மலேசியாகினி: “அன்புள்ள பிரதமரே, வாருங்கள் நீதிமன்றத்தில் சந்திப்போம்”

  மலேசியாகினி வாசகர்கள் தெரிவித்திருந்த கருத்துகளை பதிவு செய்ததற்காக அதன் மீது பிரதமர் நஜிப்பும் அம்னோவும் வழக்கு தொடர்ந்துள்ளன. அதற்கான நீதிமன்ற ஆணை இன்று மலேசியாகினியிடம் சார்வு செய்யப்பட்டது. மலேசியாகினியை வெளியிடும் எம்கினி டோட் கோம் செண்டிரியான் பெர்ஹாட், ஆசிரியர் குழு தலைவர் ஸ்டீபன் கான், தலைமை ஆசிரியர்…

பிஎன்னுக்குத் திரும்பி வாருங்கள்- ஆசிரியர்களை அழைக்கிறார் அமைச்சர்

ஆசிரியர்கள்  அரசியலுக்குத்  திரும்ப  வேண்டும்  அதுவும்  பிஎன்னில்  இணைய  வேண்டும்  என்று  கூட்டரசு  பிரதேச  அமைச்சர்  தெங்கு  அட்னான்  தெங்கு  மன்சூர்  வலியுறுத்தினார்.  ஆசிரியர்கள்  அரசியலில்  ஈடுபடுவதைத்   தடுத்தது  தவறு  என்றும்  அவர்  ஒப்புக்கொண்டார். “அம்னோவோ, மஇகாவோ,  மசீசவோ,  பிஎன்னோ  ஆசிரியர்களே  அக்கட்சிகளை  முன்னுக்குக்  கொண்டுசெல்வோர். “10, 12 …

என்ஜிஓ: ஜிஎஸ்டி விளம்பரப் பலகைகளை அகற்றுவீர்

பொருள், சேவை  வரியை(ஜிஎஸ்டி)  விளக்குவதற்காக  நிறுத்திவைக்கப்பட்டுள்ள  கேலிச் சித்திரங்கள்  கொண்ட  விளம்பரப் பலகைகள்  அந்த  வரியைப்  பற்றிச்  சரியான  முறையில்  விளக்கமளிக்கவில்லை  என்று    ஜாரிங்கான்  மலாயு  மலேசியா(ஜேஎம்எம்)  கூறியுள்ளது.  அத்துடன்,  அவற்றுக்கு  நிறைய  செலவும்  ஆவதாகக்  கூறியது. அவற்றில்  எழுத்துகள்  சிறியவை  என்பதால்  சாலைகளில்  செல்வோரால் படிக்க  முடிவதில்லை …

டியானா தாயாருக்கு விளக்கம்கேட்டு அம்னோ கடிதம் அனுப்பியது

மே 31  தெலோக்  இந்தான்  இடைத் தேர்தலில்  டிஏபி  வேட்பாளராக  போட்டியிட்ட  தம்  மகள்  டியானா  சோபி  முகம்மட்  டாவுட்டுக்கு  ஆதரவாக  செயல்பட்டது  ஏன்  என்று  விளக்கம்  கேட்டு  யம்மி  சமத்துக்கு  அம்னோ  கடிதம்  அனுப்பியுள்ளது. “தெலோக் இந்தான்  இடைத்  தேர்தலில்  அவர்  நடந்துகொண்ட விதத்துக்காக  ஏன்  அவரைத் …

கேட்பரியைச் சாப்பிட்டு அதை ஹலாலானது என்பதைக் காண்பிக்க ஜாகிம் தயார்

மலேசிய  இஸ்லாமிய  மேம்பாட்டுத்  துறை (ஜாகிம்)  கேட்பரி  சாக்லெட்டுகள்  ஹலாலானவை  என்று  சான்றளித்திருப்பதை  நிரூபிக்க  அதன்  அதிகாரிகள்  அதைச்   சாப்பிட்டுக்  காட்டவும்  தயாராக வுள்ளனர். அவை  ஹலாலானவை  என்பதில்  தங்களுக்குச்  சிறிதும்  ஐயமில்லை  என  ஜாகிம் முதுநிலை இயக்குனர்  முகம்மட்  அம்ரி அப்துல்லா  கூறினார். “கேட்பரி  ஹலாலானது  என …

‘பன்றி டிஎன்ஏ’ அறிக்கை கசிந்தது எப்படி? அமைச்சு ஆராய்கிறது

கேட்பரி  சாக்லெட்டுகளில் பன்றி  டிஎன்ஏ  கலந்திருப்பதாகக்  கூறிய  தொடக்கநிலை  அறிக்கையைச்  கசியவிட்டது  யார்  என்பதைக்  கண்டுபிடிக்க  சுகாதார  அமைச்சு  உள்விசாரணை  ஒன்றை  நடத்தி  வருகிறது. இதைத்  தெரிவித்த  துணை  அமைச்சர்  ஹில்மி  யாஹயா, அந்த  அறிக்கையை  உறுதிப்படுத்துவதற்குமுன்  யாரோ  அவரசப்பட்டு விட்டார்கள்  என்றார். இவ்விவகாரத்தில்  ஜாகிமின்  விசாரணையையே  முடிந்த …

கட்சித் தேர்தலில் குழப்பம் ஏற்படுத்தாதீர்: வெளியாருக்கு பிகேஆர் தலைவர் எச்சரிக்கை

பிகேஆர்  தலைவர்  டாக்டர் வான்  அசீசா  வான்  இஸ்மாயில், “வெளியார்கள்” கட்சித்  தேர்தல்களில்  குறுக்கிட்டு  குழப்படி  செய்வதை   நிறுத்திக்கொள்ள வேண்டும்  என  எச்சரித்துள்ளார். “தேர்தல்களில்  தொல்லை  விளைவித்தவர்கள்  உறுப்பினர்-அல்லாதார்  என்பதும்  அவர்கள்  இரகசிய  கும்பல்களின்  ஆதரவுடன்  செயல்படுபவர்கள்  என்பதும்  தொடக்கநிலை  தகவல்களில்  தெளிவாக  தெரியவந்துள்ளன”, என  வான்  அசீசா …

ஜயிஸின் நடவடிக்கையை ஆதரிக்கிறார் பாஸ் தலைவர்

மணப்பெண்  முஸ்லிம்  என்று  தெரிந்ததும், பெட்டாலிங்  ஜெயாவில்  இந்து  திருமணம் ஒன்றைத்  தடுத்து  நிறுத்திய  சிலாங்கூர்  இஸ்லாமிய  விவகாரத்  துறை (ஜயிஸ்)யின்  செயலை  பாஸ்  தலைவர்  ஒருவர்  தற்காத்துப்  பேசியுள்ளார். காதலும்  கல்யாணமும்  முஸ்லிம்களின்  சமய  நம்பிக்கைகளுக்குக்  குழிபறிக்கும்  கருவிகளாக  மாறிவருவதாக பாஸ்  மத்திய  செயல்குழு  உறுப்பினர்  ரித்வான் …

இஸ்மா: டிஏபி ஒரு புற்றுநோய்; அதை ஒழித்துக்கட்டுங்கள்

சில  நாள்கள்  ஓய்ந்திருந்து விட்டு  இப்போது  டிஏபிமீதான  தாக்குதல்களை மறுபடியும்  தொடங்கியுள்ள ஈக்காத்தான்  முஸ்லிமின்   மலேசியா (இஸ்மா),  டிஏபி-யை ஒருவகை  புற்றுநோய்  என  வருணித்துள்ளது. தெலோக்  இந்தான்  இடைத்  தேர்தலில்  டிஏபி  வேட்பாளர்  டியானா  சோபியா  முகம்மட்  சோபியா  தோல்வி  அடைந்தது பற்றிக்  கருத்துரைத்த  இஸ்மா-வின் அரசியல்  பிரிவுச் …

முகநூல் பதிவுக்காக அமைச்சின் கண்காணிப்பில் ஆசிரியை

தம் முகநூல்  பக்கத்தில்   தெலோக்  இந்தான்  டிஏபி  வேட்பாளர்  டியானா  சோபியாவின்  பரப்புரை  சுவரொட்டிகளைப்  பதிவிட்டிருந்த  ஆசிரியை  ஒருவர்  அரசின்  கோபத்துக்கு  ஆளாகியுள்ளனர். கல்வி  அமைச்சின்  உயர்  அதிகாரி  ஒருவர்  ஆசிரியையைத்  தொடர்புகொண்டு அது  “அரசாங்க- எதிர்ப்பை”க்  காட்டுவதாகவும்  அதை  அகற்றும்படியும்  “அறிவுறுத்தியுள்ளார்”. “தொடர்ந்து  கண்காணித்து  வருவோம்  என்றாரவர்” …

இந்து திருமணத்தில் அதிரடியாக புகுந்த ஜயிஸுக்கு இண்ட்ராப் கண்டனம்

சிலாங்கூர்  இஸ்லாமிய  விவகாரத் துறை   “ஆர்வக்கோளாற்றால்” எல்லைமீறி  நடந்துகொள்வதைத்  தடுக்க  சட்டத்தில்  திருத்தம்  கொண்டுவர  வேண்டும்  என    நாடாளுமன்ற  உறுப்பினர்களை  மலேசிய  இண்ட்ராப்   கேட்டுக்கொண்டுள்ளது. மணப்பெண்  ஒரு  முஸ்லிம்  என்ற  சந்தேகத்தின்பேரில்  ஞாயிற்றுக்கிழமை  ஒரு கோயிலில்  நடந்துகொண்டிருந்த  திருமணத்தை  ஜயிஸ்  தடுத்து  நிறுத்தியதை  இண்ட்ராப்  தலைவர்  பி.வேதமூர்த்தி  கண்டித்தார்.…

பிரதமர்: ஜிஎஸ்டி கிராமப்புற மேம்பாட்டுக்கு உதவும்

அடுத்த  ஆண்டில்  பொருள்,  சேவை  வரி (ஜிஎஸ்டி)  அமலாக்கம்  செய்யப்படும்போது  கிராமப்புற  மக்கள்  அதனால்  பெரிதும்  பயனடைவார்கள்  எனப்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  கூறினார். ஜிஎஸ்டி அமலாக்கம்  செய்யப்படுவதால்  அரசாங்க  வருமானம்  கூடும். அது  மேம்பாட்டுப்  பணிகளுக்கு, குறிப்பாக  கிராமப்புறப் பகுதிகளின்  மேம்பாட்டுக்கு  உதவும். “வருமானம்  கூடும்போது …

இப்ராகிம் அலி: பெர்காசா உறுப்பினர் தொகை கூடி வருகிறது

பெர்காசாவில் 500,000  உறுப்பினர்கள்  இருப்பதாகவும்  அதுவே   வெளிநாடுகளுக்கும்  விரிவாக்கம்  கண்டுள்ள  ஒரே  மலாய்  என்ஜிஓ  என்றும் அதன்  தலைவர் இப்ராகிம்  அலி  கூறினார். இப்ராகிம்  அலி,  லண்டனில்,  பெர்காசா  யுகே, ஐரோப்பா-வைத்  தொடக்கிவைத்தபோது  அவ்வாறு  கூறியதாக  உத்துசான்  மலேசியா  அறிவித்துள்ளது. அதில் பிரிட்டன், பெல்ஜியம்,  பிரான்ஸ்,  ஜெர்மனி  ஆகியவற்றைச் …

கேட்பரி சாக்லெட்டில் பன்றி டிஎன்ஏ இல்லையாம்

கேட்பரி  சாக்லெட்டில்  பன்றி  டிஎன்ஏ  இருப்பதாக  அறிவித்து  பரபரப்பை  ஏற்படுத்திய  அதிகாரிகள் இப்போது  பல்டி அடித்துள்ளனர். புதிதாக  மேற்கொள்ளப்பட்ட  சோதனைகளில்  பன்றி  டிஎன்ஏ  இருப்பதற்கான  அறிகுறி  எதுவும்  காணப்படவில்லை  என  பிரதமர்துறை  அமைச்சர்  ஜமில்  கீர்  பஹாரோம்  தெரிவித்ததாக  உத்துசான்  மலேசியா  கூறியுள்ளது. கேட்பரி  டேய்ரி  மில்க்  ஹேசல்நட், …

சைட்: தேர்தல் நியாயமாக நடக்காதவரை டியனாவால் வெற்றிபெற முடியாது

தேர்தல்கள்  சுதந்திரமாகவும்  நியாயமாகவும்  நடக்காதவரை  டியானா  சோபியா  முகம்மட்  டாவுட்  போன்றவர்கள்  தோல்விதான்  காண்பார்கள்  என்கிறார்  முன்னாள்  அமைச்சர்  சைட்  இப்ராகிம். “ஒரு  முறையான  தேர்தல்  ஆணையம்(இசி)  அமைந்து  அது  பாரபட்சமின்றி,  தேர்தல்கள்  சுதந்திரமாகவும்  நியாயமாகவும்  நடைபெறுவதை  உறுதிப்படுத்தும்வரை  தேர்தலில்  போட்டியிடுவதே  வீண்  வேலைதான். “இப்போதைய   இசி  இருந்தாலும்கூட,  …

கேஜே: தனிப்பட்ட முறையில் மன்னிப்பு கேட்டதே போதுமானது

டிஏபி  தலைமையகத்துக்கு வெளியில்  நடந்த  ஆர்ப்பாட்டத்துக்குத்  தனிப்பட்ட  முறையில்  ஏற்கனவே  மன்னிப்பு  கேட்டாயிற்று  என்பதால்  பகிரங்க  மன்னிப்பு  கேட்கப்போவதில்லை  என அம்னோ  இளைஞர்  தலைவர்  கைரி  ஜமாலுடின்  கூறினார். “தனிப்பட்ட  மன்னிப்போ, பகிரங்க  மன்னிப்போ,  இரண்டும்  ஒன்றுதான்.  டிஏபி-இன்  சொத்துக்களுக்குச் சேதம்  ஏற்பட்டதற்கு  ஏற்கனவே  வருத்தம்  தெரிவித்து  விட்டேன்.…

‘எங்களை ஒய்பி என்று அழைக்காதீர்கள்’-பாடாங் செராய் எம்பி

எம்பிகளை ‘ஒய்பி’(மாண்புமிகு)  என்று  அழைப்பதை  நிறுத்த வேண்டும்  என  பாடாங்  செராய்  நாடாளுமன்ற  உறுப்பினர்  என். சுரேந்திரன்  பொதுமக்களைக்  கேட்டுக்கொண்டிருக்கிறார். “சுதந்திரமான,  ஜனநாயக  நாட்டில்  தேர்ந்தெடுக்கப்பட்ட  பிரதிநிதிகளுக்குக்  கெளரவ  விருதுகள்  அளித்து  அவர்களை  மக்களைவிட  மேலானவர்களாக  உயர்த்திவைப்பது  விரும்பத்தக்கதல்ல”. உண்மையில்,  தேர்ந்தெடுக்கப்பட்ட  பிரதிநிதிகள்  ‘பொதுமக்களின்  வேலைக்காரர்களே’  தவிர  பொதுமக்களின் …

உதயகுமார் அனைத்துலக செஞ்சிலுவை மன்றத்தின் உதவியை நாடுகிறார்

  காஜாங் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஹிண்ட்ராப் தலைவர் பி.உதயகுமாரின் அவலநிலையை விசாரிக்கக் கோரும் கடிதம் ஒன்றை ஹிண்ட்ராப் கடந்த புதன்கிழமை அனைத்துலக செஞ்சிலுவை மன்றத்திடம் சமர்ப்பித்தது. தாம் காஜாங் சிறையில் நடத்தப்படும் முறை குறித்து உதயகுமார் அக்கடிதத்தில் கூறியுள்ளார். தம்மையும் இதர கைதிகளையும் சந்தித்து உண்மையான நிலவரத்தை அறிந்துகொள்வதற்கு…

நஜிப்” மசீவை மறந்துவிடவில்லை

  தெலுக் இந்தான் நாடாளுமன்ற இடைத் தேர்தலில் பிஎன் பெற்ற வெற்றியில் திளைத்திருந்த பிரதமர் நஜிப் தேர்தல் பரப்புரையின் போது கெராக்கான் தலைவரும் வேட்பாளருமான மா சியு கியோங் தேர்தலில் வெற்றி பெற்றால் அவருக்கு அமைச்சர் பதவி அளிக்கப்படும் என்ற வாக்குறுதியை நிறைவேற்ற திட்டமிட்டுள்ளதாக நிருபர்களின் கேள்வி ஒன்றுக்கு…

மசீச: தேர்தல் முடிவு பிஎன் மீது இப்போது சீனர்களுக்குள்ள நம்பிக்கையைக்…

  தெலுக் இந்தான் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் சீனர்களின் வாக்குகள் பிஎன் பக்கம் சாய்ந்தது அச்சமூகம் ஆளும் கூட்டணி மீது இப்போது நம்பிக்கை கொண்டுள்ளனர் என்பதைக் காட்டுகிறது என்று மசீச தலைவர் லியோவ் தியோங் லாய் கூறுகிறார். தெலுக் இந்தான் தொகுதியை டிஎபியிடமிருந்து கெராக்கான் தலைவர் மா சியு கோங்…

அதிகாரப்பூர்வமற்ற நிலை: மா சியு கியோங் வெற்றி பெற்றார்

  இரவு மணி 8.20: அதிகாரப்பூர்வமற்ற தகவல்படி பிஎன் வேட்பாளர் 238 வாக்கு பெரும்பான்மையில் வெற்றி பெற்றிருக்கிறார். கெராக்கான் நடவடிக்கை மையத்திற்கு வந்த மா அவருடைய ஆதரவாளர்களுடன் பேசினார். அவர் அங்குள்ளவர்களை அமைதியாக இருக்குமாறு கேட்டுக் கொண்டார். அதிகாரப்பூர்மற்ற முடிவு வெளியாகி விட்டது. ஆனால் நமது எதிர்ப்பாளர்கள் வாக்குகள்…

தெலுக் இந்தான் இடைத்தேர்தல்; மா சியு கியோங் வெற்றி

  இரவு மணி 9.45 - தெலுக் இந்தான் நாடாளுமன்ற இடைத் தேர்தலில் பாரிசான் வேட்பாளர் மா சியு கியோங் வெற்றி பெற்றார் என்று தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விபரம்: பிஎன் - 20, 157 டிஎபி - 19, 919 பெரும்பான்மை…

கெராக்கான் வெற்றியா?

 இரவு மணி 7.45: தெலுக் இந்தான் நாடாளுமன்ற இடைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் 100 வாக்குகள் பெரும்பான்மையில் பாரிசான் வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார் என்று கெரார்க்கான் கூறிக்கொள்கிறது. இதர அதிகாரப்பூர்வமற்ற செய்திகளின்படி டிஎபியின் டாயா 50 வாக்குகள் வித்தியாசத்தில் வாக்கு எண்ணிக்கையில் முன்நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.