மலேசிய மருத்துவச் சங்கம், வழக்குகள் தீர்வு காணப்படாமலும் அல்லது எந்தவித முன்னேற்றத் தகவலும் வழங்கப்படாமலும் பல மாதங்களுக்கு இழுத்தடிக்கப்படக் கூடாது என்று கூறுகிறது. மலேசிய மருத்துவ சங்கம், புகாரளித்தவர் அல்லது சாட்சியாளர் ஒருவர் தனது புகாரைத் திரும்பப் பெறவோ அல்லது அதில் மாற்றம் செய்யவோ அழுத்தம் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படும்…
14-வது பொதுத் தேர்தல் : சிலாங்கூரில் 3 நாடாளுமன்றத் தொகுதிகளில்…
எதிர்வரும் 14-வது பொதுத் தேர்தலில், சிலாங்கூர் மாநிலத்தில், 3 நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிடவுள்ளதாக மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்.) அறிவித்துள்ளது. சிலாங்கூரில் சுபாங், உலு லங்காட் மற்றும் கோலா லங்காட் ஆகிய நாடாளுமன்ற இடங்களில், பக்காத்தான் ஹராப்பானுடன் மும்முனை போட்டி ஏற்பட்டாலும், தாங்கள் போட்டியிடப்போவது உறுதி எனப் பி.எஸ்.எம்.…
அமைச்சர் ரியோட் எம்எசிசியில் பத்து மணி நேரம் இருந்தார்
மனிதவள அமைச்சர் ரிச்சர்ட் ரியோட் இன்று காலை மணி 10லிருந்து இரவு மணி 8 வரையில் மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையத்தின் (எம்எசிசி) புத்ரா ஜெயா தலைமையகத்தில் இருந்தார். திறன்கள் மேம்பாட்டு நிதி கழகத்திலிருந்து (பிடிபிகே) ரிம40 மில்லியன் தவறாகப் பயன்படுத்தப்பட்டது சம்பந்தப்பட்ட விசாரணையில் உதவுவதற்காக அவர்…
தியான் சுவாவிற்கு 1 மாதகால சிறைத் தண்டனை
கடந்த 2012- ஆம் ஆண்டு, போலிஸ் பயிற்சி மையத்தை (புலாபோல்) விட்டு வெளியேறச் சொல்லி, போலிஸ் இட்ட கட்டளையை மீறிய குற்றத்திற்காக தியான் சுவாவுக்கு ஒரு மாத கால சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. இன்று, அந்த பத்து நாடாளுமன்ற உறுப்பினர் தனது தண்டனைக்கு எதிரான முறையீட்டைத் திரும்பப் பெற்றுக்கொண்டதால்,…
கெட்கோ நில விவகாரம் : நிறுவன உரிமையாளருக்கு 5 நாள்…
கட்கோ நில விவகாரம் தொடர்பான விசாரணைக்கு உதவும் பொருட்டு, ஒரு நிறுவனத்தின் உரிமையாளர் 5 நாள்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார். மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எம்.ஏ.சி.சி.), விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்ட மாஜிஸ்திரேட் அஷிஷா அஹ்மாட், தடுப்புக்காவலுக்கு அனுமதி அளித்தார். 54 வயதான அந்த முன்னாள் வங்கி அதிகாரி, நேற்று…
நவீன் கொலை வழக்கு, டிசம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது
இன்று, ஜோர்ஜ்டவுன் மஜிஸ்திரேட் நீதிமன்றம், நவீன் கொலை வழக்கு விசாரணையை எதிர்வரும் டிசம்பர் 6-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. அரசு தரப்பு துணை வழக்குரைஞர், பிரேதப் பரிசோதனை முடிவுகள் இன்னும் கிடைக்கவில்லை எனத் தெரிவித்ததைத் தொடர்ந்து, துணைப் பதிவாளர் நுர்ஃபத்ரினா ஸுல்கய்ரி, இந்தத் தேதியை உறுதிபடுத்தினார். இன்றைய விசாரணையின் போது,…
தியன் சுவா சிறைக்குப் போகத் தயார்
2012 ஆம் ஆண்டில், பிகேஆர் உதவித் தலைவர் தியன் சுவா கட்டுப்படுத்தப்பட்ட போலீஸ் பயிற்சி மையத்திலிருந்து போகும்படி போலீஸ் விடுத்த உத்தரவுக்குப் பணியாத குற்றத்திற்காக அவருக்கு நீதிமன்றம் ஒரு மாதச் சிறைத் தண்டனையும் ரிம1000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது. அத்தண்டனையை எதிர்த்து தியன் சுவா மேல்முறையீடுகள் செய்திருந்தார்.…
வேதமூர்த்தியை ஹரப்பான் ஏற்றுக்கொள்ளக்கூடாது, ஹிண்ட்ராப் ஆர்வலர்கள் வேண்டுகோள்
பெர்சத்துவான் ஹிண்ட்ராப் மலேசியா (ஹிண்ட்ராப்) அமைப்பின் தலைவர் பி. வேதமூர்த்தியுடனான எவ்வித ஒத்துழைப்பையும் பக்கத்தான் ஹரப்பான் நிராகரிக்க வேண்டும் என்று ஹிண்ட்ராப் இயக்கத்தின் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வேதமூர்த்தி அடிமட்ட இந்தியர்களின் ஆதரவை இழந்து விட்டார் என்று அவர்கள் கூறுகின்றனர். வேதமூர்த்திக்கு எதிரான அவர்களின் எதிர்ப்பை முறைப்படி…
ஹரபானுக்குச் சிறுபான்மை மக்களின் ஆதரவைப் பெற்றுத்தரும் முயற்சியில் நியுஜென் கட்சி
பக்கத்தான் ஹரபான் சொற்ப வாக்குகளில் வென்ற இடங்களை மீண்டும் கைப்பற்ற உதவுவதாக உறுதிகூறிய நியுஜென் கட்சி, அதற்காக நாடு முழுவதும் தொடர் கூட்டங்களை நடத்தப்போகிறது. எந்தெந்த இடங்களில் ஹரபான் சொற்ப வாக்குளில் வெற்றி பெற்றதோ அந்த இடங்களில் செராமாக்கள் நடத்தி அங்குள்ள சிறுபான்மை மக்களிடம் ஹரபானுக்கு வாக்களிக்குமாறு வலியுறுத்தப்போவதாக …
லவ்: அரசியல் நிதிச் சட்டம் சிக்கலானதுதான் ஆனால் கொண்டுவர முடியாததல்ல
அரசியல் நிதியை முறைப்படுத்தும் சட்டம் சிக்கலானதுதான் என்றாலும் அதை வரைவதில் புத்ரா ஜெயா இதுவரை சிரமங்களை எதிர்நோக்கவில்லை எனப் பிரதமர்துறை அமைச்சர் பால் லவ் கூறினார். “அது சிக்கலான சட்டம்தான். நிறைய அலோசனைகளை நடத்த வேண்டியுள்ளது. “ஆனாலும், பிரச்னை இல்லை. அதை உருவாக்கும் வேலைகளைச் செய்து கொண்டிருக்கிறோம்”, என்றார்.…
கருத்துக்கணிப்பு : 55 விழுக்காட்டினர் அஸ்மின் மீது நம்பிக்கை கொண்டுள்ளனர்
மலாய் நாளேடான சினார் ஹரியான் நடத்திய கருத்துகணிப்பு ஒன்று சிலாங்கூரில் 55 விழுக்காட்டினர் மந்திரி புசார் முகம்மட் அஸ்மின் அலிமீது நம்பிக்கை கொண்டிருப்பதைக் காட்டுகிறது. அந்நாளேட்டிடம் கருத்துத் தெரிவித்த 550 பேரில் 37விழுக்காட்டினருக்கு அஸ்மின்மீது நம்பிக்கை இல்லை. கருத்துக்கணிப்பில் கலந்து கொண்டவர்கள், அஸ்மின் நம்பிக்கைக்குரிய “திறமையான” அரசியல்வாதி என்றும் …
மற்றுமொரு சமயப் பள்ளியில் தீ
மற்றுமொரு சமயப் பள்ளியில் தீ பற்றியதாக நியு ஸ்ரேய்ட்ஸ் டைம்ஸ் அறிவித்துள்ளது. சிரம்பான், ராஜா செங்காவில் உள்ள யயாசான் சோபா அஸ்தானா தாபிஸ் பள்ளியில் நேற்றிரவு தீ பற்றியதாக அது கூறியது. பின்னிரவு 1.50க்கு தீயணைப்பு, மீட்புத் துறைக்கு அவசர அழைப்புச் சென்றுள்ளது. சம்பவம் நடந்த இடத்துக்கு விரைந்து …
வட கொரியா செல்ல மலேசியர்களுக்குத் தடை
வட கொரிய ஏவுகணைச் சோதனைகளால் மலேசியர்கள் அந்நாட்டுக்குச் செல்ல புத்ரா ஜெயா தடை விதித்துள்ளது. “ஏவுகணைச் சோதனைகளைத் தொடர்ந்து கொரிய தீவகற்பத்தில் பதற்றநிலை அதிகரித்திருப்பதால் இம்முடிவு எடுக்கப்பட்டது. “நிலைமை வழக்கத்துக்குத் திரும்பியதும் பயணத்தடை மீள்பரிசீலனை செய்யப்படும்”, என விஸ்மா புத்ரா ஓர் அறிக்கையில் கூறியது. ஆனால், வட கொரியர்கள் …
நவின் கொலை வழக்கு, நாளை விசாரணைக்கு வருகிறது
கடந்த ஜூன் மாதம், நாட்டை உலுக்கிய நவீனின் கொலை வழக்கு, நாளை ஜோர்ஜ்டவுன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. நவீன் குடும்பத்தின் சார்பில், சட்ட விவகாரங்களை மேற்பார்வையிடும் வழக்குரைஞர், பல்ஜித் சிங், பிரேத பரிசோதனை முடிவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை எனக் கூறினார். “இவ்வழக்கு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. வழக்கு…
எரி பொருள்: பெட்ரோல் விலை குறைகிறது
இன்று நள்ளிரவிலிருந்து பெட்ரோல் விலை மூன்று சென் குறைகிறது. ஒரு லீட்டர் ரோன்95 ரிம2.16 க்கும், ரோன்97 ரிம2.46 க்கும் முறையே விற்கப்படும். டீசல் விலை இரண்டு சென் உயர்வு காண்கிறது. ஒரு லீட்டர் டீசல் ரிம2.12க்கு விற்கப்படும்.
ரிம40 மில்லியன் கையூட்டு பெற்றதாக அமைச்சரின் அரசியல் உதவியாளர் கைது
மலேசிய ஊழல்தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) இன்று பிற்பகல் புத்ரா ஜெயாவில், சரவாக்கைச் சேர்ந்த கூட்டரசு அமைச்சர் ஒருவரின் அரசியல் செயலாளரைக் கைது செய்தது. அந்த 61-வயது ஆடவர் “டத்தோ” பட்டம் பெற்றவர், 2013 ஜூன் முதல் நாளிலிருந்து அமைச்சரின் உதவியாளராகப் பணிபுரிந்து வருகிறார். அவர் கைது செய்யப்பட்டதை பினாங்கில் …
‘முஸ்லிம்கள்- மட்டும்’ சலவை நிலைய உரிமையாளர் மன்னிப்பு கேட்டார்
ஜோகூர் ஆட்சியாளர் சுல்தான் இப்ராகிம் சுல்தான் இஸ்கண்டர் கடுமையாக எச்சரித்ததை அடுத்து, மூவாரில் முஸ்லிம்களுக்கு மட்டுமே என்று இயங்கிவந்த தானியங்கி சலவை நிலையத்தை அதன் உரிமையாளர் எல்லாருக்கும் திறந்துவிட முடிவு செய்துள்ளார். தன் செயலுக்கு சுல்தானிடம் நேரடியாக மன்னிப்பு தெரிவிக்கவும் அவர் விரும்புகிறார். அதற்கு அனுமதி கிடைக்கும் என்றும் …
வான் அசிசா: பேங்க் நெகரா 1எம்டிபிக்கு ரிம116 மில்லியன் அபராதம்…
பேங்க் நெகரா மலேசியா, நிதிச்சேவைச் சட்டங்களைப் பின்பற்றாத 1எம்டிபி நிறுவனத்துக்கு ரிம116மில்லியன் அபராதம் விதித்துள்ளது. இத் தகவலை வெளியிட்ட பக்கத்தான் ஹரபான் தலைவர் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில், அபராதம் விதிக்கப்பட்டதாகக் கூறும் மத்திய வங்கியின் கடிதத்தையும் காட்டினார். 1எம்டிபி ஊழல் குறித்து மறுபடியும் விசாரணை தொடங்க …
ஒரு வாரத்துக்குள் மன்னிப்பு கேட்க வேண்டும்: மகாதிருக்கு அம்னோ அடிநிலை…
வாரக் கடைசியில் சரவாக்கில் ஒரு கூட்டத்தில் பேசியபோது பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் குறித்தும் அவரின் தந்தையார் அப்துல் ரசாக் பற்றியும் கூறிய கருத்துகளுக்காக டாக்டர் மகாதிர் முகம்மட் ஒரு வாரத்துக்குள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அம்னோ அடிநிலை உறுப்பினர்களின் இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது. அவ்வாறு செய்யவில்லை …
ஜோகூர் தாலிபான் மாநிலம் அல்ல: சுல்தான் காட்டம்
ஜோகூரில் முஸ்லிம்களுக்கு- மட்டும் என்ற கொள்கையுடன் செயல்படும் சலவை நிலையம் அதன் கொள்கையை மாற்றிக்கொள்ள வேண்டும் என ஜோகூர் ஆட்சியாளர் சுல்தான் இப்ராகிம் சுல்தான் இஸ்கண்டர் பணித்துள்ளார். “இந்த அபத்தத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. இது ஜோகூர். பங்சா ஜோகூருக்கு உரியது, எல்லா இனத்தவருக்கும் சமயத்தவருக்கும் சொந்தமானது, முற்போக்கான, …
14-வது பொதுத் தேர்தல் – பஹாங் மாநிலத்தில் போட்டியிட, பி.எஸ்.எம்.…
எதிர்வரும் 14-வது பொதுத் தேர்தலில், மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்.) சார்பில், பஹாங் மாநிலத்தில் இரண்டு வேட்பாளர்கள் களமிறங்கத் தயாராகவுள்ளனர். கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியில் சுரேஸ் குமார் பாலசுப்ரமணியம் மற்றும் ஜெலாய் சட்டமன்றத்தில் மாட் நோர் அயாட் எனும் பூர்வக்குடியைச் சார்ந்த ஒருவரும் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாடுதளுவிய…
தீர்வு கொடுக்கப்படாமல், மசூதி அதிகாரிகளின் வீடுகள் இடிக்கப்படவுள்ளன – சிலாங்கூர்…
இன்று காலை, சிலாங்கூர் பெட்டாலிங் நில அலுவலகத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட அதிகாரிகள் காவல் துறையினரின் உதவியுடன், சுபாங் விமான நிலைய பள்ளிவாசலின் முன்னாள் பணியாளர்கள் இருவரின் குவாட்ரஸ் வீடுகளை இடித்துத் தள்ள முற்பட்டனர். தனியார் நிறுவனமான, மலேசியன் ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் (எம்.எ.எச்.பி.) அந்நிலத்தை மேம்பாட்டுப் பணிகளுக்காக…
கட்கோ நில விவகாரம் – லோட்டஸ் குழும உரிமையாளர்களுக்கு 3…
நேற்று, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் (எம்.ஏ.சி.சி.), கட்கோ நில வழக்குத் தொடர்பில் கைது செய்யப்பட்ட லோட்டஸ் குழும உரிமையாளர்கள் இருவருக்கும், இன்று தொடக்கம் 3 நாள்கள் தடுப்புக்காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. புத்ரா ஜெயா உயர் நீதிமன்றத்தில், மஜிஸ்திரேட் முகமட் நோர் ஹஃபிட்ஷுடின் யூசோப், அந்த இரு சகோதரர்களுக்கும் 3…
முன்னாள் ஐஜிபியை அவமதித்த குற்றத்திலிருந்து சஞ்சீவன் விடுதலை
பெட்டாலிங் ஜெயா செஷன்ஸ் நீதிமன்றம், முன்னாள் இன்ஸ்பெக்டர்-ஜெனரல் அப் போலீஸ் காலிட் அபு பக்காரை அவமதித்த குற்றச்சாட்டிலிருந்து மலேசிய குற்றச்செயல் கண்காணிப்பு அமைப்பு (மைவாட்ச்)த் தலைவர் ஆர்.சஞ்சீவனை விடுவித்தது. செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி முகம்மட் மொக்சானி மொக்தார் அவரை விடுவித்தார் என சஞ்சீவனின் வழக்குரைஞர் எஸ்.பிரகாஷ் கூறினார். “சஞ்சீவன் …


