தொடர்ந்து மூன்று நாட்களுக்கு வெப்பநிலை 37°C-ஐத் தாண்டினால் பள்ளிகளுக்கு விடுமுறைபென துணை அமைச்சர் அறிவிப்பு. தொடர்ந்து மூன்று நாட்களுக்கு வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸைத் தாண்டினால், பள்ளி நிர்வாகத்தினர் பள்ளிகளைத் தற்காலிகமாக மூடலாம். 2023-ஆம் ஆண்டு முதல் கல்வி அமைச்சகத்தால் வகுக்கப்பட்ட வழிகாட்டுதல்களின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை…
‘ஷரிசாட், ஜாஹிட்டின் குத்தல் பேச்சுகள் வெறுப்பேற்றுகின்றன’
பெர்மாத்தாங் பாவில் சுஹாய்மி சபுடினுக்காக பரப்புரை செய்யும் பிஎன் தலைவர்கள் கூட்டத்தினரைக் கவர்வதற்காக பாலியல் ஜோக்குகள் சொல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அதை எல்லாரும் இரசிக்கிறார்கள் என்று சொல்வதற்கில்லை. பிகேஆர் மகளிர் பிரிவுத் தலைவர் ஸுரைடா கமருடின், அம்னோ மகளிர் தலைவர் ஷரிசாட் ஜலில், அம்னோ உதவித் தலைவர் …
பாஸ் உதவித் தலைவர்: நஜிப்மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர வேண்டும்
பக்கத்தான் எம்பிகள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்குக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர வேண்டும் என பாஸ் உதவித் தலைவர் ஷுசாம் மூசா பரிந்துரைத்துள்ளார். அதையும் அம்னோ, பிஎன் உதவியுடன் செய்ய வேண்டுமாம். டாக்டர் மகாதிர் அம்னோவை வலுப்படுத்த நினைக்கையில், 1மலேசியா மேம்பாட்டு நிறுவனத்தால் நாடு அழிந்து போகாமல் காக்க …
போலீஸ் தொல்லை கொடுப்பதாக பிகேஆர் தேர்தல் பணியாளர்கள் புகார்
பெர்மாத்தாங் பாவ் இடைத் தேர்தலையொட்டி பிகேஆர் அத்தொகுதியில் செராமாக்கள் நடத்திவரும் வேளையில் போலீசார் அக்கட்சியின் தேர்தல் பணியாளர்களை அழைத்து விசாரணை நடத்துவதாக மாசாங் பூபோக் சட்டமன்ற உறுப்பினர் லீ காய் லூன் கூறினார். “கட்சித் தொண்டர்களை விசாரணைக்காக போலீஸ் நிலையத்து வருமாறு கூறி போலீஸ் தொல்லை கொடுக்கிறது”, என …
மே7 பினாங்கில் பொது விடுமுறை: சிஎம் அறிவிப்பு
பெர்மாத்தாங் பாவ் வாக்களிப்பு நாளான மே 7-ஐ மாநில பொது விடுமுறை நாளாக பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் அறிவித்தார். அது மாநில ஆட்சிக்குழுவின் முடிவு என்றும் பெர்மாத்தாங் பாவில் வாக்களிப்பு சுமூகமாக நடப்பதை உறுதிப்படுத்த அவ்வாறு செய்யப்படுவதாகவும் அவர் சொன்னார். “முதலாளிமார் இதைக் கவனத்தில் கொள்ள …
பாஸ் உலாமா: கட்சி அதிருப்தியாளர்கள் புதிய கட்சி அமைக்க வேண்டாம்
பாஸ் உலாமாவும் கட்சித் தலைவர் பதவி போட்டியாளருமான அஹ்மட் ஆவாங், அதிருப்தியுற்ற கட்சி உறுப்பினர்கள் ஒரு புதிய கட்சியை அமைக்க வேண்டிய அவசியமில்லை என்கிறார். அதாவது அவர்கள் கட்சியில் இருந்துகொண்டே கட்சிக்காக போராட வேண்டும் என்றவர் கூறுகிறார். ஜூன் மாதம், பாஸ் ஆண்டுக் கூட்டம் முடிந்து தேவையென்றால் புதிய…
வாக்காளர் ஆதரவு சுஹாய்மிக்கு நம்பிக்கை கொடுத்துள்ளது
பெர்மாத்தாங் பாவ் இடைத் தேர்தலில் களமிறங்கும் பிஎன் வேட்பாளர் சுஹாய்மி சபுடினுக்கு தேர்தலில் வெற்றிபெறும் நம்பிக்கை முதலில் இல்லை ஆனால், இப்போது வந்திருக்கிறது. அத்தொகுதில் வாக்காளர்களைச் சந்தித்த பிறகு அவருக்கு இந்த நம்பிக்கை வந்திருக்கிறது. “நான்தான் பிஎன் வேட்பாளர் என்று கூறியதும் அதற்கு எதிர்வினையாக, உதவுவதாக அதாவது பிஎன்னுக்கு …
ஹுடுட் சர்ச்சை இல்லை; பெர்மாத்தாங் பாவில் பிகேஆரும் பாஸும் கைகோத்து…
பாஸ் துணைத் தலைவர் முகம்மட் சாபு, பிகேஆர் ஹுடுட்-டை ஆதரிக்காததற்காக பெர்மாத்தாங் பாவ் பாஸ் தொகுதியிடம் மன்னிப்பு கேட்டதாகக் கூறப்படுவதை மறுத்தார். அச்சர்ச்சைக்குத் தீர்வு காணப்பட்டு விட்டது என்றாரவர். மே 7 நாடாளுமன்ற இடைத் தேர்தலில் பிகேஆர் வேட்பாளர் டாக்டர் வான் அசிசாவை ஆதரிக்க பெர்மாத்தாங் பாவ் பாஸ் …
தேவாலயம் ஆர்ப்பாட்டக்காரர்களை மன்னித்தது
ஒரு வாரத்துக்குமுன் ஆர்ப்பாட்டக்காரர்களின் கோரிக்கைக்கு அடிபணிந்து தன் கட்டிடச் சுவரிலிருந்து சிலுவையை அகற்றிய பின்னர் அச்சம்பவம் பற்றி இதுவரை எதுவும் பேசாதிருந்த பெட்டாலிங் ஜெயா கம்முனிடி அப் பிரேய்ஸ் தேவாலயம் இப்போது முதல்முறையாக மெளனம் கலைந்துள்ளது. தேவாலயத்தின் மூத்த பாதிரியார் பால் பாக்கியநாதன், ஆர்ப்பாட்டக்காரர்களை “மன்னிக்க” தேவாலயம் முடிவு …
‘மகாதிருக்கே ஜிஎஸ்டி புரியவில்லை என்றால் மக்களின் நிலை என்ன?’
முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகமட்டுக்கு பொருள், சேவை வரி (ஜிஎஸ்டி) புரியவில்லை என்று கூறி அவரைச் சிறுமைப்படுத்தியுள்ளதாக நிதி துணை அமைச்சர் அஹ்மட் மஸ்லானைக் கடுமையாக திட்டியிருக்கிறார் பெர்லிஸ் முப்தி முகம்மட் அஸ்ரி சைனுல் அபிடின். “டாக்டர் எம்முக்கே ஜிஎஸ்டி புரியவில்லை என்கிறபோது தேசிய பொருளாதாரத்தில் அவரளவுக்கு …
மகாதிர்: ஜிஎஸ்டி அகற்றப்பட வேண்டும்
பொருள்கள் மற்றும் சேவைகள் வரி (ஜிஎஸ்டி) அகற்றப்பட வேன்டும் என்று முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகமட் இன்று கூறினார். "ஜிஎஸ்டி முற்றிலும் அகற்றப்பட வேண்டும் என்று நான் நினைக்கிறேன்" என்று இன்று கோலாலம்பூரில் ஒரு கருத்தரங்கில் 500 க்கும் மேரற்பட்டவர்களின் இடியோசை போன்ற கைத்தட்டல்…
பாரிசானுக்கு 3,000 இந்தியர் வாக்குகள், மஇகா வாக்குறுதி
எதிர்வரும் பெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்ற இடைத் தேர்தலில் குறைந்தபட்சம் 3,000 இந்தியர் வாக்குகள் பாரிசான் வேட்பாளருக்கு அளிக்கப்படும் என்று மஇகா வாக்குறுதி அளித்தது. அத்தொகுதியில் 4,830 இந்திய வாக்காளர்கள் இருக்கின்றனர். அதில் பெரும்பான்மை வாக்காளர்கள் செபெராங் ஜெயாவில் இருக்கின்றனர். ஐந்து வாக்களிப்பு மாவட்டங்கள் ஒவ்வொன்றிலும் 500 வாக்காளர்கள்…
அரசாங்கக் கொள்கைகளை டிவி-இல் விளக்க வேண்டும்
பொதுமக்களுக்குக் கவலை தரும் விவகாரங்களுக்கு பிரதமரும் அவரின் அமைச்சரவையும் தொலைகாட்சி வழி நேரடியாக விளக்கமளிப்பது நல்லது என்கிறார் கருவூலத்தின் முன்னாள் தலைமைச் செயலாளர் ஷெரிப் முகம்மட் காசிம். டிவி 3-இல் ஏப்ரல் 9-இல் ஒளியேறிய பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் நேர்காணல் பற்றிக் கருத்துரைத்த ஷெரிப், அப்படிப்பட்ட நேர்காணல்களில் …
மகாதிர்: நஜிப் வீட்டுத் திருமணம் ‘நூற்றாண்டின் மிகப் பெரிய திருமணம்’
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் மகளின் திருமணம் மிக ஆடம்பரமாக நடைபெற்றதாக விமர்சித்துள்ள டாக்டர் மகாதிர் முகம்மட் அதை “இந்நூற்றாண்டின் மிகப் பெரிய திருமணம்” என்றும் வருணித்துள்ளார். “இந்த ஆண்டுக்கு மட்டுமல்ல இந்த நூற்றாண்டுக்கே மிகப் பெரிய திருமணம் இதுதான். “அவர்கள் 300 பேருடன் கஸக்ஸ்தான் சென்றார்களே அதை…
கைரி:நஜிப்பைக் கவிழ்க்கும் சதியில் தொடர்பில்லை
அம்னோ இளைஞர் தலைவர் கைரி ஜமாலுடின். அப் பிரிவு பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கைக் கவிழ்க்க சதித்திட்டம் தீட்டுகிறது என்பதையும் அதில் அவருக்கும் தொடர்புண்டு என்று கூறப்படுவதையும் மறுக்கிறார். “நான் ஆண்பிள்ளை. யாரையும் கவிழ்க்க கையாட்கள் எனக்குத் தேவையில்லை”, என்று புக்கிட் மெர்தாஜாமில், பெர்மாத்தாங் பாவ் இடைத் தேர்தல் …
அன்வாரின் குதப்புணர்ச்சி வழக்கு : நூலாக வருகிறது
எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிமின் குதப்புணர்ச்சி வழக்குகளை விவரிக்கும் நூல் ஒன்று நாளை முதல் கடைகளில் விற்பனைக்கு வருகிறது. 'The Prosecution of Anwar Ibrahim: The Final Play ’ என்ற அந்நூலை குயின்ஸ் கவுன்சில் மார்க் ட்ரோவெல் எழுதியுள்ளார். ஆஸ்திரேலியரான ட்ரோவெல் குதப்புணர்ச்சி வழக்கு II…
பெர்மாத்தாங் பாவில் நான்கு-முனை போட்டி
பெர்மாத்தாங் பாவ் இடைத் தேர்தலில் நால்வர் போட்டியிடுவதாக தேர்தல் அதிகாரி ஜூஸ்னி இஸ்மாயில் அறிவித்தார். பிகேஆரின் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில், அம்னோவின் சுஹாய்மி சபுடின், பிஆர்எம்-இன் அஸ்மான் ஷா ஒஸ்மான், சுயேச்சை வேட்பாளர் சாலே இஷாக் ஆகியோரே அந்நால்வருமாவர். வேட்பு மனு தாக்கல் சுமூகமாகவே நடந்தது.…
இன்று பெர்மாத்தாங் பாவ் இடைத் தேர்தல் நியமனம்
பெர்மாத்தாங் பாவ் நாடாலுமன்ற இடைத் தேர்தலுக்கான வேட்பாளர் நியமனம் இன்று காலை மணி 9.00 லிருந்து 10.00 வரையில் நடைபெறும். இன்றிலிருந்து தொடங்கும் தேர்தல் பிரச்சாரம் இரண்டு வாரங்களுக்கு நடைபெறும். கடுமையான போட்டியாக இருக்கும் என்று கருதப்படும் இந்த இடைத் தேர்தலில் வாக்களிப்பு மே 7 இல்…
ஆர்ப்பாட்டக்காரர்கள் கிழக்கு மலேசியாவைப் பார்த்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்
பெட்டாலிங் ஜெயாவில் ஒரு தேவாலயத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தவர்கள், சாபா, சரவாக்கைப் பின்பற்றி பல்வேறு சமயத்தவரிடையே உறவுகளை வலுப்படுத்த வேண்டும் என அம்னோ தலைமைச் செயலாளர் தெங்கு அட்னான் மன்சூர் கூறினார். “சாபா, சரவாக்கில் நடப்பதை அவர்கள் பின்பற்ற வேண்டும். தேவாலயமும் பள்ளிவாசலும் பக்கத்தில் பக்கத்தில் உள்ளன. “வெள்ளிக்கிழமை …
நஜிப், ரோஸ்மாவுக்கு எதிரான செந்தமிழ்ச் செல்வியின் மனு தள்ளுபடி
காலஞ்சென்ற தனியார் துப்பறிவாளர் பி.பாலசுப்ரமணியத்தின் மனைவி ஏ.செந்தமிழ்ச்செல்வி, பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்குக்கும் அவரின் மனைவி ரோஸ்மா மன்சூருக்கும் எதிராக பதிவுசெய்திருந்த ரிம1.9 மில்லியன் வழக்கை மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. செந்தமிழ்ச்செல்வியின் வழக்குரைஞர் அமெரிக் சிது பதிவுசெய்த முறையீட்டு மனு குறைபாடுடையது என மேல்முறையீட்டு நீதிமன்றம் …
சமூக ஆர்வலர் ஆடம் அட்லியின் தந்தை விபத்தில் மரணம்
சமூக ஆர்வலர் ஆடம் அட்லியின் தந்தை அப்துல் ஹலிம் அப்துல் அமிட் இன்று காலை உயிரிழந்தார். தந்தை இறந்த செய்தியை ஆடம் டிவிட்டரில் பதிவிட்டிருந்தார். கெரேதாஅபி தானா மலாயுவின் முன்னாள் ஊழியரான அப்துல் ஹாலிம் நேற்றிரவு பினாங்கில், பினாங்காவில் மோட்டார்-சைக்கிளில் சென்றபோது விபத்தில் சிக்கிக் கொண்டார். விபத்தில் படுகாயமடைந்த …
கைரி:‘நேரான பாலம்’ கட்டுவதே மலேசியாவின் விருப்பம்
ஜோகூர்- சிங்கப்பூர் பாலத்துக்குப் பதிலாக நேரான பாலம் ஒன்றைக் கட்டும் சாத்தியத்தைதான் மலேசியா ஆராய்ந்து வருவதாக இளைஞர், விளையாட்டுத் துறை அமைச்சர் கைரி ஜமாலுடின் கூறுகிறார். இரு நாட்டுத் தலைவர்களும் இன்னும் 10 நாள்களில் சந்திப்பார்கள் என்றும் அப்போது அவர்கள் அதை ஆராய்வார்கள் என்றும் கைரி சிங்கப்பூரில் செய்தியாளர்களிடம் …
ஆர்ப்பாட்டம் நடக்கும் என்ற மிரட்டலைத் தொடர்ந்து குளுவாங் கூட்டம் இரத்து
குளுவாங்கில் நேற்றிரவு நடைபெறவிருந்த பொருள் சேவை வரி மற்றும் இன அரசியலுக்கு எதிரான கருத்தரங்கு நடைபெறவில்லை. கருத்தரங்கு நடைபெறவிருந்த உணவகம் மூடப்பட்டிருந்தது. உணவகம் மூடப்பட்டிருந்ததற்குக் காரணம் தெரியவில்லை. ஆனால், அம்னோ இளைஞர்கள் அக்கருத்தரங்கு “இனவாதமிக்கது” என்று கூறி அது நடந்தால் அதற்கெதிராக ஆர்ப்பாட்டம் செய்யப்போவதாக எச்சரித்திருந்தனர்.. கருத்தரங்கு பேச்சாளர்கள்…
அம்னோ: இணையத் தளம்: நஜிப்பை வெளியேற்ற இளைஞர் தலைவர்கள் சதி…
அம்னோ- ஆதரவு இணையத் தளமொன்று அம்னோ இளைஞர் தலைவர்கள் பிரதமர் நஜிப்பைக் கவிழ்ப்பதற்குச் சதி செய்வதாகக் குற்றம் சாட்டியுள்ளது. ஆனால், சதிக்கூட்டத்தில் ஒருவர் எனக் குறிப்பிடப்பட்ட இளைஞர் பிரிவு நிர்வாகக் குழு உறுப்பினர் அர்மான் அஸ்ஹா அபு ஹனிபா அக்குற்றச்சாட்டை மறுத்தார். நேற்றிரவு நடைபெற்ற ஒரு கூட்டத்தில் அம்னோ …


