ஆண்டவன் மீது ஆணையாக, தேச நிந்தனை விசாரணை தொடரும், ஸாகிட்

போலீசில் புகார் செய்த 24 மணி நேரத்திற்குள் போலீஸ் விசாரனை தொடங்கும் என்று உள்துறை அமைச்சர் அஹமட் ஸாகிட் ஹமிட் ஆண்டவன் மீது ஆணையாக உறுதியளித்தார். தேச நிந்தனைச் சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் அதிரடி நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வரும் வேளையில் இந்த…

அஸ்மின் மந்திரி புசார் நியமனக் கடிதம் பெற்றார்

சிலாங்கூர் மாநிலத்தின் அடுத்த மந்திரி புசாராக பிகேஆரின் துணைத் தலைவர் அஸ்மின் நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கான நியமனக் கடிதத்தை அவர் சிலாங்கூர் அரண்மனையிலிருந்து பெற்றுக் கொண்டார். இன்று மாலை அக்கடிதம் பெறப்பட்டது. சிலாங்கூர் மாநில புக்கிட் அந்தாரா சட்டமன்ற உறுப்பினரான அஸ்மின் அலி நாளை காலையில் பதவிப் பிரமாணம் எடுப்பார்…

அஸ்மின், நிக் நாஸ்மி அரண்மையில் இருந்தனர் என்பதை மறுக்கின்றனர்

  பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலி மற்றும் கட்சியின் இளைஞர் பிரிவு தலைவர் நிக் நாஸ்மி ஆகிய இருவரும் நாளை நடைபெறவிருக்கும் மந்திரி புசார் பதவி பிரமாண சடங்கின் ஒத்திகையில் பங்கேற்பதற்காக சிலாங்கூர் அரண்மையில் இருந்தனர் என்று கூறப்படுவதை மறுத்தனர். அவர் அரண்மனையில் இருந்ததாகக் காட்டும் ஒரு…

சுல்தானின் முடிவை ஏற்றுக் கொள்ளுங்கள், பிகேஆர் கெடா கூறுகிறது

  புதிய சிலாங்கூர் மந்திரி புசாருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்படுவதற்கு இன்னும் 24 மணிக்கும் குறைவான நேரமே இருக்கையில், அரண்மனையுடனான சண்டையை நிறுத்திக் கொள்ளுமாறு சில பிகேஆர் தலைவர்கள் கட்சியின் உயர்மட்ட தலைவர்களைக் கேட்டுக் கொண்டுள்ளனர். கெடா மாநில பிகேஆர் தொகுதி தலைவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளும் சுல்தான்…

மகாதீர்: அரண்மனை முடிவுக்கு தலையாட்டுங்கள்

  சிலாங்கூர் மந்திரி புசார் விவகாரத்தில் சம்பந்தப்பட்டுள்ள அனைத்து தரப்பினரும் சச்சரவை தவிர்க்கும் பொருட்டு சிலாங்கூர் சுல்தானின் முடிவை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று முன்னாள் பிரதமர் மகாதீர் கூறுகிறார். சுல்தானின் முடிவை எந்தத் தரப்பாவது எதிர்த்தால், அது நிச்சயமாக நீண்ட கால அரசியல் சச்சரவுக்கு வழிவகுக்கும் என்றார்.…

துணை மந்திரி புசார்: பாஸ்சுக்கு எதுவுமே தெரியாது!

  பாஸ் கட்சியின் உயர்மட்ட தலைவர் ஒருவர் சிலாங்கூர் துணை மந்திரி புசார் பதவியை ஏற்றுக்கொள்ளும் சாத்தியம் குறித்து விவாதித்ததே இல்லை என்று கூறுகிறார். சிலாங்கூர் பாஸ் தலைவர் இஸ்கந்தர் சாமாட் சிலாங்கூர் துணை மந்திரி புசாராக நியமிக்கப்படவிருக்கிறார் என்பது குறித்து அவரது கருத்தைக் கேட்ட போது  "இது…

அரசமைப்புச் சட்ட வல்லுனர் அப்துல் அசிஸ் பாரிக்கு எதிராக போலீஸ்…

  மலாக்கா, அலோர்காஜா மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் அரசமைப்புச் சட்ட வல்லுனர் அப்துல் அசிஸ் பாரி சமீபத்தில் எழுதியிருந்த "கட்டற்ற அதிகாரம் ஆண்டவனுக்கு மட்டுமே சுல்தானுக்கு அல்ல" என்ற கட்டுரை ஓர் ஓன்லைன் தளத்தில் வெளியிடப்பட்டிருந்ததற்கு எதிராக அவர் மீது போலீஸ் புகார் செய்யப்பட்டுள்ளது. மலாக்கா மற்றும் நெகிரி…

சிவராசா: அஸிசா எம்பி இல்லை என்றால், விளக்கம் அளிக்கப்பட வேண்டும்

  பிகேஆரின் தலைவர் டாக்டர் வான் அஸிசா சிலாங்கூர் மாநில எம்பி பதவிக்கான வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தின் 56 உறுப்பினர்களில் 30 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். பெரும்பான்மையான ஆதரவைப் பெற்றுள்ள வான் அஸிசா மந்திரி புசாராக நியமிக்கப்படவில்லை என்றால், "அதற்கான விளக்கம்" அளிக்கப்பட்டாக வேண்டும்…

அஸ்மின் அலி மந்திரி புசாராக நியமிக்கப்படலாம்

பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலி புதிய மந்திரி புசாராக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுவதாக ஒரு வட்டாரம் மலேசியாகினியிடம் கூறியது. பதவி சத்தியப் பிரமாணம் நாளை காலை மணி 10.00 க்கு கிள்ளான், இஸ்தானா அலம் ஷாவில் நடைபெறும். பதவி ஏற்ற பின்னர் அஸ்மின் ஒரு செய்தியாளர் கூட்டத்தை…

காலிட் மிகச் சிறந்த எம்பிகளில் ஒருவர், இஸ்கந்தர் கூறுகிரார்

  சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழுவின் பாஸ் உறுப்பினர் இஸ்கந்தர் அப்துல் சாமாட் மாநிலத்தின் மந்திரி புசார் பதவியிலிருந்து விலகப் போகும் காலிட் இப்ராகிம் இம்மாநிலத்தின் மிகச் சிறந்த மந்திரி புசார்களில் ஒருவர் என்று இன்று பாராட்டினார். இன்று சிலாங்கூர் மாநில அரசாங்க நிருவாக கட்டடத்திலிருந்து செய்தியாளர்களிடம் பேசிய இஸ்கந்தர்…

தமிழ், கணிதம் தேர்வுத் தாள்களும் கசிந்துள்ளன என புகார்

  இந்த ஆண்டின் யுபிஎஸ்ஆர் தேர்வுக்கான தமிழ் மற்றும் கணிதம் ஆகிய தேர்வுத் தாள்களும் கசிந்துள்ளன என்று புகார் செய்யப்பட்டுள்ளதாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் தஜுடின் முகமட் இசா கூறினார். இந்தப் புகாரை மலேசியன் எக்ஸாமினேசன் சிண்டிகேட் (எம்பிஎம்) இன்று காலை மணி 11.00 க்கு புத்ராஜெயாவில் செய்ததாக…

மலேசியாகினி இந்திராணி அனைத்துலக பிலிம் விருது பெற்றார்

  மலேசியாகினியின் முன்னாள் செய்தியாளர் இந்திராணி கோபால் தயாரித்த "The Game Changer" என்ற ஆவணப் படத்திற்கு சமீபத்தில் "சிறந்த சிறு ஆவணப் படம்" என்ற விருது நியுயோர்க், ஹேர்லெம் அனைத்துலக பிலிம் விழாவில் வழங்கப்பட்டது. இந்த விழா செப்டெம்பர் 10-14 வரையில் நடைபெற்றது. இந்திராணியின் படம் அடுத்த…

விட்டுக் கொடுப்பதற்கில்லை, அஸிசாதான் மந்திரி புசார் வேட்பாளர்

  சிலாங்கூர் மந்திரி புசார் நியமன விவகாரத்தில் எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம் ஒரு படி இறங்கி வந்துள்ளார் என்ற கூற்றை பிகேஆரின் தலைமைச் செயலாளர் சைபுடின் நசுதியான் நிராகரித்தர். மந்திரி புசார் வேட்பாளர் விவகாரத்தில் அன்வார் எந்த உடன்படிக்கையும் ஏற்றுக் கொள்ளவில்லை என்றார். மந்திரி புசார் வேட்பாளர்…

ஆட்சியாளரின் தேர்வு மீது கேள்வி எழுப்பினால் பிஎன் போராட்டத்தில் இறங்கும்

சிலாங்கூர் பிஎன் தொடர்புக்குழு தலைவர் நோ ஒமார் இன்று ஷா அலாம் செக்சன் 18 இல் மந்திரி புசார் தேவு சம்பந்தமான நெருக்கடியில் சுல்தானுக்கு ஆதரவு தெரிவிக்க குழுமிய கூட்டத்தினருடன் கலந்து கொண்டு பேசிய போது சுல்தானின் முடிவை அனைவரும் ஆதரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்ட அவர்,…

எம்பி வேட்பாளர் தேர்வு பேட்டிக்கு வான் அஸிசா அழைக்கப்படவில்லை

  சிலாங்கூர் மந்திரி புசாராக நியமிக்கப்படுவதற்கு ஒருவரை தேர்வு செய்வதற்காக சிலாங்கூர் அரண்மனை மூவரை பேட்டி கண்டுள்ளதாக கூறப்படுகிறது. அந்த மூவரில் பிகேஆர் தலைவர் டாக்டர் வான் அஸிசா வான் இஸ்மாயில் இடம்பெறவில்லை. பாஸ் கட்சியின் சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்கள் இஸ்கந்தர் சாமாட் மற்றும் டாக்டர் அஹமட்…

சுல்தானை சந்திக்க பிகேஆர் ஆர்வம்

  எதிர்வரும் செவ்வாய்க்கிழமை சிலாங்கூர் மாநில புதிய மந்திரி புசார் நியமனத்திற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் வேளையில், பிகேஆர் சுல்தானை சந்திக்க விரும்புகிறது. கட்சியின் தலைவர் வான் அஸிசா வான் இஸ்மாயில் தேர்வு செய்யப்படுவார் என்று இன்னும் நம்பிக்கையில் இருக்கும் பிகேஆர், அவருக்கு சிலாங்கூர் சட்டமன்றத்தில் இன்னும் பெரும்பான்மை…

ஆடாம் அட்லிக்கு 12 மாத சிறைத்தண்டனை

  முன்னாள் மாணவர் தலைவர் ஆடாம் அட்லி தேச நிந்தனை குற்றம் புரிந்துள்ளார் என்று தீர்மானித்த கோலாலம்பூர் செசன்ஸ் நீதிமன்றம் அவருக்கு 12 மாத கால சிறைத்தண்டனை விதித்தது. ஆடாம் அட்லியின் சாட்சியம் வெறும் மறுத்தல் மட்டுமே என்று அந்நீதிமன்றம் கூறிற்று. அரசு தரப்பு அதன் குற்றச்சாட்டை சந்தேகத்திற்கு…

“அல்லா” தீர்ப்பை மறு ஆய்வு செய்ய த ஹெரால்ட் மனு

  த ஹெராஸ்ட் அதன் வெளியீட்டில் "அல்லா" என்ற சொல்லை பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை அகற்ற பெடரல் உச்சநீதிமன்றத்திற்கு முறையீடு செய்ய அனுமதி கோரி அது செய்திருந்த மனுவை தள்ளுபடி செய்த பெடரல் உச்சநீதிமன்றத்தின் சர்ச்சைக்குள்ளான தீர்ப்பை அதே நீதிமன்றம் மறுஆய்வு செய்ய த ஹெரால்ட் இன்று ஒரு…

தேச நிந்தனைச் சட்டத்திற்கு எதிராக வழக்குரைஞர்கள் பேரணி

  தேச நிந்தனைச் சட்டத்தின் கீழ் திடீரென்று அதிகரித்து வரும் கைது நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக மலேசிய வழக்குரைஞர் மன்றம் அமைதியான ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு தீர்மானித்துள்ளது. இன்று விஸ்மா எம்சிஎயில் நடந்த அந்த அமைப்பின் சிறப்பு பொதுக்கூட்டத்தில் வழக்குரைஞர் நியு சின் இயு முன்மொழிந்தது 120 இதர வழக்குரைஞர்கள்…

புதிய தடையுத்தரவின் வழி ஐஜிபி நீதிமன்ற அவமதிப்பிலிருந்து தப்பித்தார்

  பாலர்பள்ளி ஆசிரியை இந்திரா காந்தியின் சமயங்களுக்கிடையிலான பராமரிப்பு வழக்கில் போலீஸ் படையின் தலைவர் (ஐஜிபி) காலிட் அபு பாக்கார் ஈப்போ உயர்நீதிமன்றத்தை அவமதித்தார் என்று குற்றம் சாட்டப்படும் சாத்தியத்திலிருந்து தப்பித்துக் கொள்வதற்கான வழியை சட்டத்துறைத் தலைவர் (ஏஜி) உருவாக்கியுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமையிலிருந்து ஏழு நாள்களுக்குள் கே. பத்மநாதன்…

அனைவரும் அரசமைப்புச் சட்டத்தை மதிக்க வேண்டும், செனட் தலைவர் கூறுகிறார்

  மக்களிடையே சச்சரவுகள் உருவாவதைத் தவிர்க்கும் பொருட்டு அரசியல் கட்சி தலைவர்களும் அவர்களின் ஆதரவாளர்களும் பெடரல் அரசமைப்புச் சட்டத்தை மதிக்க வேண்டும் என்று நினைவுறுத்தப்பட்டுள்ளனர். பெடரல் அரசமைப்புச் சட்டம் அமைதியும் மக்களின் நலன்களும் பாதுகாக்கப்படுவதை நோக்கமாக கொண்ட ஒரு புனிதமான கருவி. ஆகவே, அரசியல் கட்சித் தலைவர்கள் அரசமைப்புச்…

அடுத்த எம்பி அஸ்மின்?

  அடுத்த வாரம், பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலி சிலாங்கூர் மாநிலத்தின் புதிய மந்திரி புசாராக நியமிக்கப்படலாம் என்ற ஆருடம் வலுவடைந்து வருகிறது. அரண்மனைக்கு நெருக்கமான ஒரு மூத்த அரசியல் பார்வையாளர் அஸ்மின் அந்த வேலைக்கு மிகத் தகுதியானவர் என்று ஒப்புக் கொண்டார். "ஒன்று மட்டும் நிச்சயம்,…

அடுத்த செவ்வாய்க்கிழமை புதிய மந்திரி புசார் பதவிப் பிரமாணம் செய்யப்பட…

  சிலாங்கூர் மாநில புதிய மந்திரி புசார் அடுத்த செவ்வாய்க்கிழமை பதவிப் பிரமாணம் செய்யப்பட விருக்கிறார். ஆனால் வேட்பாளர் பற்றிய விபரம் எதுவும் தெரியவில்லை. மலேசியாகினி தொடர்பு கொண்ட போது சுல்தானின் தனிப்பட்ட செயளாளர் முகம்மட் முனிர் பாணி இதனை உறுதிப்படுத்தினார். இந்நிகழ்ச்சிக்கான அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டு விட்டன என்று…