நெகிரி செம்பிலான், செரம்பானில் 6ஆம் வகுப்பு மாணவர்களைக் குண்டர் குழுக்களில் சேர்ப்பதற்காக ஆள் சேர்த்ததாகக் கூறப்படும் 20 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். செவ்வாய்க்கிழமை இரவு சுமார் 9.10 மணியளவில் கார்டன் ஹோம்ஸில் உள்ள ஒரு உணவகத்தின் முன்பாக சந்தேக நபர் தடுத்து வைக்கப்பட்டதாக செரம்பான் காவல்…
தேச நிந்தனைச் சட்டம் நீக்கப்படுமா, இல்லையா? நஜிப்புக்கே தெரியவில்லை
தேச நிந்தனைச் சட்டத்தை அகற்றப்போவதாக 2012-இல் வாக்குறுதி அளித்த பிரதமர் இப்போது தயங்குவதாக தெரிகிறது. “தேச நிந்தனைச் சட்டம் தொடர்பில் அரசாங்கம் பல தரப்பினருடனும் கலந்துரையாடும். “மக்களுக்கு வருத்தம்தரும் எந்த முடிவையும் அரசாங்கம் செய்யாது”, என்று நஜிப் அப்துல் ரசாக் கூறியுள்ளார். அந்தக் காலனிகால- சட்டம் தொடர்ந்து பயன்படுத்தப்படுவதை…
சுல்தான் கொடுத்தாலும் நிராகரிப்போம்!
இன்று நடந்த பாஸ் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துகள் சிலாங்கூர் மாநில மந்திரி புசார் வேட்பாளர் நியமன விவகாரத்தில் அதன் தடுமாற்ற நிலைப்பாடு தெளிவாகத் தென்பட்டது. பாஸ் கட்சியின் துணைத் தலைவர் முகமட் சாபு மந்திரி புசார் பதவியை சுல்தான் பாஸ் சட்டமன்ற உறுப்பினருக்கு கொடுத்தாலும் கட்சி…
கெராக்கான் முன்னாள் தலைமை நீதிபதியை வன்மையாகக் கண்டிக்கிறது
நாட்டின் சுதந்திரத்திற்கு மலாயக்காரர்-அல்லாதவர்களின் பங்களிப்பை சிறுமைப்படுத்துவதன் வழி மலேசியர்களுக்கிடையில் வெறுப்புணர்வை தூண்டி விடும் முன்னாள் தலைமை நீதிபதியின் செயலை கேராக்கான் வன்மையாகக் கண்டிக்கிறது. "இது அனைத்து மலேசியர்களுக்கும் எதிரான ஓர் அப்பட்டமான குற்றம். இது மலேசிய சமுதாயத்தில் வெறுப்புணர்வுக்கு வித்திடுகிறது", என்று கெராக்கான் கட்சியின் உதவித் தலைவர்…
டிஏபி: ஹாடியின் சாதனைதான் என்ன?
பிகேஆர் தலைவர் அசிசாவைக் குறைகூறும் பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங்-கை டிஏபி தலைவர்கள் சாடியுள்ளனர். இரண்டு மாநிலங்களை பிஎன்னிடம் பறிகொடுத்த அவருக்கு வான் அசிசாவைக் குறைசொல்லும் தகுதி இல்லை என்றவர்கள் கூறினார். “இவர் ஒரு தவணைக்கு மட்டும் மந்திரி புசாராக இருந்துவிட்டு திரெங்கானுவைப் பறிகொடுத்தார். கெடா மந்திரி …
ஹாடி அவரே சொன்ன ஆலோசனையைப் பின்பற்றி பாஸிலிருந்து விலகுவது நல்லது
பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங், பக்கத்தான் உணர்வுடன் பாஸுக்குத் தலைமைதாங்க இயலாவிட்டால் அக்கட்சியிலிருந்து விலகுவதே நல்லது என பிகேஆர் மகளிர் பகுதி கூறியுள்ளது. பாஸ் மத்திய குழு சிலாங்கூர் மந்திரி புசார் பதவிக்கு பிகேஆர் தலைவர் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயிலை நியமனம் செய்வதை ஏற்றுக்கொண்ட …
வான் அசிசாவைப் பரிகசிப்பதில் ஷுரா மன்றமும் சேர்ந்துகொண்டது
பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங் பிகேஆர் தலைவர் வான் அசிசா வான் இஸ்லாயிலை வெளிப்படையாகவே இகழ்ந்துரைத்ததை அடுத்து கட்சியின் ஆன்மிகப் பகுதித் துணைத் தலைவர் ஹுருன் டின்னும் அசிசாவை இகழ்ந்துரைத்துள்ளார். “அவருக்குத் தகுதி இருந்திருக்குமானால் ஷுரா மன்றம் தொடக்கத்திலேயே ஆதரவு தெரிவித்திருக்கும்”, என நேற்று பாங்கியில் அவர் …
பக்கத்தானில் இருப்பதால் பாஸ் மலாய் ஆதரவை இழக்கவில்லை
பாஸ் மூன்று-கட்சி கூட்டணியான பக்கத்தானில் இருப்பதால் மலாய்-முஸ்லிம்களின் ஆதரவு குறைந்துவிட்டதாகக் கூறும் அக்கட்சியின் பழமைவாதிகளை காலிட் சமட் சாடியுள்ளார். “மலாய்க்காரர் ஆதரவு (ஏகபோகமாக) நமக்குத்தான் என்ற நிலை என்றும் இருந்ததில்லை- அப்படியிருக்க மலாய் ஆதரவு குறைந்துபோனதாக எப்படிக் கூற முடியும்? (இன்றைய நிலையை) 2008, 2013 பொதுத் தேர்தல்களுடன் …
மலாய்க்காரர்கள் மட்டுமே உண்மையாக சுதந்திரத்திற்கு போராடினர், முன்னாள் தலைமை நீதிபதி
இந்நாட்டின் சுதந்திரத்திற்காக மலாய்க்காரர்கள் மட்டுமே உண்மையாகப் போராடினர் என்று இந்த நாட்டின் முன்னாள் நீதிபதியான அப்துல் ஹமிட் முகம்மட் நேற்று யூனிவர்சிட்டி சிலாங்கூர் (யுனிசெல்) நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில் கூறினார். அவசரக் காலத்தில் அச்சமூக உறுப்பினர்கள் கம்யூனிஸ்ட்களுக்கு எதிராகப் போராடி உயிர் தியாகம் செய்துள்ளனர் என்று கூறிய…
அஸிசா எம்பி பதவிக்கு தகுதியற்றவர், இகழ்ந்துரைக்கிறார் ஹாடி
பிகேஆர் தலைவர் வான் அஸிசா வான் இஸ்மாயிலை சிலாங்கூர் மாநில மந்திரி புசார் வேட்பாளராக பக்கத்தான் தலைமைத்துவ மன்றம் தீர்மானித்த போது அதனை ஏற்றுக்கொண்ட பாஸ் கட்சி தலைவர் அப்துல் அவாங் ஹாடி இப்போது அஸிசாவின் செயல்திறன் மீது கரிப்பூசுகிறார். அஸிசாவின் நாடாளுமன்ற சேவை தரமற்றது. அதனைவிட…
ஹாடி: மாறுகருத்துடையோர் பாஸிலிருந்து வெளியேறலாம்
பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங், அதிருப்தி கொண்டவர்கள் கட்சியை விட்டு வெளியேறலாம் என்று கூறியுள்ளார். “பாஸில் கருத்து வேறுபாடு கொண்டிருப்போர், சொந்த கட்சியை அமைக்க விரும்பினால் தாராளமாக செய்யலாம்”, என்றாரவர்.. அவர்கள் கட்சியில் இருக்க வேண்டியதில்லை. விலகுவதே நல்லது என்றார். மாறுகருத்து கொண்டவர்கள் கொசுக்கள் போன்றவர்கள். “கொசுக்கள் …
முக்ரிஸ்: மகாதிருக்குத் தலைவர்கள்மீது அளவில்லா அன்பு அதனால்தான் குறைகூறுகிறார்
முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் பிரதமர் நஜிப்பைக் குறைகூறுகிறார் என்றால் அதற்கு இப்போதுள்ள தலைவர்களை அவர் மிகவும் நேசிப்பதே காரணம். மகாதிரின் குறைகூறல்கள் நாடு எதிர்நோக்கும் பல்வேறு சவால்களையும் எதிர்கொள்ள நஜிப்புக்கு ஊக்கமளிக்கும் நோக்கம் கொண்டவை என்கிறார் கெடா மந்திரி புசார் முக்ரிஸ் மகாதிர். “அன்பினால்தான் என் …
கெராக்கான்: பெர்காசா பிஎன்னைக் கைவிடுகிறதா? நல்லதாகப் போயிற்று
பெர்காசா இனி பின்னை ஆதரிக்கப்போவதில்லை என்பதைக் கேட்டு மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கிறார் கெராக்கான் இளைஞர் தலைவர் டான் கெங் லியாங். பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், 1948ஆம் ஆண்டு தேச நிந்தனைச் சட்டத்தை அகற்றினால் பிஎன்னுக்குத் தம் ஆதரவை நிறுத்திக் கொள்ளப்போவதாக பெர்காசா தலைவர் நேற்று அறிவித்திருந்ததுதான் டான்னுக்கு …
எம்பி பெயர்ப்பட்டியலுக்கு எதிராக மலாக்கா பாஸ் போர்க் கொடி
சிலாங்கூர் மந்திரி புசாரைத் தேர்ந்தெடுப்பதில் கட்சியின் மத்திய குழு செய்த முடிவு மீறப்பட்டிருப்பதை மலாக்கா பாஸ் ஆணையர் அட்லி ஸகாரி வெளிப்படையாகவே குறைகூறியுள்ளார். “சிலாங்கூர் மந்திரி புசார் விவகாரத்தில் மத்திய குழு செய்த முடிவு ஒதுக்கப்பட்டதை அறிய வருத்தமாக உள்ளது”, என்றவர் ஓர் அறிக்கையில் கூறினார். மந்திரி புசார் …
தேச நிந்தனைச் சட்டம் தொடர்பில் பிரதமரைச் சாடுகிறது பெர்காசா
பெர்காசா, தேச நிந்தனைச் சட்டம் அகற்றப்படும் என்று வாக்குறுதி கொடுத்ததற்காக பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்மீது தாக்குதல் தொடுக்க ஆயத்தமாகி வருவதுபோல் தெரிகிறது. எதிரணியினர் கோரிக்கையை ஏற்று நஜிப் அச்சட்டத்தை எடுத்தெறிந்தால் அவர் ஒரு பக்கத்தான் பிரதமர்தான் என்றுகூட பெர்காசா தலைமைச் செயலாளர் சைட் ஹசன் சைட் அலி …
சரவாக் பிகேஆர் தேச நிந்தனைச் சட்ட-எதிர்ப்பு இயக்கம் தொடங்கியது
சரவாக் பிகேஆர் இளைஞர் பகுதியும் பண்டார் கூச்சிங் தொகுதியும் சேர்ந்து தேச நிந்தனைச் சட்டத்தை நீக்க வேண்டும் என்று கோரும் இயக்கமொன்றைத் தொடங்கியுள்ளன. இவ்வியக்கம் ஆண்டு முழுவதும் தொடரும். தேசிய இளம் வழக்குரைஞர்கள் குழு தொடங்கியுள்ள இயக்கத்துடன் தொடர்புகொண்ட இந்த இயக்கம் இன்று காலை 9 மணியிலிருந்து 11…
என்யுஜே: மலேசியாகினி செய்தியாளரிடம் போலீஸ் மன்னிப்புக் கோர வேண்டும்
நேற்று பினாங்கில் மலேசியாகினி செய்தியாளர் சூசன் லூன் தேசிய நிந்தனைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதற்கு போலீஸ் அவரிடம் மன்னிப்பு கோர வேண்டும் இன்று மாலை தேசிய செய்தியாளர் சங்கம் கேட்டுக் கொண்டது. "சில குறிப்பிட்ட அரசு சார்பற்ற அமைப்புகள் செய்த புகாரின் அடிப்படையில் எவரையும் விசாரிக்கும்…
மூன்று நாளில் நடவடிக்கை எடுப்பீர்: பெங் ஹொக் சகோதரி வலியுறுத்து
காலஞ்சென்ற தியோ பெங் ஹொக்கின் குடும்பத்தார், அந்த டிஏபி அரசியல் உதவியாளரின் மரணத்துக்குக் காரணமானவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அதற்கு மூன்று நாள் அவகாசமும் அளித்துள்ளனர். நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் ஏற்கனவே வாக்குறுதி அளித்துள்ளார் என்றும் இன்று முறையீட்டு நீதிமன்றம் …
பெங் ஹொக் மரணம் தற்கொலை அல்ல: முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு
டிஏபி அரசியல் உதவியாளர் தியோ பெங் ஹொக் மரணத்தை விசாரணை செய்த நீதிபதி அதன்மீது வழங்கியிருந்த திடமில் தீர்ப்பை மேல்முறையீட்டு நீதிமன்றம் ஒருமுகமாக தள்ளுபடி செய்தது. நீதிபதி முகம்மட் அரிப், நீதிபதி மா வெங் குவை, நீதிபதி ஹமிட் சுல்தான் அபு பக்கார் ஆகியோரடங்கிய நீதிபதிகள் குழு அந்த …
அம்னோ: தனி இராணுவம் உருவாக்குகிறாரா குவான் எங்?
முதலமைச்சர் லிம் குவான் எங் மாநில தன்னார்வக் காவல் படை(பிபிஎஸ்) என்ற பெயரில் இராணுவப் படையொன்றை உருவாக்கி வருகிறாரா என பினாங்கு அம்னோ கேட்கிறது. அதன் தலைவர் சைனல் அபிடின் ஒஸ்மான், அப்படையில் மாநில அரசு கிட்டதட்ட ரிம1.5 பில்லியன் முதலீடு செய்திருப்பதாகக் கூறினார். “பிபிஎஸ் அரசியல் நோக்கம் …
பிரதமரே, தேச நிந்தனைச் சட்டத்தைத் தள்ளிவையுங்கள்
தேச நிந்தனைச் சட்டத்தை அகற்றப்போவதாகக் கூறியது உண்மை என்றால் அரசாங்கம் அச்சட்டத்தைத் தற்காலிகமாக தள்ளிவைக்க வேண்டுமென வழக்குரைஞர் மன்ற முன்னாள் தலைவர் அம்பிகா ஸ்ரீநிவாசன் கேட்டுக்கொண்டிருக்கிறார். “தற்காலிக தடை விதித்த பிறகு அதை அகற்ற 20 ஆண்டுகள் வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள். யார்மீதும் தேச நிந்தனைக் குற்றம் சாட்டாதீர்கள், அவ்வளவுதான்”,…
சமூக ஆர்வலர் சாஃபானுக்கு தேச நிந்தனை வழக்கில் 10-மாத சிறை
கோலாலும்பூர் செஷன்ஸ் நீதிமன்றம், தேச நிந்தனைக் குற்றம் சாட்டப்பட்டிருந்த சொலிடேரிடி மஹாசிஸ்வா மலேசியா முன்னாள் தலைவர் முகம்மட் சாஃஃபானுக்கு 10-மாதச் சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது. கடந்த ஆண்டு மே 13-இல், ஆற்றிய உரையில் அவர் தேச நிந்தனைச் சட்டம் பகுதி 4(1)-இன்கீழ் குற்றம் புரிந்திருக்கிறார் என நீதிபதி …
மாட் சாபு: எம்பி பதவிக்கு மற்ற வேட்பாளர்கள் நியமனம் பற்றி…
பாஸ் துணைத் தலைவர் முகம்மட் சாபு, சிலாங்கூர் மந்திரி புசார் பதவிக்கு கட்சியின் ஆகஸ்ட் 17 கூட்டத்தில் முடிவு செய்யப்பட்ட இரண்டு பெயர்கள் தவிர்த்து வேறு பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டிருப்பது பற்றித் தமக்குத் தெரியாது என்கிறார். அவ்விரண்டு பெயர்களுடன் பாஸ் அதன் கட்சியைச் சேர்ந்த ஒருவரின் பெயரையும் பரிந்துரைத்திருப்பதாக ஊடகங்களில் …
பாஸ் அஸிசாவையும் அஸ்மின் அலியையும் நியமிக்கவில்லை!
சிலாங்கூர் மாநில மந்திரி புசார் பதவிக்கு வேட்பாளராக பாஸ் கட்சி பிகேஆரின் தலைவர் வான் அஸிசாவையோ, துணைத் தலைவர் அஸ்மின் அலியையோ நியமிக்கவில்லை என்ற தகவல் பிகேஆர் வட்டாரத்திலிருந்து வெளியாகியுள்ளது. பிகேஆரின் பல மூத்த தலைவர்கள் இதனை மலேசியாகினியிடம் உறுதிப்படுத்தினர். பெயரை வெளியிடக்கூடாது என்ற நிபந்தனையுடன் பேசிய…


