கிட் சியாங் ஜோகூரில் போட்டியிடுவது பற்றி அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது

டிஏபி நாடாளுமன்றத் தலைவர் லிம் கிட் சியாங் அடிக்கடி ஜோகூர் செல்கிறார் என்றால் அதற்குக் காரணம் இல்லாமலில்லை. அவர் வரும் பொதுத் தேர்தலில் அம்மாநிலத்தில்தான் போட்டியிடுவார் என நம்பப்படுகிறது. அது பற்றி ஈப்போ தீமோர் நாடாளுமன்ற உறுப்பினரான லிம், திங்கள்கிழமை ஜோகூர் பாருவுக்கு அருகில் ஸ்கூடாயில் டிஏபியின் 47-வது…

தனியார் துப்பறிவாளர் பாலா காலமானார்

தனியார் துப்பறிவாளர் பி.பாலசுப்ரமணியம் இன்று பிற்பகல் ரவாங்கில் காலமானார்.  அவர் மாரடைப்பால் மரணமடைந்திருக்கலாம் எனத் தெரிகிறது. ரவாங்கில், பிற்பகல் மணி 1.40க்கு அவரது வீட்டில் பகலுணவு அருந்திக் கொண்டிருந்தபோது  அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. “(காலையில்) சுபாங் ஜெயாவுக்கு மருத்துவ சோதனைக்குச் சென்று திரும்பிய பாலா நன்றாகத்தான் இருந்தார்.…

‘சவப் பெட்டி சம்பவம் சுவா-வின் லஹாட் டத்து கருத்துடன் தொடர்புடையதாக…

மலாக்கா பிகேஆர் தலைமையகத்துக்கு முன்பு பிகேஆர் உதவித் தலைவர் தியான் சுவா உருவப்படத்துடன் போலிச் சவப்பெட்டி ஒன்று இன்று கண்டு பிடிக்கப்பட்டது. கறுப்புத் துணி மூடப்பட்ட அந்த பாலிதின் பொருளினால் தயாரிக்கப்பட்ட அந்த போலி சவப்பெட்டியை கட்சி ஊழியர் ஒருவர் கண்டு பிடித்ததாக மலாக்கா மாநில பிகேஆர் தகவல்…

டிஏபி இணையத் தளம் கடந்த வாரம் மூன்று முறை தாக்கப்பட்டது

டிஏபி இணையத் தளம் கடந்த வாரம் மூன்று முறை அரசியல் நோக்கத்திற்காக பிஎன் ஆதரவாளர்கள் வழங்கிய நிதி உதவியுடன் விநியோகச் சேவை மறுப்பு (DDOS) தாக்குதலுக்கு இரையானதாக கூறப்பட்டுள்ளது. டிஏபி இணையத் தளத்தின் அமெரிக்க சர்வர் (dapmalaysia.org)கடந்த வாரம் மூன்று முறை தாக்கப்பட்டதாக அதன் பிரச்சாரப் பிரிவுச் செயலாளர்…

பொதுத் தேர்தலை சீர்குலைக்கும் முயற்சிகள் பற்றிய ஆதாரத்தை துணைப் பிரதமர்…

"ஒழுங்கைச் சீர்குலைத்து எதிர்வரும் தேர்தலுக்கு இடையூறு" செய்ய எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக தாம்  தெரிவித்துள்ள குற்றச்சாட்டு மீதான ஆவண ஆதாரங்களை காட்டவோ அல்லது அது குறித்து விவரிக்கவே துணைப் பிரதமர் முஹைடின் யாசின் மறுத்து விட்டார். "சரியான நேரம் வரும் வரையில் காத்திருங்கள்" என அவர் சொன்னார். தமது குற்றச்சாட்டுக்கு…

உத்துசான்: ஊடுருவல்காரர்கள் பொதுத் தேர்தலின் போது தாக்கத் திட்டமிட்டிருந்தனர்

சபா கம்போங் தண்டுவோ-வில் ஊடுருவிய ஆயுதமேந்திய சுலு கிளர்ச்சிக்காரர்கள் உண்மையில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதும் தங்கள் தாக்குதலைத் தொடங்கத் திட்டமிட்டிருந்ததாக உத்துசான் மலேசியா இன்று செய்தி வெளியிட்டுள்ளது. உள்ளூர் மக்கள் உதவியுடன் தேர்தல் காலத்தைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு நாட்டை குழப்பத்தில் ஆழ்த்த அந்த ஊடுருவல்காரர்கள் எண்ணம் கொண்டிருந்தனர் என…

வோங் தாக்: நான் பசுமை இயக்கத்திலிருந்து விலக மாட்டேன்

அடுத்த பொதுத் தேர்தலில் பெந்தோங் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுவதற்குத் தாம் டிஏபி சின்னத்தைப் பயன்படுத்திய போதிலும் தாம் நாட்டின் பசுமை இயக்கத்தை பிரதிநிதிப்பதாக ஹிம்புனான் ஹிஜாவ் தலைவர் வோங் தாக் கூறியிருக்கிறார். ஆகவே ஹிம்புனான் ஹிஜாவ் தலைவர் பதவியைத் தாம் துறக்க வேண்டிய அவசியமில்லை என அவர்  சொன்னார்.…

துணைப் பிரதமர்: தண்டாபுத்ரா திரைப்படத்தை தனிப்பட்ட முறையில் திரையிடுவதில் தவறு…

சர்ச்சைக்குரிய தண்டா புத்ரா திரைப்படத்தை தனிப்பட்ட முறையில் போட்டுக் காட்டுவதில் எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால் அது பொது மக்களுக்கு திரையிடப்படக் கூடாது என துணைப் பிரதமர் முஹைடின் யாசின்  கூறுகிறார். "அந்தத் திரைப்படம் பொது மக்களுக்கு காட்டப்படவில்லை. ஆனால் சில பிரிவினருக்கு மட்டுமே திரையிடப்பட்டுள்ளது." "சில பொறுப்புள்ள…

அம்னோவுக்குச் செலுத்தும் வாக்கு மகாதீருக்குப் போடும் வாக்காகும்

'பிரதமர் நஜிப்பும் அம்னோவும் மகாதீருக்கு கட்டுப்பட்டிருக்கும் வரையில் ஆளும் கட்சியில் எந்த அரசியல் சீர்திருத்தமும் இருக்காது' மூசா ஹித்தாம்: பக்காத்தான் அரசாங்கம் நாட்டை நொடித்துப் போகச் செய்யாது சிகியூ முவார்: நீங்கள் துணைப் பிரதமராக இருந்த காலத்தில் இருந்து உங்களை எங்களுக்கு தெரியும். நீங்கள் நியாயமான மனிதர். உங்கள்…

‘ஆகவே, அம்னோவைக் குறை சொல்வதும் இனிமேல் தேச நிந்தனையாகும்’

"அம்னோ எப்போது தேசிய அமைப்பானது? அதற்கு எதிராகச் சொல்வது எப்போது தேச நிந்தனைக்கு இணையானது ? தியான் சுவா மீது தேச நிந்தனைக் குற்றச்சாட்டு அடையாளம் இல்லாதவன்#19098644: சட்டத்துறைத் தலைவர் உண்மையில் முட்டாள். அவதூறு சொன்னதற்காக  தியான் சுவா மீது நீதிமன்றத்தில் வழக்குப் போட அம்னோவுக்கு எல்லா உரிமையும்…

சுலு சுல்தான் ஆதரவாளர்கள் மீது பல கிரிமினல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படும்

கடந்த புதன்கிழமையன்று தாவி தாவி மாநிலத்துக்கு அப்பால் பிலிப்பின்ஸ் கடற்படை தடுத்து வைத்த சுலு சுல்தான் ஆதரவாளர்கள் எனச் சந்தேகிக்கப்படும் 35 பேர் மீது பிலிப்பின்ஸ் அரசாங்கம் பல கிரிமினல் குற்றச்சாட்டுக்களை சுமத்தவிருக்கிறது. "அவர்களுக்கு எதிராக பொருத்தமான குற்றச்சாட்டுக்களை சுமத்துவதற்கான ஏற்பாடுகளை கூட்டுக் குழு ஒன்று செய்து வருகிறது,"…

குற்றம்செய்யும் டெக்சி ஓட்டுனர்களைப் பிடிக்க வேண்டும், கெராக்கான் வலியுறுத்து

அமெரிக்கச் சுற்றுப்பயணி ஒருவர், பாலியல் வன்புணர்ச்சிக்கு  ஆளான சம்பவம் அதிகாரிகள் டெக்சி ஓட்டுனர்களை அதிகம் கண்காணிக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதாக கெராக்கான் மத்திய செயலவை உறுப்பினர் டாக்டர் சியா சூன் ஹாய் கூறினார். சியா இன்று வெளியிட்டிருந்த அறிக்கை ஒன்றில் டெக்சி ஓட்டுனர்கள் பயணிகளுக்கு எதிராக செய்யும் குற்றச்செயல்கள்…

பக்காத்தான் கொள்கை அறிக்கைக்கு ‘சித்திர விளக்கம்’

கேலிச்சித்திர ஓவியர்கள் ஒரு குழுவாக அமைந்து பக்காத்தானின் தேர்தல் கொள்கை அறிக்கையைச் விளக்கச் சித்திரங்களாக்கி நாடு முழுக்கக் கொண்டு செல்வர். “நாங்கள் அனைவரும் சுயேச்சையாக செயல்படும் கேலிச் சித்திர ஓவியர்கள். தனிப்பட்ட முறையில்தான் இதைச் செய்கிறோம். பணத்துக்காக செய்யவில்லை, எந்தவொரு கட்சியும்  இதைச் செய்ய வேண்டும் என உத்தரவிடவும்…

‘இல்லாத தொகுதிகளுக்கு வாக்காளாராகப் பதிவு செய்யப்பட்டுள்ள மாது’

தாம் வாக்காளராகப் பதிந்து கொண்டதே இல்லை எனக் கூறிக் கொள்ளும் ஒரு மாது தாம் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ளதை ஆனால் இல்லாத சட்டமன்ற, நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதைக் கண்டு பிடித்துள்ளார். அந்தத் தகவலை கிள்ளான் எம்பி சார்லஸ் சண்டியாகோ இன்று வெளியிட்டார். பிரிண்டா ஜோதாபாரா என்ற அந்த…

ஆர்சிஐ-யின் தொடக்கக் கண்டுபிடிப்புக்கள் மீது கருத்துச் சொல்வது தவறாகும்

சபா கள்ளக் குடியேறிகள் மீதான அரச விசாரணை ஆணையத்தின் தொடக்க விசாரணைகளில் எழுப்பப்பட்ட பிரச்னைகள் மீது முடிவுகளைச் செய்வதும் கருத்துச் சொல்வதும் தவறு  (Sub judice) என சட்டத்துறைத் தலைவர் அப்துல் கனி பட்டெய்ல் கூறுகிறார். அச்சு ஊடகங்கள் வழியாகவும் மின்னியல் ஊடகங்கள் வழியாகவும் நடத்தப்படும் 'வழக்கு விசாரணையில்'…

பிகேஆர்: கெடா மத்திய அரசிடமிருந்து ஒரு காசுகூட கடன் வாங்கியதில்லை

கெடாவின் பக்காத்தான் ரக்யாட் அரசு, அந்நிய முதலீட்டைக் கவரத் தவறிவிட்டது என்று கூறிய ஊராட்சி, வீடமைப்பு அமைச்சர் சோர் சீ ஹுவாங்கை கெடா பிகேஆர் கண்டித்துள்ளது. மசீச உதவித் தலைவருமான சோர்,  கெடா முந்தைய பிஎன் அரசு விட்டுச் சென்ற நிதியை வைத்துப் பிழைத்துக் கொண்டிருப்பதாக சீனமொழி ஊடகங்களிடம்…

தியான் சுவா மீது தேச நிந்தனைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது (விரிவாக)

லஹாட் டத்து கிளர்ச்சி நெருக்கடியில் அம்னோ சம்பந்தப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டும் ஒரு கருத்தை வெளியிட்டதாக பிகேஆர் உதவித் தலைவர் தியான் சுவா மீது இன்று தேச நிந்தனைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. அவர் அந்தக் குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார். கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றம் ஒரு நபர் உத்தரவாதத்தின் பேரில்…

நாட்டைத் திவாலாக்குமா ? பிஎன் அதனை விட மோசமாகச் செய்துள்ளது…

பக்காத்தான் ராக்யாட் தேர்தல் கொள்கை அறிக்கை சில ஆண்டுகளில் நாட்டைத் திவாலாக்கி விடும் என பிஎன் குறை கூறுகிறது. ஆனால் பிஎன் தேசியக் கருவூலத்துக்கு அதனை விட மோசமாக செய்துள்ளது என டிஏபி தேர்தல் வியூகவாதி ஒங் கியான் மிங் கூறுகிறார். 2008க்கும் 2011க்கும் இடையில் கூட்டரசு அரசாங்கம்…

வேட்பாளர் பட்டியலை மீளாய்வு செய்யும் கிள்ளான் எம்பியின் முயற்சி நிராகரிக்கப்பட்டது

கிள்ளான் எம்பி சார்ல்ஸ் சந்தியாகு, தமது நாடாளுமன்றத் தொகுதிக்கான முதன்மை வாக்காளர் பட்டியலையும் துணை வாக்காளர் பட்டியலையும் மீளாய்வு செய்ய வேண்டுமென்று தாக்கல் செய்த மனுவை ஷா ஆலம் உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. அதைத் தள்ளுபடி செய்த நீதிபதி வெர்னோன் ஒங், தேர்தல் சட்டம் 1958,…

தியான் சுவா மீது தேச நிந்தனைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

லஹாட் டத்து கிளர்ச்சி நெருக்கடியில் அம்னோ சம்பந்தப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டும் ஒரு கருத்தை வெளியிட்டதாக பிகேஆர் உதவித் தலைவர் தியான் சுவா மீது இன்று தேச நிந்தனைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. அவர் அந்தக் குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார். கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றம் ஒரு நபர் உத்தரவாதத்தின் பேரில்…

தண்டா புத்ரா திரையிடப்படுவதை நிறுத்துங்கள் எனப் பிரதமருக்கு வேண்டுகோள்

சர்ச்சைக்குரிய 'தண்டா புத்ரா' திரைப்படம் 'ரகசியமாக திரையிடப்படுவதற்கு' பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என பெர்சே வேண்டுகோள் விடுத்துள்ளது. பிரதமர் ஏதும் சொல்லாமல் இருப்பதால் 1969ம் ஆண்டு மே 13ல் நிகழ்ந்த இனக்கலவரங்களை சித்தரிக்கும் அந்தத் திரைப்படம் தனிப்பட்ட முறையில் காட்டப்படுவதற்கு அனுமதிப்பதாகத் தோன்றுகிறது…

தண்டா புத்ரா மீதான அமைச்சரவை முடிவை அம்னோ தலைவர்கள் மீறுகின்றனர்

"அமைச்சரவை இந்த நாட்டில் முடிவு எடுக்கும் அதிகாரத்தைக் கொண்ட உச்ச அமைப்பாகும். அமைச்சரவை ஒரு முடிவைச் செய்தால் அதனை யாரும் மீறக் கூடாது" பெர்சே, மலேசியாகினி தண்டா புத்ரா திரையீட்டின் போது இழிவுபடுத்தப்பட்டன தோலு: 'தண்டா புத்ரா' திரைப்படம் காட்டப்படுவதை குறைந்த பட்சம் 13வது பொதுத் தேர்தல் முடியும் …

நீரழிவு நோய் வரும்முன் காத்தல் – காணொளி வழி மருத்துவ…

அன்றாட வாழ்க்கை முறைகளில் ஏற்படும் மாற்றங்களினால் இந்தியர்களை தற்போது அதிகமாக பாதிக்க கூடிய நோய்களாக நீரழிவு நோய் மற்றும் இரத்த அழுத்தம் காணப்படுவதாக கூறுகிறார் மருத்துவர் ம. சண்முக சிவா. இந்த இரு நோய்களும் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படுவதற்கு முக்கிய காரணிகளாக இருப்பதாக கூறும் அவர், சிலருக்கு…