நெகிரி செம்பிலான், செரம்பானில் 6ஆம் வகுப்பு மாணவர்களைக் குண்டர் குழுக்களில் சேர்ப்பதற்காக ஆள் சேர்த்ததாகக் கூறப்படும் 20 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். செவ்வாய்க்கிழமை இரவு சுமார் 9.10 மணியளவில் கார்டன் ஹோம்ஸில் உள்ள ஒரு உணவகத்தின் முன்பாக சந்தேக நபர் தடுத்து வைக்கப்பட்டதாக செரம்பான் காவல்…
நடவடிக்கை எடுத்தால் நீதிமன்றம் செல்வோம்: அமைச்சருக்கு பாஸ் இளைஞர்கள் பதிலடி
பாஸ் தன்னார்வப் படையான யுனிட் அமாலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டால் நீதிமன்றம் செல்வோம் என பாஸ் இளைஞர் தலைவர் சுஹாய்ஸான் காயாட் சூளுரைத்தார். பாஸின் யுனிட் அமால்-மீதும் போலீசார் நடவடிக்கை எடுப்பது “நிச்சயம்” என உள்துறை அமைச்சர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி கூறியதற்கு சுஹாய்சான் இவ்வாறு எதிர்வினையாற்றினார். யுனிட் …
ஜாஹிட்: பாஸ் யுனிட் அமாலுக்கும் இதே கதிதான்
பினாங்கு தன்னார்வக் காவல் படை(பிபிஎஸ்)-க்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டதுபோல் பாஸின் தன்னார்வப் படையான யுனிட் அமால்-மீதும் போலீசார் நடவடிக்கை எடுப்பது “நிச்சயம்” என்கிறார் உள்துறை அமைச்சர். “போலீஸ் இதேபோன்ற நடவடிக்கையை எடுக்கும். அது உறுதி”, என அஹ்மட் ஜாஹிட் ஹமிடி இன்று கோலாலும்பூரில் செய்தியாளர்களிடம் கூறினார். பிபிஎஸ்-சுக்கும் யுனிட்…
என்னை எப்போது கைது செய்யப்போகிறீர்கள்? ஐஜிபி-யைக் கேட்கிறார் குவான் எங்
பினாங்கு தன்னார்வக் காவல் படையைச்(பிபிஎஸ்) சேர்ந்த 156 பேரைக் கைது செய்த போலீசார் அடுத்து தம்மைக் கைது செய்யலாம் என்று நினைக்கிறார் பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங். “இப்படிக் கேட்கலாம் என்று நினைக்கிறேன். ‘என்னை எப்போது கைது செய்வீர்கள்?’ அவருக்காக (போலீஸ் படைத் தலைவர் காலிட் அபு …
அசிஸ் பாரி: 1992 ஆம் ஆண்டு பிரகடனப்படி அஸிசாவை எம்பியாக…
சிலாங்கூர் மாநில சுல்தான் மாநில மந்திரி புசாராக வான் அஸிஸா வான் இஸ்மயில் நியமிக்கப்படுவதற்கு ஒப்புதல் அளித்தே ஆக வேண்டும், ஏனென்றால் 1992 ஆம் ஆண்டில் அவரது தந்தை, அப்போது சுல்தானாக இருந்தார், கையொப்பமிட்ட ஒப்பந்தப்படி நடந்து கொள்ள வேண்டிய கடப்பாடு இவருக்கு உண்டு. அரசமைப்பு கோட்பாடுகள்…
கைரி: பிபிஎஸ் ஆபத்தானது, அதற்கெதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டது சரியே
அம்னோ இளைஞர் தலைவர் கைரி ஜமாலுடின், பினாங்கு தன்னார்வக் காவல் படைமீது போலீசார் நடவடிக்கை எடுத்திருப்பது சரியானதே என்கிறார். அது ஓர் “ஆபத்தான” கூட்டம் என்றவர் வருணித்தார். மாநிலப் போலீசாரின் பணிகளை அந்தத் தன்னார்வப் படையினர் செய்யத் தொடங்கி விட்டார்கள் என இளைஞர், விளையாட்டு அமைச்சரான கைரி கூறினார்.…
எக்ஸ்கோவிடம் 4 மணிநேர விசாரணை; ‘குற்றவாளி’போல் நடத்தப்பட்டார்
நேற்று கைதான பினாங்கு தன்னார்வக் காவல் படைத்(பிபிஎஸ்) தலைவர் பீ போன் பூ, போலீசார் நான்கு மணி நேரம் தம்மிடம் விசாரணை நடத்தியதாகவும் ஒரு குற்றவாளியைப் போல் நடத்தினார்கள் என்றும் கூறினார். “ஒரு குற்றவாளியிடம் நடந்துகோள்வதுபோல் பல மாதிரி கேள்விகளைக் கேட்டனர். படம் பிடித்தனர். கைரேகையைப் பதிவு செய்தனர்”,…
ஒப்ஸ் லாலாங் போன்றதொரு இயக்கம் தொடங்கியுள்ளது
அரசாங்கம் ஒபராசி லாலாங் போன்றதொரு நடவடிக்கையைத் தொடங்கியிருக்கிறது. பினாங்கில் தன்னாரவக் காவல் படையினர் (பிபிஎஸ்) 156 பேர் கைது செய்யப்பட்டிருப்பது இதைத் தெளிவாகக் காண்பிக்கிறது என எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம் கூறினார். 1987-இல், டாக்டர் மகாதிர் ஆட்சியில் ஒபராசி லாலாங் தொடங்கப்பட்டு 107பேர் கைது செய்யப்பட்டதுபோல் இப்போதைய …
அஸ்மி ஷரும் மீது தேச நிந்தனைக் குற்றச்சாட்டு
அரசாங்கத்தின் அதிகரித்து வரும் தேச நிந்தனைக் குற்றச்சாட்டு இப்போது கல்விமான்களையும் விட்டுவைக்கவில்லை. மலாயா பல்கலைக்கழகத்தின் சட்ட விரிவுரையாளரான அஸ்மி ஷரும் தேச நிந்தனைச் சட்டத்தின் கீழ் நாளை குற்றம் சாட்டப்படவிருக்கிறார். சிலாங்கூர் மந்திரி புசார் விவகாரம் குறித்து அவர் மலே மெயில் ஓன்லைனில் ஆகஸ்ட் 14 இல்…
பிபிஎஸ் தலைவர் பி பூன் போ கைது செய்யப்பட்டார்
பினாங்கு தன்னார்வ காவல்படை (பிபிஎஸ்) உறுப்பினர்களுக்கு எதிராக போலீஸ் மேற்கொண்டுள்ள கடும் நடவடிக்கை தொடர்கிறது. பிபிஎஸ் தலைவர் பி பூன் போ இன்று (ஆகஸ்ட் 31) கைது செய்யப்பட்டார். 62 வயதான பி பூன் போ பினாங்கு மாநில ஆட்சிக்குழு உறுப்பினரான அவர் வாக்குமூலம் அளிப்பதற்கு பினாங்கு…
சட்டவிரோத குடியேறிகள் மீதான ஆர்சிஐ அறிக்கை என்னவாயிற்று?
சாபா டிஏபி, சட்டவிரோத குடியேறிகள் மீதான அரச விசாரணை ஆணைய (ஆர்சிஐ) அறிக்கையை வெளியிட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளது. சட்டவிரோத குடியேறிகளுக்கு வாக்குகளுக்காக குடியுரிமைகள் கொடுக்கப்பட்ட கமுக்கமான நடவடிக்கை பற்றி விசாரணை நடத்திய அந்த ஆணையம், அதன் அறிக்கையை மே 12-இல் பேரரசரிடம் ஒப்படைத்தது. ஆனால், அது…
பிஎம்ஓ அறிக்கை சீரற்ற அரசாங்கம் என்பதைக் காட்டுகிறது
தேச நிந்தனைச் சட்டம் அரசியல்வாதிகளை அடக்கிவைக்கப் பயன்படுத்தப்படுவதாகக் கூறப்படுவதை மறுத்து பிரதமர் அலுவலகம் (பிஎம்ஓ) நேற்று விடுத்திருந்த அறிக்கை, நடப்பு அரசாங்கமே “மலேசிய வரலாற்றில் மிகவும் சீரற்ற அரசாங்கம்’ என்பதைக் காண்பிக்கிறது என மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் லிம் கிட் சியாங் சாடியுள்ளார். அந்த அறிக்கையில் யாருடைய கையொப்பமும் …
என்ஜிஓ: மகாத்மா காந்தியை அடக்கிவைக்க பிரிட்டிஷார் தேச நிந்தனைச் சட்டத்தையே…
பிரிட்டிஷாரிடமிருந்து விடுதலை பெற்ற நாளைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் வேளையில் அரசாங்கம் காலனிய காலத்து தேச நிந்தனைச் சட்டத்தை விடாமல் பயன்படுத்திக் கொண்டிருப்பதற்குக் கண்டனம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மனித உரிமைக்காக போராடும் புரோஹாம் அமைப்பு, இந்தியாவில் காலனி ஆட்சிக்கு எதிர்ப்புக் காட்டிய மகாத்மா காந்தியை அடக்கி வைக்க பிரிட்டன் இந்தச் சட்டத்தைப் …
சரணடையுங்கள் இல்லையேல் வீடுதேடி வருவோம்: பிபிஎஸ்-ஸுக்கு ஐஜிபி எச்சரிக்கை
பினாங்கு தன்னார்வ காவல் படையினர்(பிபிஎஸ்) தாங்களே வந்து சரணடையாவிட்டால் போலீஸ் அவர்களின் வீடுதேடி வரும் என போலீஸ்படைத் தலைவர் காலிட் அபு பக்கார் இறுதி எச்சரிக்கை விடுத்திருக்கிறார். “நாங்கள் அவர்களின் வீடுதேடிச் செல்லுமுன்னர் அவர்களே சரணடைவது நல்லது”, என்றவர் இன்று டிவிட்டரில் பதிவிட்டிருந்தார். இன்று காலை சுதந்திர தின …
மெர்டேகா அணிவகுப்புக்குப் பின்னர் 250 பிபிஎஸ் ஆள்கள் கைது
இன்று காலை எஸ்பிலேனட் திடலில் மெர்டேகா அணிவகுப்புக்குப் பின்னர் அதில் கலந்துகொண்ட 250 பினாங்கு தன்னார்வ காவல் படையைச் சேர்ந்த 250 பேரை போலீஸ் கைது செய்தது. “அவர்கள் அனைவரும் வாக்குமூலம் கொடுப்பதற்காக போலீஸ் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டனர்”, என டிஏபி ஆயர் ஈத்தாம் சட்டமன்ற உறுப்பினரும் பினாங்கு …
அஸிசா: இனவாதத்திலிருந்து பெறும் விடுதலைதான் உண்மையான மெர்டேக்கா!
மெர்டேக்கா கொண்டாட்டம் நாம் காலனித்துவ ஆட்சியிலிருந்து விடுதலை பெற்றதை கொண்டாடுவது பற்றியதல்ல. இனவாதத்திலிருந்தும் அடக்குமுறையிலிருந்தும் விடுதலை பெறுவதான் உண்மையான சுதந்திரம் என்று மலேசியா மக்களுக்கு இன்று நினைவுறுத்தப்பட்டது. "பிகேஆர் அனைத்து மலேசியர்களையும் சுதந்திரம் என்ற சொல்லின் உண்மையான மகிமையை உயர்வாகக் கருத வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறது. அது…
பினாங்கு முதல்வர் வீட்டிற்குள் வெடிகுண்டு வீசப்பட்டது
நாட்டின் சுதந்திரன கொண்டாட்டம் தொடங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் வீட்டிற்குள் வெடிகுண்டு வீசப்பட்டது. இச்சம்பவம் இரவு மணி 11.45 வாக்கில் நடந்தது. எறியப்பட்ட வெடிகுண்டு அவரது வீட்டு வளாகத்தில் விழுந்தது. தீயினால் எரிந்த அடையாளங்கள் சிறிய அளவில் காணப்பட்டன. இதனிடையே,…
ஆனந்த கிருஷ்ணன் மீது இந்திய போலீஸ் குற்றச்சாட்டு
மலேசியாவின் இரண்டாவது பெரிய செல்வந்தரான டி. ஆனந்த கிருஷ்ணன் மற்றும் அவரது உதவியாளர் ஆகஸ்டஸ் ரால்ப் மார்ஷல் ஆகியோருக்கு எதிராக இந்திய மத்திய போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளது. இவர்களுடன் 2004-2007 ஆம் ஆண்டுகளுக்கிடையில் தொலைபேசி துறை அமைச்சராக இருந்த தயாநிதி மாறன் மற்றும் அவரது கோடீஸ்வர…
ஐஜிபி: பினாங்கு பிபிஎஸ் அதன் நோக்கத்தைவிட்டு விலகிச் செல்கிறது
பினாங்கு தொண்டர் படையினர்(பிபிஎஸ்) சட்டவிரோத கும்பல்போல் செயல்பட்டுக் கொண்டிருந்தால் போலீஸ் அவர்களைக் கைது செய்யும். பிபிஎஸ் நான்காண்டுகளுக்கு முன்பு சமூகத்துக்குச் செவை செய்வதற்காக அமைக்கப்பட்டது. ஆனால், அது அந்த நோக்கத்தைவிட்டு விலகிச் சென்று விட்டதாக தெரிகிறது என போலீஸ் படைத் தலைவர் காலிட் அபு பக்கார் கூறினார். “பிபிஎஸ் …
உள்துறை அமைச்சு குற்ற நிலவரம் பற்றி முரண்பாடான புள்ளிவிவரங்களைக் கொடுத்ததாம்
குற்ற நிலவரம் தொடர்பாக இரண்டு எம்பிகளின் கேள்விக்கு உள்துறை அமைச்சு முரண்பாடான புள்ளிவிவரங்களைக் கொடுத்திருப்பதாக கூலாய் எம்பி தியோ நை சிங் கூறியுள்ளார். குளுவாங் எம்பி லியு சின் தோங்-கும் பெங்காலான் செப்பா எம்பி டாக்டர் இஸானி உசேனும் 2013-இன் குற்ற நிலவரம் பற்றிய புள்ளிவிவரத்தைக் கேட்டிருந்தார்கள். அவர்களுக்குக் …
கிட் சியாங்: மெர்டேகா விளம்பரங்களில் காண்பதெல்லாம் வெறும் மாயை
மலேசியா, உண்மையான சுதந்திரம், வளப்பம், நல்லிணக்கம் ஆகியவற்றை அடைந்து விட்டதாக மெர்டேகா விளம்பரங்களில் காட்டப்படுவது வெறும் மாயை என்று கூறும் டிஏபி பெருந் தலைவர் லிம் கிட் சியாங், அவற்றை அடைய இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டும் என்றார். “அந்த விளம்பரங்கள் மலேசியர் வாழ்க்கையைப் பற்றி ஒரு …
தேச நிந்தனைச் சட்டம் பயன்படுத்தப்படுவது ‘நீதிமன்ற விவகாரம்’ என்கிறது புத்ராஜெயா
எதிரணித் தலைவர்கள்மீது அடுத்தடுத்து தேச நிந்தனைக் குற்றம் சாட்டப்படுவது நீதிமன்றம் சம்பந்தப்பட்ட விவகாரம் என்றும் அதற்கும் அரசாங்கத்துக்கும் சம்பந்தமில்லை என்றும் பிரதமர்துறை அலுவலகம் இன்று கூறியது. “தேச நிந்தனைச் சட்டத்தின்கீழ் குற்றம் சாட்டுவதை நீதிமன்றங்கள் தீர்மானிக்கின்றன. மலேசிய நீதித்துறை சுயேச்சையாக செயல்படுவது. அது பல வழக்குகளில் அளித்த தீர்ப்பே …
“தொலைவிலிருந்து முடுக்கிவிடப்படும்” ஆள் எம்பி ஆக முடியாது
சிலாங்கூர் அரண்மனை வட்டாரத்தை மேற்கோள் காட்டி இன்று வெளிவந்துள்ள ஓர் ஆங்கில நாளேட்டின் செய்திப்படி "தொலைவிலிருந்து முடுக்கிவிடப்படும்" ஆள் மாநிலத்தின் மந்திரி புசார் ஆவதை சுல்தான் விரும்பவில்லை. ஆங்கில நாளேடான த ஸ்டாரின் செய்திப்படி, அரண்மனை விரும்புவது அப்பதவியில் இருப்பவர் மக்களின் நலனில் அக்கறையுள்ளவராக இருக்க வேண்டுமே…
மாட் தயிப்: பிரதமர் ‘சுற்றுப்பயணியாக’ இருப்பது மகாதிருக்குப் பிடிக்கவில்லை
முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகமட்டுக்கு அரசாங்கத் தலைவராக இருப்பவர் அடிக்கடி சுற்றுலா செல்வது பிடிக்காது என்பதால்தான் அவர் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கை சரமாரியாக தாக்குகிறார். சிலாங்கூரின் முன்னாள் மந்திரி புசாரும் இப்போது பாஸ் உறுப்பினருமான முகம்மட் தயிப் ஹராகா டெய்லி-யிடம் இவ்வாறு கூறினார். “நடப்பு அரசாங்க நிர்வாகத்தில்…


