நெகிரி செம்பிலான், செரம்பானில் 6ஆம் வகுப்பு மாணவர்களைக் குண்டர் குழுக்களில் சேர்ப்பதற்காக ஆள் சேர்த்ததாகக் கூறப்படும் 20 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். செவ்வாய்க்கிழமை இரவு சுமார் 9.10 மணியளவில் கார்டன் ஹோம்ஸில் உள்ள ஒரு உணவகத்தின் முன்பாக சந்தேக நபர் தடுத்து வைக்கப்பட்டதாக செரம்பான் காவல்…
விமான விபத்தில் உயிரிழந்த குடிமக்களுக்கு மலேசியா மவுன அஞ்சலி
ஜூலை மாதம் கிழக்கு உக்ரேய்னில் நிகழ்ந்த எம்எச்17 விமான விபத்தில் பலியான 43 மலேசியர்களில் 20 பேரின் சடலங்கள் மலேசியாவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ள வேளையில் அவர்களுக்கு நாடே ஒன்றுதிரண்டு அஞ்சலி செலுத்தியது. மலேசியா வந்துசேர்ந்த சடலங்களுக்கு கேஎல்ஐஏ பூங்கா ராயா வளாகத்தில் ராணுவ முறைப்படி வரவேற்பளிக்கப்பட்டது. அந்நிகழ்வில் பேரரசர் துவாங்கு …
சமயத்தைக் காட்டி பெண்கள் தலைவராவதைத் தடுக்காதீர்
பிகேஆர் உதவித் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நுருல் இஸ்ஸா அன்வார், அரசியலில் மகளிர் மறுமலர்ச்சி தேவை என்று கூறியுள்ளார். “பெண்கள் தலைவர்கள் ஆவது அந்நியமானது, கூடாத செயல் என்று நினைப்போர் இருக்கத்தான் செய்கிறார்கள். “அதைவிட மோசமாக சிலர், சமய வாதங்களை முன்னிறுத்தி பெண்கள் தலைவர்களாவதைத் தடுக்க முனைகிறார்கள்” என…
டாக்டர் மகாதிர்- நஜிப் சர்ச்சையில் குதிக்க கேஜே மறுப்பு
இளைஞர், விளையாட்டுத்துறை அமைச்சர் கைரி ஜமாலுடின், முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் தொடங்கியுள்ள அரசாங்கத்தைக் குறைகூறும் படலம் குறித்து கருத்துரைக்க விரும்பவில்லை. “நான் எதுவும் சொல்லாதிருப்பதே நல்லது. நான் சொல்வதை மகாதிர் தப்பாக புரிந்துகொள்ளக் கூடும். “ஏனென்றால், முன்னாளிலிருந்தே நான்தான் மகாதிரின் முதல் ‘நம்பர்’ பொது எதிரியாக …
எம்எச்17 விமான விபத்தில் பலியானவர்களுக்கு துக்கம் அனுசரிக்கப்படுகிறது
கிழக்கு உக்ரேய்னில் நிகழந்த எம்எச்17 விமான விபத்தில் பலியான 20 மலேசியர்களின் சடலங்கள் இன்று நாட்டிற்கு கொண்டுவரப்படுகிறது. இத்துயரச் சம்பவத்திற்கு இன்று நாடு தழுவிய அளவில் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. தனிப்பட்ட விமானத்தில் பலியான 20 மலேசியர்களின் சடலங்கள் இன்று காலை மணி 9.45 மணி அளவில் அம்ஸ்டர்டமிலிருந்து…
எம்பி-இன் உதவியாளர் கூறியதை எம்பி-இன் வழக்குரைஞர் மறுக்கிறார்
சிலாங்கூர் மந்திரி புசார் அப்துல் காலிட் இப்ராகிமுக்கு பேங்க் இஸ்லாத்தில் இருந்த கடனை மத்திய கிழக்கு வங்கி ஒன்று தீர்த்து வைத்ததாக காலிட்டின் சிறப்பு அதிகாரி அஸ்ருல் அஸ்வார் அஹமட் தாஜுடின் கூறியிருப்பதை அவரின் வழக்குரைஞர் மறுக்கிறார். “எந்த மத்திய கிழக்கு வங்கியும் காலிட்டின் கடனைச் செலுத்தவில்லை என …
குலா: நாங்கள் குரைக்கும் நாய்களா?
-மு.குலசேகரன், நாடாளுமன்ற உறுப்பினர், ஆகஸ்ட் 21, 2014. எதிர்க்கட்சிக்கும் ஆளும் கட்சிக்கும் வித்தியாசம் தெரியாமல் உளருகிறார் டாக்டர் எஸ். சுப்ரமணிய்ம்! மஇகாதான் இந்தியர்களின் பிரதிநிதி என்று எதிர்க்கட்சிகள் ஏற்றுக்கொள்கிறார்கள் என்று டாக்டர் எஸ்.சுப்ரமணியம் 68 ஆவது மஇகா கூட்டரசு பிரதேச மாநாட்டில் தலைமையுரை ஆற்றும்போது கூறியிருந்தார். இப்பொழுது எதிர்க்கட்சியில்…
போலீஸ்:கார்ல்ஸ்பெர்க் ஆலையை வெடிவைத்து தகர்க்கத் தீவிரவாதிகள் திட்டம்
தீவிரவாதிகள் என்று சந்தேகிக்கப்படும் ஒரு கூட்டத்தினர் கோலாலும்பூருக்கு அருகில் உள்ள கார்ல்ஸ்பெர்க் பீர் ஆலையைத் தகர்க்கும் நோக்கத்துடன் குண்டு தயாரிப்புக்குத் தேவையான பொருள்களை வாங்கி வைத்திருந்ததாக போலீஸ் பயங்கரவாத-எதிர்ப்புப் பிரிவு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சீரியாவிலும் ஈராக்கிலும் இஸ்லாமிய அரசின் எழுச்சியால் ஊக்கம்பெற்ற தென்கிழக்காசிய தீவிரவாதிகள், உள்நாட்டில் ஒரு …
தேவாலயம்‘அல்லா’ தீர்ப்பு மீது மேல்முறையீடு செய்யும்
கத்தோலிக்க திருச்சபை பேராயர், சாபா, சரவாக்கில் விற்பனை செய்யப்படும் த ஹெரால்ட் பகாசா மலேசியா பதிப்பில் ‘அல்லா’ என்னும் சொல்லைப் பயன்படுத்தப்படுவதைத் தடை செய்யும் கூட்டரசு நீதிமன்றத் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக் கோரி மனு செய்துகொள்வார். அதற்கான ஆவணங்கள் தயாரானவுடன் மறுபரிசீலனை கோரி மனு தாக்கல் செய்யப்படும் என …
மகாதிர் கடிதம் அனுப்பியதை அம்னோ மறுக்கிறது
டாக்டர் மகாதிர் முகம்மட், பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்மீது பகிரங்கமாக தாக்குதல் தொடுப்பதற்குமுன் அவருக்குக் கைப்பட கடிதம் எழுதியிருந்தார் என்று கூறப்படுவதை அம்னோ மறுத்துள்ளது. அம்னோ தலைமைச் செயலாளர் தெங்கு அட்னான் தெங்கு மன்சூர், மலேசியாகினிக்கு அனுப்பிய குறுஞ்செய்தியில், “அப்படி எதுவும் இல்லை” என்று கூறியிருந்தார். ஆசியா செண்டினல் …
பாஸ்: சுல்தானிடம் அஸ்மின் பெயரைக் குறிப்பிடவில்லை
ஜூலை 31-இல், பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங் சிலாங்கூர் சுல்தான் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷாவைச் சந்தித்துப் பேசியது உண்மை ஆனால். அச்சந்திப்பில் அஸ்மின் மந்திரி புசாராவது பற்றிப் பேசப்படவில்லை என்கிறது பாஸ். “அஸ்மினின் பெயரே குறிப்பிடப்படவில்லை”, என்று சிலாங்கூரில் இஸ்லாமிய விவகாரங்களுக்குப் பொறுப்பாகவுள்ள ஆட்சிக்குழு உறுப்பினர் …
எம்பி பதவி பாஸ் கட்சிக்குக் கிடைக்க நல்ல வாய்ப்புள்ளது
பாஸ் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் சிலாங்கூர் மந்திரி புசாராகும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாம். சினார் ஹரியான் நாளிதழ் கூறுகிறது. சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா பிகேஆர் தலைவர் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயிலை அல்லது வேறு எந்த பிகேஆர் வேட்பாளரையும் நிராகரிக்கும் பட்சத்தில் இது நிகழலாம். பக்கத்தான் …
அசிசா-ஆதரவு அல்ல, காலிட்-எதிர்ப்பே நோக்கம் :பாஸ் பிரதிநிதி
கடந்த வாரம், பிகேஆர் தலைவர் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயிலின் செய்தியாளர் கூட்டத்துக்குச் சென்றது பற்றி விளக்கமளித்த பாஸ் சட்டமன்ற உறுப்பினர் சாஆரி சுங்கிப், தான் சென்றது அசிசாவுக்கு ஆதரவு தெரிவிக்க அல்ல என்றும் காலிட்டை நிராகரிக்கவே என்றும் கூறினார். “தமக்குப் பெரும்பான்மை (சட்டமன்ற உறுப்பினர்) ஆதரவு …
இட்ரிஸ் ஜாலா எம்ஏஎஸ்-ஸுக்குத் திரும்பிச் செல்ல மாட்டார்
பிரதமர்துறை அமைச்சர் இட்ரிஸ் ஜாலா, தத்தளித்துக் கொண்டிருக்கும் மலேசிய விமான நிறுவனத்தை இழுத்துப் பிடித்து நிறுத்த தாம் மீண்டும் அங்கு திரும்பிச் செல்லப்போவதாகக் கூறப்படுவதை மறுத்துள்ளார். “நான் எம்ஏஎஸ்-ஸுக்குத் திரும்பப் போவதாக இணையத்தில் ஊகங்கள் தெரிவிக்கப்பட்டிருப்பதைப் பார்த்தேன். நான் அங்கு செல்லப்போவதில்லை. இங்குதான் இருக்கப் போகிறேன்”, என்று பெமாண்டு …
ஷரிசாட்: மகாதிரைப் போற்றுகிறோம், ஆனால் நஜிப்தான் எங்கள் தலைவர்
முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட், பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கைக் கடுமையாக விமர்சித்து வரும் வேளையில் அம்னோ மகளிர் நஜிப்புக்குப் பிளவுபடாத ஆதரவைத் தெரிவித்துக் கொண்டது. அம்னோ மகளிர் தலைவர் ஷரிசாட் அப்துல் ஜலில், இன்று ஓர் அறிக்கையில், எவ்வளவோ பங்களிப்புச் செய்துள்ள மகாதிரைப் போற்றிப் பாராட்டினாலும்…
சுல்தான் முன்கூட்டியே நாடு திரும்புகிறார்
சிலாங்கூர் சுல்தான், புடாபெஸ்டிலிருந்து திட்டமிட்ட காலத்துக்கு முன்னதாகவே நாடு திரும்புவார். சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா சனிக்கிழமை திரும்பி வருவார் என மாநில அரசு வட்டாரங்கள் மலேசியாகினியிடம் தெரிவித்தன. இதற்குமுன் அவர் ஆகஸ்ட் 27-இல் நாடு திரும்புவார் எனக் கூறப்பட்டிருந்தது. மாநிலத்தில் நிலவும் குழப்பத்தை சுல்தான் வந்துதான் தீர்த்து …
பாஸ் தலைவர்: சட்டமன்றத்தைக் கலைப்பது ‘சுத்த மடத்தனம்’
சிலாங்கூர் சட்டமன்றத்தைக் கலைக்க வேண்டும் என்பது “பொறுப்பற்ற பேச்சு, “மடத்தனமான பேச்சு” என பாஸ் மத்திய குழு உறுப்பினர் முகம்மட் ஹனிபா மைடின் கூறினார். காஜாங் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் பெரும்பான்மை ஆதரவைப் பெற்றிருப்பதால் அது தேவையற்றது. ஆகஸ்ட் 14-இல், பாஸ் சட்டமன்ற …
காலிட்-குறைகூறலை நிறுத்துங்கள்: பாஸ் தலைவர் கோரிக்கை
சிலாங்கூர் மந்திரி புசார் அப்துல் காலிட் இப்ராகிமை வெளிப்படையாகக் குறைகூறுவதை அனைவரும் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று சிலாங்கூர் பாஸ் துணை ஆணையர் சித்தி மரியா மஹ்மூட் கேட்டுக்கொண்டிருக்கிறார். சிலாங்கூருக்கு காலிட்டின் பங்களிப்பை மறக்கலாகாது என பாஸ் மத்திய குழு உறுப்பினருமான அவர் குறிப்பிட்டார். “சிலாங்கூர் சட்டமன்றத்தில் பக்கத்தான் …
எம்பி-க்கு ஆதரவாக என்ஜிஓ-கள் அணி திரள்கின்றன
சிலாங்கூர் மக்களைப் பிரதிநிதிக்கும் 12 என்ஜிஓ-களின் கூட்டணி, மந்திரி புசார் அப்துல் காலிட் இப்ராகிம் அவரது தவணைக்காலம் முடியும்வரை பதவியில் இருக்க அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தும் இயக்கமொன்றைத் தொடக்கியுள்ளது. அச்செய்தி அமைதியான முறையில் தெருவிலிருந்து அரண்மனை வரை கொண்டு செல்லப்படும் என அதன் தலைவர்கள் தெரிவித்தனர். அவர்கள் …
விளக்கம்பெற பிகேஆரை அழைத்தது ஆர்ஓஎஸ்
சங்கங்களின் பதிவகம் (ஆர்ஓஎஸ்), சிலாங்கூர் மந்திரி புசார் அப்துல் காலிட் இப்ராகிம் கட்சிநீக்கம் செய்யப்பட்டது பற்றி விளக்கம் கேட்க பிகேஆரைக் கூப்பிட்டிருப்பதாக தெரிகிறது. ஆர்ஓஎஸ்ஸிடமிருந்து கடிதம் வந்திருப்பதை பிகேஆர் ஒழுங்கு வாரியத் தலைவர் டான் கீ குவோங் உறுதிப்படுத்தினார். ஆனால், அதில் காலிட் கட்சிநீக்கம் செய்யப்பட்டது பற்றிக் குறிப்பிடப்படவில்லை …
தேச நிந்தனைக் குற்றச்சாட்டு தவறான முன்மாதிரி
தேச நிந்தனைச் சட்டத்தின்கீழ் என்.சுரேந்திரன்மீது குற்றம் சாட்டப்பட்டிருப்பதன்வழி ஒரு அநியாயமான முன்மாதிரி ஏற்படுத்தப்பட்டுள்ளது என சுதந்திரத்துக்கான வழக்குரைஞர் அமைப்பு எச்சரித்துள்ளது. இது, வழக்குரைஞர்கள், சட்டக் கருத்துகள் தெரிவிக்கும்போது அந்தக் கருத்துகள் அரசாங்கத்தின் அரசியல் நிலைப்பாட்டுக்கு முரணாக அமைந்திருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க இடமளித்து விடும்.…
எம்பி: எம்ஆர்டி வேலைகளைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பீர்
எம்ஆர்டி திட்டம் மொத்தத்தையும், அதன் பாதுகாப்புமீதான ஆய்வு நடத்தி முடிக்கப்படும்வரை, நிறுத்தி வைக்க வேண்டும் என சுபாங் எம்பி சிவராசா கோரிக்கை விடுத்துள்ளார். நேற்றிரவு மூன்று தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம், கடந்த இரண்டு மாதங்களில் நிகழ்ந்துள்ள எம்ஆர்டி சம்பந்தப்பட்ட இரண்டாவது அசம்பாவிதமாகும். “எம்ஆர்டி வேலை நடக்கும் இடங்கள் ஊடே …
ஹிஷாம்: ஒபாமாவும் புடினும் செய்ய முடியாததை நஜிப் செய்தார்
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கைத் தற்காத்துப் பேசியுள்ள தற்காப்பு அமைச்சர் ஹிஷாமுடின் உசேன், அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினும் செய்ய முடியாததை நஜிப் செய்திருக்கிறார் என்றார். எம்எச் 17 விமானம் விழுந்து நொறுங்கிய சம்பவத்தை நஜிப் கையாண்ட விதமும், இறந்துபோனவர்களின் சடலங்களை நாட்டுக்குத்…
எம்ஆர்டி விபத்தை அடுத்து சிஇஓ பதவி விலகினார்
நேற்றிரவு எம்ஆர்டி கட்டுமான வேலை நடக்கும் இடமொன்றில் நிகழ்ந்த விபத்தில் மூவர் கொல்லப்பட்டதை அடுத்து எம்ஆர்டி கார்ப்பரேசன் தலைமை செயல் அதிகாரி அஸ்ஹார் அப்துல் ஹமிட், பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். இன்று சுங்கை பூலோவில் செய்தியாளர் கூட்டமொன்றில் அவர் இதனை அறிவித்தார். எம்ஆர்டி டமன்சாரா நிலையம் கட்டப்படும் இடத்தில்…


