மின் கட்டணம் குறைகிறது

மார்ச் முதல் தேதி தொடங்கி  ஜுன் 30-வரை மின்கட்டணத்தைக் குறைக்க  அரசாங்கம்  முடிவு  செய்துள்ளதாக  எரிசக்தி, பசுமை தொழில்நுட்பம் மற்றும் நீர்வள அமைச்சர் மெக்சிமஸ் ஓங்கிலி தெரிவித்தார் புதிய மின்கட்டணத்தின்வழி  பயனீட்டாளர்கள் மாதம் ரிம13.50 முதல் ரிம45.00 வரை மிச்சப்படுத்தலாம் என  அமைச்சர் தெரிவித்தார்.  

அன்வார் குடும்பத்தாரின்‘விடுதலை நோக்கி நெடும்பயணம்’

‘விடுதலை  நோக்கி  நெடும்பயணம்’  என்னும்  இயக்கத்தை ஏற்பாடு  செய்யப்போவதாக  அன்வார்  இப்ராகிம்  குடும்பத்தார் செய்தியாளர்  சந்திப்பு  ஒன்றில்   தெரிவித்தனர். அவ்வியக்கத்துக்கு  அன்வார் இப்ராகிமின் இரண்டாவது மகளான நுருல் நுகா தலைமைவகிப்பார். . “நாங்கள் அவ்வியக்கத்தை  வழிநடத்த  ஒரு  செயலகத்தை அமைத்து  அன்வாரின்  விடுதலைக்காகவும்  அநீதிக்கு  எதிராகவும்  போராடுவோம்”, என …

நீதிபதிகளை நையாண்டி செய்த கேலிச்சித்திரக்காரர் கைது

ஒரு டிவிட்டர்  பதிவுக்காக  கேலிச்சித்திரக்காரர்  ஸுனார்  நேற்றிரவு  கைது  செய்யப்பட்டு  விசாரணைக்காக  மூன்று நாள்  தடுத்து  வைக்கப்பட்டிருக்கிறார். கூட்டரசு  நீதிமன்றம்  அன்வார்  இப்ராகிமின்  ஐந்தாண்டுச்  சிறைத்தண்டனையை  நிலைநிறுத்தித்  தீர்ப்பளித்ததை  அடுத்து  ஸுனார்  டிவிட்டரில்  இட்டிருந்த  பதிவுக்காக  அவர்  கைது  செய்யப்பட்டார்.  தேச  நிந்தனைச்  சட்டம் பகுதி 4(1) (சி)-இன்கீழ் …

பெர்மாத்தாங் பாவில் அன்வாரின் மகள் போட்டியிடுவாரா?

அன்வார்  இப்ராகிமின்  மகள்  நுருல்  நுகா,  பெர்மாத்தாங்  பாவில்  போட்டியிடுவார்  என்று  ஊகங்கள்  அடிபடுகின்றன. செய்தியாளர்  கூட்டமொன்றில்  அவரின்  அக்காள்  நுருல்  இஸ்ஸாவிடம்  அதைக்  கேட்டதற்கு  அவர்  அதைப்  பற்றிப்  பேசுவதைத்  தவிர்த்தார். அச்செய்தியாளர்  கூட்டம் ‘விடுதலை நோக்கி நெடும்பயணம்’  பற்றி  விளக்குவதற்காகக்  கூட்டப்பட்டது  என்பதால்  இடைத்  தேர்தல்  வேட்பாளர் …

அன்வார் செவ்வாய்க்கிழமை ‘வெளியில் வருவார்’

குதப்புணர்ச்சி  வழக்கில்  ஐந்தாண்டுச்  சிறைத்தண்டனை  விதிக்கப்பட்ட  பிகேஆர்  நடப்பில்  தலைவர்  அன்வார்  இப்ராகிம்  அடுத்த  செவ்வாய்க்கிழமை  கோலாலும்பூர்  உயர்  நீதிமன்றத்துக்கு  வருவார். அவர்  வெளியுறவு  அமைச்சர்  அனிபா  அமானுக்கு  எதிராக  தொடுத்துள்ள  ரிம100 மில்லியன்  அவதூறு  வழக்கில்  சாட்சியமளிக்க நீதிமன்றம்  வருவார்  என்பதை  அவரின்  வழக்குரைஞர்  ஜே.லீலா  மலேசியாகினியிடம் …

சிஐஜே: ஐஜிபி அவர்களே, கருத்துச் சுதந்திரத்தை ஒடுக்க முனயாதீர்

கருத்துச்  சொல்லும்  உரிமையைக் கட்டுப்படுத்த  முனைவது  கூடுதல்  அமைதியின்மைக்கு இட்டுச்  செல்லும் என  ஊடகக்  கண்காணிப்பு  அமைப்பான  சுயேச்சை  இதழியல்  மையம் (சிஐஜே) எச்சரித்துள்ளது. தேச  நிந்தனைச்  சட்டத்தையும்  கருத்துச்  சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும்  மற்ற  சட்டங்களையும்  மீறுவோருக்கு  எதிராக நடவடிக்கை  எடுக்கப்படும்  என  போலீஸ்  படைத்  தலைவர்  காலிட் …

பிடிவி பணியாளர்கள் சம்பளம் கேட்டு ஆர்ப்பாட்டம்

நேற்று  பிற்பகல், சுமார்  20  பெர்னாமா  டிவி பணியாளர்கள்  தங்களுக்குக்  கொடுபடாமல்  இருக்கும்  சம்பளத்துக்குக்  கோரிக்கை  விடுத்து வங்சா  மாஜுவில்  அமைதியான  முறையில்  கண்டனக்  கூட்டமொன்றை  நடத்தினர். அவர்கள் கைகளில்  பதாகைகளையும்  ஏந்தியிருந்தனர். அதில்  ஒன்று 'Mana Shabery'- தொடர்பு, பல்லூடக  அமைச்சர்  அஹ்மட்  ஷபரி  சிக்  எங்கே…

அன்வாரின் காரோட்டுனர்: சைபூலைவிட நான் அழகானவன்

அன்வார் இப்ராகிம்  தண்டிக்கப்பட்டது  அவரின் பணியாளர்களையும் பாதித்துள்ளது. அவரின்  காரோட்டுனராக  பணியாற்றிய  அப்துல்லா  சானி,55, “32 ஆண்டுகளாக  அவரிடம்   பணியாற்றி  இருக்கிறேன்”, என்றார். “இருவரும்  ஒரே  அறையில்  படுத்துறங்கியது  உண்டு. எதுவும்  நடந்ததில்லை. “அத்துடன்  நான்  சைபூலைவிடவும்  அழகானவன்”, என்றார்  அப்துல்லா. மேலும், அன்வார்மீது  குதப்புணர்ச்சி  குற்றஞ்சாட்டிய  முகம்மட் …

அன்வார் மீதான குதப்புணர்ச்சி வழக்கு 2 இன் தீர்ப்பு அரசியல்…

-டாக்டர் சேவியர் ஜெயக்குமார், பிகேஆர் உதவித் தலைவர், பெப்ரவரி 11, 2015.    மலேசிய எதிர்க்கட்சி தலைவர்   அன்வார் இப்ராகிம் மீது சுமத்தப்பட்ட  குதப்புணர்ச்சி வழக்கில்  அவருக்கு மேல் முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, நீதித்துறையின் மீது ஏற்பட்டுள்ள அவநம்பிக்கையை மேலும் வலுப்படுத்திவிட்டது. இவ்வழக்கு நாட்டுக்குப் பெரும் அவமானமாக அமைந்து விட்டது.   அரசியல்…

கூண்டில் இருந்தவாறு நீதிபதிகளைச் சரமாரியாக தாக்கினார் அன்வார்

ஐந்தாண்டுச் சிறைத்தண்டனையைக்  கூட்ட  வேண்டுமென்ற  அரசுத்தரப்பின்   முறையீட்டின்மீது   வாதம்  நடந்தபோது  அன்வார்  இப்ராகிம்  ஐவரடங்கிய  நீதிபதிகள் குழுவைக்   காரசாரமாக தாக்கினார். தலைமை  நீதிபதி  நிறுத்தச்  சொல்லியும்  அவர்  நிறுத்தாததால்  நீதிபதிகள்  நீதிமன்றத்திலிருந்து வெளியேறினர். நீதிமன்றத்தில் பேச  அனுமதிக்கப்பட்டதும்  எதிரணித்  தலைவர்,   அரசியல்  சதித்திட்டம்  தீட்டிய தம்  அரசியல்  எதிரிகளுடன் …

அன்வார் தண்டிக்கப்பட்டது உலக ஊடகங்களில் தலைப்புச் செய்தியானது

எதிரணித்  தலைவர்  அன்வார்  இப்ராகிம் குதப்புணர்ச்சி  வழக்கில்  குற்றவாளி  எனத்  தீர்ப்பளிக்கப்பட்டது  உலக  நாளேடுகளிலும்  செய்தித்  தளங்களிலும்  முக்கிய  செய்தியாக இடம்பெற்றது. டிவிட்டரில்  அதிகம்  தேடப்படும்  10  தலைப்புகளில்  அன்வார்  என்பதும்  ஒன்றாக  இருந்தது. பிரிட்டனின்  பிபிசி, அல்-ஜசீரா, புளும்பெர்க்  செய்தி  நிறுவனம், சிங்கப்பூரின்  சேனல்  நியுஸ்  ஏசியா …

ஷாபி: தண்டனையில் மகிழ்ச்சி காணவில்லை

குதப்புணர்ச்சி  வழக்கு 2-இல் அரசுத்  தரப்புத்  தலைமை  வழக்குரைஞராக  செயல்பட்ட முகம்மட்  ஷாபி  அப்துல்லா, “ஓர்  இளைஞனின்  வாழ்க்கையே  சிதைந்து  போனது” என்பதால்    அன்வார்  இப்ராகிமுக்குக்  கூட்டரசு  நீதிமன்றம் தண்டனை  வழங்கியதை  எண்ணி  மகிழ்ச்சி  அடையவில்லை  என்றார். “இறுதியில்  நீதி  கிடைத்திருப்பது எனக்குத்  தெரியும். அதனால்  முடிவை  எண்ணி …

அன்வாருக்கு ஐந்தாண்டுச் சிறைத் தண்டனை நிலைநிறுத்தப்பட்டது

எதிரணித்  தலைவர்  அன்வார்  இப்ராகிமுக்கு  முறையீட்டு  நீதிமன்றம்  ஏற்கனவே  விதித்திருந்த  ஐந்தாண்டுச்  சிறைத்  தண்டனை  நிலைநிறுத்தப்படுவதாக   நீதிபதி  அரிப்பின்  கூட்டரசு நீதிமன்றத்தில் அறிவித்தார். அன்வார்  தம்மை  காஜாங்  சிறைக்கு  அல்லாமல்  சுங்கை  பூலோ  சிறைக்கு  அனுப்ப  வேண்டுமெனக்  கேட்டுக்கொண்டதாகவும்  அவரது  கோரிக்கையை  நீதிமன்றம்  ஏற்றுக்கொண்டதாகவும்  அவரின்  வழக்குரைஞர்  கோபிந்த் …

நீதிக்கும் சனநாயகத்திற்கும் கிடைத்த மோசமான தோல்வி!

சுவாராம் மனித உரிமை இயக்கத்தின் தலைவரும் வழக்கறிஞருமான கா. ஆறுமுகம், உச்சநீதிமன்றம் அன்வாரைக் குற்றவாளி என்று தீர்ப்பளித்து 5 வருடங்கள் சிறைத்தண்டனை வழங்கியது தமக்கு ஆழ்ந்த அதிர்ச்சியைத் தருகிறது என்றார். “அன்வாரை அரசியலில் இருந்து அகற்ற மேற்கொண்ட அரசாங்கத்தின் சதிக்கு கிடத்த ஒரு கீழ்த்தரமான வெற்றி, மலேசியாவின் நீதிக்கும்…

4அன்வார் குதப்புணர்ச்சி வழக்கு2: அன்வார் குற்றவாளி எனத் தீர்ப்பு

  குதப்புணர்ச்சி வழக்கு 2 இல் அன்வாருக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு எதிராக அவர் செய்திருந்த மேல்முறையீடு வழக்கில் இன்று பெடரல் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கவிருக்கிறது. இன்று காலை மணி 8.00 க்கு முன்பாகவே புத்ராஜெயா உச்சநீதிமன்றத்தின் முன் கூட்டம் கூடத் தொடங்கி விட்டது. அனைத்துலக கண்காணிப்பாளர்களும் வந்துள்ளனர்.…

QZ8501: ஒரே மலேசியரின் உடல் அடையாளம் காணப்பட்டது

டிசம்பர் 28-இல்  ஜாவா  கடலில்  வீழ்ந்த  ஏர் ஏசியா QZ8501 விமானத்தில்  இருந்த ஒரே  மலேசியரான  சீ சுங்  ஹுவாயின்  உடலை  நேற்று  இந்தோனேசிய  அதிகாரிகள்  அடையாளம்  கண்டனர். சில  நாள்களுக்குமுன்  அந்த  உடல்  கண்டெடுக்கப்பட்டது  என்றாலும்  நேற்றுத்தான்  அது  சீ-இன் உடல்  என்பது  டிஎன்ஏ  சோதனைகளில்  உறுதிப்படுத்தப்பட்டது.…

தொழுகையுரைமீது கருத்துத் தெரிவித்த எக்ஸ்கோ போலீசுடன் ஒத்துழைப்பார்

பினாங்கு ஆட்சிக்குழு  உறுப்பினர்  சொங்  எங், பாலியல்  வல்லுறவு மீது  சிலாங்கூர்  இஸ்லாமிய  சமயத் துறை(ஜயிஸ்) தெரிவித்த  கருத்தைக்  குறைகூறியது  பற்றி  போலீசிடம் விளக்கமளிக்க  முன்வந்துள்ளார். “டிவிட்டரில்  ஐஜிபி-இன்  பதிவைப் பார்த்தேன். போலீசுக்கு  முழு  ஒத்துழைப்பு  கொடுப்பேன். நான்  பாலியல்  வல்லுறவு  தொடர்பில்  ஒரு  மாற்றுக்  கருத்தை  வெளியிட்டேன். …

எண்ணெய் விலை யுஎஸ்$65- யுஎஸ்$70 ஆக இருக்கும்

சீனா, இந்தியா,  ஆப்ரிக்கா  ஆகியவற்றில்  தேவை பெருகி  வருவதால்  எண்ணெய்  விலை யுஎஸ்$65க்கும்  யுஎஸ்$70-க்குமிடையே  உயர்வு  காணும்  வாய்ப்பு  இருக்கிறது. ஜூன்  மாதத்தில்   உலகப்  பொருளாதாரம்  உயரத்  தொடங்கும்போது  இப்போது  வீழ்ச்சி  கண்டுவரும்  கச்சா  எண்ணெய் விலையும்  உயர்வு  காணும்  என  முன்னாள்  நிதி  அமைச்சர்  டயிம்  சைனுடின் …

அமைச்சர் இஸ்மாயில் சப்ரியிடம் போலீஸ் வாக்குமூலம் பதிவு

பொருள்விலையைக்  குறைக்காத  சீனர்களின்  கடைகளை  மலாய்க்காரர்கள் புறக்கணிக்க  வேண்டும்  என்று  முகநூலில்  பதிவிட்ட  விவசாயம், விவசாயம்  சார்ந்த  அமைச்சர்  இஸ்மாயில்  சப்ரியிடம்  போலீசார்  வாக்குமூலம்  பதிவு  செய்துள்ளனர். இன்று  பிற்பகல்  மணி  3.30க்கு  புக்கிட்  அமான்  போலீஸ்  தலைமையகத்தில்  அவரிடம்  வாக்குமூலம்   பதிவு  செய்யப்பட்டதாக  போலீஸ்  படைத்  தலைவர் …

அம்பிகாவின் சமாதான யோசனை நடைமுறைக்கு ஒத்துவராது

ஆளும்  கூட்டணியும்  எதிரணியினரும், என்ஜிஓ-களும்  அமைதி  உடன்பாடு காண  வேண்டும்  என்று  நெகரா  கூ  புரவலர்  அம்பிகா  ஸ்ரீநிவாசன்  முன்வைத்த  ஆலோசனைக்கு  வரவேற்பு இருக்கிறது  ஆனால், அது  செயல்வடிவம்  பெறும்  சாத்தியம்  இருப்பதுபோலத்  தெரியவில்லை. ஆளும்  கட்சியிடமும்  எதிரணியிடமும்  ஒருவர்  மற்றொருவருடன்  ஒத்துழைக்கும்  அரசியல்  விருப்பமும்  இல்லை, ஆர்வமும் …

மகாதிர்: கிட் சியாங்கோ, டிஏபியோ கம்முனிஸ்டுகள் அல்ல

லிம்  கிட்  சியாங்கும்  டாக்டர்  மகாதிர் முகம்மட்டும்  அரசியலில்  என்றும்  எலியும்  பூனையுமாக  இருப்பவர்கள். வாய்ப்புக்  கிடைக்கும்போதெல்லாம்  ஒருவரை  மற்றவர்  குறைசொல்லத் தயங்கவே  மாட்டார்கள். முன்னாள்  பிரதமரைப்  பொருத்தவரை   அவர்,  டிஏபி  பெருந்  தலைவரை  என்ன  வேண்டுமானாலும்  சொல்வார்.  அவரை  ஒரு  கம்முனிஸ்டு  என்று  மட்டும்  சொல்ல  மாட்டார்.…

ஆர்ஓஎஸ்-ஸை நீதிமன்றத்துக்கு இழுக்காதீர்கள்: மஇகா-வுக்கு ஜாஹிட் வலியுறுத்து

மறுதேர்தல்  நடத்த  வேண்டுமென்ற  உத்தரவால்  அதிருப்தி  அடைந்துள்ள  மஇகா  உறுப்பினர்கள்  சங்கப்  பதிவதிகாரி(ஆர்ஓஎஸ்)யை  நீதிமன்றத்துக்கு இழுக்க  வேண்டாம்  என  உள்துறை  அமைச்சர்  ஜாஹிட்  ஹமிடி   கேட்டுக்கொண்டிருக்கிறார். “ஆர்ஓஎஸ்  கலந்துரையாடுவதற்கு  எப்போதுமே வாயிலைத்  திறந்து  வைத்துள்ளது. எந்த  விவகாரத்தையும் அவர்களுடன்  பேசித்  தீர்வு  காணலாம்”,என  ஜாஹிட்  இன்று  புத்ரா  ஜெயாவில் …

மே மாதம் தலைவர் தேர்தலை நடத்த மஇகாவுக்கு உத்தரவு

மஇகா  அதன்  தலைவர்  பதவிக்கான தேர்தலை  மே  மாதம்  நடத்த  வேண்டும்  எனச்  சங்கப்  பதிவதிகாரி(ஆர்ஓஎஸ்)  உத்தரவிட்டிருப்பதாக  உள்துறை  அமைச்சர்  அஹ்மட்  ஜாஹிட்  ஹமிடி  இன்று  தெரிவித்தார். மஇகா  அதன்  கிளைகள்,  பிரிவுகள், தொகுதிகள், மத்திய  தலைமைத்துவம்  என  எல்லாப்  பதவிகளுக்குமே  தேர்தல்களை  நடத்த  வேண்டும். இதைத்  திட்டவட்டமாக …