"ஜனாதிபதி பிரபோவோ சுபியாந்தோவின் அழைப்பின் பேரில், இந்த ஆண்டில் பிரதமரின் முதல் இந்தோனேசியப் பயணம் இதுவாகும்." ஜாகர்த்தாவில் உள்ள ஹலீம் பெர்தானாகுசுமா விமான நிலையத்தை வந்தடைந்த பிரதமர் அன்வார் இப்ராஹிம், அதிபர் பாதுகாப்புப் படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் புவிசார் அரசியல் நிகழ்வுகள்…
பெர்மாத்தாங் பாவில் குவான் எங், கஜாங்கில் அஸ்மின்
பக்கத்தான் ரக்யாட் வேட்பாளர் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் காஜாங் பெர்மாத்தாங் பாவ் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கும் நேரத்தை ஒதுக்குவது ஒரு பிரச்னையாக இருக்குமா? கவலையே வேண்டாம். பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங்கும் சிலாங்கூர் மந்திரி புசார் அஸ்மின் அலியும் அவருக்கு உதவிக்கரம் நீட்டுகிறார்கள். நேற்றிரவு …
போலீசிடம் தப்பி ஓடுபவர் அரசியல்வாதிகளுடன் ‘தோள் உரசுகிறார்’
யுபுன் நிறுவனத்தின் தலைவர் தாய் கிம் லெங், தாய்லந்து போலீசாரால் தேடப்படும் ஒரு நபராக இருக்கலாம் அனால், மலேசியாவில் அவர் ஒரு பெரிய ஆள். தாய்லாந்தில் அவரைப் பிடிப்பதற்கு கைது ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், ‘டத்தோ டேனியல் தாய்’ என்று தம்மை அழைத்துக்கொள்ளும் அவர், முன்னாள் மசீச தலைவர் …
புத்தகக் கண்காட்சியில் உள்துறை அமைச்சு நூல்களைப் பறிமுதல் செய்தது
உள்துறை அமைச்சு நேற்று, கோலாலும்பூர் அனைத்துலக புத்தகக் கண்காட்சியில் கெராக்புடாயா வெளியீட்டகத்திடமிருந்து 30 நூல்களைப் பறிமுதல் செய்தது. பறிமுதல் செய்யப்பட்ட நூல்களில் சில, சந்தையில் பல ஆண்டுகளாகவே இருந்து வருவதாகவும் வெளிப்படையாகவே விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் கெராக்புடாயாவின் ஒருங்கிணைப்பாளர் இங் யாப் ஹுவா மலேசியாகினியிடம் தெரிவித்தார். அதிகாரிகள் குர்ஆன் …
மே தினம் 2015
மே தினம் நல்வாழ்த்துகள் மலேசிய தொழிலாளர்கள் மற்றும் உலகத் தொழிலாளர்கள் அனைவருக்கும் செம்பருத்தி.கோம் அதன் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறது. தொழிலாளர் தினமான இன்று மலேசிய தொழிலாளர்கள் மிகவும் பலவீனமானவர்களாக இருக்கிறார்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். மலேசிய தொழிற்சங்க இயக்கம் முன்னேற்றம் காணவில்லை. 1948…
லிங்கின் மனைவி: சொங் வேய்க்கு ஊக்க மருந்து கொடுத்தது நானல்ல
நாட்டின் முதல்நிலை பூப்பந்து ஆட்டக்காரரான லீ சொங் வேய்க்குத் தடைசெய்யப்பட்ட ஊக்க மருந்துகளைக் கொடுத்தவர் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் துணைவியார் ரோஸ்மா மன்சூர் அல்ல என்பது தெளிவாகி விட்டதால் இப்போது அனைவரின் கவனமும் இன்னொருவர்மீது திரும்பியுள்ளது. அவர்தான் ஒங் ஈ நா(படத்தில் இடப்பக்கம் இருப்பவர்). ஒங் மசீச…
சாபாவில் தடைசெய்யப்பட்ட பேரணியை சுஹாகாம் கண்காணிக்கும்
மலேசிய மனித உரிமை ஆணையம்(சுஹாகாம்), சாபா சென்று அங்கு நடைபெறும் மே 1 பேரணியைக் கண்காணிக்கும். அப்பேரணியில் பல முக்கிய அரசியல்வாதிகளும் சமூக ஆர்வலர்களும் கலந்துகொள்வதற்கு அம்மாநில மெஜிஸ்திரேட் நீதிமன்றம் தடை விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நாளை கோலாலும்பூரிலும் பேரணி நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், இங்கு நிலைமை எவ்வளவோ …
அரசு ஒடுக்குமுறையால் பத்திரிகைச் சுதந்திரம் குறைந்தது
குறைகூறுவோர்மீது போலீஸ் அடக்குமுறைகள் அதிகரித்ததால் பத்திரிகைச் சுதந்திர தரவரிசையில் மலேசியா 142-வது இடத்துக்கு இறக்கம் கண்டுள்ளது. அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட பிரிடம் ஹவுஸ் வெளியிட்டுள்ள 2014 பத்திரிகைச் சுதந்திரம் மீதான அறிக்கையில் பாகிஸ்தான், துருக்கி ஆகிய நாடுகள் பெற்றுள்ள இடமே மலேசியாவுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த பத்தாண்டுகளில் உலக முழுவதுமே …
மகாதிரும் அம்னோவிடம் 1எம்டிபி பற்றி விளக்க விரும்புகிறார்
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அம்னோ அடிநிலை உறுப்பினர்களைச் சந்தித்து 1மலேசியா மேம்பாட்டு நிறுவனம் பற்றி விளக்கமளித்ததுபோல் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டும் அவர்களைச் சந்தித்துப் பேச விரும்புகிறார். இதைத் தம் வலைப்பதிவில் தெரிவித்த மகாதிர் அம்னோ அடிநிலை உறுப்பினர்கள் இரு தரப்பு விளக்கங்களையும் செவிமடுப்பதுதான் நியாயமாகும் …
மஸ்லான்: ஜிஎஸ்டி பற்றிப் பேச யாரும் தடைபோடவில்லை
பொருள், சேவை பற்றிக் கருத்துரைக்கக் கூடாது என்று அம்னோ தலைமைத்துவம் தமக்குக் கட்டளை இடவில்லை என்பதை நிதி துணை அமைச்சர் அஹ்மட் மஸ்லான் உறுதிப்படுத்தினார். அது பற்றிப் பேசக்கூடாது என்று தடையுத்தரவு போடப்பட்டிருப்பதாக ஆஸ்ட்ரோ அவானியில் கூறப்பட்டது பற்றி வினவியதற்கு அஹ்மட் இவ்வாறு கூறினார். அப்படியானால் ஜிஎஸ்டி பற்றி …
ரோஸ்மா மலர்களுக்காக ரிம3 மில்லியன் செலவிட்டாரா?
டாக்டர் மகாதிர் முகம்மட் தாம் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் துணைவியார் ரோஸ்மா மன்சூரைத் தாக்கிப் பதிவிட்டிருப்பதாகக் கூறப்படுவதை மறுத்தார். அவரின் ஆடம்பர வாழ்க்கைமுறை பற்றி மட்டுமே கேள்வி எழுப்பியதாக முன்னாள் பிரதமர் கூறினார். “அவர் (மகளின் திருமணத்தின்போது) மலர் அலங்காரத்துக்கு மட்டும் ரிம3 மில்லியன் செலவிட்டதாக வதந்திகள் …
பிகேஆர்: அடிக்கடி வெளிநாடு செல்ல வேண்டாமென்று நஜிப்பிடம் கூற முடியுமா?
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அடிக்கடி வெளிநாடுகளுக்குச் செல்கிறாரே அதைக் கண்டிக்க முடியுமா என்று பிகேஆர் துணைப் பிரதமர் முகைதின் யாசினுக்குச் சவால் விடுத்துள்ளது. பிகேஆர் தலைவர் டாக்டர் வான் அசிசா காஜாங் சட்டமன்ற உறுப்பினராகவும் பெர்மாத்தாங் பாவ் எம்பியாகவும் இருந்து சரியான முறையில் பணியாற்ற முடியாது, அதற்கு …
மே 5-இல் பொது விடுமுறை அளிப்பது பற்றி பகாங் ஆலோசனை
பகாங் மாநில அரசு, ரொம்பினில் வாக்காளர்கள் வாக்களிப்பதை ஊக்குவிக்க அடுத்த செவ்வாய்க்கிழமையை (மே5) பொது விடுமுறை நாளாக அறிவிக்கலாமா என ஆலோசித்து வருகிறது. இன்றைய மாநில ஆட்சிக்குழுக் கூட்டத்தில் அப்பரிந்துரை விவாதிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் என மந்திரி புசார் அட்னான் யாக்கூப் கூறினார். ரொம்பினில் இன்று ஏழாம் நாளாக இடைத்…
‘அவதூறு கூறும் சுவரொட்டிகள்’மீது இசி விசாரணை நடத்த வேண்டும்
பெர்மாத்தாங் பாவில் பினாங்கு மாநில அரசுக்கு எதிராக அவதூறு கூறும் சுவரொட்டிகள் காணப்படுவது பற்றி தேர்தல் ஆணையம்(இசி) விசாரணை நடத்த வேண்டும் என டிஏபி நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்டீபன் சிம் விரும்புகிறார். புக்கிட் மெர்தாஜாமில் தமது நடவடிக்கை மையத்தில் அச்சுவரொட்டிகளைக் கண்டதாக சிம் தெரிவித்தார். அவை “அவதூறானவை” என்பதுடன்…
போலீஸ்:ஐஜிபி-இன் சகோதரர் சட்டத்தை மீறவில்லை
போலீஸ் படைத் தலைவர்(ஐஜிபி) காலிட் அபு பக்காரின் சகோதரர் அப்துல்லா அபு பக்கார், ஏப்ரல் 19-இல், பெட்டாலிங் ஜெயாவில் ஒரு பள்ளிவாசலுக்கு வெளியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டது உண்மை. ஆனால், அவர் எந்தச் சட்டத்தையும் மீறவில்லை. போலீசின் தொடக்க விசாரணைகளில் இது தெரிய வந்துள்ளதாக பெட்டாலிங் ஜெயா …
பெர்மாத்தாங் பாவில் பாஸ் இளைஞர்கள் திடீர் பல்டி
பினாங்கு பாஸ் இளைஞர்களிடையே ஒரு திடீர் மாற்றம். பெர்மாத்தாங் பாவ் இடைத் தேர்தலின்போது பிகேஆருக்கு ஆதரவாக தேர்தல் பணிகளைச் செய்யப்போவதில்லை என்று கூறி வந்தவர்கள் இப்போது அதன் தேர்தல் பரப்புரையில் உதவப்போவதாக அறிவித்துள்ளார்கள். “பாஸ் மத்திய தலைமைத்துவ உத்தரவைப் பின்பற்றி பெர்மாத்தாங் பாவ் இடைத் தேர்தலில் உதவுவது என்று …
இசி: கைதிகள் வாக்களிக்க முடியாது
கைதிகளாக இருப்பவர்கள் வாக்களிக்க முடியாது என்பதில் தேர்தல் ஆணையம்(இசி) உறுதியாக உள்ளது. வாக்காளர் தகுதி பற்றி இசி அரசமைப்பு விதிகளைத் தவறாக புரிந்து கொண்டிருக்கிறது என்று பிகேஆர் உதவித் தலைவர் என்.சுரேந்திரன் கூறியதற்கு ஆணையம் இவ்வாறு கூறியுள்ளது. “இசி-இன் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை”, என இசி தலைவர் …
சிஐஎம்பி தலைவர்: 1எம்டிபி மக்களின் கவலையைப் போக்க வேண்டும்
1மலேசியா மேம்பாட்டு நிறுவனம் (1எம்டிபி), தேவையான தகவல்களைத் தெரிவித்து கடன் தொல்லைகளால் பாதிக்கப்பட்டுள்ள அந்நிறுவனம் பற்றிய கவலைகளைப் போக்க வேண்டும் என்று சிஐஎம்பி தலைவர் நாசிர் அப்துல் ரசாக் கேட்டுக்கொண்டார். “அதற்கு என்னிடம் தீர்வு இல்லை. ஆனால், எதைச் சொல்ல வேண்டுமோ அதைச் சொன்னால் மக்களுக்குத் தெளிவு ஏற்படும்.…
வான் அசிசாவை ஆதரியுங்கள்: அன்வார் வாக்காளர்களுக்கு வேண்டுகோள்
பெர்மாத்தாங் பாவ் வாக்காளர்களுக்குக் கடிதம் எழுதியுள்ள பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம், அவர்கள் எதிர்வரும் இடைத் தேர்தலில் தம் மனைவியும் பிகேஆர் தலைவருமான டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயிலுக்கு வாக்களித்து ஆதரிக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டிருக்கிறார். அன்வார் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டு சிறை சென்றதை அடுத்து பினாங்கில் …
முகைதின்: தொகுதிகளைக் கவனிக்க வான் அசிசாவுக்கு நேரமிருக்குமா?
பிகேஆர் தலைவர் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில், அரிதாகவே காஜாங் செல்கிறார். இவ்வளவுக்கும் அவர்தான் காஜாங்கில் சட்டமன்ற உறுப்பினர். அதற்கே நேரமில்லாத அவருக்கு பெர்மாத்தாங் பாவ் தொகுதி மக்களின் நலனையும் கவனித்துக்கொள்ள நேரமிருக்குமா? இன்று பெர்மாத்தாங் பாவில் செய்தியாளர் கூட்டமொன்றில் இக்கேள்வியை முன்வைத்த துணைப் பிரதமர் முகைதின் …
மார்ச் 28 ஆர்ப்பாட்டம் தொடர்பில் பெர்சே இருவர் கைது
பெர்சே தலைவர் மரியா சின் அப்துல்லாவும் அதன் செயலக உறுப்பினர் மந்திப் சிங்கும் மார்ச் 28-இல் நடைபெற்ற கித்தா லவான் பேரணி தொடர்பில் இன்று கைது செய்யப்பட்டனர். வாக்குமூலப் பதிவுக்காக டாங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைமையகத்துக்கு அழைக்கப்பட்டிருந்த அவர்கள் காலை 11 மணிக்கு அங்கு சென்றபோது கைது …
பாக் லா: நஜிப் வாய் திறந்து பேச வேண்டும்
நஜிப் அப்துல் ரசாக் வாய்திறந்து பேசாமல் மெளனமாக இராமல் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டின் குறைகூறல்களுக்கு எதிர்வினை ஆற்றத்தான் வேண்டும் என்கிறார் முன்னாள் பிரதமரான அப்துல்லா அஹமட் படாவி. “நஜிப் ஏதாவது செய்தாக வேண்டும். பிரதமராக இருப்பவருக்கு மக்களுக்குத் தகவலளிக்கும் பொறுப்பு உண்டு”, என இன்று கோலாலும்பூரில் …
உதவிக்காகக் காத்திருக்கிறார்கள் நேப்பாளிகள்: மாண்டவர் எண்ணிக்கை நாலாயிரத்தைத் தாண்டியது
நில நடுக்கத்தால் அதிர்ச்சி அடைந்த நேப்பாளிகள் அந்நெருக்கடிக்கு எதிராக அரசாங்கம் மெதுவாக செயல்படுவதாகக் கூறி ஆத்திரமடைந்துள்ளனர். சனிக்கிழமை சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் தாக்குண்ட நேப்பாளத்துக்கு இப்போதுதான் அனைத்துலக உதவிகள் வரத் தொடங்கியுள்ளன. நில நடுக்கத்தில் உயிரிழந்தவர் எண்ணிக்கை 4010 என்றும் 7,598 பேர் காயமடைந்திருப்பதாகவும் காட்மண்டுவில் உள்துறை அமைச்சு …
நேப்பாள நிலநடுக்கத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய மலேசியர்
சனிக்கிழமை நேப்பாளத்தை நில நடுக்கம் தாக்கியபோது ஒரு விற்பனை நிர்வாகியான லோய் யுன் கிங், ஒரு கட்டிடத்தின் இடிபாடுகளில் புதையுண்டு மாண்டு போயிருப்பார்- அவர் மட்டும் விரைந்து செயல்படாமல் இருந்திருந்திருந்தால். லோயும் அவரின் நண்பரான சீன நாட்டவர் ஒருவரும் ஒரு சுற்றுலா வழிகாட்டியுடன் உணவகம் ஒன்றில் பசியாறிக் கொண்டிருந்தனர்.…


