நீர் பாதுகாப்பானதா? அருந்திக் காட்டுங்கள்: ஆட்சிமன்றத்துக்கு என்ஜிஓ சவால்

முன்னாள்  ஈயக் குட்டைகளிலிருந்து  எடுக்கப்படும்  நீர்  பாதுகாப்பானது  என்றால் சிலாங்கூர்  ஆட்சிமன்ற  உறுப்பினர்கள்  அதை  அருந்திக்  காட்டுவார்களா  என  ஒரு  என்ஜிஓ   சவால்  விடுத்துள்ளது. ஈயக்  குட்டைகளிலிருந்து  எடுக்கப்பட்டும்  நீரில் உலோகக் கலவை  அதிகமிருக்கலாம்  என்பதால்  அது  குடிப்பதற்குப்  பாதுகாப்பானதல்ல  என்று  கூறப்படுவதை  அடுத்து  ஊழலையும் வேண்டப்பட்டவர்களுக்குச்  சலுகை…

சாபாவில் அதற்குள் இன்னொரு கடத்தல் சம்பவம்

சாபாவில் கிழக்குக் கரையில்  சீனச்  சுற்றுப்பயணி  ஒருவர்  கடத்தபட்ட  சம்பவம்  அண்மையில்தான்   முடிவுக்கு  வந்தது. அதற்குள்  அதே  பகுதியில்  இன்னொரு  கடத்தல்  சம்பவம்  நடந்துள்ளது. செம்பூர்ணாவில்  பூலாவ்  திம்புன்  மாத்தாவுக்கு  மேற்கே  மீன்வளர்ப்புப்  பண்ணையிலிருந்து  அதன் பராமரிப்பாளரையும்  ஒரு  தொழிலாளரையும்  ஆயுதம்தாங்கிய  இருவர்  கடத்திச்  சென்றதாக  பெர்னாமா  கூறியது.…

அரசாங்கம் கேஎல்ஐஏ2 பேரங்காடியில் செலுத்தும் கவனத்தை விமான முனையத்தில் செலுத்துவதில்லை

பிஎன்  நாடாளுமன்ற  உறுப்பினர்  ஒருவர்,  கேஎல்ஐஏ2  விமான  நிலையத்தில்  பல  பிரச்னைகள்  நிலவுவதைச்  சுட்டிக்காட்டினார்.  அரசாங்கம்  “பொருள் விற்பனை  மையத்தில்”  காண்பிக்கும்  அக்கறையை விமான  முனையத்தின்  வசதிகளை  மேம்படுத்துவதில்  காண்பிப்பதில்லை. “விற்பனை  மையத்தைப்  பற்றி  மட்டுமே  கவலைப்படுவதாக  தெரிகிறது. விமான  முனையம்  என்னாவது? மக்கள்  பொருள்  வாங்கிச்  செல்வதற்கா …

மின் உற்பத்தியைவிட்டு விலகு: ஒய்டிலுக்கு டிஎன்பி தொழிற்சங்கங்கள் கோரிக்கை

தெனாகா  நேசனல் பெர்ஹாட் (டிஎன்பி)  தொழிற்சங்கங்கள்  நான்கும்,  முன்எப்போதுமில்லாத  வகையில்  ஒன்றுசேர்ந்து ஒய்டிஎல்  கார்ப்பரேஷனுடன்  உள்ள  உறவுகளை  டிஎன்பி  துண்டித்துக்கொள்ள  வேண்டும்  என்ற கோரிக்கையை  முன்வைத்துள்ளன. ஒய்டிஎல்-இடமிருந்து  மின்சாரம்  வாங்கும்  உடன்பாடு  2015-இல்  முடிவுக்கு  வரும்போது  டிஎன்பி   அதைப் புதுப்பிக்கக் கூடாது  என்று  அவை கூறின.  பாசிர்  கூடாங்கில் …

அரசாங்கம்: மலேசியா சமயச் சார்பற்ற நாடு அல்ல

அரசமைப்பில்  இஸ்லாத்துக்குச்  சிறப்பான  இடமளிக்கப்பட்டிருப்பதால்  மலேசியா  ஒரு  சமயச்  சார்பற்ற  நாடல்ல  என்று  அரசாங்கம்  வலியுறுத்தியுள்ளது. பிரதமர்துறை  அமைச்சர்  ஜமிர்  கீர்  பஹாரோம்,  கடந்த  வாரம்,  நாடாளுமன்றத்தில்  ஒஸ்கார்  லிங்  சாய்  இயு-வுக்கு  எழுத்துப்பூர்வமாக  அளித்த  பதிலில்  இவ்வாறு  தெரிவித்தார். ஷியாரியா  நீதிமன்றத்தின்  பார்வையில்  உள்ள  விவகாரங்களை  விசாரிக்கும் …

மலேசியா சமய சார்பற்ற நாடல்ல

  மலேசிய அரசமைப்புச் சட்டத்தில் இஸ்லாத்திற்கு அளிக்கப்பட்டிருக்கும் சிறப்பு நிலை காரணமாக மலேசியா ஒரு சமய சார்பர்ற நாடல்ல என்று அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது. டிஎபி நாடாளுமன்ற உறுப்பினர் ஓஸ்கார் லிங் சாய் இயு (டிஎபி-சிபு) எழுப்பி இருந்த கேள்விக்கு கடந்த வாரம் எழுத்து மூலம் பதில் அளித்த பிரதமர்துறை…

பைபிள்களை திருப்பித்தர மறுக்கும் ஜாயிஸ் மீது வழக்கு தொடுக்கலாம்

  மலேசிய பைபிள் கழகத்திலிருந்து ஜனவரியில் கைப்பற்றிச் சென்ற மலாய் மற்றும் இபான் மொழிகளிலான 321 பைபிள் பிரதிகளை சிலாங்கூர் இஸ்லாமிய சமய இலாகா திருப்பித்தர மறுத்தால் மலேசிய பைபிள் கழகம் அதன்மீது வழக்கு தொடுக்கலாம் என்று அரசமைப்புச் சட்ட நிபுணர் அப்துல் அசிஸ் பாரி இன்று கூறினார்.…

தொடரும் மத மாற்ற பிரச்சனைக்களுக்கு தேசிய பதிவு இலாகாதான் காரணம்

  இந்நாட்டில் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் மத மாற்றம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு காரணம் தேசிய பதிவு இலாகாதான் என்று கூறுகிறார் புருவாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் இங்கே கூ ஹாம். "சமீபகாலத்தில் மதம் சம்பந்தப்பட்ட சச்சரவுகளும் பதற்றங்களும் ஏற்படுவதற்கு சில தரப்புகள், குறிப்பாக தேசிய பதிவு இலாகா, மலேசிய அரசமைப்புச்…

ஜிபிஎம்: ஐஜிபி பதவி விலக வேண்டும் அல்லது நீக்கப்பட வேண்டும்

  அரசியல் கட்சி மற்றும் அரசு சார்பற்ற மலேசிய செயல்திட்ட கூட்டமைப்பு நீதிமன்ற உத்தரவுக்கு பணிய மறுத்துள்ள மலேசிய போலீஸ் படையின் தலைவர் (ஐஜிபி) காலிட் அபு பாக்கார் உடனடியாக பதிவு விலக வேண்டும் அல்லது பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்று இன்று விடுத்துள்ள ஓர் அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளது.…

அபிம்: நஜிப்பின் கருத்து ஷியாரியா நீதிமன்றத்தை அவமதிக்கிறது

வெவ்வேறு  சமயத்தவர்  சம்பந்தப்பட்ட  பராமரிப்புச்  சர்ச்சைகளைக்  கூட்டரசு  நீதிமன்றத்துக்குக்  கொண்டுசெல்ல  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  பரிந்துரைத்திருப்பது  ஷியாரியா  நீதிமன்றத்தை  இழிவுபடுத்துவதாகும்  என  மலேசிய  இஸ்லாமிய  இளைஞர்  இயக்கம் (அபிம்) குற்றம்  சாட்டியுள்ளது. “கூட்டரசு  அரசமைப்பின்  பகுதி 121 (1ஏ), இஸ்லாம்  சம்பந்தப்பட்ட  விவகாரங்களில்  தீர்ப்பளிக்கும்   முழு அதிகாரத்தை …

நஜிப், ரோஸ்மாமீது பாலா குடும்பத்தினர் வழக்கு

காலஞ்சென்ற  (தனித் துப்பறிவாளர்) பி.பாலசுப்ரமணியத்தின்  குடும்பத்தினர்,  ஐந்தாண்டுகள்   நாடுகடந்து வாழ வேண்டிய  கட்டாயத்துக்கு  ஆளானதற்கு  இழப்பீடு  கேட்டு  பிரதமர்  நஜிப் ரசாக், அவரின்  துணைவியார்  ரோஸ்மா  மன்சூர்  உள்பட  ஒன்பதின்மர்மீது  வழக்கு  தொடுத்துள்ளனர். “புதிய  ஆதாரங்கள்”  கிடைத்ததன்  அடிப்படையில்  இந்த  வழக்கைத்  தொடுத்திருப்பதாக  அக்குடும்பத்தின் வழக்குரைஞர்  அமெரிக்  சித்து …

மயிஸ், ஏஜியை எதிர்க்கிறது; பைபிள்களைத் திருப்பிக் கொடுக்காது

சிலாங்கூர்  இஸ்லாமிய  மன்றம்(மயிஸ்) கடந்த  ஜனவரில் மலேசிய  பைபிள்  கழக(பிஎஸ்எம்)த்தில்  கைப்பற்றப்பட்ட  பைபிள்களைத்   திருப்பிக்  கொடுக்காது. அவ்வழக்கைக் கைவிடுவது  என்ற  சட்டத்துறைத்  தலைவர்  அப்துல்  கனி பட்டேய்லின்  முடிவு  ஏற்கத்தக்கதல்ல  என  மயிஸ்,  நேற்று  நடந்த  ஒரு  சிறப்புக் கூட்டத்தில் கூறியது. “வழக்கைத்  தொடராததற்குச்  சட்டத்துறை  தலைவர்  கூறும் …

தாமான் தேசாவில், கைவிடப்பட்ட நிலையில் ஒரு பள்ளி

தாமான்  தேசாவில்,  பத்தாண்டுகளாகக்  கைவிடப்பட்டுக்  கிடக்கும்  எஸ்கே  டானாவ்  பெர்டானா, பார்ப்பதற்கே  அருவருப்பாகக்  காட்சியளிக்கிறது. பள்ளியின்  நிலை  கண்டு  அங்குள்ள  குடியிருப்பாளர்கள்  கொதித்துப்  போயுள்ளனர். “கல்வி  அமைச்சு  மெதுவாக  செயல்படுகிறது. இந்த  இடம்   கண்ணறாவியாக  காட்சியளிப்பதுடன்   குப்பைமேடாகவும்  போதைப்  பித்தர்களின்  வசிப்பிடமாகவும்,  கொசுக்கள்  வளருமிடமாகவும்  மாறியுள்ளது”, என  சீபூத்தே …

முன்னாள்-ஐஜிபி: போலீசார் நீதிமன்ற உத்தரவுக்குக் கீழ்ப்படிய வேண்டும்

போலீசார்  ஈப்போ  உயர்  நீதிமன்ற  தீர்ப்பைப் பின்பற்றி  இந்திரா  காந்தியின்  மகளை  அவரிடமே  கொண்டுவந்து  கொடுக்க  வேண்டும்  என  முன்னாள்  இன்ஸ்பெக்டர்- ஜெனரல்   அப்  போலீஸ் (ஐஜிபி) மூசா  ஹசான்  கூறியுள்ளார். போலீஸ்  பிரசன்னா  திக்‌ஷாவை  மீட்டுக் கொண்டுவர  வேண்டும்  என்றும்  தவறினால்  ஏன்  செய்யவில்லை  என்ற  காரணத்தை …

‘குழந்தைப் பராமரிப்புச் சர்ச்சைகளில் நீதிமன்றத்தைவிட நடுவர் மன்றமே மேலானது’

இனங்களுக்கிடையில்  குழந்தை  பராமரிப்பு  தொடர்பில்  எழும்  பிரச்னைகளுக்குத்  தீர்வுகாண  மூவரடங்கிய  நடுவர்  மன்றம்  அமைப்பதே  நல்லது  என   மலேசிய  முஸ்லிம்  வழக்குரைஞர்  சங்கத்  தலைவர்  சைனுல்  ரிஜால்  அபு  பக்கார்  பரிந்துரைத்துள்ளார். அவ்வழக்குகளை  ஷியாரியா  நீதிமன்றத்துக்கோ, சிவில்  உயர்  நீதிமன்றத்துக்கோ  கொண்டுசெல்வதைவிட  இது  மேலானது  என்றாரவர். முஸ்லில்-அல்லாதார்  ஷியாரியா …

சிலாங்கூர் அம்னோ ஹுடுட் தீர்மானத்தை மீட்டுக்கொண்டது

ஹுடுட்  சட்டத்தை  அமல்படுத்தும்  சாத்தியக்கூறுகளை  ஆராய  வேண்டும்  என்று  கேட்டுக்கொண்டு  சட்டமன்றத்தில்  தாக்கல்  செய்த  தீர்மானத்தை    சிலாங்கூர்  அம்னோ  திரும்பப்  பெற்றுக்  கொண்டிருப்பதாக  சிலாங்கூர்  சட்டமன்ற எதிரணித்  தலைவர்  முகம்மட்  ஷம்சுடின் லியாஸ்  கூறினார். அத்தீர்மானம்  “தப்பெண்ணத்தை”  ஏற்படுத்தியதுதான்  இந்தப் பல்டிக்குக்  காரணம்  என்று  ஷம்சுடின்  மலேசியாகினி  தொடர்புகொண்டபோது …

மசீசவும் கெராக்கானும் இன்று அமைச்சரவையில் இடம்பெறும்?

இன்று பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்,  அமைச்சரவையை மாற்றி  அமைத்து  மசீச,  கெராக்கான்  தலைவர்களை  அமைச்சர்களாக  நியமிப்பார்  எனப்  பரவலாக  எதிர்பார்க்கப்படுகிறது. கெராக்கான்  தலைவர்  மா  சியு  கியோங்  பிரதமர்துறை  அமைச்சராகவும்  மசீச  தலைவர்  லியோ  தியோங்  லாயும்  துணைத்  தலைவர்  வீ கா  சியோங்கும்  முறையே  போக்குவரத்து …

நஜிப்: குழந்தைகள் பராமரிப்பு தகராறுகளை உச்சநீதிமன்றத்தின் மூலம் தீர்த்துக்கொள்ள வேண்டும்

  சமயம் காரணமாக ஏற்பட்டுள்ள குழந்தைகள் பராமரிப்பு சர்ச்சைகளை பெடரல் நீதிமன்றத்தை பயன்படுத்தி தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று பிரதமர் நஜிப் இன்று சம்பந்தப்பட்ட குடும்பங்களை கேட்டுக்கொண்டார். நீதிமன்றம் இந்த வழக்குகளுக்கு முன்னுரிமை வழங்கும் என்று அரசாங்கம் நம்புகிறது என்றாரவர். "சட்டத்துறை தலைவர் பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் கலந்தாலோசிப்பார். அனைவரும் நீதிமன்றத்தின்…

சமய வரம்புகளை மீறாதீர்கள்: பேராக் சுல்தான் அறிவுறுத்து

பேராக்  சுல்தானாக  அரியணை  அமர்ந்துள்ள  சுல்தான் நஸ்ரின் ஷா, தம்  முதலாவது  அரசவுரையில்,  இன, சமய  பிரச்னைகளால்  தோன்றியுள்ள  பதற்றநிலையைத்  தொட்டுப்  பேசியுள்ளார். மலேசியர்கள்  ஒருவர்  மற்றவரை  மதிக்க  வேண்டும்  என்றும்  சமய  எல்லைகளை  மீறக் கூடாது  என்றும்  அவர்  கேட்டுக்கொண்டார். பல  இனங்களை, சமயங்களை,  பண்பாடுகளைக்  கொண்ட …

இந்திராவின் குழந்தையைக் கண்டுபிடித்து கொண்டு வாருங்கள்: போலீசுக்கு நீதிமன்றம் உத்தரவு

  பாலர்பள்ளி ஆசிரியை இந்திரா காந்தியின் மகள் பிரசன்னா டிக்சாவை 30 நாள்களுக்குள் கண்டுபிடித்து கொண்டு வாருங்கள் என்று நேற்று ஈப்போ உயர்நீதிமன்றம் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளது. குழந்தையைக் கண்டுபிடித்து கொண்டுவரத் தவறினால் ஏன் உத்தரவுக்கு கீழ்ப்படியவில்லை என்று போலீசார் நீதிமன்றத்திற்கு பதில் கூற வேண்டும். நீதிமன்றம் இவ்வாறான உத்தரவு…

தியோ முஸ்லிம் அல்லர்: அவரது சடலத்தைத் திருப்பிக் கொடுக்க நிதிமன்றம்…

தியோ  செங்  செங் முஸ்லிம்  அல்ல  என்று  பினாங்கு  ஷியாரியா  நீதிமன்றம்  தீர்ப்பளித்தது. “சாட்சிகளின்  வாக்குமூலங்கள்  அவர்  இஸ்லாத்தைக்  கடைப்பிடிக்கவில்லை  என்பதைக்  காண்பிக்கின்றன”, என  நீதிபதி  ஸயிம்  முகம்மட்  யுடிம்  தீர்ப்பில்  குறிப்பிட்டார். எனவே,  அவரது  சடலத்தை  செங்  செங்-கின்  குடும்பத்தாரிடம்  ஒப்படைக்குமாறு  பினாங்கு  இஸ்லாமிய  விவகார  மன்ற(எம்ஏஐபிபி)…

பிகேஆர்: அரசாங்கம் யுஐடிஎம் வளாகங்கள் அமைக்க 5மடங்கு அதிகமாகச் செலவிடுகிறது

அரசாங்கம், ஆறு  மாநிலங்களில் ஆறு மாரா  தொழில்நுட்பப்  பல்கலைக்கழகங்களைக் கட்டுவதற்கு  முதலில் மதிப்பிட்டதைவிட  ஐந்து  மடங்கு  அதிகமாகச்  செலவிடுகிறது  என  பிகேஆர்  கூறியுள்ளது. ஆறு  வளாகங்களைக்  கட்டுவதற்கு  ரிம1.8 பில்லியன்  செலவாகும்  என்பது  முதலில்  செய்யப்பட்ட  மதிப்பீடு. ஆனால், அவற்றைக்  கட்டி, பராமரிக்கும்  பொறுப்பு  தனியார்  நிறுவனங்களிடம்  ஒப்படைக்கப்பட்டதை …

ஜோகூர் சுல்தான்: மாநில விவகாரங்களில் தலையிட மாட்டேன்

ஜோகூர்  சுல்தான், சுல்தான்  இப்ராகிம்  சுல்தான்  இஸ்கண்டார், மாநில நிர்வாகத்தில்  தாம்  தலையிடப்போவதில்லை  என்கிறார். ஜோகூர்  வீட்டுவசதி, சொத்து  வாரிய  சட்டவரைவுகூட  மந்திரி  புசாரின்  ஆலோசனை பெறுவதைத்தான்  வலியுறுத்துகிறது  என்று  சுல்தான்  நியு  ஸ்ரேய்ட்ஸ் டைம்ஸு(என்எஸ்டி)க்கு  வழங்கிய  நேர்காணலில்  கூறினார். அந்தச்  சட்டவரைவுப்படி, அவ்வாரிய  உறுப்பினர்கள்  நால்வரை  நியமிக்கும் …