துணைப் பிரதமர் டக்ளஸ் உக்கா எம்பாஸ்(Douglas Uggah Embas) கூறுகையில், காற்று மாசுபாட்டு அளவீடுகள் 500-ஐத் தாண்டினால், அரசு மற்றும் தனியார் துறை அலுவலகங்களை மூடுவதற்கான வழிகாட்டுதல்கள் உள்ளன. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் நிகழ்ச்சிகளை நடத்துவதா அல்லது ரத்து செய்வதா என்பதைத் தாங்களே முடிவு செய்யலாம்; ஆனால் அதிகாரிகள் ஏதேனும் உத்தரவு…
‘வாருங்கள் வாதிடலாம்’- ஷாபிக்கு ஹனிபா மீண்டும் சவால்
பாஸ் செப்பாங் எம்பி முகம்மட் ஹனிபா மைடின், அன்வார் இப்ராகிமின் குதப்புணர்ச்சி வழக்குமீது வாதமிட வருமாறு அரசாங்கம் நியமித்த அரசுத்தரப்பு வழக்குரைஞரான ஷாபி அப்துல்லாவுக்கு மீண்டும் சவால் விடுத்துள்ளார். இன்று நாடாளுமன்றத்தில் அவர் இச்சவாலை விடுத்தார். “ஆம். அதன்மீது வாதமிட நான் தயார். ஷாபியுடன் அல்லது வேறு யாருடனும்,…
ஷாபியின் முதலாவது விளக்கக் கூட்டத்தை ஏற்பாடு செய்ததை அரசாங்கம் ஒப்புக்கொண்டது
அன்வார் இப்ராகிமின் குதப்புணர்ச்சி வழக்கு II-மீதான ஷாபி அப்துல்லாவின் முதலாவது விளக்கக் கூட்டத்தை ஏற்பாடு செய்ததை ஒப்புக்கொண்ட அரசாங்கம், அதன்பின்னர் நடந்த விளக்கக் கூட்டங்களுக்கும் தனக்கும் தொடர்பில்லை என்று கூறிற்று. அரசாங்கம் “முதலாவது கூட்டத்தை மட்டுமே ஏற்பாடு செய்தது” என நன்சி ஷுக்ரி இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். “மற்ற …
மகாதிர்: 1எம்டிபி பற்றிய கேள்விகள் வேண்டாமே
எதைப் பற்றிக் கேட்டாலும் தயங்காது பதிலளிக்கக் கூடியவர் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட். ஆனால், அவர் இன்று தாம் கலந்துகொள்ளும் நிகழ்வு பற்றி மட்டுமே கேள்விகள் கேட்க வேண்டும் என்பதை வலியுறுத்தியது ஆச்சரியமாக இருந்தது. செர்டாங் பெர்டானா பல்கலைக்கழகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மகாதிர், 1மலேசியா மேம்பாட்டு நிறுவனம்…
1எம்டிபி-இன் கேய்மன் நிதியான ரிம4 பில்லியன் இப்போது சிங்கப்பூரில்
1மலேசியா மேம்பாட்டு நிறுவனம் (1எம்டிபி) கேய்மன் தீவில் செய்த முதலீட்டில் மிச்சமிருந்த யுஎஸ்$1.103 பில்லியன் இப்போது சிங்கப்பூர் வங்கி ஒன்றில் இருப்பதாக அரசாங்கம் தெரிவித்தது. 4 பில்லியன் ரிங்கிட்டுக்குச் சமமான அத்தொகை இப்போது பிஎஸ்ஐ பேங்க் லிமிடெட் சிங்கப்பூரில் வைக்கப்பட்டிருப்பதாக நிதி அமைச்சு டோனி புவா(டிஏபி- பெட்டாலிங் உத்தாரா)வின் …
அரசாங்கம் ஷாபிக்குக் கொடுத்தது ரிம1,000 மட்டுமே
அன்வார் இப்ராகிமின் குதப்புணர்ச்சி 11-வழக்கில் அரசுத் தரப்புத் தலைமை வழக்குரைஞராக பணியாற்றிய வழக்குரைஞர் ஷாபி அப்துல்லாவுக்குச் சன்மானமாக ரிம 1,000 மட்டுமே வழங்கப்பட்டதாக நடப்பில் சட்ட அமைச்சரான நன்சி ஷுக்ரி கூறினார். “ஷாபி பெற்ற மொத்த தொகையே ரிம1,000-தான்”, என எர் டெக் ஹாவ்(டிஏபி- பக்ரி ஹாவின் கேள்விக்கு …
அன்வாரின் உரையை நுருல் அவரது சொந்த உரையாக எடுத்துக் கொள்ள…
பெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்ற உறுப்பினரும் பேரரசரின் நாடாளுமன்ற எதிரணித் தலைவருமான அன்வார் இப்ராகிமின் உரையை பிகேஆர் லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினர் நூருல் இஸ்ஸா நாடாளுமன்ற மக்களவையில் வாசிப்பதற்கு மக்களவை இன்று தடை விதித்தது. எதிரணித் தலைவருடைய உரையின் ஒரு பகுதியை நூருல் இஸ்ஸா அவரது சொந்த…
பாஸ் கட்சியின் தலைமைப் பதவிக்கான நியமனத்தை துவான் இப்ராகிம் நிராகரித்தார்
எதிவரும் கட்சித் தேர்தலில் பாஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு துவான் இப்ராகிம் துவான் மான் நியமனம் செய்யப்பட்டிருந்தார். ஆனால், அவர் அந்த நியமனத்தை நிராகரித்து விட்டார். பாஸ் கட்சியின் உதவித் தலைவரான அவர், தமது நியமனத்தை "அதிர்ச்சி" அளிப்பதாகும் என்று வர்ணித்தார். தற்போதைய தலைவர் அப்துல் ஹாடி…
ரபிஸி கைது செய்யப்பட்டார்
அன்வார் இப்ராகிம் ஆதரவு கித்தா லவான் பேரணியில் கலந்து கொண்டதற்காக பிகேஆரின் ரபிஸி ரமலி இன்று கைது செய்யப்பட்டார். இவர் கைது செய்யப்பட்ட நான்காவது பிகேஆர் தலைவர். 1 மலேசியா மேம்பாடு பெர்ஹாட்டிற்கு எதிராக போலீஸ் புகார் செய்வதற்காக சென்ற ரபிஸியை போலீசார் கைது செய்தனர். இப்போது…
‘பழனிவேலின் காணொளியால்’ பரபரப்பு
மஇகாவில் பல குளறுபடிகள் நிகழ்ந்துவரும் வேளையில், சமூக வலைத்தளங்களில் உலவி வரும் பழனிவேலின் காணொளி ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 3:16 நிமிடம் ஓடும் அந்தக் காணொளியில் இருப்பது மஇகா தலைவர்தானா என்பதை உறுதிப்படுத்த இயலவில்லை. அக்காணொளியில் பேசும் அந்த மனிதர், அவருக்கு பிகேஆருடன் நெருக்கமான உறவு இருப்பதாகக் கூறுகிறார்.…
‘ஐஜிபி நீதிமன்றத்தை அவமதிக்கிறார்’,வழக்குரைஞர்
இன்ஸ்பெக்டர்-ஜெனரல் அப் போலீஸ், காலிட் அபு பக்கார், 2012 அமைதிப் பேரணிச் சட்டம் பகுதி 9(5)-ஐ அமல்படுத்துவதன்வழி நீதிமன்றத்தை அவமதிக்கிறார் என வழக்குரைஞர் எரிக் பால்சன் கூறினார். அச்சட்டம் அரசமைப்புக்கு விரோதமானது என மேல்முறையீட்டு நீதிமன்றம் கடந்த ஆண்டு தீர்ப்பளித்துள்ளதாகவும் எனவே அது செல்லாது எனவும் சுதந்திரத்துக்குப் போராடும் …
புத்ரா ஜெயா: நீர் உடன்பாடு முறிந்ததற்கு சிலாங்கூரே காரணம்
சிலாங்கூர் மாநில அரசுதான் நீர் உடன்பாட்டை “முறித்துக்கொண்டது” எனக் கூட்டரசு அரசாங்கம் கூறுகிறது. இன்று நாடாளூமன்றத்தில் இதனைத் தெரிவித்த எரிபொருள், பசுமைத் தொழில்நுட்பம், நீர்வள அமைச்சர் மெக்சிமஸ் ஒங்கிலி, செப்டம்பரில் இரு தரப்பினரும் செய்துகொண்ட உடன்பாட்டின் நிபந்தனைகளை மாநில அரசுதான் நிறைவேற்றவில்லை என்றார். “எங்களைப் பொறுத்தவரை, உடன்பாட்டை நீட்டிப்பதில்லை …
கித்தா லவான் பேரணி: மேலும் ஒரு பிகேஆர் தலைவர் கைது
சனிக்கிழமை நடைபெற்ற கித்தா லவான் பேரணி தொடர்பில் பிகேஆர் மத்திய செயல்குழு உறுப்பினர் ஃபாரிஸ் மூசா இன்று கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்டதை ஃபாரிஸ் டிவிட்டரில் உறுதிப்படுத்தினார். அமைதிப் பேரணிச் சட்டம் மற்றும் குற்றவியல் சட்டம் பகுதி 143-இன்கீழ் தாம் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக அவர் டிவிட் செய்திருந்தார். ஃபாரிஸ், …
1எம்டிபி: நஜிப்பும் விசாரிக்கப்படலாம்
1மலேசியா மேம்பாட்டு நிறுவன(1எம்டிபி)த்தின் கணக்குகள் அந்நிறுவனம் தொடங்கப்பட்ட 2009-ஆம் ஆண்டிலிருந்து ஆய்வு செய்யப்படும் எனத் தலைமைக் கணக்காய்வாளர் அம்ப்ரின் புவாங் அறிவித்துள்ளார். இன்று இதை அறிவித்த அவர், இவ்விவகாரத்தில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கும் விசாரிக்கப்படலாம் என்றார். “தேவை என்றால் விசாரிப்போம். போலீசும் இதைத்தான் சொல்லியுள்ளது”, என்று அம்ப்ரின் …
அன்வாரின் சிறைத் தண்டனையை எதிர்த்து எம்பிகள் மொட்டை அடித்துக் கொண்டனர்
எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம் சிறையிடப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவிக்க 15-க்கு மேற்பட்டோர் இன்று நாடாளுமன்றத்துக்கு முன் மொட்டை அடித்துக் கொண்டனர். அவர்களில் கோட்டா கினாபாலு எம்பி ஜிம்மி வோங், பாசிர் பூத்தே எம்பி நிக் மைஸான் நிக் முகம்மட் ஆகியோரும் உள்ளிட்டிருந்தனர். நிக் மைஸான், “குறைபாடுடைய” நீதிமுறைக்கு எதிர்ப்புத் …
செம்பாக்கா இடைத் தேர்தலில் ஐந்து-முனை போட்டி
கிளந்தான், செம்பாக்கா இடைத் தேர்தல் ஐந்து-முனைப் போட்டியாக அமையும். பாஸின் கோட்டையான அத்தொகுதியில் பாஸுக்கு எதிராக 4 சுயேட்சை வேட்பாளர்கள் களமிறங்குகிறார்கள். பாஸ் கட்சி பாவுங் பள்ளிவாசல் இமாம் அஹ்மட் பாத்தான் முஹ்மூட்டை அதன் வேட்பாளராக நியமித்துள்ளது. அவரை எதிர்த்து கிளந்தான் பெர்காசா உதவித் தலைவர் ஷரிப் மஹ்மூட், …
மகாதிர்: சிவப்புச் சட்டைக்காரர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும்
நேற்று அம்னோ தொகுதித் தலைவர்கள் அனைவரும் பிரதமர் நஜிப்புடன் நடத்திய தோழமைக் கூட்டத்தில் சிவப்புச் சட்டை அணிந்திருந்தனர். ஆகவே, கட்சியில் எல்லாம் நல்லதாகவே இருக்கும் என்று கூறப்பட்டது. நேற்று நஜிப்புக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக கூடியிருந்த அம்னோ தொகுதித் தலைவர்கள் பற்றி கேட்ட போது டாக்டர் மகாதிர் இப்படி…
1எம்டிபி மீது விசாரணை நடத்த சிறப்பு பணிப்படை
1மலேசியா மேம்பாடு பெர்ஹாட் சம்பந்தப்பட்ட விவகாரங்கள் பற்றி விசாரணை நடத்துவதற்காக ஒரு சிறப்பு பணிப்படை அமைக்கப்பட்டுள்ளது என்று இன்ஸ்பெக்டர் ஜெனரல் காலிட் அபு பாக்கார் தெரிவித்துள்ளார். அப்பணிப்படையில் போலீசார், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் மற்றும் சட்டத்துறை தலைவர் அலுவலகம் இடம் பெற்றிருக்கும் என்று அவர் செய்தியாளர்களிடம்…
ஐஜிபி: சரணடையுங்கள் அல்லது வேட்டையாடப்படுவீர்
கடந்த சனிக்கிழமை கோலாலம்பூரில் கித்தா லவான் பேரணியை ஏற்பாடு செய்தவர்கள் தாங்களாகவே முன்வந்து போலீசாரிடம் சரணடைய வேண்டும் என்று இன்ஸ்பெக்டர் ஜெனரல் காலிட் அபு பாக்கார் கூறியுள்ளார். "வரவில்லை என்றால், நாங்கள் அவர்களை தேடுவோம்", என்று செராஸ்சில் இன்று நடந்த ஒரு செய்தியாளர் கூட்டத்தில் ஐஜிபி கூறினார்.…
முறையாக உடை அணியும் விதியை முஸ்லிம்- அல்லாதாரிடையேயும் அமல்படுத்த வேண்டும்
திரெங்கானு அரசு மோட்டார் சைக்கிளில் பின்புறம் அமர்ந்து செல்லுதல், வெள்ளிக்கிழமை தொழுகையைத் தவிர்த்தல், பொது இடங்களில் கவர்ச்சிக் காட்டி உடை அணிதல் போன்ற விவகாரங்களில் இஸ்லாமிய ஒழுங்கு விதிகளை நடைமுறைப்படுத்துவதில் கடுமையாக நடந்து கொள்வதை ரித்வான் டீ அப்துல்லா வரவேற்றுள்ளார். அதைத் தாலிபானிசம் என்று குறைகூறுவோரைச் சாடிய அவர், …
அஸ்மின்: நீர் உடன்பாட்டுக்கான கெடு முடிந்தது, இனி நீட்டிக்கப்படாது
சிலாங்கூர் அரசுக்கும் கூட்டரசு அரசாங்கத்துக்குமிடையிலான நீர் உடன்பாடு இன்றுடன் முடிவுக்கு வருகிறது என்றும் அது இனி நீட்டிக்கப்படாது என்றும் மந்திரி புசார் அஸ்மின் அலி கூறினார். நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அஸ்மின், கூட்டரசு அரசாங்கம் “உடன்பாட்டின் நிபந்தனைகளை மீறி விட்டதாக”வும் அதனால் மாநில அரசுக்கு வேறு வழியில்லாமல் …
பேரரசர்: அதிகாரப் பகிர்வின்மீது நம்பிக்கை வையுங்கள்
இன்று 13வது நாடாளுமன்றக் கூட்டத்தைத் தொடக்கி வைத்த பேரரசர் துவாங்கு அப்துல் ஹாலிம் முவாட்ஸாம் ஷா. மலேசியர்கள் சட்டமியற்றும் துறை, நிர்வாகம், நீதித்துறை ஆகிய மூன்றின் அதிகாரப் பகிர்வின்மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என வலியுறுத்தினார். மலேசியாவில் “நடப்புச் சட்டங்களுக்கு ஏற்ப” அதிகாரப் பகிர்வு நன்கு வேரூன்றி இருப்பதாக…
சுல்கிப்ளி: தாக்குதலுக்கும் பாஸ் தேர்தலுக்கும் தொடர்பில்லை
வியாழக்கிழமை தாக்கப்பட்டிருந்தாலும் பாஸ் மத்திய செயல்குழு உறுப்பினர் சுல்கிப்ளி அஹ்மட், துணிச்சலாக கருத்துச் சொல்லும் போக்கை மாற்றிக்கொள்ளப் போவதில்லை. “மனத்தில் அச்சத்தை உண்டுபண்ணுவதுதான் தாக்குதலின் நோக்கம். ஆனால், நான் தொடக்கத்திலிருந்தே அச்சம் கொள்வதற்கு எதிராக போராடி வந்திருக்கிறேன். “அது என் பணியைத் தடுக்காது”, என்றவர் மலேசியாகினியிடம் தெரிவித்தார். அத்தாக்குதலுக்கும் …
எதிர்ப்பைத் தெரிவிக்க கருப்பு உடையில் பிகேஆர், டிஏபி எம்பிகள்
இன்றைய நாடாளுமன்றத் தொடக்க விழாவில் பிகேஆர், டிஏபி எம்பிகள் கருப்பு உடையில் கலந்துகொண்டனர். சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம் நாடாளுமன்றக் கூட்டத்தில் கலந்துகொள்ள அனுமதி மறுக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் அவர்கள் கருப்பு உடை தரித்திருந்தனர். பாஸ் எம்பிகளில் சிலரும் கருப்பு உடை அணிந்திருந்தனர். …



