ராம்கர்பால் ‘ஓரினச் சேர்க்கையாளரா’என்று வினவிய செய்திதாளுக்குக் கண்டனம்

புக்கிட்  குளுகோர்  வேட்பாளர்  ராம்கர்பால்  சிங்கை  நோக்கி “நீங்கள்  ஓரினச்  சேர்க்கையாளரா”  என்று  கேள்வி  எழுப்பிய  சீன  நாளேடு  ஒன்று கண்டனத்துக்கு  இலக்கானது. ராம்கர்பால்  சிங்  அவரது முகநூல்  பக்கத்தில்  பலசாளி  ஆண்களின் படங்களைப்  பதிவேற்றுவதையும்  38 வயதாகியும்  இன்னும்  திருமணம்  செய்துகொள்ளாமல்  இருப்பது  ஏன்  என்றும் பார்டி …

சிரம்பானில் தாக்கப்பட்ட கன்னித்துறவி காலமானார்

கடந்த  புதன்கிழமை  சிரம்பான்  தேவாலயம்  ஒன்றில்  தாக்கப்பட்ட  இரண்டு  கன்னித்துறவிகளில்  ஒருவர்  இறந்து  போனார். ஜூலியானா  லிம், 69, இன்று பிற்பகல்  மணி  3.25க்கு சிரம்பான்  மருத்துவமனையில் உயிரிழந்தார்  என  அறிவிக்கப்பட்டது. அவரின்  வழக்குரைஞர்  ஜோய்  அப்புக்குட்டனும்  அதை  உறுதிப்படுத்தினார். “இன்பெண்ட்  ஜீசஸ் (ஐஜே) ஸிஸ்டர்ஸ்  விரைவில்  ஓர் …

சிஎம்-மின் கார்முன் குதித்த வேட்பாளர்

பினாங்கு  முதலமைச்சர்  லிம்  குவான்  எங்கைச்  சந்திக்க  முயன்று  முடியாமல்  போனதால்  வெறுப்படைந்த  புக்கிட்  குளுகோர்  சுயேச்சை  வேட்பாளர்  அபு  பக்கார்  சித்திக்  முகம்மட்  ஸன்,  முடிவில் முதலமைச்சர்  மாநிலச்  சட்டமன்றத்திலிருந்து  புறப்பட்டுச்  செல்லும்போது  அவரின்  காரின்  முன்  குதித்து  அதனுடன்   மோதிக்  கொண்டார். பின்னர், காரின்முன்  படுத்துக்கொண்டு …

‘ஆலோசனைக்கு நன்றி, ஆனால் கெராக்கானுக்கு அது தேவையில்லை’

கெராக்கான்  ஆலோசகர்  சாங்  கொ  யோன்  தமது  கட்சி,   டிஏபி  வேட்பாளர்  டியானா  சோப்யா  முகம்மட்  டாவுட்  பெர்காசா  தலைவர்  இப்ராகிம்  அலியுடன்  இருப்பதைக்  காண்பிக்கும்  படத்தை அதன்  தேர்தல்  பரப்புரைக்குப்  பயன்படுத்திக்கொள்ளாது  என்று  கூறினார். “அந்த  வகை  உத்தியை  நாங்கள்  பயன்படுத்த  மாட்டோம்”,என்றாரவர். கெராக்கான்  வேட்பாளர்  மா …

மா: தோற்றால் செனட்டர் பதவியா? அதற்கு வாய்ப்பில்லை

தேர்தலில்  தோற்றாலும்  செனட்டர்  பதவி கொடுத்து  அமைச்சர்  ஆக்கப்படலாம்  என்று  தம்மைப்  பற்றி  டிஏபி  கூறி  இருப்பதை  தெலோக்  இந்தான்  பிஎன்  வேட்பாளர்  மா  சியும்  கியோங்  மறுக்கிறார். “தோற்றுப்போனால்  அப்படி ஒரு  வாய்ப்பு  இருக்கிறது  என்றா  நினைக்கிறீர்கள்?”,  என  மா  இன்று  காலை  மார்க்கெட்டை  வலம்  வந்தபோது …

இப்ராகிம்: டியானாவுக்கு சீனர் வாக்குகள் கிடைப்பதைத் தடுக்க என்னைப் பயன்படுத்துங்கள்

பெர்காசா  தலைவர்  இப்ராகிம்  அலி,  தாம்  டிஏபி  வேட்பாளர் டியானா  சோப்யா  முகம்மட்  டாவுட்டுடன்  இருப்பதைக்  காண்பிக்கும்  படத்தை  கெராக்கான்  அதன்  தெலோக்  இந்தான்  இடைத்  தேர்தல்  பரப்புரைக்குப் பயன்படுத்திக்  கொள்ள  வேண்டும்  என்கிறார். காஜாங்  இடைத்  தேர்தலின்போது  பிகேஆரும்  டிஏபியும்  மசீச வேட்பாளர்  பெர்காசா  தலைவர்களுடன்  இருப்பதைக்  …

இணையத்தில் இப்ராகிம் அலியுடன் டியானா

தெலோக்  இந்தான்  இடைத்  தேர்தலில்  கணினிப்  போரும்  முழுவீச்சுடன்  தொடர்கிறது. இப்போது  டிஏபி  வேட்பாளர் டியானா  சோப்யா முகம்மட்  டாவுட்,  பெர்காசா  தலைவர்  இப்ராகிம்  அலியுடன்  காட்சியளிக்கும்  படமொன்று  இணையத்தில்  வலம்  வந்து  கொண்டிருக்கிறது. அதில்  இப்ராகிம், டியானாவுக்கும்  அவரின்  தாயார்  யம்மி  சமத்துக்குமிடையில்  சிரித்த  முகத்துடன்  நிற்கிறார்.…

சட்டவிரோத பேரணி குற்றச்சாட்டிலிருந்து 42 பேர் விடுதலை

2008-இல், சட்டவிரோதமாகக்  கூட்டம்  கூடியதாகவும்  விலைவாசி  எதிர்ப்பு  ஆர்ப்பாட்டத்தில்  போலீசாரை  அவர்களின்  கடமையைச்  செய்யவிடாமல் தடுத்ததாகவும்  குற்றம்சாட்டப்பட்டிருந்த 41  சமூக  ஆர்வலர்களும்  செய்தியாளர்களும்   இன்று  விடுவிக்கப்பட்டனர். அரசுத்தரப்பு,  அவர்கள்மீதான  குற்றச்சாட்டை  நிரூபிக்கத்  தவறிவிட்டதாக  செஷன்ஸ் நீதிமன்ற  நீதிபதி  மாட்  கனி   அப்துல்லா  கூறினார். விடுவீக்கப்பட்டவர்களில்  பத்து  எம்பி  தியான் …

பிள்ளைகளை டியானாவைப் போல் வளர்க்காதீர்: அம்னோ உறுப்பினர்களுக்கு மகாதிர் அறிவுரை

டியானா  சோப்யா  முகம்மட்  டாவுட்டை  டிஏபி  அதன்  மலாய்  வேட்பாளராக  தெலோக்  இந்தானில்  களம்  இறக்கியதால்  கடுப்பாகியுள்ளார்  டாக்டர்  மகாதிர்  முகம்மட். டியானா, காலங்காலமாக  அம்னோவை  ஆதரித்து  வந்துள்ள   ஒரு  குடும்பத்தைச்  சேர்ந்தவர்  என்பதுதான்  இதற்குக்  காரணமாகும். இதுபோன்ற  நிலையைத்  தவிர்க்க  பிள்ளை  வளர்ப்புப்  பற்றி  அம்னோ  உறுப்பினர்களுக்கு …

காடிர்: கெராக்கான் ‘ஆண்சிங்கம்’, அது மசீச போல் அல்ல

புக்கிட்  குளுகோரில்  மசீச  செய்ததுபோல்  விலகிச் செல்லாமல்  தெலோக் இந்தானில்  போட்டியிட  முன்வந்துள்ள  கெராக்கானையும்  அதன்  தலைவர்  மா  சியு  கியோங்கையும்  மூத்த  செய்தியாளர்  ஏ.காடிர்  ஜாசின்  பாராட்டினார். “பொறுப்பிலிருந்து விலகி  ஒடாத,  பழம்பெரும்  கூட்டணியைக்  கேவலப்படுத்தாத  கெராக்கானுக்கு  சபாஷ்”என்றவர்  பாராட்டினார். “மா, உங்கள்  துணிச்சலுக்கு  வீர  வணக்கம்.…

ஊடகங்கள் கவனிப்பதில்லை: சுயேச்சை வேட்பாளர் வருத்தம்

புக்கிட்  குளுகோர்  இடைத் தேர்தலில்  போட்டியிடும்  இரு  சுயேச்சை  வேட்பாளர்களில்  ஒருவரான  அபு  பக்கார்  சித்திக்  முகம்மட்  ஊடகங்கள்  தம்மைப்  பற்றிச்  செய்தி  சேகரிப்பதில்லை  என  வருத்தப்படுகிறார். இதனால்  வெறுப்படைந்த  அவர்  ஒரு  கட்டத்தில்  தேர்தலிலிருந்து  விலகிக்  கொள்வது  என்ற  முடிவுக்குக்கூட  வந்துவிட்டதாக  கண்களில்  நீர்மல்கக்  குறிப்பிட்டார். “ஊடகங்களை …

மசீச: ரசாலி யுடாரை இன விவகாரமாக்குவது தப்பு

அம்னோ  உச்சமன்ற  உறுப்பினர்  ரசாலி  இப்ராகிம், மசீச-வுக்குச்  சொந்தமான  துங்கு  அப்துல்  ரஹ்மான்  பல்கலைக்கழகத்தை  இன விவகாரமாக்கியது  தப்பு  என  மசீச  தலைவர்  லியோ  தியோங்  லாய்  கூறினார். பூமிபுத்ராக்களுக்கு  மட்டுமே  இடமளிக்கும்  யுனிவர்சிடி  டெக்னலோஜி  மாராவைக்  குறைகூறும்  தெலோக்  இந்தான்  வேட்பாளர் டியானா சோப்யா  முகம்மட்  டாவுட் …

போலீஸ் காவலில் கணவர் காயமடைந்ததாக மனைவி புகார்

ஈப்போ  போலீஸ்  தலைமையகத்தில்  போலீஸ்  காவலில்  வைக்கப்பட்டிருந்த  தம்  கணவர்  காயமடைந்திருப்பதாக  எம்.புஷ்பா,37,  புகார்  செய்துள்ளார். மே  14-இல்,  தம்  கணவர்  நினைவிழந்த  நிலையில்  ராஜா  பெர்மைசுரி  பைனுன்  மருத்துவமனையின் தீவிர  கவனிப்புப்  பிரிவில்  சேர்க்கப்பட்டிருப்பதாக  போலீசிடமிருந்து  தகவல்  கிடைத்தது  என புஷ்பா  கூறினார். மே  7-இல்,  ஈப்போ …

டெராஸ் பிஎன்னுக்குள் வரக் கூடாது: சிஎம்முக்கு எச்சரிக்கை

பார்டி  தெனாகா  ரக்யாட்  சரவாக்(டெராஸ்)-கை  பிஎன்னில்  சேர்த்துக்கொள்வது  பற்றி  நினைத்துக்கூட  பார்க்கக்  கூடாது  என சரவாக்  ஐக்கிய  மக்கள்  கட்சி (எஸ்யுபிபி),  முதலமைச்சர்  அடினான் சதேமுக்குக்  கடும்  எச்சரிக்கை  விடுத்துள்ளது. “என்  கணிப்புப்படியும்  நாளேடுகளின்  செய்திகளின்படியும்  டெராஸ்  பிஎன்னில்  சேர்வதற்கு  எட்டு  பிஎன்  கட்சிகள்  எதிர்ப்புத்  தெரிவிக்கும்  என்பதால் …

தெலோக் இந்தானில் டிஏபி- பிஎன் நேரடிப் போட்டி

தெலோக்  இந்தான்  இடைத்  தேர்தல்  கெராக்கான்  தலைவர்  மா  சியு  கியோங்-குக்கும்  டிஏபி-இன்  டியானா  சோப்யா  முகம்மட்  டாவுட்டுக்குமிடையில்  நேரடிப்  போட்டியாக  அமைகிறது. டிஏபி,  அது  சீனர்களுக்கு  முக்கியத்துவம்  கொடுக்கும்  கட்சி  என்ற  குறைகூறலை  உடைத்தெறியும்  நோக்கில் அங்கு  வளர்ந்துவரும்  மலாய்  நட்சத்திரமான  டியானா-வைக்  களமிறக்குகிறது. டியானா  இடைத் …

டியானா யுடாரை மூடச் சொல்லாதது ஏன்?

டிஏபி-இன்  தெலோக்  இந்தான்  வேட்பாளர்  டியானா  சோப்யா  முகம்மட்  டாவுட்,  பூமிபுத்ராக்களுக்கு  மட்டுமே  இடமளிக்கும்  யுனிவர்சிடி  டெக்னலோஜி மாரா(யுஐடிஎம்)-வைக்  குறைசொன்னது  அவர்மீது  வசைபாட பிஎன்னுக்கு  வசதியாகப்  போய்விட்டது. நேற்று,  செய்தியாளர்களிடம்  பேசிய  அம்னோ  உச்சமன்ற  உறுப்பினரும்  பிரதமர்துறை  துணை  அமைச்சருமான  ரசாலி  இப்ராகிம்,  யுஐடிஎம்-மைக்  குறைகூறும்  டியானா  மசீசா …

போலீஸ்: இஸ்மாவுக்கு எதிரான புகார்கள்மீது நடவடிக்கை எடுத்துள்ளோம்

நிந்தனை  கருத்துகள்  கூறிய  ஈக்காத்தான்  முஸ்லிமின்  மலேசியா (இஸ்மா) தலைவர்  அப்துல்லா ஜெய்க்  அப்ட்  ரஹ்மானுக்கு  எதிராக  எதுவும்  செய்யவில்லை  என்ற  குறைகூறலை  மறுத்த  போலீஸ்,  நடவடிக்கை  எடுக்கப்பட்டிருப்பதாகக்  கூறுகிறது. இரண்டு  வாரங்களுக்குமுன்  அப்துல்லா  ஜெய்க்கிடம்  வாக்குமூலம்  பதிவுசெய்யப்பட்டது எனக்  கோலாலும்பூர்  குற்றப்  புலன்  விசாரணைத்  துறை (சிஐடி)…

நஜிப்புக்குக் குறைகூறல்களை ஏற்கும் பக்குவம் வேண்டும்

மலேசிய  பிரதமர்  நஜிப் அப்துல்  ரசாக்,  குறைகூறல்களை  ஏற்கக்  கற்றுக்கொள்ள  வேண்டும்,  சட்ட  நடவடிக்கை  எடுக்கப்படும்  என  மிரட்டக்  கூடாது  என்று  ரிப்போர்டர்ஸ்  வித்தவுட்  போர்டர்ஸ் (ஆர்எஸ்எப்)  கூறியுள்ளது. ஊடகச் செய்திகள் பிடிக்கவில்லை  என்றால்  அதை  வெளிப்படுத்த  தலைவர்களுக்கு  எத்தனையோ  வழிமுறைகள்  உள்ளன  என்று உலக  முழுவதும்  பத்திரிகைச் …

‘கட்டைப் பிரம்மச்சாரி நான், பொண்ணு இருக்கா’: ராம்கர்பால் கிண்டல் பேச்சு

நேற்றிரவு  ஒரு  விருந்தில்  கலந்துகொண்ட  ராம்கர்பால்  சிங்,  புக்கிட்  குளுகோர்  இடைத்  தேர்தல்  முடிந்ததும்  டிஏபி  மகளிர்  தமக்குப்  பொருத்தமான  ஒரு  பெண்ணைத்  தேடுவதற்கு  உதவினால்  நன்றாக  இருக்கும்  என்று  கூறிக்  கூட்டத்தினரைத்  திகைப்பில்  ஆழ்த்தினார். “நான்  தனியாள். புக்கிட்  குளுகோரை  அடுத்து  எனக்குப்  பெண்  தேடும்  படலாம் …

புதிய நெடுஞ்சாலையால் சிலாங்கூர் நீர் நெருக்கடி மோசமாகும்

கிழக்கு  கிள்ளான்  பள்ளாத்தாக்கு  விரைவுச்சாலை(இகேவிஇ)க்காக  சிலாங்கூரின்  பாதுகாக்கப்பட்ட  காட்டுப்  பகுதிகளை  அழிப்பதால்  மாநிலத்தின்  குடிநீர்  பிரச்னை  மேலும்  மோசமடையும்  எனச்  சுற்றுச்சூழல்  அமைப்புகளின்  கூட்டணி ஒன்று  எச்சரித்துள்ளது. இகேவிஇ-யால்  பாதிக்கப்படும்   இரண்டு  பகுதிகள்  அம்பாங்,  உலு  கோம்பாக்  காடுகளாகும்.  இரண்டுமே  முக்கியமான  நீர்ப்  பிடிப்புப்  பகுதிகளாகும்  என  சிலாங்கூர் …

தேச நிந்தனைச் சட்டம் இரத்துச் செய்யப்படும் என்ற பிரதமரின் உறுதிமொழி…

பொதுத்  தேர்தலுக்குமுன்  1948ஆம்  ஆண்டு தேச  நிந்தனைச்  சட்டம்  அகற்றப்படும்  எனப்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  அளித்த  வாக்குறுதியை  நினைவுபடுத்திய  மலேசிய  மனித  உரிமை  ஆணையம் (சுஹாகாம்),  அவர்  அந்த உறுதிமொழியை  நிறைவேற்ற  வேண்டும்  என வலியுறுத்தியுள்ளது. அச்சட்டம்  நீக்கப்பட்டு  அதனிடத்தில் தேசிய  நல்லிணக்கச்  சட்டம்  கொண்டுவரப்படும் …

சிஎம்: பெண்ணாக இருந்துகொண்டு பெண்ணையே குறை சொல்கிறார் ஷரிசாட்

அம்னோ  மகளிர்  பகுதி  “மட்டமாக  நடந்துகொண்டு”  அரசியலில்  ஈடுபடும் பெண்களின்  ஊக்கத்தையே  கெடுக்கிறது  எனச்  சாடுகிறார்  பினாங்கு  முதலமைச்சர்  லிம்  குவான்  எங். ஆண்கள்தான்  நேர்மைக்குறைவாக  நடந்துக்கொள்வார்கள்  என்று  நினைத்தால்  பெண்களும்  சளைத்தவர்கள்  அல்லர்  என்றாரவர். “எங்களின்  தெலோக்  இந்தான்  வேட்பாளர்  டியானா  சோஃப்யா முகம்மட்  டாவுட் வெறும்…

தெலுக் இந்தான்: பிஎன் வேட்பாளர் மா சியு கியோங்

  தெலுக் இந்தான் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் பிஎன் வேட்பாளராக கெராக்கான் கட்சியின் தலைவர் மா சியு கியோங் களமிறங்குகிறார். இன்று பின்னேரத்தில் தெலுக் இந்தானில் பிஎன் வேட்பாளராக மா சியு கியோங் போட்டியிடுவார் என்று துணைப் பிரதமர் முகைதின் யாசின் அறிவித்தார். மா சியு கியோங் இத்தொகுதியை 1999…