பெர்சத்து நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் கூற்றுப்படி, எதிர்க்கட்சித் தலைவராக ஹம்சா சைனுதீன் தொடர்ந்து நீடிக்கவே 69 எதிர்க்கட்சி எம்பிக்களில் பெரும்பாலானோர் விரும்புகின்றனர். இது குறித்து தானா மேரா எம்பி இக்மல் ஹிஷாம் அப்துல் அஜீஸ் கூறுகையில், "கடந்த மாதம் பெரிக்காத்தான் நேஷனல் (PN) கூட்டணியின் தலைமைப் பொறுப்பை பாஸ் கட்சி ஏற்ற போதிலும், 43…
நஜிப்பை மாற்ற- ‘முகைதின் அல்லது தெங்கு ரசாலி முன்னெடுப்புகளை மேற்கொள்ள…
ஒரு மாற்றத்தைக் கொண்டுவர வேண்டுமானால், முன்னாள் துணைப் பிரதமர் முகைதின் யாசினோ அம்னோ மூத்த தலைவர் தெங்கு ரசாலியோ வெளிப்படையாக பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கை எதிர்க்க வேண்டும் என ஆய்வாளர் ஒருவர் கூறினார். இதை விட்டால் வேறு வழியில்லை என்று ஐடியாஸ் நிர்வாக வான் சைபுல் வான்…
சாலைக் கட்டணம் உயர்கிறது
வியாழக்கிழமை (அக்டோபர் 15) தொடங்கி சாலைக் கட்டணங்கள் உயர்கின்றன. சாலைக் கட்டண உயர்வு வருமாறு, வாகனங்களின் வகைக்கேற்ப கட்டணங்கள் மாறுபடும்: - கோலாலும்பூர்- காராக் (கேஎல்கே) நெடுஞ்சாலை: 30 சென்னிலிருந்து ரிம3 வரை; -மாஜு விரைவுச் சாலை (எம்இஎக்ஸ்): 20 சென்னிலிருந்து ரிம 3 வரை; -காஜாங்- சில்க் …
ஒங்: மசீச பிஎன்னில் இருப்பதா வேண்டாமா என்று கருத்துக் கணிப்பு…
முன்னாள் மசீச தலைவர் ஒங் தி கியாட், இத்தனை நடந்த பின்னரும் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்குக்கு ஆதரவு தெரிவித்துக் கொண்டிருக்கும் மசீசவின் நிலை கண்டு ஏமாற்றமடைவதாகக் கூறினார். நாட்டு நடப்பின்மீது மசீச அடிநிலை உறுப்பினர்களும் சீனர் சமூகமும் அதிருப்தி கொண்டிருப்பதாக அவ்ர் சொன்னார். “என்னுடைய கருத்தைக் கேட்டால்…
நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு மக்களவைத் தலைவர் தடையாக இருப்பார்
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்குக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு மக்களவைத் தலைவர் பண்டிகார் அமின் மூலியாதான் முதல் தடங்கலாக இருப்பார் என்கிறார் குவா மூசாங் எம்பி தெங்கு ரசாலி ஹம்சா. பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர எம்பிகளுக்கு உரிமை உண்டு. ஆனால் பண்டிகார் அதைத் தடுக்கக் கூடும் …
‘துணிச்சல் இருந்தால் என்னை அறையுங்கள்’- தாஜுடினுக்கு டிஏபி எம்பி சவால்
அடுத்த வாரம் நாடாளுமன்றம் தொடங்கும்போது முதல் நாளே தம்மை வந்து அறையட்டும் என டிஏபி செகாம்புட் எம்பி லிம் லிப் எங் துணை அமைச்சர் தாஜுடின் அப்துல் ரஹ்மானுக்குச் சவால் விடுத்துள்ளார். இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் லிம் விவசாயம், விவசாயம் சார்ந்த தொழில் துணை அமைச்சருக்கு இச்சவாலை …
நீதிபதிகள் அரசியலமைப்புக்கு முன்னுரிமை தர வேண்டும்: கெராக்கான் வலியுறுத்து
சமயம் சம்பந்தப்பட்ட வழக்குகளில் தீர்ப்பளிக்கும்போது நீதிபதிகள் அரசியலமைப்புக்கு முன்னுரிமை கொடுப்பதில்லை என கெராக்கான் கவலை தெரிவித்தது. “அண்மைக் காலமாக அளிக்கப்பட்ட நீதிமன்றத் தீர்ப்புகள் சமய விவகாரம் சம்பந்தப்பட்ட வழக்குகளில் தீர்ப்பளிக்கும்போது நீதிபதிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் நடந்து கொள்வதையும் நாட்டின் உச்ச சட்டத்துக்கு அதாவது கூட்டரசு அரசமைப்புக்கு முன்னுரிமை கொடுக்காமல்…
நஜிப்பை எதிர்ப்போம், கைருடின், சாங் சூளுரை
முன்னாள் அம்னோ தலைவர் கைருடின் அபு ஹாசானும் அவரின் வழக்குரைஞர் மத்தியாஸ் சாங்கும் இறுதிவரை பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கை எதிர்க்கப் போவதாக சூளுரைத்தனர். அவ்விருவர்மீதும் இன்று கோலாலும்பூர் மெஜிஸ்திரேட் நீதிமன்றம் ஒன்றில் நாட்டின் வங்கி, நிதியியல் சேவைகளைக் கீழறுப்புச் செய்ய முயன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டது. லாக்-அப் உடை …
கைருடின், சாங்மீது நாட்டின் வங்கித் தொழிலைக் ‘கீழறுப்பு’ச் செய்ததாகக் குற்றச்சாட்டு
முன்னாள் அம்னோ தலைவர் கைருடின் அபு ஹாசானும் அவரின் வழக்குரைஞர் மத்தியாஸ் சாங்கும் நாட்டின் வங்கி, நிதியியல் சேவைகளைக் கீழறுப்புச் செய்ய முயன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவ்விருவர்மீதும் குற்றவியல் சட்டம் பகுதி 124 மற்றும் பகுதி 34-இன்கீழ் கூட்டாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பிரான்ஸ், இங்கிலாந்து, சுவிட்சர்லாந்து, ஹாங்காங், சிங்கப்பூர் …
லிங் விவகாரத்தில் நஜிப்பின் உத்தரவுக்காகக் காத்திருக்கிறார் வழக்குரைஞர்
முன்னாள் மசீச தலைவர் லிங் லியோங் சிக் மன்னிப்பு கேட்பதற்கில்லை என்று கூறி விட்டதால் அவருக்கு எதிராக அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ள பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் உத்தரவுக்காகக் காத்திருப்பதாக வழக்குரைஞர் முகம்மட் ஹபாரிஸாம் ஹருன் கூறினார். மன்னிப்பு கேட்பதற்கு லிங்குக்குக் கொடுக்கப்பட்ட 7-நாள் கெடு இன்றுடன் …
பிகேஆர்: பிரதமரின் பதவிக்கு ஆபத்து அதுதான் சோஸ்மா கைதுகளுக்குக் காரணம்
முன்னாள் அம்னோ தலைவர் கைருடின் அபு ஹசானும் அவரின் வழக்குரைஞர் மத்தியாஸ் சாங்கும் பாதுகாப்புக் குற்றச் சட்ட(சோஸ்மா)த்தின்கீழ் கைது செய்யப்பட்டதற்கு பிரதமரின் பதவி “பாதுகாப்பாக இல்லை” என்பதுதான் காரணம் என பிகேஆர் உதவித் தலைவர் தியான் சுவா கூறினார். நேற்று தொடர்பு, பல்லூடக அமைச்சர் அமைச்சர் சாலே சைட் …
சீனப் பள்ளிகள் தொடர்ந்து இருக்கும்: நஜிப் உத்தரவாதம்
செப்டம்பர் 16 ‘சிகப்புச் சட்டை’ப் பேரணியில் சீனமொழிப் பள்ளிகள் ஒழிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கைகள் விடப்பட்டன என்றாலும் அப்பள்ளிகள் அகற்றப்பட மாட்டா எனப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் உறுதி கூறினார். “அது பிஎன்னின் கொள்கை அல்ல”, என்று நஜிப் மசீச ஆண்டுக் கூட்டத்தில் கூறியதைப் பேராளர்கள் பலத்த …
இன உணர்வுகள் அபாய எல்லைக்குச் சென்றுள்ளதை பிரதமரிடம் எடுத்துரைத்தார் மசீச…
மசீச தலைவர் லியோ தியோங் லாய், பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கலந்துகொண்ட மசீச ஆண்டுக் கூட்டத்தில் நாட்டில் இனங்களுக்கிடையில் பதற்றம் மிகுந்து வருவது குறித்து கவலை தெரிவித்தார். “நம் நாடு மிரட்டலுக்கு உள்ளாகியிருக்கிறது”,என்றாரவர். இனங்களுக்கிடையில் நிலவும் பதற்றநிலையால் இன உணர்வுகள் அபாய எல்லைக்குச் சென்றுள்ளதாகவும் அது நாட்டுக்கு …
ரபிஸி பணி நீக்கம் என்பதை அஸ்மின் மறுக்கிறார்
ரபிஸி ரம்லியை பிகேஆர் தலைமைச் செயலாளர் பதவியிலிருந்து தூக்குவதற்கு முயற்சிகள் நடைபெறுவதாகக் கூறப்படுவதை பிகேஆர் துணைத் தலைவர் முகம்மட் அஸ்மின் மறுத்தார். கட்சிக்குள் உள்சண்டை கிடையாது என்றும் அது நாளுக்கு நாள் வலுவடைந்து வருகிறது என்றும் அவர் சொன்னார். ரபிஸி பற்றித் தேவையற்ற ஊகங்கள் தெரிவிப்பதை அனைத்துத் தரப்பினரும் …
நஜிப் ஏழு நாள்களுக்குப் பிறகு லிங்-மீது வழக்கு தொடுப்பது பற்றி…
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் வழக்குரைஞர் முகம்மட் ஹவாரிஸாம் ஹருன், ஏழுநாள் அவகாசம் முடிவடைவதற்காகக் காத்திருப்பதாகவும் அதன் பின்னர் டாக்டர் லிங் லியோங் சிக்மீது அவதூறு வழக்கு தொடுப்பது பற்றி முடிவெடுக்கப்படும் என்றும் சொன்னார். “ஏழு நாள்கள் முடிவடைவதற்குக் காத்திருப்பதுதான் முறையாகும்”, என்றாரவர். “அவரோ அவரின் வழக்குரைஞர்களோ இதுவரை …
ஜமால்: சுல்தான்களின் அறிக்கை எதிரணியினருக்கு எதிராக வெளியிடப்பட்டது
இன உணர்வுகளைத் தூண்டிவிட்டு அரசியல் ஆதாயம் தேடுவதைக் கண்டிக்கும் சுல்தான்களின் அறிக்கை எதிரணியினரைக் கருத்தில் கொண்டு வெளியிடப்பட்டிருக்கிறது என ‘சிகப்பு இயக்க’ப் பேச்சாளர் ஜமால் முகம்மட் யூனுஸ் இன்று கூறினார். மலேசியாகினியிடம் பேசிய ஜமால், ஆட்சியாளர் மன்றத்தின் அறிக்கையை ‘சமுதாய ஒப்பந்தத்தை’யும் மலாய்க்காரர் சிறப்புரிமைகளையும் எதிர்ப்போருக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை …
ஓராங் அஸ்லி சிறார்களைக் கண்டுபிடிக்க அமைச்சு எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டது
காணாமல்போன ஏழு ஓராங் அஸ்லி பிள்ளைகளையும் கண்டுபிடிக்க அதிகாரிகள் எல்லா வகையிலும் முயன்றதாக மகளிர், குடும்ப, சமூக மேம்பாட்டு துணை அமைச்சர் அசிசா முகம்மட் டுன் கூறினார். “அந்த எழுவரையும் தேடுவதை அதிகாரிகள் நிறுத்தவே இல்லை. “சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அனைவருமே களத்தில் இறங்கி அவர்களைத் தேடினார்கள். அந்த வகையில் …
ஹுசாம்: சாகும்வரை பாஸ் கட்சிதான்
அவரின் சகாக்களில் சிலர் பாஸிலிருந்து விலகி புதுக் கட்சி அமைத்துக் கொண்டார்கள் என்றாலும் அக்கட்சியின் முன்னாள் உதவித் தலைவர் ஹுசாம் மூசா சாகும்வரை பாஸ்தான் என்று சூளுரைத்துள்ளார். அவரைப் பற்றிப் பலவாறு குறைகூறப்பட்டிருக்கலாம் பல ஊகங்கள் தெரிவிக்கப்பட்டிருக்கலாம் ஆனாலும் அவர் இன்னமும் பாஸின் விசுவாசமிக்க உறுப்பினராகத்தான் இருக்கிறார். “முடிந்தால் …
மாத்தியாஸ் சாங்கிற்காக வழக்குரைஞர்கள் டாங் வாங்கியில் கூடுகின்றனர்
கைது செய்யப்பட்டுள்ள வழக்குரைஞர் மாத்தியாஸ் சாங்கிற்கு தங்களுடைய ஒருமைப்பாட்டை வெளிப்படுத்த மெழுகுவர்த்தி விழிப்பு நிலை நடவடிக்கையில் பங்கேற்க வழக்குரைஞர்களை மலேசிய வழக்குரைஞர்கள் மன்றம் அழைத்துள்ளது. "மாத்தியாஸ் சாங்கிற்காகவும் வழக்குரைஞர் மன்றத்தின் சுதந்திரத்தை நிலைநிறுத்துவதற்காகவும் மலேசிய வழக்குரைஞர் மன்றம் இன்றிரவு மணி 8.30 க்கு டாங் வாங்கி நிலையத்திற்கு வெளியில்…
நஜிப் ஒரு கோழை, மாத்தியாஸ் சாடினார்
பிரதமர் நஜிப்பும் அவரது சகாக்களும் "கோழைகள்" என்று காவலில் வைக்கப்பட்டிருக்கும் வழக்குரைஞர் மாத்தியாஸ் சாங் வர்ணித்தார். தாம் கைது செய்திருப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்க அவர் உண்ணாவிரதத்தையும் தொடங்கினார். "நான் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டிருப்பது பிரதமர் மற்றும் அவரது நெருங்கிய நண்பர்கள், அவருக்கு விசுவாசமான ஆனால் விவேகமற்ற அம்னோ…
இனவாதப் பேரணிகளுக்கு இனி இடமில்லை: அரசாங்கம் எச்சரிக்கை
இனவாத ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதை நிறுத்த வேண்டும் என உள்துறை துணை அமைச்சர் நூர் ஜஸ்லான் முகம்மட் வலியுறுத்தினார். “இப்படிப்பட்ட பேரணிகளால் நிலைமை மோசமாகிறது, பொது அமைதியும் கெடுகிறது. “இது நாட்டுக்கும் நல்லதல்ல”, என பூலாய் எம்பியுமான நூர் ஜஸ்லான் கூறினார். “பொது அமைதிதான் பொருளாதார வளத்துக்கும் இன நல்லுறவுக்கும் …
எம்ஏசிசிமீது மக்களின் நம்பிக்கை பெருக வேண்டும்
பொதுமக்களின் நம்பிக்கையை மேலோங்கச் செய்யும் முயற்சிகளை மலேசிய ஊழல்தடுப்பு ஆணையம் முடுக்கி விட வேண்டும் அதன் துணைத் தலைமை ஆணையர் ஜக்கரியா ஜப்பார் வலியுறுத்தினார். 2009-இல் எம்ஏசிசி தொடங்கப்பட்ட முதலாமாண்டில் அது 39 விழுக்காட்டு நம்பிக்கையைப் பெற்றிருந்தது என்றாரவர். “நாங்கள் மக்களின் நம்பிக்கையைப் பெறுவதற்காக அயராது பாடுபட்டு கடந்த …
ஓராங் அஸ்லி சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது
நேற்றிரவு குவா மூசாங் அருகில் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட உடல் கடந்த மாதம் காணாமல்போன ஏழு ஒராங் அஸ்லி சிறார்களில் ஒருவருடையது. அது எட்டு வயது சாசா சொப்ரியின் உடல் என்ப்பதை அவரின் உறவினர் அடையாளம் காட்டியதாக த ஸ்டார் கூறிற்று. அந்த உடல் சாசா சொப்ரியின் பள்ளியின்…
ஹிஷாம்: ஆட்சியாளர்கள் சொல்லாததைச் சொன்னதாகக் கூறாதீர்
1எம்டிபி மீது ஆட்சியாளர் மன்றம் அறிக்கை வெளியிட்டிருப்பதை வைத்து அவர்களுக்கு பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் மீதிருந்த நம்பிக்கை போய்விட்டது என்று கூறப்படுவதைத் தற்காப்பு அமைச்சர் ஹிஷாமுடின் உசேன் மறுத்தார். “அது (நஜிப்பிடம் ஆட்சியாளர்கள் நம்பிக்கை இழ்ந்தனர் என்று கூறுவது) பொறுப்பற்ற பேச்சு. “அது நியாயமல்ல. ஆட்சியாளர்களுக்குப் பிரதமர்மீது …


