சுரேந்திரன்: திரும்பி வருவேன்…..பழிதீர்ப்பேன்

நவம்பர் 14-இல், நாடாளுமன்றத்திலிருந்து ஆறு மாதங்களுக்கு இடைநீக்கம் செய்யப்பட்ட என்.சுரேந்திரனிடம் அவரின் அடுத்த திட்டம் என்னவென்று வினவியதற்கு,  “திரும்பி வருவேன், பழிதீர்ப்பேன்” என்றார். “இதற்குமுன் என்ன செய்தேனோ அதைத்  தொடர்வேன். பொதுநலன்  சம்பந்தப்பட்ட  விவகாரங்களை நாடாளுமன்றத்தில் தொடர்ந்து எழுப்புவேன்”, என்றவர் சொன்னார். நாடற்ற மக்கள், சிவப்பு அடையாள அட்டை,…

ஸுனார்: கார்ட்டுன் நூலை அச்சடிப்பதற்குள் போதும் போதுமென்று ஆகிவிட்டது

மலேசியாவில் அரசியல் கேலிச் சித்திரம் வரைவது ஆபத்தான வேலையாக இருக்கிறது என்கிறார் பிரபல கேலிச்சித்திர ஓவியர் ஸுனார். அவரது புதிய கேலிச்சித்திர நூலான ‘Pirates of the Carry-BN'-னை அச்சடிக்க   10 அச்சகங்களை அணுகியபோது பத்தும் மறுத்து விட்டன.  இறுதியாக ஒரு நிறுவனம் ஒப்புக்கொண்டது.   “அவர்களும் தங்கள் பெயரைப்…

நாடாளுமன்றத்தில் ஹூடுட் தீர்மானத்தை ஷஹிடான் ஆதரிப்பார்

நாடாளுமன்றத்தில் ஹூடுட் சட்டம் மீதான தீர்மானம் கொண்டுவரப்பட்டால் அதை ஆதரிக்க தயார் என பிரதமர் துறையில் நாடாளுமன்ற விவகாரங்களைக் கவனித்துக்கொள்ளும் அமைச்சரான ஷஹிடான் காசிம் கூறியுள்ளார். “நாங்கள் அதை ஆதரிக்கத் தயார். ஆனால், எல்லா எம்பிகளும் ஆதரித்தால்தான் அது ஏற்கப்படும். “பாஸ் ஒரு சிறுபான்மைக் கட்சி. அதன் பக்காத்தான்…

மக்கள் வெறுப்படையுமுன்னர் போய்விடுங்கள்: சொய் லெக்-குக்கு உத்துசான் அறிவுரை

கட்சியில் வரவேற்பு இல்லை என்பதால் மசீச தலைவர் சுவா சொய் லெக் விலகிக் கொள்வதே மேல் என்று அம்னோவுக்குச் சொந்தமான உத்துசான் மலேசியா நாளேடு கூறியுள்ளது. “சொய் லெக்கின் காலம் முடிந்து விட்டது. காலவரம்பை மீறி தங்க வேண்டாம்.  இன்னும் எளிமையாக சொல்ல வேண்டுமென்றால் மக்கள் வெறுப்படையும்வரை காத்திராதீர்கள்”,…

இலங்கை மாநாட்டில் மலேசியா கலந்துகொண்டதற்கு இளைஞர்கள் கண்டனம்

நேற்று, கோலாலும்பூர், பிரிக்பீல்ட்சில், இளைஞர்கள் நால்வர், ஸ்ரீலங்கா காமன்வெல்த் உச்சநிலை மாநாட்டில் மலேசியா கலந்துகொண்டதற்கு எதிர்ப்பை வெளிப்படுத்தினர். அவர்கள் கைகளில், “போர்க்குற்றவாளி காமன்வெல் மாநாட்டுத் தலைவர்”, “ஸ்ரீலங்காவில் தமிழர்களுக்கு எதிரான அடக்குமுறையை நிறுத்துங்கள்”, “ஸ்ரீலங்காவில் இனஒழிப்பைத் தடுத்து நிறுத்துங்கள்”, “நஜிப், வாயை மூடிக்கொண்டிருப்பதற்காக நீங்கள் வெட்கப்பட வேண்டும்” என்ற…

யூ.பி.எஸ்.ஆர்: சிறப்பாகத் தேர்ச்சிபெற்ற தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு பாராட்டுகள்

-டாக்டர் சேவியர் ஜெயக்குமார், சிலாங்கூர் மாநில சட்டமன்ற உறுப்பினர், நவம்பர் 16, 2013. இவ்வாண்டு யூ.பி.எஸ்.ஆர் தேர்வில் சிறப்பாகத் தேர்ச்சி பெற்ற எல்லா மாணவர்களுக்கும் எனது வாழ்த்தையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாக, சிலாங்கூர் தமிழ்ப்பள்ளிகளின் தேர்ச்சி முடிவுகள் ஒவ்வொரு ஆண்டும் முன்னேற்றமடைந்து வருவது மகிழ்ச்சியளிக்கிறது. மற்ற மாநிலங்களுடன்…

மலேசியாகினி இல்லம்: ஒரு செங்கல் வாங்கி உதவுங்கள்

கடந்த 14 வருடங்களாகப் பல போராட்டங்களுக்கிடையில் செயல்பட்டு வந்த மலேசியாகினி அதற்கென ஒரு நிரந்தர இல்லத்தை வாங்கியுள்ளது. அடுத்த ஆண்டு தொடக்கத்திலிருந்து அவ்வில்லம் அதன் புதிய செயலாகமாக இயங்கும். அக்கட்டடம் பெட்டாலிங் ஜெயா, செக்சன் 51, பிஜே51 பிஸ்னெஸ் பார்க் என்ற இடத்தில் இருக்கிறது. அங்கிருந்து மலேசியர்களுக்கு இணையதளம்…

அனைத்தையும் விட மிக முக்கியமானது மனித உரிமைகள், பிரதமர் நவீன்

மோரீசஸ் நாட்டில் 2015 ஆம் ஆண்டில் நடக்கவிருக்கும் காமன்வெல்த் தலைவர்கள் உச்சநிலை மாநாட்டிற்கு தலைமை ஏற்கவிருக்கும் அந்நாட்டின் பிரதமர் நவீன் சந்திரா ராம்குலாம் மனித உரிமைகள் மிக முக்கியமானது என்று கூறுகிறார். சிறீலங்காவில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் 2013 ஆண்டிற்கான காமன்வெல்த மாநாட்டில் பிரதமர் நவீன் கலந்துகொள்ளவில்லை. சிறீ…

சுரேந்திரனின் இடைநீக்கம் ‘நிலை ஆணைகளுக்கு எதிரான ஒன்று’

பாடாங் செராய் எம்பி என்.சுரேந்திரனுக்கு  நாடாளுமன்றத்திலிருந்து ஆறு மாத இடைநீக்கம் என்பது “அதிகப்படியான” ஒன்று எனவும் அது நிலை ஆணைகளை மீறிய ஒன்று எனவும் சுதந்திரத்துக்குக் குரல்கொடுக்கும் வழக்குரைஞர்கள் அமைப்பு கூறியுள்ளது. சுரேந்திரன் அவருக்கு எதிராக தெரிவித்திருந்த கருத்துகளால் ஆத்திரமடைந்திருந்த மக்களவைத் தலைவர் பண்டிகார் அமின் மூலியா (வலம்) “சுய-நல”…

வீ துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவதை மசீச இளைஞர்கள் விரும்புகிறார்கள்

மசீச இளைஞர் பகுதியின் மத்திய செயல்குழு, அதன் தலைவர் வீ கா சியோங்கும் துணைத் தலைவர் மா ஹங் சூன்னும் முறையே துணைத் தலைவர், உதவித் தலைவர் பதவிகளுக்குப் போட்டியிட வேண்டும் என ஒருமனதாக பரிந்துரைத்துள்ளது. “மசீசவுக்கு இளம் இரத்தம் தேவை என்று முடிவுசெய்து மத்திய செயல்குழுவினர் என்னையும்…

ஜப்பானிய நிறுவனம் பினாங்கில் ரிம1.3 பில்லியன் முதலீடு

உலகம் முழுவதும் பொருளாதாரம் சற்று சுணக்கம் கண்டுவரும் வேளையில் ஜப்பானிய நிறுவனமொன்று பினாங்கில் ரிம1.3 பில்லியன் முதலீட்டில் தொழிற்சாலை ஒன்றை நிறுவுகிறது. அதன் பயனாக அடுத்த ஆண்டில் 1,500 புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும். ஏற்கனவே மலேசியாவில் செயல்பட்டுவரும் இபிடென் எலக்ட்ரோனிக்ஸ் மலேசியா என்னும் நிறுவனம், பினாங்கு அறிவியல்…

அம்னோ பேர்வழியின் இனவாதத்துக்கு கெராக்கான் கண்டனம்

கெராக்கான் உதவித் தலைவர் அஷாருடின் அஹ்மட், “மலாய்க்காரர்களின் கருணையைச் சாதகமாக்கிக்கொண்டு”  என்ன வேண்டுமானாலும் பேசலாம் என சீனர்களும் இந்தியர்களும் நினைக்கக்கூடாது என்று கூறியுள்ள அம்னோ செராஸ் தொகுதித் தலைவர் சைட் அலி அல்ஹப்ஷியைச்  சாடினார். சைட் அலியின் “இனவாதமும் இனச்சார்பான பேச்சும் கோணங்கித்தனமானது, பொறுத்துக்கொள்ள முடியாதது”, என அஷாருடின்…

ஓராங் ஆஸ்லிகளை இழிவுபடுத்திய பூங்கா அதிகாரி மன்னிப்பு கேட்டார்

பகாங் வனவிலங்கு தேசியப் பூங்கா காப்புத்துறை அதிகாரி ஒருவர், ஓராங் அஸ்லிகள் சமூகத்தினர் “சுற்றித்திரியும் விலங்குகள்”போல் நடந்துகொள்ளக் கூடாது என்று கூறியதற்காக மன்னிப்பு கேட்டுக்கொண்டார். ஹசான்  காசிம், என்னும் அந்த அதிகாரி முகநூலில்,  ஓராங் அஸ்லிகள் “விலங்குகள்”போல் நடந்துகொள்ளக் கூடாது என்றும் “காடுகளில் சுற்றித்திரியும் விலங்குகளுக்குத்தான் கானகம் அவற்றின்…

ரிம270 மில்லியன் செலவிட்டும் பள்ளிகளில் ஆங்கிலமொழி தரம் உயரவில்லை

யுபிஎஸ்ஆர் தேர்வு முடிவுகள், மாணவர்களின் ஆங்கிலமொழி தரம் தாழ்ந்து போயிருப்பதைக் காண்பிக்கின்றன. அப்படியானால்,  பள்ளிகளில் ஆங்கிலமொழி தரத்தை  உயர்த்த  ஆலோசகர்களுக்கு ரிம270 மில்லியன்  செலவிடப்பட்டதே,  அது என்னவானது என்று  கேள்வி  எழுப்புகிறார்  புக்கிட் பெண்டேரா எம்பி ஜைரில் கீர் ஜொஹாரி. மூன்றாண்டுகளாக ஆலோசகர்களை அமர்த்தி அவர்களின்  அறிவுரைகளுக்காக பெரும்தொகை…

சிறப்புத் தூதர்களின் சம்பளத்தைக் குறைக்கும் தீர்மானம் நிராகரிக்கப்பட்டது

முன்பு அமைச்சர்களாக இருந்து இப்போது சிறப்புத் தூதர்களாக உள்ள மூவருக்கு வழங்கப்படும் அதிகப்படியான சம்பளத்தைக் குறைக்க வேண்டும் என்று கோரும் தீர்மானத்தை நாடாளுமன்றம் தள்ளுபடி செய்தது. சிறப்புத் தூதர்களாக இருக்கும் அந்த மூவர்- முன்னாள் ரொம்பின் எம்பி ஜமாலுடின் ஜர்ஜிஸ்(அமெரிக்கா), மசீச முன்னாள் தலைவர் ஒங் கா திங்…

செர்டாங் மருத்துவமனையில் குழந்தைகளுக்கான ஐசியு பகுதியில் உட்கூரை இடிந்து விழுந்தது

செர்டாங் மருத்துவமனையில் உட்கூரையின் சில பகுதிகள் இடிந்து விழுந்தன. கடந்த மூன்றாண்டுகளில் நான்காவது தடவையாக இப்படி நிகழ்ந்துள்ளது. இந்தத் தடவை, புதிதாக பிறந்த குழந்தைகளுக்கான தீவிர கவனிப்புப் பகுதியில் உட்கூரையிலிருந்து சில மரத்துண்டுகள் விழுந்ததாக ஹரியான் மெட்ரோ அறிவித்துள்ளது. சம்பவம் அதிகாலை மணி 1.30க்கு நிகழ்ந்ததாக மருத்துவமனை இயக்குனர்…

அம்னோவுக்காக மாணவர்கள் ‘கோணல்’ வரலாற்றில் தேர்ச்சிபெற வேண்டியுள்ளது

எஸ்பிஎம் தேர்வில் வரலாற்றுப் பாடத்தில் மாணவர்கள் தேர்ச்சிபெறுவதைக் கட்டாயமாக்கியதன் பின்னணியில் அரசியல் நோக்கம் இருப்பதாக Kempen Sejarah Sebenar Malaysia (KemSMS) கருதுகிறது. அதனால்  மோசமான விளைவுகள் நேரலாம் என KemSMS தலைவர் தஸ்லிம் முகம்மட் இப்ராகிம் எச்சரித்தார். “வரலாற்றுப் பாடத்தில் அரசியலைப் புகுத்துவது இனங்களுக்கிடையிலும் சமயங்களுக்கிடையிலும் ஒற்றுமையையும்…

சுரேந்திரன் 6மாத இடைநீக்கம்; அவையில் அமளி

பிரதமர்துறை பாடாங் செராய் எம்பி, என்.சுரேந்திரனுக்கு எதிராகக் கொண்டுவந்த தீர்மானத்தை அடுத்து அவர் ஆறு மாதங்களுக்கு நாடாளுமன்றத்திலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். இடைநீக்கம் அறிவிக்கப்பட்டதும் அவரின் பக்காத்தான் ரக்யாட் சகாக்கள் அதை “சட்டவிரோதமானது” என்றுகூறி கூச்சலிட்டனர். பாக்காத்தான் எம்பிகள் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை. அவர்களில் சிலர் தீர்மான அறிக்கையைக் கிழித்தெறிந்தனர்; சிலர்…

என்மீது அதிருப்தியா, தீர்மானம் கொண்டு வாருங்கள்’-பண்டிகார்

‘மக்களவைத் தலைவர் பண்டிகார் அமின் மூலியா, தாம் குறைகூறலை ஏற்பதில்லை என்று கூறப்படுவதை மறுத்தார். தம்மீது மனநிறைவுகொள்ளாத எம்பிகள் தாராளமாக தீர்மானம் கொண்டுவரலாம் என்றாரவர். “ஒரு தீர்மானம் கொண்டு வந்து என் குறைநிறைகளை விமர்சிப்பதை வரவேற்கிறேன்”. இன்று பாடாங் செராய் எம்பி என்.சுரேந்திரனை அவையிலிருந்து வெளியேறும்படி மீண்டும் உத்தரவிட்ட…

பிரதமர் கமலா சிறீ லங்கா காமன்வெல்த் மாநாட்டில் கலந்துகொள்ள மாட்டார்

நாளை சிறீ லங்காவில் தொடங்கும் காமன்வெல்த் தலைவர்களின் மாநாட்டில் டிரினிடாட் டுபேகோ பிரதமர் கமலா பெர்ஷாத் பிஸ்செசார் கலந்துகொள்ள மாட்டார் என்று அவரது அலுவலகம் அறிவித்துள்ளது. முன்னதாக, சீனாவுக்கான அவரது அதிகாரப்பூர்வமான வருகையை முடித்துக் கொண்ட பின்னர் சிறீ லங்கா காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்கும் டிரினிடாட் டுபேகோ நாட்டின்…

‘அம்னோ போலீசைப் பயன்படுத்திக் கொண்டதை ஜாஹிட் ஹமிடி மறைக்கிறார்’

அக்டோபர் 20 அம்னோ தேர்தலுக்கு உதவியாக போலீஸ் படை பயன்படுத்திக்கொள்ளப்பட்டதா என்று தாம் நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு உள்துறை அமைச்சர் ஜாஹிட் ஹமிட் அளித்த பதிலில் “நேர்மையில்லை” என டிஏபி எம்பி ஒருவர் கூறுகிறார். ஜாஹிட் தம் பதிலில், அம்னோ பேராளர் கூட்டத்தின்போது போக்குவரத்தை ஒழுங்குபடுத்துதல், அந்நிகழ்வுக்கு வந்திருந்த…

பழனிவேல் எந்த உலகத்தில் இருக்கிறார் ?

-மு.குலசேகரன், நாடாளுமன்ற உறுப்பினர், நவம்பர் 14, 2013. நாளை வெள்ளிக்கிழமை (15-11-13) நடைபெறவிருக்கும் அமைச்சரவைக் கூட்டத்தில், பிரதமர் நஜிப் இலங்கையில் கூடவிருக்கும் காமன்வெல்த் நாடுகளின்  தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளவிருப்பது குறித்து கேள்வியெழுப்பப் போவதாக ம.இ.கா தேசியத் தலைவர் பழனிவேல் கூறியதாக பத்திரிகையில் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. "நான் பிரதமருடன் வெள்ளிக் கிழமை பேசப்போகிறேன்” என்ற…

உதயகுமாரைச் சந்திக்க அவரின் குடும்பதாருக்கும் வழக்குரைஞருக்கும் அனுமதி மறுப்பு

நேற்று நீதிமன்றத்துக்குக் கொண்டுவரப்பட்ட இண்ட்ராப் நடப்பில் தலைவர் பி.உதயகுமாரை, அவரின் குடும்பத்தாரும் வழக்குரைஞரும் சந்திக்க அனுமதிக்கப்படவில்லை. நீதிமன்றம் அதற்கு அனுமதித்திருந்தாலும் போலீசார் அனுமதிக்கவில்லை என உதயகுமாரின் வழக்குரைஞர்  எம். மனோகரன் கூறினார். “காஜாங் சிறைச்சாலைச் சேர்ந்த ஒரு இன்ஸ்பெக்டரும் ஏழெட்டு போலீஸ்காரர்களும் அவரைத் தரதரவென்று  இழுத்துச் சென்றுவிட்டனர். அவர்கள் முரட்டுத்தனமாக…