ஹுடுட் விளக்கக் கூட்டத்துக்கு பிகேஆரும் டிஏபி-யும் செல்ல மாட்டா

ஞாயிற்றுக்கிழமை, கிளந்தானில்  ஹுடுட்  சட்டம்  கொண்டுவருவது  பற்றி மாநில  அரசு  பாஸ்  தலைவர்களுக்கு   விளக்கமளிக்கும்  கூட்டத்தில்  பிகேஆரும்  டிஏபியும் கலந்துகொள்ள  மாட்டா. மலேசியாகினி  டோனி  புவாவைத்  தொடர்புகொண்டு  வினவியதற்கு, “அதில்  கலந்துகொள்ள  ஆர்வமில்லை; அது  எங்கள்  திட்டத்தில்  இல்லாத  ஒன்று. நாங்கள்  ஏன்  அதில்  கலந்துகொள்ள  வேண்டும்?”, என்று…

ஹுடுட் சட்டத் திருத்தம் பக்கத்தானுக்கு எதிரானதல்ல

ஹுடுட்  சட்டத்தில்  திருத்தம்  கொண்டுவர  கிளந்தான்  அரசு  பரிந்துரைத்திருப்பது பக்கத்தான்  ரக்யாட்டில்  செய்துகொள்ளப்பட்ட  உடன்பாடுகளுக்கு  எதிரானது  அல்ல  என்று  பாஸ்  தலைமைச்  செயலாளர்  முஸ்தபா  அலி  கூறினார். “கொள்கை  அளவில், இவ்விவகாரம் (ஹுடுட்மீது கருத்துவேறுபாடு  நிலவும் என்பது) ஒப்புக்கொள்ளப்பட்டதுதான்”, என்றாரவர். “சிறப்புச்  சட்டமன்றக்  கூட்டம்  பற்றி  கிளந்தான்  டிசம்பர் …

பக்கத்தானில் விரிசல் விரிவடைகிறது: கூட்டங்களைப் புறக்கணிக்க நினைக்கிறார் கிட் சியாங்

பக்கத்தான்  ரக்யாட்டில்  நாளுக்கு  நாள் நிலைமை  மோசமடைந்து  வருகிறது.  டிஏபி  பெருந்  தலைவர்  லிம்  கிட்  சியாங் அக்கூட்டணியின் தலைவர்  மன்றக்  கூட்டங்களுக்குச்  செல்ல  வேண்டாம்  என்றுகூட  நினைக்கத்  தொடங்கி  விட்டார். “பாஸின்  மத்திய  செயல்குழுவுக்குக்குக்கூட  தெரியாமல்  ஹுடுட்டைக்  கொண்டுவர  கிளந்தானில்  சிறப்புச்   சட்டமன்றக்  கூட்டம்  கூட்டப்படுகிறது  என்றால் …

மலேசியர்களுக்கு வளமான வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுத்தவர் மகாதிர்

முன்னாள்  பிரதமர்  டாக்டர்  மகாதிர்  கூறும்  கருத்துகளை  நன்மைக்காகத்தான்  என்று  நினைக்க  வேண்டுமே  தவிர  கிண்டல்  செய்யக்கூடாது  என  மலாய்  வணிகர், தொழில்முனைவர்  சங்கம் (பெர்டாசாமா)  கூறுகிறது. முன்னாள்  பிரதமரின்  முயற்சிகள்  எல்லா  மலேசியர்களுக்கும்  வசதியான  வாழ்க்கையை  ஏற்படுத்திக்  கொடுத்திருக்கிறது  என அதன்  தலைவர்  முகம்மட்  இஸாட் அமிர் …

வெள்ளத்தால் ஹுடுட்மீதான சட்டமன்றக் கூட்டம் தடைப்படாது

கிளந்தானில் கடுமையான  வெள்ளப் பெருக்கு  ஏற்பட்டிருந்தாலும்  ஹுடுட் மீதான  சட்டமன்றக்  கூட்டம்  திட்டமிட்டபடி டிசம்பர்  29-இல்  நடக்கும்  என  மந்திரி  புசார்  அஹ்மட்  யாக்கூப்  கூறினார். “வெள்ளம் திடீரென  ஏற்பட்டது. சட்டமன்றக்  கூட்டம் மாநில நிர்வாகத்தின் ஒரு  பகுதி. “வெள்ளம்தான். ஆனாலும், வேலை  இருக்கிறது”, என்றவர்  கூறியதாக  சின்…

வெள்ள நிலை மோசமடைகிறது, கிட்டத்தட்ட 60,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்

வெள்ள  நிலவரம்  மோசமடைந்துள்ளது. இன்று  காலை  ஆறு  மாநிலங்களில்  58,705 பேர்  துயர்துடைப்பு  மையங்களுக்கு  அனுப்பப்பட்டுள்ளனர். கிளந்தானில்தான்  அதிகமானோர்  பாதிக்கப்பட்டுள்ளனர். 24,765 பேர். அதற்கு அடுத்து  திரெங்கானு (21,606), பகாங் (10,825), பேராக் (1,030), சாபா (336), பெர்லிஸ் (143). கிளந்தானில் வெள்ளத்தால்  பாதிக்கப்பட்டோர்  எண்ணிக்கை  நேற்றிரவு  3,164-இலிருந்து …

மஇகா: இஸ்மா மதவெறியர்கள் தலிபான் போன்றவர்கள்

என்ஜிஓ-வான  ஈக்காத்தான் முஸ்லிமின்  மலேசியா(இஸ்மா) முஸ்லிம்கள்  கிறிஸ்துவர்களுக்கு கிறிஸ்மஸ்  வாழ்த்துச்  சொல்லக்கூடாது  என்று  கூறி  பயங்கரவாத  அமைப்பான  தலிபான்கள்போல்  நடந்துகொள்வதாக  மஇகா கடிந்து  கொண்டிருக்கிறது. “இஸ்மா தலிபான்-பாணியில்  சகியாமையையும்  மதவெறியையும் போதனை  செய்து  வருகிறது. எந்த மிதவாத  சமுதாயத்துக்கும்  இவை  விஷம்  போன்றவை.  இவற்றைப்  பொறுத்துக்கொள்ள  இயலாது. “அவர்கள் …

அமர்: புத்ரா ஜெயாவைக் கைப்பற்றுவதைவிட ஹுடுட்தான் முக்கியம்

புத்ரா  ஜெயாவைக்  கைப்பற்றுவது  இரண்டாம் பட்சம்தான்,  இஸ்லாமிய  குற்றவியல்  சட்டமான  ஹுடுட்டை  நடைமுறைப்படுத்துவதுதான் பாஸ்  கட்சியின்  முதன்மையான  நோக்கமாகும்  என்று  கிளந்தான்  துணை  மந்திரி  புசார்  முகம்மட்  அமர் நிக்  அப்துல்லா  கூறினார். அதற்காக டிஏபி-யும்  பிகேஆர்-ரும்  பக்கத்தான் ரக்யாட்டிலிருந்து  பாஸை  வெளியேற்றினால்கூட  கவலையில்லை, இஸ்லாமியக்  கட்சியின் நோக்கம் …

துருன் புத்தாண்டுக் கொண்டாட்டத்துக்கு இடையூறு செய்யாது

புத்தாண்டுக்கு  முந்திய  இரவு  டட்டாரான்  மெர்டேகாவில் நடக்கும்  தங்கள்  பேரணியால்,  அதே  இடத்தில்  நடக்கும்  இஸ்லாமிய  நிகழ்வுக்கு  எவ்வித  இடையூறும் இருக்காது  என  கெராக்கான்  துருன்  கோஸ்  சாரா  ஹிடுப் (துருன்) கூறுகிறது. அப்பேரணியின்  நோக்கம்   பெட்ரோல்  விலையைக் குறைக்க  வேண்டும்  என  அரசாங்கத்துக்குக்  கோரிக்கை  விடுவதுதானே  தவிர …

சீருடையற்ற நிலை ஏழை-பணக்காரர் என்ற பிரிவினையை உண்டுபண்ணும்

கல்வி  அமைச்சு  ஆறாம் படிவ  மாணவர்கள் சீருடை  அணிய விரும்பாவிட்டால்  வேறு உடைகளை  அணிந்து வர  அனுமதி  அளித்திருப்பதை  மஇகா  தலைவர்  ஒருவர்  குறை  கூறினார். இதனால்  கல்வியின்  தரம் ஒன்றும்  உயரப்போவதில்லை  என அதன்  இளைஞர்  தலைவர்  சி.சிவராஜா  கூறினார். “இந்நடவடிக்கை  பணக்கார  ஏழை  மாணவரிடையே  பிரிவினையைத்தான் …

மசீச: ஹுடுட் சமய ஒதுக்கல் கொள்கைக்கு இட்டுச் செல்லலாம்

கிளந்தானில்  ஹுடுட்  அமலாக்கப்படுவது  1960-களில்  தென்னாப்ரிக்காவில்  நிலவிய  இன ஒதுக்கல் கொள்கை  போன்ற ஒன்றை  உருவாக்கி விடலாம்  என  அம்மாநில  கிளந்தான்  அச்சம்  தெரிவித்துள்ளது. “ஹுடுட்  செயல்படுத்தப்படுவது  வெவ்வேறு  மக்களுக்கு  வெவ்வேறு  சட்டங்கள்  என  முஸ்லிம்களையும்  முஸ்லிம்- அல்லாதாரையும்  மேலும்  பிரித்து வைக்கும். “இதை 1960-களில்  தென்னாப்ரிக்காவில் நிலவிய …

போலீஸ்: கிறிஸ்மஸ் தாக்குதல் வெறும் வதந்தி

கிறிஸ்மஸ் காலத்தில் பயங்கரவாதிகள் மலேசியாவில்  தாக்குதல்  நடத்தத்  திட்டமிட்டிருப்பதாகக்  கூறும்  வதந்தியை  நம்ப  வேண்டாம்  என  போலீஸ்  கூறியது. வாட்ஸெப் சமூக  வலைத்தளத்தில்  அப்படி  ஒரு  வதந்தி  உலா  வருவதாக  இன்ஸ்பெக்டர் ஜெனரல்  அப்  போலீஸ்  செயலக (நிறுவனத்  தொடர்பு) உதவித்  தலைவர்  அஸ்மாவதி  அஹ்மட்  கூறினார். “விரும்பத்தகாத …

அமைச்சர்: எப்ஜிவி பங்கு விலை குறைந்ததற்கு பெல்டா காரணமல்ல

பெல்டா  குளோபல்  வெண்ட்சர்ஸ்   ஹொல்டிங்ஸ்(எப்ஜிவி)-இன்  பங்கு  விலை  குறைந்ததற்கு அந்நிறுவனத்தைக்   குறை  சொல்வது  சரியல்ல  எனப்  பிரதமர்  துறை  துணை  அமைச்சர்  ரசாலி  இப்ராகிம்  கூறினார். பெட்டாலிங்  ஜெயா உத்தாரா  எம்பி  டோனி  புவா  உள்பட  பலரும் பெல்டா  நிர்வாகமே  அதற்குக்  காரணம்  என்று  கருத்துத்  தெரிவித்திருப்பதை  அடுத்து …

ஹுடுட் திட்டம் பற்றி பக்கத்தானுக்கு விளக்க வேண்டும்

1993  ஷியாரியா  குற்றவியல்  சட்டத்தில்  கிளந்தான் மாநில  அரசு  என்ன  திருத்தம்  செய்யப்போகிறது  என்பதை  அறியோம்  என  பக்கத்தான்  ரக்யாட், பாஸ்  உள்பட,  கூறிக்கொண்டிருக்கிறது. எனவே, அது  பற்றி  ஒரு  விளக்கக்  கூட்டம் நடத்துவது  நல்லது  என  பாஸ்  தகவல்  தலைவர்  மாபுஸ்  ஒமார்  கூறினார். “ஏற்கனவே  நடைமுறையில் …

ஹுடுட் பக்கத்தான் கொள்கை அல்ல: அஸ்மின் வலியுறுத்து

ஹுடுட்  பக்கத்தான்  ரக்யாடின்  பொதுவான  கொள்கை  அல்ல  என்பதால் அதைச்  செயல்படுத்துவதற்குமுன் பாஸ்  அவ்விவகாரத்தை  பக்கத்தான் தலைவர்  மன்றத்துக்கு  விவாதிப்பதற்குக்  கொண்டு  வருவதுதான்  முறையாகும்  என்கிறார்  சிலாங்கூர்  மந்திரி  புசார்  அஸ்மின்  அலி. இது  பொருளாதார  நெருக்கடி  நிலவும்  காலம்  என்பதால்  பக்கத்தான்  ”ஷியாரியாவின்  உயர்  இலக்குகளை”  அடைவதற்கு …

1எம்டிபி: எங்களின் பணம் மக்களின் வரிப்பணம் அல்ல

தன்  நிதி  நிலவரத்தைத்  தற்காக்கும்  முயற்சியில்  குதித்துள்ள  நிதி  அமைச்சுக்குச்  சொந்தமான  1மலேசியா  மேம்பாட்டு  நிறுவனம்(1எம்டிபி), தனது  பல-பில்லியன் மதிப்புள்ள  முதலீட்டில்  ரிம1 மில்லியன்  மட்டுமே  அரசாங்கம்  வழங்கிய  தொகையாகும்  என்று  கூறியது. பிரதமர்  நஜிப் அப்துல்  ரசாக்கைத்  தலைவராகக்  கொண்ட  அந்நிறுவனம்  கடன்  தொல்லைகளில்  சிக்கிக்  கொண்டிருப்பதால்  …

அமைச்சரின் வாழ்த்தும் வசவும்

கிறிஸ்மஸ்  பண்டிகையின்போது  முஸ்லிம்கள்  கிறிஸ்வர்களுக்கு  வாழ்த்துச்  சொல்லக்  கூடாது  என்று  கூறியுள்ள  ஈக்காத்தான்  முஸ்லிமின்  மலேசியா(இஸ்மா)வை  வீடமைப்பு, ஊராட்சி, நகர்ப்புற  நல்வாழ்வு  அமைச்சர்  அப்துல் ரஹ்மான்  டஹ்லான்  கடுமையாக  சாடியுள்ளார். இன்று காலை,  டிவிட்டரில்  கிறிஸ்துவர்களை  வாழ்த்திய  அந்த  கோட்டா  பெலுட்  எம்பி, இஸ்மாவை  வசை  பாடினார். “கிறிஸ்துவர்களுக்கு …

சுப்ரா: மஇகாவில் பிரச்னைகள் இல்லை என்று தொடர்ந்து மறுத்துக் கொண்டிருக்க…

மஇகாவில்  பிரச்னைகளே  இல்லை  என்று  தொடர்ந்து  மறுத்துக்  கொண்டிருப்பதில்  அர்த்தமில்லை. பிரச்னைகளுக்கு  இயன்ற  விரைவில்  தீர்வு  காண்பதே  அறிவுடைமையாகும்  என  கட்சித்  துணைத்  தலைவர்  டாக்டர்  எஸ்.சுப்ரமணியம்  கூறினார். “இனியும்  மறுத்துக்  கொண்டிருக்க  முடியாது.   பிரச்னைகள்  இல்லை  என்றால் மக்கள்  எதற்காக  சங்கப்  பதிவதிகாரியிடம் (ஆர்ஓஎஸ்)  செல்ல  வேண்டும்?…

பெர்காசாமீது நடவடிக்கை எடுக்காத ஜாஹிட்டுக்குக் கண்டனம்

பேராக்  டிஏபி  தலைமையகத்தில்  தொங்க  விடப்பட்டிருந்த கிறிஸ்மஸ்,  புத்தாண்டு  வாழ்த்துப்  பதாதையைக்  கிழித்த  பெர்காசா உறுப்பினர்களுக்கு  எதிராக  நடவடிக்கை  எடுக்காமல் உள்துறை  அமைச்சர்  அஹமட்  ஜாஹிட்  ஹமிடி  நொண்டிச்  சாக்கு  சொல்லிக்  கொண்டிருப்பதாகக்  குறைகூறப்பட்டிருக்கிறார். தம்  கைகள்  கட்டப்பட்டுக்  கிடப்பதாகவும்  பேராக்  டிஏபி  அல்லது  சம்பந்தப்பட்ட  வேறு  யாராவது …

ஜி25 குழுவினரின் கடிதத்தை ஏற்பீர்: பிரதமருக்கு வலியுறுத்து

தீவிரவாதத்தை  எதிர்த்து  மிதவாதத்துக்கு  ஆதரவாக   சான்றோர்  25 பேர் (ஜி 25)  எழுதிய திறந்த மடலை  ஏற்பதன்வழி  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  அதற்கு  ஒரு  அங்கீகாரத்தை  வழங்க  வேண்டும்  என டிஏபி  பெருந்  தலைவர்  லிம்  கிட்  சியாங்  கேட்டுக்கொண்டிருக்கிறார். அதை  ஏற்பது  மலேசிய  அரசாங்கம்  மிதவாதத்தை …

எம்ஏஎஸ்-ஸின் இழப்புகளுக்கு பணியாளர்கள் காரணமல்ல

மலேசிய  விமான  நிறுவனமும்(எம்ஏஎஸ்)  அதன்  உரிமையாளரான கஜானா  நேசனல்  பெர்ஹாட்டும் அவ்விமான  நிறுவனத்துக்கு ஏற்பட்ட  இழப்புகளுக்குப்  பணியாளர்கள்மீது  பழி போடக்கூடாது  என  மலேசிய  விமானப்  பணியாளர்  சங்கம் (நுபாம்)  கூறியுள்ளது. இழப்புகளுக்கு  நிர்வாகக்  கோளாறுதான் காரணம்  என்பதை  கஜானா ஒப்புக்கொள்ள  வேண்டும்  என்று  அது  கூறிற்று. “ரிம12 பில்லியன் …

இஸ்மா: மரினா ஹுடுட்-டுக்கு பயப்படுவானேன்?

ஹுடுட்  சட்டம்  எல்லா  மக்களையும், முஸ்லிம்-அல்லாதார் உள்பட,  பாதுகாக்கிறது , அப்படியிருக்க  மரினா  மகாதிர்  ஏன் அதைக்  கண்டு  பயப்பட  வேண்டும்  என்று ஈக்காத்தான்  முஸ்லிமின்  மலேசியாவின்  மகளிர்  பகுதி   (வனிதா  இஸ்மா)  வினவுகிறது. ஹுடுட்  சட்டம்  குற்றவாளிகள்மீது  மட்டும்தான்  அமல்படுத்தப்படும்  என  வனிதா  இஸ்மா  தலைவர் நோர்சலேகா  முகம்மட் …

நஸ்ரி: டாக்டர் மகாதிரின் குறைகூறல் ‘ஆக்கப்பூர்வமான அறிவுரை’

டாக்டர்  மகாதிர் முகம்மட்  பிரதமர் நஜிப்  அப்துல்  ரசாக்கைக் குறைகூறுவதை  “ஆக்கப்பூர்வமான  அறிவுரையாக”த்தான்  எடுத்துக்  கொள்ள  வேண்டும்  என்கிறார்  பண்பாட்டு, சுற்றுலா  அமைச்சர்  நஸ்ரி அசீஸ். மகாதிர்  நீண்ட காலம்  பிரதமராக  இருந்தவர். நாட்டு நடப்புகளில்  அக்கறை  கொண்டவர்  என்றாரவர். “அக்கறை  இருப்பதால்தான்  அவர்  குறைகூறுகிறார். பிடிக்கவில்லை  என்பதால்தான் …