பங்களா விற்றவரின் சத்திய பிரமாணம்மீது மேல்நடவடிக்கை இல்லை

பினாங்கு  முதலமைச்சர்  லிம்  குவான்  எங்  இப்போது  வைத்துள்ள  பங்களா  வீட்டின்  முன்னாள்  சொந்தக்காரரான  பாங்  லீ  கூன்-னின்  சத்திய  பிரமாணத்தின்மீது  மேற்கொண்டு  நடவடிக்கை  எடுப்பதில்லை  என்று  முடிவு  செய்யப்பட்டுள்ளது. சட்டத்துறைத்  தலைவர்  அலுவலகம்  சில  நாள்களுக்குமுன்  அம்முடிவுக்கு  வந்ததாக  பினாங்கு  போலீஸ் தலைவர்  அப்துல்  கபார்  ரஜாப் …

கிட் சியாங் அமைச்சரவை கூட்டத்தில் 1எம்டிபி குறித்து விளக்கம் அளிக்க…

  நாளை கூச்சிங்கில் நடைபெறவிருக்கும் அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொண்டு 1எம்டிபி குறித்து விளக்கம் அளிக்க விரும்பும் தமது நோக்கத்தை டிஎபியின் மூத்த தலைவர் லிம் கிட் சியாங் பிரதமர் நஜிப்புக்கு இ-மெயில் மூலம் தெரிவித்துள்ளார். ஏன் 1எம்டிபி விவகாரம் குறித்து அமைச்சரை ஒரு நிலைப்பாட்டிற்கு வர வேண்டும்…

முக்ரிஸ்: என்னை அரசியலில் உயர்த்த நினைத்திருந்தால் என் தந்தை இத்தனை…

முக்ரிஸ்  மகாதிர்,  தம் தந்தை  டாக்டர்  மகாதிர்  முகம்மட்  தன்னை  அரசியலில் முன்னிறுத்த  நினைத்திருந்தால்  அவர்  பிரதமராக  இருந்தபோதே  அதற்கு  உதவியிருக்கலாம்  பணி  ஓய்வு  பெற்று  13  ஆண்டுகள்வரை  காத்திருக்க  வேண்டியதில்லை  என்றார். பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கின்  பத்திரிகைச்  செயலாளர்  தெங்கு  அஹமட்  சரிபுடின்  சுமத்தியுள்ள  குற்றச்சாட்டுக்கு …

பணத்துக்காக உரிமையை விற்று விடாதீர்கள்: வாக்காளர்களிடம் நஜிப் வலியுறுத்து

வாக்குகள்  தங்களின்  உரிமைகள்.   எதிர்காலத்தைத்  தீர்மானிக்கும்  அரிய  செல்வங்களான  அவற்றை  வாக்காளர்கள் பணத்துக்காக  விற்றுவிடக்  கூடாது   எனப்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  கூறினார். வாக்கு  என்ற  உரிமையைக்  கொண்டு  மக்கள்  தங்கள்  பகுதிகளுக்கு  மேம்பாட்டைக்  கொண்டு  வரக்கூடிய  சரியான  வேட்பாளர்களைத்  தீர்மானிக்க  முடியும். அவற்றைத்  தவறான  பேர்வழிகளிடம்…

பிரதமரின் உதவியாளர்மீது முகிரிஸ் அவதூறு வழக்கு

 தம்மீது  அவதூறு  கூறியதாக  முக்ரிஸ்  மகாதிர்,  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கின்  பத்திரிகைச்  செயலாளர்  தெங்கு  சரிபுடின்  தெங்கு  அஹ்மடுக்கு  எதிராக  இன்று  கோலாலும்பூர்  உயர்  நீதிமன்றத்தில்  வழக்குப்  பதிவு  செய்தார். ஏப்ரல் 15க்கும்  26-க்குமிடையே  தெங்கு  சரிபுடின்  வெளியிட்ட  நான்கு  அறிக்கைகள்  தம்மீது  அவதூறு  கூறுவதாக  முக்ரிஸ் …

பிரதமரும் துணைப் பிரதமரும் வாக்குகளை விலைகொடுத்து வாங்குவதாக பெர்சே குற்றச்சாட்டு

தேர்தல்  கண்காணிப்பு  அமைப்பான  பெர்சே  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கும்  துணைப்  பிரதமர்  அஹ்மட்  ஜாஹிட்  ஹமிடியும்  தேர்தல்  விதிகளை  மீறியிருப்பதாகக்  குற்றஞ்  சாட்டியுள்ளது. பெர்சே  ‘கையூட்டு  கொடுத்த  துணைப்  பிரதமர்  ஜாஹிட் ஹமிடியைத்  தேர்தல்  ஆணையம்(இசி)  விசாரிக்க  வேண்டும்’  என்ற  தலைப்பில்  வெளியிட்டிருக்கும்  ஊடக  அறிக்கையில்,    வாக்குகள் …

குவான் எங் காலக்கெடுவை மதித்து நாளை சரவாக்கிலிருந்து வெளியேறுவார்

சரவாக்கில்  முதல்  வாக்களிப்பு  இன்று  தொடங்கியது. அம்மாநிலம்  முழுவதிலுமுள்ள  பாதுகாப்புப்  படைகள்  இன்று  முன்கூட்டியே  வாக்களிக்கத்  தொடங்கினர். முன்கூட்டிய  வாக்களிப்பு  மட்டுமே  இன்று. முக்கியமான  வாக்களிப்பு  மே7-இல்தான். அந்த  மிகப்  பெரிய  நாளுக்காக  அனல்  பறக்கும்  பிரச்சாரங்கள்  மாநிலம்  முழுவதும்   மும்முரமாக நடைபெற்று  வருகின்றன. பிரதமர்  நஜிப்  அப்துல்…

இது அடினானின் அப்பன் மாநிலம்தான், உங்களுடையது அல்ல: அஸ்மினுக்கு பிபிபி-இன்…

பிபிபி  உதவித்  தலைவர்  அபாங்  ஜொகாரி  ஓபெங்,  சரவாக்கில் பிகேஆர்  துணைத்  தலைவர்  அஸ்மின்  அலியின்  தங்கும்  காலத்தைக்  கட்டுப்படுத்தும்  கட்சித்  தலைவரும்  முதலமைச்சருமான  அடினான்  சாதேமின்  முடிவைத்  தற்காத்துப்  பேசினார். “அஸ்மின்  சரவாக் அவருடைய (அடினான்) அப்பன்  மாநிலம்  அல்ல  என்று  கூறியுள்ளார். “அவருக்கு (அஸ்மினுக்கு(  நான் …

நூருல் இஸ்ஸாவுக்கு சரவாக்கில் தடை; எழுதிக் கேட்டும் பயனில்லை

பிகேஆர்  உதவித்  தலைவர்  நூருல்  இஸ்ஸா  அன்வாருக்கு  சரவாக்    நுழைய  விதிக்கப்பட்ட  தடை  அகற்றப்படவில்லை.  சரவாக்கில்  நுழைய  முதலமைச்சர்  அடினான்  சாதேமுக்குக்  கடிதம்  எழுதி  அனுமதி  கேட்டதுகூட  பயனளிக்கவில்லை. லெம்பா  பந்தாய்  எம்பியான  நூருல்  இன்று  காலை  மீரி  விமான  நிலையம்   சென்றபோது அங்கு  அவர்  தடுத்து  நிறுத்தப்பட்டதை   …

ரிதுவானுக்குப் போலீஸ் வலைவீச்சு

முஸ்லிமாக  மதமாறிய  முகம்மட்  ரிதுவான்  அப்துல்லாவைப்  போலீசார்  தேடுகிறார்கள். ஆனால்,  அவர்  இருக்கும்  இடம்  தெரியவில்லை. ரிதுவான்  செல்லக்கூடிய  இடங்களில்  எல்லாம்  போலீசார்  தேடிப்  பார்த்து  விட்டார்கள். ரிதுவானின்  குடும்ப  உறுப்பினர்கள்,  நண்பர்களையும்  விசாரித்து விட்டனர். அவர்  இருக்கும்  இடம்  யாருக்கும்  தெரியவில்லை  என  ஈப்போ  போலீஸ்  தலைவர் …

சூடு பிடிக்கிறது டிஏபி-இன் தேர்தல் பரப்புரை

சரவாக்  தேர்தலில்   டிஏபியின்  தேர்தல்  பரப்புரை  சூடு  பிடிக்கத்  தொடங்கியுள்ளது.  சனிக்கிழமை,  கூச்சிங்,  சிபு,  மீரி  ஆகிய  இடங்களில்  நடைபெற்ற  ‘செராமா’க்களுக்கு  ஆறாயிரத்துக்கும்  மேற்பட்டோர்  திரண்டு  வந்தனர். எதிரணி  தேர்தல்  பரப்புரை  முதல்  ஐந்து  நாள்களுக்கு  மந்தமாகமாகவே இருந்து  வந்த  நிலையில்  நேற்று  தேர்தல்  கூட்டங்களுக்கு  மக்கள்  திரண்டு …

வான் அசிசா சரவாக் நுழைய அடினான் அனுமதி வழங்கினார்

பிகேஆர்  தலைவர்  வான்  அசிசா  வான்  இஸ்மாயில்   சரவாக்  முதலமைச்சர்  அடினான்  சாதேமுக்குக்  கடிதம்  எழுதிக்  கேட்டுக்கொண்ட  பிறகு  சரவாக்  நுழைய  அனுமதி  வழங்கப்பட்டது.. வான் அசிசா  நேற்றிரவு சரவாக்  சென்றார். அங்கு  அவர் உடனடியாக  பரப்பரையில்  ஈடுபட்டதாக பிகேஆர்  தொடர்பு  இயக்குனர்  பாஹ்மி  பாட்சில்  கூறினார். ஆனால் …

அஸ்மின் சரவாக் செல்ல அடினானிடம் அனுமதி கேட்கப்போவதில்லை

சிலாங்கூர்  மந்திரி  புசார்  அஸ்மின்  அலி,  மே 4-இல்  மீண்டும்  சரவாக்  செல்லத்  திட்டமிட்டிருக்கிறார்.  அப்படிச்  செல்லும்போது  சரவாக்கில்  நுழைய  முதலமைச்சர்  அடினான்  சாதேமுக்குக்   கடிதம்  எழுதி  அனுமதி  கோர  மாட்டார். சரவாக்  செல்ல  விரும்பும்  அரசியல்வாதிகள்  முன்கூட்டியே  அனுமதி  கேட்டால்  அவர்களின்  வேண்டுகோள்  பரிசீலிக்கப்படும்  என்று  அடினான் …

அடினான்: சீன அமைச்சர்களா, டிஏபியா? சீன வாக்காளர்களே முடிவு செய்ய…

சரவாக்  தேர்தலில்  சீனர்களின்  வாக்குகளைக்  கவர  ஒரு  தந்திரத்தைக்  கையாண்டு  வருகிறார்  முதலமைச்சர்  அடினான்  சாதேம். “சீனர்கள்  அரசாங்கத்தில்  பங்கேற்க விரும்புகிறார்களா,  இல்லையா  என்பதை  சனிக்கிழமை  முடிவு  செய்தாக  வேண்டும். “நீங்கள்  எல்லாம்  டிஏபி-யை  ஆதரித்தால்  அரசாங்கத்தில்  இருக்க  மாட்டீர்கள்.  என்  சீன  வேட்பாளர்களான  தியோங்  தாய்  கிங், …

மே தினம் நல்வாழ்த்துகள்

 மலேசியத் தொழிலாளர்களுக்கும் அனைத்துலகத் தொழிலாளர்களுக்கும் செம்பருத்தி. கோம்  மே தினம்  நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறது  

இந்திரா காந்தியின் முன்னாள் கணவர் ரித்துவானை தேடிக் கண்டுபிடிக்க ஐஜிபி…

    இந்திரா காந்தியின் குழந்தை பிரசன்னா டிக்சா பராமரிப்பு வழக்கில் நேற்று பெடரல் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு இந்திரா காந்திக்கும், அவரைப் போன்ற நிலையில் சிக்கியிருக்கும் மற்றவர்களுக்கும் மகிழ்ச்சியளித்துள்ளது.   பாராட்டுகள் ஏராளம். ஆனால், உச்ச நீதிமன்றம் இந்திரா காந்தியின் கணவர் ரித்துவானை கைது செய்ய…

‘சரவாக் மேம்பாட்டுக்கு பிஎன் வாக்குறுதி அளிக்கிறது ஆனால் சாலையை அமைத்தது…

சரவாக்  மம்போங்  தொகுதியில்  போட்டியிடும்  சஞ்சான்  டயிக்,  கம்போங்  கிட்டிங்கில்  ‘சரவாக்கின்  முன்னேற்றத்துக்கும்  ஒற்றுமைக்கும்  வளப்பத்துக்கும்  தன்னாட்சி  அதிகாரத்துக்கும்  பிஎன்னுக்கு  வாக்களிப்பீர்’  என்று  பதாகைகள்  தொங்க  விடப்பட்டிருப்பது  வேடிக்கையாக  இருக்கிறது  என்று  கூறினார்.  ஏனென்றால்  அப்பகுதியின்  மேம்பாட்டுக்குப்  பணம்  செலவிட்டது    டிஏபியாம். “2014-இல்  டிஏபி  அதன்  ‘இம்பியான் சரவாக்’ …

தொகுதிப் பங்கீடு சர்ச்சை குறித்து தேர்தலுக்குப் பின்னர் ஹராபான் விவாதிக்கும்

சரவாக்  தேர்தலில்  சரவாக்  டிஏபிக்கும்  சரவாக்  பிகேஆருக்குமிடையில்  தொகுதி  தொடர்பில்  மூண்ட  சர்ச்சை  குறித்து  மே  ஏழு  தேர்தலுக்குப்  பின்னர்  பக்கத்தான்  ஹராபான்  விவாதிக்கும்  என  டிஏபி  தலைமைச்  செயலாளர்  லிம்  குவான்  எங்  கூறினார். அது  ஒரு  முக்கியமான விவகாரம்.  அதை  பக்கத்தான்  ஹராபான்  கூட்டத்தில்  வைத்து …

முன்னாள் மேஜர் ஜைடி அமானாவிலிருந்து டிஏபிக்குக் கட்சி மாறினார்

எட்டு  மலாய்க்காரர்கள்  டிஏபி-இல்  சேர்ந்திருப்பதாக  பினாங்கு  டிஏபி  அறிவித்தது.  அவர்களில்  இருவர்  முன்னாள்  பாஸ்  உறுப்பினர்கள்.  ஒருவர்  பக்கத்தான்  பங்காளிக்  கட்சியிலிருந்து  கட்சி  மாறியுள்ளார். இந்த  எண்மரில்  பிரபலமானவர்  ஆகாயப்படையின்  முன்னாள்  மேஜர்  ஜைடி  அஹ்மட். பினாங்கு,  கப்பாளா  பத்தாசைச்  சேர்ந்தவரான  ஜைடி, 2013  பொதுத்  தேர்தலின்போது  அழியா …

நஜிப்புக்கு எதிரான மகாதிரின் போராட்டம் ‘தோற்றுப்போன போராட்டம் அல்ல’

முன்னாள்  பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகம்மட்  தாம்  வளர்த்து  ஆளாக்கிய  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்குக்கு  எதிராக  நடத்தும்  போராட்டத்தில் தோற்றுப்  போவாரா? மாட்டார்  என்றே  முன்னாள்  தகவல்  அமைச்சர்  சைனுடின்  மைடின்  நினைக்கிறார். “அவர்  தோற்பார்  என்று  நான்  நினைக்கவில்லை. (வெற்றிதோல்வியை) தீர்மானிக்கப்போவது  அடுத்த பொதுத்  தேர்தல்தான்”,…

அம்னோ-பாஸ் கூட்டணி அடுத்த பொதுத் தேர்தலில் வெற்றிபெறும்- முன்னாள் அமைச்சர்

அம்னோவும்  பாஸும்  கூட்டுச்  சேர்ந்தால்  அடுத்த  பொதுத் தேர்தலில்  வெற்றி  பெறும்  வாய்ப்பு  இருப்பதாக  முன்னாள்  தகவல்  அமைச்சர்  சைனுடின்  மைடின்  கூறினார். “அம்னோ  பாஸுடன்  கைகோத்தால், மலாய்க்காரர்  ஒற்றுமையின்  பொருட்டு  கூட்டுச் சேர்ந்தால்,  தேர்தலில்  வெற்றி  பெற  முடியும்”. இன்று  செர்டாங்கில்,  கோலாலும்பூர்  அனைத்துலக  புத்தக  விழாவில் …

பேராசிரியர்: ஹங் துவா அல்ல, ‘ஹங் து–ஹா’ அல்லது ‘ஹங்…

பண்டை  மலாய்  வீரர்  ஹங்  துவா மீதான  விவாதம்  ஓயாதுபோல்  தெரிகிறது.ஹங்  துவா  பற்றிக்  கல்வியாளர்களிடையேயும்  மக்களிடையேயும்  விவாதங்கள்  தொடர்ந்து  கொண்டுதான்  இருக்கின்றன. நேற்று, மலாயாப்  பல்கலைக்கழகத்தில்  ‘Antara Sejarah dan Mitos: Sejarah Melayu & Hang Tuah dalam Historiografi Malaysia’ என்னும்  நூலை  வெளியிட்ட …

ஐஜிபி உச்ச நீதிமன்றத்தின் கைது ஆணை உத்தரவுப்படி நடந்துகொள்வார்

  இந்திரா காந்தி குழந்தை பராமரிப்பு வழக்கில் பெடரல் உச்ச நீதிமன்றம் குற்றவாளி முகமட் ரித்துவான் அப்துல்லாவை கைது செய்யுமாறு போலீஸ் படைத் தலைவர் காலிட் அபு பாகாருக்கு இன்று உத்தரவிட்டது. அந்த உத்தரவை காலிட் நிறைவேற்றுவார். இதற்கு முன்னர், இந்த விவகாரத்தில் போலீஸ் நடுநிலைமை வகித்தது. அதன்…