கைருடின்: 1எம்டிபி பற்றி நல்ல விதமாகத்தான் நஜிப்பிடம் எடுத்துரைத்தேன்

“நீங்கள்  நல்லவர். மற்றவர்கள்  உங்களைப் பயன்படுத்திக்கொள்ள  இடமளிக்காதீர்கள்”. பிரதமர்  நஜிப்  அப்துல் ரசாக்கை  அவரது  வீட்டில்  சந்தித்தபோது  பத்து  கவான்  அம்னோ  தொகுதித்  துணைத்  தலைவர்  கைருடின்  அபு ஹசான் இப்படித்தான்  அறிவுரை  பகர்ந்தார். நஜிப்  அமெரிக்கா  செல்வதற்குமுன்  இருவரும்  சந்தித்து  1மலேசியா  மேம்பாட்டு  நிறுவனம் (1எம்டிபி) பற்றி …

QZ8501 : வானிலை சற்று சீரடைந்திருப்பதால் தேடும் நடவடிக்கை முடுக்கி…

கடந்த  ஒன்பது  நாள்களாக  நிலவிய  மோசமான வானிலை  ஏர்  ஏசியா QZ8501  விமானத்தைத்  தேடும்  முயற்சிக்குப்  பெரும்  இடையூறாக  இருந்தது.  இன்று  வானிலையில்  ஒரு  மாற்றம்  காணப்பட்டிருப்பதைத்  தொடர்ந்து  விமானத்தின்  கருப்புப்  பெட்டியைத்  தேடி  எடுப்பதிலும்  இறந்த  பயணிகளின்  சடலங்களை  மீட்டெடுப்பதிலும்  தேடும்  குழுக்கள்  மும்முரமாக  ஈடுபட்டனர். இந்தோனேசிய …

என்ஜிஓ: கிளந்தான் வெட்டுமரத் தொழில் பற்றி விசாரணை தேவை

கிளந்தானில் சட்டவிரோதமாக  மரங்கள்  வெட்டப்பட்டதுதான்  வெள்ளம்  ஏற்பட  தலையாய  காரணம்  என்பதால்  அம்மாநில  வெட்டுமரத்  தொழில்  பற்றி  விசாரிக்க அரச  விசாரணை  ஆணையம்(ஆர்சிஐ)  அமைக்க  வேண்டும்  என ஒரு  என்ஜிஓ  கோரிக்கை  விடுத்துள்ளது. கிளந்தான்  பாஸ்  தலைவர்கள்  பலரின்  சொத்து  விவரங்களைக்  கான்பிக்கும்  ஆவணங்கள் தம்மிடம்  இருப்பதாக  Concerned…

தலைவரின் போக்கால் சுப்ரா அதிர்ச்சி

வழக்கமாக  அமைதியாக  இருக்கும்  டாக்டர்  சுப்ரமணியம்கூட  ஜி.பழனிவேலின்  போக்கு  குறித்து  அதிருப்தி  தெரிவித்துள்ளார். “அவர், டிசம்பர்  24-இல்  செனட்டர்  வி.சுப்ரமணியத்துடன் (பாராட் மணியம்) ஆர்ஓஎஸ்  தலைமை இயக்குனரைச்  சந்தித்ததையும்  மஇகா  சார்பில் ஒரு கடிதம்  கொடுத்தார் என்பதையும்  அறிந்து  அதிர்ச்சி  அடைந்தேன்”,  எனக்  கட்சித்  துணைத்  தலைவரான  சுப்ரமணியம் …

பெட்ரோனாஸ் பாதுகாப்பு முறைகளை அலட்சியப்படுத்தினால் மறியல் போராட்டம்தான்

பெட்ரோனாஸ்  தென்  கொரியாவுக்கும்  ஜப்பானுக்கும்  திரவமய  இயற்கை  எரிவாயு  அனுப்புவதை  நிறுத்தாவிட்டால்  கண்டனக்  கூட்டங்களும் மறியல்  போராட்டமும்  நடைபெறும்  என  எச்சரிக்கப்பட்டிருக்கிறது. இவ்வெச்சரிக்கையை  விடுத்த  பா’கெலாலான்  சட்டமன்ற  உறுப்பினர்  பாரு  பியான், “என்  தொகுதி  மக்கள்   சாபா-சரவாக்  ஊடே  செல்லும்  எரிவாயுக்  குழாய்க்கு  அருகில்  வசிப்பதால்  அச்சங்  கொண்டிருக்கிறார்கள்”,…

எம்பி: 1எம்டிபி’இல் நிலவரம் சரியில்லை

1மலேசியா மேம்பாட்டு  நிறுவன(1எம்டிபி) தலைமை  செயல்  அதிகாரியின்  பதவி  விலகலும்  புதிய  செயல்முறை  தலைவரின்  நியமனமும்  அந்த  அரசு  முதலீட்டு  நிறுவனத்தில்  நிலைமை  சரியில்லை  என்பதைக் காண்பிப்பதாக  டிஏபி  எம்பி டோனி  புவா  கூறுகிறார். “சிறப்பாக  செயல்படுவதாகக்  கூறிக்கொண்டிருக்கும்  ஒரு  நிறுவனத்தின்  நிர்வாகத்தில்  பெரிய  மாற்றம்  நடைபெறுவது  வழக்கமில்லை.…

“பைத்தியம் பிடித்தவன்” ஹிந்து தெய்வச் சிலைகளையும் கூட உடைத்தான்

  பினாங்கு, புக்கிட் மெர்தாஜாமில் அமைந்திருக்கும் வாட் சாத்தாராமிலுள்ள சிலைகளை கடந்த வெள்ளிக்கிழமை உடைத்த மனிதன் அடுத்த நாளில் ஹிந்து தெய்வச் சிலைகளையும் உடைத்துள்ளான் என்று போலீஸ் கூறுகிறது. சனிக்கிழமை சிலைகள் உடைக்கப்பட்ட பின்னர் செய்யப்பட்ட போலீஸ் புகாரைத் தொடர்ந்து போலீசார் அந்த மனிதனை பிடித்தனர். போலீசார் அவனை…

QZ8501:மூன்று ஆடவரும் ஒரு பெண்ணும் அடையாளம் காணப்பட்டனர்

டிசம்பர்  28-இல், 162 பேருடன் கடலில்  விழுந்த  ஏர் ஏசியா  இந்தோனேசிய  விமானம்   QZ8501-இலிருந்து  இதுவரை  37 சடலங்கள்  கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவற்றில்  மேலும்  நான்கு  சடலங்கள்  இன்று  அடையாளம்  காணப்பட்டன. 1.மகாசாரைச்  சேர்ந்த 45 வயது  ஷியான்  சோசல் 2. சுராபாயாவைச்  சேர்ந்த  42 வயது  டோனி  லீனாக்சிதா…

ஜாயிஸ் இயக்குனர் ஷா அலாம் புதிய மேயர்

  ஷா அலாமின் புதிய மேயராக சிலாங்கூர் இஸ்லாமிய சமய இலாகா (ஜாயிஸ்) இயக்குனர் அஹமட் ஸாகிரின் முகமட் ஷாஆட் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நியமனம் கடந்த வெள்ளிக்கிழமையிலிருந்து அமலுக்கு வந்துள்ளது. கடந்த இரண்டு மாதங்களாக காலியாக இருந்த இப்பதவியை நிரப்பு வதற்காக இந்நியமனம் செய்யப்பட்டது என்று சிலாங்கூர் மாநில செயலாளர்…

தலைவரின் ஒப்புதலுடனோ ஒப்புதலின்றியோ மஇகாவில் மறுதேர்தல் நடப்பது உறுதி

கட்சித்  தலைவர்  ஜி.பழனிவேல்  ஒப்புதல்  கொடுத்தாலும்  கொடுக்காவிட்டாலும்   15  உச்சமன்ற  உறுப்பினர்களைக்  கொண்டு  மறுதேர்தல்  நடத்துவதற்காக  சிறப்புக்  குழு  ஒன்றை  அமைக்கப்போவதாக  உதவித்  தலைவர்  எம். சரவணன்  கூறியுள்ளார். “ஒரு  சிறப்புக்  குழுவை அமைத்து  மறுதேர்தலை  நடத்தும்படி  ஆர்ஓஎஸ் (சங்கப் பதிவகம்) பரிந்துரைத்துள்ளது.  இதைத்  தலைவரிடம்  எடுத்துச்  சொல்வேன்.…

மஇகா தனிப்பட்ட ஒருவரின் சொத்தல்ல: பழனிவேலுக்கு அறிவுறுத்து

 மஇகா  முன்னாள்   வியூக  இயக்குனர்  எஸ்.வேள்பாரி,  மஇகா  கட்சித்  தலைவர்   ஜி.பழனிவேலின்  தனிப்பட்ட  சொத்தல்ல  என்பதை  அவருக்கு  நினைவுறுத்தியுள்ளார். சங்கப்  பதிவகம் (ஆர்ஓஎஸ்) கட்சியின் பதிவை  இரத்துச்  செய்ய  அனுமதிக்கப்போவதில்லை  என்று  பழனிவேல்  நேற்று  கூறியதற்கு  வேள்பாரி  இவ்வாறு  எதிர்வினையாற்றினார். “அவரது  கூற்றிலிருந்து  சட்ட  நீதியில்  மோதிப்பார்க்கத் தயாராகி…

நஜிப்புக்கு ஈ கோலாய் பாதிப்பு

பிரதமர்  நஜிப் அப்துல்  ரசாக், ஈ  கோலாய்  பெக்டீரியாவால்  பாதிக்கப்பட்டிருக்கிறார்  என  பிரதமர்  அலுவலகத்தின்  டிவிட்டர்  செய்தி  கூறுகிறது. நஜிப், கடந்த வாரம்  வெள்ளப்  பெருக்கு  ஏற்பட்ட  பல  மாநிலங்களுக்கு  வருகை  மேற்கொண்டதன்  விளைவாக ஈகோலாய்  பாதிப்புக்கு  ஆளானார்  என  அது  கூறிற்று. “ஓய்வு  எடுத்துக்கொள்ளுமாறு   மருத்துவர்கள்  ஆலோசனை …

புவா பற்றி எப்பிஐ-க்கு எழுதப்பட்ட கடிதம் வழக்கிலிலிருந்து அகற்றப்பட்டது

உள்துறை  அமைச்சர்  ஜாஹிட்  ஹமிடி அமெரிக்க  புலன் விசாரணைப்  பிரிவு(எப்பிஐ)க்கு  எழுதிய  ஒரு கடிதம்  சூதாட்டத்  தலைவர்  என்று  கூறப்படும் ஒருவரின்  எதிர்வாதத்துக்குப்  பயன்படுத்தப்படுவதற்கு   புத்ரா ஜெயா ஆட்சேபம்  தெரிவித்ததை  அடுத்து  அக்கடிதம்  நெவாடா  மாவட்ட  நீதிமன்றத்திலிருந்து  மீட்டுக்கொள்ளப்பட்டது. டிசம்பர் 18-இல், ஜாஹிட்  எழுதிய எப்பிஐ  துணை  இயக்குனர் …

மஇகா பதிவு ரத்து ஆகாது, பழனிவேலு உறுதியளிக்கிறார்

கட்சியின் தேர்தல் முறைகேடுகள் சம்பந்தமாக  சங்கங்கள் பதிவகம் ம இகாவின் பதிவை ரத்து செய்வதற்கு தாம் அனுமதிக்கப் போவதில்லை என்று கட்சியின் தலைவர் ஜி. பழனிவேலு உறுதியளித்தார். பழனிவேலு கட்சியின் பதிவு ரத்து செய்யப்படுவதை விரும்புகிறார் என்று எழுந்த ஏராளமான குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, அவற்றில் கட்சியின் முன்னாள் பொருளாளர்…

1எம்டிபிக்கு எதிரான நடவடிக்கையைத் தொடர்கிறார் அம்னோ உறுப்பினர் கைருடின்

மலேசிய நிதி அமைச்சுக்கு சொந்தமான 1எம்டிபிக்கு எதிராக போலீஸ் புகர் செய்து ஒரு சர்ச்சையை கிளப்பியுள்ள கைருடின் அபு ஹசான் தற்போது அந்நிறுவனத்தில் காணப்படும் முறைகேடுகள் குறித்தும் நடவடிக்கை எடுப்பதில் தீவிரமாக இருக்கிறார். பத்து கவான் அம்னோ தொகுதி துணைத் தலைவரான ஹைருடின் விரைவில் தமது அறிக்கையை புக்கிட்…

பழனிவேலுவை தொடர்புகொள்ள முடியாததால் துணைத் தலைவர் ரோஸை சந்திக்கிறார்

மஇகாவின் மறுதேர்தல் விவகாரத்திற்கு இதுவரையில் எவ்வித தீர்வும் காணப்படவில்லை.  சங்கங்களின் பதிவக அதிகாரி அவரது கடிதத்தில் இரு மஇகா கிளைகளின் பதிவு நாளை ரத்து செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார். ஆனால், இவ்விவகாரம் குறித்து கட்சியின் தலைவர் ஜி. பழனிவேலு எவ்விதத் திட்டவட்டமான நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறார். மேலும், அவருடன்…

சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் மீது கவனம் செலுத்துவீர், கள்ளச் சூதாட்ட பெரும்புள்ளிக்கு…

அமெரிக்காவில் குற்றம் சாட்டப்பட்டு விசாரனிக்காக வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருக்கும் கள்ளச் சூதாட்ட பெரும்புள்ளி பால் புவா அவருக்கு எதிராகச் சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகள் மீது கவனம் செலுத்துமாறு மலேசிய போலீஸ் படையின் தலைவர் காலிட் அபு பாக்கார் ஆலோசனை கூறியுள்ளார். அனைத்துலக குண்டர் கும்பலின் உறுப்பினர் என்று குற்றம் சாட்டப்படும்…

மஇகாவுக்கு புதிய தலைமைச் செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளார்

  மஇகாவின் புதிய தலைமைச் செயலாளராக ஜி. குமார் அம்மன் மற்றும் புதிய வியூக இயக்குனராக ஆர். கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முறையே எ. பிரகாஷ் ராவ் மற்றும் ச.வேள்பாரி ஆகியோருக்கு மாற்றாக நியமிக்கப்பட்டுள்ளனர். இன்று வெளியிட்ட ஒரு செய்தி அறிக்கையில் மஇகா தலைவர் ஜி. பழனிவேலு இதனை அறிவித்தார்.…

ஹிண்ட்ராப் தலைவர் சரவாக்கில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது

  முன்னாள் செனட்டரும் ஹிண்ட்ராப்பின் தலைவருமான பி.வேதமூர்த்தி சரவாக்கில் ஒரு கருத்தரங்கில் தேச நிந்தனைச் சட்டம் குறித்து உரையாற்றுவதற்கு இன்று காலை கூச்சிங் விமான நிலையத்தில் வந்திறங்கினார். ஆனால், அவர் குடிநுழைவுத்துறை அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார். அத்துறையின் மூத்த அதிகாரி வேதமூர்த்தி சரவாக்கில் நுழைவதற்கு சரவாக் மாநில முதலமைச்சர்…

முன்னாள் தலைமை நீதிபதி: சீனர்கள் அரசியலில் ஆதிக்கம் பெறுவதைத் தடுக்க…

  கிளந்தானை தாக்கிய வெள்ளம் பாஸ் தலைமையிலான அம்மாநில அரசாங்கம் அம்னோவில் இருக்கும் அதன் சகோதர மலாயக்காரர்களுடன் இணைந்து கொள்வதற்கு தூண்ட வேண்டும் என்று முன்னாள் தலைமை நீதிபதி அப்துல் ஹமிட் முகம்மட் கூறுகிறார். பாஸ் கட்சியும் அம்னோவும் ஒன்றுபடுவதன் மூலம் சீனர்களின் வளர்ந்து வரும் அரசியல் ஆதிக்கத்தை…

சீசர் அல்லது ரோம், இரண்டில் ஒன்றை அம்னோ தேர்வு செய்ய…

ரோம் வேண்டுமா அல்லது சீசர் வேண்டுமா என்று ரோமர்கள் தேர்வு செய்ய வேண்டியிருந்ததைச் சுட்டிக் காட்டிய மூத்த செயதியாளர் காடிர் ஜாசின், அம்னோவும் பாரிசானும் அதே போன்ற சூழ்நிலையில் தற்போது இருப்பதாகக் கூறினார். நஜிப் வேண்டுமென்றால், அடுத்தப் பொதுத் தேர்தல் புத்ராஜெயாவை இழக்க வேண்டும். இதில் எது வேண்டும்…

உலகை வலம் வந்த பின்னர் விஐபி ஜெட் விமானம் பேங்கோக்கில்…

இரண்டு வார இடைவெளிக்குப் பின்னர் 9M-NNA என்ற பதிவு எண்ணைக் கொண்ட அரசாங்க விஐபிகளுக்கான விமானம் உலகைச் சுற்றி வந்த பின்னர் இன்று பிற்பகலில் பேங்கோக் வந்து சேர்ந்தது. இந்த இடைக்காலத்தில் பிரதமர் நஜிப்பின் துணைவியார் ரோஸ்மா மன்சூர் எங்கிருக்கிறார் என்ற கேள்வியும் எழுந்திருந்தது. நாட்டின் வெள்ளப் பேரிடரை…

கடும் மழையினால் சாபாவில் வெள்ளம்

  தீவகற்ப மலேசியாவில் வெள்ள நிலைமையில் சற்று முன்னேறம் ஏற்பட்டிருக்கையில், சாபாவில் பெய்த கடும் மழையினால் பல நகரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. தாவவ் மற்றும் கோத்தா பெலுட் ஆகியவை பெரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. உயர் அளவிலான வெள்ளப் பெருக்கால் சாலைகள் பயன்படுத்தப்பட முடியாத நிலையில் இருக்கின்றன. வெள்ளப் பெருக்கால் தாவவ்,…