நூருல் இஸ்ஸா: சரவாக் சச்சரவை விட்டு முன்னோக்கிச் செல்வோம்

சரவாக்  பிகேஆரும்  டிஏபியும் சரவாக்   மாநிலத்  தேர்தலில்  ஆறு  இடங்களில்  ஒன்றை  எதிர்த்து  மற்றொன்று  போட்டியிடுவதிலிருந்து  பின்வாங்கத்  தயாராக  இல்லை  என்ற  போதிலும்  அதைப்  பெரிதுபடுத்தாது  மாநிலத்  தேர்தலில்  கவனம்  செலுத்தப்  போவதாக  பிகேஆர்  தெரிவித்துள்ளது. “நான்  இதன்(சச்சரவு)மீது  கவனம்  செலுத்த  விரும்பவில்லை. இதைக்  கடந்து  செல்ல  விரும்புகிறேன்”,…

உச்ச நீதிமன்றம் 8 ஆண்டுகளாக தாயைப் பிரிந்திருக்கும் மகளைத் தாயாரிடமே…

ஓர்  ஆசிரியரான  இந்திரா  காந்தி தம்  மகளைப்  பார்த்து  எட்டு  ஆண்டுகள்  ஆகின்றன. அவரின்  கணவர் கே.பத்மநாதன் (இப்போது  முகம்மட்  ரிதுவான்  அப்துல்லா)  இஸ்லாத்துக்கு  மதமாறியபோது  அவர்களின்   11-மாத  மகளையும்  எடுத்துச்  சென்று  விட்டார். மகளைத் தம்மிடம்  கொண்டு  வந்து  ஒப்படைக்க  போலீஸ்  படைத்  தலைவர்  காலிட்  அபு …

பேங்க் நெகரா கவர்னர் நியமனத்தில் கடைசி நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டதாம்,…

பேங்க் நெகரா கவர்னர்  நியமனத்தில் கடைசி நேரத்தில்  மாற்றம்  செய்யப்பட்டதாம்,  WSJ கூறுகிறது பேங்க்  நெகராவின்  புதிய  கவர்னராக  கருவூலத்  தலைமைச்  செயலாளர்  இர்வான்  சிரிகார்  அப்துல்லா  நியமிக்கப்படுவார்  என்று  முன்னர்  தான்  கூறியிருந்தது  பொய்  என்று  கூறப்படுவதை   வால்  ஸ்திரிட்  ஜர்னல்(WSJ) மறுத்துள்ளது. மலேசியாகினிக்கு  அனுப்பிவைத்த  அறிக்கையொன்றில், …

முகம்மட் இப்ராகிம் பேங்க் நெகராவின் புதிய கவர்னர்

பேங்க் நெகாரா கவர்னர்  பதவியிலிருந்து  பணி  ஓய்வு  பெறும்  ஸெட்டி  அக்தார்  அசிசுக்குப்  பதிலாக  முகமட் இப்ராகிம்   புதிய  கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். இப்போது  துணை  கவர்னராக  இருக்கும்  முகம்மட், 56,  மே முதல்  நாளிலிருந்து கவர்னர் ஆகிறார்  என்று  பிரதமர்துறை  அலுவலகத்தின்  அறிக்கை  கூறியது.  

பிஎன் வெற்றியைக் கெடுக்க சதி?

சரவாக்கில்  பிஎன்  வெற்றி  உறுதி  என்றே  தோன்றுகிறது.  சில  கணிப்பாளர்கள்  முன்பைவிட  இத்தேர்தலில்  பிஎன்னின்  வெற்றி  பெரிதாக  இருக்கும்  என்று கூறுகிறார்கள்.  ஆனால்,  ஒரு  வட்டாரம்  பிஎன்னுக்குக்  குழிபறிக்கும்  வேலைகள்  நடப்பதாகக்  கூறுகிறது. 82 தொகுதிகளில்  மூன்றில்  ஒரு  பகுதி  இடங்களில்  பிஎன்  வேட்பாளர்களின்  வெற்றியைக் கெடுக்க  வேலைகள் …

மே தினப் பேரணி கவனத்தை தொழிலாளர்மீது திருப்பும்

நாட்டில்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  பதவி  விலக  வேண்டும்  என்ற  கோரிக்கைகள்  பெருகிவரும்  வேளையில்  இவ்வாண்டு  மேதினப்  பேரணி  தொழிலாளர்  நலன்மீது கவனத்தைத்  திருப்பும்  நோக்கத்தைக்  கொண்டிருக்கும். மலேசியாவைக்  காக்கும்  முயற்சியில்   தொழிலாளர்களின்  நலனை  முன்னிறுத்துவதற்கே  முன்னுரிமை  வழங்கப்பட  வேண்டும்  என  பார்டி  சோசலிஸ்  மலேசியா  தலைமைச் …

ஐஜிபி மகள் யாருக்கு ஆயுதங்கள் விற்கிறார்? பிகேஆர் தலைவர் கேட்கிறார்

அரசாங்கத்துக்கு  சுடும்  ஆயுதங்கள்  சப்ளை  செய்யும்  குத்தகையைப்  பெற்றிராத  போலீஸ் படைத்  தலைவர்  காலிட்  அபு  பக்காரின்  மகள்  வேறு  யாருக்கு  அவற்றை  விற்கிறார்? நேற்றிரவு  கோலாலும்பூரில்  ஒரு  கருத்தரங்கில்  கலந்துகொண்ட   பிகேஆர்  மத்திய  செயல்குழு  உறுப்பினர்   லத்தீபா  கோயா  இக்கேள்வியை  எழுப்பினார். கருத்தரங்குக்கு வந்திருந்த  பார்வையாளர்களில்  ஒருவர் …

மகாதிர்: 1எம்டிபி கதையைப் படமாக்கினால் ஆஸ்கார் பரிசு நிச்சயம்

முன்னாள்   பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகம்மட்  1எம்டிபியைச்  சுற்றியுள்ள  பரபரப்பான   விசயங்களை  அடிப்படையாக  வைத்துத்  திரைப்படம்  தயாரிக்கலாம்  என்று  கிண்டலடிக்கிறார். “1எம்டிபியையும்  அதில்  தொடர்புகொண்டுள்ள  பெரும்  புள்ளிகளையும்  உலகின்  பல்வேறு  இடங்களையும் (1எம்டிபி  பணம்  சென்றுள்ள  இடங்கள்)  வைத்துப்  படமெடுக்கலாம். “Red Granite நிறுவனம்  படத்தில்  முதலீடு  செய்யலாம்.…

1எம்டிபி குளறுபடிகளுக்கு எதிரணியே காரணமாம்: தாய் கிங் கூறுகிறார்

பிஎன்  நேரடி  வேட்பாளர்  ஒருவர்  1எம்டிபி  மோசடிகளுக்கு  ஒரு  புது  விளக்கம்  தந்திருக்கிறார். அங்கு  நடந்துள்ள  குளறுபடிகளுக்கு  எதிரணிதான்   காரணம்  என்கிறார். எதிரணி  அரசாங்கத்தைக்  கண்காணிக்கும்  பணியைச்  சரிவர  செய்யவில்லை,  அதுதான்  இத்தனை  குளறுபடிகளுக்கும்  காரணம்  என  டுடோங்  வேட்பாளர்   தியோங்  தாய்  கிங்  கூறினார். எதிரணி  அதன் …

இந்துக்களுக்கு எதிராகத் தொடரும் செயல்களுக்கு அரசாங்கம்தான் பொறுப்பேற்க வேண்டும்!

ஈப்போ ஸ்ரீ முனீஸ்வரர் அம்மன் ஆலயத்தில் அத்துமீறி நுழைந்து தெய்வச் சிலைகள் உடைக்கப்பட்டதை உலக இந்து மன்றம் வன்மையாகக் கண்டிக்கிறது என்று கூறிய உலக இந்து மன்றம் மலேசியா  தலைவர் வி.கே. ரகு, இந்தச் சம்பவத்தை மனநிலை பாதிக்கப்படவர் செய்தார் என்று சமாளித்து தள்ளி விட முடியாது என்கிறார்.…

கோயில் சிலைகள் உடைக்கப்பட்டது பற்றி ஊகங்கள் செய்யாதீர், ஐஜிபி கூறுகிறார்

  ஈப்போவில் ஓர் இந்து கோயிலில் சிலைகள் உடைக்கப்பட்ட சம்பவம் குறித்து ஊகங்கள் செய்ய வேண்டாம் என்று போலீஸ் படைத் தலைவர் (ஐஜிபி) அனைத்துத் தரப்பினருக்கும் ஆலோசனை கூறியுள்ளார். இதில் சம்பந்தப்பட்டவர் ஒரு மருத்துவர், அவர் மனநோயால் பாதிக்கப்பட்டவர் என்று தெரிவிக்கும் அதிகாராப்பூர்வ தகவல் குறித்து சில தரப்பினர்…

பிகேஆர் விட்டுக் கொடுத்தால் டிஏபியும் அவ்வாறே செய்யும்

டிஏபி  சரவாக்கின்  பத்து  கித்தாங்கில்  பரப்புரையில்  ஈடுபடாது  அதேபோல்  பிகேஆரும்,  இரண்டு  கட்சிகளும்  களமிறங்கும்  மற்ற  ஐந்து  தொகுதிகளிலும்  பரப்புரையில்  ஈடுபடக்கூடாது. டிஏபி இப்படி  ஒரு  நிபந்தனையை  முன்வைத்துள்ளது. “பிகேஆர் வேட்பாளர்கள்  அவர்களின்  பெயர்கள்  வாக்குச் சீட்டில்  இடம்பெறும்  என்றாலும்  அவர்கள் பரப்புரையில்  ஈடுபடப்  போவதில்லை  என்பதைப்  பொதுவில் …

குதிரைகள்மீது விருப்பையும் நஜிப்மீது வெறுப்பையும் வெளிப்படுத்தினார் மகாதிர்

முன்னாள்  பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகம்மட்   சிஎன்என்  இந்தோனேசியாவுக்கு  அளித்த  நேர்காணலில்   குதிரைகள்மீது  அவருக்குள்ள  அளவற்ற  விருப்பத்தை  வெளிப்படுத்தினார். 40 குதிரைகள்  வைத்திருப்பதாகவும்  எல்லாமே  அன்பளிப்பாகக்  கிடைத்தவை  என்றும்  சொன்னார். அதே  வேளை  மலேசியாவின்  முன்னேற்றத்துக்குத்  தடையாக  உள்ளார்  என்று  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்மீது  கண்டனக்  கணைகள் …

அன்வார்: பிகேஆரும் டிஏபியும் சர்ச்சையை இப்போதும்கூட பேசித் தீர்த்துக்கொள்ள முடியும்

சரவாக்  பிகேஆரும்  டிஏபியும்  மாநிலத்  தேர்தலில்  ஆறு  தொகுதிகளில்  ஒன்றை  எதிர்த்து  மற்றொன்று  போட்டியிடும்  நிலையைத்  தவிர்க்க  பேச்சுகள்  நடத்துவதற்குக்  காலம் கடந்துவிடவில்லை  என்கிறார்   சிறையில்  உள்ள  முன்னாள்  எதிரணித்  தலைவர்  அன்வார்  இப்ராகிம். அவை  போட்டியிடும்  தொகுதிகளில்  பக்கத்தான்  ஹராபான்  வெற்றியை  உறுதிப்படுத்த  இரண்டு  கட்சிகளும் இவ்விவகாரம் …

கிட் சியாங்: கந்தா, உண்மையைச் சொல்லி பாவங்களுக்குப் பரிகாரம் காண்பீர்

1எம்டிபியின் தலைவரும் செயல்முறை இயக்குனருமான அருள் கந்தா கந்தசாமி அந்நிருவனத்தின் முறைகேடான நிதி கையாடல்கள் பற்றிய அனைத்துக் குற்றச்சாட்டுகளும், அவர் பதவி ஏற்றுக்குக் கொண்டதற்கு முன்பு எடுத்த முடிவுகள் உட்பட, மெய்யானவை என்று பகிரங்கமாக ஒப்புக்கொள்ள வேண்டும் என்று டிஎபியின் மூத்த தலைவர் லிம் கிட் சியாங் வலியுறுத்தியுள்ளார்.…

பிகேஆர்: தொகுதிப் பங்கீடு குறித்து கடைசிவரை டிஏபி-யுடன் பேசித் தீர்க்க…

இன்று  வேட்புமனு  தாக்கல்  செய்வதற்கு  முன்புவரை  தொகுதிப்  பங்கீடு  தொடர்பில்  டிஏபி-யுடன்  பேசித்  தீர்த்துக்  கொள்ளலாம்  என்ற  எண்ணத்தில்தான்  இருந்ததாக  சரவாக்  பிகேஆர்  தலைவர்  பாரு  பியான்  கூறினார். “சர்ச்சையைத்  தீர்த்துக்கொள்ள  சில  தீர்வுகளையும்  முன்வைத்திருந்தோம்.  அவப்பேறாக,  நேற்று  நள்ளிரவுவரை  டிஏபி-இடமிருந்து   எந்தப்  பதிலும்   இல்லை”, என  பாரு …

சரவாக் தேர்தலில் பிகேஆர், டிஏபி முட்டல், மோதல்

சரவாக்  சட்டமன்றத்  தேர்தலில்  பிகேஆருக்கும்  டிஏபி-க்குமிடையில்  மூண்ட  சர்ச்சை இன்னும்  ஓயவில்லை. ஆறு  தொகுதிகளில்  அவை  இரண்டும்  ஒன்றுக்கு  எதிராக  மற்றொன்று  களமிறங்குகின்றன. . பத்து  கித்தாங்,  மூலு,  முரும்,  சிமாங்காங், இங்கேமா,  மம்போங்  ஆகியவையே  அவ்வாறு  தொகுதிகளாகும். பத்து  கித்தாங்  தொகுதியை  டிஏபி  பிகேஆருக்கு  விட்டுக்  கொடுத்திருந்தது.…

சரவாக்கில் 5 தொகுதிகளில் ஐந்து-முனை போட்டி

இன்று சரவாக்  சட்டமன்றத் தேர்தல்களுக்கான வேட்புமனுத் தாக்கல் பரபரப்பாக  நடந்து  முடிந்தது.வேட்புமனு  தாக்கல்  செய்யும்  நேரம்  காலை  மணி  10-க்கு  முடிவுக்கு  வந்தபோது  இரண்டு  இடங்களில்  பாரிசான்  நேசனல்  போட்டியின்றி  வெற்றி  பெற்றது. புக்கிட்  சாரி,  புக்கிட்  கோத்தா  ஆகிய  இரு  தொகுதிகளிலும்  பிஎன்  போட்டியின்றி  வென்றதாக  தேர்தல் …

மந்திரி புசார் விவகாரம் தொடர்பில் நஜிப் திரெங்கானு சுல்தானைச் சந்திப்பார்

திரெங்கானு   மந்திரி  புசார்  ரசிப்  அப்துல்  ரஹ்மான்  விவகாரம்  தொடர்பில்   மாநில  ஆட்சியாளர்  சுல்தான்   மிசான்  சைனல்  அபிடினைச்  சந்திக்கப்போவதாக  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  கூறினார். அவ்விவகாரம்  தொடர்பில்  ஊகங்கள்   கூறுவதை  நிறுத்துமாறு  அவர்  எல்லாத்  தரப்பினரையும்  கேட்டுக்  கொண்டிருப்பதாக  பெர்னாமா  தெரிவித்தது. வார  இறுதியில்   இரண்டு  …

காலிட்: நான் ஐஜிபி ஆவற்கு முன்பே என் மகளின் நிறுவனம்…

இன்ஸ்பெக்டர்-ஜெனரல்  அப்  போலீஸ் (ஐஜிபி)  காலிட்  அபு  பக்கார்,  தாம்  போலீஸ்  படைத்  தலைவர்  ஆவதற்கு  முன்பே  தம்  மகளின்  நிறுவனம்  துப்பாக்கி  விற்பதற்கான  உரிமத்தைப்  பெற்று  விட்டது  என  விளக்கம்  அளித்துள்ளார். அரசாங்கத்துக்கோ  போலீசுக்கோ  ஆயுதம்  விற்கும்  குத்தகைகள்  பெறப்  போட்டியிடக்கூடாது  எனத்  தம்   மகளைத்  தடுத்து …

அருள்: ‘பெருத்த மோசடி’ நிகழ்திருக்கலாம், ‘எங்கள் தரப்பினரும் உடந்தையாக இருந்திருக்கலாம்’

1எம்டிபி  தலைவர்   அருள்  கந்தா  கந்தசாமி,  அரசுக்குச்  சொந்தமான  அந்நிறுவனத்திலிருந்து   “போலி” Aabar BVI  நிறுவனத்துக்கு  யுஎஸ்$3.5 பில்லியன்  செலுத்தப்பட்ட  விவகாரத்தில்   “பெருத்த  மோசடி”யும் அதற்கு  “எங்கள்  தரப்பினரும்  உடந்தையாக  இருந்திருக்கூடிய” சாத்தியமும்  இருப்பதாகக்  கூறினார். ”மோசடி......  அதுவும் பெருத்த  மோசடி   நிகழ்ந்திருக்கலாம்  என்பதை  மறுப்பதற்கில்லை......எங்கள்  தரப்பினரும்  அதற்கு …

போலீஸ்: ஆலய சம்பவம் இன விவகாரம் அல்ல

நேற்று   ஈப்போவில்  ஒரு  கோயிலில்  இருந்த  சிலைகளை  உடைத்தவன்  மூளைக்  கோளாறு  உள்ள  ஓர்  ஆடவன்,  அதை  மக்கள்  இன  விவகாரமாகக்  கருதக்  கூடாது. இவ்வாறு  அறிவுறுத்திய  ஈப்போ  போலீஸ்  தலைவர்  ஏசிபி  சும்  சாங்  கியோங்,  ஜாலான்  ஹோஸ்பிடலில்  அங்சானா  மாலுக்கு  எதிரில்  உள்ள  ஸ்ரீமுனீஸ்வரர்  அம்மன் …

அமானா இளைஞர் தலைவர் சரவாக் நுழைய தடை

சரவாக்கின்  “விரும்பத்தகாதவர்”  பட்டியலில்  அமானா  இளைஞர்  உதவித் தலைவர்  ஷாஸ்னி  முனிர்  முகம்மட்  இஸ்னினும்  சேர்ந்து  கொண்டிருக்கிறார். சரவாக்  சென்ற   அவர்  திருப்பி  அனுப்பப்பட்டார். ஷாஸ்னி  ஓர்  அறிக்கையில்,   காலை  மணி  7.57க்கு  சிபு  விமான  நிலையத்தை  அடைந்ததாகவும்  ஆனால்,  தடுக்கப்பட்டவர்  பட்டியலில்  பெயர்  இடம்பெற்றிருப்பதால்  திரும்பிச்  செல்லுமாறு …