வியாழக்கிழமையன்று சுங்கை பூலோ சிறையிலிருந்து விசாரணைக் கைதி ஒருவர் தப்பிச் சென்றதற்கு, பணியில் இருந்த காவல்துறையினரின் அலட்சியமே காரணமா என்பது குறித்து காவல்துறை விசாரித்து வருகிறது. சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் ஷாஜெலி கஹாரின் கூற்றுப்படி, இந்தச் சம்பவம் தண்டனைச் சட்டத்தின் 223 மற்றும் 224 பிரிவுகளின் கீழ் விசாரிக்கப்பட்டு…
ஊழல்-எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக்கொள்ள பினாங்கு அரசு இணக்கம்
பினாங்கு அரசு, வரும் வெள்ளிக்கிழமை கொம்டாரில் நடைபெறவுள்ள ஊழல்-எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக்கொள்ளும் நிகழ்வில் கலந்துகொள்ள மலேசிய ஊழல்தடுப்பு ஆணைய (எம் ஏசிசிசி)த் தலைமை ஆணையர் சுல்கிப்ளி அஹமட்டுக்கு அழைப்பு விடுத்துள்ளது. மாநில அரசு ஊழல்-எதிர்ப்பு உறுதிமொழி ஆவணத்தில் கையொப்பமிட தயார் என்று கூறிய முதலமைச்சர் லிம் குவான் எங், …
மகாதிர்: 1எம்டிபி மீதான பேங்க் நெகாரா, எம்ஏசிசி, கணக்காய்வு அறிக்கைகளின்…
முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட், 1எம்டிபிமீதான பேங்க் நெகரா மலேசியா(பிஎன்எம்), மலேசிய ஊழல்தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி), தலைமைக் கணக்காய்வாளர் ஆகிய முத்தரப்புகளின் அறிக்கைகளில் உள்ளது தமக்கு நன்றாகவே தெரியும் என்கிறார். ரிம2.6 பில்லியன் விவகாரத்தில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் குற்றம் எதுவும் இழைக்கவில்லை என்று சட்டத்துறைத் …
அரசியல் நாகரிகத்துடன் நடந்து கொள்வீர்: அரசியல்வாதிகளுக்கு சாலே அறிவுறுத்து
அரசியல்வாதிகள் கருத்து வேறுபாடுகளைக் கொண்டிருக்கலாம். அதை அவர்கள் நாகரிகமான முறையில் வெளியிட வேண்டும் என்கிறார் தொடர்பு, பல்லூடக அமைச்சர் சாலே சைட் கெருவாக். மக்களாட்சி நாட்டில் தலைவர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் மக்களுக்கும் கருத்துரைக்கும் உரிமை உண்டு, அரசாங்கத்தைக் குறைசொல்லும் உரிமை உண்டு. ஆனால், அதை நயமாக உரைக்க வேண்டும். அடுத்தவரை …
அம்னோ இளைஞர்களுக்குக் கண்ணியம் தேவை- முகைதின்
பார்டி பிரிபூமி பெர்சத்து மலேசியா(பெர்சத்து) பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கை டாக்டர் மகாதிர் முகம்மட்டுடன் வாதத்துக்கு அழைத்தது ஒரு மிரட்டல் அல்ல என அக்கட்சித் தலைவர் முகைதின் யாசின் கூறினார். எனவே, வாதத்துக்கு அழைப்பு கொடுக்கச் சென்ற பெர்சத்து இளைஞர்களை அம்னோ இளைஞர்கள் தடுத்தது சரியல்ல என முகைதின் …
ஒரு கிமீ நெடுஞ்சாலை போடுவதற்கு ரிம385 மில்லியனா?, பினாங்கு மசீச…
பினாங்கு மாநில அரசு மலேசியாவிலேயே மிக அதிகச் செலவிலான நெடுஞ்சாலையை - பேன் ஐலேண்ட் லிங்க் 1 - அமைப்பதற்கு திட்டமிட்டு வருவதாக பினாங்கு மசீச இளைஞர் பிரிவு மாநில அரசை சாடியுள்ளது. பினாங்கு ஆட்சிக்குழு உறுப்பினர் சௌ கோன் இயோ வெளியிட்டுள்ள தகவல்படி 19.5 கிலோ…
மகாதிர்: பிரதமர் பதவி இரண்டு தவணைகளுக்கு மட்டுமே
பிரதமர் பதவிலிருக்கும் ஒருவரை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதற்கு பக்கத்தான் ஹரப்பன் என்ன வழிமுறைகளைக் கொண்டிருக்கிறது என்று இன்று பின்னேரத்தில் நடந்த ஒரு பொது கலந்துரையாடலில் முன்னாள் பிரதமர் மகாதிரிடம் கேட்கப்பட்டது. பிரதமரின் அதிகாரத்திற்கு வரம்புகள் விதிக்கும் உறுதிமொழி ஹரப்பான் வெளியிடவிருக்கும் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருக்கும். அதில் சட்டம் இயற்றுதல்,…
சாலே: மகாதிர் பிரதமராக அன்வாரும் கிட் சியாங்கும் விட மாட்டார்கள்
பக்கத்தான் ஹராபான் பொதுத் தேர்தலில் வெற்றிபெற்றால்கூட டாக்டர் மகாதிர் முகம்மட் பிரதமராக முடியாது என்கிறார் தொடர்பு, பல்லூடக அமைச்சர் சாலே சைட் கெருவாக். பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிமும் டிஏபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங்கும் மகாதிர் பிரதமராவதற்கு ஒருகாலும் இடம்கொடுக்க மாட்டார்கள். மகாதிர் அவர்களுக்கு …
நஜிப்பின் வசைபாடல் அச்சத்தின் வெளிப்பாடு: வான் அசிசா பதிலடி
இன்று காலை உள்நாட்டு, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முன்னிலையில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், பக்கத்தான் ஹராபானைப் படுமோசமாகத் தாக்கிப் பேசியதை “வெட்கங்கெட்ட வசைபாடல்” என்று எதிரணித் தலைவர் டாக்டர் வான் அசிசா இஸ்மாயில் வருணித்தார். பிரதமரின் பேச்சில் “அச்சத்தையும் அதிகாரம் பறிபோமோ என்ற பரிதவிப்பையும்” கண்டதாக அவர் கூறினார்.…
நஜிப்: அரசாங்கத்தைக் கவிழ்க்க 1எம்டிபி விவகாரம் பெரிதுபடுத்தப்பட்டது
அரசியல்வாதிகள் சிலர் அரசாங்கத்தைக் கவிழ்க்கும் நோக்கத்தில் 1எம்டிபி விவகாரத்தைப் பெரிதுபடுத்தி விட்டனர். பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், இன்று, உள்நாட்டு, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அடங்கிய கூட்டமொன்றில் உரையாற்றியபோது இதைத் தெரிவித்தார். 1எம்டிபி நிர்வாகத்தில் சில குறைபாடுகள் இருந்தது உண்மைதான் என்று கூறிய அவர் அவற்றைச் சரிசெய்யுமாறு தாமே பணித்ததாகவும் …
ஐஜிபி: பாதிரியார் கோ கடத்தலுக்கும் தென் தாய்லாந்து கும்பலுக்கும் தொடர்புண்டு
பாதிரியார் ரேய்மண்ட் கோவின் கடத்தலில் தென் தாய்லாந்து கும்பலொன்றுக்குச் சம்பந்தம் உண்டு என இன்ஸ்பெக்டர்-ஜெனரல் அப் போலீஸ் காலிட் அபு பக்கார் இன்று தெரிவித்தார். “மூன்று, நான்கு பேரைக் கைது செய்து விசாரித்ததில் அன்றொரு நாள் நாங்கள் சுட்டுக்கொன்ற நபர்தான் அக்கும்பலின் தலைவன் என்று தெரிகிறது- அவன்தான் பாதிரியாரைக் …
பேரணிகளை எதிர்த்தவர் இப்போது பேரணிகளுக்கு ஏற்பாடு செய்கிறார்: கொள்கையற்றவர் மகாதிர்…
டாக்டர் மகாதிர் முகம்மட் பிரதமராக இருந்தபோது தெரு ஆர்ப்பாட்டங்களுக்கு இடம்கொடுக்க மாட்டார். ஆனால். இப்போது அவர் "Sayangi Malaysia, Hapuskan Kleptorasi" ((மலேசியாவை நேசிப்போம், திருட்டுத்தனத்தை ஒழிப்போம்) பேரணிக்கு ஆசி வழங்குகிறார். துணைப் பிரதமர் அஹமட் ஜாஹிட் ஹமிடி இவ்வாறு கூறினார். “அவர் பிரதமராக இருந்தபோது, உள்துறை அமைச்சையும் …
தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அனைவரும் சொத்தை அறிவிப்பது உறுதிமொழியில் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும்
தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து பிரதிநிதிகளும், மந்திரி புசார்கள், ஆட்சிக்குழு உறுப்பினர்கள் உட்பட, தங்களுடைய சொத்துக்களை அறிவிக்க வேண்டும் என்பதை மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையம் (எம்எசிசி) அதன் ஊழல் எதிர்ப்பு உறுதிமொழியில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று டிஎபி சட்டமன்ற உறுப்பினர் வோங் ஹோன் வை எம்எசிசியை கேட்டுக்கொண்டார். பினாங்கு…
காவல்துறை லோட்டஸ் நிறுவனத்தின் கைக்கூலியா, பி.எஸ்.எம். இளைஞர் பிரிவு கேட்கிறது
கட்கோ குடியேறிகள் 30 பேரைக் கைது செய்த அரச மலேசியக் காவல்துறையின் போக்கை, மலேசிய சோசலிசக் கட்சியின் இளைஞர் பிரிவு கண்டிப்பதாக, அதன் துணைத் தலைவர் சரண் ராஜ் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார். கடந்த ஜூலை 18-ம் தேதி, லோட்டஸ் நிறுவனம் தங்கள் நிலத்தில் அத்துமீறி நுழைந்து,…
தி.சி.பி. சிமெண்ட் தொழிற்சாலைக்கு எதிராக, தொழிலாளர்கள் மறியலில் ஈடுபட்டனர்
முறையான காரணங்கள் ஏதும் கூறாமல், தொழிலாளர்களைப் பணி நீக்கம் செய்த, தாசேக் சிமெண்டு பெர்ஹாட் (தி.சி.பி.) குழுமத்திற்கு எதிராக, தீபகற்ப மலேசியா சிமெண்டு தொழிற்சாலை தொழிலாளர் சங்க (கே.பி.பி.பி.எஸ்.) , தாசேக் கிளையினர் உதவியுடன் தொழிலாளர்கள் இன்று காலை ஒரு மறியலில் இறங்கினர். ஈப்போ, தாசேக் தொழிற்பேட்டையில் அமைந்துள்ள…
ஹிசாமை லங்காவியில் போட்டியிட சவால் விடுகிறார் மகாதிர்
அடுத்த பொதுத் தேர்தலில் லங்காவி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட வருமாறு தற்காப்பு அமைச்சரும் அம்னோ உதவித் தலைவருமான ஹிசாமுடின் ஹுசேனுக்கு முன்னாள் பிரதமர் மகாதிர் சவால் விட்டுள்ளார். தற்போது பிரதமர் நஜிப்பின் நாடாளுமன்ற தொகுதியாக இருக்கும் பெக்கானில் போட்டியிட வருமாறு ஹிசாம் விடுத்திருந்த சவாலுக்கு எதிர்வினையாற்றிய மகாதிர்…
நாடாளுமன்றம் 30-க்கு மேற்பட்ட 1எம்டிபி தொடர்பு- கேள்விகளை நிராகரித்தது
அரசாங்கத்திடம் 1எம்டிபி தொடர்பாக விளக்கம் பெறும் முயற்சி பலிக்கவில்லை. மக்களவை, அவ்விவகாரம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட 30-க்கு மேற்பட்ட கேள்விகளை நிராகரித்து விட்டது. 1எம்டிபி விவகாரத்தில் அன்னியர் தலையீடு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படுமா, அமெரிக்க நீதித்துறையின் 1எம்டிபி-தொடர்பான வழக்குகள் குறித்து அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன போன்ற கேள்விகளை …
கெடா மருத்துவமனை கட்டப்படும்: மந்திரி புசார் உறுதி
வாக்குறுதி அளித்தப்படி கெடா மருத்துவமனை கட்டப்படும் என மந்திரி புசார் அஹமட் பாஷா முகம்மட் ஹனிபா கூறினார். மருத்துவமனை கட்டப்படும் என்பது தேர்தலுக்காக அளிக்கப்பட்ட வெற்று வாக்குறுதி அல்ல என்றவர் வலியுறுத்தினார். “குறைகூறல் வரும் என்பது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றே. மக்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். மருத்துவமனை கட்டுவதற்கு, …
சரவாக்கில் ஐந்தாவது நபர் ரேபிஸுக்குப் பலி
சரவாக்கில் ரேபிஸ் (வெறிநாய்க்கடி நோய்) ஐந்தாவது நபரைப் பலி கொண்டிருக்கிறது. கம்போங் ரேமுனைச் சேர்ந்த 52-வயது டிண்டிங் லம்பாங் நேற்றிரவு மணி 10.43க்கு சரவாக் பொது மருத்துவமனையில் அந்நோயால் இறந்தார் என சுகாதார தலைமை இயக்குனர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறினார். டிண்டிங்சையும் சேர்த்து இதுவரை ஐவர் …
மலாய்க்காரர்- அல்லாத தொகுதிகளில் பிஎன் பங்காளிக் கட்சிகள் வெற்றிபெற்றுக் காண்பிக்க…
பிஎன் பங்காளிக் கட்சிகள் மலாய்க்காரர்- அல்லாத தொகுதிகளில் வெற்றிபெற்று தங்களின் ஆற்றலைக் காண்பிக்க வேண்டும் என்று துணைப் பிரதமர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி கூறியுள்ளார். மசீச, மஇகா, கெராக்கான் ஆகியவை மலாய்க்காரர்கள் பெரும்பான்மையாகவுள்ள தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெறுவதை நம்பிக் கொண்டிருக்கக் கூடாது. “அவர்கள் மலாய்க்காரர்- அல்லாத தொகுதிகளில் வெற்றிபெற …
பினாங்கில் பிகேஆர், டிஏபி ஆகியவற்றை எதிர்ப்போம்: பாஸ் திட்டவட்டம்
எதிர்வரும் பொதுத் தேர்தலில் எதிரணி வசமுள்ள இடங்களில் எல்லாம் போட்டியிட பாஸ் முடிவு செய்துள்ளது. வெற்றி, தோல்வி பற்றி அது கவலைப்படவில்லை. சிறையில் உள்ள எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிமின் கோட்டையாக திகழும் பெர்மாத்தாங் உள்பட பினாங்கிலும் தேசிய அளவில் மற்ற இடங்களிலும் பாஸ் அதன் வேட்பாளர்களைக் களமிறக்கும் …
வான் ஷாம் ஷைடி : தொழிலாளர் காப்புறுதி திட்டத்தை உடனடியாக…
இன்று தொடங்கவிருக்கும் இரண்டாம் தவணை நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் அரசாங்கம் முன்மொழிந்துள்ள தொழிலாளர் காப்புறுதித் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என மலேசிய சோசலிசக் கட்சியின் (பி.எஸ்.எம்.) மத்திய செயலவை உறுப்பினர் வான் ஷாம்ஷைடி வான் ஷாஹிட் அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டார். “பி.எஸ்.எம். கோரும் வேலை இழப்பு நிதி, அரசாங்கத்தின்…
சீனக் கலாச்சார கொண்டாட்டத்திற்கு அரசாங்க மானியம் ரிம3 இலட்சம், நஜிப்…
திரங்கானு தியோங் ஹுவா அசெம்பிளி ஹால் 34 ஆவது மலேசியன் சீனக் கலாச்சார திருவிழாவை கொண்டாடுவதற்கு பிரதமர் நஜிப் ரிம3000,000 நிதி ஒதுக்கீடுக்கு ஒப்புதல் அளித்துள்ளார். இந்த நிதி ஒதுக்கீடு சீனக் கலாச்சாரத்தை நிலைநிறுத்துவதற்கான முயற்சிக்கு அரசாங்கத்தின் ஆரதவைக் காட்டுகிறது என்று நஜிப் கூறினார். இது முதலாவது…
பினாங்கு மாநிலத்திற்குப் பாரிசானின் சிறப்பு தேர்தல் அறிக்கை
எதிர்வரும் 14-வது பொதுத் தேர்தலுக்கு, பினாங்கு மாநிலத்திற்குத் தனியாக ஒரு தேர்தல் அறிக்கையைத் தேசிய முன்னணி தயாரிக்குமென, தகவல் தொடர்பு, பல்லூடக அமைச்சர் சாலே சைட் கெருவாக் கூறுகிறார். பாரிசான் அல்லது பக்காத்தான் ஹராப்பான் ஆகிய இரு கூட்டணி கட்சிகளுக்கிடையே எதைத் தேர்ந்தெடுப்பது என்பது குறித்து முடிவெடுக்க, மாநில…


