மெட்ரிகுலேஷன் திட்டம்குறித்த தனது அறிக்கை தொடர்பாக Universiti Malaya Association of New Youth (Umany) தலைவர் டாங் யி ஸீ-க்கு காவல்துறையினர் அபராதம் அனுப்பியுள்ளனர். டாங் (மேலே) நாளைப் பிற்பகல் 2 மணிக்கு வாங்சா மாஜு மாவட்ட காவல் தலைமையகத்தில் தனது வாக்குமூலத்தை அளிப்பார் என்று லிபர்ட்டிக்கான…
கடலில் மிதக்கக் காணப்பட்ட பொருள் எம்ஏஎஸ் விமானத்தினுடையதா?
சீனக் கப்பல் ஒன்று கடலில் மிதந்து கொண்டிருந்த ஒரு பொருளை மீட்டெடுத்துள்ளது. அது காணாமல்போன மலேசிய விமான நிறுவனத்தின் விமானத்தைச் சேர்ந்த பொருளாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அப்பொருள் விமானம் காணாமல்போனதாக சொல்லப்படும் பகுதியில் கண்டெடுக்கப்பட்டதாக சீனாவின் ஸின்ஹுவா செய்தி நிறுவனம் கூறியது. சீனக் கப்பலின் பணியாளர்கள் எனக் …
நஜிப்: எம்எச்370 எல்லாம் ஆண்டவன் செயல்
கடந்த சனிக்கிழமையிலிருந்து காணாமல் போயிருக்கும் எம்எச்370 பயண விமானத்தை தேடும் நடவடிக்கையில் அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று கூறிய பிரதமர் நஜிப், அம்முயற்சி வெற்றி பெற ஒவ்வொருவரும் பிராத்தனை செய்ய வேண்டும் என்றார். "அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளோடு நாம் இணைந்து கொள்ள வேண்டும், ஒன்றுபட வேண்டும், பிராத்தனை…
எம்எச் 370 பற்றி வதந்திகளைப் பரப்பாதீர், நடவடிக்கை எடுக்கப்படும்:அரசாங்கம் எச்சரிக்கை
காணாமல்போன எம்ஏஎஸ் விமானம் பற்றி வதந்திகளைப் பரப்புவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படலாம் எனத் தொடர்பு, பல்லூடக துணை அமைச்சர் ஜைலானி ஜொஹாரி கூறினார். உறுதிப்படுத்தப்படாத தகவல்களைப் பரப்புவது விசாரணைகளுக்கு இடையூறாக இருக்கும் என்பதுடன் விமானத்தில் பயணம் செய்தவர்களின் குடும்பத்தாரின் உணர்வுகளையும் காயப்படுத்தலாம் என்றாரவர்.
திருட்டு கடப்பிதழில் பயணித்த ஈரானியருக்குப் பயங்கரவாதிகளுடன் தொடர்பு இல்லை
எம்எச்370 பயணிகளில் திருட்டு கடப்பிதழ்களை வைத்திருந்த இருவரில் ஒருவர் ஈரான் நாட்டவர் என்றும் அவர் ஜெர்மனிக்குச் சென்று கொண்டிருந்தார் என்றும் கூறப்பட்டுள்ளது. பெளரியா நூர் முகம்மட் மெஹர்டாட் என்பதுதான் அந்த 19 வயது இளைஞனின் பெயர் என இன்ஸ்பெக்டர் ஜெனரல் அப் போலீஸ் காலிட் அபு பக்கார் கூறினார்.…
ஒரு கர்பாலை ஒழித்தால் 100 கர்பால்கள் எழுவர்
டிஏபி தலைவர் கர்பால் சிங், அரசாங்கம் ஒரு கர்பாலைத் தீர்த்துக் கட்டினால் 100 கர்பால்கள் எழுவர் என எச்சரித்துள்ளார். தமக்கு எதிரான அரசநிந்தனை வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பு குறித்து கருத்துரைத்த கர்பால், புக்கிட் குளுகோரில் நாடாளுமன்ற தேர்தல் ஒன்றையும் எதிர்நோக்க பிஎன் தயாராக வேண்டும் என்றார். இன்று கோலாலும்பூர் …
கேஜெ: அசிசாவுக்கு இரக்கம் காட்டாதீர்; அவர் அன்வாரின் கைப்பாவை
வாக்காளர்கள் காஜாங் இடைத் தேர்தலில் போட்டியிடும் பிகேஆர் தலைவர் டாக்டர் வான் அசீசாவிடம் ஏமாந்து விடக்கூடாது என்கிறார் அம்னோ இளைஞர் தலைவர் கைரி ஜமாலுடின். அதிகார ஆசை பிடித்து அலையும் அன்வார் இப்ராகிம், அசீசாவை ஒரு “கைப்பாவை” ஆக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் என கைரி குறிப்பிட்டார். “அன்வாரைப் புறக்கணிக்க …
எம்எச் 370 சுபாங் நோக்கித் திரும்பி வந்தது?
காணாமல்போன எம்ஏஎஸ் விமானத்தைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வரும் வேளையில் அது சுபாங்கை நோக்கித் திரும்பி வந்திருக்கக் கூடிய சாத்தியமும் இருப்பதாக ஒரு கருத்துத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தேடும் நடவடிக்கை விமானம் சென்ற பாதையில் மட்டும் கவனம் செலுத்தாமல் அதற்கு அப்பால் உள்ள பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டிருப்பதாக எம்ஏஎஸ்…
முகைதின்: தீர்ப்புக்கும் பிஎன்னுக்கும் சம்பந்தமில்லை
பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிமின் குதப்பணர்ச்சி வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்புக்கும் பிஎன்னுக்கும் சம்பந்தமே இல்லை என்கிறார் துணைப் பிரதமர் முகைதின் யாசின். “நீதிமன்றங்கள் சுயேச்சையாக இயங்குகின்றன. அவற்றுக்கும் பிஎன்னுக்கும் தொடர்பில்லை. எல்லா வழக்குகள் போலவே இதுவும் நடந்துள்ளது. “அன்வார் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டதற்கும் பிஎன்னுக்கும் தொடர்பில்லை”, என்றாரவர்.…
அரச நிந்தனை செய்த கர்பாலுக்கு ரிம4,000 அபராதம்
கோலாலும்பூர் உயர் நீதிமன்றம் கர்பால் சிங் அரசநிந்தனைக் குற்றம் புரிந்திருக்கிறார் என்பதால் அவருக்கு ரிம4,000 அபராதம் விதிப்பதாக இன்று தீர்ப்பளித்தது. நீதிபதி அஸ்மான் அப்துல்லா, தீர்ப்பு அளிக்குமுன்னர், வழக்கின்போது முன்வைக்கப்பட்ட வாதங்களையும் மக்கள் இவ்வழக்கில் காட்டும் ஆர்வத்தையும் கர்பாலின் உடல்நிலையையும் கவனத்தில் கொண்டதாகக் கூறினார். டிஏபி தலைவரான கர்பால், …
முள்கம்பி வேலியால் ஆத்திரமடைந்தார் ரபிஸி
இன்று காஜாங்கில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்ட காஜாங் முனிசிபல் மன்ற விளையாட்டு வளாகத்துக்கு வெளியே பிகேஆர்-பிஎன் ஆதரவாளர்களைப் பிரித்து வைப்பதற்காக போலீசார் முள்கம்பி வேலி அமைத்திருந்ததை பிகேஆர் வியூக இயக்குனர் ரபிஸி இஸ்மாயில் கண்டித்தார். “பிரதமர் நஜிப்( அப்துல் ரசாக்)பையும் அவரின் துணையிரான ரோஸ்மா(மன்சூர்)வையும் பாதுகாப்பதற்காக மக்களை எதிரிகள்போல் …
காஜாங்கில் பிகேஆர், பிஎன் நேரடி போட்டி
காஜாங் இடைத் தேர்தலில் பிகேஆர் தலைவர் டாக்டர் வான் அசீசா வான் இஸ்மாயிலும் மசீசி உதவித் தலைவர் சியு மெய் பன்னும் களமிறங்குவர். வேட்பு மனு தாக்கல் நேரம் காலை மணி 10-க்கு முடிவுக்கு வந்த போது அவ்விருவரையும் தவிர்த்து வேறு எவரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. எனவே, …
ஹிஷாம்: ‘எம்எச் 370’-ஐ விழச்செய்ததாகக் கூறும் கடிதம் உண்மையானதல்ல
எம்ஏஎஸ் விமானமொன்று காணாமல் போனதற்குத் தானே பொறுப்பு என்று உரிமை கொண்டாடி வலம்வந்து கொண்டிருக்கும் ஒரு கடிதம் உண்மையானதாக இருக்கும் சாத்தியமில்லை என்கிறார் இடைக்கால போக்குவரத்து அமைச்சர் ஹிஷாமுடின் உசேன். சீனாவில், ஊடகங்களில் வலம் வந்து கொண்டிருக்கும் ஒரு திறந்த மடல் பற்றியே ஹிஷாமுடின் அவ்வாறு கூறினார். அக்கடித்ததில்,…
பிஎன் எம்பி: பக்காத்தான் புறக்கணிப்பு ஒரு துரோகச் செயல்
ஆட்சி செய்வோருக்கும் நீதித் துறைக்கும் எதிர்ப்பைக் காட்டும் நோக்கில் நாளை நாடாளுமன்றக் கூட்டத்தைப் புறக்கணிக்கப் போவதாக பக்காத்தான் அறிவித்திருப்பது மக்கள் அவர்களுக்கு வழங்கிய அதிகாரத்துக்குச் செய்யும் துரோகமாகும் என பிஎன் எம்பிகள் கூறினர். கடந்த வெள்ளிக்கிழமை முறையீட்டு நீதிமன்றம் அன்வார் இப்ராகிம் குற்றவாளி என்று தீர்ப்பளித்தது ஒரு “தனிப்பட்ட …
எதிர்ப்பின் அடையாளமாக கறுப்பு உடையில் பக்காத்தான் எம்பிகள்
பேரரசர் நாடாளுமன்றக் கூட்டத்தைத் தொடக்கிவைக்கும்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் (எம்பிகள்) வெண்ணிற சடங்குபூர்வ ஆடை அணிவதுதான் வழக்கமாகும். ஆனால், இன்று பக்காத்தான் எம்பிகள் அனைவரும் “எதிர்ப்பை”க் காட்ட கருப்பு ‘சூட்’ அணிந்து நாடாளுமன்றம் சென்றனர். அந்த உடை “அநீதிக்கும் அதிகார அத்துமீறலுக்கும்” எதிர்ப்புத் தெரிவிக்கும் அடையாளமாகும் என பக்காத்தான் தலைவர் …
கதவும் வால்பகுதியும் எம்ஏஎஸ் விமானத்துக்குச் சொந்தமானவை அல்ல
கடலில் மிதக்கக் காணப்பட்ட விமானத்தின் உடைந்த பகுதிகள் காணாமல்போன எம்ஏஎஸ் விமானத்துக்குச் சொந்தமானவை அல்ல என்பதை வியட்னாமிய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். சிவில் விமானப் போக்குவரவுத் துறை (டிசிஏ) தலைமை இயக்குனர் அஸஹாருடின் அப்துல் ரஹ்மான் இதைத் தெரிவித்ததாக பெர்னாமா அறிவித்துள்ளது. இதற்குமுன்னர், தேடும் பணியில் ஈடுபட்டுள்ள வியட்னாமிய குழு,…
பேரரசர்: ஜிஎஸ்டி-இன் நன்மைகளை எம்பிகள் விளக்க வேண்டும்
நாடாளுமன்ற உறுப்பினர்கள்(எம்பி-கள்) பொருள், சேவை வரி(ஜிஎஸ்டி)யின் நன்மைகளையும் அது செயல்படும் விதத்தையும் மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் என்று பேரரசர் அப்துல் ஹாலிம் முவா’ட்ஸாம் ஷா வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றத்தின் 2014-ஆம் ஆண்டுக்கான கூட்டத்தொடரைத் தொடக்கிவைத்து உரையாற்றிய பேரரசர், ஜிஎஸ்டி என்பது கூடுதல் வரி அல்லவென்பதையும் நடப்பில் உள்ள விற்பனை மற்றும் …
குற்றச்சாட்டைத் தள்ளிவைக்க அன்வார் முறையீடு செய்தார்
குதப்புணர்ச்சி வழக்கில் குற்றவாளி என்ற தீர்ப்பைத் தள்ளுபடி செய்ய கூட்டரசு நிதிமன்றத்துக்கு மனு செய்திருப்பதாக அன்வார் இப்ராகிமின் வழக்குரைஞர் ராம் கோபால் கூறினார். “அன்வாருக்கான பிணையை இப்போது செலுத்திக் கொண்டிருக்கிறோம். முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தாகி விட்டது”, என்றாரவர். கடந்த வெள்ளிக்கிழமை, உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தள்ளுபடி செய்து …
ஜாஹிட்: ஐரோப்பிய பெயர்கள்; ஆசிய முகங்கள்- அது எப்படி?
ஆசியர்கள் போன்ற உடல் அமைப்பைக் கொண்டவர்கள் ஐரோப்பிய பெயர்களில் மலேசிய விமான நிறுவனத்தின் எம்எச்370-இல் பயணிக்க அனுமதித்த குடிநுழைவு அதிகாரிகளை உள்துறை அமைச்சர் அஹமட் ஜாஹிட் ஹமிடி கடுமையாகச் சாடினார். “இத்தாலிய, ஆஸ்திரிய பயணிகளாக இருக்கிறார்கள் ஆனால், ஆசியர்கள்போன்று காட்சியளிக்கிறார்களே என்று (குடிநுழைவு அதிகாரிகள்) சற்றும் சிந்திக்காதது எப்படி …
எம்ஏஎஸ் விமானத்தின் கதவும் வால்பகுதியும் கண்டெடுக்கப்பட்டன?
வியட்னாமிய மீட்புக் குழு, கடலில் ஒரு விமானத்தின் கதவும் வால்பகுதியும் மிதக்கக் கண்டதாகவும் அவை மலேசிய விமான நிறுவன (எம்ஏஎஸ்)த்தின் போயிங் 777-200க்குச் சொந்தமானவையாக இருக்கலாம் என்று நம்புவதாகவும் அறிவித்துள்ளது. இத்தகவல் வால் ஸ்ட்ரீட் ஜர்னலில் வெளியாகியுள்ளது. ஆனால், எம்ஏஎஸ் தனக்கு அது பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்று …
காஜாங் இடைத் தேர்தல்: அன்வாருக்கு பதிலாக வான் அசிஸா
பிகேஆர் தலைவர் டாக்டர் வான் அசிஸா வான் இஸ்மாயில் அக்கட்சியின் புதிய வேட்பாளராக காஜாங் இடைத் தேர்தலில் போட்டியிடுவார் என்று அக்கட்சி இன்று அறிவித்தது. பிகேஆர் சார்பில் காஜாங் இடைத் தேர்தலில் போட்டியிடவிருந்த அதன் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம் கடந்த வெள்ளிக்கிழமை குதப்புணர்ச்சி வழக்கு II…
மாஸ் எம்எச்370 விமானத்தின் உடைந்த பாகங்கள் எதுவும் காணப்படவில்லை
மாஸ்சின் விமானம் எம்எச்370த்தின் உடைந்து சிதறைய பாகங்கள் எதுவும் வியட்னாமிய கடலில் காணப்படவில்லை என்பதை வியட்னாமிய கடற்படையினருடன் உறுதிப்படுத்திக் கொண்டதாக அரச மலேசிய கடற்படை தெரிவித்துள்ளது என்று பிரதமர் நஜிப் கூறினார். "உடைந்து போன பாகங்கள் ஏதும் இல்லை என்று அரச மலேசிய கடற்படை உறுதிப்படுத்தியுள்ளது", என்று…
வான் அசீசா: கண்ணீர் வேண்டாம், நடக்க வேண்டியதில் கவனம் வைப்போம்
தம் கணவரும் பிகேஆர் நடப்பில் தலைவருமான அன்வார் இப்ராகிமின் குதப்புணர்ச்சி வழக்கின் தீர்ப்புக் குறித்து நீண்டகாலம் வருத்தப்படுவதை விடுத்து அடுத்து செய்ய வேண்டியவற்றில் கவனம் செலுத்த வேண்டும் என பக்காத்தானுக்கு அறிவுரை கூறியுள்ளார் பிகேஆர் தலைவர் வான் அசீசா வான் இஸ்மாயில். “கண்ணீர் தற்காலிகமானதே; கண்ணீரைத் துடைத்துவிட்டு அடுத்துச் …
அன்வார் வழக்கின் தீர்ப்புக்கு மனித உரிமைக் குழுக்கள் கண்டனம்
முறையீட்டு நீதிமன்றத்தில், அன்வார் இப்ராகிம் மீதான குதப்புணர்ச்சி வழக்கில் அவருக்கு ஐந்தாண்டுச் சிறைத் தண்டனை வழங்கப்பட்ட தீர்ப்பை, உள்நாட்டையும் வெளிநாடுகளையும் சேர்ந்த மனித உரிமைப் போராளிகள் கண்டித்துள்ளனர். “நீதியின் பெயரால் அன்வாருக்கு இழைக்கப்படும் முடிவில்லா கொடுமைகள் மலேசிய நீதித்துறையில் படிந்துள்ள சகிக்க முடியாத ஒரு கறையாகி விட்டது”, எனப் …