துணைப் பிரதமர் டக்ளஸ் உக்கா எம்பாஸ்(Douglas Uggah Embas) கூறுகையில், காற்று மாசுபாட்டு அளவீடுகள் 500-ஐத் தாண்டினால், அரசு மற்றும் தனியார் துறை அலுவலகங்களை மூடுவதற்கான வழிகாட்டுதல்கள் உள்ளன. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் நிகழ்ச்சிகளை நடத்துவதா அல்லது ரத்து செய்வதா என்பதைத் தாங்களே முடிவு செய்யலாம்; ஆனால் அதிகாரிகள் ஏதேனும் உத்தரவு…
பிரதமர்: எம்எச்370 விமானத்துடன் காணாமல்போனவர்களை மலேசியர்கள் ஒன்றுபட்டு நினைவுகூர்கின்றனர்
மலேசிய விமான நிறுவனத்தின் எம்எச்370 விமானம் காணாமல்போய் ஓராண்டு ஆகும் வேளையில் அந்தத் துயரச் சம்பவத்தில் காணமல்போனவர்களை நினைவுகூர்வதிலும் கெளரவிப்பதிலும் மலேசியர்கள் ஒன்றுபட்டு நிற்பதாக பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறினார். விமானத்தைத் தேடும்பணி தொடர்வதாகவும் அப்பணியில் மலேசியா தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருப்பதாகவும் கூறிய நஜிப், எம்எச்370 …
கித்தா லவான் பேரணி தொடர்பில் நிக் நஸ்மி கைது
பிகேஆர் இளைஞர் தலைவர் நிக் நஸ்மி நிக் அஹமட் கைது செய்யப்பட்டார். நேற்றைய கித்தா லவான் பேரணி பற்றி வாக்குமூலம் அளிக்க நிக் நஸ்மி இன்று காலை 10 மணிக்கு டாங் வாங்கி போலீஸ் நிலையம் சென்றபோது கைது செய்யப்பட்டார். அமைதிப் பேரணிச் சட்டம் மற்றும் குற்றவியல் சட்டம் …
அமைதியான பேரணிமீது நடவடிக்கை எடுப்பதா? போலீசைச் சாடியது பிகேஆர்
நேற்று கோலாலும்பூரில் நடந்த மாபெரும் கித்தா லவான் பேரணி உள்பட, பேரணிகள் அமைதியாகவே நடந்துவந்துள்ள வேளையில் பேரணித் தலைவர்கள்மீது போலீஸ் விசாரணை நடத்துவது அதிகாரமீறலாகும் என பிகேஆர் சாடியுள்ளது. நேற்று, 10,000 பேர் கலந்துகொண்ட பேரணி எவ்வித அசம்பாவிதமுமின்றிக் கலைந்து சென்ற பின்னர் போலீசார் இரவு மணி 7.45க்கு …
அன்வாரை விடுவிக்கக் கோரி 10,000 க்குமேற்பட்டோர் கேஎல்சிசியில் திரண்டனர்
எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிமை விடுவிக்கக் கோரி கித்தா லவான் கோலாலம்பூரில் ஏற்பாடு செய்திருந்த பேரணி சோகா வாணிக மையத்திலிருந்து புறப்பட்டு எவ்விதத் தங்குதடையுமின்றி கேஎல்சிசியை சென்றடைந்தது. கேஎல்சிசியில் 10,000 க்கு மேற்பட்டோர் திரண்டிருந்தனர். சிறையிலடைக்கப்பட்டிருக்கும் அன்வார் இப்ராகிம் விடுவிக்கப்பட வேண்டும், நஜிப் பிரதமர் பதவியிலிருந்து விலக…
கித்தா லவான் பேரணி திட்டப்படி நடக்கும்
இன்று கோலாலும்பூரில் நடைபெறவுள்ள பேரணியை சட்டவிரோத பேரணி என்று போலீஸ் அறிவித்துள்ளது. சோகோ விற்பனை மையத்துக்கு வெளியில் நடைபெறும் கித்தா லவான் பேரணி எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம் விடுவிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்து …
வான் அசிசா: அன்வாரின் தியாகம் வீணாகப் போய்விடக் கூடாது
எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிமுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இன்று கோலாலும்பூரில் நடைபெறும் கித்தா லவான் பேரணிக்கு மக்கள் திரண்டு வர வேண்டும் என பிகேஆர் தலைவர் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் கேட்டுக் கொண்டார். “அனவார் நாட்டின் மேம்பாட்டுக்காக தன்னையே தியாகம் செய்து கொண்டிருக்கிறார். இப்போது …
லண்டனில் ஹோட்டல் வாங்கியதன் தொடர்பில் பெல்டா தலைவரின் மகனிடம் எம்ஏசிசி…
லண்டனில் பல மில்லியன் ரிங்கிட்டில் ஆடம்பர தங்கும் விடுதி வாங்கப்பட்டது பற்றி விசாரிப்பதற்காக மலேசிய ஊழல்- தடுப்பு வாரியம் (எம்ஏசிசி), கூட்டரசு நில மேம்பாட்டு நிர்வாக(பெல்டா) தலைவர் இசா சமட்டின் மகனை நேற்று அழைத்திருந்தது. “அது ஒரு கைது அல்ல. விசாரணைக்கு உதவியாக அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது”,…
பெர்சே: பேரணியில் குழப்பம் ஏற்பட்டால் போலீசே பொறுப்பு
போலீஸ் இன்று பிற்பகல் நடக்கும் கித்தா லவான் பேரணியின்போது தன் கடமையைச் சரியாகச் செய்து பேரணி அமைதியாக நடப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என பெர்சே நினைவுறுத்தியுள்ளது. பேரணியில் குழப்பம் ஏற்பட்டால் அதற்கு அவர்கள்தான் பொறுப்பேற்க வேண்டும். “பேரணி அமைதியாக நடைபெற உதவ வேண்டுமென பெர்சே போலீஸ் படைத் தலைவரைக் …
முலைக் காம்பைக் கிள்ளவில்லை: ஷாபிதான் சாட்சியத்துக்குச் சுவைகூட்ட அப்படிக் கூறுகிறார்
அன்வார் இப்ராகிமின் குதப்புணர்ச்சி வழக்கில் முகம்மட் சைபுல் புஹாரி இரகசியமாக கொடுத்த சாட்சியங்களை வெளியில் கூறிவரும் முகம்மட் ஷாபி அப்துல்லா, சாட்சியங்களுக்குச் சுவைகூட்ட தம் கைச்சரக்கையும் சேர்த்துக் கொண்டிருப்பதாக தெரிகிறது. பிப்ரவரி 17-இல், கிளானா ஜெயாவில், ஒரு கூட்டத்தில் பேசிய ஷாபி, “அன்வார் அவருடைய (சைபுல்) முலைக்காம்புகளைக் கிள்ளினார்”,…
போலீஸ் தடுப்புக்காவல் மரணங்கள்: அரசாங்கம் குருடாகி விட்டதா, திறமையற்றதாகி விட்டதா,…
கையில் விலங்கிடப்பட்டு போலீஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த சி. சுகுமாரின் மரணத்திற்கு போலீஸ்தான் பொறுப்பு என்று நேற்று மரண விசாரணை அதிகாரி ரோஸி பைநூன் அளித்திருந்த தீர்ப்பை சுட்டிக் காட்டி, இந்த விவகாரத்தில் அரசாங்கம் என்ன குருடாகி விட்டதா அல்லது திறமையற்றதாகி விட்டதா அல்லது இரண்டுமா என்று…
புவாவின் மகன் அமெரிக்காவில் சூதாட்டக் குற்றச்சாட்டை ஒப்பினார்
சூதாட்ட மன்னன் பால் புவாவின் மகன் டேரன் புவா, உலகக் கிண்ணக் கால்பந்து போட்டியின்போது சட்டவிரோத சூதாட்டக் கட்டமைப்பு ஒன்றை நடத்திய குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டிருக்கிறார். டேரனுக்கு மலேசியாவுக்குத் திரும்ப வேண்டும் என்ற ஏக்கம் வந்து விட்டதாம். அதனால்தான் குற்றச்சாட்டை ஒப்புக்கொள்வதென்ற முடிவுக்கு வந்திருப்பதாக Casino.org இணையத் தளம் கூறிற்று.…
அன்வார் ஆதரவு பேரணிக்கு ஆதரவு அளியுங்கள்
மார்ச் 2 சுதந்திரம் பேரணி தொடங்குவதற்கு இன்னும் 24 மணி நேரத்திற்கு குறைவான நேரமே இருக்கையில், இந்த பேரணிக்கு ஆதரவு அளித்து அதில் பங்கேற்குமாறு அன்வார் இப்ராகிமின் மகள்கள் மலேசிய மக்களுக்கு இன்று வேண்டுகோள் விடுத்தனர். அன்வாரின் மகள்களான நூருல் இமான் மற்றும் நூருல் நுகா ஆகிய இருவரும்…
அனைத்துலக தாய்மொழி தினம் 2015/ International Mother Language Day…
அனைத்துலக தாய்மொழி தினம் 2015 COMMEMORATION OF INTERNATIONAL MOTHER TONGUE DAY 2015 (Jointly Organised by Tamil Foundation, Lim Lian Geok (LLG) Cultural & Development Centre, Kuala Lumpur Selangor Chinese Assembly Hall, Faculty of Language & Linguistics…
குவான் எங் பேரணியில் கலந்துகொள்ள மாட்டார்
நாளை கோலாலும்பூரில், கித்தா லவான் கூட்டமைப்பு எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிமின் விடுதலைக்காக நடத்தும் பேரணியில் பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் கலந்துகொள்ள மாட்டார். சோகோ விற்பனை மையத்துக்கு வெளியில் மாலை நான்கு மணி தொடங்கி நள்ளிரவுவரை நடைபெறவுள்ள அப்பேரணி பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் பதவி …
டிஏபி புவாமீது நஜிப் அவதூறு வழக்கு
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், சர்ச்சைக்குரிய 1மலேசியா மேம்பாட்டு நிறுவனம் பற்றி பெட்டாலிங் ஜெயா உத்தாரா எம்பி டோனி புவா ஆற்றிய உரைக்காக அவர்மீது அவதூறு வழக்கு தொடுத்துள்ளார். மலேசியப் பிரதமர் ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர்மீது வழக்கு தொடுப்பது இதுவே முதல் முறையாகும். நஜிப்புக்காக ஹபாரிஸாம், வான்…
போலீஸ் செய்ய வேண்டியதைச் செய்யத் தவறியதால் சுகுமாறன் இறந்தார்
போலீஸ் காவலில் இருந்த சி.சுகுமாறனின் இறப்புக்கு போலீஸ்தான் பொறுப்பு என மரண விசாரணை அதிகாரி தீர்ப்பளித்துள்ளார். சுகுமாறனின் மரணத்தை விசாரித்த கொரோனர் ரோஸி பைனுன், காயமடைந்திருந்த சுகுமாறனை போலீசார் மருத்துவமனைக்கு அனுப்பியிருக்க வேண்டும் என்றும் சட்டப்படி செய்திருக்க வேண்டிய அதை அவர்கள் செய்யத் தவறிவிட்டதாகவும் கூறினார். “அவர் இருதய …
அன்வார் நாடாளுமன்றம் போகாவிட்டாலும் அவரது உரை இடம்பெறும்
மார்ச் 9 நாடாளுமன்றக் கூட்டத் தொடரின் தொடக்க விழாவில் கலந்துகொள்ள அன்வார் இப்ராகிமுக்கு அனுமதி மறுக்கப்பட்டாலும் பேரரசரின் அரச உரைக்கு எதிரணித் தலைவர் என்ற முறையில் அவர் நன்றி தெரிவிக்கும் அதிகாரப்பூர்வ உரை மக்களவையில் ஒலிக்கவே செய்யும். அன்வாரின் மகள் நுருல் இஸ்ஸா அன்வார் இதை உறுதிப்படுத்தினார். பிகேஆர் …
கிட் சியாங்: அமைச்சரவை 1எம்டிபி விவாதத்தைத் தடுக்கப் பார்க்கிறதா?
1எம்டிபி கணக்குகளைத் தணிக்கை செய்வதென்ற அமைச்சரவையின் முடிவு, அதைப் பற்றி நாடாளுமன்றத்தில் பேசப்படுவதைத் தவிர்ப்பதற்கான முயற்சிபோல் தெரிகிறது என லிம் கிட் சியாங் கூறுகிறார். அம்முடிவினால், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தலைமைக் கணக்காய்வாளர் அவரது விசாரணையை முடிக்கும்வரை அது பற்றிக் கேள்வி எழுப்ப இயலாது என கிட் சியாங் இன்று …
பாஸ் தலைவர் சுல்கிப்ளி அஹ்மட் தாக்கப்பட்டார்
பாஸ் மத்திய செயல்குழு உறுப்பினர் டாக்டர் சுல்கிப்ளி அஹ்மட், இன்று காலை சுபுஹு தொழுகை முடித்து விட்டுத் திரும்பிய வேளை தாக்கப்பட்டார். அவர் முகத்திலும் நெற்றியிலும் குத்துப்பட்டார் என பாஸ் இளைஞர் தலைவர் சுஹாய்ஸன் சுல்கிப்ளி முகநூலில் கூறியிருந்தார். “தாக்கிவிட்டுச் செல்லுமுன்னர் ஏன் மரியாதைக் குறைவாக நடந்து கொள்கிறீர்…
மாபுஸ்: சிருல் தாயாரின் பயணத்துக்குச் சொந்த பணத்தைச் செலவிட்டேன்
கொலைக் குற்றம் சாட்டப்பட்டுள்ள சிருல் அஸ்ஹார் உமரின் தாயார் பியா அஹ்மட், சிருலைப் பார்ப்பதற்கு ஏற்பாடு செய்த பாஸ் தகவல் தலைவர் மாபுஸ் ஒமார் அந்த “மனிதாபிமான பயணத்துக்கு” தம் சொந்த பணத்தைச் செலவு செய்ததாகக் கூறினார். மாபுஸ், சிருலின் தாயாரையும் சகோதரி நோரியாதின் உமரையும் மேலும் நால்வரையும் …
‘பல காரணங்களால்’ கித்தா லவான் பேரணி சட்டவிரோதமானது
சனிக்கிழமை கோலாலும்பூரின் மையப் பகுதியில் நடத்தத் திட்டமிடப்பட்டிருக்கும் கித்தா லவான் பேரணி, பல காரணங்களால் சட்ட விரோதமானது என துணை இன்ஸ்பெக்டர்-ஜெனரல் அப் போலீஸ் நூர் ரஷிட் இப்ராகிம் கூறினார். அதில் ஆற்றப்படும் உரைகள் தேச நிந்தனைக்குரியவையாக இருக்கலாம். அரசாங்கத்தை மிரட்டுவது போன்ற செயல்களும் குற்றவியல் சட்டத்தை மீறுபவையாக …
உக்ரேயினில்கூட குற்றவாளி எம்பி நாடாளுமன்றம் செல்ல அனுமதிக்கப்பட்டார்
குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்ட ஒருவரை எந்த நாடும் நாடாளுமன்றக் கூட்டத்தில் கலந்துகொள்ள அனுமதிப்பதில்லை என்ற அரசாங்கத்தின் வாதம் அறியாமையைத்தான் காண்பிக்கிறது என பிகேஆர் சாடியுள்ளது. “அரசியல் கைதிகளை எந்த நாடும் நாடாளுமன்றக் கூட்டங்களில் கலந்துகொள்ள அனுமதிப்பதில்லை என்ற கூற்று அரசாங்க நிர்வாகத்தில் உள்ள சிலரின் குறுகிய புத்தியைதான் காண்பிக்கிறது”,…
அன்வார் நாடாளுமன்றக் கூட்டத்தில் கலந்துகொள்ள முடியாது
எதிரணித் தலைவர் அனவார் இப்ராகிம், அடுத்த வாரம் நாடாளுமன்றக் கூட்டத்தில் கலந்துகொள்ள அனுமதி கேட்டு செய்துகொண்ட விண்ணப்பத்தைச் சிறைத்துறை நிராகரித்தது. அவரது வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டதைத் தெரிவிக்கும் கடிதம் அன்வாரின் வழக்குரைஞர்களுக்கும் குடும்ப உறுப்பினர்களுக்கும் இன்று பிற்பகல் கிடைக்கப் பெற்றதாக பிகேஆர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பிஎன் ஆதரவாளர் மன்ற …


