அதிகபட்சமாக ஐந்து ஆண்டுகால ஒப்பந்தப் பணிக்காலத்தை நிறைவு செய்த மருந்தாளுநர்களுக்கு (Pharmacists), ஒப்பந்த நீட்டிப்பு வழங்கப்படாது என்று சுகாதார அமைச்சு தெளிவுபடுத்தியுள்ளது. "பணி முடிவடைவதால் 45 ஒப்பந்த மருந்தாளுநர்கள் தவிப்பு" என்ற செய்தி தொடர்பாக எழுப்பப்பட்ட கவலைகளைத் தாங்கள் கவனித்துள்ளதாக அமைச்சு கூறியுள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. இன்று வெளியிட்ட…
படகு விபத்து: காணாமல்போன அறுவரைத் தேடும் பணி தொடர்கிறது
சாபாவில், சனிக்கிழமை புலாவ் மெங்காலும் தீவை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது கடலில் மூழ்கிய உல்லாசப் படகில் இருந்த மேலும் அறுவரைத் தேடும் பணி தொடர்கிறது. கடல் போக்குவரத்து அமலாக்க வாரிய(எம்எம்இஏ) பேச்சாளர் ஒருவர், எம்எம்இஏ உள்பட, அரச மலேசிய கடல்படை, அரச மலேசிய விமானப் படை எனப் பல …
பங் மொக்தார்: பிரதமர், டிரம்புக்குக் கண்டனம் தெரிவிப்பது சரியல்ல
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் அறிவித்த சர்ச்சைக்குரிய பயணத் தடைக்கு பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கை கண்டனம் தெரிவிப்பது சரியல்ல என்கிறார் கினாபாத்தாங்கான் எம்பி பங் மொக்தார் ரடின். “தடையால் பாதிக்கப்பட்ட நாடுகளின் தலைவர்கள் பலர் டிரம்புக்குக் கண்டனம் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். “ஆனால், நம் பிரதமர் கண்டனம் தெரிவிப்பது …
ஹாடி: முஸ்லிம்கள் அதிகாரத்தில் இருப்பதை உறுதி செய்வது பாஸின் கடமை
மலேசிய அரசியலில் முஸ்லிம்களின் செல்வாக்கு இருப்பதை உறுதி செய்வதற்கு அடுத்த பொதுத் தேர்தலில் குறைந்தபட்சம் 40 நாடாளுமன்ற இடங்களில் வெற்றி பெரும் நோக்கத்தை பாஸ் கொண்டிருக்கிறது என்று அக்கட்சியின் தலைவர் அப்துல் ஹாடி அவாங் கூறுகிறார். கட்சி அதன் நிலையை சிலாங்கூர் மற்றும் கிளந்தானில் மேலும் வலுப்படுத்த…
மலேசியா இனி, ஆசியான் மற்றும் ஆசிய நாடுகளுடனான வணிகத்தில் கவனம்…
ஜனவரி 23-இல், அமெரிக்கா பசிபிக் வட்டார பங்காளித்துவ ஒப்பந்தத்திலிருந்து (டிபிபி) வெளியேறுவதாக அறிவித்ததை அடுத்து மலேசியா ஆசியான் நாடுகளுடனும் ஆசிய நாடுகளுடனும் வர்த்தகத்தைப் பெருக்கிக் கொள்வதற்கு முக்கியத்துவம் கொடுக்கும். மலேசியா இனி ஆசியான் நாடுகளுக்குத்தான் முன்னுரிமை கொடுக்கும் என்றும் அதனை அடுத்து வட ஆசிய நாடுகளான சீனா, தென் …
டிரம்பின் பயணத் தடையை நிறுத்திவைக்க நீதிபதி உத்தரவு
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் ஏழு முஸ்லிம் நாடுகளின் குடிமக்கள் அமெரிக்காவில் நுழைவதற்கு விதித்திருந்த தடை அமலாக்கப்படுவதை அமெரிக்க நீதிபதி ஒருவர் தற்காலிகமாக நிறுத்தி வைத்திருப்பதாக ஊடகச் செய்திகள் கூறுகின்றன. நியு யோர்க் நீதிமன்றத் தீர்ப்பின்படி ஏற்கனவே அந்நாட்டில் உள்ள மேற்படி நாடுகளின் குடிமக்களும் செல்லத்தக்க விசாக்களுடன் அந்நாட்டுக்குச் …
‘ஓப்ஸ் செலாமாட் 10’: முதல் ஏழு நாள்களில் கடுமையான விபத்துகளின்…
சீனப் புத்தாண்டை யொட்டி மேற்கொள்ளப்பட்டிருக்கும் ஓப்ஸ் செலமாட் 10 நடவடிக்கையில் முதல் ஏழு நாள்களில் விபத்துகளின் எண்ணிக்கை ஆறு விழுக்காடு உயர்ந்தது என்றாலும், உயிரிழப்பை ஏற்படுத்தும் விபத்துகள் குறைந்திருந்தன. மொத்தம் 11,440 விபத்துகள் பதிவு செய்யப்பட்டதாக புக்கிட் அமான் போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கத் துறை இயக்குனர் மகம்மட் …
28 சீனச் சுற்றுப்பயணிகளுடன் சென்ற கப்பலைக் காணவில்லை
நேற்று, கோத்தா பாலுவின் தஞ்சோங் ஆரு படகுத்துறையிலிருந்து பூலாவ் மங்காலும் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த கட்டுமரக் கப்பலொன்று காணாமல் போனதாக நம்பப்படுகிறது. அதில் பயணம் செய்த 31 பேரில் 28 பேர் சீனாவைச் சேர்ந்த சுற்றுப்பயணிகள். காலை மணி 9க்கு அக்கப்பல் படகுத்துறையை விட்டுப் புறப்பட்டதாக மலேசிய கடல்சார்ந்த …
ஹாடிக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுப்பது பற்றி யோசிக்கிறார் கிட்…
பாஸ் கட்சியின் தலைவர் அப்துல் ஹாடி அவாங் தம்மை இஸ்லாத்தை-எதிர்ப்பவர் என்று சொல்லியதாகக் கூறப்படுவது குறித்து அவருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுப்பது பற்றி டிஎபியின் மூத்த தலைவர் லிம் கிட் சியாங் ஆலோசித்து வருகிறார். ஹாடிக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்வது பற்றி சிந்திக்கும்படி தமது…
பினாங்கில் மலாய்க்காரர்கள், இஸ்லாம் ஆகியவற்றின் நலன்கள் பாதுகாக்கப்படவில்லை என்ற ஹாடியின்…
பினாங்கில் மலாய்க்காரர்கள் மற்றும் முஸ்லிம்கள் ஆகியோரின் நலன்களை பாதுக்காக்க பினாங்கு அரசு தவறி விட்டது என்று பாஸ் கட்சியின் அப்துல் ஹாடி அவாங் கூறியிருந்த குற்றச்சாட்டை பினாங்கு மாநில அரசு மறுத்துள்ளது. பக்கத்தான் ஹரப்பான் ஆட்சியில் பலவிதமான கொள்கைகள் அமலாக்கம் செய்யப்பட்டுள்ளது என்றும் முந்திய பிஎன் நிருவாகங்களுடன்…
சீனப்புத்தாண்டு 2017 நல்வாழ்த்துகள்
செம்பருத்தி . கோம் அதன் வாசகர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் அனைத்து மலேசியர்களுக்கும் அதன் சீனப்புத்தாண்டு 2017 நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறது.
வீட்டுச்சேவல் புதிய விடியலின் அடையாளம், சீனப்புத்தாண்டு செய்தில் வான் அஸிசா…
"புதிய மலேசியா' உருவாக்கப்படுவதற்கான முயற்சியில் மலேசியர்கள் தளர்ச்சியடைந்து விடக்கூடாது என்று எதிரணித் தலைவர் டாக்டர் வான் அஸிசா வான் இஸ்மாயில் மலேசிய மக்களை கேட்டுக்கொண்டார். வீட்டுச்சேவல் உறுதியுடைமை மற்றும் புதிய விடியலின் வருகையைத் தெரிவிக்கும் அடையாளம் என்று பிகேஆர் தலைவர் அவரது சீனப்புத்தாண்டுச் செய்தில் கூறினார். 2017…
“தைப்பூசம் சாயம் தெளிக்கும்” கூட்டத்தின் தலைவர் கைது செய்யப்பட்டார்
பொருத்தமற்ற உடை அணியும் பெண்கள் மீது சாயம் தெளிக்கப்படும் என்று மிரட்டல் விடுத்திருந்த "தைப்பூசம் சாயம் தெளிக்கும்" கூட்டத்தை உருவாக்கியவர் என்று கூறப்படுபவரை போலீசார் கைது செய்துள்ளனர். செபெராங் பிறையைச் சேர்ந்த 29 வயது ஆடவர் ஒருவர் இன்று காலை மணி 9.20 க்கு கைது செய்யப்பட்டார்…
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு தங்கும் வசதி செய்து கொடுத்த ஜமால் யூனுஸ்
சுங்கை புசார் அம்னோ தொகுதித் தலைவர் ஜமால் யூனுஸ், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு தேவான் ஸ்ரீ பெர்னாம் துயர்த்துடைப்பு மையத்தில் தஞ்சம் புகுந்துள்ள மக்கள் தம்முடைய ஓய்வுத்தலத்தில் இலவசமாக வந்து தங்கிக் கொள்ள இடம் ஒதுக்கிக் கொடுத்துள்ளார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிஞ்சான் மீனவர் கிராம தங்குவிடுதி மற்றும் ஓய்வுத்தலத்தில் தங்குவதற்கு …
ஹாடி: பாஸ் கதவு டிஏபி-க்குத் திறக்காது ஆனால், பெர்சத்துவுக்கு திறந்தே…
பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங், டிஏபியுடன் ஒத்துழைக்கும் சாத்தியம் அறவே இல்லை என்று திட்டவட்டமாகக் கூறுகிறார். டிஏபி இஸ்லாத்துக்காக பாஸ் நடத்தும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிப்பதில்லை என்பதால் அதனுடன் ஒத்துழைப்பதற்கில்லை என்று மாராங் எம்பி தெரிவித்ததாக நியு ஸ்ரேய்ட்ஸ் டைம்ஸ் அறிவித்துள்ளது. “உலகளாவிய திருட்டுத்தனத்திலிருந்து மலேசியாவைக் காப்பதற்காக” …
தேடப்பட்டு வந்த குற்றவாளிகள் கோத்தா திங்கியில் சுட்டுக்கொலை
இன்று அதிகாலை கோத்தா திங்கியில் ஒரு செம்பனை தோட்டத்துக்கு அருகில் பல்வேறு கொள்ளைச் சம்பவங்களுக்காக தேடப்பட்டு வந்த ஆயுதம் தாங்கிய கொள்ளையர் இருவரை போலீசார் சுட்டுக் கொன்றனர். ஜோகூர் போலீஸ் துணைத் தலைவர் சக்கரியா அஹ்மட் இதனைத் தெரிவித்தார். போலீஸ் குழுவொன்று குற்றச்செயல்களுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது தலைக்கவசம் …
கிட் சியாங்: எம்ஏசிசி-இன் எச்சரிக்கை‘எம்ஓ1’க்கும் சேர்த்து விடுக்கப்பட்டிருந்தால் சரி, இல்லை…
மலேசிய ஊழல்தடுப்பு ஆணைய(எம்ஏசிசி)த் தலைவர் சுல்கிப்ளி அஹமட் அரசியல்வாதிகளை எச்சரித்தபோது “மலேசியாவின் முதன்மை அதிகாரி”க்கும் சேர்த்தே அந்த எச்சரிக்கையை விடுத்திருக்க வேண்டும், இல்லையென்றால் அந்த எச்சரிக்கை அர்த்தமற்றது என டிஏபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங் கூறினார். “சுல்கிப்ளி ‘இருங்கள் உங்களைப் பார்த்துக்கொள்கிறேன்’ என்று எச்சரித்தபோது எம்ஓ1-க்கும் …
பெர்சே வழக்கு தொடுத்ததை அடுத்து விசாரணைக்கு இணங்கியது இசி
பெர்சே சார்பில் தேர்தல் ஆணைய(இசி)த்துக்கு எதிராக வழக்கு தொடுத்திருந்த ஸோ ரந்தவா, வழக்கை மீட்டுக் கொண்டிருக்கிறார். இசி, செகாம்புட்டில் தேர்தல் தொகுதி எல்லைத் திருத்தத்துக்குத் தெரிவிக்கப்பட்ட ஆட்சேபனைகள் குறித்து விசாரணை நடத்த ஒப்புக்கொண்டதை அடுத்து அவர் அவ்வாறு செய்தார். தொடக்கத்தில், 100 பேர் ஆட்சேபனை செய்திருந்தும்கூட இசி விசாரணை …
பிஎம்எப் மற்றும் 1எம்டிபி அவதூறுகளுக்கிடையிலான வித்தியாசங்கள் என்ன?, மகாதிர் விவரித்தார்
முன்னாள் பிரதமர் மகாதிர் அவர் ஆட்சியிலிருந்த போது நடந்த பிஎம்எப் (BMF)அவதூறு மற்றும் தற்போதைய 1எம்டிபி (1MDB) குழப்பமான சிக்கல்கள் ஆகியவற்றுக்கிடையிலான வித்தியாசங்களை விவரித்தார். பிஎம்எப் விவகாரத்தில் அதிகாரத்திலிருந்த அரசாங்கம் நேரடியாக எந்தத் தவறான செயல்களிலும் சம்பந்தப்பட்டிருந்தாக குற்றச்சாட்டுகள் இல்லை என்று மகாதிர் அவரது வலைத்தளத்தில் பதிவு…
நடந்தது பற்றி வருந்தி, டிஎபியைக் கைவிட்டால், மகாதிரை பாஸ் அரவணைத்துக்கொள்ளும்
பார்ட்டி பிரிபூமி பெர்சத்து மலேசியா (பெர்சத்து) தலைவர் டாக்டர் மகாதிரை ஏற்றுக்கொள்ள பாஸ் கட்சி தயார். ஆனால், கடந்த காலத்தில் அவர் பாஸ் கட்சிக்கு எதிராக மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு வருத்தப்பட வேண்டும், தவறுகளைத் திருத்திக்கொள்ள வேண்டும். மேலும், டிஎபியுடனான தொடர்புகளைத் துண்டித்துக்கொள்ள வேண்டும். பாஸ் கட்சியின் ஆய்வு…
பினாங்கில் திடீர் தேர்தல் நடத்த எதிர்ப்பு, ஆனால் சாபாவில் நடத்த…
சபாவில் திடீர் தேர்தல் நடத்தலாம் என்பதை பாரிசான் நேசனல் ஆதரிக்கிறது என்று த ஸ்டார் வெளியிட்டுள்ள செய்தி குறித்து பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் வியப்பு தெரிவித்துள்ளார். வட்டாரங்களை மேற்கோள்காட்டி வெளியிடப்பட்ட அச்செய்தி பிரதமரும் பாரிசான் நேசனல் தலைவருமான நஜிப் ரசாக் அதற்கு ஒப்புதல் அளித்துள்ளதாகக்…
மரபணுச் சோதணைக்குப் பின்னரும் குழந்தைகள் நாடற்றவர்களாக அறிவிக்கப்பட்டு பள்ளிக்குச் செல்லத்…
தம்முடைய குழந்தைகள் நாடற்றவர்களாக அறிவிக்கப்பட்டு அவர்கள் பள்ளியில் படிப்பதைத் தொடர்வதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதால் ஒரு தகப்பனார் சீற்றமடைந்துள்ளார். இப்பிரச்சனை கடந்த ஆண்டு தொடக்கத்தில் தலைதூக்கியது என்று எம். வெங்கடேஸ்வரன், 44, கூறினார். அவருடைய குழந்தைகளுக்கு குடியுரிமை இல்லாததால் பள்ளியின் தலைமை ஆசிரியர் அவர்களை பள்ளிக்கூடத்தில் படிப்பதிலிருந்து நிறுத்தி விட்டார்.…
பிஎம்எப் பணம் மகாதிரின் கணக்கிற்கு போகவில்லை, கிட் சியாங்
பிஎம்எப் (Bumiputra Malaysia Finance Ltd)ஊழல் விவகாரத்தில் மகாதிரின் நிருவாகத்திற்கு தொடர்பு இருந்ததாக தற்போது அமெரிக்க உளவுத்துறை (சிஐஎ) வெளியிட்டிருக்கும் தகவலைவிட மிகக் கடுமையான விவகாரம் 1எம்டிபி சர்ச்சையாகும் என்று டிஎபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங் கூறுகிறார். இன்று பினாங்கில் ஒரு செய்தியாளர் கூட்டத்தில்…
கல்வியைத் தொடர இந்திய மாணவர்களுக்கு தடை!
பினாங்கு மாக் மண்டெனில் வசிக்கும் வெங்கடேஸ்வரனின் மூன்று பிள்ளைகள் முறையே சூர்யா 12, அகிலாண்டேஸ்வரி 11, துரநாயகி 9 ஆகியோர் பள்ளிக்குச் செல்ல கல்வி அமைச்சு பிடிவாதமாய் அனுமதி வழங்க மறுத்து வருகிறது. கல்வி அமைச்சின் பொது செயலாளர் டத்தோ ஸ்ரீ டாக்டர் கயிர் முஹமட் யூசோப் இவர்களுக்கு உத்திரவாதம் அளித்தும்…


