எக்ஸ்கோ: நாங்கள் சுன்னத் செய்வதை முஸ்லிம்-அல்லாதார் தடுக்க முடியாது

ஹுடுட்  சட்டம்  முஸ்லிம்களுக்கு  மட்டுமே  உரியது  என்பதால்  முஸ்லிம்-அல்லாதார்  அதற்கு  எதிர்ப்புத்  தெரிவிக்கக்  காரணம்  ஏதுமில்லை. கிளந்தானில்  ஹுடுட்  சட்ட  அமலாக்கத்தைத் தற்காத்துப்  பேசிய  மாநில  ஆட்சிக்குழு  உறுப்பினர்  நஸருடின்  டாவுட்  இவ்வாறு  கூறினார். “நாம்  சுன்னத்  செய்யக்  கூடாது  என்று  அவர்கள்(முஸ்லிம்- அல்லாதார்)  சொல்ல  முடியுமா?  அவர்கள் …

கைரி: பிரதமர், மகாதிரைக் கெட்டவர் எனக் குறிப்பிடவில்லை

அம்னோ  தலைவர்  நஜிப்  அப்துல்  ரசாக்  அண்மையில்  கட்சியில் உள்ள  ‘கெட்டவர்கள்’ என்று குறிப்பிட்டபோது  முன்னாள்  பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகமட்டைக்  கருத்தில்  கொண்டு  அவ்வாறு  பேசவில்லை  என  அம்னோ  இளைஞர்  தலைவர்  கைரி  ஜமாலுடின்  கூறினார். இன்று  செய்தியாளர்  கூட்டமொன்றில்  அது  பற்றி  வினவியதற்கு ‘கெட்டவர்கள்’  யார் …

ஹுடுட் சட்டவரைவு ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது

கிளந்தான்  ஷியாரியா  சட்டம் 1993-க்குத்  திருத்தம்  கொண்டுவரும் சட்டவரைவு  கிளந்தான்  சட்டமன்றத்தில்  ஒருமித்த  இணக்கத்துடன்  நிறைவேற்றப்பட்டது. 45 சட்டமன்ற  உறுப்பினர்களில்  44 பேர்  இன்று  சட்டமன்றம்  வந்திருந்தனர். வந்த  அனைவரும்  அதற்கு  ஆதரவு  தெரிவித்தனர். செம்பாக்கா தொகுதிக்கான  இடம்  பாஸ்  ஆன்மிகத்  தலைவர்  நிக்  அஸிஸ்  நிக்  மாட் …

‘வலுக்கட்டாயமாக நஜிப்பை வெளியேற்றுவது ஒன்றே வழி’

பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  தம்  போக்கை  மாற்றிக்கொள்வார்  அல்லது  அவருக்கு  முன்னிருந்த  அப்துல்லா  அஹ்மட்  படாவியைப்போல்  தாமே  பதவி  விலகுவார்  என்று  டாக்டர் மகாதிர்  முகம்மட்டும்  மற்ற  அம்னோ  மூத்த  உறுப்பினர்களும்  நினைத்தால்  ஏமாந்துதான்  போவார்கள். இவ்வாறு கூறும்  மூத்த  செய்தியாளர்  ஏ.காடிர்  ஜாசின், அவரைக்  கட்டாயப்படுத்திப் …

சிறையில் உள்ள அன்வாரின் நாடாளுமன்ற இடம் காலியாகாது

எதிரணித்  தலைவர்  அன்வார்  இப்ராகிம், ஆறு  மாதம்  நாடாளுமன்றத்துக்கு  வராதிருந்தாலும்  அவரின்  இடம்  காலியாகாது  என்கிறார்  அவரின்  வழக்குரைஞர்  என்.சுரேந்திரன். எம்பி  ஒருவர்  ஆறு  மாதம்  வராதிருந்தால்  அவரின்  நாடாளுமன்ற இடம்  இயல்பாகவே  காலியாகும்  என்ற  கூட்டரசு  அரசமைப்பு  விதி  அன்வாருக்குப்  பொருந்தாது  என  சுரேந்திரன்  கூறினார். “அன்வார் …

அம்னோ பிரதிநிதிகள் அனைவரும் ஹுடுட் சட்டவரைவுக்கு ஆதரவு

கிளந்தான்  சட்டமன்றத்தில், 1993 ஷியாரியா  குற்றவியல்  சட்டத்துக்குத் திருத்தம்  கொண்டுவரும்  சட்டவரைவு  தாக்கல் செய்யப்பட்டபோது  முன் எப்போதுமில்லாத  வகையில்  எதிரணியினர்  அத்தனை  பேரும்  அதற்கு  ஆதரவு  தெரிவித்தனர். அச்சட்டவரைவுமீது  முதலில்  பேசிய   எதிரணி பிரதிநிதியான  கொக்  லானாஸ்  சட்டமன்ற  உறுப்பினர் முகம்மட்  அல்வி  சே  அஹ்மட், ஹுடுட்  சட்ட …

ஹுடுட் சட்டவரைவைச் சட்ட ரீதியாக எதிர்க்க முனைந்துள்ளது கெராக்கான்

கிளந்தான்  சட்டமன்றத்தில் கிளந்தான்  ஷியாரியா  குற்றவியல்  சட்டத்  திருத்த  சட்டவரைவு  தாக்கல்  செய்யப்படும்  வேளையில்  கெராக்கான்  கட்சி  அதைச்  சட்ட  ரீதியாக  எதிர்க்க முனைந்திருக்கிறது. அச்சட்டவரைவை  அரசமைப்புக்கு  விரோதமானது  என  அறிவிக்குமாறு கோரும்  மனு  ஒன்றை  அக்கட்சியின்  வழக்குரைஞர்  குழு  கோட்டா  பாரு உயர்  நீதிமன்றத்தில்  பதிவு  செய்திருப்பதாக …

எம்பி: ஹுடுட்டைக் குறைகூறுவோர் சமய நம்பிக்கையற்றவர்கள்

1993 ஷியாரியா  குற்றவியல்  சட்டத்தில்  திருத்தம்  செய்வதற்காகக்  கொண்டுவரப்படும்  சட்டவரைவை  எதிர்ப்பவர்களைச்  “சமய  நம்பிக்கையற்றவர்கள்”  என வருணித்திருக்கிறார்  கிளந்தான்  மந்திரி  புசார்  அஹ்மட்  யாக்கூப். இன்று  அச்சட்டவரைவை  கிளந்தான் சட்டமன்றத்தில்  தாக்கல்  செய்த  அஹ்மட்,  அவர்கள்  அதைக்  “கொடூரமானது, மனிதத்தன்மையற்றது”  என்று  குறைகூறியிருப்பதாகக்  குறிப்பிட்டார். “அது  கண்மூடித்தனமான  குற்றச்சாட்டு”,…

ஐஜிபியை நாடாளுமன்றம் கண்டிக்க வேண்டும், பிகேஆர் கூறுகிறது

  நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரைக்காக நாடாளுமன்ற உறுப்பினரை கைது செய்ததற்காக போலீஸ் படை தலைவரை (ஐஜிபி) கண்டிக்க பக்கத்தான் ரக்யாட் ஒரு தீர்மானத்தை முன்மொழியவிருக்கிறது. பிகேஆர் லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினர் நூருல் இஸ்ஸா அவரது தந்தையின் உரையை நாடாளுமன்றத்தில் வாசித்தது தேசநிந்தனை குற்றம் என்று கூறி அதற்காக…

இஸ்ஸாவை அடுத்து போலீஸ் நூஹாவிடம் விசாரணை செய்யும்

அன்வார்  இப்ராகிமின்  மூத்த மகள்  நூருல்  இஸ்ஸாவை விடுதலை  செய்த  போலீசார்  அடுத்து  அவரின்  தங்கை  நூருல்  நூஹாவை  விசாரணைக்கு  அழைத்திருக்கிறார்கள். இன்று  டாங்  வாங்கி  போலீஸ்  நிலையம்  சென்றிருந்தபோது  தம்மை  அணுகிய  போலீசார்  தம்மிடம்  வாக்குமூலம்  பதிவுசெய்ய  விரும்புவதாக  தெரிவித்தனர்  என  நூருல்  நூஹா  மலேசியாகினியிடம்  கூறினார்.…

பிடிபட்டவர்களிடம் கித்தா லவான் பேரணிக்கு நிதியளிப்பவர்கள் பற்றித் தெரிந்துகொள்ள போலீசார்…

கித்தா  லவான்  பேரணியில்  கலந்துகொண்டதற்காகக்  கைதான  சமூக  ஆர்வலர்கள்  இருவரிடம்  பேரணி  ஏற்பாட்டாளர்கள்  பற்றியும் பேரணிக்கு  நிதி  எங்கிருந்து  கிடைக்கிறது  என்றும்  விசாரிக்கப்பட்டது. தம்மிடமும்  சக  சமூக  ஆர்வலரான  ஆடம்  அலியிடமும்  நடத்தப்பட்ட  விசாரணையில்  அந்த நோக்கம்  தெளிவாக  தெரிந்தது  என்று  மந்திப்  சிங்  மலேசியாகினியிடம்  தெரிவித்தார். “பேரணி …

வெள்ள நிவாரண நிதியில் ரிம462 மில்லியனுக்கு கணக்கு எங்கே?

தீவகற்ப  மலேசியாவில்  கடந்த  ஆண்டு  ஏற்பட்ட  வெள்ளத்தை  அடுத்து  வெள்ள  நிவாரணப்  பணிகளுக்காக  ஒதுக்கப்பட்ட  ரிம800 மில்லியனில்  ரிம462 மில்லியன்  எப்படிச்  செலவிடப்பட்டது  என்பதை  அரசாங்கம்  விளக்க  வேண்டும்  என  டிஏபி  கேட்டுக்  கொண்டிருக்கிறது. இதுவரை ரிம338 மில்லியனுக்கு  மட்டும்தான்  அரசாங்கம்  கணக்குக்  கொடுத்திருக்கிறது  என  அக்கட்சியின்  சிரம்பான் …

தெங்கு ரசாலி: உத்தரவாத கடிதங்களை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வதுதான் வழக்கம்

அம்னோவின்  மூத்த  தலைவர்களில்  ஒருவரான  தெங்கு  ரசாலி  ஹம்சா,  தாம்  நிதி  அமைச்சராக  இருந்த  காலத்தில்  அரசாங்கம்  அளிக்கும்  உத்தரவாத  கடிதங்களோ நிதி  விவகாரங்கள்  தொடர்பான  மற்ற  ஆவணங்களோ  நாடாளுமன்றத்தில்  தாக்கல்  செய்யப்படுவதுதான்  வழக்கம்  என்றார். அரசாங்கம்  1மலேசியா  மேம்பாட்டு  நிறுவன (1எம்டிபி) கடன்  பத்திரங்களின்  தொடர்பில்  ரிம11…

நூருல் இஸ்ஸா விடுவிக்கப்பட்டார், ஆனால்……

நேற்றிரவு  போலீஸ்  நிலையத்தில்  தடுத்து  வைக்கப்பட்ட  லெம்பா  பந்தாய்  எம்பி  நூருல்  இஸ்ஸா  அன்வார், போலீஸ்  பிணையில்  விடுவிக்கப்பட்டார். ஆனாலும், ஏப்ரல்  16-இல், அவர்  மறுபடியும்  போலீஸ்  நிலையத்தில்  முன்னிலை  ஆக  வேண்டும். விடுவிக்கப்பட்ட  பின்னர்  நூருல்  செய்தியாளர்களிடம்  பேசினார். “நான்  கைது  செய்யப்பட்டது  ஐஜிபி, பிரதமர்  நஜிப் …

1எம்டிபி-இல் முறைகேடுகள் இருந்தால் கண்டுபிடிக்கப்படுவது உறுதி: ஷாரிர் திட்டவட்டம்

1மலேசியா  மேம்பாட்டு  நிறுவனத்தின்  கணக்கறிக்கைகள்  ஆய்வுகள்  செய்யப்படுவதால்  அந்நிறுவனத்தின் திட்டங்களில்  வெளிப்படைத்தன்மை இல்லை  என்ற  சந்தேகம்  யாருக்கும்  வர  வேண்டியதில்லை. அங்கு  முறைகேடுகள்  நிகழ்ந்திருந்தால்   தேசிய  கணக்காய்வுத் துறையும்(என்ஏடி) பொதுக் கணக்குக்  குழுவும்(பிஏசி)  கவனிக்காமல்  இருக்காது  என பாரிசான்  நேசனல் ஆதரவாளர்  மன்றத்(பிஎன்பிபிசி)  தலைவர்  அப்துல்  ஷாரிர்  சமட் …

பேரணியில் கலந்துகொள்ளும் யுஎம் மாணவர்களுக்கு விடுதிகளில் இடமில்லை

யுனிவர்சிடி  மலாயா   மாணவர்  விடுதிகளில்  தங்கியுள்ள  மாணவர்கள்  கித்தா  லவான்  பேரணிகளில்  கலந்துகொள்வது  கண்டுபிடிக்கப்பட்டால்  அவர்கள்  தங்கியுள்ள  விடுதிகளிலிருந்து  வெளியேற்றப்படுவார்கள்  என  எச்சரிக்கப்பட்டிருக்கிறார்களாம். மார்ச்  12-இல் மாணவர்களுக்கும்  மாணவர்  விடுதி  நிர்வாகத்துக்குமிடையில்  நடைபெற்ற  கலந்துரையாடலின்போது  இந்த  எச்சரிக்கை  விடுக்கப்பட்டதாக  யுஎம்  மாணவர்  சங்கத்  துணைத்  தலைவர்  தே  வெய் …

நூருல் இஸ்ஸாவின் கைது உலகச் செய்தியாகியுள்ளது

  பிகேஆரின் உதவித் தலைவரும் லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினருமான நூருல் இஸ்ஸா தேசநிந்தனைச் சட்டத்தின் கீழ் நேற்று பிற்பகல் மணி 3 அளவில் கைது செய்யப்பட்டது நேற்றிரவு மணி 11 அளவில் உலக முன்னணி நாளிதழ்களில் செய்தியாக வெளியிடப்பட்டது. அசாஹி சிம்புன், ஜப்பான், பிபிசி பிரிட்டன், நியுயோர்க்…

ரபிஸி: யார் பிரதமராக வந்தாலும் திருப்தி அடைய மாட்டார் மகாதிர்

முன்னாள்  பிரதமர்  டாக்டர் மகாதிர்   முகம்மட்‘உயர்வு மனப்பான்மை’ நோயால்  பீடிக்கப்பட்டிருக்கிறார்.  அதனால்தான் அவருக்குப்  பின்  பிரதமராக  வந்த  எவரையும்  அவர்  அப்பதவிக்குத்  தகுதி  படைத்தவராக  நினைப்பதில்லை   என்கிறார்  பிகேஆர்  உதவித்  தலைவர்  ரபிஸி  ரம்லி. “மகாதிர்  உயர்வு மனப்பான்மையால்  அவதியுறுகிறார்.  பிரதமராகும்  தகுதி  தமக்கு  மட்டுமே  இருப்பதாக  அவர் …

பெங் ஹொக் வழக்கை விசாரிக்க போலீசுக்குக் கூடுதல் கால அவகாசம்…

அரசியல்  உதவியாளர்  தியோ  பெங்  ஹொக்கின்  இறப்பின்மீது  தீர  விசாரணை  நடத்த  போலீசுக்குக்  கூடுதல்  கால  அவகாசம்  தேவைப்படுவதாக  போலீஸ்  படைத்தலைவர்  காலிட்  அபு  பக்கார்  தெரிவித்துள்ளார். அவரது  மரணத்தை  விசாரித்த  கொரோனர்  வழங்கிய திடமில்  தீர்ப்பை  முறையீட்டு  நீதிமன்றம்  தள்ளுபடி  செய்ததை  அடுத்து  போலீஸ்   கடந்த  செப்டம்பரில் …

பிரதமர்: வெள்ளம்மீது ஆர்சிஐ தேவையில்லை

அண்மையில்  நாடு  முழுவதிலும்  ஏற்பட்ட  வெள்ளப்  பெருக்கால்  ஏற்பட்ட  பாதிப்புகளைச் சரிசெய்யும்  நடவடிக்கைகள்  இப்போது  நடைபெற்று  வருவதால்  வெள்ளத்தின்மீது  அரச  விசாரணை  ஆணையம் (ஆர்சிஐ)  அமைக்க  வேண்டிய  அவசியமில்லை  எனப்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  கூறினார். வெள்ளத்தால்  பாதிக்கப்பட்ட  பகுதிகளைத்  திருத்தி  அமைக்கும்  பணிகள்  நடைபெறுவதுடன்  வெள்ளப் …

நூருல் இஸ்ஸா கைது செய்யப்பட்டார்

  பிகேஆரின் உதவித் தலைவரும் லெம்பா பந்தாய் நாடாலுமன்ற உறுப்பினருமான நூருல் இஸ்ஸா இன்று தேசநிந்தனைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். அவரைக் காவலில் வைக்கும் உத்தரவுக்கான நீதிமன்ற விசாரணை நாளை நடைபெறவிருப்பதால் அவர் இன்றிரவை ஜிஞ்ஜாங் போலீஸ் நிலையத்தில் கழிக்க வேண்டியுள்ளது. மார்ச் 7 இல் நடந்த…

அன்வார் நாடாளுமன்றக் கூட்டத்தில் கலந்துகொள்வதை அனுமதிக்கக் கோரும் தீர்மானம் நிராகரிக்கப்பட்டது

அன்வார்  இப்ராகிம்  இன்னும்  எதிரணித்  தலைவர்தான்  என்பதால்  அவர்  நாடாளுமன்றக்  கூட்டத்தில்  கலந்துகொள்ள  மேற்கொண்ட  முயற்சிமீது  விவாதம்  நடத்தக்  கோரி  பாஸ்  எம்பி  ஒருவர்  கொண்டுவந்த  தீர்மானத்தை  மக்களவைத்  தலைவர்  பண்டிகார்  அமின்  மூலியா  தள்ளுபடி  செய்தார். பாஸ்  எம்பி ஹனிபா  மைடின் (பாஸ்- சிப்பாங்)  கொண்டுவந்த  அத்தீர்மானம் …

ஹுடுட்டைவிட வெள்ளப் பணிகளுக்கு முன்னுரிமை கொடுப்பதையே பெரும்பாலான மலாய்க்காரர்கள் விரும்புகிறார்கள்

இவ்வாரம்  திருத்தப்பட்ட  ஹுடுட்  சட்டவரைவைத்  தாக்கல்  செய்ய  கிளந்தான்  பாஸ்  கட்சி  காட்டும்  முனைப்பு  மலாய்க்காரர்களிடையே   அவ்வளவாக  வரவேற்பைப்  பெறவில்லை. அதன்மீது  ஒரு  ஆய்வை  நடத்திய  மெர்டேகா  மையம், அவ்வாய்வு,  பாஸ்  வழிநடத்தும்  கிளந்தான்  அரசு,  கடந்த  ஆண்டு  வெள்ளத்தால்  ஏற்பட்ட  பேரழிவைத்  தொடர்ந்து  மாநிலத்தைச்  சீரமைக்கும்  பணிகளுக்கே …