும். ஆனால், இன்று அதே மகாதிரை அவர்கள் எதிரணித் தலைவராக ஏற்றுக்கொண்டு போற்றிப் பாராட்டுகிறார்கள். காரணம், பக்கத்தான் ஹராபான் தலைவர்கள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கையும் பிஎன்னையும் எதிர்த்து நடத்தும் போரில் மகாதிர் தவிர்க்க …
சாலே: நம் நாடாளுமன்றத்தில் சப்பாத்துகள் பறக்க வேண்டாம்
தொடர்பு, பல்லூடக அமைச்சர் சாலே சைட் கெருவாக், நாடாளுமன்றத்தில் விவாதங்கள் ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும்; அமைதியான முறையில் நடக்க வேண்டும் என வலியுறுத்தினார். தரமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் வாதங்களை அமைதியான முறையில் எடுத்து வைப்பார்கள், ஆதாரங்களுடான் வாதிடுவார்கள். ஆனால், ஆதாரமில்லாமல், வெறும் அனுமானங்களையும் கேள்விப்பட்டதையும் வைத்து …
பெல்டா மக்களுக்கு ஊக்குவிப்புகள்: எல்லாமே தேர்தல் தந்திரம் என்கிறார் முகைதின்
பெல்டா மக்களுக்கு அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ள “தேர்தல் அன்பளிப்புகள்” கூட்டரசு நில மேம்பாட்டு நிர்வாக(பெல்டா)த்தைச் சீரமைக்க உதவப்போவதில்லை என பார்டி பிரிபூமி பெர்சத்து மலேசியா (பெர்சத்து) தலைவர் முகைதின் யாசின் கூறினார். 2013 பொதுத் தேர்தலுக்கு முன்னதாக இதே போன்றுதான் durian runtuh என்ற பெயரில் ரிம1.7 பில்லியன் வாரி வழங்கப்பட்டது. …
ஹராபான் அடையாளச் சின்னத்தில் மாற்றம் தேவை: ஆர்ஓஎஸ்
பக்கத்தான் ஹராபான் அதன் அடையாளச் சின்னத்தில் மாற்றம் செய்ய வேண்டும் என்று சங்கப் பதிவகம் (ஆர்ஓஎஸ்) உத்தரவிட்டுள்ளதாக அதன் அவைத் தலைவர் டாக்டர் மகாதிர் முகம்மட் கூறினார். “அடையாளச் சின்னத்தில் ‘ஹராபான்’ என்றிருப்பதுடன் ‘பக்கத்தான்’ என்பதையும் இணைத்து ‘பக்கத்தான் ஹராபான்’ என்றாக்கும்படி ஆர்ஓஎஸ் அறிவுறுத்தியுள்ளது”,என இன்று புத்ரா ஜெயாவில் …
ஜி25-ன் புத்தகம் தடைசெய்யப்பட்டது
‘ஜி25’ எனும் நாடறிந்த மலாய் குழுவினர் வெளியிட்ட ஒரு புத்தகத்தை அரசாங்கம் தடைசெய்துள்ளது. அரசியலமைப்பு ஜனநாயகத்தில் இஸ்லாமியம் தொடர்பான பல விவாதக் கட்டுரைகள் அப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன. ‘மௌனத்தை உடைப்போம் : மிதவாதக் குரல்கள் - அரசியலமைப்பு ஜனநாயகத்தில் இஸ்லாமியம்’ (Breaking the Silence: Voices of…
உபர் & எஎம்பி; கிரேப்கார் மின்-போக்குவரத்துச் சேவை சட்டப்பூர்வமானது
கிரேப்கார் மற்றும் உபர் மின் - போக்குவரத்துச் சேவையைச் சட்டப்பூர்வமாக்கிய முதல் நாடாக மலேசியா விளங்குகிறது என்று பிரதமர் துறை அமைச்சர் நான்சி ஷுக்ரி கூறியுள்ளார். இன்று நாடாளுமன்றத்தில், நிலப் பொது போக்குவரத்து (திருத்தம்) 2017 மற்றும் வணிக வாகனங்கள் உரிமம் வழங்கும் சபை (திருத்தம்) 2017 ஆகியவை…
ஸாகிட்: கிட்டத்தட்ட 1.8 மில்லியன் சட்டப்பூர்வமான அந்நியத் தொழிலாளர்கள் இங்கு…
தற்போது மலேசியாவில் 1.78 மில்லியன் சட்டப்பூர்வமான அந்நியத் தொழிலாளர்கள் இருக்கின்றனர் என்று துணைப் பிரதமர் அஹமட் ஸாகிட் ஹமிடி இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். எழுத்து மூலம் அளித்த பதிலில், இந்தப் புள்ளிவிபரங்கள் குடிநுழைவுத்துறையிலிருந்து பெறப்பட்டவை என்றும் அவை இவ்வருடம் ஜூன் 30 வரையிலுமானது என்று அவர் தெரிவித்தார். நாட்டிலுள்ள…
இந்திய முஸ்லிம்களுக்கு பூமி தகுதி: அமைச்சரவையில் விவாதிக்கப்படவே இல்லை, லியோ…
இந்நாட்டின் இந்திய முஸ்லிம்களுக்கு பூமிபுத்ரா தகுதி அளிக்கப்படும் என்பது எந்த ஓர் அமைச்சரவை கூட்டத்திற்கும் கொண்டுவரப்படமில்லை, விவாதிக்கப்படவுமில்லை என்று மசீச தலைவர் லியோ தியோங் லாய் கூறுகிறார். இந்தப் பிரச்சனை சில தரப்பினரால் அவர்களின் சொந்த நலன்களுக்காக அரசியலாக்கப்பட்டுள்ளது. இது தேசியக் கொள்கை சம்பந்தப்பட்டதால், இந்த முன்மொழிதல் சீராக சிந்திக்கப்பட்டு…
காட்கோ பிரச்சனையில் புக்கிட் அமான் தலையீட்டை கோரும் குடியேறிகள்
நெகிரி செம்பிலான், கம்போங் காட்கோ பிரச்சனையில் மாநில போலீசாரின் அத்துமீறல் நடவடிக்கைகளை புக்கிட் அமான் தலையிட்டு நிறுத்த வேண்டும் என்று சுமார் 70 கம்போங் காட்கோ குடியேறிகள் இன்று கோரிக்கை விடுத்தனர். புக்கிட் அமான் ஒரு சிறப்புக்குழுவை அமைத்து கம்போங் காட்கோ விவகாரத்தில் நிகழ்ந்த அத்துமீறல்களை விசாரிக்க…
அரசியல் நாகரிகம் எதிரணியினருக்கு மட்டும்தானா?
எதிர் அணியினரை, குறிப்பாக மகாதீரை வலிந்து விமர்சனம் செய்வதில் எப்போதுமே முனைப்பு காட்டுபவர் மாட்சிர் காலிட். கெடா மாநிலத்தின் ஒன்பதாவது மந்திரி பெசாராக விளங்கிய இவர், கெடா மாநில அரசியலில் ஒரு காலத்தில் தான் விரும்பியபடி யெல்லாம் செயல்பட முடியாமல் கடிவாளம் போட்டவர் முன்னாள் பிரதமர் மகாதீர் என்பதை…


