சுல்தானுக்குக் கையூட்டு கொடுக்க முயன்ற ‘டான்ஸ்ரீ’-இன் காவல் நீட்டிப்பு

புத்ரா   ஜெயா   மெஜிஸ்ட்ரேட்    நீதிமன்றம்   பட்டங்களுக்குப்  பரிந்துரைப்பதற்காக   ஜோகூர்   ஆட்சியாளர்  சுல்தான்   இப்ராகிம்   சுல்தான்  இஸ்கண்டாருக்குக்  கையூட்டுக்  கொடுக்க   முயன்ற    54-வயது   வணிகரின்  தடுப்புக்  காவலை   நீட்டித்துள்ளது. விசாரணைக்கு   உதவியாக   தடுப்புக்  காவலை  நீட்டிக்க    வேண்டி   மலேசிய  ஊழல்தடுப்பு   ஆணையம்   மனு  செய்திருந்தது. கிள்ளானைச்    சேர்ந்த    அந்த   “டான்ஸ்ரீ”-இன்  …

ஐஜிபி: மகாதிர்- நஸ்ரி விவாதத்தில் முடிவெடுக்கும் அதிகாரம் போலிசுக்கு உண்டு

 போலீசார்,   பொது   ஒழுங்கைக்  கருத்தில்   கொண்டுதான்  டாக்டர்  மகாதிர்  முகம்மட்டுக்கும்    அமைச்சர்   நஸ்ரி   அப்துல்   அசிசுக்குமிடையிலான   விவாதத்துக்குத்    தடை   விதிக்க    முடிவெடுத்தனர். அப்படி  ஒரு முடிவெடுக்கும்    அதிகாரத்தைக்  கூட்டரசு  அரசமைப்பு  போலீஸ்   சட்டம்     போலீசுக்குக்  கொடுத்துள்ளது   என    இன்ஸ்பெக்டர்- ஜெனரல்  அப்  போலீஸ்  (ஐஜிபி)   காலிட்  அபு  பக்கார்  …

ஹாடியின் மசோதா தாக்கல் செய்யப்பட்டு மீண்டும் தள்ளிவைக்கப்படும்

  பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங்கின் தனிப்பட்ட உறுப்பினர் சட்டம் 355 க்கான திருத்தங்கள் மசோதா வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், அந்த மசோதா மறுபடியும் தள்ளிவைக்கப்படும். பிஎன் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு துணைப் பிரதமர் அஹமட் ஸாகிட் ஹமிடி விளக்கம் அளித்த போது…

நஸ்ரி: விவாதத்தை போலீஸ் மண்டபத்தில் அல்லது தென்துருவத்தில் பெங்குவின் பறவைகளுடன்…

மகாதிர்-நஸ்ரி விவாதம் இரண்டாவது முறையாக போலீஸால் தடுக்கப்பட்டதால் எரிச்சலடைந்துள்ளதாக காணப்பட்ட சுற்றுலா மற்றும் பண்பாடுதுறை அமைச்சர் நஸ்ரி அப்துல் அசிஸ் அந்த விவாதத்தை செராஸிலுள்ள போலீஸ் மண்டபத்தில், அல்லது இன்னும் சிறப்பான, தென்துருவத்தில் (அன்டார்டிக்கா) வைத்துக்கொள்ளலாம் என்று ஆலோசனை கூறியுள்ளார். பெங்குவின் பறவைகளுக்கு பகசா மலேசியாவோ ஆங்கிலமோ புரியாது.…

துணைப் பிரதமர்: ஜாகிர் நாய்க் எந்தச் சட்டத்தையும் மீறவில்லை, அதனால்…

சர்ச்சைக்குரிய   இஸ்லாமிய   சமயப்  பரப்பாளர்    ஜாகிர்  நாய்க்   மலேசியாவுக்குள்  நுழைய   தடை  ஏதுமில்லை,  ஏனென்றால்   அவர்  இந்நாட்டுச்   சட்டம்  எதையும்  மீறவில்லை     எனத்  துணைப்   பிரதமர்   அஹ்மட்  ஜாஹிட்  ஹமிடி    நாடாளுமன்றத்தில்    கூறினார். “அமலாக்க   நிறுவனங்களிடமிருந்து   கிடைக்கும்   தகவல்களின்   அடிப்படையில்   நாட்டின்  பாதுகாப்புக்கும்   பொது   ஒழுங்குக்கும்  மருட்டலாக  விளங்கக் …

எப்ஜிவி-யில் முதலீடு செய்ததில் இபிஎப்-புக்கு ரிம203மில்லியன் இழப்பு

ஊழியர்   சேமநிதி  வாரியம்(இபிஎப்) ,  கடந்த   ஆகஸ்டில்  அதன்   வசமிருந்த   பெல்டா  குளோபல்   வென்ட்சர்ஸ் (எப்ஜிவி)   பங்குகளை  விற்றதில்   ரிம203.18  இழப்பு  ஏற்பட்டது. கடந்த   திங்கள்கிழமை   நிதி  அமைச்சு   நாடாளுமன்றத்தில்   வழங்கிய   எழுத்து  வடிவ   பதிலில்    இது   குறிப்பிடப்பட்டிருந்தது. “இபிஎப்   எந்தெந்த  நிறுவனங்களில்   நிதிநிலை    தொடர்ந்து    சரிந்து   வருகிறதோ,  …

‘அன்னிய நேரடி முதலீடு அரசியல் ஆயுதமாக மாறக் கூடாது’

பிரதமர்  நஜிப்   அப்துல்  ரசாக்,  அன்னிய   நேரடி  முதலீட்டை(எப்டிஐ)   ஓர்    “அரசியல்   ஆயுத”மாகப்  பயன்படுத்துவது   சரியல்ல   என்கிறார்   பினாங்கு   முதல்வர்   லிம்  குவான்   எங். எப்டிஐ-யை   வைத்து   நஜிப்புடன்   அரசியல்   விளையாட்டில்  ஈடுபடுவதில்  பினாங்கு   அரசுக்கு  விருப்பமில்லை    என  லிம்   கூறினார். “அரசியல்  ஆயுதமாகப்  பயன்படுத்தப்படுவதற்கும்  மேலாக    எப்டிஐ …

சாபாவில் முன்கூட்டிய தேர்தல் இன்னும் பரிசீலனையில்தான் உள்ளது

14வது   பொதுத்   தேர்தலுக்கு  முன்பே   சாபாவில்   மாநிலத்   தேர்தல்கள்   நடத்தப்படும்   என்று   கூறப்படுவது  வெறும்  ஊகமே.  அதன்   தொடர்பில்   கூட்டரசு  நிலையிலும்  மாநில   அளவிலும்   பிஎன்   எந்த  முடிவையும்  இன்னும்    செய்யவில்லை. மாநில   அரசியல்   நிலவரங்களை   மட்டுமல்லாமல்   நாடு   முழுமைக்குமான   நிலவரங்களையும்   கருத்தில்  கொண்டே   சாபாவில்   சட்டமன்றத்   தேர்தல்  …

கடவுள் பற்றி கூறிய கருத்துக்காக சித்தி காசிம் விசாரணைக்கு அழைக்கப்படுகிறார்

  கடவுள் இருப்பது பற்றி கூறிய கருத்துக்காக வழக்குரைஞர் சித்தி ஸபெடா காசிம்மின் வாக்குமூலத்தைப் பதிவு செய்வதற்காக மலேசிய இஸ்லாமிய மேம்பாட்டு இலாகா (ஜாகிம்) அவரை அழைக்கவிருக்கிறது. அந்த வழக்குரைஞர் குற்றம் புரிந்திருந்தால் அவருக்கு எதிராக மாநில இஸ்லாமிய சமய இலாகா நடவடிக்கை எடுக்கலாம் என்று பிரதமர் துறையின்…

போலீசார்: குழப்பவாதிகள் புகுந்து விவாதத்தைக் குழப்பி விடலாம்

குழப்பவாதிகள்  விவாதத்துக்கு    இடையூறு     செய்யலாம்   என்பதால்   அமைச்சர்   நஸ்ரி   அப்துல்   அசிசுக்கும்    முன்னாள்   பிரதமர்   மகாதிர்  முகம்மட்டுக்குமிடையிலான   விவாதத்துக்கு   சிலாங்கூர்   போலீஸ்     தடை    விதித்தது. “அந்நிகழ்வு   நடந்தால்   சில   தரப்புகள்   இடையூறு  செய்யலாம்   என்று  உளவுத்தகவல்கள்  கிடைத்தன”,  என   சிலாங்கூர்   போலீஸ்  துணைத்   தலைவர்    முகம்மட்  புவாட்    அப்துல் …

மகாதிர்: குடியிருப்பாளர்கள் புகாரா? தொழிற்சாலைகள்தானே அங்கு இருக்கின்றன!

  மகாதிர்-நஸ்ரி விவாதத்திற்கு போலீஸ் வழங்கிய அனுமதியை அது இரத்து செய்ததற்கு அங்குள்ள குடியிருப்பாளர்கள் செய்துள்ள புகார்கள்தான் காரணம் என்று போலீஸ் இப்போது கூறுவதை முன்னாள் பிரதமர் கிண்டல் செய்துள்ளார். விவாதம் நடத்தப்படவிருக்கும் இடத்திற்கு அருகிலுள்ள குடியிருப்பாளர்கள் புகார் செய்துள்ளதால் விவாதம் நடத்துவதற்கு மார்ச் 31 இல் கொடுக்கப்பட்ட…

பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் மலேசியாவுடன் கூட்டு: இந்தியா திட்டம்

பெருகி   வரும்  பயங்கரவாதத்தை   முறியடிப்பதற்கு   இந்தியா  மலேசியாவின்   உதவியை      நாடுவதாக     பிரதமர்  நரேந்திர   மோடி  கூறினார். “அது   பொருளாதாரத்துக்கும்    நிலைத்தன்மைக்கும்    மருட்டலாக   உருவாகலாம்.  அதனால்  மலேசியாவுடன்   சேர்ந்து   பயங்கரவாத- எதிர்ப்பு   நடவடிக்கைகளைத்   தொடர   விரும்புகிறோம்”,  என்றாரவர். மோடி,  இந்திய  வருகை  மேற்கொண்டிருக்கும்    பிரதமர்   நஜிப்   அப்துல்   ரசாக்குடன்  கூட்டுச்  …

செம்பருத்தி கோவிந்தராசுவின் மறைவு, தமிழருக்கு ஒரு பெரிய இழப்பாகும்

செம்பருத்தி கோவிந்தராசு என அழைக்கப்படும் கிள்ளான் வட்டாரத்தின் சமூக நலவாதியும் தமிழ்த்தேசிய உணர்வுடன் தமிழர்களின் எழுச்சிக்கு வித்திட்டவருமான கோவிந்தராசு முனுசாமி இன்று மாலை காலமானார். வீட்டில் நினைவிழந்த நிலையில் இருந்த அவரை அருகாமையில் இருக்கும் மருத்துவரிடம் கொண்டுசென்ற போது அவர் இறந்து விட்டதாக அறிந்தோம் என்று குடும்பத்தினர் ஆழ்ந்த…

மகாதிர்-நஸ்ரி விவாதம்: கொடுத்த அனுமதியை போலீஸ் இரத்து செய்துள்ளது

  மகாதிர் மற்றும் நஸ்ரி ஆகிய இருவருக்குமிடையிலான விவாதத்திற்கு போலீசார் கொடுத்திருந்த அனுமதி இப்போது இரத்து செய்யப்பட்டுள்ளது என்று அந்த நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர் கும்புலான் மீடியா காராங்கிராப் கூறுகிறது. "விந்தையானது. மகாதிர்-நஸ்ரி விவாதத்திற்கு அனுமதி அளிக்கும் கடிதம் எங்களுக்கு நேற்று கிடைத்தது. இன்று மாலை அந்த அனுமதி இரத்து…

முகமட் ரவுஸ் ஷரீப் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்

மலேசியாவின் புதிய தலைமை நீதிபதியாக மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் முகமட் ரவுஸ் ஷரீப் நியமிக்கப்பட்டுள்ளார். அவரது நியமனம் இன்றிலிருந்து அமலுக்கு வருகிறது. இவர் ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி அரிப்பின் ஸக்காரியாவின் இடத்தை நிரப்புகிறார். மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதியாக மலேசியாவின் தலைமை நீதிபதியாக இருந்த ஸுல்கெப்லி அஹமட் மக்கிநுடின்…

ஹாடியின் மசோதவை நாடாளுமன்றம் விவாதிப்பலிருந்து தடுத்து நிறுத்த நீதிமன்றம் செல்கிறார்…

  ஷரியா நீதிமன்றங்கள் (கிரிமினல் நீதிபரிபாலனம்) சட்டம் 1965 (சட்டம் 355) க்கு பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் தாக்கல் செய்திருந்த மசோதாவை அரசாங்கம் அதனுடைய மசோதாவாக ஏற்றுக்கொள்ளாது என்று பிரதமர் நஜிப் அறிவித்திருக்கிறார். ஆனால், அந்த மசோதா விவாதிக்கப்படுமா, இல்லையா என்று முடிவு செய்யும் பொறுப்பு…

மகாதிர்-நஸ்ரி விவாதம் நடக்கும், ஆனால் போலீஸ் நிபந்தனைகள் உண்டு

  முன்னாள் பிரதமர் மகாதிர் மற்றும் சுற்றுலா மற்றும் பண்பாட்டுதுறை அமைச்சர் நஸ்ரி அப்துல் அசிஸ் ஆகிய இருவருக்குமிடையிலான விவாதம் திட்டமிட்டப்படி நடக்கும் என்று கும்புலான் மீடியா காராங்கிராப் நிறுவனர் ஹுஷாமுடின் யாகுப் உறுதிப்படுத்துகிறார். அந்த விவாதம் ஏப்ரல் 7 இல் தேவான் சுல்தான் முகம்மட் கெ-5, கொம்பிளக்ஸ்…

ஹாடி உடனடியாகப் பதவி விலக வேண்டும்

ஷரியா நீதிமன்றங்கள் (கிரிமினல் நீதி பரிபாலனம்) சட்டம் (சட்டம் 355) க்கான திருத்தங்கள் மசோதா குறித்த விவகாரத்தில் மிக அண்மையச் சம்பவங்களுக்காக பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் பதவி துறக்க வேண்டும் என்று அக்கட்சியின் முன்னாள் உதவித் தலைவர் ஹுசாம் மூசா கூறுகிறார். அந்த மசோதா நாடாளுமன்றத்தில்…

தெரேசா கொக் அலுவலகத்தில் எம்ஏசிசி

மலேசிய   ஊழல்தடுப்பு   ஆணையம்    கூச்சாய்  லாமாவில்    உள்ள  டிஏபி  எம்பி தெரேசா  கொக்     அலுவலகத்தில்  இன்று   அதிரடிச்   சோதனை    நடத்தியதாக   தெரிகிறது. அவர்கள்  தேடும்  வாரண்டுடன்  வந்ததாக    சிபூத்தே  எம்பியின்  உதவியாளர்  அலிஸ்   லான்   கூறினார். சோதனை   நடந்தபோது   கொக்   அலுவலகத்தில்  இல்லை. அதிகாரிகள்   ஸ்கிம்  மிஸ்ரா   உசியா  …

ஜோகூர் சுல்தானுக்குக் கையூட்டுக் கொடுக்க முயன்ற ‘டான்ஸ்ரீ’-க்கு 5-நாள் தடுப்புக்…

ஒருவருக்கு    “டான்ஸ்ரீ”   பட்டம்  கிடைப்பதற்குப்   பரிந்துரைக்க   ஜோகூர் சுல்தானுக்கு    ரிம 2மில்லியன்   கையூட்டுக்  கொடுக்க முயன்றதாகக்  குற்றஞ்சாட்டப்பட்டு    ஒரு  வணிகர்  இன்று   புத்ரா  ஜெயா   மெஜிஸ்ட்ரேட்   நீதிமன்றத்தில்     நிறுத்தப்பட்டதாக   த  ஸ்டார்   ஆன்லைன்   அறிவித்தது. மலேசிய   ஊழல்தடுப்பு   ஆணைய (எம்ஏசிசி)   விசாரணைக்கு   உதவியாக   அந்த      54 வயது  நபரை  …

ரிம1.4 மி. சாலையைப் பார்வையிட மக்களவைத் தலைவர் வீட்டுக்குச் சென்ற…

டிஏபி  எம்பிகள்  இருவர்,   ரிம1.4 மில்லியன்    செலவில்  கட்டப்பட்ட   சாலையைப்  பார்வையிட  இன்று  கோலாலும்பூர்,  ஜாலான்  துங்குவில்   உள்ள    மக்களவைத்   தலைவர்   பண்டிகார்   அமின்  வீட்டுக்குச்  சென்றனர். அங்கு  சென்றதும்   டிஏபி   செர்டாங்   எம்பி   ஒங்   கியான்  முங்,   செகாம்புட்  எம்பி    லிம்  லிப்   எங்   ஆகிய   அவ்விருவரும்   …

பண்டிகார்: என் வீட்டுக்குச் செல்லும் ரிம1.4 மில்லியன் சாலைக்கும் எனக்கும்…

மக்களவைத்   தலைவர்    பண்டிகார்   அமின்   மூலியா,    தம்   அதிகாரப்பூர்வ   இல்லத்துக்குச்     செல்ல  ரிம1.4 மில்லியன்  செலவில்  மாற்றுச்  சாலை  அமைப்பதற்கும்   தமக்கும்   சம்பந்தமில்லை   என்கிறார். சாலை  அமைப்பது      அரசாங்கத்தின்   தனியுரிமை    என்றவர்   சொன்னதாக   த   ஸ்டார்   அறிவித்துள்ளது. “இது   என்  வீடு   அல்ல.  அரசாங்க  வீடு”,  என்றாரவர். “அவ்வீட்டுக்குச் …

1எம்டிபி எஞ்சியுள்ள ரிம40 பில்லியன் கடனை எப்படி திருப்பிக் கொடுக்கும்?,…

  கிட்டத்தட்ட இன்னும் ரிம40 பில்லியனுக்கு இருக்கும் அதன் கடனை 1எம்டிபி எப்படித் திரும்பக் கொடுக்கப் போகிறது என்பதற்கு பிரதமர் நஜிப் விளக்கம் அளிக்க வேண்டும் என்று முன்னாள் பிரதமர் மகாதிர் முகமட்  கோரியுள்ளார். கிட்டத்தட்ட ரிம3.9 பில்லியன் வங்கிக் கடன்கள் மற்றும் குறைந்த-கால கடன்கள் ஆகியவற்றை திருப்பிக்…