குறித்த நேரத்தில் கணக்கறிக்கையைத் தாக்கல் செய்யாமல் ‘நொண்டிச் சாக்கு’ சொல்கிறது…

விசாரணையாளர்கள்  ஆவணங்களை  எடுத்துச்  சென்று விட்டார்கள்  அதனால்தான் உரிய  நேரத்தில்  தணிக்கை  செய்யப்பட்ட  கணக்கறிக்கைகளைத்  தாக்கல்  செய்ய  முடியவில்லை  என்று  1எம்டிபி  காரணம்  கூறுவதை  அபத்தம்  என்கிறார்  பெட்டாலிங்  ஜெயா  உத்தார  எம்பி  டோனி  புவா. செப்டம்பர் 30க்குள் கணக்குகளைத்  தணிக்கை  செய்து  தாக்கல்   செய்யும்  எண்ணம்  1எம்டிபிக்குக் …

பிஎஸ்எம்: மனித உரிமைகள் மீதான தாக்கம் குறித்து மதிப்பீடு ஆய்வு…

மனித உரிமைகள் மீதான தாக்கம் குறித்த மதிப்பீடு ஆய்வு (எச்ஆர்ஐஎ) மேற்கொள்ளப்படாமல் டிரான்ஸ்-பசிபிக் பார்ட்னர்சிப் ஒப்பந்தம் (டிபிபிஎ) செய்துகொள்வது மலேசியர்களின் உரிமைகளைப் பறிப்பதற்கான ஒரு தெளிவான முயற்சியாகும் முதலாவதாக, எச்ஆர்ஐஎ ஆய்வு ஒன்றை மேற்கொள்ளாமல் இந்த ஒப்பந்தப் பேச்சுவார்த்தையில் பங்கேற்றிருக்கும் மலேசிய தரப்பினர் ஒப்பந்தம் செய்துகொள்வதற்கான உரிமையைப் பெற்றிருக்கவில்லை…

முகைதினின் கட்சிப் பொறுப்புகள் குறைக்கப்படுகின்றன

அம்னோ  துணைத்  தலைவரான  முகைதின்  யாசினின்  கட்சிப்  பொறுப்புகள்  படிப்படியாகக்  குறைக்கப்பட்டு  வருகின்றன. முகைதினைத்  துணைப்  பிரதமர்  பதவியிலிருந்து  வெளியேற்றிய  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக் அவரைக்  கட்சித்  துணைத்  தலைவர்  பதவியிலிருந்தும்  தூக்கியிருக்கலாம். அது  அம்னோவில்  மேலும்  நெருக்கடியை உருவாக்கும்  என்பதால்  அவர்  அவ்வாறு  செய்யவில்லை. ஆனால், …

‘1997 போல் அல்லாமல் ரிங்கிட்டின் சரிவு ஏற்றுமதிக்கு உதவவில்லை’

1997-இல் ஆசிய  நிதி  நெருக்கடியின்போது  ரிங்கிட்  மதிப்பு குறைந்தது  நம்முடைய  ஏற்றுமதி  உயர்வதற்கு  உதவியது.  ஆனால்,  இப்போது ரிங்கிட்டின்  மதிப்பு  படுவீழ்ச்சி  அடைந்திருந்தாலும்   இதுவரை  ஏற்றுமதி  உயரவில்லை, நாட்டின்  பற்று-வரவு  நிலையும்  மேம்படவில்லை  என்கிறார்  ஆய்வாளர்  ஒருவர். 1997-இல்  ரிங்கிட்  மதிப்பு  குறைந்தபோது  ஏற்றுமதி  உடனே  உயர்ந்தது  என்று …

சீனர்களைப் பலிகடா ஆக்குவதை நிறுத்துவீர்: மசீச இளைஞர் தலைவர் ஆவேசம்

மற்ற  கட்சிகளின்  தலைவர்கள்  வெளிநாட்டு உதவியை  நாடுகிறார்கள்,  வெளிநாடுகளின்  தலையீட்டை  விரும்புகிறார்கள்  ஆனால்,  சீன  மலேசியர்கள்  ஒருபோதும்  சீனாவின்  உதவியை  நாடியது  இல்லை  என  மசீச  இளைஞர்  தலைவர்  சோங்  சின்  வூன்  கூறினார். “மற்ற  கட்சித்  தலைவர்கள்  புகார்  செய்வதற்கு  வெளிநாடுகளுக்குச் செல்கிறார்கள். ஒரு  கட்சித்  தலைவர் …

பேரணி ஏற்பாட்டாளர்கள்மீது முரண்பாடான தீர்ப்பு: குழப்பத்தில் வழக்குரைஞர்கள்

நேற்று  முறையீட்டு  நீதிமன்றம்  ஆர்.யுனேஸ்வரனுக்கு  எதிராக  வழங்கிய  தீர்ப்பில்,  505 பேரணி  ஏற்பாட்டாளரான  அவருக்கு  அபராதம் விதிக்கப்பட்டது  சட்டப்படி சரியானதே  என்று  குறிப்பிட்டதை  அடுத்து  பெரிய  கேள்விக்குறி  ஒன்று  எழுந்துள்ளாது. ஒரே  நீதிமன்றம் ஒரே  மாதிரியான  வழக்குகளில்  முரண்படும் தீர்ப்புகளை வழங்கியிருப்பது  இனி  வரும்  அதேபோன்ற  வழக்குகளில்  தீர்ப்பு …

சைபுடின் கட்சி விலகக் கூட்டரசுப் பிரதேச அம்னோ இளைஞர்கள் கோரிக்கை

முன்னாள்  அம்னோ  உச்சமன்ற  உறுப்பினர்  சைபுடின்  அப்துல்லா  கட்சியிலிருந்து  விலக  வேண்டும்  என்று  கோரிக்கை  விடுவோருடன்  கூட்டரசுப்  பிரதேச  அம்னோ  இளைஞர்  தலைவர்  ரஸ்லான்  ரபியும்  சேர்ந்து  கொண்டிருக்கிறார். முன்னாள்  தெமர்லோ  எம்பி-ஆன  சைபுடின்  அம்னோவில்  தொடர்ந்திருக்க  விரும்பவில்லை  என்பது  தெளிவாக  தெரிகிறது  என  ரஸ்லான்  மலேசியாகினியிடம்  தெரிவித்தார்.…

சீனரை “அறைவேன்” என்றதற்காக தஜுடின் மன்னிப்பு கோர வேண்டும், மசீச

அந்நியரிடம் புகார் செய்யும் எந்த ஒரு சீனரையும் "அறைவேன்" என்று துணை அமைச்சர் தஜுடின் அப்துல் ரஹ்மான் விடுத்திருந்த எச்சரிக்கை "அதிர்ச்சி அளிக்கிறது. அதற்காக அவர் மன்னிப்பு கோர வேண்டும் என்று மசீச செனட்டர் கோ சின் ஹான் கூறினார். மலேசியாவுக்கான சீனாவின் தூதர் ஹுவாங் ஹுய்காங் தெரிவித்திருந்த…

சைபுடின்: இன அரசியலை உதறித்தள்ள மக்கள் தயார்; தலைவர்கள் தயாராக…

மக்கள் அரசியலில்  முதிர்ச்சி  அடைந்திருக்கிறார்கள், அனைவரையும்  அரவணைத்துச்  செல்லவும்  , பல்லின  அரசியல்  அணுகுமுறையைக்  கடைப்பிடிக்கவும் ஆயத்தமாக  இருக்கிறார்கள்  என்கிறார்  முன்னாள்  துணை  அமைச்சர்  சைபுடின்  அப்துல்லா. ஆனால், உயர்  தலைவர்கள்தான்  மக்கள்  இன அரசியலை விட்டு  விலகிச்  செல்ல  இன்னும்  தயாராக  இல்லை  என்று  கூறிக்  கொண்டிருக்கிறார்கள்.…

எதிரணிக்கே போய் விடுங்கள் : சைபுடினைக் கடிந்து கொண்டார் தெங்கு…

எதிரணியினர்  நிகழ்வில் கலந்து  கொள்வதில் இன்பம்  காணும்   சைபுடின்  அப்துல்லா  அவர்களோடு  சேர்ந்து  கொள்வதே  நல்லது  என்று  கூறினார்  அம்னோ  தலைமைச்  செயலாளர்  தெங்கு  அட்னான்  தெங்கு  மன்சூர். அந்த  முன்னாள்  துணை  அமைச்சர்  உள்ளுக்குள்  இருந்து  கொண்டே  பகைமை  பாராட்டக் கூடாது  என்றும்  தெங்கு  அட்னான் எச்சரித்தார்.…

ஜாஹிட்: மகனின் திருமண உபசரிப்புக்கு நான் ஒரு காசும் செலவிடவில்லை

இந்தோனேசியாவில்  நடைபெற்ற  தம்  மகனின்  திருமணத்துக்கு ஒரு  காசுகூட  செலவு  செய்யவில்லை  என்கிறார்  துணைப்  பிரதமர் அஹ்மட்  ஜாஹிட்  ஹமிடி. எல்லாவற்றையும்  மகனின்  மாமனார்  பார்த்துக்  கொண்டாராம். ஜாஹிட்டின்  இந்தோனேசியப்  பயணம்  குறித்து  தம்  வலைப்பக்கத்தில்  கேள்வி  எழுப்பியிருந்த அம்னோ  வலைப்பதிவர்  ஷாபுடின்  உசேனுக்கு  அவர்  இவ்வாறு  பதிலளித்தார்.…

பங்: கேள்வி நேரத்தைக் கையாள்வது பிரதமருக்குக் கை வந்த கலை

‘பிரதமருடன்  கேள்வி  நேரம்’  என்பது  எதிரணியினருக்கு  ஒரு  வரப்  பிரசாதமாக  இருக்கும்.  அவர்கள்  கேள்விக்  கணைகளால்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கைத்  திக்குமுக்காட வைத்து  விடுவார்கள்  என்று  சிலர்  நினைக்கலாம். ஆனால்,  கினாபாத்தாங்கான்  எம்பி மொக்தார்  ரடின்  அப்படி  நினைக்கவில்லை. “அதை எண்ணி  நாங்கள்  கவலைப்படவில்லை. எப்படி  பதிலளிப்பது …

‘பெண்டாட்டாங்’ என்று கூறுவோரைச் சாடினார் வரலாற்றாசிரியர் கூ கே கிம்

வரலாற்றாசிரியரான  கூ  கே  கிம்,  ‘பெண்டாட்டாங்’ அல்லது  குடியேறிகள்  என்று  அழைப்போரைக்  கடுமையாக  சாடினார். சக  குடிமக்களைக்  குடியேறி  வந்தவர்கள்  என்று  அழைப்பது  மக்களை ஒன்றுபடுத்தும்  முயற்சியைத்  தோற்கடித்து  விடுகிறது  என்றாரவர். “குடியேறி  என்பது  ஒரு  சொல். இன்னொரு  நாட்டிலிருந்து  இங்கு  வந்திருப்பவர்கள்  குடியேறிகள்தாம். “ஆனால், நீண்ட  காலம் …

எரிபொருள் விலை இன்று நள்ளிரவிலிருந்து 10 சென் உயர்கிறது

  இன்று நள்ளிரவிலிருந்து பெட்ரோல் மற்றும் டீசல் ஒரு லீட்டருக்கு 10 சென் விலை ஏற்றம் காண்கிறது. கிடைத்தத் தகவல்படி, ஒரு லீட்டர் ரோன் 95 இன் புதிய விலை ரிம2.05; ரோன் 97 இன் விலை ரிம2.45. டீசலின் விலை தற்போதைய ஒரு லீட்டர் விலை ரிம1.80…

1எம்டிபி கடனை வைத்து 1.7மில்லியன் மாணவர்களின் பிடிபிடிஎன் கடன்களைத் திருப்பிச்…

பாண்டான் எம்பி-யும்  பிகேஆர்  உதவித்  தலைவருமான  ரபிஸி  ரம்லி,  1எம்டிபி-இன்  கடன்களைக்  கொண்டு  1.7 மில்லியன்  மாணவர்கள்  உயர்க் கல்விக்  கடனுதவி  நிறுவனத்திடம்  பெற்ற கல்விக் கடன் தொகைகளைத்  திருப்பிச்  செலுத்தி  விடலாம்  என்றார். 2015 மார்ச்  31வரை  பிடிபிடி- என்னிடமிருந்து 1,716,475  மாணவர்கள்  கல்விக்காக   பெற்றுள்ள கடன்…

முகைதின் பதவி நீக்கத்தை அம்னோ அடிநிலை உறுப்பினர்கள் ஏற்கவில்லை

முகைதின்  யாசின்  துணைப்  பிரதமர்  பதவியிலிருந்து  அகற்றப்பட்டது  ஒரு  விவேகமற்ற  நடவடிக்கை  என்றும்  அதை அம்னோ  அடிநிலை  உறுப்பினர்களால்  ஏற்றுக்கொள்ள  முடியவில்லை  என்றும்  அம்னோ  கிளைத்  தலைவர்  ஒருவர்  சொன்னார். முகைதினை  நீக்கும்  முடிவானது  கட்சியைப்  பிளவுபடுத்தும்  ஒன்றாகத்தான்  கருதப்படுகிறது  என  புசாட்  பண்டார்  தாமான்  செம்பாகா  அம்னோ …

அமெரிக்க டாலருக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பை நிர்ணயம் செய்ய வேண்டியதில்லை

அமெரிக்க  டாலருக்கு  இவ்வளவுதான்  ரிங்கிட்  என நிர்ணயம்  செய்வது  அவசியமற்றது  என  பேங்க்   நெகாரா  கவர்னர்  ஸெட்டி  அக்தார்  அசீஸ்  கூறினார். டாலருக்கு  எதிராக  ரிங்கிட்டின்  மதிப்பு  மிக  மோசமாக  சரிந்து  வரும்  வேளையில்  அவர்  இவ்வாறு  கூறியுள்ளார். கோலாலும்பூரில்,  மலேசியா-ஓஇசிடி உயர்-நிலை கருத்தரங்கில்  உரையாற்றியபோது  ஸெட்டி  இதனைத் …

காஜாங் பேரணி என்பது உண்மை நிலவரங்களிலிருந்து கவனத்தைத் திசைதிருப்பும் தந்திரமாகும்

மலாய்  என்ஜிஓ  தலைவர்  ஜமால்  முகம்மட்  யூனுஸ்  காஜாங்கில்  கண்டனப்  பேரணி  நடத்துவது  ஒரு  வேண்டாத  வேலை  என்று  கூறிய  அத்தொகுதியின்  சட்டமன்ற  உறுப்பினர்  டாக்டர்  வான்  அசிசா  வான்  இஸ்மாயில் அப்பேரணி கவனத்தைத்  திசை திருப்பும்  ஒரு  தந்திரம்  என்றார். அதனால்  எந்தப்  பயனுமில்லை, நாட்டை  எதிரநோக்கும் …

மகாதிர்: நஜிப் அயல்நாடுகளில் பத்திரமாக இருப்பார்; அனைத்துலகச் சட்டங்கள் அவரைத்…

பிரதமர் நஜிப்  அப்துல்  ரசாக்  வெளிநாடுகளில்  பயணம்  செய்யும்போது  அந்நாடுகள் அவர்மீது  நடவடிக்கை  எடுப்பதற்கு  வாய்ப்பில்லை  என்று  முன்னாள்  பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகம்மட்  கூறினார். பணச் சலவைக்கு  எதிரான  நடவடிக்கை  என்பது  “சாமானிய  மக்கள்” மீதுதான்  எடுக்கப்படும்  என்றாரவர். “நான்  பணச் சலவையில்  ஈடுபட்டால்  கைது  செய்யப்படலாம்.…

லியோங் சிக் பாசிர் கூடாங் மசீச இளைஞர்களின் நிலைப்பாட்டை ஆதரிக்கிறார்

பிரதமர் நஜிப்புடனான உறவை முறித்துக் கொண்டுள்ள பாசிர் கூடாங் மசீச இளைஞர்களின் உணர்வைத் தம்மால் புரிந்து கொள்ள முடிகிறது என்று மசீசவின் முன்னாள் தலைவர் லிங் லியோங் சிக் இன்று கூறினார். தாம் இளைஞராக இருந்தால் அதைத்தான் செய்திருப்பேன் என்றாரவர். பல்வேறான பிரச்சனைகளுக்கு நஜிப் முறையான விளக்கங்கள் அளிக்கவில்லை…

கீர் தோயோவுக்கு 12-மாதச் சிறை

கூட்டரசு நீதிமன்றம்,  முன்னாள்  சிலாங்கூர்  மந்திரி  புசார்  டாக்டர்  முகம்மட்  கீர்  தோயோ  அவரது  ஊழல் வழக்குத்  தீர்ப்புக்கு  எதிராக செய்திருந்த  மேல்முறையீட்டைத் தள்ளுபடி  செய்து  அவருக்கு  ஒராண்டுச்  சிறைத் தண்டனை  விதித்தது. சிறைத்  தண்டனைக்குப்  பதிலாக  அந்த  50-வயது  பல்  மருத்துவர்  இலவச  பல் சிகிச்சை  அளிப்பதன்வழி …

துணைப் பிரதமரின் புதல்வி முன்பு ‘தெருப் போராளி’, இப்போது இல்லை

நுருல்ஹிடயா  அஹ்மட்  ஜாஹிட், துணைப்  பிரதமர்  அஹ்மட் ஜாஹிட்  ஹமிடியின்  மூத்த  புதல்வி. 1998-இல்  அன்வார்  இப்ராகிம் துணைப்  பிரதமர்  பதவியிலிருந்து   நீக்கப்பட்டபோது  அவருக்கு  ஆதரவாக  தெரு  ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டவர்  நுருல்ஹிதயா. அப்போது, அஹ்மட்  ஜாஹிட்  அம்னோ  இளைஞர்   பகுதித்  தலைவர். அவர்  அன்வாரின்  வலது  கையாக  இருந்து …