வந்தேறிகள் தலையிடக் கூடாது; ஆனால், வரி கட்ட வேண்டும்

மலாய்க்காரர்- அல்லாதாரை  "pendatang (வந்தேறிகள்)”  என்று  குறிப்பிடும்  ஈக்காத்தான்  முஸ்லிமின்  மலேசியா (இஸ்மா),  அவர்களின்  அரசியல்  ஈடுபாடு  மலாய்- முஸ்லிம்  விவகாரங்களில்  தலையிடும்  அளவுக்குச்  சென்று  விடக்கூடாது  என்று  வலியுறுத்துகிறது  ஆனால், வரிகளைப்  பொறுத்தவரை  எல்லோரையும்போலவே  கட்ட  வேண்டும்  என்கிறது. முஸ்லிம்-அல்லாதாரின்  அரசியல்  ஈடுபாட்டுக்கு   வரம்பு  கட்டப்பட  வேண்டும் …

புக்கிட் குளுகோர் இடைத் தேர்தல்: மசீச தொடர்ந்து மெளனம்

பினாங்கு  மசீச, மே  27  புக்கிட்  குளுகோர்  இடைத்  தேர்தலில்  மசீச  போட்டியிடாது  என்று  சீன  நாளேடு  ஒன்றில்  வெளிவந்துள்ள  செய்தியை உறுதிப்படுத்தவும்  இல்லை  மறுக்கவுமில்லை. பினாங்கு  மசீச  தலைவர்  சியு  மெய் பன்,  அதை “வெறும்  ஊகம்”  என்று  கூறினார்.  அதேவேளை  இடைத்  தெர்தல்  பற்றி  இன்று …

ஒபாமா வருகையின்போது ஆர்ப்பாட்டம் செய்த மாணவர்களுக்குப் பிரச்னை

அமெரிக்க  அதிபர்  பராக்  ஒபாமா,  மலாயாப்  பல்கலைக்கழகத்துக்கு  வருகை  மேற்கொண்டபோது  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட  மாணவர்களுக்கு   விளக்கம்கேட்டு  கடிதங்கள்  அனுப்பப்பட்டுள்ளன. மலாயாப்  பல்கலைக்கழக  மாணவர்  விவகாரத்துறை  கடிதங்களை  அனுப்பி  வைத்துள்ளது. ஒபாமா தென்கிழக்காசிய  இளம்தலைவர்களைச்  சந்திக்க அப்பல்கலைக்கழகத்துக்குச்  சென்றபோது அம்மாணவர்கள் பசிபிக்-வட்டார  பங்காளித்துவ  ஒப்பந்தத்துக்கு  எதிர்ப்புத்  தெரிவித்து சின்ன  ஆர்ப்பாட்டத்தில் …

நீர் பாதுகாப்பானது என்பதை நிரூபித்துவிட்டு பிறகு லுவாஸ் வழக்கு தொடுக்கலாம்

ஈயக் குட்டைகளிலிருந்து  எடுக்கப்படும்  நீரின்  தரம்  குறித்து  கேள்வி  எழுப்புவோர்மீது  வழக்கு  தொடுக்கப்போவதாக  மிரட்டும்  சிலாங்கூர்  நீர்  நிர்வாக  நிறுவனம் (லுவாஸ்) அந்த  நீர்  பாதுகாப்பானதுதான்  என்பதற்கு  இதுவரை  உருப்படியான  ஆதாரம்  காண்பிக்கவில்லை  என  கிள்ளான்  எம்பி சார்ல்ஸ்  சந்தியாகு  கூறியுள்ளார். “நீர்  ஆதாரங்களுக்குப்  பொறுப்பாகவுள்ள ஒரு  நிறுவனம் …

அவசரப்பட்டு அறிக்கை விடாதீர்: மசீசவுக்கு கைரி அறிவுறுத்தல்

ஹுடுட்  சர்ச்சையால்  பக்காத்தான்  ரக்யாட்  பிளவுபடும்  என்று  ஆருடம்  கூறப்படும்  வேளையில்  பிஎன்னிலும்  சிறுசிறு  விரிசல்கள்  தோன்றியுள்ளன. எதுவும்  நிகழ்ந்து  விடாமல்  தடுக்கும்  முயற்சியாக,  அம்னோ  இளைஞர்  தலைவர்  கைரி  ஜமாலுடின்,  ஹுடுட் மீது  மசீச  அவசரப்பட்டு  எந்த  முடிவுக்கும்  வந்துவிடக் கூடாது  என  வலியுறுத்தியுள்ளார். ஹுடுட்  விவகாரத்தில் …

கெராக்கான்: அரசமைப்பு கூறுகிறது என்றால் அதை பெர்காசா நிரூபிக்க வேண்டும்

அதிகாரப்பூர்வ  பாரங்களில்  இனம்  பற்றிய  பத்தியை நீக்குவது  அரசமைப்புக்கு  விரோதமானது  என்பதை   பெர்காசா  தலைவர்  இப்ராகிம்  அலி  நிரூபிக்கத்  தயாரா  என  கெராக்கான்  இளைஞர்  பகுதி  சவால்  விடுத்துள்ளது. அரசாங்கம்  இனம் பற்றி  வினவும்  பத்தியை  நீக்கினால்  வழக்கு  தொடுக்கப்படும்  என்று  இப்ராகிம்  மிரட்டியிருப்பதற்கு  அதன்  தலைவர்  டான் …

ஹுடுட்டைத் தடுத்து நிறுத்த 100-வழக்குரைஞர்கள் குழுவை

கிளந்தானில்  ஹுடுட்  சட்டம்  செயல்படுத்தப்படுவதைச்  சட்ட  ரீதியாக  தடுத்து  நிறுத்த  100  வழக்குரைஞர்கள்  கொண்ட  ஒரு பணிக்குழுவை  மசீச  அமைத்துள்ளது. இதை  அறிவித்த  கட்சி சட்டப்  பிரிவுத் தலைவர்  தே  புவாய்  சுவான்,  அக்குழுவின்  முதல்  கூட்டம்  மே  17-இல்  நடக்கும்  என்றார். அக்கூட்டத்தில்  ஹுடுட்-டைத்  தடுத்து  நிறுத்தும் …

வாயை மூடும்: வேள்பாரிக்கு இஸ்மா எச்சரிக்கை

மஇகா  வியூக  இயக்குனர்  எஸ்.வேள்பாரி  வாய்க்கு  வந்தபடி  பேசக்கூடாது  என  ஈக்காத்தான்  முஸ்லிமின்  மலேசியா (இஸ்மா) எச்சரித்துள்ளது. இஸ்மா   என்ற  சொல்லைக்  கேட்டதும்  அதை ஒரு பாலியல் நோய்  என்று  நினைத்ததாகக்  கூறிய  எஸ். வேள்பாரிமீது  கடும்  கோபம்  கொண்டிருக்கிறார்  இஸ்மா உதவித்  தலைவர்  அப்துல்  ரஹ்மான்  மாட் …

பெர்காசா: பாரங்களில் இனம் பற்றி வினவும் பகுதி நீக்கப்பட்டால் நடவடிக்கை…

அரசாங்கப்  பாரங்களில் “இனம்” பற்றி  வினவும் பகுதி  நீக்கப்பட்டால்  சட்ட  நடவடிக்கை  எடுக்கப்போவதாக  பெர்காசா  எச்சரித்துள்ளது. சில  அரசாங்கப்  பாரங்களில்  கூடுதல்  பயனில்லை  என்று  தெரியுமிடங்களில் “இனம்” பற்றி  வினவும்  பத்தியை  நீக்க  அமைச்சரவை  முடிவு  செய்திருப்பதாக  நேற்று  பிரதமர்துறை  அமைச்சர்  ஜோசப்  எந்துலு  கூறி  இருந்தார். அது …

அம்னோ: பிகேஆர் மலாய்த் தலைவர்களை ஒழித்துக்கட்ட முயல்கிறதா?

பிகேஆரில்  மலாய்த்  தலைவர்களை  ஒழித்துக்கட்ட  முயற்சி  நடைபெறுகிறதா  என பினாங்கு  அம்னோ  தொடர்புக்குழுத்  தலைவர்  சைனல்  அபிடின்  ஒஸ்மான் கேள்வி  எழுப்பியுள்ளார். பிகேஆர்  கட்சித்  தேர்தல்களில்  சில தொகுதிகளில்  மலாய்க்காரர்-அல்லாதவர்களை  எதிர்த்துப்  போட்டியிட்ட  மலாய்த்  தலைவர்கள்  தோற்றுப் போனதைத்  தொடர்ந்து  அவர்  இக்கேள்வியை  எழுப்பினார். குறிப்பாக,  தஞ்சோங்,  பாயான் …

தெலோக் இந்தான் இடைத்தேர்தலில் மா.மனோகரனுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் !

55 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வாக்களிக்க தகுதிப்பெற்ற பேரா மாநிலத்தில் உள்ள தெலோக் இந்தான் (P076) தொகுதி மூவினத்தை சார்ந்த தொகுதி என்பதாலும், கடந்த 2008 ஆம் ஆண்டு 12 வது பொதுத் தேர்தலில் முதன் முதலாக களம் கண்ட சமூகவியலாளரும், தமிழ் அறவாரியத்தின் முன்னால் தலைவருமாகிய திரு.மனோகரன்…

தெலோக் இந்தான் இடைத் தேர்தல் மே 31

தெலோக்  இந்தான்  இடைத்  தேர்தல்  மே  31ஆம்  நாள்  என்றும்  வேட்பாளர்  நியமன  நாள்  மே 19  என்றும்  தேர்தல்  ஆணைய(இசி)த்  தலைவர்  அப்துல்  அசீஸ்  யூசுப்  இன்று  அறிவித்தார். இது, கடந்த  மே  மாத  பொதுத் தேர்தலுக்குப்  பின்னர்  நடைபெறும்  ஆறாவது  இடைத்  தேர்தலாகும்.  டிஏபி-இன்  தெலோக்…

சீனர் ஆதரவைப் பெறுவது எப்படி என பிஎன்னுக்குப் பாடம் நடத்துகிறது…

நியாயமான  கொள்கைகள்தாம்  சீனச் சமூகத்தின்   ஆதரவை  மீண்டும்  பெற  உதவுமே  தவிர  அச்சுருத்தல்  ஒருபோதும்  உதவாது  என்று  சரவாக்  எதிரணித்  தலைவர்   சோங்  சியாங்  ஜென்  கூறினார். “முதலமைச்சர் (அடினான்  சாதெம்) பிஎன்னுக்கு  சீனச்  சமூகத்தின்  ஆதரவைப்  பெற  விரும்பினால்,  மாநில  திட்டங்களில்  சீனர்கள்  ஓரங்கட்டப்படுவார்கள்  என  மிரட்டுவதன்வழி …

எம்ஏஎஸ்-இல் மேலும் பணம்போட அரசாங்கம் தயாராக இல்லை

மூன்றாண்டுகளாக  ஆதாயம்  காண முடியாமல்  தத்தளிக்கும்  மலேசிய  விமான  நிறுவனத்தை  மீட்டெடுக்க  மேலும்  பணம்போடும்  எண்ணம்  அரசாங்கத்துக்கு  இல்லை  எனச்  சுற்றுலா, பண்பாட்டு  அமைச்சர்  நஸ்ரி  அப்துல்  அசீஸ்  கூறினார். போட்டிமிக்க  சூழலைச்  சமாளிக்க  முடியாமல்  தடுமாறிக்  கொண்டிருக்கும்  எம்ஏஎஸ்  விவகாரத்தில்  என்ன  செய்யலாம்  என்பது  அரசாங்கத்துக்கே  புரியவில்லை…

சிலாங்கூர் மாநில அரசு தமிழ்ப்பள்ளிகளை ஓரங்கட்டியது ஏன்?

  கடந்த ஐந்து ஆண்டுகளில் சிலாங்கூர் மாநிலத்திலுள்ள 97 தமிழ்ப்பள்ளிகளும் கணிசமான நிதி உதவியைப் பெற்றுள்ளன. அந்நிதி உதவியைக் கொண்டு சிலாங்கூர் மாநில தமிழ்ப்பள்ளிகளில் பாலர் பள்ளிகள், கணினி மையங்கள் அமைக்கப்பட்டதோடு இன்னும் பல்வேறு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. சிலாங்கூர் மாநில அரசால் வழங்கப்பட்ட இந்த நிதி உதவியின் பயனை…

மகாதிர்: பகிர்ந்துகொள்வது டிஏபி-க்குப் பிடிக்காது

சீனர்கள்  ஆதிக்கம்  செலுத்தும்  டிஏபி,  இனங்களுக்கிடையில்  பகிர்தல்  என்பதில்  நம்பிக்கை  இல்லாத  கட்சி  என  முன்னாள்  பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகம்மட்  அவரது  வலைப்பதிவில் சாடியுள்ளார். “தகுதிமுறையைத்தான்  அக்கட்சி  நம்புகிறது”,  என்றாரவர்.  தகுதிமுறையில்,  தகுதியுள்ளவர்கள்  இருப்பதையெல்லாம்  அள்ளிக்கொள்வார்கள். பொருளாதார  ஆதிக்கத்தை  விட்டுக்கொடுக்காமல்,  அரசியல்  அதிகாரத்தைப்  பெறுவதே  டிஏபி-இன்  இலக்காகும் …

முஸ்லிமின் கையை வெட்டுவதும் முஸ்லிம்-அல்லாதாரைச் சிறையில் இடுவதும்தான் நியாயமாகும்

ஒரு  முஸ்லிம்,  முஸ்லிம்-அல்லாத ஒருவருடன்  சேர்ந்து  குற்றம்  புரிந்திருந்தால்,  ஹுடுட்  சட்டத்தின்படி  அவரின்  கையை  வெட்ட  வேண்டும்;  அவருக்கு உடந்தையாக  இருந்த  முஸ்லிம்-அல்லாதவர்  சிவில்  சட்டப்படி  தண்டிக்கப்பட  வேண்டும். அதுதான்  நியாயம்  என்கிறார்  கிளந்தான்  துணை  மந்திரி  புசார்  நிக்  அமார்  அப்துல்லா. சினார்  ஹரியான்  ஏற்பாடு  செய்திருந்த …

‘நிக் நஸ்மிமீது மீண்டும் குற்றம்சாட்டுவது முறையல்ல’

12  நாள்களுக்குமுன்  எந்தக் குற்றச்சாட்டிலிருந்து  விடுவிக்கப்பட்டாரோ  அதே  குற்றச்சாட்டை  மீண்டும்  ஸ்ரீசித்தியா  சட்டமன்ற  உறுப்பினர்  நிக்  நஸ்மி  நிக்  அஹ்மட்மீது சுமத்துவது  முறையல்ல  என்பதுடன்  அது  பொதுப்பணத்தை  விரயம்  செய்வதுமாகும்  என  வழக்குரைஞர் மன்றத்  தலைவர்  கிறிஸ்தபர்  லியோங்  கூறினார். கடந்த  ஆண்டு  பொதுத்  தேர்தலுக்குப்  பின்னர் நடத்தப்பட்ட …

தமிழ்ப்பள்ளிகளின் வாரியங்களை ஒருங்கிணைக்கும் தேசிய அமைப்பாக தமிழ் அறவாரியம் திகழும்

இந்நாட்டிலுள்ள 523 தமிழ் தொடக்கப்பள்ளிகளில் 300 க்கு மேற்பட்ட தமிழ்ப்பள்ளிகளில் பள்ளி வாரியம் இன்னும் அமைக்கப்படவில்லை. இதனால் அப்பள்ளிகளை மேம்படுத்துவதில் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இந்நாட்டு தமிழர்களின் அடையாளமாகக் கருத்தப்படும் தமிழ்ப்பள்ளிகளின் ஒட்டுமொத்த மேம்பாட்டிற்காக பல செயல்முறைத் திட்டங்களைத் தீட்டி அவற்றை வெற்றிகரமாக அமல்படுத்தி தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டிற்கு தமிழ்…

சிலாங்கூரில் நச்சுத்தன்மை வாய்ந்த நீர் பயன்படுத்தப்படுகிறதாம்

ஈயக்குட்டைகளில்  உள்ள  நீரைக்  கொண்டு  தண்ணீர் தட்டுப்பாட்டுக்குத்  தீர்வுகாணலாம்  என  சிலாங்கூர்  அரசு  திட்டமிட்டுக்  கொண்டிருக்கும்  வேளையில்  ஈயக்குட்டை  நீர்  “நச்சுத்தன்மை” வாயந்தது  என  நியு  ஸ்ரேய்ட்ஸ்  டைம்ஸ்  செய்தி  கூறுகிறது. பெஸ்தாரி  ஜெயாவில் பயன்படுத்தாமல்  உள்ள  ஈயக்குட்டைகளின்  நீரைச்  சோதனை  செய்து  பார்த்ததில்  அதில்  காரீயம், இரும்பு,…

ஐஜிபி: இஸ்மா தலைவர் தேசநிந்தனை புரிந்தாரா என விசாரிக்கப்படுகிறது

ஈக்காத்தான்  முஸ்லிமின்  மலேசியா (இஸ்மா)  தலைவர் அப்துல்லா  ஜேய்க்  அப்துல்லா  ரஹ்மான்மீது  தேசநிந்தனைச்  சட்டத்தின்கீழ்   போலீஸ்  விசாரணை  நடத்தி  வருகிறது. இதை  மலேசியாகினியிடம்  தெரிவித்த  இன்ஸ்பெக்டர்-ஜெனரல்  அப்  போலீஸ்  காலிட்  அபு  பக்கார், சினமூட்டும்  வகையில்  பேசுவதைத்  தவிர்க்குமாறு  எல்லாத்  தரப்பினரையும்  கேட்டுக்கொண்டார். “இனங்களுக்கிடையில் பதற்றத்தைத்  தூண்டும்  வகையில் …

இஸ்மா என்னும் அபாய நோயைத் தடுத்து நிறுத்துக

“இஸ்மா”  என்ற  பெயரை  முதல்முதலாகக்  கேள்விப்பட்டபோது அது  ஒரு  பாலியல்  நோய்  என்றுதான்  நினைத்தார் எஸ். வேள்பாரி. “ஆனால், அது  அதைவிட  மோசமானது  என்பதை  இப்போது  தெரிந்துகொண்டேன்”, என்றாரவர். ஈக்காத்தான்  முஸ்லிமின்  மலேசியா  என்பதன்  சுருக்கமான  இஸ்மாவின் தலைவர்  அப்துல்லா  ஜைக்  அப்துல்லா,    அண்மையில்  சீனர்களைப்  கேவலமாக  பேசியது …

சஞ்சீவன்: ஓராண்டு ஆகிறது, ஐஓ-கூட யாரென்று தெரியவில்லை

குற்றத்  தடுப்புக்  கண்காணிப்பு  அமைப்பான  மைவாட்ச்-இன் தலைவர்  ஆர்.ஸ்ரீ சஞ்சீவன், தாம்  சுடப்பட்ட  சம்பவம்மீது  போலீஸ்  செயல்படாதிருப்பதாகக்  குறைகூறினார். சுடப்பட்டு   ஒராண்டுகிறது. இந்த வழக்கின்  விசாரணை  அதிகாரி(ஐஓ)யின்  பெயர்கூட  தெரியவில்லை  என்றாரவர். கடந்த  ஆண்டு  ஜூலை  27-இல், நெகிரி  செம்பிலானில் மோட்டார்  சைக்களில்  வந்த  இருவரால்  சுடப்பட்ட  சஞ்சீவன், …