ஆயர் போலீஸ் பாதுகாப்பை நாடுகிறார்

கடந்த  ஞாயிற்றுக்கிழமை  எந்த  தாமான்  மேடான்  தேவாலயத்தில்  சிலுவையை  அகற்றக்  கோரி  ஆர்ப்பாட்டம்  நடந்ததோ  அந்தத்  தேவாலயம்  போலீஸ்  பாதுகாப்பை  நாடுகிறது. தேவாலயம்  செய்த  போலீஸ்  புகாரில்  அதன்  ஆயர்,  தம்  பாதுகாப்பு  குறித்தும்  தேவாலயம்  வரும்  கூட்டத்தினரின்  பாதுகாப்பு  குறித்தும்  அஞ்சுவதாகக்  கூறினார். குறிப்பாக, ஆர்ப்பாட்டக்காரர்களில்  ஒருவரைச் …

‘இனவாத’ ஜிஎஸ்டி கருத்தரங்குக்கு எதிராக அம்னோ இளைஞர்கள் ஆர்ப்பாட்டம் செய்வர்

குளுவாங்கில்  இன்றிரவு டிஏபி  பிரதிநிதிகள் கலந்துகொள்ளும்  ஒரு  கருத்தரங்கம்  “இனவாதமிக்கது”  என்பதால்  அம்னோ  இளைஞர்கள்  அதை எதிர்த்து  ஆர்ப்பாட்டம்  செய்வர். பொருள்  சேவை  வரி  மற்றும்  இன  அரசியல்  மீதான  அக்கருத்தரங்கில்  செனாய்,  மெங்கிபோல்  சட்டமன்ற  உறுப்பினர்கள்  உள்பட  டிஏபி-இன்  நான்கு  பேச்சாளர்கள்  கலந்துகொள்கிறார்கள். “டிஏபி இன  அடிப்படையில்…

உறுப்பினர்கள் 55-இல் இபிஎப் பணத்தை மீட்டுக்கொள்ளலாம்: பிரதமர் உத்தரவாதம்

ஊழியர்  சேமநிதி  வாரிய(இபிஎப்)  உறுப்பினர்கள் 55வது  வயதில்  அவர்களின்  சேமிப்பை  மீட்டுக்கொள்ள  முடியும்  எனப்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  உததரவாதம்  அளிக்கிறார். “இபிஎப்  உறுப்பினர்கள் 55 வயதில் பணத்தை  மீட்டுக்கொள்ளும்   உரிமை  தக்க வைத்துக்கொள்ளப்படும்  என்று  உத்தரவாதம் அளிக்கிறேன்”, என  நஜிப்  இன்வெஸ்ட்  மலேசியா  2015  நிகழ்வில்…

பாடாங் புசார் மருத்துவமனை- நிறைவேற்றப்படாத இன்னொரு வாக்குறுதி

பாடாங் புசார்  மருத்துவமனை  திட்டத்தை  நிறுத்தி  வைக்கும்  முடிவு  அரசாங்கத்தின்  வாக்குறுதியை  நம்பிய  மக்களுக்குக்  கிடைத்த  மற்றுமொரு  ஏமாற்றமாகும்  என பெர்லிஸ்  பிகேஆர்  இளைஞர்  தலைவர் முகம்மட்  ஷாருன்  ரட்ஸி கூறினார். 2011-இல்  அறிவிக்கப்பட்ட  அத்திட்டத்தைப் பணப்பற்றாக்குறையால்   தள்ளிவைப்பதென  பொருளாதாரத்  திட்டமிடல்  பிரிவு முடிவு  செய்துள்ளது. “கூட்டரசு  அரசாங்கம் …

‘ஹுடுட்-எதிர்ப்பு வேட்பாளருக்கு வாக்களிப்பது பாவம்’ என்று பதிவிட்டவர்மீது பாஸ் இளைஞர்கள்…

பெர்மாத்தாங்  பாவ்  பாஸ்  தலைவர்  ஒருவர்  ஹுடுட்டை  எதிர்க்கும்  வேட்பாளர்களுக்கு  முச்லிம்கள்  வாக்களிக்கக்  கூடாது  என்று  பதிவிட்டிருப்பதைக்  கண்டு பாஸ்  இளைஞர்  பிரிவு  கொதிப்படைந்துள்ளது. அவ்வாறு  பதிவிட்ட  அத்தொகுதி  உலாமா விவகாரப்  பிரிவுத்  தலைவர்  பத்ருல்  அப்துல்  ரஹ்மான், அப்படிப்பட்ட  வேட்பாளர்களுக்கு  வாக்களிப்பது “ஹராமாகும்”  என்றார். அவருடைய  பதிவுக்கு …

54 ஜிஎஸ்டி- எதிர்ப்பாளர்கள் நாளை குற்றம் சாட்டப்படுவர்

கடந்த  மாதம் கிளானா  ஜெயா சுங்கத்  துறை  தலைமையகத்தில்  பொருள், சேவை  வரிக்கு  எதிராக  உள்ளிருப்புப்  போராட்டம்  நடத்தியபோது  கைதான சமூக  ஆர்வலர்களில்  54பேர்  அமைதிப்  பேரணிச்  சட்டத்தை  மீறியதற்காக  நாளை  நீதிமன்றத்தில்  நிறுத்தப்படுவர். உள்ளிருப்புப்  போராட்டத்தில்  ஈடுபட்டதற்காக ஏற்கனவே 25 பேர் -அவர்களில்  இருவர்  நாடாளுமன்ற  உறுப்பினர்கள்-…

ஐஜிபி-இன் சகோதரர் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருக்கிறார்

தாமான்  மேடானில்  சிலுவை- எதிர்ப்பு  ஆர்ப்பாட்டம்  நடத்தியதற்காக  அப்துல்லா  அபு  பக்கார், பெட்டாலிங்  ஜெயா போலீஸ்  மாவட்டத்  தலைமையகத்துக்கு  விசாரணைக்காக  அழைக்கப்பட்டிருக்கிறார். ஆனால், போலீஸ் படைத்  தலைவர்  காலிட்  அபு  பக்காரின்  உடன்பிறப்பான  அவர்  அதைப்  பற்றிக் கவலைப்படவில்லை. தாமான்  லிண்டோங்கான்  ஜெயா  அம்னோ  கிளைத்  தலைவரான  அப்துல்லா,…

நிக் நஸ்மி: கித்தா லவான் பேரணி நடப்பது உறுதி

பேரணி  நடத்த  அனுமதி  பெற  வேண்டும்  என்று  போலீஸ்  படைத்  தலைவர்  எச்சரித்துள்ளபோதும்   பொருள், சேவை  வரி(ஜிஎஸ்டி)க்கு  எதிரான  கித்தா  லவான்  பேரணி  நடக்கத்தான்  போகிறது. “கித்தா லவானுக்கு  எதிராக  நடவடிக்கை  எடுக்கப்படும்  என  இன்ஸ்பெக்டர்- ஜெனரல்  அப்  போலீஸ் (ஐஜிபி) மிரட்டியிருப்பது  அரசமைப்புக்கு  முரணானது. அது  மே …

புவா: 1எம்டிபியை மீட்டெடுக்க மின்கட்டணம் உயர்த்தப்படும்

கடன்  தொல்லைகளில்  சிக்கிக்  கொண்டிருக்கும்  1மலேசியா  மேம்பாட்டு  நிறுவனத்தை  மீட்டெடுக்க  மலேசியர்கள்  மின்சாரத்துக்குக்  கூடுதல்  கட்டணம்  செலுத்துவதைத்  தவிர  வேறு  வழியில்லை  என்கிறார்  டோனி புவா. 1எம்டிபி, டெண்டர்களை  அழைக்காமல்  தனியார்  மின்  உற்பத்தி  நிறுவனங்கள்  பலவற்றுக்குக்  “கவர்ச்சிக்கரமான”  குத்தகைகளை  நேரடியாக  வழங்கி  இருப்பதுதான்  இதற்குக்  காரணமாம். “நேரடியாக …

மஇகா குழப்பத் தேவையில்லை – பிரதமர் பதில் சொல்லட்டும்!

ஹிண்ட்ராஃப்-உடன் செய்து கொண்ட ஒப்பந்தத்திற்கு பிரதமர்தான் பதில் சொல்ல வேண்டுமே அல்லாமல், மூன்றாம் தரப்பினர் அல்லர் என்கிறார் ஹிண்ட்ராஃப் இயக்கத்தின் தேசிய ஆலோசகர் நா. கணேசன். மலேசியாவில் நலிந்த நிலையில் உள்ள இந்தியர்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக ஹிண்ட்ராஃப் இயக்கத்துடன் தேசிய முன்னணி சார்பில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை பிரதமர் செய்து…

மகாதிர் ‘நடப்பு விவகாரங்கள்’ பற்றிப் பேசுவார்

வரும்  சனிக்கிழமை,  முன்னாள்  பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகம்மட் ஹுலு  கிளாங், தாமான் மெலாவாத்தியில்  பொது  அரங்கு  ஒன்றில்  பேசுவார். காலை  மணி  9.30க்குத்  தொடங்கும்  அந்நிகழ்வில் மகாதிர் “நடப்பு  விவகாரங்கள்” பற்றிப்  பேசுவார்  என்று  கூறப்படுகிறது. நடப்பு  விவகாரங்கள்  என்றால்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்மீது  மேலும் …

ஜிஎஸ்டிக்கு வாக்களித்ததற்காக வருத்தப்படுகிறார் எம்பி

பிஎன்னின் செபாங்கார்  எம்பி  ஜுமாட்  இட்ரிஸ், பொருள், சேவை  வரியால் செலவினம்  அதிகரித்திருப்பதை  உணர்ந்து  வருத்தப்படுகிறார். மருத்துவச்  சேவைக்  கட்டணங்களுடன் ஜிஎஸ்டி-க்காக  தனியாக  ரிம1,200  கொடுத்தபோதுதான்  அவர்  இதனை  உணர்ந்தார். மகனைத்  தனியார்  மருத்துவமனைக்கு  அழைத்துச்  சென்றபோது  அவருக்கு  இந்த  அனுபவம்  ஏற்பட்டது. “மருத்துவ  ஆலோசனைக்காக  ஆறு விழுக்காடு…

சிலுவை விவகாரம்: பிரதமர் எச்சரிக்கை

தாமான் மேடான் தேவாலயத்தில் பதிக்கப்பட்டிருந்த சிலுவையை அகற்றக் கோரி ஆர்ப்பாட்டம் செய்தவர்களை பிதமர் நஜிப் கண்டித்ததோடு போலீஸ் அந்த விவகாரம் குறித்து விசாரணை செய்யும் என்று கூறினார். சமீபத்தில் திருத்தம் செய்யப்பட்ட தேசநிந்தனைச் சட்டம் 1948 ஐ ஆர்ப்பாட்டக்காரர்கள் மீறினர் என்று கருதப்பட்டால் அவர்கள் விசாரணைக்கு ஆளாவார்கள் என்று…

ஆட்சிக்குழு: அனுமதி தேவையில்லை; சிலுவையை அது இருந்த இடத்திலேயே மீன்டும்…

கடந்த ஞாயிற்றுக்கிழை தாமான் மேடான் முஸ்லிம்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து பிஜே தேவாலயம் அதன் கட்டடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிலுவையை அகற்றியது. இன்று, சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு அந்த சிலுவையை அது வைக்கப்பட்டிருந்த இடத்திலேயே மீண்டும் வைக்குமாறு தேவாலயத்திற்கு ஆலோசனை கூறியுள்ளது. வழிபாட்டு தலங்கள் எவ்வித அனுமதியும் இன்றி வாணிபத்திற்கான…

13 மாணவர் அமைப்புகள் #BatalGST பேரணிக்கு ஆதரவு

13 மாணவர்  அமைப்புகளைச்  சேர்ந்தவர்கள்  இன்று  யுனிவர்சிடி  மலாயாவின்  வேந்தர் துங்கு  மணடபத்துக்குமுன்  திரண்டு  மே முதல்  நாள்  நடத்தத்  திட்டமிடப்பட்டிருக்கும் #BatalGST பேரணிக்கு  ஆதரவு  தெரிவித்துக்  கொண்டனர். பல்கலைக்கழகங்கள்  பல்கலைக்கழகக்  கல்லூரிகள்  சட்டம்  மாணவர்கள் பல்கலைக்கழக  வளாகத்தில்  அரசியல்- தொடர்புள்ள  நடவடிக்கைகளில்  ஈடுபடுவதைத்  தடுக்கிறது  என்ற   போதிலும்…

தொழுகை இடமாக செயல்பட தேவாலயத்திடம் அனுமதி இல்லை

ஞாயிற்றுக்கிழமை  ஆர்ப்பாட்டத்துக்கு  இலக்கான  தேவாலயம் அது  வழிபாட்டு  இல்லமாக  செயல்பட  அனுமதி  பெற்றிருக்கவில்லையாம்.  கடைவீட்டைத்  தொழுகை இடமாக மாற்ற  அனுமதி  கேட்டு  அது  இதுவரை  விண்ணப்பம்  செய்யவில்லையாம். ஒரு  கடைவீட்டை  வழிபாட்டு இல்லமாக  மாற்ற  நினைத்தால் அதற்கு  அரசாங்கத்தின்  ஒப்புதலைப்  பெற வேண்டும்  என பிஜே மாநகராண்மைக் கழக(எம்பிபிஜே)…

சிலுவையை எடுத்த இடத்திலேயே திரும்ப வைப்பீர்: மஇகா இளைஞர்கள்

தாமான்  மூடா  தேவாலயம், ஆர்ப்பாட்டக்காரர்கள் கட்டாயப்படுத்தியதால்  அகற்றிய  சிலுவையை  எடுத்த  இடத்திலேயே  திரும்பவும் வைக்க  வேண்டும்  என  மஇகா  இளைஞர்  தலைவர்  சி.சிவராஜ்  கேட்டுக்கொண்டிருக்கிறார். “தேவாலயம்  50 ஆர்ப்பாட்டக்காரர்கள்  கொடுத்த  நெருக்குதலுக்கு  அஞ்சி, அவர்களின் திருப்திக்காக  சிலுவை அகற்றியிருக்க  வேண்டியதில்லை. “அது  அவர்கள்  செய்த  முதல் தவறு. இனி,…

மகாதிர் ‘ரோஸ்மாவின் டாம்பீகம்’ பற்றிக் கிண்டலடித்ததை நாளேடுகள் கண்டுக்கொள்ளவில்லை

பிரதமரின்  மனைவி  ரோஸ்மா  மன்சூர் “ஆடம்பர” வாழ்க்கை  வாழ்வதாக  முன்னாள்  பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகம்மட்  கூறியிருப்பதை  மலாய்மொழி  நாளேடுகள் எதுவும்  ஆங்கில  நாளேடுகளில் பலவும்  வெளியிடவே இல்லை. சன் -இலும்  சீன  நாளேடுகளிலும்  மட்டுமே  அச்செய்தி  வெளியாகி  இருந்தது. பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்மீது  பல  குற்றம்குறைகள் …

தேவாலய-எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களை ஜி-25 கண்டித்தது

25 மலாய்  மேன்மக்களைக் கொண்ட  அமைப்பு (ஜி25), ஒரு  தேவாலயக்  கட்டிடத்திலிருந்து  சிலுவையை  அகற்றக்  கோரி  ஆர்ப்பாட்டம்  செய்தவர்களுக்கு  எதிராகக்  கடும்  நடவடிக்கை  எடுக்குமாறு  அதிகாரிகளைக்  கேட்டுக்கொண்டிருக்கிறது. அவர்களுக்கு  எதிராக  உறுதியான  நடவடிக்கை  எடுக்கத்  தவறினால்,  அது  சமுதாயத்தில்  உள்ள  சமயத்  தீவிரவாதிகளுக்கு  ஊக்கமளிப்பதாக  அமைவதுடன்  மற்ற  சமயத்தவரின் …

ஐஜிபி-இன் இரட்டை நியாயம்: சாடுகிறார் அம்னோ உறுப்பினர்

முன்னாள் அம்னோ  எம்பியான  சைபுடின்  அப்துல்லா  ஆர்ப்பாட்டங்களின்  விசயத்தில்  போலீஸ்  இரட்டை  நியாயத்தைக்  கடைப்பிடிப்பதைக்  கண்டு  அதிருப்தி  அடைந்துள்ளார். எதிரணி-ஆதரவு  கித்தா  லவான் பேரணிகளின்போது  பல  சமூக  ஆர்வலர்களையும்  நாடாளுமன்ற  உறுப்பினர்களையும்  விசாரணைக்காக  போலீஸ்  கைது  செய்திருக்கிறது. ஆனால்,  ஞாயிற்றுக்கிழமை அம்னோ-தொடர்புள்ளவர்கள் தாமான்  மூடாவில்  ஒரு  தேவாலயத்துக்கு  எதிராக …

புவா: ஐஜிபி கருத்துரைப்பதை நிறுத்த வேண்டும்

தேவாலயத்துக்கு  எதிரான  ஆர்ப்பாட்டத்தில்  போலீஸ்  படைத்  தலைவர்  காலிட்  அபு  பக்காரின்  சகோதரரும்  சம்பந்தப்பட்டிருப்பதால் அவர்  அது பற்றிக் கருத்துரைக்கக்  கூடாது  என டிஏபி  எம்பி  டோனி  புவா  கூறினார். விசாரணை  என்று  எதுவும்  தொடங்குமுன்னரே  அதில்  விசாரிப்பதற்கு  எதுவுமில்லை  எனக்  கூறியதே  ஐஜிபி-இன்  நடுநிலைப்போக்கையும்  அவரின்  தீர்ப்புரையையும்…

ஸாகிட் ஹமிடி: தேவாலயத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டம் தேசநிந்தனையானது

பெட்டாலிங் ஜெயா, தாமான் மேடானில் அமைந்துள்ள தேவாலயத்திற்கு எதிராக நேற்று மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டம் தேசநிந்தனையானது என்று தாம் கருதுவதாக உள்துறை அஹமட் ஸாகிட் ஹமிடி கூறினார். இந்த விவகாரத்தில் ஸாகிட்டின் கருத்து போலீஸ் படைத் தலைவர் காலிட் அபு பாக்கரின் நிலைப்பாட்டிற்கு முற்றிலும் வேறுபட்டதாக இருக்கிறது. அந்த ஆர்ப்பாட்டம்…

எதிரணியின் சுலோகத்தைத் தத்தெடுத்துக் கொண்டார் நஜிப்

பிரதமர்  நஜிப்  அப்துல் ரசாக்  மீது  குறைசொல்லும்  படலத்தைத்  தொடரும்  டாக்டர்  மகாதிர்  முகம்மட், அவர் சீன, இந்தியர்களின்  வாக்குகளைக்  கவர்வதற்காக  எதிரணியினரின்  சுலோகத்தைத்  தத்தெடுத்துக்  கொண்டதாகக்  கூறியுள்ளார். சீனர்களுக்குப்  புதிய  பொருளாதாரக்  கொள்கை  பிடிக்கவில்லை  என்பதால்  அவர்கள்  அப்துல்லா அஹமட்  படாவியை  நிராகரித்தார்கள்  என  நஜிப்புக்குத்  தெரிவிக்கப்பட்டுள்ளது.…