இன ரீதியான பிரச்சனைகள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் தொடர்பான சர்ச்சைகளை எதிர்கொள்ளும் போது, இந்திய சமூகமும் மலேசியாவிலுள்ள இதர சிறுபான்மையினரும் தற்காப்பு நிலையில் இருப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று வழக்கறிஞர் லத்தீஃபா கோயா வலியுறுத்தியுள்ளார். நேற்று கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூர் சீன அசெம்பிளி ஹாலில் நடைபெற்ற மன்றம் ஒன்றில்…
அமனா 50,000 பேரை பெர்சே 5 பேரணிக்கு அழைத்துவரும்
பார்டி அமனா மலேசியா, வரும் சனிக்கிழமை கோலாலும்பூரில் நடைபெறும் பெர்சே 5 பேரணிக்கு 50,000 உறுப்பினர்களையும் ஆதரவாளர்களையும் திரட்டி வருவதாக உறுதியளித்துள்ளது. அத்துடன் அக்கட்சி 55 வழக்குரைஞர்களையும் 50 மருத்துவர்களையும் 30 செய்தியாளர்களையும் 20 படப்பிடிப்பாளர்களையும் ஏற்பாடு செய்திருப்பதாக அமனா தலைமைச் செயலாளர் முகம்மட் அனுவார் தாகிர் செய்தியாளர்களிடம் …
முன்னாள் -இசி தலைவர் 14வது பொதுத் தேர்தலில் போட்டி?
பார்டி பிரிபூமி பெர்சத்து மலேசியா (பெர்சத்து) உதவித் தலைவர் அப்துல் ரஷிட் ரஹ்மான், அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிடும் சாத்தியத்தை மறுக்கவில்லை. “நீங்கள் நாட்டை மாற்ற நினைத்தால், நிச்சயமாக ஆட்சியில் இருக்க வேண்டும். “குறிப்பிட்ட இடங்களில் வெற்றிபெற முடியும் என்ற எண்ணம் இருக்குமானால் ஏன் போட்டியிடக் கூடாது? எங்கு …
நாடாளுமன்ற சட்டவிலக்கை வலுப்படுத்த அரசமைப்பில் திருத்தம் செய்ய வேண்டும்: பிஎன்…
பிஎன் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், அரசமைப்பில் திருத்தம் செய்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குள்ள சட்டவிலக்கை வலுப்படுத்தலாம் என முன்மொழிந்தார். அரசமைப்பில் அப்படி ஒரு திருத்தம் கொண்டுவர நாடாளுமன்றத்தில் எதிரணியினரின் ஒத்துழைப்பு தேவைப்படும். நாடாளுமன்ற சட்டவிலக்கு என்பது தேச நிந்தனைச் சட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்படும் விசாரணைகள் தவிர்த்து மற்ற வகை விசாரணைகளிலிருந்து எம்பிகளைப் …
முகைதின்: ரபிசிக்கு நேர்ந்த நிலை எனக்கு வர வேண்டாம்
முன்னாள் துணைப் பிரதமர் முகைதின் யாசின் பிகேஆர் எம்பியைப் போல் சிறை செல்லும் நிலை தமக்கு வராது என்று நம்புகிறார். “ரபிசிக்கு நேர்ந்தது குறித்து வருந்துகிறேன். அந்நிலை எனக்கு வராது என்றும் நம்புகிறேன்”, என இன்று புக்கிட் அமானில் இரண்டு மணி நேரம் வாக்குமூலம் அளித்த பின்னர் முகைதின் …
ஹாடி: பாஸ் சில விசயங்களில் அம்னோவை ஆதரிக்கவில்லை
பாஸ் எல்லா விசயங்களிலும் அம்னோவை ஆதரிக்கவில்லை என்று அந்த இஸ்லாமிய கட்சித் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங் கூறினார். “சில விசயங்களில் அம்னோவை ஆதரிக்கிறோம். ஆனால், அதனுடன் ஒத்துப்போகாத இடங்களும் உண்டு. ஒட்டுமொத்தமாக (அம்னோவை) ஆதரிக்கவில்லை”, என்றாரவர். பாஸ் அம்னோவை ஆதரிக்கிறதா என்ற கேள்விக்கு மாராங் எம்பி அவ்வாறு …
ஜமால்: ‘போலீஸ் அடித்தார்கள்’ என்று நான் சொன்னதுபோல் தெரிகிறது; ஆனால்,…
சுங்கை புசார் அம்னோ தலைவர் ஜமால் முகம்மட் யூனுஸ், நேற்று அம்பாங்கில் பெர்சே-எதிர்ப்பு நடவடிக்கையின்போது போலீசார் தன்னைத் தாக்கினார்கள் என்று தான் சொல்லவே இல்லை என்று மறுக்கிறார். நேற்று போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டபோது "Polis tumbuk saya (போலீஸ் தாக்கி விட்டது)” என்று ஜமால் உரத்த குரலில் சத்தமிடுவது …
அஸ்மின்: ரபிசி குற்றவாளி என்ற தீர்ப்பால் பிகேஆர் தளர்ந்து விடாது
பிகேஆர் உதவித் தலைவர் ரபிசி ரம்லி குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டிருக்கலாம் ஆனால், அதனால் கட்சி பலவீனமடைந்து விடாது என்கிறார் அதன் துணைத் தலைவர் அஸ்மின் அலி. மாறாக, நீதிமன்றத் தீர்ப்பு பிகேஆரின் வலிமையை அதிகரித்து அதன் ஒற்றுமையை மேலோங்கச் செய்யும் என சிலாங்கூர் மந்திரி புசார் குறிப்பிட்டார். ரபிசி …
ஓஎஸ்ஏ-யை மீறிய வழக்கில் ரபிசிக்கு 18 மாதச் சிறைத் தண்டனை
கோலாலும்பூர் செஷன்ஸ் நீதிமன்றம் பிகேஆர் உதவித் தலைவர் முகம்மட் ரபிசி ரம்லி 1972ஆம் ஆண்டு அதிகாரத்துவ இரகசிய சட்ட (ஓஎஸ்ஏ)த்தை மீறினார் என்று தீர்ப்பளித்து அவருக்கு 18 மாதச் சிறைத் தண்டனை விதித்தது. ரபிசி அனுமதியின்றி 1எம்டிபி மீதான அரசாங்கத் தலைமைக் கணக்காய்வாளரின் அறிக்கையின் 98அம் பக்கத்தைத் கைவசம் …
போலீசார் பெர்சே 5 பேரணிக்கென கண்காணிப்புக் குழுவை அமைக்க வேண்டும்
பெர்சே 5 பேரணியின்போது போலீசார் நன்முறையில் நடந்து கொள்வதை உறுதிப்படுத்த அதிகாரிகள் கண்காணிப்புக் குழு ஒன்றை உருவாக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. “புதிதாக ஒன்றைப் பரிந்துரைக்க விரும்புகிறேன் - போலீசார் கண்காணிப்பாளர்கள் அடங்கிய குழுவை உருவாக்கி பேரணியைக் கண்காணிப்பதுடன் போலீசார் நன்முறையில் நடந்து கொள்வதையும் உறுதிப்படுத்த வேண்டும்”, என …
நஜிப்: மகாதிரும் கிட் சியாங்கும் ‘பல்டி-அடிப்பு மன்னர்கள்’
பார்டி பிரிபூமி பெர்சத்து மலேசியா(பெர்சத்து) வும் பக்கத்தான் ஹராபானும் ஆகக் கடைசியாக செய்துகொண்டிருக்கும் ஒப்பந்தம் எந்த அளவுக்கு நேர்மையானது என்பதைச் சீனர் சமூகம் எண்ணிப் பார்க்க வேண்டும் என்று பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் வலியுறுத்தியுள்ளார். இன்று மசீசவின் 63வது ஆண்டுக் கூட்டத்தில் உரையாற்றிய நஜிப், பெர்சத்து தலைவர் …
பிஎன்னை வீழ்த்துவதில் பாஸுக்கு அக்கறையில்லை: ஹராபானுக்கு என்ஜிஓ அறிவுறுத்து
எதிரணிக் கூட்டணி பாஸ் கட்சியைத் தன்பக்கம் இழுப்பதற்கான முயற்சிகளக் கைவிடுவது நல்லது. பாஸ் கட்சிக்கு அரசாங்கத்தை மாற்றும் ஒரு கூட்டு முயற்சியில் சேர்ந்து கொள்ளும் எண்ணம் இல்லை. “பாஸின் செயல்கள் ஹராபானின் அழைப்பை ஏற்பதில் அக்கட்சிக்கு அக்கறை இல்லை என்பதைத் தெளிவாகக் காண்பிக்கின்றன. அது என்னன்னவோ காரணங்களைக் கூறுகிறது, …
ஜமாலுக்காக டிஏபி பிரதிநிதி மன்னிப்பு கேட்டார்
டிஏபியின் செகிஞ்சான் சட்டமன்ற உறுப்பினர் இங் சுவி லிம், சிவப்புச் சட்டை இயக்கத் தலைவர் ஜமால் முகம்மட் யூனுசும் தம் வட்டாரத்தைச் சேர்ந்தவராக இருப்பதற்காக மன்னிப்பு கேட்டுக்கொண்டார். “சிவப்புச் சட்டைத் தலைவர் சுங்கை புசார் அம்னோ தொகுதித் தலைவர் ஜமாலும் செகிஞ்சானைச் சேர்ந்தவர்தான் என்பதற்காக உங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.…
சுல்தான் நஸ்ரின் ஆயிரக்கணக்கானோருடன் பிறந்த நாள் ஓட்டத்தில் கலந்து கொண்டார்
சுல்தான் நஸ்ரின் ஷாவும் ராஜா பெர்மைசுரி பேராக் துவாங்கு ஸாரா சலிமும் கோலா கங்சார், ட்டாரான் பெவிலியனில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேராக் சுல்தான் பிறந்த நாள் ஓட்டத்தில் இன்று கலந்து கொண்டனர். அந்த ஓட்டத்தில் பேராக் மந்திரி மந்திரி புசார் ஸம்ரி அப்துல் காடிர் அவரின் துணைவியார் சரிபா …
உடலில் ஊனம், உள்ளத்தில் உறுதி, பெர்சே போராட்ட வீரர் இசையா…
ஒவ்வொரு பெர்சே பேரணியிலும் தவறாமல் தமது முடவர் கைக்கோலுடன் பங்கேற்கும் போராட்டவாதி இசையா ஜோசையா நவம்பர் 19 இல் நடைபெற திட்டமிடப்பட்டுள்ள பெர்சே 5 பேரணி எவ்விதத் தடைகளும் இல்லாமல் அமைதியாக நடைபெறுவதற்காக இன்று நள்ளிரவு தொடங்கி ஒரு வாரத்திற்கு உண்ணாவிரதம் மேற்கொள்கிறார். "உபவாசம் இருத்தல், பிரார்த்தனை செய்தல்"…
பாஸ் கட்சியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் சாத்தியம் என்று பெர்சத்து நம்புகிறது
பெர்சத்து மற்றும் பாஸ் கட்சி ஆகிய இரண்டிற்கும் இடையில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொள்வதற்கான வேலை நடந்து கொண்டிருக்கிறது என்று பெர்சத்துவின் தற்போதைய தலைவர் முகைதின் யாசின் உறுதிப்படுத்தினார். பெர்சத்துவின் பக்கத்தான் ஹரப்பானுடனான ஒப்பந்தமும் பாஸ் கட்சியுடனான ஒப்பந்தமும் ஒன்றாகச் செய்யப்படுமா என்று முகைதின் யாசினிடம் இன்று…
ஜோ லோவின் வங்கி முன்னாள் நிர்வாகிக்கு 18 வார சிறைவாசம்
சுவிஸ் வங்கி பிஎஸ்ஐ (BSI) முன்னாள் நிர்வாக இயக்குநர் யாக் இயு சீ நான்கு கிரிமினல் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டுள்ளார். இன்று, அவருக்கு 18 வார சிறை தண்டனையும் S$24,000 அபராதமும் வித்திக்கப்பட்டது. யாக், வணிகர் லோ தேக் ஜோவுக்கு வங்கியின் உறவுமுறை நிர்வாகியாக இருந்தவர், பொய்க் கையெழுத்திடல்…
மரியாவுக்கு இரண்டாவது கொலை மிரட்டல்
பெர்சே 5 பேரணிக்கான நாள் நெருங்கிக் கொண்டிருக்கையில் அதன் தலைவர் மரியா சின் அப்துல்லா இன்னொரு கொலை மிரட்டலைப் பெற்றுள்ளார். இம்முறை அவருடைய கைத்தொலைபேசிக்கு அனுப்பப்பட்டுள்ள உருவப் படிவங்களில் மரியா, அவரது மூன்று மகன்கள், மன்டீப் சிங் மற்றும் அம்பிகா சீனிவாசன் ஆகியோரின் தலைகள் கொய்யப்பட்டுள்ளன. முதல்…
மாணவ சமூக ஆர்வலர் யுஐஏ-இல் கைது
மாணவர் கூட்டமைப்பான கெசத்துவான் மஹாசிஸ்வா மலேசியா(கேஎம்எம்)வைச் சேர்ந்த ஒரு சமூக ஆர்வலர் கோம்பாக்கில் அனைத்துலக இஸ்லாமிய பல்கலைக்கழக வளாகத்தில் இன்று கைது செய்யப்பட்டார். யுனிவர்சிடி மலேசியா சாபா லாபுவான் அனைத்துலக வளாக மாணவரான அஷ்ரப் நஸ்ரின் அஸ்மான், கேஎம்எம்னின் பெர்சே 5 விளக்கமளிப்புக் கூட்டத்தில் முதல் பேச்சாளராக பேசவிருந்தார்.…
மக்களவைத் தலைவருக்கு எதிரான புகார்மீது நடவடிக்கை எடுப்பதில் தாமதம் ஏன்?…
முன்னாள் பத்து கவான் அம்னோ உதவித் தலைவர் கையருடின் அபு ஹசான், மக்களவைத் தலைவர் பண்டிகார் அமின் அப்துல்லாவுக்கு எதிராக தாம் செய்த புகாரின்மீது நடவடிக்கை எடுப்பதில் போலீசார் அவசரம் காட்டாதது ஏன் என்று வினவினார். இதற்கு முற்றிலும் மாறாக, அக்டோபர் 27-இல் ஒரு என்ஜிஓ-வான ஜாரிங்கான் மலாயு …
ஏஜி-இன் முடிவை எதிர்க்கும் ஜைட்டின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்மீது வழக்கு தொடர்வதில்லை என்று சட்டத்துறைத் தலைவர் (ஏஜி) அலுவலகம் செய்த முடிவை எதிர்ப்பதற்கு அனுமதி கேட்டு முன்னாள் அமைச்சர் ஜைட் இப்ராகிம் செய்த மனுவை கோலாலும்பூர் உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. நீதிமன்றம் ஏஜியின் முடிவில் தலையிட முடியாது என்று தீர்ப்பளித்த …
ஊழல் குற்றச்சாட்டு: ஜிஎல்சி பொது மேலாளர் ஐந்து- நாள் தடுத்து…
அரசாங்கத் தொடர்புள்ள ஒரு நிறுவன(ஜிஎல்சி)த்தின் பொது மேலாளரையும் இதர இருவரையும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய (எமஏசிசி) விசாரணைக்காக ஐந்து நாள்களுக்குத் தடுத்து வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த 52வயது மேலாளர் புத்ரா ஜெயாவைச் சுற்றியுள்ள பகுதிகளில் மேற்கொள்ளப்படும் கட்டுமானப் பணிகளைக் கண்காணிக்கும் ஒரு நிறுவனத்தின் ஆலோசகர் என்றறியப்படுகிறது.…
பிலிப்பீன்ஸ் முடிவு ஆள்கட்டத்தலைத் தடுக்க உதவும்
பிலிப்பீன்ஸ் அரசாங்கம், சாபா கடலில் கடத்தல்காரர்களை விரட்டிச் செல்லும் மலேசிய சட்ட அமலாக்கப் பிரிவினர் தனது எல்லைக்குள் நுழைவதற்கு அதிகாரம் வழங்கியிருப்பது அவர்களின் நடவடிக்கைகளைச் சுலபமாக்கும் எனத் துணைப் பிரதமர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி கூறினார். பிலிப்பீன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுடெர்டேயின் முடிவை வரவேற்ற அஹ்மட் ஜஹிட், அது …
சிட்னியில் அருளின் உணவுக்கான செலவை மட்டுமே அரசாங்கம் ஏற்றது
1எம்டிபி தலைவர் அருள் கண்ட கந்தசாமி ஆஸ்திரேலியாவின் சிட்னிக்கு ஒரு நிகழ்வில் கலந்துகொள்ளச் சென்றபோது அவரின் உணவுக்கான செலவை மட்டுமே தான் ஏற்றதாக தொடர்பு, பல்லூடக அமைச்சு கூறியது. நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட 1எம்டிபி நிகழ்வில் கலந்து கொள்வதற்காக அருள் சென்றார் என்பதால் அவரின் பயணச் …


