மலேசியாவுக்காக ‘உண்ணாவிரதத்திலும் பிரார்த்தனையிலும்’ ஈடுபடப் போகிறார் மாற்றுத்திறனாளி

மாற்றுத்திறனாளி   ஏசையா  ஜேக்கப்   பெர்சே  5 பேரணி   நடைபெறும்  நவம்பர்  19வரை   “உண்ணாவிரதமிருந்து   பிரார்த்தனையில்”  ஈடுபடப்  போகிறார். அவருடைய  உண்ணாவிரதம்    எதிர்வரும்   ஞாயிற்றுக்கிழமை   நள்ளிரவில்   தொடங்கி    அடுத்து   வரும்   சனிக்கிழமை   முடிவுறும். “எல்லாம் வல்ல  இறைவன்   மலேசியாவைக்   காக்க  வேண்டும்   என்று   வேண்டிக்கொள்ளப்   போகிறோம்.  நாட்டின்   இப்போதைய   நிலவரத்தைக் …

மலேசியாவில் சுமார் 2 மில்லியன் தற்காலிக அன்னிய தொழிலாளர்கள்

2016   செப்டம்பர்   30  முடிய,    மலேசியாவில்    தற்காலிக   வேலை   அனுமதிகள்    வைத்திருந்த    அன்னிய   தொழிலாளர்கள்    எண்ணிக்கை   1,854, 684. இவர்களுக்கு   குடிநுழைவுத்   துறை    தற்காலிக   வேலை  அனுமதி(பிஎல்கேஎஸ்)களை   வழங்கியுள்ளது    என    உள்துறை   அமைச்சர்   அஹ்மட்  ஜாஹிட்  ஹமிடி   கூறினார். பிஎல்கேஎஸ்    வைத்திருப்போரில்   அதிகமானோர்   இந்தோனேசியர்கள் (749,266).  அவர்களை   அடுத்து  …

சிறு பிள்ளையை அடித்ததுடன் பொறித்த கரப்பான் பூச்சியை உணவாகவும் கொடுத்த…

பொறியாளர்   ஒருவர்   தன்   காதலியின்   பிள்ளையை  அடித்ததுடன்  அப்பிள்ளைக்கு    சோறுடன்   பொறித்த   கரப்பான்  பூச்சிகளையும்  உணவாகக்   கொடுத்தாராம். அதன்  தொடர்பில்   அந்த   36-வயது   ஆடவர்  பினாங்கு,  ஜார்ஜ்டவுனில்   இன்று    அதிகாலை  கைது    செய்யப்பட்டார். அந்த   ஆடவர்   ஒரு  வரைகோலால்   100    சுமார்   தடவை     அந்த   எட்டு   வயது   பிள்ளையை  …

ஈப்போ மருத்துவமனையில் மின்கசிவு

நேற்றிரவு   ஈப்போ  ராஜா  பெர்மைசுரி  பைனுன்    மருத்துவமனையில்    மின்கசிவு   ஏற்பட்டதால்   5பி   ஆண்கள்  மருத்துவக்கூடத்தில்   இருந்த  நோயாளிகள்   அங்கிருந்து   அப்புறப்படுத்தப்பட்டனர். படுக்கைகளுக்கு    அருகில்   சுவரில்  இருந்த   ஒரு   ‘பிளக்’கில்     அந்த  மின்கசிவு   ஏற்பட்டதாக   சுகாதார    தலைமை   இயக்குனர்   ஹிஷாம்  அப்துல்லா  கூறினார். அச்சம்பவத்தில்  நோயாளிகள்    அல்லது   மருத்துவமனை   பணியாளர்கள்  …

பிபிசி: கோல்ப் தோழர் நஜிப் தமது “பிரியமான பிஎம்” என்று…

  மலேசியப் பிரதமர் நஜிப் கோல்ப் விளையாட்டின் மீது கொண்டிருக்கும் விருப்பம் அவருக்கு அமெரிக்க வெள்ளை மாளிகையில் ஒரு கூட்டாளியைப் பெற்றுத்தந்துள்ளது. அமெரிக்க அதிபராக தேர்ந்துதெடுக்கப்பட்டிருக்கும் டொனால்ட் டிரம்ப் மலேசியத் தலைவரின் "கோல்ப் விளையாட்டு தோழர்" என்று பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. நஜிப்பும் டிரம்ப்பும் இருக்கும் ஒரு கையொப்பமிட்ட…

டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராக வெற்றி பெற்றார்

  அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளின்டனை தோற்கடித்து குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் ஜெ. டிரம்ப் வெற்றி பெற்றார். டிரம்ப் அமெரிக்காவின் 45 ஆவது அதிபராகிறார். அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜனநாயக் கட்சி அமெரிக்க காங்கிரசின் இரு அவைகளையும் அதன் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளது.…

வெள்ளத்தைக் கட்டுப்படுத்த பினாங்கு அரசு செலவிட்ட ரிம40 மில்லியன் வீண்…

பினாங்கு   அரசு    கடந்த   ஐந்தாண்டுகளில்  வெள்ளத்தடுப்புத்   திட்டங்களுக்காகக்       கிட்டத்தட்ட   ரிம40  மில்லியன்  செலவிட்டும்      அப்பிரச்னைக்கு    இன்னும்   தீர்வு    காணப்படவில்லை   என   கெராக்கான்   கூறியது. அக்கட்சியின்  மாநிலச்   செயலாளர்   ஹொங்  சீ    வெய்,     பினாங்கு   பட்ஜெட்    2011-இலிருந்து   2015  வரை   ஆறுகளை   ஆழப்படுத்தவும்    வெள்ளத்தடுப்புக்காகவும்   ரிம38  மில்லியன்   செலவிடப்பட்டதாகக்  கூறுவதைச்  …

சுற்றுலா நிகழ்வுகளுக்காக ரிம5.2 மில்லியன் செலவிட்டது குறித்து இங் யென்…

முன்னாள்   சுற்றுலா   அமைச்சர்   இங்   யென்   யென்   அவரது  முன்னாள்   தொகுதியான   ரவுப்பில்    சில   நிகழ்வுகளுக்காக   ரிம 5.2 மில்லியன்   செலவிட்டது   குறித்து   மலேசிய    ஊழல்  தடுப்பு   ஆணையம்   விசாரிக்க   வேண்டும். அமைச்சு   மீதான   பொதுக்  கணக்குக்  குழு(பிஏசி)   அறிக்கையில்   அந்தத்  தொகை  கவனத்துக்குக்   கொண்டு  வரப்பட்டிருக்கிறது    என   …

அரசாங்க மருத்துவமனைகளில் சிகிச்சைக் கட்டணங்களில் மாற்றமில்லை

அரசாங்க  மருத்துவமனைகளில்   வெளிநோயாளிகளுக்கான    கட்டணங்களில்   எந்த  மாற்றமுமில்லை  எனச்  சுகாதார   அமைச்சின்   தலைமைச்   செயலாளர்   டாக்டர்  சென்   சாவ்  மின்    தெரிவித்தார். அதேவேளை  வசதிக்குறைந்தவர்களுக்கும்   தொற்று  நோய்     கண்டவர்களுக்கும்   மூத்த   குடிமக்களுக்கும்    மாணவர்களுக்கும்  தாய்மார்களுக்கு  மகப்பேறுக்கு   முந்திய- பிந்திய  சிகிச்சைகளுக்கும்   ஒரு  வயதுக்குக்  குறைவான   பச்சிளம்   பிள்ளைகளுக்கும்   மருத்துவக்  …

மறுசுழற்சி செய்யப்பட்ட சமையல் எண்ணெயில் நச்சுத்தன்மை அதிகம்

மறுசுழற்சி   செய்யப்பட்ட    சமையல்  எண்ணெய்  விஷத்தன்மை   மிக்கது   அதை    உட்கொள்வதால்   கல்லீரல்  அழற்சி,  புற்றுநோய்,  மாரடைப்பு   போன்றவை  ஏற்படலாம். மறுசுழற்சி   செய்யப்பட்ட   சமையல்  எண்ணெயில்   விஷத்தன்மை    அதிகம்   என்பதால்  அது  இரத்தக்  குழாய்களில்   அடைப்பை   உண்டாக்கலாம்,  இரத்த   அழுத்தத்தை    அதிகரிக்கலாம்    என  மலேசிய   முஸ்லிம்   மருத்துவர்   சங்க (பெர்டிம்) …

அம்பிகா: ஐஜிபி கூறுவது தவறு, முறையான அறிவிக்கை கொடுக்கப்பட்டது

டட்டாரான்  மெர்டேகாவுக்கு   வெளியில்   பெர்சே   பேரணி   நடத்தப்படுவது   குறித்து   முறையாக    தெரிவிக்கப்படவில்லை   என்று   போலீஸ்   படைத்   தலைவர்   காலிட்  அபு   பக்கார்    குறிப்பிட்டிருப்பது     சரியல்ல   என்கிறார்   பெர்சே   முன்னாள்    தலைவர்  அம்பிகா  ஸ்ரீநிவாசன். முறையான    அறிவிக்கையும்   பேரணியில்   கலந்துகொள்வோர்    அணிவகுத்துச்   செல்லும்     வழிகளைக்   காண்பிக்கும்   வரைப்படமும்    போலீசிடம்  கொடுக்கப்பட்டு …

முன்னே இருந்தவர்களும் தோற்றுப் போனார்கள்: 2012 நீதிமன்றத் தீர்ப்பை ஜாஹிட்டுக்கு…

பெர்சே   தன்னைச்    சட்டவிரோத  அமைப்பு   என்று   அறிவிக்க  முயன்று    அரசாங்கம்    தோற்றுப்போனதைத்   துணைப்  பிரதமர்   அஹ்மட்   ஜாஹிட்  ஹமிடிக்கு     நினைவுப்படுத்தியது. உள்துறை   அமைச்சருமான   அஹ்மட்  ஜாஹிட்,  பெர்சேயும்   பெர்சேயை   எதிர்க்கும்   சிவப்புச்  சட்டை     இயக்கமும்   1966    சங்கப்  பதிவுச்   சட்டத்தின்கீழ்  பதிவு   செய்யப்படாத   அமைப்புகள்    என்பதால்    அவை  பேரணி  …

அஸலினா: மகாதிர் நாடாளுமன்றம் வந்தது ஒரு ‘கூத்து’, எதிரணி நம்பிக்கை…

இன்று  காலை   முன்னாள்   பிரதமர்   டாக்டர்   மகாதிர்  முகம்மட்   நாடாளுமன்ற   வளாகத்துக்கு   மேற்கொண்டிருந்த   வருகை   எதிரணியினர்   நம்பிக்கை   இழந்து  விட்டதைக்   காண்பிப்பதாக     அஸலினா  ஒஸ்மான்   சைட்   கூறினார். நாடாளுமன்ற  உறுப்பினர்களின்   சட்டவிலக்கு   குறித்து   ஆராயும்   முயற்சி   என்று  எதிரணியினர்  கூறுவது   ஒரு  “கண்துடைப்பு”  எனப்  பிரதமர்துறை  அமைச்சருமான   அஸலினா  …

‘மலேசியாகினிக்குத் தொல்லை கொடுப்பதை நிறுத்துவீர்’, அரசாங்கத்துக்கு சிபிஜே அறிவுறுத்து

செய்தியாளர்   பாதுகாப்புக்  குழு (சிபிஜே),  அரசாங்கம்   இணையச்   செய்தித்தளமான   மலேசியாகினிக்கு  தொல்லை   கொடுப்பதை  நிறுத்த   வேண்டும்   என்று   வலியுறுத்தியது. போலீசார்  மலேசியாகினிமீது    குற்றப்புலனாய்வு    விசாரணை  ஒன்றைத்   தொடங்கியிருப்பதை    அடுத்து   சிபிஜே    இவ்வாறு   வலியுறுத்தியது. “மலேசியாகினி   சுதந்தரமாக    செய்தி   வெளியிடுவது   நன்மையைக்   கொண்டுவரும்    என்று   நினைக்காமல்   அதை    மலேசிய  ஜனநாயகத்துக்கு   …

போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டவரின் பிணத்தை மறு பரிசோதனை செய்ய அவரின் குடும்பத்தார்…

போலீசாரால்  சுட்டுக்கொல்லப்பட்ட   முகம்மட்   ஷாரில்   சுகுமாறன்   அப்துல்லாவின்    பிணத்தை   இரண்டாவது   முறையாக  பரிசோதனை   செய்ய   அவரின்  குடும்பத்தார்  ரிம15 ஆயிரம் கொடுத்துள்ளனர். இதற்காக,    ஆகஸ்ட்   19-இல்   போலீசுடன்   நடந்த   துப்பாக்கிச்   சண்டையின்போது   சுட்டுக்கொல்லப்பட்டதாகக்  கூறப்படும்      முகம்மட்  ஷாரிலின்   உடல்     நேற்று   சுங்கை  துவா   மயானத்திலிருந்து   தோண்டி   எடுக்கப்பட்டு   யுனிவர்சிடி  …

‘எனக்குத் தனிச் செயலாளர் யாரும் இல்லை’, பெர்னாமா செய்திக்கு இராமசாமி

 சதீஷ்  முனியாண்டியை   தம்முடைய   தனிச்   செயலாளர்    என்று  குறிப்பிடும்   பெர்னாமா   செய்தியை   பினாங்கு     துணை   முதல்வர்  II  பி.இராமசாமி  மறுத்துள்ளார். டிஏபி   சோசலிஸ்ட்  இளைஞர்  பகுதியின்   உறுப்பினரும்   செபராங்  பிறை   முனிசிபல்   கவுன்சிலருமான   சதீஷ்,   இன்று   பிற்பகல்  மணி   3க்கு    புக்கிட்   அமான்   கூட்டரசு    போலீஸ்    தலைமையகத்தில்   விசாரிக்கப்படுவார்.…

நாடாளுமன்றத்தில் முன்னாள் பிரதமர் மகாதிர், எதிரணி உறுப்பினராக

  முன்னாள்  பிரதமர்   டாக்டர்   மகாதிர்  முகம்மட்  பல    ஆண்டுகளுக்குப்    பிறகு    இன்று   முதன்முறையாக   நாடாளுமன்றம்   சென்றார்   அதுவும்,  எதிரணி   உறுப்பினராக. 22  ஆண்டுகள்  பிரதமராக  இருந்த   மகாதிர்,  நாடாளுமன்ற   உறுப்பினர்களின்   சலுகைகளும்    சட்டவிலக்குகளும்   மீதான   ஒரு  சிறப்புக்  கூட்டத்தில்   கலந்துகொள்வதற்காக  இன்று    நாடாளுமன்றம்   சென்றார். அக்கூட்டத்தில்    பெர்சத்து    தலைவர்   முகைதின்  …

ஹிண்ட்ராப் மக்கள் பேரியக்கம்: அம்னோ மேலாதிக்கத்தை தகர்த்தெரிய பெர்சே 5…

  கடந்த  செப்டம்பர் 15 இல், சிகப்புச் சட்டைக்காரர்கள் ஒரு ஆயிரக்கணக்கான மக்களை  வீதியில்  திரட்டினர், அதன் பின்னர்,   சென்ற வரம் 3-ஆம் தேதி  அவர்கள் மலேசியாகினி அலுவலகத்தை முற்றுகையிட்டு, அங்கு மலேசியாகினி பிரதான ஆசிரியர்களிடம் பேசுகையில்   20,000  சிகப்பு சட்டைக்காரர்களோடு  மலேசியாகினி அலுவலகத்தை தரை மட்டமாக்கப் போவதாக அதன்…

1எம்டிபி மீது வாதமிடுவது எம்பிகளின் உரிமை- ஷாபி அப்டால்

பார்டி   வாரிசான்   சாபா   தலைவர்   ஷாபி  அப்டால்,   நாடாளுமன்ற   விவாதங்களின்போது   அரசின்  முதலீட்டு   நிறுவனமான  1எம்டிபி  குறித்து   பேசும்   உரிமை   ஒரு   நாடாளுமன்ற  உறுப்பினரான    தமக்கு    உண்டு   என்று   தற்காத்துப்   பேசினார். “நாடாளுமன்றத்தில்   பேசுவதற்காக    நாடாளுமன்ற   உறுப்பினர்களை   விசாரிப்பது   கூடாது. “அது  (மக்களவை)   கூட்டரசு    அரசமைப்பையும்   சட்ட  …

ஆண்டுதோறும் 150 மருத்துவ நிபுணர்கள் பணி விலகல்

கடந்த  ஆறாண்டுகளாக   ஆண்டுதோறும்  150  மருத்துவ   நிபுணர்கள்   சுகாதார  அமைச்சிலிருந்து     விலகிக்  கொண்டிருப்பதாக   இன்று   நாடாளுமன்றத்தில்   தெரிவிக்கப்பட்டது. இவ்வாண்டு  ஜனவரிக்கும்   செப்டம்பருக்குமிடையில்   128   நிபுணர்கள்   வேலையிலிருந்து   விலகியதாகவும்   கடந்த   ஆண்டில்   124  பேர்  விலகிக்  கொண்டார்கள்   என்றும்    சுகாதார   துணை  அமைச்சர்   டாக்டர்   ஹில்மி    யாஹ்யா  கூறினார். “அவர்களின் …

பெர்சத்து அம்னோவுக்கு ஈடான எதிர்க்கட்சியாக உருவாகி வருகிறது- முன்னாள் அம்னோ…

டாக்டர்   மகாதிரையும்   முன்னாள்   துணைப்   பிரதமர்   முகைதின்   யாசினையும்   குறைந்து   மதிப்பிட  வேண்டாம்   என   அம்னோவை    எச்சரித்துள்ளார்   அதன்  முன்னாள்   தலைமைச்   செயலாளர்   முகம்மட்  ரட்சி   ஷேக்   அஹ்மட். அம்னோ     1980-களில்  செமாங்காட்   46  அமைந்தபோது   எதிர்நோக்கியதைவிட  இன்று   மிகப்   பெரிய   சவாலை   எதிர்நோக்குவதாக    முகம்மட்  ரட்சி   ஓரியெண்டல்   …

அரசாங்கம் புதிதாக முதியோர் இல்லங்களை நிறுவாது

முதியோரைப்  பராமரிக்க   அரசாங்கம்   புதிய   இல்லங்களைக்  கட்டப்போவதில்லை. பெரும்பாலோர்     வயதான  பெற்றோரை  வீட்டில்   வைத்துப்  பார்த்துக்கொள்ளாமல்  இந்த  இல்லங்களுக்கு    அனுப்பி   வைப்பதை      வழக்கமாகக்  கொண்டிருப்பதால்    அரசாங்கம்   இம்முடிவுக்கு   வந்திருப்பதாக   மகளிர்,  குடும்ப,  சமூக  மேம்பாட்டு   அமைச்சர்   ரொஹானி   அப்துல்  கரிம்   கூறினார். “இவ்வழக்கம்   நிறுத்தப்பட   வேண்டும்.  எனவேதான்,  இப்போதுள்ள …

அரசாங்க மற்றும் ஜிஎல்சி பணியாளர்களிடமிருந்து ரிம172 மில்லியன் கைப்பற்றப்பட்டது

2014   தொடங்கி    இவ்வாண்டு    செப்டம்பர்வரை    அதிகாரிகள்     அரசாங்க   மற்றும்   அரசுதொடர்புடைய   நிறுவனங்களின்(ஜிஎல்சி)   பணியாளர்கள்  1,037  பேரிடமிருந்து   மொத்தம்   ரிம171.77  மில்லியனைக்  கைப்பற்றியுள்ளனர். இதனைத்     தெரிவித்த    பிரதமர்துறை    அமைச்சர்   பால்  லாவ்,    2014இல்  225   அரசு   அதிகாரிகளும்   ஜிஎல்சி   பணியாளர்கள்  இருவரும்  கைது   செய்யப்பட்டு    அவர்களிடமிருந்து  ரிம113.4  மில்லியன்  பறிமுதல்   …