மெட்ரிகுலேஷன் திட்டம்குறித்த தனது அறிக்கை தொடர்பாக Universiti Malaya Association of New Youth (Umany) தலைவர் டாங் யி ஸீ-க்கு காவல்துறையினர் அபராதம் அனுப்பியுள்ளனர். டாங் (மேலே) நாளைப் பிற்பகல் 2 மணிக்கு வாங்சா மாஜு மாவட்ட காவல் தலைமையகத்தில் தனது வாக்குமூலத்தை அளிப்பார் என்று லிபர்ட்டிக்கான…
செயற்கைக்கோள் கண்ட பொருள்கள் எம்எச்370-இன் உடைந்த பகுதிகளா?
ஆஸ்திரேலிய பிரதமர் டோனி எப்பட், செயற்கைக்கோள் இரண்டு பொருள்களைப் படம்பிடித்திருப்பதாகவும் அவை மார்ச் 8-இல், 239 பேருடன் காணாமல்போன எம்ஏஎஸ் விமானத்தைச் சேர்ந்தவையாக இருக்கலாம் என்றும் கூறியுள்ளார். “தேடும் பணியில் புதிதாக, நம்பத்தக்க தகவல் வந்திருக்கிறது......இந்தியப் பெருங்கடலின் தெற்குப் பகுதியிலிருந்து”, என எப்பட் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். விமானங்கள் பொருள்கள் …
எம்எம்ஏ: பாலியல் வல்லுறவு பற்றி அமைச்சர் ‘அள்ளிவிட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது’
பாலியல் வல்லுறவு என்பதை மலாய்க்காரர்-அல்லாதார் சகஜமானது என்று ஏற்றுக்கொள்வதாக உள்துறை துணை அமைச்சர் வான் ஜுனாய்டி வான் ஜாபார் அள்ளி விட்டிருப்பதைக் கண்டு மலேசிய மருத்துவச் சங்கம் “நம்ப முடியாத அளவுக்கு அதிர்ச்சி அடைந்திருப்பதாக” அதன் தலைவர் டாக்டர் என்.கே.எஸ். தர்மசீலன் கூறியுள்ளார். வான் ஜுனாய்டியின் கூற்று “இழிவானது,…
ஆத்திரமுற்ற சீன நாட்டவர் செய்தியாளர் கூட்டத்தில் அத்துமீறி நுழைந்தனர்
சீன நாட்டவர் அடங்கிய ஒரு சிறு கும்பல், எம்எச்370 விமானம் பற்றி விளக்கமளிக்கப்படும் அரங்குக்குள் அத்துமீறி நுழைந்து செய்தியாளர்களிடம் பேச முற்பட்டதால் அரங்கினில் ஒரே கூச்சலும் குழப்பமுமாக இருந்தது. தங்களைக் காணாமல்போன விமானப் பயணிகளின் உறவினர்கள் என்று கூறிக்கொண்ட அந்த ஒரு டஜன் பேரும், மலேசியாவுக்கு அழைத்துவரப்பட்ட தங்களுக்கு …
விமானம் இந்தியப் பெருங்கடலின் தென்பகுதிக்குச் சென்றிருக்கலாம்
மலேசிய விமான நிறுவனத்தின் எம்எச்370 விமானம் 239 பேருடன் காணாமல்போனதைக் கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஆய்வாளர்கள் அது இந்தியப் பெருங்கடலின் தென்பகுதி நோக்கிப் பறந்து சென்றிருக்கலாம் என்று நினைப்பதாக விசாரணைத் தரப்புக்கு நெருக்கமான ஒரு வட்டாரம் தெரிவித்தது. முன் எப்போதுமில்லாத வகையில், 27 நாடுகள், கேஸ்பியன் கடலிலிருந்து லாவோஸ் …
‘சொன்னது சரியில்லைதான்; ஆனாலும், ஜுனாய்டி மன்னிப்பு கேட்க வேண்டியதில்லை’
உள்துறை துணை அமைச்சர் வான் ஜுனாய்டி துவாங்கு ஜாப்பார் பாலியல் வல்லுறவு பற்றி வெளியிட்ட புள்ளிவிவரங்களை மறுஆய்வு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ள மசீச, அதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தாது. பாலியல் வல்லுறவு பற்றிய புகார்களில் 80 விழுக்காடு மலாய்க்காரர்களிடமிருந்துதான் வந்திருக்கிறது என்றும் மலாய்க்காரர்-…
ஹிஷாம்: பக்காத்தான் எம்பிகளுக்கு விளக்கமளிக்கவும் தயார்
எம்எச்370 காணாமல்போனது பற்றி அதிகாரப்பூர்வமான விளக்கமளிப்பு தேவை என்று பக்காத்தான் ரக்யாட் எம்பிகள் கேட்டுக்கொண்டால் விளக்கமளிக்க ஆயத்தமாக இருப்பதாய்க் கூறுகிறார் இடைக்கால போக்குவரத்து அமைச்சர் ஹிஷாமுடின் உசேன். நேற்று பிஎன் எம்பிகளுக்கு விளக்கமளித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஹிஷாம், பிஎன் எம்பிகள் அதிகாரப்பூர்வமாகக் கேட்டுக்கொண்டார்கள் அதனால்தான் அவர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது …
‘புதிய எம்பி தேவையில்லை’: காஜாங் வாக்காளர் பலரின் கருத்து
காஜாங்கில் யுனிவர்சிடி சிலாங்கூர் (யுனிசெல்) மேற்கொண்ட கருத்துக்கணிப்பில் கலந்துகொண்டவர்களில் 63 விழுக்காட்டினர் சிலாங்கூர் மந்திரி புசாரை மாற்ற வேண்டிய அவசியமில்லை என நினைக்கிறார்கள். யுனிசெல், சிலாங்கூர் அரசாங்கத்துக்குச் சொந்தமான ஒரு பல்கலைக்கழகம். கருத்துக்கணிப்பில் 394 வாக்காளர்கள் கலந்துகொண்டதாக மூத்த விரிவுரையாளர் முகம்மட் ஷம்ஷினோர் அப்துல் அசீஸ் கூறினார். அவர்களில் …
அடுத்த ஆண்டு 15,542 உணவகங்களில் ஜிஎஸ்டி
அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் நாளிலிருந்து பொருள், சேவை வரி(ஜிஎஸ்டி) அமலுக்கு வரும்போது சுமார் 15,542 உணவகங்களில் அந்த வரி வசூலிக்கப்படலாம். ஆண்டுக்கு ரிம500,000 விற்பனையைக் கொண்ட உணவகங்கள் இந்த வரியை வசூலித்தாக வேண்டும் என நிதி துணை அமைச்சர் அஹ்மட் மஸ்லான் இன்று நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தின்போது …
2013 – ஆம் ஆண்டுக்கான SPM, STPM தேர்வு முடிவுகள்…
2013 - ஆம் ஆண்டுக்கான STPM தேர்வு முடிவுகள் நாளையும் SPM தேர்வு முடிவுகள் நாளை மறு நாள் வியாழக்கிழமையும் வெளியிடப்படுவதாக மலேசிய தேர்வு மன்றத்தின் பொது உறவு அதிகாரி Khawari Idris தெரிவித்தார். மாணவர்கள் மலேசிய தேர்வு மன்றத்தின் அகப்பக்கமான http://www.mpm.edu.my வாயிலாக நண்பகல் 12 மணி தொடக்கம், அவர்கள் தேர்வு…
‘5 மாதங்களில் நஜிப் கவிழ்க்கப்படுவார்’என்று டிவிட் செய்த தியான் சுவாமீது…
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் ஐந்து மாதங்களில் கவிழ்க்கப்படுவார் என்று ட்விட்டரில் செய்தி போட்டிருந்த பிகேஆர் உதவித் தலைவர் தியான் சுவா தேச நிந்தனைக் குற்றம் புரிந்திருக்கிறாரா என்று போலீசார் விசாரணை செய்கிறார்கள். இதன் தொடர்பில் இன்று அவரிடம் கோலாலும்பூர் போலீஸ் தலைமையகத்தில் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. பத்து…
அன்வார்: ஆதாரமில்லாமல் விமானியைப் பழித்துரைக்காதீர்
தீர விசாரிக்காமல் எம்எச்370 விமானி கேப்டன் ஸஹாரி அஹமட்மீது பழி சுமத்தக்கூடாது என்று எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம் ஊடகங்களையும் அதிகாரிகளையும் கேட்டுக்கொண்டிருக்கிறார். ஸஹாரி ஒரு “நல்ல குடும்பஸ்தர்” என்றாரவர். இன்று நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர் கூட்டமொன்றில் பேசிய அன்வார், ஸஹாரி தம் மைத்துனியின் உறவினர் என்பதை ஒப்புக்கொண்டார். …
சீனப் பயணிகள் விமானத்தைக் கடத்த வாய்ப்பில்லை
மலேசிய விமான நிறுவனத்தின் எம்எச்370-இல், சீனப் பயணிகள் பயங்கரவாத, கீழறுப்பு வேலைகளில் ஈடுபட்டிருக்கும் சாத்தியமில்லை என்பதை மலேசியாவுக்கான சீனத் தூதர் ஹுவாங் ஹுய் காங் உறுதிப்படுத்தியுள்ளார். தீபெத்தைச் சேர்ந்த யுய்கோர் பயணி ஒருவர் விமானத்தைக் கீழறுப்புச் செய்ததாக நினைப்பதற்கு எந்தக் “காரணமுமில்லை, ஆதாரமுமில்லை” எனச் சீன அதிகாரிகள் கருதுவதாக …
எம்எச்370 விவகாரத்தில் அரசுடன் இணைந்து செயல்பட பிகேஆர் தயார்
எம்எச்370 நெருக்கடியில் அரசியலை ஒதுக்கி வைத்துவிட்டு எதிரணி எம்பிகளுடன் இணைந்து செயல்பட பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் முன்வரவேண்டும் என்று பிகேஆர் வலியுறுத்தியுள்ளது. அதுவே சரியான ஜனநாயக நடவடிக்கையாகும் எனக் குறிப்பிட்ட பிகேஆர் உதவித் தலைவர் என். சுரேந்திரன், நஜிப் தேசிய நலன் காக்கவும் வெளிநாட்டு ஊடகங்களின் மோசமான …
எம்பி: ‘ஒற்றுமையின்மை அமைச்சரா’ ஜோசப் குருப்?
காஜாங்கில் சீன வாக்காளர்கள் “அவர்களின் இனத்தவருக்கே வாக்களிக்க வேண்டும்” என்று கூறிய பிரதமர்துறை அமைச்சர் ஜோசப் குருப்பை எதிரணி எம்பி தெரேசா கொக் சாடினார். அரசாங்க பாரங்களில் “இனம்” என்பதைக் குறிப்பிட ஒதுக்கப்பட்ட இடத்தை எடுத்துவிட வேண்டும் என்று கடந்த மாதம் வலியுறுத்திய குருப்தான் இடைத் தேர்தலில் “இனவாதம் …
ஒபாமா மலேசியா வருவது உறுதி: அமெரிக்க அதிகாரி
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா திட்டமிட்டபடி மலேசியாவுக்கு வருவார். ஆனால், அவரது வருகைக்கான தேதியும் பயண நிரலும்தான் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என கோலாலும்பூரில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் செய்தி பொறுப்பாளர் ஹார்வி செர்னோவிட்ஸ் இன்று கூறினார். “கடந்த மாதம் வெள்ளை மாளிகை அறிவித்தபடி ஏப்ரல் மாதக் கடைசியில் …
எம்எச் விளக்கக் கூட்டம்: புறக்கணிக்கப்பட்டதால் பக்காத்தான் எம்பிகள் ஆத்திரம்
நாளை கோலாலும்பூரில் தங்குவிடுதி ஒன்றில் போக்குவரத்து அமைச்சு நடத்தும் எம்எச்370 விளக்கக் கூட்டத்துக்குத் தங்களுக்கு அழைப்பு இல்லை என்பதால் கொதித்துப் போயுள்ளனர் பக்காத்தான் எம்பிகள். அமைச்சின் போக்கு நாடாளுமன்றத்தையே இழிவுபடுத்துவதாக பவுசியா சாலே(பிகேஆர்- குவாந்தான்) கூறினார். இந்த விளக்கக்கூட்டத்தை மக்களவையிலேயே நடத்தி இருக்கலாம் என்றவர்கள் சொன்னார்கள். ஆனால், நோ …
மலேசியா எம்எச்370-ஐ இடைமறிக்கும் வாய்ப்பைத் தவறவிட்டது
ஒரு நாட்டுக்குள் அடையாளம் தெரியாத ஒரு விமானம் பறந்து சென்றால் போர் விமானங்கள் உடனே புறப்பட்டுச் சென்று இடைமறிக்கும். எல்லா நாடுகளிலும் இதுதான் நடக்கும். ஆனால், மலேசியாவில் அது நடக்கவில்லை. எம்எச்370 தாய்லாந்து குடாகடலுக்கு உயரே அப்படியே திரும்பி மேற்கு நோக்கிப் பறந்தது. ஆனால், மலேசிய ஆயுதப்படை அதைக் …
அவை திருடப்பட்ட கடப்பிதழ்கள்; குடிநுழைவுத் துறை சொன்னதை ஜாஹிட்டும் ஒப்புவிக்கிறார்
எம்எச்370 விமானத்தில் பயணித்த இரு ஈரானியர்கள், ஈரானிய கடப்பிதழ்களை வைத்து மலேசியாவுக்குள் வந்தார்கள் என்று இண்டர்போல் கூறியதை மறுப்பதுபோல் அவர்கள் திருடுபோன கடப்பிதழ்களைக் கொண்டுதான் மலேசியா வந்தனர் என உள்துறை அமைச்சர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி கூறினார். அவ்விருவரும் காத்தாரிலிருந்து தாய்லாந்தின் புக்கெட்வரை சொந்த நாட்டுக் கடப்பிதழ்களைப் பயன்படுத்தி …
மழை, வறட்சியின் முடிவுக்கு அறிகுறி அல்ல
கிள்ளான் பள்ளத்தாக்கில் சனிக்கிழமை பகலிலும் நேற்றுக் காலையிலும் பெய்த மழை செயற்கையாக பெய்விக்கப்பட்ட மழை அல்ல. வடகிழக்கு பருவகாற்று முடிவுக்கு வருவதைக் குறிக்கும் மழை அது. “வடகிழக்கு பருவக்காற்று முடிவுக்கு வரும்போது கிழக்கிலிருந்து வீசும் காற்று மழையைக் கொண்டு வருவதுண்டு”,என மலேசிய வானிலை ஆய்வுத்துறையின் காற்றுமண்டல, செயற்கை மழை…
அன்வார்: பிகேஆரை எம்எச்370 உடன் தொடர்புப்படுத்துவது ஏன்?
காணாமல்போன மலேசிய விமான நிறுவனத்தின் எம்எச்370 விமானத்தையும், விமானி பிகேஆர் உறுப்பினர் என்பதையும் தொடர்புப்படுத்தி செய்திகள் வெளிவருவது குறித்து பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம் கேள்வி எழுப்பியுள்ளார். குதப்புணர்ச்சி வழக்கில் அன்வார் குற்றவாளி என்று முறையீட்டு நீதிமன்றம் அளித்த தீர்ப்பைக் கேட்டு விமானி கேப்டன் ஸஹாரி அஹமட் …
நாடு முழுக்க காற்றின் தரம் மேம்பட்டது
கடந்த சில நாள்களாக ஆரோக்கியத்துக்குக் கேடு செய்யும் வகையில் இருந்த காற்றின் தரம் இப்போது மேம்பட்டுள்ளது. இன்று காலை மணி ஆறுக்கு மேற்கொண்ட ஆய்வின்படி நாட்டின் எந்தப் பகுதியிலும் காற்றின் தரம் ‘ஆரோக்கியத்துக்குக் கேடு செய்யும்” அளவில் இல்லை என சுற்றுச்சூழல் துறை (டிஓஇ) கூறியது. டிஓஇ வெளியிட்ட …
ஜயிஸ்: ராஜா போமோ மீது விசாரணை நடத்தப்படும்
காணாமல்போன விமானத்தைக் கண்டுபிடிக்க உதவுவதாகக் கூறிக்கொண்டிருக்கும் ‘ராஜா போமோ”மீது சிலாங்கூர் இஸ்லாமிய சமயத் துறை (ஜயிஸ்) விசாரணை மேற்கொள்ளும். அவர் இஸ்லாமிய போதனைகளை மீறியதாகத் தெரியவந்தால் அவர்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஜயிஸ் இயக்குனர் அஹமட் ஸஹாரின் முகம்மட் சாஆட் கூறினார். “பொதுமக்களிடமிருந்தும் இணைய வழியாகவும் பல புகார்களை …
எம்எச்370 காணாமல் போனதற்கு ‘உள்ளூர் விவகாரங்கள்’ காரணமாக இருக்கலாம்-பெரித்தா ஹரியான்
எம்எச்370 காணாமல்போனதற்கு எத்தனை எத்தனை காரணங்களோ சொல்லப்படுகின்றன. லாஹாட் டத்து ஊடுருவல்காரர்கள், பக்காத்தான் ரக்யாட் ஆதரவாளர்கள், ஷியா பிரிவினர் போன்றோர்கூட அதற்குக் காரணமாக இருக்கலாம் என்று பெரித்தா ஹரியான் பத்தி எழுத்தாளர் ஒருவர் கூறுகிறார். “விமானம் காணமல்போனதற்கும் லஹாட் டத்து ஊடுருவலுக்கும் ஏன், அண்மைய நிகழ்வுகளுக்கும்கூட தொடர்பிருக்கலாம்”, என …