நாடாளுமன்ற ஒருங்கிணைப்பாளர்களுக்கு சம்பளம் மக்களின் வரிப்பணத்திலிருந்து

பினாங்கில் பிஎன் தோற்ற தொகுதிகளில் செயல்படும் தேர்ந்தெடுக்கப்படாத நாடாளுமன்ற ஒருங்கிணைப்பாளர்களுக்குச் சம்பளம் அரசாங்கக் கருவூலத்திலிருந்து கொடுக்கப்படுகிறது. நாடாளுமன்றத்தில் பிரதமர்துறை அமைச்சர் ஷஹிடான் காசிம் அவர்களுக்கு ரிம5,860, சட்டமன்ற ஒருங்கிணைப்பாளர்களுக்கு ரிம3,630 மாதச் சம்பளமாக வழங்கப்படுகிறது என்றார்.  பாயான் பாரு எம்பி, சிம் ட்சே ட்சின் கேட்ட கேள்விக்கு அமைச்சர்…

சண்முகசிவா: “மருந்திலிருந்தும்…மனத்திலிருந்தும்…” நூல் வெளியீடு

மருத்துவர் மா. சண்முகசிவா எழுதியுள்ள “மருந்திலிருந்தும்…மனதிலிருந்தும்…” என்ற நூல் மைஸ்கீல்ஸ் அறவாரியத்தின் ஏற்பாட்டில் கோலாலம்பூர், பிரிக்பீல்ட்ஸில் வெளியீடு காண்கிறது. எதிர்வரும் சனிக்கிழமை மாலை நடைபெறும் இந்நூல் வெளியீட்டு நிகழ்ச்சியில் தமிழ் அறவாரியம் ஆலோசகர் மற்றும் சுவாராம் என்ற மனித உரிமைக் கழகத்தின் தலைவர் கா. ஆறுமுகம் நூல் ஆசிரியர்…

இசி சுதந்திரமாக செயல்படுவதை நாடாளுமன்றம் உறுதிப்படுத்த வேண்டும்

தேர்தல் ஆணைய  (இசி)த்தின்  சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதற்கு,  குறிப்பாக அது  தேர்தல் தொகுதி எல்லைகளைத் திருத்தி  அமைப்பதிலும் தேர்தல்களை நடத்துவதிலும்  சுதந்திரமாக செயல்படுவதை  உறுதிப்படுத்த  அரசமைப்பு, சட்ட வழிகாட்டல்கள்  உருவாக்கப்பட வேண்டும்.  அதை விவாதிக்க சிறப்பு நாடாளுமன்றக் கூட்டம் கூட்டப்பட வேண்டும்  என மனித உரிமை மேம்பாட்டுச் சங்கம் (புரொஹெம்)…

அன்வார்: சிலாங்கூர் சட்டமன்ற உறுப்பினர் சம்பள உயர்வு அதிகம்தான்

சிலாங்கூர் சட்டமன்ற உறுப்பினர்களின்  சம்பள உயர்வு  “கூடுதலான ஒன்றுதான்”  என மாற்றரசுக் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் கூறினார். சரவாக் மாநில அரசை  முன்மாதிரியாகக் காட்டி அச்செயலை,   நியாயப்படுத்த முடியாது என நாடாளுமன்றத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறினார். “எதிர்பார்க்கப்பட்டதைவிட இது அதிகம்தான்”,  என்று குறிப்பிட்ட  அன்வார் , சம்பளம்  இந்த…

முகைதின் வாக்குறுதி அளித்த ரிம2.5 மில்லியனைத் தமிழ்ப் பள்ளிக்குக் கொடுக்க…

மூன்றாண்டுகளுக்குமுன் பேராக்கில் குனோங் ரபாட் தமிழ்ப்பள்ளியின் கட்டுமானத்துக்கு  ரிம2.5மில்லியன் ஒதுக்கீடு செய்வதாக அளித்த வாக்குறுதியைத் துணைப் பிரதமர் முகைதின் நிறைவேற்ற வேண்டும் என டிஏபி எம்பிகள் இருவர் வலியுறுத்தினார்கள். மூன்றாண்டுகளுக்கு முன்னர்,  அப்பள்ளி  அதன் விரிவாக்கத்துக்காக 2.4 ஏக்கர் நிலத்தைப் பெற்ற பிறகு, ஈப்போவில் ஒரு கூட்டத்தில்  பேசிய…

சொத்து மதிப்பீட்டு வரி உயர்வு தள்ளிவைக்கப்படாது- தெங்கு அட்னான் திட்டவட்டம்

கேஎல் சொத்து மதிப்பீட்டு வரி உயர்வு 2014 ஜனவரியில்  அமலாக்கப்படும், அது தள்ளிவைக்கப்படாது எனக் கூட்டரசுப் பிரதேச அமைச்சர் தெங்கு அட்னான் தெங்கு மன்சூர் கூறுகிறார். ஆனால், வரிசெலுத்துவோர் உடனடியாக அதைச் செலுத்த வேண்டியதில்லை. மார்ச் மாதம்வரை அவர்கள் காத்திருக்கலாம். அதற்கிடையில் குடியிருப்பாளர்களுடன் கலந்துரையாடல் நடத்தப்படும் என்று அமைச்சர்…

கேஎல் சொத்து மதிப்பீட்டு வரி உயர்வை எதிர்த்து டிசம்பர் 16-இல்…

கூட்டரசுத் தலைநகரின் பக்காத்தான் ரக்யாட் எம்பி-கள், கோலாலும்பூர் மாநகராட்சி மன்ற (டிபிகேஎல்) தலைமைகத்துக்கு எதிரில் டிசம்பர் 16-இல்  மாபெரும் கண்டனக் கூட்டத்தை நடத்துவர். அக்கூட்டத்தில்  கோலாலும்பூர் குடியிருப்பாளர்களிடம் சொத்து மதிப்பீட்டு வரி உயர்வுக்கு ஆட்சேபணை தெரிவிக்கும் கடிதங்களையும் அவர்கள் வழங்குவர். . சொத்துவரி உயர்வுக்கு ஆட்சேபணை தெரிவிப்பதற்கான இறுதி…

சிலாங்கூர் அரசுக்குச் சொந்த நலனில்தான் அதிக அக்கறை: சாடுகிறார் ஹிஷாம்

சிலாங்கூர்  பக்காத்தான் ரக்யாட்  அரசு மக்கள் நலனைவிட சொந்த நலனுக்கே  மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கிறது. அதைத்தான்  சிலாங்கூர் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு  அறிவிக்கப்பட்டுள்ள மிகப் பெரிய சம்பள உயர்வு காண்பிக்கிறது என  அம்னோ உதவித் தலைவர் ஹிஷாமுடின் உசேன் சாடினார். நகர்ப்புற வறுமை, வருமான ஏற்றதாழ்வு போன்ற விவகாரங்களை எதிர்த்துப்…

விருந்தில் @Kini கட்டிட நிதிக்கு ரிம10,000 திரட்டப்பட்டது

நேற்றிரவு பெட்டாலிங் ஜெயாவில் மலேசியாகினி கட்டிட நிதிக்காக  Chilli Rush உணவகத்தில் நடைபெற்ற விருந்துக்கு 50-க்கு மேற்பட்டோர் வந்திருந்தனர். விருந்தில் கடந்த ஆண்டு செய்திநாயகி என்று மலேசியாகினியால் தேர்ந்தெடுத்துப் பாராட்டப்பட்ட அம்பிகா ஸ்ரீநிவாசன்தான் முக்கிய பேச்சாளர். அவர், நாட்டின் மிகப் பெரிய  மக்கள்  இயக்கமாக விளங்கும் பெர்சே-க்கு மூன்றாண்டுக்…

கோயில் உடைப்பு விவகாரம்: இரு எம்பிக்கள் வெளியேற்றப்பட்டனர்

  நாடாளுமன்ற மக்களவைத் தலைவர் பண்டிகர் அமின் மூலியா கோலாலம்பூர், ஸ்ரீ மூனீஸ்வர் கோயில் பகுதி உடைக்கப்பட்ட விவகாரத்தை நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். சிவராசா எழுப்புவதிலிருந்து அவரை நிறுத்தியதோடு நாடாளுமன்ற நடவடிக்களைத் தாமதப்படுத்தியதற்காக அவரை அவையிலிருந்து வெளியேற்றினார். அடுத்து, வி.சிவகுமார் (டிஎபி-பத்துகாஜா) வெளியேற்றப்பட்டார். இக்கோயில் விவகாரத்தை எழுப்பக்கூடாது என்ற…

வேவுபார்த்த விவகாரத்தைவிடவும் கோமாங்கோ விவகாரம்தான் பிஎன்னுக்கு பெரிதாக போய்விட்டது

பிஎன் அரசு அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் ஆகியவை  கோலாலும்பூர் நடவடிக்கைகளை வேவுபார்த்ததாகக் கூறப்படுவது பற்றி அதிகம்  அலட்டிக்கொள்வதில்லை ; ஆனால், மலேசிய என்ஜிஓ கூட்டமைப்பு (கோமாங்கோ) ஐநா மனித உரிமைகள் மன்றத்தில்   கோரிக்கைகள் சமர்ப்பித்ததுதான் அதற்குப் பெரிதாக தெரிகிறது என  மாற்றரசுக் கட்சித் தலைவர் அன்வார்  இப்ராகிம் கூறினார்.…

கேஎல் சொத்து மதிப்பீட்டு வரி மார்ச் மாதத்துக்குத் தள்ளிவைப்பு

பெரும் சர்ச்சையை உண்டுபண்ணிய கோலாலும்பூர் சொத்து மதிப்பீட்டு வரி உயர்வு  இப்போது அமலுக்கு வராது.  அது அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குத்  தள்ளிபோடப்பட்டிருப்பதாக   கூட்டரசு பிரதேச துணை  அமைச்சர் லோக பால மோகன் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். அந்த வரி உயர்வு ஜனவரியில் அமல்படுத்தப்படும் என முதலில்…

சிலாங்கூர் மந்திரி புசார், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சம்பள உயர்வு

ஜனவரியிலிருந்து சிலாங்கூர் மந்திரி புசார், சட்டமன்ற உறுப்பினர்கள், சட்டமன்றத் தலைவர், துணைத் தலைவர் ஆகியோரின் சம்பளம் உயர்கிறது. இப்போதைய அவர்களின் சம்பளம் 87-இலிருந்து 373 விழுக்காடுவரை உயரும். சம்பள உயர்வுக்குச்  சட்டமன்றம் இன்று ஒப்புதல் அளித்தது. மிகப் பெரிய சம்பள உயர்வைப் பெறுபவர் சட்டமன்றத் துணைத் தலைவர். அவரது…

பிஏசி, பள்ளிக்கூட பாதுகாப்பு குளறுபடிகள் குறித்த விசாரணைக்குக் கல்வி அமைச்சர்களை…

பள்ளிப் பாதுகாப்பு தனியார்மயப்படுத்தப்பட்ட  விவகாரத்தில்  கல்வி அமைச்சின் தலைமைச் செயலாளர் அளித்த விளக்கம் “அவ்வளவாக திருப்தி அளிக்கவில்லை”  என்பதால்  பொதுகணக்குக் குழு (பிஏசி)  கல்வி அமைச்சர்கள் இருவரில் ஒருவரைச் சந்திக்க விரும்புகிறது. அவ்விவகாரத்தில்  குளறுபடிகள் நிகழ்ந்திருப்பதாக தலைமைக் கணக்காய்வாளர் அறிக்கையில் கூறப்பட்டிருப்பதால்,  அதைச் சரிப்படுத்துவதில் அமைச்சு உண்மையிலேயே அக்கறை…

கோமாங்கோவைக் கண்டிக்கும் பிஎன் தீர்மானம் மக்களவையில் நிராகரிப்பு

மலேசிய என்ஜிஓ-கள் கூட்டமைப்பு (Comango), ஐநா மனித உரிமை மன்றத்திடம் முன்வைத்த கோரிக்கைகளுக்காக அதைக் கண்டிக்கக் கொண்டுவரப்பட்ட ஒரு அவசரத் தீர்மானம் நாடாளுமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. அத்தீர்மானத்தைக் கொண்டுவந்த நோ ஒமார்(பிஎன் -தஞ்சோங் காராங்), கோமாங்கோவின் கோரிக்கைகள் இஸ்லாத்தின் புனிதத்தைக் கெடுப்பன என்றும் சமயத்துக்கும் பண்பாட்டுக்கும் உரிய இடத்தை…

மலேசியாகினி கட்டிட நிதி: பினாங்கு கெராக்கான் தலைவர் ஒரு கல்…

மலேசியாகினியின் கட்டிட நிதிக்கு உதவியாக பினாங்கு கெராக்கான் தலைவர் தெங் சாங் இயோ ரிம1,000 கொடுத்து ஒரு கல் வாங்கினார்.  அவரே கட்டிட நிதிக்குக் கொடை வழங்கிய  முதலாவது பிஎன் தலைவர் ஆவார். “மாட் சாபு அதற்குக் கொடை வழங்கினார் என்றால் அரசியல் நோக்கத்துடன் செய்தார். நான் பத்திரிகைச்…

இசி: தேர்தல் தொகுதிகள் திருத்தப்படுவது மலாய்க்காரர் அதிகாரத்தை நிலைநிறுத்துவதற்காக அல்ல

தேர்தல் ஆணையம்(இசி) விரைவில்  தொகுதிகளைத் திருத்தி அமைக்கும் நடவடிக்கையை மேற்கொள்ளவிருக்கிறது. ஆனால், அது மலாய்க்காரர் அரசியல் அதிகாரத்தைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் செய்யப்படாது என்று இசி தலைவர் அப்துல் அசீஸ் அப்துல் யூசுப் கூறுகிறார். அரசியலமைப்பைப் பின்பற்றி அந்நடவடிக்கை மேற்கொள்ளப்படும். “மலாய்க்காரர் அதிகாரத்தைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் இசி தேர்தல் தொகுதிகளைத்…

என்எப்சி மீதான அறிக்கையை பிஏசி டிசம்பர் 3-இல் சமர்ப்பிக்கும்

நேசனல் ஃபீட்லோட் செண்டர் (என்எப்சி) மீதான  பொதுக் கணக்குக் குழு(பிஏசி)-வின்  அறிக்கை ஒரு வாரம் தாமதித்து டிசம்பர் 3-இல் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். முந்தைய பிஏசி தயாரித்திருந்த அந்த அறிக்கையை  இப்போதைய பிஏசி கடந்த வாரம் ஏற்றுக்கொண்டது. அந்த அறிக்கை இன்று சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இன்று பிஏசி-இன் கூட்டத்துக்குப்…

கூ நான்: சொத்து மதிப்பீட்டு வரி உயர்வு குப்பை அகற்ற…

மாநகரில் சேரும் குப்பையை அள்ளும் செலவு கூடிக் கொண்டே போகிறது. அதுதான் கோலாலும்பூர் மாநகராட்சி மன்றம் (டிபிகேஎல்) சொத்து மதிப்பீட்டு வரியை உயர்த்த முக்கிய காரணம் என்று கூட்டரசு பிரதேச அமைச்சர் தெங்கு அட்னான் தெங்கு மன்சூர் கூறுகிறார். டிபிகேஎல் தலைமையகத்தில் செய்தியாளர்களீடம் பேசிய தெங்கு அட்னான், குப்பையின்…

பகாங் சட்டமன்றம் பிகேஆர் உறுப்பினரை இடைநீக்கம் செய்தது

பகாங் சட்டமன்றம், மாநில பட்ஜெட் உபரியைப் “பொய்” என்று கூறிய பிகேஆர் செமாம்பு சட்டமன்ற உறுப்பினர் லீ சியான் சுங்கை இரண்டு கூட்டங்களில் கலந்து கொள்வதினின்றும் தள்ளி வைத்தது. உரிமை, சலுகைக் குழுவில் தம்மைத் தற்காத்துக்கொள்ள வாய்ப்பு கொடுக்காமலேயே நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என லீ கூறினார். லீயை இடைநீக்கம்…

கிளந்தான் எம்பி பிரதமரைச் சந்தித்து ஹுடுட் பற்றி விவாதிப்பார்

கிளந்தான் மந்திரி புசார் அஹ்மட் யாக்கூப்பும் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கும் சந்திக்கும்போது ஹுடுட் அமலாக்கம் பற்றித்தான் கலந்துரையாடுவார்களே தவிர, பரவலாகக் கூறப்படுவதுபோல் மலாய் ஒற்றுமையைப் பற்றியல்ல. “மாநில அரசு ஹுடுட் சட்டத்தைச் செயல்படுத்த எண்ணம் கொண்டிருப்பதை அவருக்குத் தெரியப்படுத்துவோம்”, என்று அஹ்மட்  கூறியதாக நியு ஸ்ரேய்ட்ஸ் டைம்ஸ்…

கான் மசீச தலைவர் பதவிக்குப் போட்டியிட முடிவு

மசீச உதவித் தலைவர் கான் பிங் சியு-வும் தலைவர் பதவிக்குப் போட்டியிட முடிவு செய்துள்ளார். அவர், ஏற்கனவே போட்டியிடப்போவதாக அறிவித்துள்ள துணைத் தலைவர் லியோ தியோங் லாயையும் முன்னாள் தலைவர் ஒங் தி கியாட்டையும் எதிர்த்துக் களம் இறங்குகிறார். இன்று கோலாலும்பூரில் விஸ்மா மசீச-வில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில்…

ஜிஎஸ்டி நாட்டின் குறைதீர்க்கும் அற்புத மருந்தல்ல :நஜிப்புக்கு எம்பிகள் அறிவுறுத்தல்

பொருள், சேவை வரி(ஜிஎஸ்டி) என்பது நாட்டை நொடிப்பு நிலையினின்றும் காக்கும் அற்புத மருந்தல்ல என்பதைப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் உணர வேண்டும் என எதிரணி எம்பிகள் வலியுறுத்தியுள்ளனர். நாட்டின் நிதி நிலை வலுவாக உள்ளதா அல்லது நாடு நொடித்துப்போகும் நிலையில் உள்ளதா என்பதை நஜிப் உரைத்திட வேண்டும்…