மனித உரிமைகளுக்கு கட்டுப்பட்டுள்ளோம், நஜிப் விளக்கம்

  மலேசியர்கள் பல்லின மற்றும் பல்வேறு சமயப் பின்னணிகளைக் கொண்டிருந்த போதிலும் மனித உரிமைகளின் குறிக்கோள்கள் மற்றும் கோட்பாடுகளுக்கு அரசாங்கமும் மலேசிய மக்களும் கட்டுப்பட்டுள்ளோம் என்று பிரதமர் நஜிப் ரசாக் இப்போது கூறுகிறார். மலேசியா முஸ்லிம்களை பெரும்பான்மையினராகக் கொண்ட நாடாக இருந்தாலும், மக்கள் எப்போதும் மற்றவர்களின் நம்பிக்கைகளுக்கு மதிப்பு…

இடைநீக்கம் செய்யப்பட்ட மாணிக்கவாசகம் தேர்தல் போட்டியிட விருப்பம்

முன்னாள்  காப்பார்  எம்பி  எஸ்.மாணிக்கவாசகம்,  பிகேஆரிலிருந்து  இடைநீக்கம்  செய்யப்பட்டிருந்தாலும்  கோலா  சிலாங்கூர்  கிளைத்  தலைவர்  தேர்தலில்  சிலாங்கூர்  மந்திரி  புசார்  அப்துல்  காலிட்  இப்ராகிமை  எதிர்த்துப்  போட்டியிடுவதில்  உறுதியாக  இருக்கிறார். இன்று  பிகேஆர்  தலைமையகம்  வந்த  மாணிக்கவாசகம், இடைநீக்கத்துக்கு  எதிராக  முறையீடு  செய்திருப்பதாகக்  கூறினார். அத்துடன்  தேர்தலில்  போட்டியிட …

சைட்: எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றும் கபடதாரி நஜிப்

ஒரு பொறுப்பான  பிரதமர்  நாட்டை  எரித்துவிடக்கூடிய  நெருப்பை  நீரை ஊற்றி  அணைக்கப்  பார்ப்பார், எரியும்  நெருப்பில்  எண்ணெய்  ஊற்ற  மாட்டார். ஆனால்,  நஜிப்  அதைச்  செய்யத்  தவறிவிட்டார்  என்கிறார்  சைட்  இப்ராகிம். பொதுத்  தேர்தலுக்குமுன்  தம்மை  சீர்திருத்தவாதி  என்று  பிரகடனப்படுத்திக்கொண்ட  பிரதமர்  இப்போது  ஈக்காத்தான்  முஸ்லிமின்  மலேசியா(இஸ்மா)வின் போராளிபோல் …

முதலில் உங்களைத் திருத்திக் கொள்ளுங்கள்: பெர்சேயைச் சாடினார் அம்னோ தலைவர்

திரெங்கானு  அரசியல்  நெருக்கடிக்குத்  தீர்வுகாண  பண  அரசியல்  சம்பந்தப்பட்டிருக்கலாம்  என்று  கருத்துத்  தெரிவித்த  பெர்சே-யை  அம்னோ  உச்சமன்ற  உறுப்பினர்  சாடியுள்ளார். அந்தத்  தேர்தல்  கண்காணிப்பு  அமைப்பு  தகுந்த  ஆதாரமின்றி  இப்படிக்  கருத்துரைக்கக்  கூடாது  என  இப்ராகிம்  அபு  ஷா  கண்டித்ததாக  அம்னோ  அன்லைன்  கூறியது. “அக்கூற்று  பெர்சேயின்  நியாயமற்ற …

வாசகர்கள் கருத்துகள் தொடர்பில் மலேசியாகினிக்கு எதிராக வழக்கு: நஜிப் எச்சரிக்கை

திரெங்கானு  அரசியல்  நெருக்கடியைக்  கையாண்ட  விதம்  குறித்து   வாசகர்கள்  தெரிவித்த  கருத்துகளை  வெளியிட்டிருந்த  மலேசியாகினிக்கு  எதிராக  வழக்கு  தொடுக்கப்போவதாக  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  மிரட்டி  இருக்கிறார். ஹபாரிஸாம்  வான்  மற்றும்  அய்ஷா  முபாராக்  வழக்குரைஞர்  நிறுவனம்  மூலமாக  நேற்று  மலேசியாகினிக்கு  கடிதம்  ஒன்று  கொடுக்கப்பட்டது. அக்கடிதத்தில், ‘பிரதமர், …

அடினான்: சரவாக்கில் ஹுடுட்டுக்கு இடமில்லை

சரவாக்கில்  ஹுடுட்  சட்டம்  அமலாக்கப்படாது  என  அம்மாநில  முதல்வர்  அடினான்  சாதேம்  உத்தரவாதம்  அளித்துள்ளார். எனவே, எதிரணியினர்  அதைப்  பற்றியே  விடாமல்  பேசிக்  கொண்டிருக்க  வேண்டிய  அவசியமில்லை. மாநிலச்  சட்டமன்றக்  கூட்டத்தை  முடித்து  வைத்துப்  பேசிய  அடினான், “மேன்மை தங்கிய  இம்மன்றத்தில்  ஒன்றைத்  தெளிவுபடுத்த  விரும்புகிறேன். சரவாக்கில்  ஹுடுட் …

டிஏபி-ஆல் இன்னொரு மே 13: இஸ்மா எச்சரிக்கை

டிஏபி-இன்  நடவடிக்கையால்,  1969  மே  13-இல்  நிகழ்ந்ததைப்போன்ற  இரத்தக்களறி  மீண்டும்  ஏற்படும்  அபாயம்  இருப்பதாக  ஈக்காத்தான்  முஸ்லிம்   மலேசியா (இஸ்மா),எச்சரித்துள்ளது. மற்றவற்றோடு   டிஏபி,  இஸ்லாமிய  நாடான  மலேசியாவை  இஸ்லாம்-அல்லாத  நாடாக  மாற்ற  முயல்கிறது  என்று  இஸ்மா  உதவித்  தலைவர்  அப்துல்  ரஹ்மான்  மாட்  டாலி குற்றம்  சாட்டினார். டிஏபியும் …

பாஸ் உறுப்பினர் என்றால் நபி பக்ஸ் ராம்கர்பாலை ஆதரிக்க வேண்டும்

சுயேச்சை  வேட்பாளர் முகம்மட்  நபி  பக்ஸ் முகம்மட்  நபி  சத்தார்,  மே 25  புக்கிட் குளுகோர்  இடைத்  தேர்தலில்  டிஏபி-இன்  ராம்கர்பால்  சிங்கைத்தான்  ஆதரிக்க வேண்டும்  என  பாஸ்  தகவல்  தலைவர்  மாபுஸ்  ஒமார்  வலியுறுத்தியுள்ளார். நபி  பக்ஸ்,  தம்மை  பாஸ்  உறுப்பினர்  எனக்  கூறிக்கொண்டிருந்தால்  கட்சியின்  அலோசனைப்படிதான் …

ஜிஎஸ்டி வந்தால் மைலோ விலை, மெக்கி விலை உயருமா?

பொருள்,  சேவை  வரி(ஜிஎஸ்டி)யிலிருந்து  அத்தியாவசிய  பொருள்களுக்கு  விலக்களிப்பட்டிருப்பது  ஒரு  புறமிருக்க  சராசரி  மலேசியர்கள் பயன்படுத்தும்  மற்ற  பொருள்களின்  நிலை  என்னவாகும் என  விளக்கம்  தேவை  என்று மசீச  கேட்டுக்கொண்டிருக்கிறது. ஜிஎஸ்டி-யால்   பெரும்பாலான பொருள்களும்  சேவைகளும்  விலை  உயரா  என்று   “பொதுப்படையாக”  சொல்லிக் கொண்டிருப்பது  போதாது  என  மசீச  உதவித் …

மசீச: கன்னித்துறவிகளைத் தாக்கிய கயவர்களைக் கைது செய்வீர்

நேற்று  இரு கன்னித்துறவிகளைத்  தாக்கிக்  கடுமையாகக்  காயப்படுத்திய  கயவர்களை  அதிகாரிகள்  பிடிக்க  வேண்டும்  என்று  மசீச  இன்று  வலியுறுத்தியது. சிரம்பான்  விசிடேஷன்  தேவாலயத்தில்  மூத்த  கன்னித்துறவிகள்  இருவர்  தாக்கப்பட்டதாகக்  கூறப்படும்  சம்பவத்தை  வருணிக்க  வார்த்தைகளே  இல்லை  என்று  மசீச  மகளிர்  உதவித்  தலைவர்  ஒங்  சொங்  ஸ்வென்  கூறினார்.…

பாஸ்: முன்னாள் எம்பி அஹ்மட்தான் எங்களுடன் சேர முயன்றார்

முன்னாள்  திரெங்கானு  மந்திரி  புசார்  அஹ்மட்   சைட், பாஸ்  தம்மை  அக்கட்சிக்கு  இழுக்கப்  பார்த்தது  என்று  சொல்வது  ஒரு  பொய். “உண்மையில்  அவர்தான்  பாஸில்  சேரும்  நோக்கில்  எங்களைத்  தொடர்பு  கொண்டார்”,  என  பாஸ்  மத்திய  செயல்குழு  உறுப்பினர்  சைட்  அஸ்மான்  சைட்  அஹ்மட்  நவாவி  மலேசியாகினியிடம்  தெரிவித்தார்.…

பிகேஆரிலிருந்து மாணிக்கவாசகம் இடைநீக்கம்

சிலாங்கூர்  மந்திரி  புசார்  அப்துல்  காலிட்  இப்ராகிம்  பண அரசியலில்  ஈடுபட்டதாகக்  குற்றம்சாட்டிய  முன்னாள்  காப்பார்  எம்பி  எஸ்.மாணிக்கவாசகம்  பிகேஆரிலிருந்து  இடைநீக்கம்  செய்யப்பட்டார். விசாரணை  முடியும்வரை  இடைநீக்கம்  அமலில்  இருக்கும்  என  பிகேஆர்  ஒழுங்கு  வாரியத்  தலைவர்  டான்  டீ குவோங்  கூறினார். மாணிக்கவாசகம் கோலா  சிலாங்கூர்  பிகேஆர் …

பாசம் வென்றது: திருமண உபசரிப்பில் நஜிப் கலந்துகொள்வார்

ஒரு  திருமணத்தால்  திரெங்கானுவில்  அம்னோ  ஆட்சியே  பறிபோக  விருந்தது.  ஆனால்,  “கட்சிமீதுள்ள  பாசம்”  எல்லாத்  தப்பெண்ணங்களையும்  கலைந்து  விட்டது  எனப்  பிரதமர்  கூறினார். திரெங்கானு  அரசியல்  நெருக்கடிக்குத்  தீர்வு  காணப்பட்டிருப்பதால்,  நஜிப்  அப்துல்  ரசாக்  மே  17-இல்  கெமாமானில்  முன்னாள்  மந்திரி  புசார்  அஹ்மட்  சைட்டின்  புதல்வியின்  திருமண …

சிங்கப்பூர் மலாய்க்காரர்கள்போல் ஆகிவிடாதீர்: நபி பக்ஸ் எச்சரிக்கை

புக்கிட்  குளுகோரில்  பரப்புரையைத்  தொடக்கியுள்ள  சுயேச்சை   வேட்பாளர்  முகம்மட்  நபி  பக்ஸ்  முகம்மட்  நபி  சத்தார்,  தாமான்  துன்  சார்டோன்  வாக்காளர்கள்  சிங்கப்பூர்  மலாய்க்காரர்கள்போல்  நடந்துகொள்ளக்கூடாது  என்று  வலியுறுத்தினார். ஏன்  அப்படிச்  சொன்னார்  என்று  தெரியவில்லை.  அவரும்  விளக்கவில்லை. முஸ்லிம்களுக்கும் முஸ்லிம்-அல்லாதாருக்குமிடையில்  பாகுபாடு  காட்டப்படுவதற்குத்  தாம்  இடமளிக்கப்  போவதில்லை …

ஜிஎஸ்டியைத் தவிர்ப்பது எளிது : துணை அமைச்சர்

பொருள்,  சேவை  வரி   பெரும்பாலோரைப்  பாதிக்காது.  அதை  அறியாத  மக்கள்தான்  ஆர்ப்பாட்டங்களில்  ஈடுபடுகிறார்கள்  என்கிறார் நிதி  துணை அமைச்சர்  அஹ்மட்  மஸ்லான். ஜிஎஸ்டி,   செயலாக்கம்கண்ட  இரண்டாம்  ஆண்டிலிருந்து  அரசாங்கத்துக்குக்   ரிம9பில்லியன்  கூடுதல்  வருமானத்தைக்  கொண்டுவரும்  என்றாலும்,  அந்த  வரியால்  அன்றாடம்  பயன்படுத்தும் 90விழுக்காட்டுப் பொருள்களின் விலைகளில்  மாற்றமிராது,  சில …

நஜிப், மனித உரிமை பிடிக்கவில்லையா? ஐநாவை விட்டு வெளியேறுவீர்

  மனித நலக் கோட்பாடு மற்றும் சமயச் சார்பின்மை இஸ்லாத்திற்கு மருட்டலாக இருப்பதாக பிரதமர் நஜிப் ரசாக் கூறியிருக்கிறார். இக்கோட்பாடுகள் அவருக்கு பிடிக்கவில்லை என்றால் அவர் மலேசியாவை ஐக்கிய நாட்டு அமைப்பிலிருந்து மீட்டுக்கொள்ள வேண்டும் என்று பிகேஆர் தொடர்புடைய ஒரு சிந்தனைக் குழாம் கேட்டுக்கொண்டுள்ளது. "பிரதமர் மேற்கொள்ள வேண்டிய…

தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு போக்கஸ்-எ இணையதள வழி கற்றல் திட்டம்

  தமிழ்ப்பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் நோக்கத்துடன் போக்கஸ்-எ இணையதள வழி கற்றல் (Focus-A E-Learning) செயல்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் கிரியேட்டிவ் டிரீம்ஸ் இண்டர்நேசனல் மற்றும் மலேசிய தமிழ் அறவாரியம் ஆகியவை இணைந்து உருவாக்கியதாகும். அடுத்த ஐந்து ஆண்டுகளில் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் குறைந்தபட்சம் 80 விழுக்காடு தேர்வு…

கிட் சியாங்கின் அரசியல் செயலாளர் தெலோக் இந்தான் வேட்பாளர்?

தெலோக்  இந்தான்  நாடாளுமன்ற  இடைத்  தேர்தலில் டிஏபி  பெருந்  தலைவர்  லிம்  கிட்  சியாங்கின்  அரசியல்  செயலாளர்  டயானா  சோப்யா  டாவுட்  வேட்பாளராகக்  களமிறக்கப்படலாம்.  மலாய்க்காரர்  வாக்குகளைக்  கவர்வதற்காக  அவர்  நிறுத்தப்படலாம்   எனக்  கட்சித் தலைமைத்துவ  வட்டாரமொன்று  தெரிவித்தது. அவரைத்  தவிர்த்து  ஹியு  குவான்  யாவ்,  பேராக்  டிஏஎபி …

அஹ்மட்: நஜிப் வருத்தம் தெரிவித்தார், நானும் வருத்தம் தெரிவித்தேன்

இரண்டு- நாள்  திரெங்கானு  கிளர்ச்சி  முடிவுக்கு  வந்தது.  தவறாக  புரிந்துகொண்டதற்காக  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  வருத்தம்  தெரிவித்ததை  அடுத்து  முன்னாள்  மந்திரி  புசார்  அஹ்மட்  சைட்,  அம்னோவிலிருந்து  விலகுவதாகக்  கொடுத்த  கடிதத்தைத்  திரும்பப்  பெற்றுக்க்கொண்டார். “தவறு  நேர்ந்துவிட்டதற்கு  அவர்  வருத்தம்  தெரிவித்தார்.  என்  செய்கைக்காக  நானும்  வருத்தம் …

போலீஸ் சீரமைப்புக்கு ‘மக்கள் நாடாளுமன்றம்’

போலீசில்  சீரமைப்பைக்  கொண்டுவரும்  நோக்கில்  மனித  உரிமைக்காக  போராடும்  என்ஜிஓ-களான  சுவாராமும்  எம்னெஸ்டி  இண்டர்நேசனலும்   மே  31ஆம்  நாள், பினாங்கு  சட்டமன்றக்  கட்டிடத்தில்,  ‘மக்கள்  நாடாளுமன்ற’  நிகழ்வைக்  கூட்டாக  ஏற்பாடு  செய்துள்ளன. அதை  ஒட்டி  போலீஸ்  காவலில்  நிகழ்ந்துள்ள  இறப்புகள்  பற்றிய  கண்காட்சி ஒன்றும்  நடத்தப்படும். அந்த  வகை …

அம்னோ தலைவர்கள் நஜிப் சொல்படி நடக்க வேண்டும்

அம்னோ  தலைவர்கள்,  பிரதமரும்  அம்னோ  தலைவருமான  நஜிப்  அப்துல்  ரசாக்கின்  முடிவை  எதிர்த்து  சர்ச்சை  செய்யலாகாது  என்கிறார்  கிளந்தான்  அம்னோ  தொடர்புக்குழுத்  தலைவர்  முஸ்தபா  முகம்மட். அண்டை  மாநில  அரசியல்  நெருக்கடி  குறித்து   கருத்துரைத்த  முஸ்தபா, “தலைவர்கள்  என்ற  முறையில்  நாம்  கட்டுப்பட்டுத்தான்   ஆக வேண்டும்”, என்றார். “விசுவாசம் …

புதிய எம்பி: அஹ்மட் சைட் அம்னோவுக்குத் திரும்புகிறார்

திரெங்கானுவில்  இரண்டு  நாள்  கிளர்ச்சி  செய்து  பரபரப்பை  ஏற்படுத்திய  முன்னாள்  மந்திரி  புசார்  அஹ்மட்  சைட்  இன்று  திரும்பவும்  அம்னோவில்  சேர்ந்துகொள்வார்  என  எதிர்பார்க்கப்படுகிறது. புதிதாக  மந்திரி புசாராக  நியமனம்  செய்யப்பட்டுள்ள  அஹ்மட்  ரசிப்  அப்துல்  ரஹ்மான்,  இன்று  புத்ரா  ஜெயாவில்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கைச்  சந்தித்த …

நஜிப்: எம்எச்370-ஐத் தேடுவதில் சில தவறுகள் நடந்துவிட்டன

பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக், எம்எச்370-ஐ  தேடுவதில்  சில  தவறுகள்  நிகழ்ந்து  விட்டதை  ஒப்புக்கொண்டு  அச்சம்பவம்  மற்ற  நாடுகளுக்கு  நல்ல  பாடமாக  அமையும் என்றார். காணாமல்போன  விமானத்தைத்  தேட  மிகப் பெரிய  முயற்சி  மேற்கொள்ளப்பட்டது  என்றாலும்  சில  தவறுகள்  நிகழ்ந்து  விட்டன. “எல்லாவற்றையும்  சரியாக  செய்யவில்லை. முதல்  இரு …