சர்வதேச அளவில் சட்டத்தின் ஆட்சி சீராகப் பேணப்பட வேண்டும் என்று வலியுறுத்திய அன்வார் இப்ராஹிம், சட்டத்தை ஒருதலைப்பட்சமாகப் பயன்படுத்துவது அதன் நம்பகத்தன்மையைக் குலைத்துவிடும் என்றும் எச்சரித்தார். சட்டங்கள் அனைவருக்கும் அணுகக்கூடியதாகவும், அமல்படுத்தக்கூடியதாகவும் இருப்பதை உறுதிசெய்யும் ஒரு அடிப்படைக் கொள்கையாக இது நீடிக்கிறது என்று பிரதமர் கூறினார். சர்வதேச உறவுகளில்…
ஜோகூர் பிகேஆர்: தேவை நீர் பங்கீடு அல்ல; நீர்ப் பிரச்னைகளுக்குத்…
ஜோகூர் பிகேஆர், மாநில அரசு தண்ணீர் பங்கீட்டில் கவனம் செலுத்துவதை விடுத்து நீர் தட்டுப்பாட்டுக்குத் தீர்வுகாணும் முயற்சிகளில் ஈடுபட வேண்டும் என்று வலியுறுத்தியது. மாற்று வழிகளில் தண்ணீரைப் பெற முயல வேண்டும், நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் அத்துமீறல் செய்வோரிடம் கடுமையாக நடந்து கொள்ள வேண்டும் என்று அது குறிப்பிட்டது. “பாதிக்கப்படாத …
மகாதீர்: நஜிப்புக்கு வாக்களிக்காதீர்
நஜிப்பை பிரதமர் பதவியிலிருந்து அகற்றுவதற்கு அடுத்த பொதுத் தேர்தலில் அவருக்கு வாக்களிக்க வேண்டாம் என்று நஜிப்பின் நாடாளுமன்ற தொகுதியான பெக்கான் வாக்காளர்களை முன்னாள் பிரதமர் மகாதீர் முகமட் மீண்டும் கேட்டுக்கொண்டுள்ளார். 14 ஆவது பொதுத் தேர்தலுக்குப் பிறகு நஜிப் ரசாக் பிரதமர் பதவியில் தொடராமல் இருப்பதை இது…
ஜிஎஸ்டி விகிதத்தை அதிகரிக்க அரசாங்கம் எண்ணவில்லை
அரசாங்கம் இப்போது ஆறு விழுக்காடாக உள்ள பொருள், சேவை வரி விகித்ததை அதிகரிக்க திட்டமிடவில்லை, பரிந்துரைக்கவில்லை, அது குறித்து விவாதிக்கவுமில்லை என நிதி துணை அமைச்சர் சுவா டீ யோங் மறுக்கிறார். இன்று செய்தியாளர்களிடம் பேசிய சுவா, “ஜிஎஸ்டி விகிதத்தைக் கூட்டுவது பற்றி விவாதிக்கப்படவே இல்லை. எனவே, மக்கள் …
நேற்றைய ஆட்சியாளர் கூட்டத்தில் ஜோகூர் பிரதிநிதி இல்லை
நேற்று கோலாலும்பூரில் இஸ்தானா நெகாராவில் நடந்த 241-வது ஆட்சியாளர் கூட்டத்துக்கு ஜோகூர் சுல்தானோ அவரின் பிரதிநிதியோ வரவில்லை. ஒரு-நாள் முழுக்க நடந்த அக்கூட்டத்துக்கு மற்ற மலாய் ஆட்சியாளர்கள் அனைவரும் வந்திருந்ததாக பெர்னாமா தெரிவித்தது.
பட்டத்திளவரசரை வேவு பார்ப்பது ஏன்? விளக்கம் கேட்கிறது ஜோகூர் டிஏபி
போலீஸ் சிறப்புப் பிரிவு ஜோகூர் பட்டத்திளவரசர் துங்கு இஸ்மாயிலை வேவு பார்ப்பதை ஜோகூர் டிஏபி சாடியுள்ளது. அது ஏற்கத்தக்க செயலல்ல என்றும் அரசாங்கம் அதற்கு விளக்கமளிக்க வேண்டும் என்றும் மாநில டிஏபி தலைவர் லியு சின் தொங் வலியுறுத்தினார். “துங்கு இஸ்மாயில் அவ்வப்போது கூட்டரசு அரசாங்கத்துக்குப் பிடிக்காத கருத்துகளைச் …
WSJ:ரிசால் சொகுசு வீடு வாங்கியது குறித்து எப்பிஐ விசாரணை
அமெரிக்காவின் பெடரல் புலனாய்வு பிரிவு (எப்பிஐ), பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் மாற்றான் பிள்ளை ரிசா அசிஸ் இரண்டு சொகுசு வீடுகள் வாங்கியது குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளது. 1எம்டிபி விசாரணை தொடர்பில் ரிசா விசாரிக்கப்படுவதாக த வால் ஸ்திரிட் ஜர்னல் அறிவித்தது. நியுயோர்க்கிலும் லோஸ் எஞ்சலிசிலுமிள்ள அச்சொத்துகளை வாங்குவதற்கு …
1எம்டிபி-க்காக மக்கள்தான் ரிம48.7 பில்லியனைக் கொடுக்க வேண்டியிருக்கும் என்பதை பேங்க்…
‘பேங்க் நெகாரா ஆளுனர் முகம்மட் இப்ராகிம், அரசாங்கம் 1எம்டிபி கடனைச் செலுத்துவது என்றால் மக்கள்தான் அதைச் செலுத்த வேண்டும் என்பதை மறந்து பேசுகிறார். “அவர், 1எம்டிபி-இன் நிதிச் சுமைகளுக்குத் தீர்வுகண்டால் மட்டுமே நாட்டின் பொருளாதாரமும் நிதிநிலையும் மீட்சிபெறும் என்று மறைமுகமாக பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கை எச்சரித்திருப்பதை நான் …
இடைத் தேர்தல்களில் எதிரணியினர் போட்டியிடக் கூடாது: பாஸ் வலியுறுத்து
பாஸ், சுங்கை புசார், கோலா கங்சார் இடைத் தேர்தல்களில் மற்ற எதிரணியினர் கலந்துகொள்ளக் கூடாது எனக் கூறியுள்ளது. அவ்விரு தொகுதிகளும் பாஸ் தொகுதிகள் என்றும் அவற்றுக்காக அக்கட்சி அம்னோவையும் பிஎன்னையும் எதிர்த்து முழுமூச்சாக போராடும் என்றும் அதன் துணைத் தலைவர் துவான் இப்ராகிம் கூறினார். பிஎன் தோற்க வேண்டும் …
இடைத் தேர்தல்களில் பிகேஆர் போட்டியிடுமா?
பிகேஆர் தலைவர்கள் எதிர்வரும் சுங்கை புசார், கோலா கங்சார் இடைத்தேர்தல்களில் பிகேஆர் போட்டியிடுமா, மாட்டாதா என்று கூறத் தொடர்ந்து மறுத்து வருகிறார்கள். நேற்றிரவு பெட்டாலிங் ஜெயாவில் கட்சியின் தலைமையகத்தில் அரசியல் விவகாரப் பிரிவின் கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்கள் கட்சித் தலைவர் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயிலை முற்றுகையிட்டு …
அமானா: இடைத் தேர்தல்களில் மும்முனைப் போட்டியைத் தவிர்ப்பீர்
எதிர்வரும் இடைத் தேர்தல்களில் பக்கத்தான் ஹராபானும் பாஸும் ஒன்றை மற்றொன்று எதிர்த்துப் போட்டியிடும் நிலை உருவாக இடமளிக்கக்கூடாது என அமானாவின் கோலா திரெங்கானு எம்பி ராஜா கமருல் பஹ்ரேன் கூறினார். மே 7 சரவாக் தேர்தல் அவற்றுக்கு நல்ல பாடமாக அமைய வேண்டும் என்றாரவர். அத்தேர்தலில் பக்கத்தான் ஹராபான் …
கேஎல் பாதுகாப்பான, தாராளப்போக்குக் கொண்ட நகரம்
கேஎல், குற்றச்செயல்களும் பழைமைப்போக்கும் கொண்ட நகரம் என்றும் அதனால் மலேசியச் சுற்றுப்பயணத் துறை பாதிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுவதைச் சுற்றுலா ஏற்பாட்டாளர் ஒருவர் மறுக்கிறார். சொல்லப்போனால் கோலாலும்பூர் உலகின் பாதுகாப்பான நகரங்களில் ஒன்று என மலேசிய சுற்றுலா மற்றும் பயண ஏற்பாட்டாளர் சங்கத் தலைவர் ஹம்சா ரஹ்மாட் கூறினார். “கோலாலும்பூர் உலகின் …
வாக்குகள் வாங்கப்படுவது பற்றிப் புகார் செய்யாதிருப்போர் அரசியல் லஞ்சத்துக்குத் துணை…
மே 7 சரவாக் தேர்தலில் வாக்குகள் விலைக்கு வாங்கப்பட்டதற்கான ஆதாரங்களை வைத்திருப்போர் அதிகாரிகளிடம் புகார் செய்ய வேண்டும். அப்படிச் செய்யத் தவறினால் அவர்கள் ஊழலுக்கு உடந்தை என்று கருதப்படுவார்கள் என நல்லதோர் நாளைக்கான மையம் -Centre for A Better Tomorrow- (சென்பெட்) கூறியது. “தவறுகள் நிகழ்ந்ததற்கு ஆதாரம் …
சிஎம்-மின் பதவிக் காலத்தைக் கட்டுப்படுத்தும் டிஏபி தே-இன் முயற்சி நிராகரிக்கப்பட்டது
முதலமைச்சரின் பதவிக்காலத்தைக் கட்டுப்படுத்தக் கோரி டிஏபி தஞ்சோங் பூங்கா சட்டமன்ற உறுப்பினர் தே ஈ சியு கொண்டுவந்த தீர்மானத்தை பினாங்கு சட்டமன்றத் தலைவர் லாவ் சூ கியாங் நிராகரித்தார். தீர்மானம் நிராகரிக்கப்பட்டதற்கான காரணம் தமக்குத் தெரிவிக்கப்படவில்லை என தே கூறினார். “என் தீர்மானத்தை நிராகாரிக்கும் உரிமை அவைத் தலைவருக்கு …
‘மகாதிர்ஸ்மே’ குழுவினர் 10ஆயிரம் கையெழுத்துகளைத் திரட்டினர்
‘மகாதிர்ஸ்மே’ எனத் தங்களை அழைத்துக்கொள்ளும் இளம் சமூக ஆர்வலர் குழுவொன்று, குடிமக்கள் பிரகடனத்துக்கு ஆதரவாக 10ஆயிரம் கையெழுத்துகளை இன்று முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டிடம் ஒப்படைத்தது. அவர்களுடன் சென்ற சிலாங்கூர் பெர்காசா தலைவர் அபு பக்கார் யாஹயா, அந்த இளைஞர்கள் பணம் பெற்றுக்கொண்டு கையெழுத்து திரட்டும் வேலையைச் …
‘அன்வார் மோசமான நிலையில் இல்லை’
பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம் நேற்று கோலாலும்பூர் மருத்துவ மனைக்குக் கொண்டு செல்லப்பட்டார், எனினும், அவருடைய உடல்நிலையில் கவலைகொள்ள ஏதுமில்லை என பேபாஸ் அன்வார் இயக்கம் கூறியது. அன்வாரின் இரத்த அழுத்தம் நிலையற்றிருந்தாலும் அதற்குச் சிகிச்சை அளிக்கும் வசதி சுங்கை பூலோ சிறைச்சாலை மருத்துவ மனையில் இல்லை …
சுங்கை புசாரிலும் கோலா கங்சாரிலும் இடைத் தேர்தல்
சுங்கை புசார் மற்றும் கோலா கங்சார் நாடாளுமன்ற தொகுதிகள் காலியாகி இருப்பதாகக் கூறும் அதிகாரப்பூர்வ அறிவிக்கை நாடாளுமன்றத்திலிருந்து தேர்தல் ஆணைய(இசி)த்துக்குக் கிடைத்திருக்கிறது. எனவே, அவ்விரு தொகுதிகளிலும் இன்னும் இரண்டு மாதங்களுக்குள் இடைத் தேர்தல்களை நடத்தியாக வேண்டும். தோட்டத் தொழில், மூலப்பொருள் துணை அமைச்சர் நோரியா கஸ்னோனும் வான் முகம்மட் …
ஒழுக்கம் காப்பீர்: சட்டமன்ற உறுப்பினருக்கு ஆளுனர் அறிவுரை
பினாங்கு ஆளுனர் அப்துல் ரஹ்மான் அபாஸ், பினாங்கின் 40 சட்டமன்ற உறுப்பினர்களும் மன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் பணிவன்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். இன்று பினாங்கு சட்டமன்றக் கூட்டத்தைத் தொடக்கி வைத்து உரையாற்றிய ரஹ்மான், “நீங்கள் மக்களின் தலைவர்கள். பொதுமக்களுக்கு நீங்களே முன்மாதிரி”, என்றார். அரசியலில் 100…
அசிசா: சரவாக் தேர்தலிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு 14வது பொதுத் தேர்தலுக்கு…
பிகேஆர் அடுத்த பொதுத் தேர்தலுக்குத் தன்னைத் தயார்படுத்திக்கொள்ள சரவாக் தேர்தல் நல்ல பாடமாக அமையும் என எதிரணித் தலைவர் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் கூறினார். “பலவீனங்களை அடையாளம் கண்டு நமது குறைபாடுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு வியூகங்களில் திருத்தம் செய்து அடுத்த பெரும் போராட்டத்துக்கு அதாவது 14வது …
உயர் இரத்த அழுத்தம் காரணமாக அன்வார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்
பிகேஆரின் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம் உயர் இரத்த அழுத்தம் காரணமாக அவசரமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் என்று அவரது வழக்குரைஞர் ஆர். சிவராசா கூறினார். அன்வாரின் இரத்த அழுத்தம் நிலையாக இல்லாதிருந்தது என்று சிவராசா மேலும் கூறினார். அவருக்காக பிராத்தனை செய்வோம் என்று சிவராசா அவரது…
ரபிசி: ஜிஎல்சி விவகாரத்தில் பிரதமர் தலையீட்டைக் காண்பிக்கும் கடிதம் என்னிடம்…
பிகேஆர் தலைமைச் செயலாளர் ரபிசி ரம்லி அரசுத் தொடர்புடைய ஒரு நிறுவன(ஜிஎல்சி) விவகாரத்தில் பிரதமர் தலையிடுவதைக் காண்பிக்கும் கடிதத்தின் பிரதி ஒன்று தம்மிடம் இருப்பதாகக் கூறிக் கொள்கிறார். அக்கடிதம் பிரதமர்துறை அதிகாரி ஒருவர் சம்பந்தப்பட்ட ஜிஎல்சி தலைமைச் செயல் அதிகாரிக்கு எழுதியது என ரபிசி ஓர் அறிக்கையில் கூறினார்.…
மகாதிர்: நஜிப் சரவாக் வெற்றி குறித்துக் களிப்படைய காரணமேதுமில்லை
கடந்த சனிக்கிழமை சரவாக் மாநிலத் தேர்தலில் பிஎன் வெற்றி அடைந்ததற்காக பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் களிப்படைய எந்தக் காரணமுமில்லை என முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் கூறினார். “நஜிப் மகிழ்ச்சி கொள்ள காரணம் ஏதுமில்லை. சரவாக் பிஎன்னின் சாதனை பற்றிச் சொல்வதென்றால் நஜிப் தலைமையிலான மத்திய …
சரவாக் டிஏபி மாநில எதிரணித் தலைவர் குறித்து விவாதிக்கும்
சரவாக்கில் எதிரணித் தலைவராக யாரை நியமிப்பது என்பதுமீது சரவாக் டிஏபி விரைவில் கூடிப் பேசும் என சரவாக் டிஏபி தலைவர் சொங் சியாங் ஜென் தெரிவித்துள்ளார். சரவாக் பிகேஆர் தலைவர் பாரு பியானை எதிரணித் தலைவராக நியமிக்கலாம் என பிகேஆர் உதவித் தலைவர் டாக்டர் சேவியர் ஜெயகுமார் மொழிந்திருப்பது…
பாஸ் கோலா கங்சாரிலும் சுங்கை புசாரிலும் போட்டியிடும்
தோட்டத் தொழில், மூலப் பொருள் துணை அமைச்சர் நோரியா கஸ்னோன் மற்றும் வான் முகம்மட் கைரில் அனுவார் வான் அஹ்மட் ஆகியோர் ஹெலிகாப்டர் விபத்தில் கொல்லப்பட்டதால் காலியாகியுள்ள சுங்கை புசார், கோலா கங்சார் தொகுதிகளில் பாஸ் போட்டியிட தயாராகிறது. அவ்விரு தொகுதிகளிலும் பாஸ் பாரம்பரியமாக போட்டியிட்டு வந்திருப்பதாக அதன் …


