நெகிரி செம்பிலான், செரம்பானில் 6ஆம் வகுப்பு மாணவர்களைக் குண்டர் குழுக்களில் சேர்ப்பதற்காக ஆள் சேர்த்ததாகக் கூறப்படும் 20 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். செவ்வாய்க்கிழமை இரவு சுமார் 9.10 மணியளவில் கார்டன் ஹோம்ஸில் உள்ள ஒரு உணவகத்தின் முன்பாக சந்தேக நபர் தடுத்து வைக்கப்பட்டதாக செரம்பான் காவல்…
எம்பி பதவிக்கு சொந்த வேட்பாளர், பாஸ் ஒப்புக்கொள்கிறது
சிலாங்கூர் மந்திரி புசார் பதவிக்கு பிகேஆர் தலைவர் வான் அஸிசாவை நியமித்த பக்கத்தான் தலைமைத்துவ மன்றத்தின் முடிவை ஏற்றுக்கொள்வதாக பாஸ் முதலில் அறிவித்திருந்தது. பின்னார், வான் அஸிசாவுடன் பிகேஆரின் துணைத் தலைவர் அஸ்மின் அலியின் பெயரையும் சேர்த்து இரு பெயர்களை அரண்மனைக்கு அனுப்பி வைத்தது. இதனிடையே, பாஸ்…
தொடரும் பிபிஎஸுக்கு எதிரான வேட்டையில் டிஎபி எம்பி கைது செய்யப்பட்டார்
பினாங்கு மாநில தன்னார்வ காவல்படையினருக்கு எதிரான கடும் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில், டிஎபி தஞ்சோங் நாடாளுமன்ற உறுப்பினர் இங் வெய் அய்க் போலீசாரால் இன்று கைது செய்யப்பட்டார். இங் பிபிஎஸ்சின் துனைக் கமாண்டராவார். வாக்குமூலம் அளிக்க வந்த அவரை இன்று பிற்பகல் மணி 1.00…
சுல்தானின் ஆணையை மீறியதற்காக பிகேஆர் கடுமையாக கண்டிக்கப்பட்டது
மந்திரி புசார் பதவிக்கு சுல்தானின் ஆணைக்கு மாறாக ஒரே ஒரு பெயரை மட்டும் அரண்மனையிடம் தாக்கல் செய்ததற்காக அரண்மனை பிகேஆரை கடுமையாக கண்டித்துள்ளது என்று கட்சிக்குள்ளிருப்பவர்கள் கூறினர். அரண்மனையிலிருந்து நேற்று பிகேஆர் தலைமையகத்திற்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் அக்கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. "மந்திரி புசார் பதவிக்கு சாத்தியமான வேட்பாளராக (பிகேஆர்…
ஹாடி எம்பி பதவிக்கு 3 பாஸ் ஆட்சிக்குழு உறுப்பினர்களை நியமித்துள்ளார்
சிலாங்கூர் மந்திரி புசார் பதவிக்கான போராட்டத்தில் தோன்றியுள்ள ஒரு புதிய திருப்பம் சிக்கலை மேலும் சிக்கலாக்கியுள்ளது. பாஸ் அதன் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்கள் மூவரின் பெயரை தாக்கல் செய்துள்ளது. பக்கத்தான் ரக்யாட் கட்சிகள் செப்டெம்பர் 3 க்குள் அவற்றின் மந்திரி புசார் பதவிக்கான வேட்பாளர்களின் பெயரை அரண்மனையிடம் தாக்கல்…
நாடாளுமன்ற உறுப்பியம் பெறாதவர்கள் அமைச்சர்கள், துணை அமைச்சர்கள்களாக நியமனம் பெற்ற…
நாடாளுமன்ற உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்படாத மற்றும்/அல்லது நியமிக்கப்பட்டாத நபர்கள் அமைச்சர்களாகவும் துணை அமைச்சர்களாகவும் நியமிக்கப்பட்டது மலேசிய அரசமைப்புச் சட்டத்திற்கு முரணானது என்று ஈப்போ பாரட் நாடாளுமன்ற உறுப்பினர் மு. குலசேகரன் தொடுத்திருந்த வழக்கு இன்று மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. இவ்விவகாரத்தை தாம் பெடரல் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்…
மலேசியாகினி செய்தியாளர் சூசன் போலீசாரால் இன்று விசாரிக்கப்படுகிறார்
பினாங்கு மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் பீ பூன் போவுடன் நடத்திய நேர்காணல் பற்றி விசாரணை நடத்துவதற்காக மலேசியாகினியின் செய்தியாளர்/துணை ஆசிரியர் சூசன் லூன் நோர்த்ஈஸ்ட் மாவட்ட போலீஸ் நிலையத்திற்கு இன்று நண்பகலில் வருமாறு கூறப்பட்டுள்ளார். சூசனும் ஓன்லைன் செய்தி தளமும் தேச நிந்தனைச் சட்டம் 1948, செக்சன்…
இரண்டுக்கும் கூடுதலான பெயர்கள் வேண்டும், அரண்மனைக் கடிதம் மீண்டும் கோருகிறது
நேற்று மாலை பிகேஆர் அரண்மனையிலிருந்து ஒரு கடிதத்தைப் பெற்றது. அக்கடிதம் மந்திரி புசார் நியமனம் பற்றியதாக இருக்க வேண்டும் என்று நம்பப்பட்டது. பிகேஆர் தலைமையக அதிகாரி இரவு 8.00 மணி அளவில் அரண்மனையிலிருந்து கடிதம் கிடைத்ததை மலேசியாகினியிடம் உறுதிப்படுத்தினார். அக்கடிதத்தின் உள்ளடக்கம் குறித்து பிகேஆரின் தலைமைச் செயலாளர்…
அரண்மனையிலிருந்து பிகேஆருக்கு கடிதம்
சிலாங்கூர் அரண்மனையிலிருந்து இன்று பிகேஆர் ஒரு கடிதத்தை பெற்றுள்ளது. அது அதன் மந்திரி புசார் நியமனம் பற்றியதாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. "ஆம், இன்று ஒரு கடிதத்தைப் பெற்றோம்", என்று பிகேஆரின் தொடர்பு இயக்குனர் பஹாமி பாட்ஸில் மலேசியாகினியிடம் தொடர்பு கொண்டபோது கூறினார். ஆனால், அது குறித்த…
பாஸ் வெளியேறினால், அனைவருக்கும் இழப்பு, கூறுகிறார் பாஸ்காரர்
செல்வாக்கு மிக்க ஹராக்கா கட்டுரையாளர் ஒருவர் "காஜாங் பயணம்" பக்கத்தானிலிருந்து பாஸ் கட்சியை தனிமைபப்படுத்தும் முயற்சியாகிக் கொண்டிருக்கிறது என்று கூறுகிறார். காஜாங் பயணத்தால் உருவான சிலாங்கூர் நெருக்கடி எதிரணியான பக்கத்தான் ரக்யாட்டில் உறவு நிலையை பொசுக்கும் மருட்டலாகி இருக்கிறது. சிலாங்கூர் மாநிலத்தின் அடுத்த மந்திரி புசாராக பிகேஆரின்…
கைது செய்யப்படுவது பற்றி நாங்கள் அஞ்சவில்லை
சாபா மற்றும் சரவாக் மக்கள் கைது செய்யப்படும் சாத்தியம் குறித்து நடுங்க வில்லை என்று சாபா ஸ்டார் தலைவர் ஜெப்ரி கிட்டிங்கான் இன்று கூறினார். தாம் கைது செய்யப்பட்டாலும் கூட, தங்களுடைய உரிமைக்கான போராட்டம் தொடரும் என்று அவர் வலியுறுத்தினார். மாறாக, அரசாங்கத்தின் கடும் நடவடிக்கைகள் போராட்டத்திற்கு…
மலேசியாகினி செய்தியாளருக்கு எதிராக தேச நிந்தனை விசாரணை
பினாங்கை தளமாகக் கொண்ட மலேசியாகினி உதவி ஆசிரியர் சூசன் லூன் மீது தேச நிந்தனை சம்பந்தமாக விசாரணை நடத்த செய்யப்பட்டுள்ள முடிவை போலீஸ் உறுதிப்படுத்தியது. சூசன் லூனுக்கும் மலேசியாகினிக்கும் எதிராக பல்வேறு புகார்கள் செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து லூன் விசாரிக்கப்படுவார் என்று போலீஸ் தலைவர் அப்துல் ரஹிம் ஹனாபி…
சிலாங்கூர் எம்பி பதவிக்கு அஸ்மின் பெயர், மறுக்கிறது பிகேஆர்
சிலாங்கூர் அரண்மனை மாநில எம்பி பதவிக்கு பிகேஆரின் தலைவர் வான் அஸிசாவை ஏற்றுக்கொள்ளாவிட்டால், மாற்றாக அக்கட்சியின் துணைத் தலைவர் அஸ்மின் அலியை நியமிக்கும் என்று ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகளை பிகேஆர் மறுத்துள்ளது. நேற்று, அக்கட்சியின் தலைமைத்துவ மன்றம் இரண்டு முடிவுகளை மட்டுமே எடுத்தது. ஒன்று, அந்த உயர்…
மலேசியகினிக்கு எதிராக பெர்காசா போலீஸ் புகார்
மலேசியாகியும் பினாங்கை தளமாகக் கொண்ட அதன் உதவி ஆசிரியர் சூசன் லூனும் போலீசாரின் பெயருக்கு களங்கத்தை உண்டுபண்ணி விட்டனர் என்று அவர்களுக்கு எதிராக 10 போலீஸ் புகார்கள் செய்யப்பட்டுள்ளன. தங்களை "பினாங்கு மலாய்க்காரர் பிரதிநிதிகளின் கூட்டணி" என்று கூறிக்கொண்ட பெர்காசா மற்றும் 13 இதர அரச சார்பற்ற…
அம்பிகா: பிரதமரே, இது வீரம் அல்ல
தமது நாட்டு மக்களையே கொடுமைப்படுத்துவது வீரமல்ல என்று பிரதமர் நஜிப் ரசாக்கை மலேசிய வழக்குரைஞர் மன்றம் மற்றும் பெர்சே இயக்கம் ஆகியவற்றின் முன்னாள் தலைவரான அம்பிகா சாடினார். துணிச்சல் என்பது குறைகூறல்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுப்பது என்பதாகாது, அது கொடுமைப்படுத்துதல் ஆகும் என்று கூறிய அம்பிகா,…
“திமிர் பிடித்த மலாய்க்காரர் அல்லாதவர்கள்” என்ற தாக்குதல் டிஎபியை இலக்காகக்…
மலாய்க்காரர் அல்லாதவர் திமிர் பிடித்தவர்களாகி வருகிறார்கள் என்று தாம் விடுத்த அறிக்கை டிஎபியின் தலைவர்களையும், குறிப்பாக அதன் ஆதரவாளர்களையும் இலக்காகக் கொண்டது என்று உள்துறை அமைச்சர் அஹமட் ஸாகிட் ஹமிடி இன்று கூறியதாக சொல்லப்படுகிறது. மலேசியாவின் பெரும்பான்மையான மலாய்க்காரர் அல்லாதவர்கள் மிதவாதிகள். அவர்கள் இதர இனத்தினரின் உணர்ச்சிகளுக்கு…
அரசாங்க பல்கலைக்கழகங்களில் ஆங்கில மொழியில் தேர்வு கட்டாயமாக்கப்படுமாம்
மலேசியாவின் பொதுப் பல்கலைக்கழகங்களில் பகசா மலேசியாவுடன் ஆங்கில மொழியில் தேர்வும் கட்டாயமாக்கப்படும் கொள்கை அமலுக்கு வரக்கூடும். இவ்விவகாரம் குறித்து தாம் பிரதமர் நஜிப்புடன் விவாதித்துள்ளதாக துணைப் பிரதமரும் கல்வி அமைச்சருமான முகைதின் யாசின் கூறினார். பட்டதாரிகளிடம் ஆங்கிலத்தில் பேசும் மற்றும் எழுதும் ஆற்றல் இல்லை என்றால், அவர்களுக்கு…
பாஸ் முக்தாமார் புதிய இடத்தில் நடைபெறும்
இரண்டு வாரங்களில் நடைபெறவுள்ள பாஸ் பேராளர் மாநாடு ஜோகூர் பாருவில் ஏற்கனவே திட்டமிடப்பட்ட இடத்தில் நடக்காது. சூத்ரா மாலுக்கு அருகில் உள்ள திறந்த வெளியில் அது நடப்பதாக இருந்தது. ஆனால், அதன் உரிமையாளர் “சில தரப்புகளின் நெருக்குதலுக்கு ஆளானதால்” கட்சி கொடுத்திருந்த ரிம75,000 முன்பணத்தைத் திருப்பிக் கொடுத்து விட்டார் …
பிகேஆரும் டிஏபியும் எம்பி பதவிக்கு அசிசாவைப் பரிந்துரைத்தன
டிஏபியும் பிகேஆரும் சிலாங்கூர் மந்திரி புசார் வேட்பாளர்களின் பெயர்களை சிலாங்கூர் சுல்தானிடம் வழங்கியுள்ளன. “பிகேஆர், (வேட்பாளர் பெயரடங்கிய) கடிதத்தை நேற்று அரண்மனைக்கு அனுப்பியது”, என பிகேஆர் தலைமைச் செயலாளர் சைபுடின் நசுத்தியோன் மலேசியாகினியிடம் தெரிவித்தார். ஒரே ஒரு பெயர்தானா ஒன்றுக்கு மெற்பட்ட பெயர்கள் அனுப்பப்பட்டனவா என்று கேட்டதற்கு அவர் …
குலா: ஸாகிட்டா அல்லது நாங்களா என்று மஇகா, மசீச, கெராக்கான்…
"போதும், இனிமேல் பொறுக்க முடியாது: ஒன்று ஸாகிட் வெளியேற்றப்பட வேண்டும் அல்லது நாங்கள் அமைச்சரவையிலிருந்து வெளியேறுவோம்" என்று மஇகா, மசீச மற்றும் கெராக்கான் கட்சிகள் பிரதமர் நஜிப்பிடம் துணிந்து கூற வேண்டும் என்று டிஎபி நாடாளுமன்ற உறுப்பினர் மு. குலசேகரன் இன்று அக்கட்சிகளை கேட்டுக்கொண்டார். மலாய்க்காரர்கள் அல்லாதாருக்கு…
பெட்ரோல் குண்டு வீசியவனை பிடிப்பதற்கு உதவினால் ரிம 10,000 வெகுமதி
ஞாயிற்றுக்கிழமை மெர்டேகா கொண்டாட்டங்களுக்கு 15 நிமிடத்துக்கு முன், பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியவனை அடையாளம் காட்டுபவருக்கு ரிம10,000 பரிசளிக்க டிஏபி எம்பிகளும் சட்டமன்ற உறுப்பினருமாக ஐவர் முன்வந்துள்ளனர். அக்குண்டு வீச்சில் எவரும் காயமடையவில்லை. முதலமைச்சர் அப்போது ஜார்ஜ்டவுனில் வேறொரு நிகழ்வில் கலந்து …
கெராக்கான்: ஜாஹிட்மீதும் தேச நிந்தனைக் குற்றம் சாட்டப்பட வேண்டும்
மலாய்க்காரர்- அல்லாதாரைத் திமிர் பிடித்தவர்கள் என்று குறிப்பிட்ட உள்துறை அமைச்சர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடிமீதும் தேச நிந்தனைச் சட்டத்தின்கீழ்க் குற்றம் சாட்ட வேண்டும் என கெராக்கான் இன்று கூறியது. “குறிப்பிட்ட ஒரு தரப்பினரைப் பார்த்து சொன்னாரா, மலாய்க்காரர்- அல்லாத அத்தனை பேரையும் நினைத்துச் சொன்னாரா என்று தெரியவில்லை ஆனால், …
ஹுசாம்: அம்னோ, சிலாங்கூரை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர பாஸ் விவகாரத்தில்…
துணைப் பிரதமர் முகைதின் யாசினுடன் தொடர்புள்ள அம்னோ தரப்பு ஒன்று சிலாங்கூரைக் கைப்பற்றும் நோக்கில் பாஸ் விவகாரங்களில் தலையிட்டு வருவதாகக் கூறுகிறார் பாஸ் உதவித் தலைவர் ஹுசாம் மூசா. பாஸை பக்கத்தானை ரக்யாட்டிலிருந்து பிரித்து விட்டால் அதன்பின்னர் அம்னோ பாஸை நெருங்குவதும் அதனுடன் ஒத்துழைப்பதும் எளிதாகும் என்று அத்தரப்பு …
‘தயிப் மஹ்முட் மலேசியாவின் மிகப் பெரிய பணக்காரர் அல்லர்’
சரவாக்கின் முன்னாள் முதலமைச்சர் மஹ்முட் அபு பெக்கிர் தயிப், தம் தந்தை அப்துல் தயிப் மஹ்முட் மலேசியாவின் மிகப் பெரிய பணக்காரர் என்பதை மறுத்தார். கோலாலும்பூர் ஷியாரியா நிதிமன்றத்தில், தம் முன்னாள் மனைவி ஷானாஸ் அப்துல் மஜிட் தொடுத்துள்ள வழக்கில் சாட்சியமளித்த அபு பெக்கிர் அவ்வாறு கூறினார். மனைவியிடம் …


