மலேசிய நாடாளுமன்றத்தில் மனநலப் பணியாளர்கள் பற்றாக்குறை குறித்த விவாதம் நாட்டில் நிலவி வரும் மனநலப் பணியாளர்களின் கடுமையான பற்றாக்குறை இன்று காலை நாடாளுமன்றத்தில் முக்கிய விவாதப் பொருளாக மாறியது. அதிகரித்து வரும் மனநலப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண புத்ராஜெயா (அரசாங்கம்) தனது முயற்சிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று நாடாளுமன்ற…
ஜனவரி 1 லிருந்து ரோன் மற்றும் டீசல் விலை குறைப்பு
உலகளவில் எண்ணெய் விலையில் ஏற்பட்ட சரிவினைத் தொடர்ந்து மலேசியாவிலும் ரோன்95 மற்றும் டீசல் விலை குறைக்கப்படுகிறது. ரோன் விலை 1 லீட்டருக்கு 35 சென்னும், டீசல் 1 லீட்டருக்கு 30 சென்னும் குறைக்கப்படும். இந்த விலை குறைப்பு ஜனவரி 1, 2015 இல் அமலாக்கம் பெறுகிறது. இதன்…
பிகேஆர்: ரோன்95 மற்றும் டீசலின் விலை ரிம1.90-க்கும் குறைவாக இருத்தல்…
பார்க்கப்போனால் மலேசியர்கள் ரோன்95-க்கும் டீசலுக்கும் ரிம1.90க்கும் குறைவான விலையைத்தான் கொடுக்க வேண்டும் என்கிறார் பிகேஆர் எம்பி ரபிஸி ரம்லி. நிதி துணை அமைச்சர் அஹ்மட் மஸ்லான், ஜனவரியிலிருந்து அவ்விரு எரிபொருள்களின் விலை ரிம்1.90-க்கும் ரிம1.95க்குமிடைப்பட்டு இருக்கும் என்று கூறியிருப்பது பற்றிக் கருத்துரைத்தபோது ரபிஸி இவ்வாறு கூறினார். ரோன்95-இன் விலை …
வெள்ள நிலவரம்
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், வெள்ளத்தைக் கட்டுப்படுத்தும் திட்டத்துக்கு 11-வது மலேசிய திட்டம் முன்னுரிமை அளிக்கும் என திரெங்கானு, கெமமானில் கூறினார்.. அவர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோரைச் சந்திக்க திரெங்கானு சென்றிருப்பதாக பெர்னாமா கூறியது. கிளந்தானில் டிசம்பர் 26-க்கும் 29-க்குமிடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருந்த வேளையில் பேரங்காடிகளில் சூறையாடிய 99 பேரை …
மரங்கள் வெட்டப்படுவதுதான் வெள்ளத்துக்குக் காரணம் என்பதை கிளந்தான் எம்பி மறுக்கிறார்
கிளந்தான் மாநிலத்தில் முன் எப்போதுமில்லாத அளவுக்கு மோசமான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதற்குக் கட்டுப்பாடின்றி மரங்கள் வெட்டிச் சாய்க்கப்பட்டதுதான் காரணம் என்பதை கிளந்தான் மந்திரி புசார் அஹ்மட் யாக்கூப் நிராகரித்தார். வெள்ளம் பெருகக் கவனக் குறைவு காரணமாக இருக்கலாம் என்று பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் உள்பட, பல தரப்புகள் குறைகூறியுள்ளன.…
QZ8501: இதுவரை ஏழு சடலங்கள் மீட்கப்பட்டன
கடலில் விழுந்து நொறுங்கிய ஏர் ஏசியா QZ8501 விமானத்திலிருந்து இதுவரை ஏழு சடலங்கள் மீட்டெடுக்கப்பட்டிருப்பதாக தேடல், மீட்புக் குழுத் தலைவரை மேற்கோள்காட்டி சிங்கப்பூரின் சேனல் நியுஸ் ஏசியா அறிவித்துள்ளது. ஒரு சடலம் விமானப் பணியாளருடையது என்று தெரிவிக்கப்பட்டது. இன்னொரு சடலம், நீரில் மூழ்காமல் மிதக்க வைக்கும் காப்புச் சட்டை …
பாதை மாறியது புயல். அதனால் தப்பியது கிழக்குக் கரை
சாபாவின் வடக்குப் பகுதியை நோக்கிச் சீறிப் பாய்ந்துவந்த வெப்ப மண்டல புயல் ஒன்று சனிக்கிழமை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிழக்குக் கரை மாநிலங்களைத் தாக்கும் என அச்சத்துடன் எதிர்பார்க்கப்பட்ட வேளையில் பாதை விலகிச் சென்று விட்டது. மணிக்கு 74 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் பலத்த காற்றுடன் தெற்கு பிலிப்பீன்சைத் தாண்டி …
“40 சடலங்கள்” என்பது தவறு, ஜாக்கர்த்தா கூறுகிறது
சுரபாயா-சிங்கப்பூர் பயணத்தின் போது விபத்திற்குள்ளான ஏர்ஏசியா பயணிகள் மற்றும் விமானப் பணியாளர்கள் ஆகியோரை தேடும் நடவடிக்கையின் போது 40 சடலங்கள் இந்தோனேசிய கடற்படைக் கப்பல் பங் தோமோவால் மீட்கப்பட்டதாக முன்னதாக வெளியிடப்பட்ட செய்தி கூறிற்று. அத்தகவல் தவறானது என்று இந்தோனேசியாவின் தேடி மீட்கும் அமைப்பான சாரின் தலைவர்…
ஏர் ஏசியா விபத்து: 40 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன
கடந்த ஞாயிற்ருக்கிழமை சுரபாயாவிலிருந்து சிங்கப்பூருக்குப் புறப்பட்ட ஏர் ஏசியா விமானம் விபத்திற்குள்ளாகியது. அந்த விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டிருந்த இந்தோனேசிய கடற்படை இன்று மாலை மணி 6.30 வரையில் 40 சடலங்களை மீட்டுள்ளதாக தெரிவித்தது. தேடும் பணி வெளிச்சம் குறைந்து இருள் சூழத் தொடங்கிவிட்டதால் நிறுத்தப்படுவதாகவும் நாளை…
ஐஜிபி: வெள்ளத்துக்கு இதுவரை 21பேர் பலியாகியுள்ளனர்
கிழக்குக் கரை மாநிலங்களில் வெள்ளத்தால் கடுமையாக சேதமடைந்த சாலைகளைத் திருத்தி அமைக்க இராணுவத்தினர் பயன்படுத்தப்படலாம் எனத் தற்காப்பு அமைச்சர் ஹிஷாமுடின் உசேன் கூறினார். “சாலைப் போக்குவரத்து துண்டிக்கப்பட்டிருப்பதை எண்ணித்தான் கவலையடைகிறேன். உணவுப் பொருள்களைக் கொண்டுசெல்வது சிரமமாக இருக்கிறது. ஹெலிகாப்டர்களைப் பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அவற்றையும் வானிலை நன்றாக …
விமானத்தின் உடைந்த பகுதிகளும் இறந்தவர் சடலங்களும் மிதக்கக் காணப்பட்டன
காணாமல்போன ஏர் ஏசியா விமானத்தின் உடைந்த பகுதிகள் காணப்பட்டதாக ஜாகார்த்தா அறிவித்ததை அடுத்து தேடும்பணியில் ஈடுபட்டிருந்த இந்தோனேசிய ஆகாயப்படையின் இணை விமானி ஒருவர் டஜன் கணக்கான உடல்கள் கடலில் மிதப்பதைக் கண்டிருக்கிறார். “பயணிகள் உயிருடன் இருப்பதுபோலவும் உதவிகேட்டு கைகளை அசைப்பதுபோலவும் இருந்தது. ஆனால், அருகில் சென்று பார்த்தபோது அவை …
கூட்டரசு சாலைகளில் 90 பகுதிகள் மூடப்பட்டுள்ளன
அரசாங்கம் கிழக்குக் கரையில் வழக்கத்துக்கு மாறாக இவ்வளவு மோசமான வெள்ளம் ஏற்பட்டதற்கான காரணத்தை ஆழமாக ஆராயும் எனத் துணைப் பிரதமர் முகைதின் யாசின் கூறுகிறார். வெள்ளம் வடிந்த பின்னர், அந்த ஆய்வு மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்ததாக பெர்னாமா அறிவித்தது. ஆய்வில், பருவ நிலை மாற்றங்கள், காடழிப்பு நடவடிக்கைகள்,…
1967-ஐவிட இவ்வாண்டு வெள்ளம் மோசமானது
“எனக்குத் தெரிந்து இரண்டு பெரிய வெள்ளப்பெருக்குகள் ஏற்பட்டுள்ளன. ஆனால், இதுதான் மிகப் பெரிது”, என்கிறார் கிளந்தானைச் சேர்ந்த முகம்மட் சாலே. முகம்மட் சாலே கூறுவது உண்மையாகத்தான் இருக்க வேண்டும். ஏனென்றால், 80-வயதான அம்மூத்த குடிமகனார் பல வெள்ளங்களைக் கண்டவர். அவரை பாசிர் மாஸ், கம்போங் கோட்டாவில் உள்ள அவரது …
பிரதமரை மட்டுமே சந்திப்போம்: சான்றோர் 25 திட்டவட்டம்
தாங்கள் முன்வைத்த விவகாரங்கள் தொடர்பில் பிரதமரை மட்டுமே சந்திக்க விரும்பும் ‘சான்றோர் 25’ குழுவினர், மலாய் ஆலோசனை மன்றம் பற்றிக் கேள்விப்பட்டதே இல்லை என்றும் சொன்னார்கள். “பிரதமரை மட்டுமே சந்திக்க விரும்புகிறோம். வேறு யாரையும் அல்ல”, என முன்னாள் அரசதந்திரிகளான கமில் ஜாப்பாரும் நூர் பரிடா அரிப்பினும் இன்று …
கர்ப்பவதி பெண்ணும் குழந்தையும் நிலச் சரிவுக்குப் பலி
இன்று காலை கேமரன் மலையில் ஏற்பட்ட நிலச் சரிவில் ஒரு கர்ப்பவதியும் அவரது ஒரு வயது மகனும் கொல்லப்பட்டனர். அவரின் கணவருக்குக் கால் முறிந்தது. காலை மணி 5.30க்கு, எம். நித்யவதி(24)யும் அவரின் மகன் ஆர். ரூபனீஸ்வரனும் அவர்களின் வீட்டுக்குப் பின்புறம் ஏற்பட்ட நிலச் சரிவில் புதையுண்டு போனதாக…
விமானத்தைத் தேடும்பணி தொடர்கிறது
155 பயணிகளையும் ஏழு பணியாளர்களையும் ஏற்றிக்கொண்டு இந்தோனேசியாவின் சுராபாயாவிலிருந்து சிங்கப்பூருக்குப் பறந்து கொண்டிருந்தபோது காணாமல்போன ஏர் ஏசியா விமானம் பற்றி இதுவரை தகவல் ஏதும் இல்லை. அதைத் தேடும்பணி மும்முரமாக நடந்துகொண்டிருக்கிறது. தேடும் பணியில் உதவ அமெரிக்காவும் ஒரு கப்பலை அனுப்பி வைத்துள்ளது. யுஎஸ்எஸ் செம்ப்சன் என்னும் அந்த …
நாடு முழுக்க வெள்ள அகதிகள் எண்ணிக்கை சுமார் 250,000
நேற்றிரவு கிளந்தானிலும் திரெங்கானுவிலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை குறைந்த வேளையில் பகாங்கில் அவர்களின் எண்ணிக்கை உயர்ந்தது. தேசிய பாதுகாப்பு மன்றம் வெளியிட்ட தகவலின்படி இப்போது வெள்ள அகதிகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 250,000. கிளந்தானில்- 158,476 பகாங்கில்- 49,369 திரெங்கானுவில்- 31,477 பேராக்கில் - 7,611 ஜோகூரில் -…
பாஸ்: பட்ஜெட்டில் வெள்ள நிர்வாகத்துக்கு ரிம9.3மில்லியன் மட்டுமே
2015 பட்ஜெட்டில் இயற்கைப் பேரிடர்களுக்கு ரிம9.3 மில்லியன் மட்டுமே ஒதுக்கப்பட்டிருப்பது பேரிடர் நிவாரணத்துக்கு முன்னுரிமை கொடுக்கப்படவில்லை என்பதற்குத் தக்க சான்று என்று பாஸ் தலைவர் ஒருவர் கூறியுள்ளார். பெர்மாத்தா திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட தொகையுடன் ஒப்பிட்டால் இது அற்பத் தொகை என்று பாஸ் உதவித் தலைவர் சலாஹுடின் ஆயுப் கூறினார்.…
புதன்கிழமைவரை பருவ மழை தொடரும்
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு உதவுவதில் 5,000 ஆயுதப்படையினர் ஈடுபட்டிருப்பதாக தற்காப்பு அமைச்சர் ஹிஷாமுடின் உசேன் கூறினார். அமைச்சர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோரைச் சந்திக்கவும் அவர்களுக்கு உதவிப் பொருள்களை வழங்கவும் இன்று கிளந்தானுக்கு வருகை புரிந்தார் என பெர்னாமா கூறியது. கிளந்தானில் உள்ள மலேசியாகினி குழு, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு முறையான உணவு கிடைப்பதுதான் …
‘சான்றோர் 25’ பேருடன் எம்பிஎம் இரகசியக் கூட்டம்
மலாய் ஆலோசனை மன்றம் (எம்பிஎம்) ‘மலாய்ச் சான்றோர்’ 25 பேருடன் இரகசியக் கூட்டம் நடத்தும் என அதன் தலைமைச் செயலாளர் ஹசன் மாட் அறிவித்துள்ளார் கூட்டம் எப்போது என்பதை அவரால் தெரிவிக்க இயலவில்லை. ‘சான்றோர் 25’ பேரிடமிருந்து பொருத்தமான தேதி கிடைக்கவில்லை என்றாரவர். அவர்களைச் சந்திக்கும்படி பிரதமர் …
ஏர் ஏசியா பங்குகள் மூன்றாண்டுகளில் பெரும் வீழ்ச்சி
இன்று, திங்கள்கிழமை, ஏர் ஏசியா பங்குகள் 7.8 விழுக்காடு வீழ்ச்சி கண்டன. நேற்று, ஏர் ஏசியா விமானம் ஒன்று ஜாவா, சுராபாயாவிலிருந்து சிங்கப்பூருக்குச் செல்லும் வழியில் காணாமல்போனதை அடுத்து ஏற்பட்ட இவ்வீழ்ச்சியானது கடந்த மூன்றாண்டுகளில் அப்பங்குகளில் ஏற்பட்டுள்ள மிகப் பெரிய ஒருநாள் வீழ்ச்சியாகும். அச்சம்பவத்தால் பயணிகள் அந்நிறுவனத்தின் விமானங்களில் …
‘அரிசிப் பைகளில் என் முகத்தை அச்சிட வேண்டியிருந்ததால் உதவி தாமதமானதாக…
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கொடுக்கப்பட்ட தம் முகம் பதிக்கப்பட்ட அரிசிப் பைகள், 13வது பொதுத் தேர்தல் பரப்புரைகளில் கொடுக்கப்பட்டவை போக மீதமிருந்தவை என மாச்சாங எம்பி ஜஸ்லான் யாக்கூப் கூறுகிறார். அப்பைகளில் தம் முகத்தையும் பிஎன் என்பதையும் அச்சடிக்க முனைந்ததால்தான் வெள்ள உதவிப் பொருள்கள் கொடுப்பது தாமதமானது என்று குற்றம்…
எஸ்ஏஆர் தலைவர்: விமானம் கடலில் விழுந்திருக்கலாம்
155 பயணிகளையும் ஏழு பணியாளர்களையும் ஏற்றிக்கொண்டு இந்தோனேசியாவின் சுராபாயாவிலிருந்து சிங்கப்பூருக்குப் பறந்து கொண்டிருந்த ஏர் ஏசியா விமானம் நேற்று காணாமல் போனது. அந்த ஏர்பஸ் விமானம், உள்ளூர் நேரப்படி காலை 5.20-க்கு (மலேசிய நேரம் 6.20), ஜாவாவின் சுராபாயாவிலிருந்து புறப்பட்டு இரண்டு மணி நேரத்தில் சிங்கப்பூர் சென்றிருக்க வேண்டும்.…
ஏர்ஆசியா தலைவர்: இது எனது கடுந்துயரம்
இந்தோனேசியா, சுரபாயாவிலிருந்து இன்று காலையில் சிங்கப்பூருக்கு புறப்பட்ட ஏர்ஆசியா விமானம் காணாமல் போய்விட்ட சம்பவத்தை தமக்கு ஏற்பட்ட மிக மோசமான கடுந்துயரம் என்று அவ்விமான நிறுவன குழுமத்தின் செயல்முறை தலைவர் டோனி பெர்னேண்டஸ் கூறினார். இக்குழுமத்தின் தலைவர் என்ற முறையில் இச்சோதனையான நேரத்தில் தாம் அங்கே இருக்கப்போவதாக அவர்…


