ஆத்திரப்படாமல் அமைதியாக இருக்குமாறு என்ஜிஓ-களுக்கு அபிம் அறிவுறுத்தல்

கேட்பரி-எதிர்ப்பு  என்ஜிஓ-கள்  அந்த சாக்லெட்  தொழிற்சாலையைத்  தீவைத்துக்  கொளுத்த  வேண்டும்  என்றெல்லாம்  ஆவேசப்படாமல்  அமைதிகாக்க  வேண்டும்  என மலேசிய  இஸ்லாமிய  இளைஞர்  இயக்கம்(அபிம்)  வலியுறுத்தியுள்ளது. அந்த  நிறுவனம்,  அதன்  சாக்லெட்  பொருள்கள்  பலவற்றில்  பன்றி சம்பந்தப்பட்ட  டிஎன்ஏ கலந்திருப்பது சுகாதார  அமைச்சின்  சோதனைகளில் கண்டுபிடிக்கப்பட்டதை  அடுத்து  விசாரணை  செய்யப்பட்டு …

சொத்து விவரம் அறிவித்த ஒரே எம்பி

நேற்று, தம்  சொத்து  விவரத்தை  அறிவித்த  பிஎஸ்எம்-இன் டாக்டர்  மைக்கல்  ஜெயகுமார்  தேவராஜ் சொத்து விவரத்தை  அறிவித்த  ஒரே  எம்பியாகவும்  திகழ்கிறார். சுங்கை  சிப்புட்  எம்பி-ஆக  இரண்டாம்  தவணைக்குத்  தேர்ந்தெடுக்கப்பட்ட  அந்த  மருத்துவரின்  சொத்து  மதிப்பு  ரிம265,300. அவரது  சொத்து  விவரம்  வருமாறு: ஈப்போவில்  ஒரு  வீடு- ரிம140,000 1988…

தெலோக் இந்தானில் இந்தியர்கள் வெற்றியாளரை நிர்ணயிப்பார்கள்

கடும்  போட்டி  நிலவும்  தெலுக்  இந்தான்  இடைத்  தேர்தலில்  இந்திய  வாக்காளர்களே  வெற்றியாளரைத்  தீர்மானிப்பவர்களாக  திகழக்  கூடும். அங்கு  சீன  வாக்காளர்களில்  42  விழுக்காட்டினர்  டிஏபி-யை  ஆதரிப்பார்கள்  என  எதிர்பார்க்கப்படுகிறது.  மலாய்  வாக்காளர்களில் 38 விழுக்காட்டினர்  பிஎன்னை  ஆதரிக்கலாம். இந்நிலையில்  இந்தியர்களின்  வாக்குகளே  வெற்றியாளரைத்  தீர்மானிக்கும். “சீனர்களின்  ஆதரவைப் …

தீபாவின் முன்னாள் கணவரின் மனு நிராகரிக்கப்பட்டது

பிள்ளைகளின் பராமரிக்கும்  உரிமையை  தம்  முன்னாள்  மனைவி  தீபாவுக்குக்  கொடுக்கும்  தீர்ப்பை  நிறுத்திவைக்கக்  கோரி என்.வீரன் @ இஸ்வான்  அப்துல்லா  செய்துகொண்ட  மனுவை  முறையீட்டு  நீதிமன்றம்  இன்று  தள்ளுபடி  செய்தது. இதனால்  பிள்ளைகள் இனி  தாயாரின்  பராமரிப்பில்தான்  இருப்பார்கள். கடந்த  மாதம்  சிரம்பான்  நீதிமன்றம்  வழங்கிய  தீர்ப்பை  நிறுத்திவைக்க …

‘நன்றி கெட்டவர்கள்’ என்று மீண்டும் சொல்லி விடாதீர்கள்: ஜாஹிட்டுக்கு மஇகா…

உள்துறை  அமைச்சர்  அஹ்மட்  ஜாஹிட்  ஹமிடி, “நன்றி  கெட்டவர்கள்”என்று  தெலோக்  இந்தான்  இந்திய  வாக்காளர்களிடமும்  சொல்லிவிடாமல்  இருக்க  வேண்டும்  என  மஇகா  நினைவுறுத்தியுள்ளது. இப்படிப்பட்ட  பேச்சு  இடைத்  தேர்தலில்  பிஎன் வாய்ப்புகளைக்  குறைத்துவிடலாம்  என  மஇகா  துணைத்  தலைவர்  டாக்டர்  எஸ்.சுப்ரமணியம்  கூறினார். நேற்று  தெலோக்  இந்தானில்  மலாய் …

அகதிகளை சிறீலங்கா அரசாங்கத்திடம் ஒப்படைத்தது – அநியாயமானது, அக்கிரமானது, அநாகரீகமானது

மலேசிய அரசாங்கம் இரகசியமாகவும் வலுக்கட்டாயமாகவும் இரு சிறீலங்கா அகதிகளையும் அடைக்கலம் தேடி வந்த இன்னொருவரையும் நேற்று சிறீலங்கா அரசாங்கத்திடம் ஒப்படைத்தது. மலேசிய அரசாங்கத்தின் இந்த அநியாய, அக்கிரம மற்றும் அநாகரீகமான நடவடிக்கையை மனித உரிமைக் கழகமான சுவாராம் இன்று கடுமையாக விமர்சித்து கண்டனம் செய்தது. இயக்க பிரதிநிதிகள் பலர் கலந்து…

காணாமல்போன விமானம் பற்றிய விவரங்களை மலேசியாவும் இன்மார்செட்டும் வெளியிட்டன

மலேசிய  சிவில்  விமானப்  போக்குவரத்து  துறையும்  பிரிட்டனின் செயற்கைத்  துணைக்கோள  நிறுவனமான  இன்மார்செட்டும்  எம்எச்370  விமானத்தின்  பாதையை  முடிவுசெய்வதற்குப்  பயன்பட்ட  முழு  விவரங்களையும்  இன்று  வெள்யிட்டன. அந்த  விவரங்கள்  அடங்கிய  அறிக்கையைப்  பெற்றுக்கொண்டதாக  காணாமல்போன  விமானத்தில்  பயணம்  செய்தவர்களின்  உறவினர்கள்  தெரிவித்தனர். மார்ச் 8-இல்,  கோலாலும்பூரிலிருந்து  பெய்ஜிங்குக்கு 239 …

பெர்காசாவிலிருந்து விலகுகிறார் யம்மி

தெலோக்  இந்தான்  இடைத் தேர்தல்  வேட்பாளர்  டியானா  சோபியா  முகம்மட்  டாவுட்டின்  தாயார்  யம்மி  சமத். பெர்காசாவிலிருந்து  விலகுவதாக  அறிவித்துள்ளார். இன்று  டியானாவுடனும்  மற்ற  டிஏபி  தலைவர்களுடனும்  செய்தியாளர்  கூட்டமொறில்  கலந்துகொண்ட  யம்மி,  தாம்  மலாய்  உரிமைகளுக்காக  போராடும்  அந்த என்ஜிஓ-வில்  இருப்பது  சர்ச்சையை  ஏற்படுத்தி  இருப்பதால்  அதற்கு …

இந்தியர்களுக்கு இனிமேல் நஜிப்மீது நம்பிக்கை வராது

பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்,  மலேசிய  இண்ட்ராப்  சங்கத்துடன்  செய்துகொண்ட  புரிந்துணர்வு  ஒப்பந்தப்படி  நடந்துகொள்ளாமல்  ஏமாற்றி  விட்டார்  என்பதால்  இனி  அவர்மீது  இந்திய  சமூகத்துக்கு  அறவே  நம்பிக்கை வராது  என  இண்ட்ராப்  செயலாளர்  பி.ரமேஷ்  கூறினார். நிலைமை  இவ்வாறிருக்க,  தெலோக்  இந்தான்  இடைத்  தேர்தலில்  இந்தியர்களின்  வாக்கு  பிஎன்னுக்கு …

டியானாவுக்கு பாஸ் ஆதரவு: தலைவர் ஹாடி உறுதிப்படுத்தினார்

தெலோக்  இந்தான்  இடைத்  தேர்தலில்   டிஏபி  வேட்பாளர்  டியானா சோபியா  முகம்மட்  டாவுட்டைத்தான்  பாஸ் ஆதரிக்கும். நாடாளுமன்றத்தில்  ஹுடுட்டை  ஆதரிக்கப்போவதில்லை  என்று  டியானா  தெரிவித்திருந்தாலும்  பாஸ்  கட்சியின்  ஆதரவு  அவருக்குத்தான் என்பதை அதன்  தலைவர்  அப்துல்  ஹாடி  ஆவாங்  உறுதிப்படுத்தினார். “அவர்  தெளிவான  நோக்கும்  போக்கும்  கொண்ட  ஒரு …

‘நான் பெர்காசாவில் இருந்தால் என்ன’-எதிர்கேள்வி கேட்கிறார் டியானாவின் தாயார்

தெலோக்  இந்தான்  இடைத் தேர்தல்  வேட்பாளர்  டியானா  சோபியா  முகம்மட்  டாவுட்டின்  தாயார்,   தாம் பெர்காசாவில்  இருப்பதற்கும்  தம்  மகள்  இடைத் தேர்தலில்  போட்டியிடுவதற்கும்  சம்பந்தமில்லை  என்று  தம்மைக்  குறைகூறுவோருக்குப்  பதில் அளித்துள்ளார். “நான்  அம்னோ  உறுப்பினர். பெர்காசா  உறுப்பினர். அதனால்  யாருக்கு  என்ன  பிரச்னை? “டியானாதான்  போட்டியிடுகிறார்.…

ஜாஹிட்: டிஏபி-க்கு வாக்களிக்கும் சீனர்கள் ‘நன்றிகெட்டவர்கள்’

டிஏபிக்கு  வாக்களிக்கும்  சீனர்கள்,  குறிப்பாக  பணக்கார  வியாபாரிகள் “நன்றி கெட்டவர்கள்”  என  அம்னோ  உதவித்  தலைவர்  அஹ்மட்  ஜாஹிட்  ஹமிடி  கூறினார். “மலாய்க்காரர்களும்  இந்தியர்களும்  சீன  வியாபாரிகளுக்கு  ஆதரவாக  இருக்கிறார்கள்.......அவர்கள்  வியாபாரத்தில்  உயர்ந்த  நிலைக்கு  வந்ததும்  டிஏபி-க்கு  வாக்களிக்கிறார்கள். அது  நன்றிகெட்ட  தனம்  அல்லவா?”,  என்றவர் வினவ  அவரது…

ஸாஹிட்: டிஎபிக்கு வாக்களிக்கும் சீனர்கள் நன்றி கெட்டவர்கள்

  டிஎபிக்கு வாக்களிக்க விரும்பும் சீனர்கள், குறிப்பாக வாணிபத்தில் வெற்றி கண்டவர்கள், நன்றி கெட்டவர்கள் என்று அம்னோ உதவித் தலைவர் அஹமட் ஸாஹிட் ஹமிடி கூறுகிறார். ஏன் நன்றி கெட்டவர்கள் என்றால், அவர்கள் செல்வந்தர்களாவதற்கு பங்களிப்புச் செய்த மலாய்க்காரர்களையும் இந்தியர்களையும் அவர்கள் கைவிட்டு விட்டனர். இந்தியர்கள் மீது அதிகமான…

12 ஊடுருவல்காரர்களின் விசயத்தில் ஐஜிபி அம்னோ ஆள்போல் நடந்துகொள்கிறார்

பினாங்கு  சட்டமன்றக்  கட்டிடத்துக்குள்  அத்துமீறி  நுழைந்தவர்களைப்  பொறுத்தவரை,  இன்பெக்டர்-ஜெனரல்  அப்  போலீஸ்  காலிட்  அபு  பக்கார்  “அம்னோ  அரசியல்வாதிபோல்”  நடந்துகொள்கிறார்  என  அலோர் ஸ்டார்  பிகேஆர்  எம்பி  கூய்  ஹிசியாவ்  லியாங்  குறைகூறினார். புதன்கிழமை  நடந்த அச்சம்பவத்தில்  அம்னோ, பெர்காசா  உறுப்பினர்களும்  தீவகற்ப  மலாய்  மலாய்  மாணவர்  கூட்டமைப்பைச் …

நஜிப்: சமத்துவமின்மை மலேசியாவின் மிகப் பெரிய சவால்

பொருளாதார  ஏற்றத்தாழ்வே  மலேசியாவை  எதிர்நோக்கும்  மிகப்  பெரிய  சவால்   என்பதைப்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  ஒப்புக்கொண்டிருக்கிறார். இன்று  நிதி  அமைச்சில்  பட்ஜெட்  ஆலோசனை  மன்றக்  கூட்டத்தில்  பேசிய  நஜிப்,  ஆசியானுடனும்  உலகின்  மற்ற பகுதிகளுடனும்  ஒருங்கிணைந்து  பணியாற்றுவது  மற்றொரு  பெரிய  சவாலாகும்  என்றார். “ஏற்றத்தாழ்வே மிகப்  பெரிய …

மா தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்

தெலோக் இந்தான்: இடைத்  தேர்தலுக்கான அவரது  தேர்தல்  அறிக்கையை இன்று  வெளியிட்ட  பிஎன்  வேட்பாளர்  மா  சியு  கியோங், மற்றவற்றோடு  அந்நகரின்  பிரபல  சாய்ந்த  கோபுரத்தை  யுனெஸ்கோவின்  உலக மரபுச் சின்னமாக்க  முயற்சிகள்  மேற்கொள்ளப்போவதாக   அதில்   வாக்குறுதி  அளித்துள்ளார். தெலோக்  இந்தானில்  ஒரு  பல்கலைக்கழகம்  அமைக்கப்படும்  என்றும் அவ்வறிக்கை…

தெலோக் இந்தான் டிஏபி செராமாவில் ஐயாயிரம் பேர் கலந்துகொண்டனர்

நேற்றிரவு  தாமஸ்  கிண்ண  இறுதி  ஆட்டம்  நடைபெற்றாலும்கூட  தெலோக்  இந்தான்  டிஏபி  செராமாவுக்கு  ஐயாயிரம்  பேர்  திரண்டு  வந்திருந்தனர். பக்காத்தான்  ரக்யாட்  தலைவர்  அன்வார்  இப்ராகிம், டிஏபி  பெருந்  தலைவர்  லிம்  கிட்  சியாங்  முதலானோர்  அதில்  உரையாற்றினர். லிம், புக்கிட்  குளுகோர்  இடைத்  தேர்தல்  வெற்றி  தெலோக் …

மலாய் என்பது இனம், அம்னோ என்பது ஒரு கட்சி:அன்வார்

அம்னோவைக்  குறைகூறுவது  மலாய்க்காரரையும்  இஸ்லாத்தையும்  சிறுமைப்படுத்துவதாகும்  என  இன-வாத  கூச்சல்  போடுவதை  அக்கட்சி  நிறுத்த  வேண்டும்  என்கிறார்  எதிரணித்  தலைவர்  அன்வார்  இப்ராகிம். அம்னோ, தான்  ஒரு  கட்சி  என்பதையும்  மலாய்  என்பது  ஓர்  இனம் என்பதையும்  உணர  வேண்டும். என்றாரவர். அம்னோவில்  கிறிஸ்துவ உறுப்பினர்கள்  உள்ளனர்.  அவர்கள் …

பிசிஎம் ஹுவானுக்கு தோல்வியிலும் ஒரு ஆறுதல்

பிசிஎம்  உதவித்  தலைவர்  ஹுவான்  செங்  குவான், புக்கிட்  குளுகோர்  இடைத்  தேர்தலில் தோற்றது  பற்றிக்  கவலைப்படவில்லை. டிஏபி-இன்   பெரும்பான்மையைக்  குறைக்க  முடிந்ததை  எண்ணி  ஆறுதல்  கொள்கிறார். ஹுவான்   வைப்புத்தொகையை  இழந்தார்  என்றாலும்  தாம் 3,583 வாக்குகள்  பெற்றதைப்  பெரிதாக  நினைக்கிறார். அது 13வது  பொதுத்  தேர்தலில்  பத்து …

கட்டற்ற மென்பொருள் கருத்தரங்கு 2014

  மலேசிய உத்தமத்தின் ஏற்பாட்டில் கட்டற்ற மென்பொருள் கருத்தரங்கு கோலாலம்பூரில் நடைபெறவுள்ளதாக  அந்த அமைப்பின் தலைவர் சி.ம. இளந்தமிழ் அறிவித்துள்ளார். இக்கருத்தரங்கு நிகழ்ச்சியை கோலாலம்பூரில் வழிநடத்துவதற்கு    தமிழ் கட்டற்ற மென்பொருள்  முன்னோடிகளில் மூவர் தமிழ் நாட்டிலிருந்தும் ஜப்பானிலிருந்தும் வரவுள்ளனர் என்று அவர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சி பின்வருமாறு நடைபெற உள்ளது :…

ராம்கர்பால்: புக்கிட் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினராக அறிவிக்கப்பட்டார்

  இரவு மணி 9.01: புக்கிட் குளுகோர் நாடாளுமன்ற இடைத் தேர்லில் தேர்தலில் ராம்கர்பால் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணைய அதிகாரி அன்வார் யாயா அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதிகாரப்பூர்வமான இறுதி நிலவரம்: டிஎபி - 41, 242 பிசிஎம் - 3,583 முகமட் நபி பக்ஸ் - 798…

புக்கிட் குளுகோர்: அசைக்க முடியாத நிலையில் ராம்கர்பால்

  புக்கிட் குளுகோர் இடைத் தேர்தல் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் டிஎபியின் ராம்கர்பால் 89 விழுக்காடு வாக்குகளைப் பெற்றுள்ளார். இரவு மணி 8.15: அதிகாரப்பூர்வமற்ற முடிவுகள்: டிஎபி - 41,236 பிசிஎம் - 3,507 முகம்மட் நபி பக்ஸ் - 756 அபு பாக்கார் - 218 செல்லாத…

புக்கிட் குளுகோர்: ராம்கர்பால் பெரும்பான்மை அதிகரித்துக் கொண்டிருக்கிறது

  மணி இரவு 7.30:.புக்கிட் குளுகோர் இடைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் டிஎபியின் வேட்பாளர் ராம்கர்பால் 14,816 வாக்குகளைப் பெற்று முன்நிலையில் இருக்கிறார். இரவு மணி 7.00 நிலவரம்: ராம்கர்பால் வெற்றி நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறார். இக்கட்டத்தில் ராம் 12,375 வாக்குகளை பெற்றுள்ளார். பார்ட்டி சிந்தா மலேசியாவின் வேட்பாளர்…