உத்துசான்: மகாதிரால் மலாய்க்காரர்களை பெர்சே பக்கம் திருப்ப முடியவில்லை

  பேர்சே 5 பேரணியில் பங்கேற்றவர்களில் பெரும்பான்மையானோர் சீனர்கள். அவர்கள் டிஎபி ஆதரவாளர்கள்.  இது மகாதிராலும் அவரது ஆதரவாளர்களாலும் மலாய்க்காரர்களை அதிகம் கவர முடியவில்லை என்பதைக் காட்டுகிறது என்று அம்னோ நாளிழதான உத்துசான் மலேசியா கூறுகிறது. பெர்செ 4 க்கிற்கு வந்திருந்தவர்களை விட பெர்சே 5 இல் பங்கேற்றவர்களின்…

இந்தியாவில் தடை செய்யப்பட்ட ஜாக்கீர் நாயக்கிற்கு மலேசியா சிவப்புக் கம்பளம்…

-மு. குலசேகரன், நவம்பர் 20, 2016.   சர்ச்சைக்குறிய மத போதகரான ஜாக்கீர் நாயக், தலைமையேற்றிருந்த  இஸ்லாமிய ஆராய்ச்சி அறவாரியத்திற்கு இந்திய அரசாங்கம் சட்டவிரோத இயக்கனமென கூறி  5 வருடத்திற்கு தடை விதித்துள்ளது. இதன் வழி அவரின் நடவடிக்கைகள் முற்றிலும் முடக்கப்பட்டுவிட்டன. மதத்துவேஷம், இளைஞர்களுக்கு வன்முறைப்  போதிப்பது, இனங்களுக்கிடையிலான…

கேஎல்சிசி நோக்கி 20ஆயிரம் மஞ்சள் சட்டையினர்

கோலாலும்பூரில்  ஜாலான்  அம்பாங்    அருகில்  உள்ள   பெட்ரோனாஸ்   இரட்டைக்  கோபுரம் ,  கேஎல்சிசியைச்  சுற்றியுள்ள   பகுதி    மஞ்சள்   நிறமாக  மாறி   வருகிறது. பெர்சேயின்   உத்தரவுக்கிணங்க   அதன்   ஆதரவாளர்கள்   கேஎல்சிசியை   நோக்கிக்  கூட்டம்   கூட்டமாக    சென்று  கொண்டிருக்கிறார்கள். பிற்பகல்   மணி   3.30   அளவில்   சுமார்  20ஆயிரம்   பேர்   அங்குக்  கூடியிருந்தனர். …

‘நல்ல கூட்டம்’ என்று மகாதிர் பாராட்டு

டட்டாரான்   மே  பேங்   வந்த   டாக்டர்   மகாதிர்   முகம்மட்  பெர்சே  5  பேரணிக்கு   நிறைய  பேர்  திரண்டு   வந்திருப்பதாக   பாராட்டினார். “நிறைய   பேர்   வந்துள்ளனர்.  அரசாங்கம்தான்   ஆர்ப்பாட்டம்   செய்யும்  மக்களின்   உரிமையைக்   கோழைத்தனமாகத்   தடுக்கப்   பார்க்கிறது. இந்த  உரிமை   அரமைப்பிலேயே   இருக்கிறது”,  என்றாரவர். பேரணியில்   சீனர்கள்தான்   அதிகமா   என்று  …

மரியாமீது சோஸ்மா குற்றச்சாட்டு, அவருடன் கைதான 9 பேருக்குத் தடுப்புக்…

பெர்சே   தலைவர்   மரியா  சின்   அப்துல்லா   பாதுகாப்புக்   குற்ற(சிறப்பு  நடவடிக்கை)ச்  சட்டத்தின்கீழ்   குற்றம்   சாட்டப்பட்டிருக்கிறார். மலேசியாகினிக்கு    அனுப்பிய    குறுஞ்  செய்தியில்   இன்ஸ்பெக்டர்- ஜெனரல்   அப்   போலீஸ்   காலிட்  அபு   பக்காரும்   அதை    உறுதிப்படுத்தினார். அவருடன்  கைதான  இதர  ஒன்பது   பேரும்    விசாரணைக்காக   இரண்டு  நாள்கள்  தடுத்து  வைக்கப்பட்டனர். இதனிடையே, …

சிவப்புச் சட்டை: ஜமாலும் இதர இருவரும் நான்கு நாள் தடுத்து…

சிவப்புச்   சட்டை   அணித்   தலைவர்    ஜமால்   முகம்மட்  யூனுசை  நான்கு  நாள்  தடுத்து  வைக்க  அம்பாங்   மெஜிஸ்திரேட்  நீதிமன்றம்   இன்று   உத்தரவிட்டது. அம்பாங்  பாயிண்ட்   சம்பவத்துக்காக    அவரும்   மற்ற  இருவரும்   விசாரணைக்காக    தடுத்து   வைக்கப்பட்டிருக்கிறார்கள். அம்மூவரும்   ஷா  ஆலம்    தடுப்பு   மையத்துக்குக்  கொண்டு   செல்லப்படுவதாக   அவர்களின்   சட்ட   ஆலோசகர்  …

டட்டாரான் மெர்டேகாவை நோக்கிச் செல்லும் கிட் சியாங், குவான் எங்

இன்று   பிற்பகல்   மணி   இரண்டுக்கு     பிரிக்பீல்ட்ஸ்  போக்குவரத்து  மற்றும்   விற்பனை   மையத்தில்   நூற்றுக்கணக்கான   பெர்சே  பங்கேற்பாளர்கள்   காணப்பட்டனர். டட்டாரான்   மெர்டேகா   நோக்கிச்   செல்வதற்குமுன்    பலர்   உணவகங்களை  நாடிச்   செல்ல     மேலும்  பலர்    இளைப்பாறிக்   கொண்டிருக்கிறார்கள். இதனிடையே,    லிம்  கிட்  சியாங்,  லிம்   குவான்  எங்   உள்பட   டிஏபி  தலைவர்கள்  …

பெர்சே டி-சட்டையில் விமான நிலையம் வந்திறங்கினார் மகாதிர்

சூடான்   நாடு   சென்றிருந்த   டாக்டர்   மகாதிர்   முகம்மட்   இன்று   பிற்பகல்   மணி   ஒன்றுக்கு   மலேசியா  திரும்பினார். மகாதிர்   பெர்சே  டி-சட்டை   அணிந்து   விமானத்திலிருந்து   இறங்கும்   படமொன்றை    வலைப்பதிவாளர்   பிர்டுஸ்  அப்துல்லா    பகிர்ந்து   கொண்டிருக்கிறார். ஆனால்,  மகாதிர்   வந்திறங்கியது   சுபாங்   விமான  நிலையமா,   கோலாலும்பூர்   அனைத்துலக   விமான   நிலையமா    என்பது   …

பெர்சே ஓர் எதிரணி இயக்கம்: அஸலினா சாடல்

பெர்சே  மக்களைத்   தூண்டிவிட்டு   தனக்குச்   சாதகமாகப்  பயன்படுத்திக்கொள்கிறதாம்.    பிரதமர்துறை  அமைச்சர்    அஸலினா   ஒத்மான்  கூறினார். அந்தத்  தேர்தல்  கண்காணிப்பு  அமைப்பு   இப்போது   ஓர்   எதிரணி   இயக்கமாக   மாறிவிட்டது    என்றவர்      சொன்னார்.

‘சிவப்புச் சட்டையினர் அமைதி விரும்பிகள் என்பதை நிரூபித்து விட்டோம்’

சிவப்புச்  சட்டையினர்   அவர்களின்   ஒன்றுகூடும்   இடமான   பாடாங்  மெர்போக்   சென்றடைந்தனர்.  அந்த   அணியினர்  அசம்பாவிதம்   ஏதுமின்றி   அந்த   இடத்தைச்  சென்றடைந்தது     அவர்கள்   அமைதியை   விரும்புவர்கள்  என்பதைக்   காண்பிப்பதாக   அம்னோ  இளைஞர்   செயல்குழு   உறுப்பினர்   அர்மண்ட்   அழா  கூறினார். அடுத்து   என்ன   என்று   வினவியதற்கு  “ஓய்வெடுக்கப்  போகிறோம்”  என்றார். “நாங்கள் …

அம்பிகா: தடுத்து நிறுத்தினாலும் பெர்சேக்கு ‘வெற்றியே’

பங்சாரில்   கூடிய   பெர்சேயின்   மஞ்சள்   சட்டையினர்    டட்டாரான்  மெர்டேகா  நொக்கி   ஊர்வலமாக   சென்றபோது    ஜாலான்  ட்ரேவர்சில்   போலீஸ்   தடுப்பு அரண்  அவர்களைத்   தடுத்து   நிறுத்தியது. முன்னாள்  பெர்சே   தலைவர்   அம்பிகா  ஸ்ரீநிவாசன்,  ஆர்ப்ப்பாட்டக்காரர்கள்  தொடர்ந்து   அணிவகுத்துச்   செல்ல   அனுமதிக்குமாறு   போலீஸ்   அதிகாரிகளுடன்   பேசிப்பார்த்தார். ஆனால்,  ஆர்ப்பாட்டக்காரர்கள்   அந்த  வழியில்  …

கோலாலும்பூர் தெருக்களில் பெர்சே மற்றும் சிவப்புச் சட்டையினர்

பெர்சேயும்   சுங்கை  புசார்  அம்னோ  தலைவர்  ஜமால்   முகம்மட்   யூனுஸ்   தலைமையில்    செயல்படும்   சிவப்புச்   சட்டையினரும்   ஏக   காலத்தில்   பேரணி   நடத்த   முற்பட்டதால்    கோலாலும்பூர்   தெருக்களில்   பதற்றம்  மிகுந்துள்ளது. பெர்சே   கூட்டமைப்பு   தேர்தல்   மற்றும்   ஜனநாயக   சீரமைபுக்காகவும்   1எம்டிபி   ஊழல்    தொடர்பில்   பிரதமர்    நஜிப்   அப்துல்   ரசாக்   பதவி …

அமைதியான ஒருங்கு கூடுதல் சட்ட விதி 18 ஐ போலீஸ்…

ஒரு பேரணி நடக்கும் போது இன்னொரு எதிர்ப்பு பேரணி அதே  நாளில், அதே நேரத்தில் நடத்த மாவட்ட போலீஸ் தலைவர் அனுமதிக்கக்கூடாது. மாறாக வேறொரு நாளையும் இடத்தையும் குறிப்பிட வகை செய்யும் அமைதியான ஒருங்கு கூடுதல் சட்டம் 2012, செக்சன்கள் 17 மற்றும் 18 ஆகியவற்றை போலீஸ் சனிக்கிழமை…

பெர்சே தலைவர்களை கைது செய்ததற்காக ஜமால் போலீஸை பாராட்டினார்

பெர்சே தலைவர் மரியா மற்றும் பெர்சே அலுவலக செயலாளர் மன்டீப் சிங் ஆகியோரை கைது செய்ததற்காக சிவப்புச் சட்டை தலைவர் ஜமால் யுனூஸ் போலீசுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். ஆனால், பெர்சே பேரணிக்கு எதிரான பேரணியை நாளை நடத்தவிருக்கும் ஜமால் தற்போது எங்கிருக்கிறார் என்பது எவருக்கும் தெரியாத ஒன்றாக இருக்கிறது.…

பொதுமக்கள் தவிர்க்க வேண்டிய சாலைகள், போலீஸ் தகவல்

  நாளை நடைபெறவிருக்கும் பெர்சே பேரணியால் பல சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளன. மொத்தம் 58 சாலை போக்குவரத்து திசை திருப்பங்கள் இருக்கின்றன. கீழ்க்கண்ட பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு போலீஸ் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது: டாத்தாரன் மேபேங்க் பங்சார், பிரிக்பீல்ட்ஸ் (லிட்டல் இந்தியா), மஸ்ஜித் நெகாரா மற்றும் மியூசியம் நெகாரா, சோகோ, டாத்தாரான்…

அனிஸ் கைது

மாணவர் ஆர்வலர் அனிஸ் ஷயாஃபிக் முகமட் யூசுப்பை கைது செய்வதற்கு போலீசார் அவரது வீட்டிற்கு வந்துள்ளனர். தமது வழக்குரைஞர்கள் வந்து சேரும் வரையில் தாம் வெளியில் வரப்போவதில்லை என்று அனிஸ் வீட்டிற்குள் இருக்கிறார். இதனிடையே, பெரித்தா ஹரியான் செய்திப்படி சிவப்புச் சட்டையின் ரஸாலி ஸகாரியாவும் கருப்புச் சட்டை அயாப்…

மஸ்ஜிட் நெகாரா சிவப்புச் சட்டையினரின் கட்டுப்பாட்டில்

  சிவப்புச் சட்டையினர் மஸ்ஜிட் நெகாரவை தங்களுடைய கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். அது பெர்சே பேரணியின் ஐந்து ஒன்றுகூடும் இடங்களில் ஒன்றாகும். ஆனால், சிவப்புச் சட்டையினரின் தலைவர் ஜமால் யுனூஸ் அங்கு காணப்படவில்லை. "நாளை வரையில் நாங்கள் இங்கு இருப்போம். அதிகமானோர் இங்கு வந்து கூடுவர்" என்று ஜாமாலின் உதவியாளர்…

இன்னும் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்

  நாளை நடைபெறவிருக்கும் பேரணிகளுக்கு முன்னதாக பல முக்கிய புள்ளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்னும் பலர் கைது செய்யப்படலாம் என்ற ஊகங்களும் இருக்கின்றன. சுருக்கமான பட்டியல்: 1. பிற்பகல் மணி 2.35 - சிரம்பான் நாடாளுமன்ற உறுப்பினர் அந்தோனி லோக். 2. பிற்பகல் மணி 3.15 - பெர்சே…

போலீசார் பெர்சேயில் திடீர் சோதனை நடத்தி எதை நிருபிக்க முயல்கின்றனர்?,…

  பேரணி நடப்பதற்கு ஒரு நாளுக்கு முன்பு பெர்சே அலுவலகத்தில் திடீர் சோதனை நடத்தி போலீசார் எதை நிரூபிக்க முயல்கின்றனர் என்று கெராக்கான் இளைஞர் பிரிவு துணைத் தலைவர் எண்டி யோங் கேள்வி எழுப்புகிறார். ஜனநாயக முறைக்கு முரணாக அரசாங்கத்தை கவிழ்க்கும் நடவடிக்களை தாம் ஆதரிக்கவில்லை என்று கூறிய…

பெர்சே தலைவர் மரியா கைது செய்யப்பட்டார்

  பெர்சேயின் தலைவர் மரியா சின் மற்றும் பெர்சே அலுவலகச் செயலாளர் மன்டீப் சிங் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். பிற்பகல் மணி 3.00 அளவில் புக்கிட் அமானைச் சேர்ந்த ஒரு போலீஸ் குழுவும் மலேசிய நிறுவனங்கள் ஆணையத்தின் அதிகாரிகளும் பெட்டாலிங் ஜெயாவிலுள்ள பெர்சே அலுவலகத்தில் திடீர் சோதனை…

எதிர்ப்பு பேரணிக்கு வேறொரு நாளை தேர்ந்தெடுக்குமாறு சிவப்புச் சட்டையினரிடம் போலீஸ்…

  பெர்சே பேரணிக்கு எதிரான சிவப்புச் சட்டையினரின் பேரணியை வேறொரு நாளில் நடத்துமாறு போலீஸ் சிவப்புச் சட்டையினரிடம் கூற வேண்டும் என்று பெர்சே இன்று போலீசாரிடம் கூறியுள்ளது. எதிர்ப்பு பேரணியை நடத்துவதற்கு மாற்று தேதி, நேரம் மற்றும் இடம் ஆகியவற்றை குறிப்பிடும் கடமையை அமைதியான ஒருங்கு கூடுதல் சட்டம்…

பெர்சேக்கு வெற்றி, சிவப்புச் சட்டையினருக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்

பெர்சே   நவம்பர்   19-இல்   மற்றுமொரு   பேரணி   நடத்தப்போவதாக     அறிவித்ததும்    அதன்  இயக்கக்குழு    கவலை   கொண்டது. கவலை  கொள்ள  பல   காரணங்கள்   இருந்தன. நடப்பு    அரசியல்   நிவவரத்தையும்   முடிவில்லாமல்  நீண்டுகொண்டே   போகும்   1எம்டிபி    ஊழல்  விவகாரத்தையும்   கண்டு    மலேசியர்கள்   அலுத்துப்  போய்   விட்டனர்.  எதிரணியை   ஆதரிப்போர்கூட  கட்சிகளின்   உள்போராட்டத்தைக்  கண்டும்   …

பெர்சே போராட்டம் “போலியானது”: நஜிப் சாடல்

பெர்சே   நாளை  அதன்  5வது   பேரணியை   நடத்தத்   தயாராகிவரும்   வேளையில்  பிரதமர்   நஜிப்   அப்துல்   ரசாக்,   அந்த   அமைப்பின்   போராட்டமே  “போலியானது”  என்று   தம்   வலைபதிவில்   சாடினார். இரண்டாவது   பேரணி   தொடங்கி   ஐந்தாவது   பேரணிவரை   எதிரணித்    தலைவர்கள்தான்  பெர்சே  “கலகங்களை”  முன்னின்று   நடத்தி    வந்துள்ளனர். “மக்களால்     தேர்ந்தெடுக்கப்பட்ட     அரசாங்கத்தை  …