ஹெலிகாப்டர் ஓட்டுனரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது

சரவாக்கில்  ஹெலிகாப்டர் விழுந்து  நொறுங்கிய  இடத்துக்கு  அருகில்  இன்று  காலை  10.45க்கு ஒரு  சடலம் கண்டெடுக்கப்பட்டது.  அது  ஹெலிகாப்டர்  ஓட்டுனரின்  சடலமாக  இருக்கலாம்  என  நம்பப்படுகிறது. ஆனால்,  அதிகாரிகள்  அது  பிலிப்பினோவான  கேப்டன்  ரெக்ஸ்  ராகாஸின்   சடலம்தான்  என்பதை  உறுதிப்படுத்தத்  தயங்கினார்கள். சவப்  பரிசோதனை  செய்து  அடையாளம்  கண்டறியப்பட்ட …

ஜிஎஸ்டி கொண்டுவரப்பட்டதைத் துணிச்சலான நடவடிக்கை என்று பேங்க் நெகாரா கவர்னர்…

பொருள்  சேவை  வரி  அறிமுகமும்  உதவித்  தொகைகள்  சீரமைப்பும்  உலக  அளவில்  பொருளாதாரம்  நிச்சயமற்றிருந்த  நிலையில்  அதைச்  சமாளிக்க  அரசாங்கம்  மேற்கொண்ட  துணிச்சலான  நடவடிக்கை  என  பேங்க்  நெகராவின்  புதிய கவர்னர்  முகம்மட்  இப்ராகிம்  கருதுவதாக  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  கூறினார். இதை முகம்மட்டே  தம்மிடம்  தெரிவித்ததாக …

14 ஆவது பொதுத் தேர்தலுக்குப் பின்னர்தான் மசீச கட்சி தேர்தல்

  இவ்வருடம் நடத்தப்பட வேண்டிய மசீசவின் கட்சி தேர்தல் தள்ளிப் போடப்பட்டுள்ளது. 14 ஆவது பொதுத் தேர்தலுக்குப் பிறகுதான் கட்சியின் தேர்தல் நடத்தப்படும் என்று மசீச இன்று அறிவித்தது. அடுத்த பொதுத் தேர்தலுக்கு கட்சியைத் தயார்படுத்துவதற்கு ஏதுவாக இம்முடிவு எடுக்கப்பட்டது என்று மசீச தலைவர் லியோ தியோங் லாய்…

சுந்தரனின் அகால மரணம் அமைச்சுக்கும் நாட்டிற்கும் பேரிழப்பு

  தோட்டத் தொழில்கள் மற்றும் மூலப்பொருள்கள் அமைச்சின் தலைமைச் செயலாளர் சுந்தரன் அண்ணாமலை, 58, அகால மரணமடைந்தது அமைச்சுக்கும் நாட்டிற்கும் பேரிழப்பாகும். மிக உயர்ந்தத் தகுதிகளைப் பெற்றிருந்த சுந்தரன் அரசாங்கத்திலும் உலகின் பல்வேறு நாடுகளிலும் உயர்ந்தப் பதவிகளை வகித்திருக்கிறார். கடந்த வியாழக்கிழமை ஹெலிகோப்டர் விபத்தில் காலமான அவர் வாஷிங்டனில்…

சரவாக் தேர்தல்: பிஎன் மகத்தான வெற்றி பெற்றது

  இன்று முடிவுற்ற சரவாக் சட்டமன்ற தேர்தலில் பாரிசான் நேசனல் மூன்றில்-இரண்டு பெரும்பான்மை தடுப்பைத் தகர்த்திறிந்து மாபெரும் வெற்றி பெற்று ஆட்சியை மீண்டும் பிடித்துள்ளது. சரவாக் சட்டமன்றத்தின் 82 இருக்கைகளில் 72 இருக்கைகளை பிஎன் கைப்பற்றியது. இது எதிர்பார்த்தைவிட கூடுதலாகும். இப்பெரும் வெற்றியைத் தொடர்ந்து சரவாக் பின் தலைவர்…

முதலைகள் ஜாக்கிரதை: மீட்புக் குழுவினருக்கு எச்சரிக்கை

சரவாக்,  சுங்கை  பத்தாங்  லுபார்  பகுதியில்  தேடல், மீட்புப்  பணியில்  ஈடுபட்டிருக்கும்  பாதுகாப்புப்  படையினர்  முதலைகளிடம்  கவனமாக  இருக்கும்படி  எச்சரிக்கப்பட்டுள்ளனர். ஆனால்,  அப்பகுதியில்  இதுவரை  முதலை  எதுவும்  தென்படவில்லை. லிங்காவுக்கும்   பூலாவ்  செடுகுவுக்குமிடைப்பட்ட   ஆற்றின் பகுதி  முதலைகள்  நிரம்பிய  பகுதியாகும்  என  சரவாக்   போலீஸ் துணை  ஆணையர்  அப்துல் …

ஹெலிகாப்டர் விபத்தைக் குறிக்கும் பதாதை: மட்டமான அரசியல் என டிஏபி…

சரவாக்  தேர்தல்:  வாக்களிப்போர்  எண்ணிக்கை  குறைவாக  இருப்பதால்  கவலையுற்றிருக்கும்  சரவாக்  பிகேஆர்  தலைவர்  பாரு  பியான்,  சரவாக்கியர்கள்  பெரும்  எண்ணிக்கையில் திரண்டு  வந்து  வாக்களிக்க  வேண்டும்  எனக்  கேட்டுக்  கொண்டார். “எங்கள்  பார்வையாளர்கள்  நண்பகல்வரை  35விழுக்காட்டினர்தான்  வாக்களித்திருப்பதாகக்  கூறுகிறார்கள்.  எனவே,  வாக்காளர்களாக  பதிவு  செய்து  கொண்டிருப்போர்  தங்கள் ஜனநாயக …

குவான் எங்கிடம் நேற்று ஒன்பது மணி நேர விசாரணை நடத்திய…

மலேசிய ஊழல்-தடுப்பு  ஆணையம் (எம்ஏசிசி),  பினாங்கு  முதலமைச்சர்  லிம்  குவான்  எங்  குறைந்த  விலைக்கு  பங்களா  வீடு  வாங்கியதன்  தொடர்பில்  முதலைமைச்சர்  உள்பட  ஆறு  பேரிடம்  நேற்று  விசாரணை  நடத்தியது. “அவர்கள்  காலை  9.30க்கு  பினாங்கு  எம்ஏசிசி  அலுவலகம்  வந்து  இரவு  ஏழு  மணிவரை  வாக்குமூலம்  வழங்கினர்”, என …

சரவாக் தேர்தல்: வாக்களிப்பு மெதுவாக நடைபெறுகிறது

இன்று  சரவாக்கில்  வாக்களிப்பு  நாள். சரவாக்  மக்கள்  அடினான் சாதேமின்  பிஎன்னைத்  தேர்ந்தெடுப்பார்களா  அல்லது  ஆளும்  கட்சிக்கு  மூன்றில்  இரண்டு  பங்கு  பெரும்பான்மை  கிடைப்பதைத்  தடுக்க  முனைந்திருக்கும்  எதிரணியினருக்கு  வாக்களிப்பார்களா  என்பது  இன்று  தெரிந்து  விடும். இத்  தேர்தல்  புதிய  மாநிலத்  தலைவர்  அடினான்  சதேமுக்கு  உறுதியான  ஆதரவு …

ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான இடத்தில் இரண்டாவது சடலம் கண்டெடுக்கப்பட்டது

சரவாக்கில்  செபுயாவ்,  சுங்கை  பத்தாங்  லுபார்  பகுதியில்  ஹெலிகாப்டர்   விபத்துக்குள்ளான  பகுதியில்  மேலும் ஒரு  சடலம்  கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. அப்பகுதியில்  தேடல்,  மீட்பு  நடவடிக்கையில்  ஈடுபட்டிருப்போர்  இன்று  காலை  மணி  8.31-க்கு  அச்சடலத்தைக்  கண்டெடுத்தனர். நேற்று,  அந்த  ஹெலிகாப்டரில்  பயணம்  செய்த  அறுவரில் ஒருவரான  தோட்டத்தொழில்,  மூலப்பொருள்  துணை  அமைச்சர் …

அரசியல்வாதிகள் மீதான தடையை அகற்றுவீர்: சரவாக்கிடம் அம்னெஸ்டி இண்டர்நேசனல் கோரிக்கை

சரவாக்  அரசு பேச்சுரிமையைக்  கட்டுப்படுத்தும்  எல்லாச்  சட்டங்களையும்  மறுஆய்வு  செய்து திருத்த  வேண்டும்  என  உரிமைகளைக்  கண்காணிக்கும்  அம்னெஸ்டி  இண்டர்நேசனல் (ஏஐ) அமைப்பு  கேட்டுக்கொண்டிருக்கிறது. அதன் தொடர்பில்  அம்மாநில  அரசு  அரசியல்வாதிகளுக்கு  விதிக்கப்பட்டுள்ள  நுழைவுத்  தடையையும்  நீக்கி, அவர்கள்   தேர்தல்  காலங்களில்  சுதந்திரமாக  நடமாடுவதற்கும்  வழிகோல  வேண்டும்  என்று…

ஹெலிகாப்டரின் உடைந்த பகுதிகள் கண்டெடுக்கப்பட்ட இடத்தில் பெண்ணின் சடலம்

சரவாக்கில்  ஹெலிகாப்டர்  விழுந்து  நொறுங்கிய  இடத்தில்  ஒரு  பெண்ணின்  சடலம்  கண்டெடுக்கப்பட்டதை  சரவாக்  தீ  அணைப்பு,  மீட்புத்  துறை  உறுதிப்படுத்தியுள்ளது. “ஆம். இன்று  நண்பகல்  12  மணிக்கு  பெண்ணின்  சடலம்  கண்டெடுக்கப்பட்டது”, என  அத்துறையின்  உதவி  இயக்குனர்(நடவடிக்கை)  பர்ஹான்  சுப்யான்  பொர்ஹான்  கூறினார். அச்சடலம், காணாமல் போன ஹெலிகாப்டரின் …

எண்ணெய் உரிமப் பணம்மீதான பேச்சுகளை ஒத்திவைக்க சரவாக் இசைவு

எண்ணெய்  உரிமப்  பணம்  அதிகரிக்கப்பட வேண்டுமென்ற  கோரிக்கையை  ஒத்திவைப்பது  என  சரவாக்  அரசு ஒருமனதாக  முடிவு  செய்துள்ளது. உலகச்  சந்தையில்  கச்சா  எண்ணெய்  விலை  படுவீழ்ச்சி  அடைந்திருப்பதைக்  கருத்தில்  கொண்டு  அம்முடிவு  செய்யப்பட்டதாக  சரவால்  வீடமைப்பு,  சுற்றுலா  அமைச்சர்  அமார்  ஆபாங்  ஜொஹாரி  ஓபெங்  தெரிவித்தார். இவ்விவகாரம்  தொடர்பில் …

ஹுசாம் பாஸிலிருந்து கட்சிநீக்கம்

பாஸ்,  அதன்   முன்னாள்  உதவித்  தலைவர்  ஹுசாம்  மூசா விதிமுறைகளை  மீறி நடந்துகொண்டதற்காகக்  கட்சியிலிருந்து  விலக்கப்படுவதாக   இன்று  அறிவித்தது. ஹுசாம்   விவகாரத்தைப்  பல  கோணங்களில்  ஆராய்ந்தும் கட்சி  நலன்  கருதியும்  ஹுசாமின்  நடவடிக்கைகளின்  விளைவுகளைக்  கருத்தில் கொண்டும்  ஒழுங்கு நடவடிக்கைக்  குழு  அவரை  விலக்குவது  என்ற  முடிவுக்கு  வந்தது.…

காணாமல் போன ஹெலிகாப்டரின் உடைந்த பகுதிகள் கண்டெடுக்கப்பட்டன

நேற்று சரவாக்கில் காணாமல் போன ஹெலிகாப்டரின்  உடைந்த  பாகங்கள்  கண்டெடுக்கப்பட்டிருப்பதாக  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  இன்று  காலை  அறிவித்தார். ஹெலிகாப்டரின்  உடல்பகுதி, இருக்கைகள்,  ஒரு  கதவு  முதலியவை  கிடைத்துள்ளன. கூச்சிங்கில்  சிவில்  விமானப்  போக்குவரத்துத்  துறை  அலுவலகத்தில்  செய்தியாளர்  கூட்டமொன்றில்  நஜிப்  இதைத்  தெரிவித்தார். ஹெலிகாப்டரில்  பயணம்…

‘முஸ்லிம் பூமிகள்’ மட்டுமே சரவாக்கை ஆளலாம் என்ற ஹாடியைச் சாடினார்…

பாஸ்  தலைவர்  அப்துல்  ஹாடி  ஆவாங்  தேர்தல்  பரப்புரை  ஒன்றின்போது  முஸ்லிம்-அல்லாத  பூமிபுத்ராக்கள்  தலைவர்களாக  இருக்கலாம்  ஆனால்   சாபா,  சரவாக்கை   முஸ்லிம்  பூமிபுத்ராக்களே  ஆள  வேண்டும்  என்று  கூறியதைப் பலரும்  சாடியுள்ளனர். டிஏபி  தலைமைச்  செயலாளர்  லிம்  குவான்  எங், அது  “கடுமையான,   தீவிரவாதம்  நிறைந்த  அரசியல்  கருத்து” …

‘பில்லியன் ரிங்கிட்’ உதவி பற்றிக் கருத்துரைக்க இசி மறுப்பு

சரவாக்  தேர்தல்  பரப்புரைகளில்  நிதி  ஒதுக்கீடுகள்  பற்றி பாரிசான்  அரசாங்கம்  அறிவிப்பது  குறித்து  கருத்துரைக்க  தேர்தல்  ஆணைய(இசி)த்  தலைவர்  முகம்மட்  ஹாஷிம்  மறுத்தார். சரவாக்  பிஎன் தேர்தலில்  நல்ல  வெற்றியைப்  பெற்றால்  அம்மாநிலத்தின்  மேம்பாட்டுக்கு  பில்லியன்  கணக்கான  ரிங்கிட்டை  வழங்குவதாக  பிரதமர்  நஜிப்  ரசாக்  வாக்குறுதி  அளித்தது   தேர்தல் …

ஹாடி: டிஏபிக்கு இடமில்லை; சாபா, சரவாக்கை முஸ்லிம்கள்தாம் ஆள வேண்டும்

முஸ்லிம்  பூமிபுத்ரா  ஒருவர்  சரவாக்கின்  முதலமைச்சராவதையே பாஸ்  விரும்புவதால்  அங்கு  டிஏபி  ஆட்சி  அமைக்க அது ஒருபோதும்  அனுமதிக்காது  என்று  அதன்  தலைவர்  அப்துல்  ஹாடி  ஆவாங்  கூறினார். இந்தியர்களையும்  சீனர்களையும்  குடிமக்களாக  ஏற்றுக்கொண்டிருக்கிறோம். ஆனால்,  தலைவர்  மலாய்  முஸ்லிமாகத்தான்  இருக்க  வேண்டும்.  கூச்சிங்,  தாமான்  சுக்மாவில்  250 …

சிபுவில் 11 தேர்தல் முறைகேடுகள் நிகழ்ந்திருப்பதாக பெர்சே புகார்

சரவாக் தேர்தல்களைக் கண்காணித்து வரும்   பெர்சே,  சிபுவில்    இதுவரை   11   தேர்தல் குற்றங்கள் நிகழ்ந்திருப்பதாகக் கூறுகிறது.   பராமரிப்பு முதலமைச்சர் அடினான் சாதேம்   உள்பட    இரு தரப்புகளையும் சேர்ந்த   நான்கு வேட்பாளர்கள் அவற்றில்   சம்பந்தப்பட்டிருக்கிறார்கள். பெர்சேயும்  …

நகர்ப்புற சீனர்கள் பிஎன்னுக்குத் திரும்புவார்கள்: ஜாஹிட் நம்பிக்கை

சரவாக்கில்  நகர்ப்புற  சீனர்களின்  ஆதரவு  பிஎன்னுக்குத்  திரும்பவும்  கிடைக்கும்  என்று  துணைப்  பிரதமர்  அஹ்மட்  ஜாஹிட்  ஹமிடி  நம்புகிறார். பராமரிப்பு  முதலமைச்சர்  அடினான்  சாதேமின்  ஆட்சியில்  சீனர்கள்  மனம்  மாறியிருக்கிறார்கள் என்றாரவர். “முந்தைய  தேர்தல்கள்போல்  இல்லை. “அரசாங்கத்தில் சீனர்களின்  பிரதிநிதித்துவம்  வலுவாக  இருக்க  வேண்டும். சீனர்கள்  துணை  அமைச்சர்களாகவும் …

நிதி அமைச்சு இன்கோ 1எம்டிபி வாரிய இயக்குனர்களின் பதவி விலகலை…

  1எம்டிபி வாரியத்தின் இயக்குனர்களின் பதவி விலகல் ஏற்றுக்கொள்ளப்ட்டதை நிதி அமைச்சு இன்கோர்பொரேடெட் உறுதிப்படுத்தியது. வாரிய உறுப்பினர்களின் பதவி விலகள் மே மாத 31 இல் அமலுக்கு வரும் என்று 1எம்டிபியின் ஒட்டுமொத்த பங்குகளின் உரிமையாளர் என்ற முறையில் நிதி அமைச்சு இன்கோர்பொரேடெட் அறிவித்தது. 1எம்டிபியின் இன்றைய வாணிக…

கூடுதல் எண்ணெய் உரிமப் பணம் கேட்க இது நேரமல்ல- பிரதமர்

எண்ணெய்  விலை  வீழ்ச்சி  அடைந்திருப்பதால் எண்ணெய்  உரிமப் பணத்தைக்  கூட்டிக்  கொடுக்க  இது  சரியான  நேரமல்ல  என்று  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  கூறினார். “இவ்விவகாரத்தைப்  பரிசீலிக்க  இது  நேரமல்ல.  நாட்டின்  வருமானம்  இக்கட்டான  நிலையில் உள்ளது. எண்ணெய் விலை  வீழ்ச்சியால்  ரிம40 பில்லியனை  இழந்து  விட்டோம்”, என்று …

மகாதிருக்கு போலீஸ் பாதுகாவலர்கள் அகற்றப்பட்டதை ஐஜிபி உறுதிப்படுத்தினார்

முன்னாள்  பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகம்மட்டுக்கு  வழங்கப்பட்டு  வந்த  போலீஸ்  வழிக்காவலர்  சேவை  நிறுத்தப்பட்டதை  போலீஸ்  படைத்  தலைவர்  காலிட்  அபு  பக்கார்  உறுதிப்படுத்தினார். இன்று  கோத்தா  கினாபாலுவில்  செய்தியாளர்களிடம்  பேசிய  காலிட்,  முன்னாள்  பிரதமர்  சட்டவிரோத  நிகழ்வுகளில்  கலந்து  கொள்கிறார்  என்றும்  அப்படிப்பட்ட  நிகழ்வுகளுக்கு  போலீஸ்  அதிகாரிகள் …