அதிகப்படியான ஆசிரியர் பணிச்சுமையின் நீண்டகால பிரச்சினையை விரிவாகத் தீர்க்க ஒரு சிறப்புக் குழுவை அமைக்குமாறு தேசிய ஆசிரியர் தொழில் சங்கம் (The National Union of the Teaching Profession) கல்வி அமைச்சகத்தை வலியுறுத்தியுள்ளது. அதன் தலைவர் அமினுதீன் அவாங் கூறுகையில், நாடு முழுவதும் சுமார் 418,000 ஆசிரியர்கள்…
அம்னோ எம்பி, டோல் குறைப்புப் பற்றிய தேர்தல் வாக்குறுதியை அரசுக்கு…
அரசாங்கம் அதன் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற கடமைப்பட்டிருக்கிறது என்பதை பிஎன் கப்பாளா பத்தாஸ் எம்பி ரீசல் மரைக்கான் இன்று நினைவுப்படுத்தினார். பிஎன் அதன் தேர்தல் அறிக்கையில் டோல் கட்டணத்தைக் குறைப்பதாக வாக்குறுதி அளித்திருப்பதை அவர் சுட்டிக்காட்டினார். “நகரங்களுகிடையிலான டோல் கட்டணத்தைக் கட்டம் கட்டமாகக் குறைக்க பிஎன் வாக்குறுதி அளித்தது”,…
விலைகளை உயர்த்துவதைத் தவிர வேறு வழி இல்லையா? அன்வார் ஒப்புக்கொள்ளவில்லை
பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம், பற்றாக்குறை நிலையைச் சரிசெய்ய உதவித் தொகைகளைக் குறைத்து விலைகளை உயர்த்துவதைத் தவிர வேறு வழி இல்லை என்று அரசாங்கம் கூறுவதை நொண்டிச்சாக்கு என வருணித்தார். சுமையை மக்களின்மீது ஏற்றிவைத்துவிட்டு அரசாங்கம் அதன் ஊதாரித்தனமான செலவுகளைத் தொடர்கிறது என்றந்த முன்னாள் நிதி அமைச்சர்…
ஆர்ஓஎஸ் விளக்கமளிக்க வேண்டும், இல்லையேல் சட்ட நடவடிக்கை: டிஏபி எச்சரிக்கை
தலைமைத்துவ தேர்தல்மீதான சர்ச்சை முடிவில்லாமல் தொடர்வதால் வெறுத்துப்போன டிஏபி, சங்கப் பதிவதிகாரிக்கு (ஆர்ஓஎஸ்) எதிராக நடவடிக்கை எடுக்க தயாராகி வருகிறது. செப்டம்பர் 29-இல் நடந்த டிஏபி மத்திய நிர்வாகக் குழுத் தேர்தலைத் தான் அங்கீகரிக்கவில்லை என ஆர்ஓஎஸ் டிஏபி-க்குக் கடிதம் அனுப்பி வைத்திருந்தது. அது சட்டத்தைமீறிய ஒரு செயல்…
டோல் கட்டண உயர்வுக்கு இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பு
அங்காத்தான் பிலியா இஸ்லாம் மலேசியா (அபிம்), கெராக்கான் மஹாசிஸ்வா செ-இஸ்லாம் மலேசியா (காமிஸ்) ஆகிய அமைப்புகள் நெடுஞ்சாலைக் கட்டண உயர்வை எதிர்க்கப்போவதாக அறிவித்துள்ளன. தேசிய மாணவர் அமைப்பான காமிஸ், “ஹிம்புனான் அமானா ரக்யாட்” என்ற பெயரில் ஏற்கனவே எதிர்ப்பியக்கத்தைத் தொடங்கி விட்டதாகக் கூறியது. அபிம் விரைவில் எதிர்ப்பு இயக்கத்தைத்…
மருத்துவமனை கூரை இடிந்து விழுந்தது பற்றி ரென்ஹில் நிறுவனம் வாயைத்…
ரிம690 மில்லியன் செலவில் கட்டப்பட்ட ஸ்ரீசெர்டாங் மருத்துவமனையில் உள்கூரை பல தடவை இடிந்து விழுந்திருந்தாலும் அது பற்றி அந்த மருத்துவமனையைக் கட்டிய குத்தகை நிறுவனமான ரென்ஹில் இதுவரை கருத்துரைக்கவில்லை. அந்நிறுவனத்தைத் தொடர்புகொண்டபோது, அவ்விவகாரம் பொதுப்பணித் துறை விசாரணையில் இருப்பதால் கருத்துரைப்பதற்கில்லை என்று கூறி விட்டது. ஏழாவது தடவை உள்கூரை…
‘விலை உயர்வைத் தடுக்க முடியாவிட்டால் கைரி பதவி விலகத் தயரா?’
இளைஞர், விளையாட்டு அமைச்சர் கைரி ஜமாலுடின், போக்குவரத்துக் கட்டண உயர்வு, நெடுஞ்சாலைக் கட்டண உயர்வு ஆகியவற்றைத் தடுக்க முடியாவிட்டால் பதவி விலக வேண்டும் என்று எதிரணி தலைவர் ஒருவர் குறிப்பிட்டார். பிகேஆரின் ஸ்ரீசித்தியா சட்டமன்ற உறுப்பினர் நிக் நஸ்மி நிக் அஹ்மட் (இடம்), இதற்குமுன்னர்கூட கைரி தலைமையில் செயல்படும்…
நஜிப்: மக்களை வசப்படுத்தும் அணுகுமுறையை நான் கடைப்பிடிப்பதில்லை
தம் அரசாங்கம் மக்களை வசப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் செயல்படுவதில்லை என்பதை வலியுறுத்திய பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், தேசியப் பொருளாதாரத்தை விரிவுபடுத்தும் நோக்கத்துடனேயே அது எப்போதும் பாடுபட்டு வந்துள்ளது என்றார். மக்களுக்கு ‘இனிப்பான வாக்குறுதிகளை’க் கொடுப்பதற்கு முன்னர் நாட்டின் வருமானம் தொடர்ந்து பெருகுவதை உறுதிப்படுத்திக் கொள்வது அவசியமாகும்.…
ரபிஸி: ஏஜி-க்கு நன்றி. ஆனால், அவருடைய எல்லாக் கணக்கு வழக்குகளையும்…
தம் வங்கிக் கணக்குகளைப் பார்க்க வேண்டுமா தாராளமாக பார்வையிடலாம் என்று சட்டத்துறை தலைவர் (ஏஜி) அப்துல் கனி பட்டேய்ல் கூறி இருப்பதற்கு பிகேஆர் எம்பி ரபிஸி ரம்லி நன்றி தெரிவித்தார். ஆனால், எல்லாவற்றையுமே பார்க்க விரும்புவதாக அவர் கூறினார். 2005-இலிருந்து 2010வரை ஏஜி வாங்கிய சொத்துக்களை மட்டுமல்லாது அவரின்…
பிகேஆர்: ஆத்திரப்பட வைக்கும் விதத்தில் பேசுகிறார் வாஹிட்
டோல் கட்டண உயர்வை ஏற்க முடியாதவர்கள் மாற்றுச்சாலைகளில் செல்லலாம் என்று பிரதமர்துறை அமைச்சர் அப்துல் வாஹிட் ஒமார் கூறியது “ஆத்திரப்படவைக்கிறது” அது “பொறுப்பற்ற பேச்சு” என பிகேஆர் வருணித்துள்ளது. அரசாங்கம் “சாலைப் பராமரிப்பு ஒப்பந்தத்தின் பின்னே ஒளிந்துகொள்ளாமல்” டோல் கட்டண உயர்வால் மலேசியர்களுக்கு ஏற்படக்கூடிய நிதிச் சுமையை எண்ணிப்…
டோல் கட்டணம் 50 சென்னிலிருந்து ரிம2 வரை உயரலாம்
2014, ஜனவரி முதல் தேதியிலிருந்து தேசிய நெடுஞ்சாலைகளில் டோல் கட்டணம் உயரும் என்ற செய்தி இன்றைய நாளேடுகளில் பரவலாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், டோல் கட்டணத்தை எவ்வளவு உயர்த்துவது என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை எனப் பொதுப்பணி அமைச்சர் பாடில்லா யூசுப் தெரிவித்ததாக நியு ஸ்ரேய்ட்ஸ் டைம்ஸ் கூறியது. அது …
எம்பி, செனட்டர்களின் சம்பள உயர்வு மீதான அறிக்கை விரைவில் வெளிவரும்
எம்பி, செனட்டர்கள் ஆகியோரின் சம்பள, அலவன்ஸ் உயர்வு மீதான அறிக்கை அடுத்த ஆண்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என எதிர்ப்பார்க்கப்படுவதாக பிரதமர்துறை அமைச்சர் ஷஹிடான் காசிம் கூறினார். இப்போது அவர்களின் சம்பளம் ரிம6,000. இது மற்ற நாடுகளில் கொடுக்கப்படுவதைவிட குறைவானதாகும் என்றாரவர். “கம்போடியா, தாய்லாந்து ஆகியவற்றில் எம்பிகளின் சம்பளம்…
கனி பட்டேய்ல்: ரபிஸி என் கணக்குகளைத் தாராளமாக ஆராயலாம்
சட்டத்துறை தலைவர் அப்துல் கனி பட்டேய்ல், பாண்டான் எம்பி ரபிஸி ரம்லி விரும்பினால் தம் வங்கிக் கணக்குகளைத் தாராளமாக நுணுகி ஆராயலாம் என்று கூறினார். முன்னாள் கோலாலும்பூர் சிஐடி இயக்குனர் மாட் ஸைன் இப்ராகிம் அண்மையில் செய்த சத்திய பிரமாணத்தில் அப்துல் கனியின் தவறான நடத்தை பற்றிக் கூறியிருப்பது…
கல்விமுறையை அவசரமாக சீரமைக்க வேண்டிய அவசியம் உள்ளது
நாட்டின் கல்விமுறை ,தொழில்துறைகளுக்குத் தேவையான திறன்படைத்தோரை உருவாக்குவதில்லை என்பதால் அதை அவசரமாக “சீரமைக்க” வேண்டும் என்கிறார் அனைத்துலக வாணிக, தொழில் அமைச்சர் முஸ்தபா முகம்மட். “கல்விமுறையை முழுமையாக சீரமைக்க வேண்டியுள்ளது. அங்கே இருப்பவர்கள் பொறுமை இழந்து வருகிறார்கள் என்பதால் அதை அவசரமாக செய்ய வேண்டும். இல்லையேல் இலக்குகளை அடைய…
ஸபாஷால் தண்ணீர் வழங்க முடியாத இடங்களில் ஊராட்சி மன்றங்கள் கைகொடுக்கும்
நாளை குடிநீர் விநியோகம் தடைப்படும்போது ஷியாரிகாட் பெக்காலான் ஆயர் சிலாங்கூர்(ஸபாஷ்) தண்ணீர் கொண்டு வந்து கொடுக்க முடியாத இடங்களில் ஊராட்சி மன்றங்கள் தண்ணீரைக் கொண்டு வந்து கொடுத்துதவும். முன்பு பல வேளைகளில் நீர் விநியோகம் தடைப்பட்டபோது ஸ்பாஷால் தண்ணீரைக் கொண்டு வந்து கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதைக் கருத்தில்…
ரோஸ்மா: தனி ஜெட்டில் பயணம் செய்தது பணி செய்வதற்காக; பொழுதுபோக்க…
அரசாங்க ஆதரவில் தனி ஜெட்டில் பயணம் செய்ததைத் தற்காத்துப் பேசிய பிரதமரின் துணைவியார் ரோஸ்மா மன்சூர் பணி நிமித்தமாகத்தான் அந்தப் பயணங்களை மேற்கொண்டதாகவும் அவை பொழுதுபோக்குப் பயணங்கள் அல்ல என்றும் கூறினார். நிறைய நிகழ்ச்சிகள் நெருக்கமாக இருந்ததால் வணிக விமானப் பயணங்கள் பொருத்தமாக இரா என்று மலேசிய கெஜட்டுக்கு…
அரசாங்கம்: விலைகளை உயர்த்துவதைத் தவிர வேறு வழி இல்லை
பல ஆண்டுகளாக பற்றாக்குறை நிலையிலேயே காலத்தை ஓட்டியாயிற்று. அந்நிலையைத் தொடர விடுவது நல்லதல்ல. அதனால் உதவித் தொகைகளைக் குறைத்து விலைகளை உயர்த்துவதைத் தவிர வேறு வழியில்லை. புத்ரா ஜெயாவில், பொருளாதார உருமாற்றத் திட்டத்தின் மூன்றாம் ஆண்டு நிறைவையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு கருத்தரங்கில் பேசிய அனைத்துலக வாணிக, தொழில்…
சாலைக்கட்டண உயர்வுக்கு நெடுஞ்சாலை பராமரிப்பாளர்மீது பழி போடாதீர்
அடுத்த ஆண்டு சாலைக்கட்டணம் உயர்த்தப்படுவதைப் பொதுமக்கள் ஏற்கத்தான் வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள அமைச்சரை பிகேஆர் வியூக இயக்குனர் ரபிஸி ரம்லி சாடினார். பிரதமர்துறை அமைச்சர் அப்துல் வாஹிட் ஒமார், அரசாங்கம் நெடுஞ்சாலை பராமரிப்பாளர்களுடன் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தங்களுக்குக் கட்டுப்பட வேண்டியுள்ளது என்று கூறி இருந்தார்.. 2011-இலேயே சாலைக் கட்டணம் உயர்த்தப்பட்டிருக்க…
ஐஜிபி: டிபிகேஎல் எதிர்ப்புக்கு ஏற்பாடு செய்தவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும்
இன்று காலை கோலாலும்பூர் மாநராட்சி மன்றத்துக்கு(டிபிகேஎல்) வெளியில் கண்டனக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தவர்கள்மீது நடவடிக்கை எடுப்பது உறுதி என இன்ஸ்பெக்டர் ஜெனரல் அப் போலீஸ் காலிட் அபு பக்கார் கூறினார். சட்டப்படி அக்கூட்டம் பற்றி ஏற்பாட்டாளர்கள் போலீசுக்குத் தெரியப்படுத்தி இருக்க வேண்டும். அவர்கள் அதைச் செய்யவில்லை. “2013 அமைதிப்…
பேராக்கில் இரண்டு ஷியாக்கள் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படுவர்
ஷியாக்களுக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கைகளை முடுக்கி விட்டிருக்கிறது. நாளை இரு ஷியாக்கள் பேராக் ஷியாரியா நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவர். ஷியா போதனைகள் அடங்கிய நூல்களை வைத்திருந்ததாக சூர் அஸா அப்துல் ஹாலிம், 41, முகம்மட் ரிட்சுவான் யூசுப், 31, ஆகிய இருவர்மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பேராக்கில் ஷியா போதனைகளைக் கொண்ட…
சொத்து வரி உயர்வை எதிர்த்து 20,000 கடிதங்கள்
சொத்து மதிப்பீட்டு வரி உயர்வுக்கு ஆட்சேபணை தெரிவிக்கும் 20,000-க்கு மேற்பட்ட கடிதங்கள் இன்று காலை கோலாலும்பூர் மாநராட்சி மன்றத்(டிபிகேஎல்) தலைமையகத்திடம் ஒப்படைக்கப்பட்டன. பக்காத்தான் ரக்யாட் எம்பிகள் ஏற்பாடு செய்திருந்த கண்டனப் பேரணியின் ஒரு பகுதியாக இந்த ஆட்சேபனை தெரிவிக்கும் கடிதங்கள் டிபிகேஎல்-லிடம் ஒப்படைக்கும் நிகழ்வு அமைந்திருந்தது. பேரணி மக்கள்…
தேசிய கல்விப் பெருந்திட்டம்: ம.இ.கா என்ன செய்ய வேண்டும்?
-மு. குலசேகரன், டிசம்பர் 16, 2013. தேசிய கல்விப் பெருந்திட்டத்தில் தமிழுக்கும் தமிழ்ப்பள்ளிகளுக்கும் பெரிய பாதிப்பு இருக்கின்றது என்பதனை ம.இ.கா தலைவர்களும் அதன் கீழ்மட்ட தொண்டர்களும் எவ்வளவு தூரம் அறிந்திருக்கின்றார்கள்? தமிழ்ப்பள்ளிகளின் காவலன், தமிழுக்கு குரல் கொடுப்போர் என்றெல்லாம் பறைசாற்றும் ம.இ.கா தலைவர்கள் இந்த புதிய…
பினாங்கின் புதிய வீட்டுவசதி விதிமுறைகளைக் குறைகூறுவது ‘இதயமற்ற செயல்’
பினாங்கில் கட்டுப்படியான-விலை வீடுகளை வாங்கி குறிப்பிட்ட காலத்துக்குள் அவற்றைத் திரும்ப விற்பதைத் தடுக்கும் புதிய விதிமுறைகளைக் குறைகூறுவோரை முதலமைச்சர் லிம் குவான் எங், சாடினார். அடுத்த ஆண்டு பிப்ரவரி முதல் நாள் நடைமுறைக்கு வரும் அப்புதிய விதிமுறைகள், முதல்முறையாக வீடு வாங்குவோருக்கு உதவுவதையும் சொத்து விலை கட்டுமீறி உயர்வதைத்…
சிலாங்கூர் டிஎபி தலைவர் டோனி புவா
பெட்டாலிங் ஜெயா நாடாளுமன்ற உறுப்பினர் டோனி புவா சிலாங்கூர் மாநில டிஎபியின் புதிய தலைவராக இன்று தேர்வு செய்யப்பட்டார். இவர் தெரசா கோவின் இடத்தை நிரப்புகிறார். "பொறுப்பு மிக்க இப்பதவியை மிகப் பணிவுடன் ஏற்றுக்கொள்கிறேன். சிலாங்கூரில் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் டிஎபி வெற்றி பெற்றுள்ள இக்கட்டத்தில் நான்…