சர்வதேச அளவில் சட்டத்தின் ஆட்சி சீராகப் பேணப்பட வேண்டும் என்று வலியுறுத்திய அன்வார் இப்ராஹிம், சட்டத்தை ஒருதலைப்பட்சமாகப் பயன்படுத்துவது அதன் நம்பகத்தன்மையைக் குலைத்துவிடும் என்றும் எச்சரித்தார். சட்டங்கள் அனைவருக்கும் அணுகக்கூடியதாகவும், அமல்படுத்தக்கூடியதாகவும் இருப்பதை உறுதிசெய்யும் ஒரு அடிப்படைக் கொள்கையாக இது நீடிக்கிறது என்று பிரதமர் கூறினார். சர்வதேச உறவுகளில்…
புவா: பிஏசி அறிக்கையில் ஒரு பகுதி நீக்கப்பட்டது பற்றி பிஏசி…
1எம்டிபிமீதான பொதுக் கணக்குக்குழு(பிஏசி)வின் அறிக்கையில் ஒரு பகுதி நீக்கப்பட்டது பற்றி பிஏசி உறுப்பினர்களுக்குத் தெரிவிக்கப்பட்டதாக பிரதமர்துறை அமைச்சர் அஸலினா ஒஸ்மான் சொல்வது சுத்த பொய் என்கிறார் பிஏசி உறுப்பினர் டோனி புவார். “பிஏசி தலைவர் பிஏசி உறுப்பினர்களிடம் அது பற்றித் தெரிவித்தார் என்றும் பிஏசி அறிக்கையில் உள்ள குறிப்பிட்ட …
அன்வாரைத் தொட்டுப் பேச அனுமதி கேட்டு அன்வார் குடும்பம் மனு
அன்வாரைச் சந்திக்க சிறைச்சாலை செல்லும்போது அவரைத் தொட்டுப் பேசுவதற்கு அனுமதி தர வேண்டும் என்று கோரி அன்வார் குடும்பத்தார் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். “கடந்த ஹரி ராயாவின்போது அவருடன் கைகுலுக்கக்கூட அனுமதிக்கப்படவில்லை. அதனால்தான் இப்படி ஒரு மனுவைத் தாக்கல் செய்ய வேண்டியதாயிற்று”, என அன்வாரின் துணையாரும் பிகேஆர் …
1எம்டிபி-இன் சிக்கல் அதன் பங்காளி நிறுவனங்களையும் பாதிக்கிறது
1எம்டிபி பெரிய பெரிய நிறுவனங்களுடன் கூட்டுச் சேர்ந்து பிரம்மாண்டமான மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்தது. ஆனால், அந்நிறுவனத்துக்கு ஏற்பட்டுள்ள பிரச்னைகளால் அதன் கூட்டு நிறுவனங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. 1எம்டிபி-இன் பிரச்னைகளால் அதன் கூட்டு நிறுவனங்கள் வங்கிக் கடன் பெறுவதில் சிக்கலை எதிர்நோக்குவதாக நிதி துணை அமைச்சர் ஜோகாரி அப்துல் கனி …
நன்சி: ரபிசிக்குத் தகவலளிப்போர் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் பாதுகாப்பு கிடையாது
பிகேஆர் பாண்டான் எம்பி அவருக்குத் தெரிந்த தகவலைப் பகிரங்கப்படுத்தினார் என்பதால் தகவலளிப்போர் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் அவருக்குப் பாதுகாப்பு கிடையாது எனப் பிரதமர்துறை அமைச்சர் நன்சி சுக்ரி கூறினார். “அவர் மார்ச் 24-இலும் மார்ச் 28-இலும் நடத்திய செய்தியாளர் கூட்டங்களில் தகவலைப் பகிரங்கமாக அறிவித்தார் என்பதால் அவருக்குச் சட்டப்படி பாதுகாப்பு …
ஆகாயப்படை விமானம் விழுந்து நொறுங்கியது: விமானிகள் உயிர் தப்பினர்
அரச மலேசிய ஆகாயப் படை (ஆர்எம்ஏஎப்) விமானிகள் இருவர் அவர்களின் விமானத்திலிருந்து வெளியில் குதித்து விட்டதால் உயிர் தப்பினர். பிற்பகல் மணி 12.45க்கு விமானம் பயிற்சி ஓட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது சில தொழில்நுட்பக் கோளாறுகளை எதிர்நோக்கியது என ஆர்எம்ஏஎப் ஓர் அறிக்கையில் கூறியிருந்தது. விமானம் பெக்கான் நகருக்கு 50கிமீ தொலைவில்…
இடைத் தேர்தல்: பாஸ் பிடிவாதத்தை விட்டு பக்கத்தான் பரிந்துரையை ஏற்க…
பாஸ் கோலா கங்சார் இடைத் தேர்தலில் போட்டியிட்டு சுங்கை புசாரை அமானாவிடம் விட்டு விட வேண்டும் என்ற பக்கத்தான் பரிந்துரையை அந்த இஸ்லாமியக் கட்சி ஏற்க வேண்டும் என பேராக் டிஏபி வலியுறுத்தியுள்ளது. இது அவ்விரண்டு தொகுதிகளிலும் அம்னோவுடன் நேரடிப் போட்டியை உறுதிப்படுத்தும் என பேராக் டிஏபி தலைவர்…
டிஏபி குடிமக்கள் பிரகடனத்தைத் தொடர்ந்து ஆதரிக்கும்
முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டுடன் ஒத்துழைப்பது குறித்து சிறையில் உள்ள முன்னாள் எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம் எச்சரித்திருந்த போதிலும் டிஏபி குடிமக்கள் பிரகடனத்தைத் தொடர்ந்து ஆதரிப்பதுடன் மகாதிருடனும் ஒத்துழைக்கும். “ஆமாம். நிபந்தனைகளுடன் அதைச் செய்வோம்”, என டிஏபி விளாபரப் பிரிவுச் செயலாளர் டோனி புவா…
மகாதிர் இடைத் தேர்தலில் போட்டியிட விரும்புகிறாராம், மலாக்கா சிஎம் கூறுகிறார்
டாக்டர் மகாதிர் முகம்மட் சுங்கை புசார், கோலா கங்சார் இடைத் தேர்தல்களில் போட்டியிட விரும்புவதாக மலாக்கா முதலைமைச்சர் (சிஎம்) இட்ரிஸ் ஹருன் கூறினார். முன்னாள் பிரதமர் இடைத் தேர்தல்களில் காட்டுகின்ற ஆர்வத்தையும் பிஎன் தோற்கடிக்கப்பட வேண்டும் என்ற அவரது விருப்பத்தையும் அடிப்படையாக வைத்து இட்ரிஸ் இம்முடிவுக்கு வந்துள்ளார். “ஒரு…
கணவரின் கடிதம் குறித்து கருத்துரைக்க வான் அசிசா மறுப்பு
பிகேஆர் தலைவர் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில், சிறையில் உள்ள தம் கணவர் அன்வார் இப்ராகிம் எழுதிய எட்டுப் பக்கக் கடிதம் குறித்துக் கருத்துரைக்க மறுத்தார். இன்று காலை, நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்கள் பெர்மாத்தாங் பாவ் எம்பி-ஆன அவரைச் சுழ்ந்துகொண்டு கடிதம் பற்றி வினவினர். “அது கட்சியின்…
ரபிசி: மகாதிரை அதிகம் நம்ப வேண்டாம் என்ற அன்வாரின் அறிவுறுத்தல்…
சிறையில் உள்ள முன்னாள் எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம் எட்டுப் பக்கத்துக்கு எழுதியுள்ள கடிதத்தில் டாக்டர் மகாதிர் முகம்மட்டின் குடிமக்கள் பிரகடனத்தில் மதிமயங்கிவிட வேண்டாம் என்று எச்சரித்திருப்பது சரியான நேரத்தில் விடுக்கப்பட்ட ஒர் அறிவுறுத்தல் என பிகேஆர் உதவித் தலைவர் ரபிசி ரம்லி கூறினார். “அது முக்கியமாக, பிஎன்னைத்…
பாஸ் கட்சியை ஆதரிப்பதா?,அது முட்டாள்தனமாகும் என்கிறார் ஸைட் இப்ராகிம்
கடந்த வாரம் வரையில் முன்னாள் பிரதமர் மகாதீர் முகமட் தவறிழைக்க மாட்டார் என்று நம்பியிருந்த முன்னாள் சட்டத்துறை அமைச்சர் ஸைட் இப்ராகிம் இப்போது குழப்பத்தில் இருக்கிறார். எதிர்வரும் கோலகங்சார் மற்றும் சுங்கை புசார் இடைத் தேர்தல்களில் பாரிசான் நேசனலை தோற்கடித்து பிரதமர் நஜிப்புக்கு பாடம் புகற்ற வேண்டும்…
ஹிசாம் ரயிஸுக்கு சிறைத் தண்டனை இல்லை, அபராதம் மட்டுமே
சமூக ஆர்வலர் ஹிசாம் ரயிஸ் மீது சுமத்தப்பட்ட தேச நிந்தனை குற்றச்சாட்டின் கீழ் அவருக்கு விதிக்கப்பட்டிருந்த ஒன்பது மாத சிறைத் தண்டனையை மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று ரத்து செய்தது. நீதிபதி தெங்கு மைமுன் துவான் மாட் தலைமையிலான மூவர் அடங்கிய அமர்வு தமக்கு வித்திக்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக…
கு நான்: மகாதீர் அம்னோவை அழிக்க விரும்புகிறார்
இருபது ஆண்டுகளுக்கு முன்பு அவர் தலைமை ஏற்றிருந்த அம்னோவை அழிக்கும் நோக்கத்தை மகாதீர் கொண்டிருக்கிறார் என்பது இப்போது தெளிவாகத் தெரிகிறது என்று அம்னோவின் தலைமைச் செயலாளர் தெங்கு அட்னான் தெங்கு மன்சோர் கூறுகிறார். முன்னதாக, மகாதீர் பிரதமர் நஜிப்பின் மீது மட்டுமே தமது தாக்குதலை மேற்கொண்டிருந்தார் என்பதை தெங்கு…
பெர்சே தலைவர் மலேசியாவை விட்டு வெளியேற தடை
பெர்சே இயக்கத்தின் தலைவர் மரியா சின் அப்துல்லா நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த இயக்கத்தின் சார்பில் தென் கொரியாவில் குவாங்ஜு பரிசு என்ற மனித உரிமைகள் விருதை பெற்றுக்கொள்வதிலிருந்து மரியா தடுக்கப்பட்டுள்ளார். கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் குடிநுழைவுத்துறையைக் கடந்து செல்ல தடை செய்யப்பட்ட போது…
இரு இடைத் தேர்தர்களிலும் ஹரப்பான் மோதல்கள் இல்லாதிருப்பதை அமனா உறுதி…
எதிர்வரும் இரு இடைத் தேர்தல்களிலும் பக்கத்தான் ஹரப்பான் உறுப்பு கட்சிகளிடையே மோதல்கள் இல்லாதிருப்பதை பார்டி அமனா நெகாரா (அமனா) உறுதி செய்யும். கோலகங்சார் மற்றும் சுங்கை புசார் தொகுதிகளில் நடைபெறவிருக்கும் இடைத் தேர்தலில் பாரிசான் நேசனலை தோற்கடிக்க எதிரணியினர் ஒன்றுபட்டு நிற்க வேண்டும் என்ற முன்னாள் பிரதமர்…
இடைத் தேர்தல்களில் பாரிசானை தோற்கடிக்க நேரடிப் போட்டி, வலியுறுத்துகிறார் மகாதீர்
சிலாங்கூர் மற்றும் பேராக் ஆகிய மாநிலங்களில் நடைபெறவிருக்கும் இடைத் தேர்தல்களில் பாரிசான் நேசனலை தோற்கடிக்க எதிரணியினர் ஒன்றுபட்டு, ஒன்றாக நிற்க வேண்டும் என்று முன்னாள் பிரதமர் மகாதீர் முகமட் வலியுறுத்துகிறார். "இந்த புவாசா மாதம் இரு இடைத் தேர்தல்களைச் சந்திக்கவிருக்கிறது. இம்முறை நாம் அனைவரும் பிஎன்னை தோற்கடிக்க முடியும்…
ஹாடி வேண்டுகோள்: பாஸ் கட்சியுடன் போட்டியிட வேண்டாம்
கோலகங்சார் மற்றும் சுங்கை புசார் ஆகிய தொகுதிகளில் நடைபெறவிருக்கும் இடைத் தேர்தலில் பாஸ் கட்சியுடன் போட்டியிட்டு வாக்குகளைச் சிதறடிக்க வேண்டாம் என்று பாஸ் கட்சியின் தலைவர் அப்துல் ஹாடி அவாங் இதர கட்சிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இவ்விரு தொகுதிகளிலும் இந்த இஸ்லாமியக் கட்சிக்கு வலுவான ஆதரவு இருப்பதால் போட்டியிடுவதற்கு…
டிஏபி, அரசுப் பணத்தைக் கையாடிய சிலாங்கூர் சட்டமன்ற உறுப்பினரைக் கட்சிநீக்கம்…
டிஏபி தெலோக் டத்தோ சட்டமன்ற உறுப்பினர் லோ சீ ஹோங், தன்னுடைய தொகுதிக்கு ஒதுக்கப்பட்ட அரசுப் பணத்தைத் தவறாக பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டதால் கட்சியிலிருந்து விலக்கப்பட்டார். இதன் தொடர்பில் லோ இன்று காலை விசாரிக்கப்பட்டதாகவும் விசாரணைக்குப் பின்னர் அவரைக் கட்சியிலிருந்து நீக்கம் செய்ய முடிவெடுக்கப்பட்டதாகவும் டிஏபி ஒழுங்கு நடவடிக்கைக் …
ஹராபான் இடைத் தேர்தல்களைவிட்டு ஒதுங்கியிருத்தல் நன்று-ஆய்வாளர்கள்
பக்கத்தான் ஹராபான், குறிப்பாக பார்டி அமானா நெகாரா எதிர்வரும் சுங்கை புசார், கோலா கங்சார் இடைத் தேர்தல்களில் போட்டியிடாமல் இருப்பது நல்லது என்று கூறப்பட்டுள்ளது. பல்முனை போட்டியின் விளைவுகள் இடைத் தேர்தல் தோல்வியை விட மோசமாக இருக்கும் என அரசியல் ஆய்வாளர்கள் எச்சரிக்கிறார்கள். சரவாக் தேர்தலே இதற்குச் சாட்சி.…
சீன துணை முதலமைச்சர் குறித்து அடினான் வாக்குறுதி அளித்தாரா?
சரவாக் முதலமைச்சர் அடினான் சாதேம் நேற்று அறிவித்த புதிய மாநில அமைச்சரவையில் மூன்று துணை முதலமைச்சர்களை நியமித்திருக்கிறார். மூவரில் சீனர் எவருமில்லை என்பது ஒரு சர்ச்சையைத் தோற்றுவித்துள்ளது. இது, மே 7 தேர்தலில் சீனர் சமூகம் பிஎன்னுக்கு வாக்களித்தால் சீனர் ஒருவர் துணை முதலமைச்சராக நியமிக்கப்படுவார் என்று அடினான் …
மில்லியன் கையெழுத்துகள் பற்றி ஜாஹிட் கவலைப்படவில்லை
மலேசியாவைப் பாதுகாப்போம் இயக்கம் அதன் குடிமக்கள் பிரகடனத்துக்கு ஆதரவாக ஒரு மில்லியன் கையெழுத்துகளைப் பெற்றிருக்கலாம் ஆனால், அதனால் ஆகப் போவது எதுவுமில்லை என்கிறார் துணைப் பிரதமர் அஹமட் ஜாஹிட் ஹமிடி. “ஒரு மில்லியன் கையெழுத்துகளால் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று சட்டத்தில் எதுவும் கிடையாது”, என உள்துறை …
மகாதீர்: “மக்கள் பிரகடனத்தில் ஒரு மில்லியனுக்கு மேற்பட்டோர் கையொப்பமிட்டுள்ளனர்
"மக்கள் பிரகடனம்" ஒரு மில்லியனுக்கும் கூடுதலான கையொப்பங்களைப் பெற்றுள்ளது என்று முன்னாள் பிரதமர் மகாதீர் முகமட் தெரிவித்தார். மக்கள் பிரகடனம் அறிவிக்கப்பட்டதிலிருந்து இப்போது 2 மாதங்கள் ஆகின்றன. இரண்டு மாதங்களுக்குள் ஒரு மில்லியனுக்கும் கூடுதலான கையொப்பங்கள் திரட்டப்பட்டுள்ளன என்று புத்ராஜெயாவில் இன்று பின்னேரத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில்…
போலீஸ் அரசியல்வாதிகளையும் வேவு பார்க்கிறதா? ஐஜிபியைக் கேட்கிறார் எம்பி
போலீஸ் சிறப்புப் பிரிவு(எஸ்பி) அரசியல்வாதிகளையும் சமூக ஆர்வலர்களையும்கூட உளவு பார்க்கிறதா என்பதை போலீஸ்படைத் தலைவர் காலிட் அபு பக்கார் விளக்க வேண்டும் என டிஏபி எம்பி ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார். ஜோகூர் இளவரசர் துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராகிம் வேவுபார்க்கப்படுவதாகக் கூறப்பட்ட விவகாரத்தை ஒரு தப்பான புரிதல் என …


