இஸ்மாயில் விவகாரத்தை மீண்டும் அமைச்சரவையில் எழுப்புவோம்: மசீச சூளுரை

விவசாயம்,  விவசாயம்  சார்ந்த  தொழில் அமைச்சர்  இஸ்மாயில்  சப்ரி  விவகாரத்தில் மசீச  கடுமையாகக்  கண்டனம் தெரிவிக்கவில்லை  என்று  கூறப்படுவதை  அதன்  தலைவர்  லியோ  தியோங்  லாய்  மறுத்தார். முகநூலில்  சர்ச்சைக்குரிய  பதிவிட்டதற்குப்  பொறுப்பேற்க  சப்ரி  தொடர்ந்து  மறுப்பாரானால் அவ்விவகாரத்தை  அடுத்த  அமைச்சரவைக்  கூட்டத்தில்  மீண்டும் எழுப்பப்போவதாக  லியோ  உறுதி …

டிஏபி: ஜோகூரில் காடழிப்புப் பற்றி வாய் திறவாவது ஏன்?

ஜோகூர்  மாநில  வெட்டுமரத்  தொழில்  பற்றிக்  கேள்வி  கேட்டால் மந்திரி  புசார் முகம்மட்  காலிட்  நோர்டினும்  மாநில  அரசும் பதிலளிக்காமல்  வாயை  மூடிக்  கொள்வதாக  டிஏபி  சட்டமன்ற  உறுப்பினர் கூறினார். “வெட்டுமரத்  தொழில்  பற்றிய  எந்த  விவரத்தை  மூடிமறைக்க  அவர்கள்  முயல்கிறார்கள்?”, என பெந்தாயான்  சட்டமன்ற  உறுப்பினர்  சுவா …

ஹட்டா, மாட் சாபு ஆகியோருக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய ஹாடி…

பாஸ்  கட்சித்  தலைவர்  அப்துல்  ஹாடி  ஆவாங்கின் ஆதரவாளர்கள்  கட்சியின்  மத்திய  குழு(சிசி)க்  கூட்டத்துக்கு  முன்னதாக  பாஸ்  தலைமையகக் கட்டிடத்துக்குமுன்  ஒன்று  திரண்டனர். சுமார்  80  பேரடங்கிய அக்கூட்டம், தலைவருக்கு  ஆதரவு  தெரிவிக்கவும்  தலைவரைக்  கவிழ்க்க  முனைவோருக்கு  எதிர்ப்புத்  தெரிவிக்கவும்  கூடியிருப்பதாகக்  கூறிக்கொண்டது. ஹாடிக்கு  எதிராகக்  காய்  நகர்த்துவோரில் …

நெகிரியின்‘மணமுறிவுக்குப் பின்னரே மதமாற்றம்’ திட்டத்துக்கு அபிம் எதிர்ப்பு

முஸ்லிமாக  மாதம்  மாற  விரும்பும்  ஒருவர்  முதலில் முஸ்லிம்-அல்லாத  வாழ்க்கைத்  துணையை  விவாக ரத்து  செய்வதைச்  சட்டவிதியாக்கும்  நெகிரி  செம்பிலான் திட்டத்துக்கு  அங்காத்தான்  பீலீயா  இஸ்லாம்  மலேசியா  எதிர்ப்புத்  தெரிவிக்கிறது. “அபிம்  அப்பரிந்துரையை  எதிர்க்கிறது. அதற்குப்  பதிலாக,  முஸ்லிம்-அல்லாத  தம்பதிகளின் வழக்கு  விசாரணைக்கு ஷியாரியா  நீதிமன்றங்கள்  கதவுகளைத்  திறக்க …

ஹாடி: நான் ஒன்றும் பள்ளி மாணவன் அல்ல, கட்டாயப்படுத்த

நான்கு  மாதங்களாக  நடக்காத  பக்கத்தான்  ரக்யாட்  தலைமைத்துவ  மன்றக்  கூட்டத்தை  நாளை  நடத்தத்  திட்டமிடப்பட்டுளது. ஆனால்  கூட்டத்துக்கு  வருவாரா,  மாட்டாரா  என்பதை. பாஸ்  தலைவர்  அப்துல்  ஹாடி   ஆவாங்  இன்னமும்  உறுதிப்படுத்தவில்லை. தாம்  பள்ளி மாணவன்  அல்ல  என்றும்  கூட்டத்தில்  கலந்துகொள்ளுமாறு  யாரும்  தம்மைக்  கட்டாயப்படுத்த  முடியாது  என்றும் …

இஸ்மாயில்: புறக்கணிப்புச் செய்தியைத் திரித்துக் கூறிவிட்டார்கள்

பொருள்களின்  விலை  உயர்வு  தொடர்பில்  சீனர்களின்  கடைகளைப்  புறக்கணிக்க  வேண்டும்  என்று  கூறிச்  சர்ச்சையை  உண்டுபண்ணிய  விவசாயம்,  விவசாயம்  சார்ந்த  தொழில்  அமைச்சர்  இஸ்மாயில் சப்ரி யாக்கூப்  இன்னமும்  தாம்  அப்படிச்  சொல்லவில்லை  என்றுதான்  சாதிக்கிறார். அவர்  சொன்னதைத்  திரித்துக்  கூறிவிட்டார்களாம். நேற்று  ஒரு  கருத்தரங்கில்  பேசிய  இஸ்மாயில், …

நெகிரி செம்பிலான் செய்வதை மற்ற மாநிலங்களும் செய்யுமா?

நெகிரி  செம்பிலான்  இஸ்லாமிய  விவகார   மன்றம்  மதமாற்றத்தால்  ஏற்படும்  பிரச்னைகளைத்  தீர்ப்பதற்குப் புதிய  சட்டம்  கொண்டுவருவதை  அனைத்துக்  கட்சிகளும்  வரவேற்றிருக்கின்றன. டிஏபியும் கெராக்கானும்,  மதம்  மாற  நினைக்கும்  முஸ்லிம்-அல்லாத  தம்பதிகள்  முதலில்  மணமுறிவு  செய்துகொள்ள  வேண்டும்  என்னும்  அச் சட்டத்தை  மற்ற  மாநிலங்களிலும்  நடைமுறைப்படுத்த  வேண்டும்  என்று  கேட்டுக் …

நெகிரி செம்பிலானில் இனி, முதலில் மணமுறிவு பிறகுதான் மத மாற்றம்

இனி  வரும் காலங்களில்  நெகிரி  செம்பிலானில்  மதம்  மாற  நினைக்கும்  முஸ்லிம்-அல்லாத  தம்பதிகள்  முதலில்  மணமுறிவு  செய்துகொள்ள  வேண்டும். அதை  அடுத்து, எதிர்காலத்தில்  சட்ட  பிரச்னைகளைத்  தவிர்க்க, மதம்  மாறியவர்  தம் மதமாற்றத்தின்மீது  சத்திய பிரமாணம்  ஒன்றையும்  செய்திட  வேண்டும். இப்புதிய  சட்டம் 2003 (நெகிரி  செம்பிலான்)  இஸ்லாமிய …

ஜொகோவி நிகழ்வில் செய்தி சேகரிக்க மலேசியாகினிக்குத் தடை

மலேசியாகினி  அதிகாரப்பூர்வமான  நுழைவு  அனுமதியை  வைத்திருந்தபோதிலும், புத்ரா  ஜெயா, பிரதமர்  அலுவலகத்தில்(பிஎம்ஓ)  இந்தோனேசிய  அதிபர்  ஜோகோ  விடோடோ  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கைச்  சந்திக்கும்  நிகழ்வுக்குச்  சென்று  செய்தி  சேகரிக்க  அனுமதி  மறுக்கப்பட்டது. மலேசியாகினிக்கு அதிகாரப்பூர்வ  அனுமதி  வழங்கப்பட்டிருந்தாலும்  பிஎம்ஓ  செல்ல  அனுமதிக்க  முடியாது  என்று  பாதுகாப்பு  அதிகாரிகள்…

அஸ்மின் ஹுடுட் சட்டவரைவு மீது கருத்துரைக்க மறுப்பு

பிகேஆர்  துணைத்  தலைவர்   முகம்மட்  அஸ்மின்  அலி, ஹுடுட்  சட்டவரைவு  தாக்கல்  செய்யப்படுவரை  அதன்  உள்ளடக்கம்  பற்றித்  தகவல்  தெரிவிப்பதில்லை  என்ற  பாஸின்  முடிவு  குறித்து கருத்துரைக்க  மறுத்தார். அச்சட்டவரைவு   குறித்து  ஞாயிற்றுக்கிழமை  பக்கத்தான்  ரக்யாட்  தலைமைத்துவ  மன்றத்தில்   பாஸ்  விளக்கமளிப்பதற்காக  அவர்  காத்திருக்கிறார். “இப்போதைக்கு  அது  பற்றி …

எம்பி: சாபா செல்லத் தடை, அரசியல் நோக்கம் கொண்டது

சாபாவுக்குள் நுழைய  தமக்குத்  தடை விதிக்கப்பட்டது பற்றிக்  குறிப்பிட்ட  டிஏபி  உதவித்  தலைவர்   தெரேசா  கொக், அது  குடிநுழைவுத்துறை  அதிகாரம் தவறாகப்  பயன்படுத்தப்பட்டிருப்பதற்கு ஓர்  எடுத்துக்காட்டு  என்றார். சாபா  அரசுக்கு  அம்மாநிலத்துக்குள்  வருவோரைத்  தடுக்கும்  அதிகாரம்  உண்டு  என்றாலும்,  அதைத் தகுந்த  காரணமின்றிப்  பயன்படுத்தக்  கூடாது  என்பது அவருடைய …

அன்வார்: நான் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஆட்டம் தொடரத்தான் வேண்டும்

பக்கத்தான்  ரக்யாட்  தலைவர்  அன்வார்  இப்ராகிம்,  அடுத்த  செவ்வாய்க்கிழமை  தம்  வழக்கில்  தீர்ப்பு எப்படி  வேண்டுமானாலும்  அமையலாம் ஆனாலும்,  தாம்  இருந்தாலும்  இல்லாவிட்டாலும்  ஆட்டம்  தொடர  வேண்டும்  என்பதைத் தம்  ஆதரவாளர்கள்  உணர  வேண்டும்  என  அழுத்தம்  திருத்தமாக வலியுறுத்தியுள்ளார். இன்று  செய்தியாளர்  கூட்டமொன்றில்( கூட்டரசு  நீதிமன்றத்  தீர்ப்புக்குமுன் …

ஹிசாமுடின்: எம்சிஎ, மஇகா இஸ்மாயிலை பதவி விலகச் சொல்லவில்லையே!

  சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில் அமைச்சர் இஸ்மாயில் சாப்ரியின் அறிக்கையை மீட்டுக்கொள்ளுமாறு அமைச்சரவை அவரை கேட்டுக்கொள்ளவில்லை என்கிறார் தற்காப்பு அமைச்சர் ஹிசாமுடின் ஹுசேன். அமைச்சரவை கூட்டத்தில் கலந்து கொண்ட மசீச மற்றும் மஇகா அமைச்சர்கள் இஸ்மாயில் பதவி விலக வேண்டும் என்று கூட கேட்கவில்லை…

இஸ்மாயிலுக்கு வேலை அதிகம், அதனால் வாக்குமூலம் இன்னும் பதிவு செய்யவில்லை

முகநூலில்  பதிவிட்டுச்  சர்ச்சையை  உண்டுபண்ணிய   விவசாயம், விவசாயம்  சார்ந்த  தொழில் அமைச்சர்  இஸ்மாயில்  சப்ரி  யாக்கூப்பிடம்  போலீசார்  இன்னும்  வாக்குமூலம்  பதிவு  செய்யவில்லை. அமைச்சருக்கு  வேலை  மிகுதியாக  இருப்பதே  காரணம்  எனப்  போலீஸ்  பேச்சாளர்  ஒருவர்  தெரிவித்தார். இயன்ற  விரைவில்  அது  பதிவு  செய்யப்படும்  என்றாரவர். நேற்று  அவரிடம் …

வெள்ளிக்கிழமை தொழுகையுரை பற்றிக் கருத்துரைத்த பால்சன்மீது தேச நிந்தனைக் குற்றச்சாட்டு

டிவிட்டரில்  முஸ்லிம்களை  அவமதித்து  பதிவிட்டதற்காக  உரிமைகளுக்காக  போராடும்  வழக்குரைஞர் அமைப்பின்  செயல்முறை  இயக்குனர்  எரிக்  பால்சன்,   இன்று  நீதிமன்றத்தில்  நிறுத்தப்பட்டு தேச  நிந்தனைக்  குற்றம் சாட்டப்பட்டார். பால்சன், அக்குற்றச்சாட்டை  மறுத்து  விசாரணை  கோரியுள்ளார். இஸ்லாமிய  மேம்பாட்டுத்  துறை (ஜாக்கிம்), “வெள்ளிக்கிழமை  தோறும்  தீவிரவாதத்தை”  ஊக்குவிக்கிறது  என  ஜனவரி 10-இல் …

விலைவாசி உயர்வுக்கு புத்ரா ஜெயாவே காரணம், சீனர்கள் அல்லர்

விலைகளைக்  கட்டுப்படுத்தும்  அதிகாரம்  கூட்டரசு  அரசாங்கத்திடம்  இருக்கும்போது  மத்திய  அமைச்சர்  இஸ்மாயில்  சப்ரி  யாக்கூப்  சீனர்  கடைகளைப்  புறக்கணிக்குமாறு  மலாய்க்காரர்களை  வலியுறுத்துவது  “அறிவீனம், மடத்தனம்” எனச்  சாடியுள்ளார்  பினாங்கு  ஆட்சிக்குழு  உறுப்பினர்  அரிப்  பஹார்டின். சம்பந்தப்பட்ட  அமைச்சுகள்  விலைகளை  எளிதாகக்  குறைக்க  முடியும்  என்கிறபோது  சீன  வியாபாரிகள்மீது  பழிபோடுவது …

மகாதிர்: 1எம்டிபி-யைக் குறைகூறுவோர்மீது பாயும் வலைப்பதிவர்கள்

1எம்டிபி நிறுவனத்தின்மீது  அடுக்கப்படும்  கேள்விகளுக்கு  அரசாங்கம்  பதிலளிக்க  முடியாமல் இருப்பதைக்  குறைகூறினால்  குறை சொல்பவர்களைத்  தாக்குவதற்கெனவே  புதிதாக  வலைப்பதிவர்கள்  புறப்பட்டிருப்பதாக  நினைக்கிறார் முன்னாள்   பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகம்மட். அரசியல்  நோக்கம்  கொண்ட  இப்படிப்பட்ட  வலைப்பதிவர்கள்  தம்மையும்  இன்னும்  பலரையும்  தீயவர்களாகச்  சித்திரித்துக்  காட்ட முனைகிறார்கள்  எனத் தம்முடைய …

பிரதமர் அலுவலகம்: சாப்ரி சீன வணிகர்களை குறிவைக்கவில்லை

  விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில் அமைச்சர் இஸ்மாயில் சாப்ரி அவரது முகநூலில் பதிவு செய்திருந்ததாக கூறப்படுவதற்கு முற்றிலும் எதிர்மாராக அந்த அமைச்சர் சீன வணிகர்களை மட்டும் குறிவைக்கவில்லை என்று பிரதமர் அலுவலகம் கூறுகிறது. இன்றைய அமைச்சரவை கூட்டத்திற்கு பின்னர் வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில் அமைச்சர் சாப்ரி…

பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ள இருவரை போலீஸ் பாதுகாக்காது

கல்லூரி  மாணவி  ஒருவரைப்  பாலியல்  வல்லுறவுக்கு  உட்படுத்தியதாகவும்  மிரட்டிப்  பணம்  பறித்ததாகவும்  குற்றம்  சாட்டப்பட்டுள்ள  இரு  போலீஸ்காரர்களை  போலீஸ்  பாதுகாக்க  முனையாது  எனப்  போலீஸ்  படைத்  தலைவர்  காலிட்  அபு  பக்கார்  கூறினார். “அவர்களுக்கு  எதிராக  ஆதாரங்களைத்  திரட்டுவோம். திரட்டியதும்  வழக்கு  தொடுப்பது  பற்றிச்   சட்டத்துறை  தலைவரைக்  கலந்து …

பக்கத்தான் கூட்டத்துக்கு ஹாடி, குவான் எங் ஆகியோரும் செல்வர்

நான்கு  மாதங்களுக்குப்  பிறகு  வரும்  ஞாயிற்றுக்கிழமை நடைபெறும்  பக்கத்தான்  ரக்யாட்  தலைமைத்துவ  மன்றத்தின்  முதலாவது  கூட்டத்தில் பாஸ்  தலைவர்  அப்துல்  ஹாடி  ஆவாங், டிஏபி  தலைமைச்  செயலாளர்  லிம்  குவான்  எங்  ஆகியோரும்  கலந்து  கொள்வார்கள். நேற்றிரவு,  திரெங்கானு, கெமாமானில்  ஒரு  செராமாவில்  கல்ந்துகொண்ட  பிகேஆர்  நடப்பில்  தலைவர் …

இஸ்மாயிலைப் பலர் ஆதரிக்கலாம், மகாதிர் ஆதரிக்கவில்லை

சீனர்களின்  கடைகளைப்  புறக்கணிக்க  அமைச்சர் இஸ்மாயில்  சப்ரி  விடுத்த  அறைகூவலை  அம்னோவைச்  சேர்ந்தவர்கள்  ஆதரிக்கலாம். ஆனால்  டாக்டர்  மகாதிர்  முகம்மட்டுக்கு  அதில்  உடன்பாடு இல்லை. கெப்போங்கில்  செய்தியாளர்களிடம்  பேசிய  மகாதிர், விலைவாசி  உயர்வுக்கும்  இனத்துக்கும்  தொடர்பில்லை  என்று  குறிப்பிட்டு,  இஸ்மாயில்  சப்ரி  உண்மையான  காரணத்தைக்  கண்டறிய  வேண்டும் என்றார்.…

‘இனவாத’ அமைச்சரை விலக்குவீர்: பிரதமருக்குக் கோரிக்கை

பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்,  விவசாயம், விவசாயம்  சார்ந்த தொழில்  அமைச்சரைப்   அமைச்சரவையிலிருந்து  வெளியேற்ற  வேண்டும். “நாட்டிலிருந்து  இனவாதத்தை  விரட்ட  நினைத்தால்  இஸ்மாயில் சப்ரியை  அமைச்சரவையிலிருந்து  நீக்க  வேண்டும்”, என  டிஏபி  இடைக்காலத்  தலைவர்  டான்  கொக்  வாய்  கூறினார். இஸ்மாயில்  சப்ரி  யாக்கூப்,   விலைகளைக்  குறைக்க  மறுக்கும் …

மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமில்லை என்கிறார் சப்ரி

விலைகளைக்  குறைக்க  மறுக்கும்  சீனர்களின்  கடைகளைப்  புறக்கணிக்க  வேண்டும்  என்ற  முகநூல்  பதிவுக்காக  தாம்  மன்னிப்பு  கேட்க  வேண்டிய “அவசியமில்லை”  என்று விவசாயம், விவசாயம்  சார்ந்த  தொழில்  அமைச்சர்  இஸ்மாயில்  சப்ரி  யாக்கூப்  இன்று  கூறினார். இதேபோன்ற  நடவடிக்கையைப்  பொருள்களின்  விலைகளைக்  குறைக்காத  மலாய்,  இந்திய   வர்த்தகர்களுக்கு  எதிராகவும் …