பள்ளி பகடிவதை புகார்கள் மீது பள்ளி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதை கல்வி அமைச்சகம் உறுதி செய்ய வேண்டும் என்று பெற்றோர் குழு ஒன்று கூறுகிறது. பள்ளி பகடிவதைப்படுத்துபவர்களைக் கையாள்வதற்கான நிலையான இயக்க நடைமுறைகளை அமைச்சகம் மதிப்பாய்வு செய்யும் போது, கல்விக்கான பெற்றோர் நடவடிக்கைக் குழு (PAGE) புதுப்பிக்கப்பட்டநிலையான இயக்க…
பத்து பெரிங்கி கடல்கரை இப்போதைக்கு மூடப்படாது
பினாங்கு அரசு, இப்போதைக்கு பத்து பெரிங்கி கடல்கரையை மூடாது. அப்பகுதியில் காணப்படும் ஈ கோலி பெக்டீரியா அளவு குறித்த சுற்றுச்சூழல் துறையின் அறிக்கைக்காக அது காத்திருக்கிறது. அறிக்கை கிடைத்த பின்னர் அது முடிவெடுக்கும். பெக்டீரியாவின் அளவு அபாயம் விளைவிக்கும் வகையில் இருக்குமானால் கடல்கரை மூடப்படும் என மாநில ஆட்சிக்குழுவில் …
தாயிப்புக்குப் பின் ஆவாங் தெங்கா சிஎம் ஆவாரா?
சரவாக் முதலமைச்சர் அப்துல் தாயிப் மஹ்முட் இம்மாத இறுதியில் பணி ஓய்வு பெறும்போது இப்போது பிபிபி கட்சியின் உதவித் தலைவராகவுள்ள ஆவாங் தெங்கா அலி ஹசன் முதலமைச்சராகலாம் என்று கூறப்படுகிறது. “சரவாக்கியர் ஒருவர்தான் சர்வாக்குக்குத் தலைமை தாங்க வேண்டும்” என்று தாயிப் கூறி இருப்பதிலிருந்து அப்படித்தான் நினைக்கத் தோன்றுகிறது.…
வேதமூர்த்தி துணை அமைச்சர், செனட்டர் பதவிகளை துறக்கிறார்
பெசாத்துவான் ஹிண்ட்ராப் மலேசியாவின் தலைவரும் பிரதமர்துறையில் துணை அமைச்சராகவும் பதவி வகிக்கும் பி. வேதமூர்த்தி தமது பதவிகளை துறக்க விருப்பதாக அந்த அமைப்பின் தேசிய ஆலோசகர் என். கணேசன் கூறுகிறார். பெப்ரவரி 10 ஆம் தேதி வேதமூர்த்தி தமது விலகவிருக்கிறார். பிரதமர் நஜிப் இந்தியர்களுக்கு இழைத்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க…
ஜாஹிட்: தெரேசாவை அறைந்தால் வெகுமதி என்பது ஒரு மிரட்டல் அல்ல
சிபூத்தே எம்பி தெரேசா கொக்கை கன்னத்தில் அறைவோருக்கு ரொக்கப் பணம் வெகுமதியாக வழங்கப்படும் என்று முஸ்லிம் என்ஜிஓ ஒன்று அறிவித்தது ஒரு மிரட்டல் அல்ல என்கிறார் உள்துறை அமைச்சர் அஹமட் ஜாஹிட் ஹமிடி. “அது ஒரு மிரட்டல் அல்ல என்பதால் அதில் விசாரிப்பதற்கு ஏதுமில்லை”, என அம்னோ உதவித் …
புக்கிட் தெங்கா போலீஸ் நிலையத்தில் வீசப்பட்டது சக்திவாய்ந்த பட்டாசு
இன்று காலை அடையாளம் தெரியாத நபர்கள் வீசி எறிந்த ‘மெர்சுன் போலா(சக்திவாய்ந்த பட்டாசு)’வால் புக்கிட் மெர்தாஜாம் புக்கிட் தெங்கா போலீஸ் நிலையத்தின் நுழைவாயிலும் காவல் கூண்டும் சேதமடைந்தன. அச்சம்பவம் அதிகாலை மணி 4.50-க்கு நிகழ்ந்ததாக பினாங்கு சிஐடி துணைத் தலைவர் ஏசிபி நாசிர் சாலே கூறினார். அப்போது நான்கு …
கன்னத்தில் அறைந்தால் காசு என்ற அறிவிப்பு குறித்து பிரதமர் பேசாமலிருப்பது…
சிபூத்தே எம்பி தெரேசா கொக்கை கன்னத்தில் அறைவோருக்கு ஒரு என்ஜிஓ ரொக்க வெகுமதி கொடுக்க முன்வந்திருக்கும் செயலுக்கு எதிராக போலீஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சரவாக் டிஏபி வலியுறுத்தியுள்ளது. “ஒரு குற்றச்செயல் நடப்பதற்கு வெகுமதி கொடுக்கும் செயல் மலேசியாவில் இதற்குமுன் நடந்ததில்லை”, என சரவாக் டிஏபி தலைவர் …
பினாங்கில் போலீஸ் நிலையம் குண்டுவெடிப்பில் சேதமடைந்தது
பினாங்கு புக்கிட் தெங்கா போலீஸ் நிலையத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் அதன் முன்பகுதி சேதமடைந்தது. அதிகாலை மணி 4.50 அளவில் இச்சம்பவம் நிகழ்ந்ததாக உத்துசான் மலேசியா அறிவித்துள்ளது. இச்சம்பவம் தொடர்பில் பினாங்கு போலீஸ் தலைவர் அப்துல் ரஹிம் ஹனாபி செய்தியாளர் கூட்டமொன்றை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. குண்டுவெடித்ததில் யாரும் காயமடைந்தார்களா …
தாயிப் பதவி விலகுவதை எதிர்த்து அவரின் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்
சரவாக் முதலமைச்சர் அப்துல் தாயிப் மஹ்முட், பிபிபி உச்சமன்றக் கூட்டத்தில் அவரது பதவி விலகல் பற்றி அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படும் வேளையில் அவரின் ஆதரவாளர்கள் அந்நடவடிக்கையை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்தனர். பிபிபி-யுடன் தொடர்புள்ள அங்காத்தான் வாரிசான் அனாக் சரவாக் அமைப்பைச் சேர்ந்த சுமார் 100 பேர் பெட்ரா …
சுல்தான் கருணையால் தூக்குத்தண்டனை கைதி தலை தப்பியது
சந்திரன் பாஸ்கரனுக்கு இன்று தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட விருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் ஜோகூர் சுல்தான் தலையிட்டதால் அவருக்குத் தண்டனை ஒத்தி வைக்கப்பட்டது. தண்டனை ஒத்திவைக்கப்பட்ட செய்தி நேற்றிரவுதான் தங்களுக்குத் தெரிய வந்ததாக அவரின் சகோதரர் தாமோதரன் கூறினார். “கடைசி நேரத்தில் கிடைத்த செய்தியால் எங்கள் குடும்பமே மிகுந்த மகிழ்ச்சி …
பாலியல் உறவுமீதான ஆய்வைச் செய்தது நீலாயில் உள்ள ஒரு மருத்துவ…
நீலாய் தொடக்கநிலைப் பள்ளி ஒன்றில் பாலியல் உறவுமீதான ஆய்வைச் செய்தது அங்குள்ள ஒரு மருத்துவ நிலையம் என்று நெகிரி செம்பிலான் கல்வித் துறை கூறியது. அது அந்த ஆய்வை நடத்தியது தங்களுக்குத் தெரியாது என்று மாநிலக் கல்வி இயக்குனர் கல்சோம் காலிட் கூறியதாக த ஸ்டார் அறிவித்துள்ளது. “எங்களுக்கும் …
உயிருக்கு மிரட்டல் என தெரேசா கொக் போலீஸில் புகார்
சில முஸ்லிம் என்ஜிஓ-கள் கோழிகளை வெட்டி அவற்றின் இரத்தத்தைத் தம் உருவப்படம் பொறிக்கப்பட்ட பதாதை மீது பூசியதை அடுத்து தம் பாதுகாப்புக்கு மிரட்டல் ஏற்பட்டிருப்பதாக டிஏபி-இன் சிபூத்தே எம்பி தெரேசா கொக் போலீசிடம் புகார் செய்துள்ளார். தம் மீது ஆத்திரம் உண்டாகும்படி பேசியதுடன் தம் கன்னத்தில் அறைவோருக்கு ரிம500 …
நஜிப்பை அறைந்தால் ரிம1,200 கொடுப்பதாக ஒரு என்ஜிஓ அறிவித்திருந்தால் என்னவாகும்?
சில முஸ்லிம் என்ஜிஓ-கள் திறந்த வெளியில் கோழிகளைக் காவுகொடுப்பதையும் ஒரு எம்பிக்கு எதிராக மிரட்டல் விடுப்பதையும் அனுமதித்த போலீசை லிம் கிட் சியாங் கடுமையாகக் கண்டித்தார். ஒரு என்ஜிஓ அரசாங்கத் தலைவர்களுக்கு எதிராக இதேபோல் நடந்துகொண்டிருந்தால் போலீஸ் சம்பவம் நடக்கும் இடத்துக்கு முன்கூட்டியே சென்று நடவடிக்கை எடுத்திருக்கும் என்றவர் …
அஸ்மின்: காலிட் அதிகாரத்தைப் பயன்படுத்தி தமக்குப் பிடிக்காதவர்களை ஒழித்துக்கட்டப் பார்க்கிறார்
சிலாங்கூர் மந்திரி புசார் அப்துல் காலிட் இப்ராகிம் தம் அரசியல் எதிரிகளுக்கு எதிராக அதிகாரத்தைத் தவறாக பயன்படுத்துவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலி கூறியுள்ளார். சிலாங்கூர் மாநில மேம்பாட்டுக் கழக(பிகேஎன்எஸ்)த்தின் துணை நிறுவனமொன்று 20-க்கு மேற்பட்ட ஒப்பந்தப் பணியாளர்களை வேலையிலிருந்து நிறுத்தியதைக் குறிப்பிட்டு …
கோழிகளைப் பலியிட்டு பதாதைமீது இரத்த அபிஷேகம் செய்தனர்
முஸ்லிம் என்ஜிஓ-களைச் சேர்ந்த ஆத்திரம்கொண்ட ஆர்ப்பாட்டக்காரர்களின் கூட்டம் ஒன்று நான்கு கோழிகளைப் பலியிட்டு அவற்றின் இரத்தத்தை டிஏபி, பிகேஆர் தலைவர்களின் உருவப்படங்களைக் கொண்ட ஒரு பதாதைமீது தெளித்தனர். முஸ்லிம் என்ஜிஓ-களின் மன்றம் என்று தன்னை அழைத்துக்கொண்ட அக்கூட்டம், ‘மலாய்த் தலைமைத்துவத்தையும் பேரரசரையும் இஸ்லாத்தையும் மலாய்க்காரர் கண்ணியத்தையும் இழிவுபடுத்தும் அரசியல்வாதிகள்,…
நீலாய் தொடக்கநிலைப் பள்ளியில் பாலியல் உறவு தொடர்பான ஆய்வா?
தேசிய வகை தொடக்கநிலைப் பள்ளியில் பாலியல் நடத்தைகள் பற்றி ஆய்வு நடத்தி இருக்கிறார்களே, என்ன கொடுமை இது எனக் குமுறிக் கொண்டிருக்கிறார்கள் நெகிரி செம்பிலான் மாநில டிஏபி சட்டமன்ற உறுப்பினர்கள் இருவர். ஜே. அருள்குமார் (நீலாய்), பி.குணசேகரன் (செனாவாங்) ஆகிய அவ்விருவரும் 10 வயது மாணவர் ஒருவரின் தந்தை …
இசி பாலியல்-அவதூறு பரப்புரைகளைத் தடுக்க வேண்டும்
தேர்தல் ஆணையம், காஜாங் இடைத் தேர்தலின்போது “பாலியல் அவதூறு” கூறும் பரப்புரைகளைத் தடுக்க விரும்பினால் “சட்ட விதிகளைக் கண்டிப்பான முறையில் அமல்படுத்த வேண்டும்” எனப் புறநகர், வட்டார மேம்பாட்டு அமைச்சர் ஷாபி அப்டால் கூறினார். சட்ட விதிகள் உள்ளன; அமலாக்கம்தான் இல்லை என்றாரவர். காஜாங் இடைத் தேர்தலில் எல்லாத் …
பக்காத்தான்: நெடுஞ்சாலை பராமரிப்பு நிறுவனங்களின் சலுகைகளை மறுஆய்வு செய்ய வேண்டும்
2014-இல் நெடுஞ்சாலை கட்டண உயர்வை முடக்கிப் போடுவது ஒரு தற்காலிக நடவடிக்கைதான். அரசாங்கம் சாலைப் பராமரிப்பு நிறுவனங்களுக்குத் தொடர்ந்து இழப்பீடு கொடுத்துக் கொண்டிருக்க முடியாது என பக்காத்தான் ரக்யாட் கூறியது. அதற்குப் பதிலாக அரசாங்கம் அந்நிறுவனங்களுடன் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தங்களை மறு ஆய்வு செய்ய வேண்டும் என அக்கூட்டணி …
தெரேசாவின் வீடியோவைப் பார்ப்பதைவிடவும் உருப்படியான வேலை இருக்கிறது
சிபூத்தே எம்பி தெரேசா கொக், அவரது சர்ச்சைக்குரிய சீனப் புத்தாண்டு நையாண்டி காணொளியைக் காண வருமாறு விடுத்த அழைப்பை ஏற்க மறுத்த புறநகர், வட்டார மேம்பாட்டு அமைச்சர் ஷாபி அப்டால் “அதைவிடவும் உருப்படியான வேலை” தமக்கு உண்டு என்றார். ஷாபி, தெரேசா கொக்கின் காணொளி லாஹாட் டத்து-வில் பாதுகாப்புப் …
அழியா மை குறித்து புகார் செய்த விமானிமீது வழக்கு
கடந்த ஆண்டு 13வது பொதுத் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட அழியா மை குறித்து புகார் செய்ததற்காக அரச மலேசிய ஆகாயப் படையின் விமானி ஒருவர் நாளை இராணுவ நீதிமன்றத்தில் விசாரணையை எதிர்நோக்கியுள்ளார். அவர்மீது ஏழு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. நாளை விசாரணைக்கு வரவேண்டும் என்று நேற்று இராணுவ நீதிமன்றத்திடமிருந்து உத்தரவு வந்ததாக …
பக்காத்தான் தேசிய நிலையில் இணக்கம்காண விரும்புவது ஒற்றுமை அரசாங்கம் அமைப்பதற்கு…
தேசிய விவகாரங்கள் பற்றி இரு--தரப்பு கலந்துரையாடல் நடத்த பக்காத்தான் ரக்யாட் திரும்பத் திரும்ப அறைகூவல் விடுப்பதை வைத்து அது ஒற்றுமை அரசாங்கத்துக்கு அடிபோடுவதாக நினைக்கக் கூடாது என பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம் வலியுறுத்தியுள்ளார். “பிஎன் இதற்கு ஒத்துக்கொள்ளாது என்பதையும் சில (அம்னோ) தரப்புகள் இதை எதிர்க்கும் …
கீர் தோயோவின் மேல்முறையீடு காலவரையின்றி ஒத்திவைப்பு
இன்று கூட்டரசு நீதிமன்றத்தில் விசாரிக்கப்படவிருந்த முன்னாள் சிலாங்கூரின் முன்னாள் மந்திரி புசார் டாக்டர் முகம்மட் கீர் தோயோவின் மேல்முறையீடு காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டது. 2011-இல், பதவியில் இருந்தபோது அவர் இரண்டு துண்டு நிலங்களையும் ஒரு பங்களாவையும் வாங்கியதில் ஊழல் நிகழ்ந்திருப்பதாக ஷா ஆலம் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை …
கேஎல்ஐஏ2 பாதுகாப்புச் சோதனையில் தேறாதது என்? அமைச்சு விளக்க வேண்டும்
கேஎல்ஐஏ 2 பாதுகாப்புச் சோதனைகளில் தேறாமல் போனதால் அது திறக்கப்படுவது மேலும் தாமதமடைந்துள்ளது. இதற்கான காரணத்தை இடைக்காலப் போக்குவரத்து அமைச்சர் ஹிஷாமுடின் உசேன் உடனடியாக விளக்க வேண்டும் என பிகேஆர் லெம்பா பந்தாய் எம்பி நுருல் இஸ்ஸா அன்வார் வலியுறுத்தினார். அந்த விமான முனையம் ஜனவரி 31-க்குள் தகுதிச் …
பிகேஎன்எஸ்: பணியாளர்கள் அதிகப்படியாக இருந்ததால் ஒப்பந்தப் பணியாளர்கள் நிறுத்தப்பட்டனர்
20 ஒப்பந்தப் பணியாளர்கள் நீக்கப்பட்டதில் வேலை ஒப்பந்தமீறல் எதுவும் இல்லை என பிகேஎன்எஸ் ஹோல்டிங் கூறியுள்ளது. பணியாளர்கள் எண்ணிக்கை மிகையாக இருந்ததால் அதைத் “திருத்தி அமைக்கும் நடவடிக்கையாக” அவர்களின் ஒப்ந்தங்கள் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டன என பிகேஎன்எஸ் ஓர் அறிக்கையில் விளக்கமளித்துள்ளது. “அவர்களிடமுள்ள அதே திறமையும் அனுபவமும் பிகேஎன்எஸ் நிரந்தரப் …