மெட்ரிகுலேஷன் திட்டம்குறித்த தனது அறிக்கை தொடர்பாக Universiti Malaya Association of New Youth (Umany) தலைவர் டாங் யி ஸீ-க்கு காவல்துறையினர் அபராதம் அனுப்பியுள்ளனர். டாங் (மேலே) நாளைப் பிற்பகல் 2 மணிக்கு வாங்சா மாஜு மாவட்ட காவல் தலைமையகத்தில் தனது வாக்குமூலத்தை அளிப்பார் என்று லிபர்ட்டிக்கான…
வாக்காளர்கள் அன்வாருக்கு நன்றிகூறக் கடமைப்பட்டுள்ளனர்: பிகேஆர்
அன்வார் இப்ராகிம் போன்ற “மாபெரும் தலைவர்” காஜாங் இடைத் தேர்தலில் போட்டியிடுவதை காஜாங் வாக்காளர்கள் “நன்றியுடன் நினைத்துப் பார்க்க வேண்டும்”. முதலில் பிகேஆரின் துணைத் தலைவர் அஸ்மின் அலி இதைச் சொன்னார். இப்போது ஹுலு லங்காட் எம்பி அப்துல்லா சானியும் அதை அப்படியே எடுத்துரைத்துள்ளார். அன்வாரைப்போல் வேறு எந்த…
அமைச்சர்: டிங்கி நோயாளிகளை அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைப்பீர்
டிங்கி நோயைக் கண்டுபிடிக்கும் வசதிகளைப் பெற்றிராத தனியார் மருத்துவ நிலையங்கள் நோயாளிகளை அருகில் உள்ள அரசு மருத்துவ மனைகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும் எனச் சுகாதார அமைச்சர் டாக்டர் எஸ்.சுப்ரமணியம் கூறினார். டிங்கி நோயால் பாதிக்கப்பட்டவர்களில் 50 விழுக்காட்டினரை நோய் தொடக்கக் கட்டத்தில் இருக்கும்போதே அடையாளம் கண்டுபிடிக்க முடியாமல் …
குழாயில் நீர் வராததால் ஆத்திரமடைந்துள்ளனர் பலாக்கோங் மக்கள்
பத்து நாள்களாகக் குழாயில் நீர் வரும் வருமென்று எதிர்பார்த்து ஏமாந்துபோன சிலாங்கூர், பலாக்கோங் குடியிறுப்பாளர்கள், நேற்று தங்கள் ஆத்திரத்தை ஒரு கண்டனக் கூட்டம் நடத்தி வெளிப்படுத்திக் கொண்டனர். தங்கள் பகுதிக்குக் குழாய்நீர் வந்து சேரும் வரையில் ஒவ்வொரு மாலையும் கண்டனக் கூட்டம் நடத்தப்போவதாகவும் அவர்கள் சூளுரைத்தனர். நேற்றைய கண்டனக் …
பினாங்கில் தமிழ் இடைநிலைப்பள்ளி அமைக்க அனுமதி இல்லை
பினாங்கில் ஒரு தமிழ் இடைநிலைப்பள்ளி அமைக்க அம்மாநில அரசுமுடிவெடுத்து அதற்கு மத்திய அரசிடமிருந்து அனுமதி கோரியிருந்தது. அப்பள்ளி அமைப்பதற்காக நிலமும் அடையாளம் காணப்பட்டது. கல்வி மத்திய அரசின் அதிகார்த்திற்கு உட்பட்டதால், பினாங்கில் ஓர் இடைநிலை தமிழ்ப்பள்ளி அமைக்க அனுமதி கோரி மார்ச் 20, 2013 இல் பினாங்கு…
வேதாவை வறுத்தெடுப்பதில் ஹிஷாமும் சேர்ந்துகொண்டார்
இளைஞர், விளையாட்டு அமைச்சர் கைரி ஜமாலுடினுக்குப் பிறகு இன்னொரு அமைச்சரும் முன்னாள் துணை அமைச்சர் வேதமூர்த்தியை சாடியுள்ளார். டிவிட்டரில் பதிவிட்டிருக்கும் தற்காப்பு அமைச்சர் ஹிஷாமுடின், வேதமூர்த்தியை “சுயநலமி” என்றும் “சொந்த தோல்விகளை மூடிமறைக்கவே” பதவி துறந்தார் என்றும் கூறினார். “அரசாங்கத்தின்மீதும் (பிரதமர்) நஜிப் அப்துல் ரசாக்மீதும் பழிபோடுவது அவரது …
பெர்காசா பினாங்கு அரசுடன் ஒத்துழைக்க முடிவு செய்துள்ளது
வியப்பளிக்கும் ஒரு செய்தி. மலாய்க்காரர் மற்றும் இஸ்லாம் தொடர்பான விவகாரங்களில் பினாங்கு அரசுடன் சேர்ந்து பணியாற்றத் தயார் என பெர்காசா அறிவித்துள்ளது. இன்று, பெர்காசா உறுப்பினர்கள் அறுவர், மாநிலத் தலைவர் முகம்மட் ரிட்சுவாட் முகம்மட் அஸுடின் தலைமையில் கொம்டார் சென்று இஸ்லாமிய விவகாரங்களுக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் அப்துல் …
பணம் இல்லாமல் வேலை செய்த அனுபவம் உண்டா? கெஜே-க்கு வேதா…
முன்னாள் செனட்டரும் துணை அமைச்சருமான பி.வேதமூர்த்தி, மலேசிய இண்ட்ராப் சங்கத்தின் ஆதங்கம் புரியாமல் பிரதமருக்கு ஆதரவாக அறிக்கை விட்டிருக்கிறார் கைரி ஜமாலுடின் எனச் சாடியுள்ளார். தாம் செம்மையாக பணி புரியவில்லை என்றும் பணமே குறியாக இருந்ததாகவும் கைரி கூறியதற்கு எதிர்வினையாற்றிய வேதமூர்த்தி, கைரியின் அமைச்சுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை …
இப்போது உண்மையச் சொல்வது யார், நஜிப்பா, வேதமூர்த்தியா?
- மு. குலசேகரன், பெப்ரவரி 19, 2014. 13 ஆவது பொதுத் தேர்தலுக்கு முன்பு பாரிசான் நேசனலுடன் செய்து கொண்ட புரிந்துணர்வில் கூறப்பட்டுள்ள இந்தியர்களுக்கான சமூக-பொருளாதார செயல்திட்டங்களை செயல்படுத்த இயலாமல் போனதற்காக மலேசிய ஹிண்ட்ராப் மன்றத்தின் தலைவர் வேதமூர்த்தி நேற்று இந்திய சமூகத்தினரிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார். கடந்த…
இப்ராகிம் அலி: காஜாங்கில் எதற்காக சீனர்களைப் பலி கொடுக்கிறீர்கள்?
மலாய்க்காரர் உரிமைக்காக ஓயாமல் குரல் கொடுக்கும் இப்ராகிம் அலி, சீனர்களுக்காக பரிந்து பேசி இருக்கிறார். காஜாங் இடைத் தேர்தலில் சீனர்களின் தலையைப் போட்டு உருட்டுவது ஏன் என்று அவர் ஒரு அறிக்கையில் கேள்வி எழுப்பியுள்ளார். பிகேஆர் உள்தகராறுக்குத் தீர்வுகாண சீனர் ஒருவரைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது என அந்த முன்னாள் …
மனுக்கள் தள்ளுபடி, பாகான் டத்தோ ஜாஹிட்டுக்கே
பேராக் பாகான் டத்தோ நாடாளுமன்றத் தொகுதியில் அஹமட் ஜாஹிட் ஹமிடி வென்றதை எதிர்த்து செய்யப்பட்ட இரண்டு மனுக்களை கோலாலும்பூர் தேர்தல் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. பிகேஆர் வேட்பாளர் மதி ஹசனும் ஒரு வாக்காளரும் தாக்கல் செய்த அம்மனுக்கள் குறைபாடுடையவை என்றும் செல்லத்தக்கன அல்ல என்றும் நீதிபதி ஹஸ்னா …
தெரேசா கொக் அலுவலகத்தில் சிவப்புச் சாயம், செத்துப்போன கோழி
டிஏபி-இன் சிபூத்தே எம்பி தெரேசா கொக்கின் அலுவலகம் செல்லும் படிக்கட்டுகளில் சிவப்புச் சாயம் வீசியடிக்கப்பட்டிருந்தது. காலை 9 மணிக்கு அலுவலகம் வந்த பணியாளர் ஒருவர் இதைக் கண்டு தகவல் தெரிவித்தார். இறந்த கோழி ஒன்றும் கூடவே கொக்கின் உருவப்படம் அங்குக் கண்டெடுக்கப்பட்டன. கொக்கைத் தொடர்பு கொண்டபோது, “இது திட்டவட்டமாக …
‘ஒழுக்கம்கெட்ட’ அன்வார் எம்பி ஆவதை எண்ணி மகாதிர் கவலை
தம் பரம வைரி சிலாங்கூர் மந்திரி புசார்(எம்பி) ஆவார் என்பதை நினைத்து கவலை கொண்டிருக்கிறார் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட். அன்வார் இப்ராகிம் “ஒழுக்கங்கெட்ட நடத்தையுடைவர்” என்பதால் மக்கள் பாதுகாப்பாக இருக்க முடியாது என மகாதிர் செய்தியாளர்களிடம் கூறினார். “என்னைப் பொறுத்தவரை, அன்வார் எம்பி ஆவதற்கோ பிரதமர் …
தியான் சுவா மற்றும் இருவரின் மேல்முறையீடு தள்ளுபடி
பிகேஆர் உதவித் தலைவர் தியான் சுவாவும் மேலும் இரு சமூக ஆர்வலர்களும் அவர்கள்மீதான அரச நிந்தனை வழக்கை எதிர்த்து செய்துகொண்ட மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டது. தியான் சுவா, ஹிஷாமுடின் ரயிஸ், ஆதம் அட்லி ஆகியோர் மனுச் செய்துள்ளபடி அவர்கள்மீதான வழக்கைத் தள்ளுபடி செய்ய “தகுந்த காரணமில்லை” என்றும் அதை …
இந்தியர்களுக்கு துரோகம் இழைத்த நஜிப்பை பதவி துறக்கச் சொல்கிறார் வேதமூர்த்தி
இந்திய சமூகத்திற்கு அப்பட்டமான நம்பிக்கை துரோகம் இழைத்ததற்காக பிரதமர் பதவியிலிருந்து விலகுமாறு நஜிப்பிடம் மலேசிய இண்ட்ராப் மன்றத்தின் (பிஎச்எசம்) பி.வேதமூர்த்தி கூறினார். சுமார் ஒரு வாரத்திற்கு முன்பு தமது செனட்டர் மற்றும் துணை அமைச்சர் பதவியை விட்டு விலகிய வேதமூர்த்தி இன்று சுமார் 20 நிமிடங்களுக்கு நடந்த…
உங்கள் தோல்விக்குப் பிரதமர்மீது பழி போடுவதா: வேதாவைச் சாடுகிறார் கைரி
மாற்றங்களைக் கொண்டுவர முடியாத முன்னாள் செனட்டரும் துணை அமைச்சருமான பி.வேதமூர்த்தி அதற்கு பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கே காரணம் என்று குறை சொல்வது நியாயமல்ல என்கிறார் அம்னோ இளைஞர் தலைவர் கைரி ஜமாலுடின். “அவர் குழுவாக இணைந்து செயலாற்ற முடியாதவர், தம் போராட்டத்தையும் செவ்வனே முன்னெடுத்துச் செல்லும் வழிவகை …
மார்ச் 8-க்குள் பக்காத்தான் பதிவை ஏற்றுக்கொள்வீர்
பக்காத்தான் ரக்யாட் விண்ணப்பத்தை ஏற்று மார்ச் 8-ஆம் நாள் அதன் மாநாடு நடப்பதற்குமுன் அதனைப் பதிவுசெய்ய வேண்டும் என டிஏபி அமைப்புச் செயலாளர் அந்தோனி லோக், உள்துறை அமைச்சர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடியையும் சங்கப் பதிவாளரையும் (ஆர்ஓஎஸ்) கேட்டுக்கொண்டிருக்கிறார். பக்காத்தான் இதுவரை ஐந்து மாநாடுகளை நடத்தியுள்ளது. முன்று தடவை …
நீதிபதி உத்தரவு இருந்தும்கூட குடும்பத்தாரைச் சந்திக்க உதயா அனுமதிக்கப்படவில்லை
இன்ட்ராப் தலைவர் பி. உதயகுமார், உயர் நிதிமன்றத்துக்கு வெளியில் குடும்பத்தாரையும் ஆதரவாளர்களையும் சந்திக்க நீதிபதி அஸ்மான் உசேனிடம் அனுமதி பெற்றிருந்தும்கூட அவர்களை சந்திக்க முடியவில்லை. 30-மாத சிறைத்தண்டனைக்கு எதிரான மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து குடும்பத்தாரையும் ஆதரவாளர்களையும் அரை மணி நேரம் சந்தித்து அவர்களுடன் பகலுணவு அருந்த அனுமதி …
வேதா: இந்தியர்களுக்கு இரண்டகம் செய்த பிரதமர் பதவி விலக வேண்டும்
ஒரு வாரத்துக்குமுன் செனட்டர், துணை அமைச்சர் பதவிகளைத் துறந்த பின்னர் இன்று முதல்முறையாக செய்தியாளர்களைச் சந்தித்த இண்ட்ராப் தலைவர் பி.வேதமூர்த்தி, பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் ஒரு பொய்யர் என்றும் இந்தியர்களுக்கு இரண்டகம் செய்துவிட்டார் என்றும் குறிப்பிட்டார். அதற்காக, நஜிப் பிரதமர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்றவர் …
போலீஸ் நடவடிக்கை இல்லை என்பதால் பதற்றநிலை மோசமடைகிறது
அண்மைய மாதங்களில் இன, சமய விவகாரங்கள் மீதான வாத பிரதிவாதங்கள் மிகுந்து வருகின்றன. அரசியல்வாதிகளே அதற்குக் காரணம் எனப் பார்வையாளர்கள் குறைகூறுகின்றனர். இதில் முக்கிய குற்றவாளி அம்னோ என்றும் அது மலாய்/முஸ்லிம் ஆதரவைப் பிடித்துவைத்துக்கொள்ள அவ்விவகாரங்களைத் தொடர்ந்து கிண்டிக் கிளறி விடுவதாகவும் அவர்களில் சிலர் குற்றம் சாட்டுகின்றனர். இவ்விவகாரங்களைக் …
வெள்ளிக்கிழமை தொழுகை உரைக்கு பினாங்கு தடை விதிக்கும் என்பது பொய்
பினாங்கு பள்ளிவாசல்களில் வெள்ளிக்கிழமை தொழுகை உரைக்குத் தடை விதிக்கப்படும் என டிவிட்டரில் கூறப்பட்டிருப்பதற்கு எதிராக புக்கிட் பெண்டாரா டிஏபி சோசலிச இளைஞர் தலைவர், ஹரிஸ் ஞுவான் ஜஹாருடின் ஜாலான் பட்டாணியில் உள்ள வடகிழக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அந்த டிவிட்டர் பக்கத்துக்குச் சொந்தக்காரர் கோலா நூருஸ் திரெங்கானு …
உதயகுமாரின் மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டது
தேசநிந்தனை குற்றச்சாட்டின் மீது 30 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்ட ஹிண்டார்ப் தலைவர் பி. உதயகுமார் அத்த தண்டனைக்கு எதிராக செய்திருந்த முறையீட்டை கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் இன்று காலை தள்ளுபடி செய்தது. செசன்ஸ் நீதிமன்றம் அளித்திருந்த அத்தீர்ப்பில் தவறு ஏதும் இல்லை என்று நீதி அஸ்மான் ஹிசின் அவரது…
அன்வார் தேர்தல் பிரச்சாரத்தில் இஸ்லாம் முன்னிடம் பெற்றுள்ளது
தாம் காஜாங் இடைத் தேர்தலில் வெற்றி பெற்றால் சிலாங்கூர் மாநிலத்தில் இஸ்லாத்தின் நிலையை மேம்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்போவதாக பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம் இன்று கூறினார். "எனக்கு, சிலாங்கூரில் இதுதான் முன்னுரிமையாகும். நான் ஒரு முஸ்லிம் என்று எப்போதும் கூறி வந்துள்ளேன். நேற்று இதனை நான்…