பெட்ரோல்மீது ஜிஎஸ்டி ; கடைசிநேர அதிரடி அறிவிப்பு செய்யப்படலாம்

அரசாங்கம் பெட்ரோல், டீசல்மீது  பொருள்,  சேவை  வரி )ஜிஎஸ்டி) விதிப்பது  பற்றி  தாமதித்து  அறிவிப்பு  செய்யலாம்  என  பிகேஆர்  கூறுகிறது. இன்று  செய்தியாளர் கூட்டத்தில்  பேசிய  பிகேஆர்  வியூக இயக்குனர்  ரபிஸி  ரம்லியும்  கிளானா  ஜெயா  எம்பி  வொங்  சென்னும்,   பெட்ரோலும்  டீசலும்  ஜிஎஸ்டிக்கு  மிகப்  பெரிய  பங்களிப்பைச் …

ஜரினா சமயத்தை நிரூபிக்க நீதிமன்ற ஆணை பெற வேண்டும்

ஜரினா  அப்துல்  மஜித்   தம்  சமய  தகுதிநிலையை நிரூபிக்க  நீதிமன்ற ஆணை பெற  வேண்டும்  என்ற  தேசிய பதிவுத்துறை(என்ஆர்டி)யின்  நிபந்தனை  சட்டப்படியும்  அரசமைப்புப்படியும்  சரியானதே  என்று  முஸ்லிம்  என்ஜிஓ  இக்ராம்  கூறுகிறது. ஜரினா முஸ்லிம்  குடும்பத்தில்  பிறந்தவர்  என்று  அவரின்  தந்தை அப்துல்  மஜித்  குலாம்  காதர்  கூறி…

நஜிப்: அமைச்சரவை மாற்றமா, யான் அறியேன்

பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்,  அமைச்சரவை திருத்தி  அமைக்கப்படும்  என்று கூறும்  செய்தியை  மறுத்தார். வெள்ளிக்கிழமை  அமைச்சரவை திருத்தி  அமைக்கப்படும்  என்று  நாளேடு  ஒன்றில்  வெளிவந்த  தகவல் பற்றி  நஜிப்பிடம்  வினவப்பட்டதற்கு, “யான்  அறியேன்” என்று  சுருக்கமாக  மறுமொழி  கூறினார். துர்க்மினிஸ்தான்  பயணத்தை  முடித்துக்கொண்டு  கோலாலும்பூருக்குத்  திரும்புமுன்னர்  அஷ்கபாத் …

வரம்பு மீறிய ஐஜிபியை நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும்

  மத மாற்ற விவகாரத்தில் சிக்கித் தவிக்கும் குழந்தைகளின் பராமரிப்பு குறித்த நீதிமன்ற உத்தரவுக்கு கீழ்ப்படியாத போலீஸ்படைத் தலைவர் காலிட் அபு பாக்கார் மீது நீதிமன்ற அவமதிப்பு குற்றம் சாட்டப்பட வேண்டும். எது நியாயம் என்பதை தாம் நிர்ணயிக்கலாம் என்று காலிக் நினைப்பாரானால், அவர் அவரது அதிகார வரம்பை…

மசீச: பக்காத்தான் மாநிலங்களில் மணம் செய்ய முடிவதில்லை; நிம்மதியாக சாகவும்…

மசீச,  சிலாங்கூரிலும்  பினாங்கிலும்  இஸ்லாமிய  அதிகாரிகளின்  நடவடிக்கைகளைச்  சாதகமாகப்  பயன்படுத்திக்கொண்டு  பக்காத்தான்  ரக்யாட்டைச்  சாடத்  தொடங்கியுள்ளது. பினாங்கு  மசீச  துணைத் தலைவர்   டான்  தெக் செங்,  அவர்களின்  மாநிலங்களில்  முஸ்லிம்-அல்லாதாரை  ஒட்டுமொத்தமாக  ஒழித்துக்கட்டுவதுதான்  எதிரணியினரின்  நோக்கமா என்று  வினவியுள்ளார். “பக்காத்தான்  நிர்வாகத்தில்  மாநில  இஸ்லாமிய  சமயத்துறை  அதிகாரிகள்  முஸ்லிம்-அல்லாதாருக்குத் …

ஐஜிபி-இன் நடுநிலை போக்கைச் சாடுகிறார் இந்திராவின் வழக்குரைஞர்

எம்.இந்திரா  காந்தியின்  வழக்குரைஞர்களில் ஒருவரான  ஏ.சிவநேசன்,  வெவ்வேறு  சமயத்தவருக்கிடையில்  குழந்தை பராமரிப்புமீது  எழும்  சர்ச்சைகளில்  போலீஸ்  நடுவுப்பாதையைக்  கடைப்பிடிக்கும்  என்று  கூறிய  போலீஸ்  படைத்  தலைவர்  காலிட்  அபு  பக்காரைச்  சாடினார். போலீசின் நிலைப்பாடு  சட்டமீறலாகும்  என  சுங்கை  சட்டமன்ற  உறுப்பினருமான  சிவநேசன்  கூறினார். “புகார்  செய்யப்பட்டதும்  விசாரணை …

குழந்தை பராமரிப்பு சர்ச்சையில் ‘நடுவுப்பாதை’யே ஐஜிபி-இன் வழியாகும்

குழந்தை  பராமரிப்பு  விவகாரத்தில்  ஷியாரியா,  சிவில்  நீதிமன்றங்கள்  வழங்கும்  தீர்ப்புகள்  முரண்படும்போது போலீஸ்  நடுவுப்பாதையைக்  கடைப்பிடிக்கும்  என  இன்ஸ்பெக்டர்  ஜெனரல்  அப்  போலீஸ்  காலிட்  அபு  பக்கார்  கூறுகிறார். போலீஸ், ஷியாரியா அல்லது  சிவில்  நீதிமன்ற  உத்தரவுகளை  அமல்படுத்தாமல்,    பாதிக்கப்பட்ட  பிள்ளைகளைக்  குழந்தை பராமரிப்பு  இல்லத்தில்  வைத்திருக்கும்,  அதுவே …

வழக்குரைஞர் மன்றத்தின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்த வேண்டும்

மலேசிய  வழக்குரைஞர்  மன்றம்,  பக்காத்தான்  ரக்யாட்டின்  சட்டப்  பிரிவுபோல்  நடந்துகொள்வதாகவும்  எதிரணி-ஆதரவு  அறிக்கைகள் விடுவதன்வழி  அதன்  அதிகாரத்தைத்  தவறாகப்  பயன்படுவதாகவும்  ஒரு  வழக்குரைஞரான  முகம்மட்  கைருல்  அஸாம்  அப்துல்  அசீஸ்  குற்றஞ்சாட்டியுள்ளார். “அது  நியாயமாக  நடந்துகொள்வதை  உறுதிப்படுத்த  வழக்குரைஞர்  மன்றத்தின்  அதிகாரத்தைக்  கட்டுப்படுத்துவது   அவசியம்”, என்றாரவர். மலேசியாகினிக்கு  எதிரான…

கோபிந்த்: சிலாங்கூரில் ஹுடுட்டை எதிர்ப்பதில் டிஏபி உறுதியாக இருக்கும்

சிலாங்கூரில்  ஹுடுட்டைக்  கொண்டுவரும்  முயற்சியை டிஏபி  முழுமூச்சாக  எதிர்க்கும்  என  கோபிந்த்  சிங்  டியோ  கூறினார். ஹுடுட் சட்டத்தை  அறிமுகப்படுத்தும்  சாத்தியத்தை  ஆராய  வேண்டும்  என்று  கேட்டுக்கொள்ளும்  தீர்மானம்  ஒன்று சிலாங்கூர்  சட்டமன்றத்தில்  தாக்கல்  செய்யப்பட்டுள்ளதாக  மலாய்  மெயில்  இணையதளத்தில்  வெளிவந்துள்ள  செய்திக்கு  எதிர்வினையாக  அவர்  இவ்வாறு  கூறினார்.…

தலைமை நீதிபதி: குழந்தை பராமரிப்பு சர்ச்சைக்குத் தீர்வுகள் உண்டு ஆனால்…..

பெற்றோரில்  ஒருவர்  மதமாறும்போது  குழந்தைகளைப்  பராமரிக்கும்  உரிமை யாருக்கு  என்ற  சர்ச்சைக்குத்  தீர்வுகாண  வழி  உண்டு  என்கிறார்  தலைமை  நீதிபதி  அரிபின்  ஜக்கரியா. ஆனால்,  அதைத்  தெரிவிக்க  அவர்  தயாராக  இல்லை. “வழிமுறைகளைச்  சொல்ல என்னால்  முடியாது. அப்படிச்  செய்தால்  நான்  ஆலோசனை  வழங்குவதாகக்  கருதப்படும்”, என்றவர்  செய்தியாளர்களிடம் …

அன்வார்: இஸ்லாமிய சமய அதிகாரிகள் ‘அதிகார ஆணவம் நிறைந்தவர்கள்’

சிலாங்கூரிலும்  பினாங்கிலும்  சமய  அதிகாரிகள்  அதிகார  ஆணவத்துடன்  நடந்துகொண்டிருப்பதாக  எதிரணித்  தலைவர்  அன்வார்  இப்ராகிம்  குறைகூறினார். “மற்ற இனத்தாரை இழிவுபடுத்துவதுபோன்ற  தோற்றத்தை  உருவாக்க  வேண்டாம்”,  என்றவர்  எச்சரித்தார். சிலாங்கூர்  இஸ்லாமிய  துறை (ஜாயிஸ்) இந்து திருமணம்  ஒன்றைத்  தடுத்து  நிறுத்திய  சம்பவம்  பற்றியும்  பினாங்கில்  சமய  அதிகாரிகள்,  மதமாறிய …

மகாதீர்: சுல்தான்களிடம் முழு அதிகாரம் இருந்தபோது இலாபமடைந்தவர்கள் அந்நியர்களே

  சுல்தான்கள் அரசாங்க விவகாரங்களில் தலையிடுவதைக் கடுமையாகச் சாடி வந்த முன்னாள் பிரதமர் மகாதீர், சுல்தான்கள் முழு அதிகாரத்தோடு ஆட்சி புரிந்த காலத்தில் பெருமளவிலான நிலங்களை அவர்கள் அந்நியர்களுக்கு கொடுத்துள்ளனர் என்று சுட்டிக்காட்டியுள்ளார். சர்ச்சைக்குள்ளான ஜோகூர் மசோதாவைப் பற்றி இதற்கு முன்னர் கருத்துரைத்த மகாதீர் அந்த மசோதாவில் அந்நியர்கள்…

ரிம100 மில்லியன் சலுகைக் கடனுதவித் திட்டம் எங்கே?

2014 பட்ஜெட்டில்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்,  இரவுநேரச்  சந்தை   வியாபாரிகளின்  சலுகைக்  கடனுதவித் திட்டத்துக்கு ரிம100 மில்லியன்  ஒதுக்கப்படும்  என வாக்குறுதி  அளித்திருந்தார்.  ஆனால், அப்படி  ஒதுக்கப்பட்ட  பணம்  எங்கிருக்கிறது  என்பதுதான்  தெரியவில்லை  என  டிஏபி-இன்  ஆயர் குரோ  சட்டமன்ற  உறுப்பினர்  கூ  போய்  தியோங்  கூறினார்.…

எம்எச்370: குடும்பத்தாரின் தேடும் முயற்சிக்கு வரவேற்பு

காணாமல்போன எம்எச் 370 விமானத்தில்  பயணித்த  சீனப்  பயணிகளின்  குடும்பத்தார் தாங்களே  விமானத்தைத்   தேடும்  முயற்சியில்  இறங்கி  இருப்பதை  சிவில்  விமானப்  போக்குவரத்துத்  துறை (டிசிஏ) வரவேற்றுள்ளது. “அதை  நாங்களும் கேள்விப்பட்டோம். அவர்கள்  போக்குக்கு  விட்டுவிட  விரும்புகிறோம்”, என்று  டிசிஏ  தலைவர்  அஸ்ஹாருடின்  அப்துல்  ரஹ்மான்  கூறினார். அவர்கள் …

ராம்கர்பாலும் மா-வும் புதிய எம்பிகளாக பதவியேற்பு

கடந்த  மாதம் இடைத்  தேர்தல்களில்  வெற்றிபெற்ற  ராம்கர்பால் சிங்கும், மா  சியு  கியோங்கும்    நாடாளுமன்றத்தின்  புதிய  உறுப்பினர்களாக  இன்று  பதவியேற்றனர். மக்களவைத் துணைத்  தலைவர்  ரோனால்ட்  கியாண்டி  முன்னிலையில்  அவர்கள்  பதவி  உறுதிமொழி  எடுத்துக்கொண்டனர். ராம்கர்பால் மே 25-இல்  புக்கிட்  குளுகோரில்  வெற்றி  பெற்றார்.  மா  மே  31-இல் …

ஷஹிடான்: மாநில நிர்வாகத்தில் சுல்தான் தலையிடக் கூடாது

பிரதமர்துறை  அமைச்சர்   ஷஹிடான்  காசிம்  ஹோகூர்  வீட்டுவசதி  சொத்து  சட்டவரைவுமீது  அதிருப்தி  தெரிவித்துள்ளார். அச்சட்டவரைவு  தொடக்கத்தில்  மற்றவற்றோடு  வாரிய  உறுப்பினர்களை  நியமனம்  செய்யும்  அதிகாரத்தையும்  சுல்தானுக்கு  வழங்கியது. அதுதான்  அவருக்குப்  பிடிக்கவில்லை. கூட்டரசு  அரசமைப்புக்கு  முரணான  எதையும்  அரசாங்கம்  பொறுத்துக்கொள்ளாது  என்று,  நாடாளூமன்ற வளாகத்தில்  செய்தியாளர்களிடம்  பேசியபோது  ஷஹிடான் …

தலைவா, முட்டைகளை 10 நிமிடம் வேகவைக்க வேண்டும்: நஜிப்புக்கு பெய்ஜிங்கின்…

சீனாவில்  இருந்தபோது  அந்நாட்டு  அரசாங்கம்  தம்  நலனில்  மிகுந்த  அக்கறை  காட்டியது  எனப்  பெருமையாகக்  கூறிக்  கொண்டிருக்கிறார்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக். பாதுகாப்பு  ஏற்பாடுகள்  எல்லாம் தடபுடலாக  இருந்தனவாம். அவரது  பாதுகாப்புக்காக  ஒரே  மாதிரியான  தோற்றம்கொண்ட  மூன்று  சொகுசு  கார்கள்  பயன்படுத்தப்பட்டன. கோலாலும்பூரில்  முதலீட்டாளர்கள்,  வணிகர்கள்  அடங்கிய …

‘மந்திரி புசார் ஆட்சியாளருக்கு அடங்கிப் போவார்’-அதுதான் மகாதிரின் கவலை

முன்னாள்  பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகம்மட்,  ஜோகூர்  வீட்டுவசதி  சட்டவரைவு  தொடர்பிலான  சர்ச்சையில்  மாநில  சுல்தானுக்கு  ஆலோசனை கூறுமளவுக்கு   ஜோகூர்  மந்திரி  புசார்  காலிட்  நோர்டின்  திறமைப்படைத்தவர்  அல்ல  என்று  நினைக்கிறார். சட்டவரைவில்  திருத்தங்கள்  செய்யப்பட்டாலும், காலிட்  மலாய் மரபைப்  பின்பற்றி  சுல்தானுக்கு  அடங்கிப்  போவார்  என  முன்னாள் …

நல்லிணக்க சட்டமுன்வரைவு இஸ்லாத்துக்கும் ஆட்சியாளருக்கும் எதிரானதல்ல

தேச நிந்தனைச் சட்டத்துக்குப்  பதிலாக  வரையப்பட்டுள்ள புதிய  சட்டங்கள்  இஸ்லாத்துக்கும்  ஆட்சியாளர்களுக்கும்  குழிபறிப்பன  என்று  கூறப்படுவதைத்  தேசிய  ஒற்றுமை  ஆலோசனை  மன்றம் (என்யுசிசி) மறுத்துள்ளது. அவ்வாறு  கூறுவதில்  “உண்மையில்லை”  என என்யுசிசி-இன் “இந்தச்  சட்டவரைவுகள்  கூட்டரசு  அரசமைப்புக்கு  முரணானவை  அல்ல  என்பதுடன் அரசமைப்பில்  குறுக்கிடுவதையோ, அதைச்  சிறுமைப்படுத்துவதையோ, அதன்…

எம்எச்370: கண்டுபிடித்தால் ரிம16 மில்லியன் பரிசு

IndieGogo என்னும் வலைத்தளம் காணாமல்போன  மலேசிய  விமான  நிறுவனத்தின்  எம்எச்370-ஐக்  கண்டுபிடிக்கத்  தேவையான  முக்கிய  தகவலை  வழங்குவோருக்கு  அல்லது  நிறுவனத்துக்கு  வெகுமதி  வழங்க  முன்வந்துள்ளது. இதற்காக  பொதுமக்களிடமிருந்து  யுஎஸ்$5 மில்லியன்  நன்கொடை  திரட்டும்  இயக்கமொன்றை  அது  தொடங்கியுள்ளது. நன்கொடை வழங்குவதற்கான  இணையப் பக்கம் இன்றிரவு  8  மணிக்கு  மலேசியாவில்…

ஸரினா, வயதுக்கு வந்தவர். சமயத்தைத் தேர்வுசெய்யும் உரிமை அவருக்கு உண்டு

உங்கள்  கருத்து:  ‘சமயம்  ஒரு தனிப்பட்ட  விவகாரம்.  அதை  ஏன்  நீதிமன்றம் தீர்மானிக்க  வேண்டும்?’ ஸரினா  நீதீமன்றம்  செல்ல  வேண்டும்  என்பது  அரசமைப்புக்கு  விரோதமானது துபாய்பீசி:  இந்து  மணப்பெண்  ஸரினா  அப்துல்  மஜித்  வயதுக்கு  வந்தவர்.  தன்  சமயத்தை  அவரே  முடிவுசெய்யலாம்.  அதற்குத்  தாய்  அல்லது  தந்தையின்  அனுமதி …

அமைச்சர்: சாபா பிரிவினைக்கு தூபம்போடுவது‘ஆபத்தானது’

முகநூலில்,  சாபா  மலேசியாவிலிருந்து  பிரிந்துசெல்ல  தூண்டிவிடுவோருக்கு  எதிராக  அதிகாரிகள்  கடுமையாக  நடந்துகொள்ள  வேண்டும்  என  நகர்ப்புற,  வீடமைப்பு,  ஊராட்சி  அமைச்சர்  அப்துல்  ரஹ்மான்  டஹ்லான்  நேற்று வலியுறுத்தினார். இது,  தேசிய  பாதுகாப்பையும்  நிலைத்தன்மையையும்  பாதிக்கும்  என்பதால் ஆபத்தானது  என   அம்னோ  உச்சமன்ற  உறுப்பினரும்  சாபா  பாரிசான்  நேசனல்  செயலாளருமான …

கிடெக்ஸ் இன்னும் போக்குவரத்து அறிக்கை சமர்பிக்கவில்லை

சர்ச்சைக்க்குரிய  கின்ராரா- டமன்சாரா  விரைவுச்சாலை (கிடெக்ஸ்)க்கு  அங்கீகாரம் பெற  தேவையான ஆவணங்கள்  அனைத்தும்  தாக்கல்  செய்யப்பட்டிருப்பதாக கிடெக்ஸ்  சென். பெர்ஹாட்  திரும்பவும்  வலியுறுத்தி  இருப்பதை  பெட்டாலிங்  ஜெயா  மாநகர்  மன்ற (எம்பிபிஜே)  கவுன்சிலர்கள்  மூவர்  மறுத்தனர். “முழுமையாக்கப்பட்டு  இறுதிசெய்யப்பட்ட  போக்குவரத்து  தாக்க  மதிப்பீடு  அறிக்கை (டிஐஏ)  இன்னும்  தாக்கல் …