"சுங்கை கோலோக் (Sungai Golok) ஆறு தொடர்ந்து வறண்டு வருவதால், சட்டவிரோத எல்லைக் கடப்புகள் குறித்து காவல்துறை கவலை கொண்டுள்ளதாக கிளந்தான் மாநில காவல்துறைத் தலைவர் யுசோஃப் மாமத் தெரிவித்துள்ளார்." சுங்கை கோலோக் ஆற்றின் நீர்மட்டம் குறைந்துள்ளதால், எல்லை தாண்டிய சட்டவிரோத ஊடுருவல்கள் அதிகரிக்கக்கூடும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.…
அஸ்மினின் முதல் பட்ஜெட்டில் வளர்ச்சிக்கு முன்னுரிமை
புதிதாக பொறுப்பேற்றுள்ள சிலாங்கூர் மந்திரி புசார் முகம்மட் அஸ்மின் அலி, விரைவில் தாக்கல் செய்யவுள்ள மாநில பட்ஜெட்டில் மேம்பாட்டுப் பணிகளுக்குக் கூடுதல் நிதி ஒதுக்க நினைக்கிறார். நடைமுறைச் செலவினத்தைக் குறைத்து மேம்பாட்டுச் செலவினத்தைக் கூட்டுவது அவரின் திட்டமாகும். மேம்பாட்டுச் செலவுகளைக் குறைத்துக்கொள்ள இயலாது என்கிறார் அவர். மாநில பட்ஜெட்டை …
ரிஸால்மானை அனுப்பி வைக்குமாறு நியு சிலாந்து கோரிக்கை
பாலியல் குற்றச்சாட்டை எதிர்நோக்க மலேசிய தூதரக அதிகாரியான முகம்மட் ரிஸால்மான் இஸ்மாயிலைத் திருப்பி அனுப்பி வைக்குமாறு நியு சிலாந்து அரசாங்கம் அதிகாரப்பூர்வமாகக் கேட்டுக்கொண்டிருக்கிறது. ஐந்து மாதங்களுக்கு முன்னர், முகம்மட் ரிஸால்மான், நியு சிலாந்தில் ஒரு பெண்ணிடம் கொள்ளையிட்டதற்காகவும் அவருடன் பாலியல் வல்லுறவு கொள்ள முயன்றதற்காகவும் கைது செய்யப்பட்டார் என்ற …
அக்டோபர் 16: தேச நிந்தனைச் சட்டத்திற்கு எதிராக வழக்குரைஞர்கள் பேரணி
தேச நிந்தனைச் சட்டம் 1948 க்கு எதிராக மலேசிய வழக்குரைஞர் மன்ற உறுப்பினர்களின் பேரணி அக்டோபர் 16 நடைபெறும் என்று அம்மன்றம் இன்று அறிவித்தது. கடந்த மாதம் நடைபெற்ற மன்றத்தின் சிறப்புக் கூட்டத்தில் இப்பேரணி நடத்தப்படுவதற்கு தீர்மானிக்கப்பட்டது. இப்பேரணிக்கு "அமைதிக்கும் சுதந்திரத்திற்குமான நடை 2014" என்று பெயர்கொடுக்கப்பட்டுள்ளது.…
இந்திய முஸ்லிம்களை இழித்துரைத்ததாக என்ஜிஓ தலைவர்மீது குற்றச்சாட்டு
மலேசிய இந்திய முற்போக்குச் சங்க(மிபாஸ்) தலைவர் ஏ.இராஜரத்தினம் இந்திய முஸ்லிம்களையும் இந்திய முஸ்லிம் காங்கிரஸையும் (கிம்மா) நிந்தனை செய்து கருத்து உரைத்ததாக குற்றம் சாட்டப்பட்டார். இராஜரத்தினம், ஆகஸ்ட் மாதம் முகநூலில் அந்தத் தேச நிந்தனை கருத்துகளைப் பதிவிட்டிருந்ததாக கிம்மா, உள்துறை அமைச்சில் புகார் செய்தது. அந்த 62-வயது ஹோட்டல்…
உலகின் தலைசிறந்த 200 பல்கலைக்கழகங்களில் மலேசியப் பல்கலைக்கழகம் எதுவும் இல்லை
டைம்ஸின் 200 தலைசிறந்த உலகப் பல்கலைக்கழகங்களின் ஆண்டுப் பட்டியலில் இவ்வாண்டும் மலேசியப் பல்கலக்கழகம் எதுவும் இடம்பெறவில்லை. சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் (என்யுஎஸ்), உலகின் தலைசிறந்த 25 பல்கலைக்கழகங்களின் வரிசையில் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. அந்த வரிசையில் இரண்டே இரண்டு ஆசியப் பல்கலைக்கழகங்கள்தாம் இடம் பிடித்துள்ளன. ஒன்று என்யுஎஸ் மற்றது தோக்கியோ …
கேவியெஸ்: டிஏபிதான் இனவாதக் கட்சி, அம்னோ அல்ல
ஈராண்டுகளுக்கு முன்னர் பிபிபி ஆண்டுக்கூட்டத்தில் பேசிய அதன் தலைவர் எம்.கேவியெஸ், பாரிசான் நேசனலில் இனப் பாகுபாடு காட்டப்படுவதாகவும் அதனால் அக்கூட்டணிக்கு ஆதரவு சரிந்து வருவதாகவும் கூறினார். ஆனால், இப்போது அந்த முன்னாள் துணை அமைச்சர் பாட்டை மாற்றிப் பாடுகிறார். அம்னோ இனவாதக் கட்சி என்று டிஏபி கூறியதை மறுத்து …
அஸ்மி ஷரோமுக்கு யுகேஎம்-இல் நுழைய அனுமதியில்லை
தேச நிந்தனைக் குற்றம் சாட்டப்பட்டுள்ள மலாயாப் பல்கலைக்கழக சட்டப் பேராசியர் அஸ்மி, நேற்றிரவு யுனிவர்சிடி கெபாங்சான் மலேசியா(யுகேஎம்)வுக்குள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. அஸ்மி தேச நிந்தனைச் சட்டம் பற்றி மாணவர்களிடையே உரையாற்ற அங்கு சென்றார் என்றும் ஆனால் அவர் பல்கலைக்கழக வளாகத்துக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது என்றும் காபோங்கான் மஹாசிஸ்வா …
அரசாங்கத்தின் ‘ஹரி ராயா பரிசு’:ரோன்95 விலையேற்றம்
ஹஜ்ஜுப் பெருநாள் கொண்டாடப்படவுள்ள வேளையில் திடீரென எண்ணெய் விலையை உயர்த்திய அரசாங்கத்தை பாஸ் தலைவர்கள் சாடியுள்ளனர். பிஎன் 13வது பொதுத் தேர்தலில் வென்ற பின்னர் ஏற்பட்டுள்ள இரண்டாவது விலையேற்றம் இதுவென சரவாக் பாஸ் துணை ஆணையர் ஜொப்ரி ஜராயீ இன்று ஓர் அறிக்கையில் கூறினார். “முஸ்லிம்கள் தியாகத் திருநாளைக் …
மலேசியாகினி: நீதிமன்றத்தில் இரு முறை வென்றும், அச்சிட்டு வெளியிட அனுமதி…
சுயேட்சை செய்தி இணையதளமான மலேசியாகினி ஒரு நாளிதழை அச்சிட்டு வெளியிட உரிமை உண்டு என்று நீதிமன்றம் இருமுறை தீர்ப்பளித்திருந்தும் அரசாங்கம் மலேசியாகினி செய்திருந்த மனுவை நிராகரித்திருக்கிறது. உள்துறை அமைச்சிடமிருந்து மலேசியாகினியின் தலைமை செயல்முறை அதிகாரி பிரமேஷ் சந்திரன் பெற்றுள்ள கடித்தில் மலேசியாகினியின் மனு நிராகரிக்கப்பட்டதற்கான காரணம் அந்த…
மலேசியாகினிக்கு இரண்டு தடவை வழக்கில் வெற்றி கிடைத்தது; பிரசுர உரிமம்…
மலேசியாகினிக்கு நாளிதழ் வெளியிடும் உரிமை உண்டு என்று நீதிமன்றங்கள் தீர்ப்பளித்துள்ள போதிலும் அரசாங்கம் பிரசுர உரிமம் கொடுக்க தொடர்ந்து மறுத்து வருகிறது. கடந்த வாரம், உள்துறை அமைச்சு தலைமை செயல் அதிகாரி பிரமேஷ் சந்திரனுக்கு அனுப்பிய கடிதத்தில், “மலேசியாகினி சர்ச்சையை உண்டுபண்னும் செய்திகளை வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருப்பதாலும் நடுநிலைமை …
ரோன் 95, டீசல் ஆகியவை 20 சென் உயர்கின்றன
எரிபொருள் விலை மீண்டும் உயர்கிறது. நள்ளிரவு தொடங்கி ரோன் 95, டீசல் ஆகியவை ஒரு லிட்டருக்கு 20 சென் உயரும் என உள்நாட்டு வாணிக, பயனீட்டாளர் விவகார அமைச்சு அறிவித்துள்ளது. இப்போது ரோன் 95-இன் விலை லிட்டருக்கு ரிம2.10 சென்னாகும். டீசல் ஒரு லிட்டருக்கு ரிம2-ஆக விற்கப்படுகிறது.
அன்வார், சிலாங்கூர் பொருளாதார ஆலோசகராக தொடர்ந்து இருப்பார்
சிலாங்கூர் மந்திரி புசார் அஸ்மின் அலி, பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிமை மாநிலப் பொருளாதார ஆலோசகராக தொடர்ந்து வைத்திருப்பார். அதற்கு சம்பளமாக அன்வாருக்கு மாதம் ரிம1 வழங்கப்படும். மாநிலப் பொருளாதார ஆலோசகரின் அலுவலகத்தை மூடியதுதான் முன்னாள் மந்திரி புசார் அப்துல் காலிட் இப்ராகிம் பதவியிலிருந்து விலகுவதற்குமுன் செய்த …
காலிட் கொண்டுவந்த சம்பள உயர்வை அஸ்மின் குறைப்பார்
சிலாங்கூர் மந்திரி புசார் அஸ்மின் அலி, மாநிலத்தின் நான்கு வகை உயர் அரசு ஊழியர்களின் அலவன்ஸ் உயர்வை மறு ஆய்வு செய்ய மாநில சட்டமன்றத்திடம் பரிந்துரைப்பார். அவரின் அலவன்ஸ் உள்பட, மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்கள், சட்டமன்றத் தலைவர், துணைத் தலைவர் ஆகியோரின் அலவன்சுகளை மறு ஆய்வு செய்வது இப்பரிந்துரையில் …
நள்ளிரவில் பெட்ரோல், டீசல் விலை உயர்கின்றது
மீண்டும் எரிபொருள் விலையேற்றம் காண்கின்றது. இன்று நள்ளிரவு தொடங்கி ரோன்95 மற்றும் டீசல் விலை ஒரு லீட்டருக்கு 20 சென் ஏற்றம் காண்கிறது. இன்று மாலை இந்த அறிவிப்பை உள்நாட்டு வாணிகம், பயன்பாட்டாளர் விவகாரம் மற்றும் கூட்டுறவு சங்கங்களுக்கான அமைச்சு செய்தது. தற்போது, ஒரு லீட்டர் ரோன் ரிம2.10…
அசிஸ் பாரி மீது கேள்விகளைப் பொழிந்தனர், ஆனால் பதில் கிடைக்கவில்லை
தேச நிந்தனைச் சட்டத்தின் கீழ் போலீசார் இன்று அரசமைப்புச் சட்ட வல்லுனரும் சட்ட பேராசிரியருமான அப்துல் அசிஸ் பாரியிடம் ஒரு மணி நேரத்திற்கு கேள்விகள் கேட்டனர். அவர் எதற்கும் பதில் அளிக்கப் போவதில்லை என்ற முடிவுடன் அமைதியாக இருந்தார். திடிரென்று அசிஸுக்கு எதிராக ஏகப்பட்ட போலீஸ் புகார்கள்…
சிலாங்கூரில் யார் ‘போஸ்’ என்பதை அஸ்மின் அன்வாருக்குக் காண்பிக்க வேண்டும்
புதிதாக நியமிக்கப்பட்டிருக்கும் சிலாங்கூர் மந்திரி புசார் அஸ்மின் அலி, சிலாங்கூர் மாநிலத்துக்கு யார் போஸ் என்பதை அன்வாருக்கும் அவரின் கையாள்களுக்கும் நிரூபிக்க வேண்டும் என்கிறார் மசீச முன்னாள் தலைவர் டாக்டர் சுவா சொய் லெக். அன்வாரின் இடத்துக்கு வரும் தகுதி பெற்றுள்ள அஸ்மின், தம் முத்திரையை அழுத்தமாக பதித்து …
ஹாங்காங் ஆர்ப்பாட்டங்களைத் தவிர்ப்பீர்: மலேசியர்களுக்கு அறிவுறுத்தல்
ஹாங்காங் தீவில் தொடர்ந்து நடைபெற்று வரும் மக்களாட்சி-ஆதரவு ஆர்ப்பாட்டங்களை விட்டு ஒதுங்கி இருக்குமாறு வெளியுறவு அமைச்சு மலேசியர்களுக்கு ஆலோசனை கூறியுள்ளது. இதுவரை இவ்வார்ப்பாட்டங்களில் மலேசியர் எவரும் காயமடைந்ததாகவோ கைதானதாகவோ தகவல் இல்லை. “ஹாங்காங்கில் உள்ள மலேசியர்கள் அதிக விழிப்புடன் இருந்து தங்கள் பாதுகாப்புக்குத் தேவையான முன்னேற்பாடுகளைச் செய்துகொள்ள வேண்டும்.…
கண்ணீர் புகைக்குண்டுகள் வெடிப்பதில் கைதேர்ந்த மலேசியப் போலீசிடம் ஹாங்காங் போலீஸ்…
ஆர்ப்பாட்டக்காரர்களைக் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி கலைக்கும் வித்தை ஹாங்காங் போலீசாருக்குத் தெரியவில்லையாம். அதை அவர்கள் மலேசியப் போலீசிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டுமாம். பிகேஆர் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் இப்படி கிண்டலடித்துள்ளார். ஹாங்காங் போலீசார் மக்களாட்சி-ஆதரவு ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைக்க 87 கண்னீர் புகைக் குண்டுகளை வெடித்தார்கள் என்ற செய்தி தொடர்பில் தேஜா …
ஆகக் கடைசியாக தேச நிந்தனைச் சட்டம் பாய்ந்திருப்பது கர்பாலின் உறவினர்மீது
சட்டக் கல்வி மாணவரான தல்பிந்தர் சிங் ஜில், தேச நிந்தனைச் சட்டத்தின்கீழ் நேற்றிரவு கைது செய்யப்பட்டார். முகநூலில் பூமிபுத்ராக்களின் உரிமைகள் பற்றியும் ஆட்சியாளர்கள் பற்றியும் கேள்வி எழுப்பியதற்காக அவர்மீது தேச நிந்தனைக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. நேற்றிரவு புக்கிட் அமான் சைபர் குற்றப் பிரிவு போலீசார் ஜெஸ்ஸல்டன் ஹைட்சில் உள்ள …
அல்லா விவகாரம்: நீதிமன்ற விசாரணைக்கான எஸ்ஐபியின் மனு ஏற்றுக்கொள்ளப்பட்டது
அல்லா என்ற சொல்லை பக்தர்கள் அனைத்து தேவாலாய கூட்டங்களிலும் பயன்படுத்துவது மீது ஒரு நீதிமன்ற விசாரணை கோரும் சீடாங் இன்ஜில் போர்னியோவின் (எஸ்ஐபி) மனுவை மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று அனுமதித்தது. அல்லா என்ற சொல் அடங்கிய கிறிஸ்துவ சமய புத்தகங்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதியையும் எஸ்ஐபி கோருகிறது.…
தேச நிந்தனை சட்டத்திற்கு விடப்பட்டுள்ள சவால் உயர்நீதிமன்றத்திற்கு செல்கிறது
மலாயா பல்கலைகழக சட்டத்துறை இணைப் பேராசிரியர் அஸ்மி ஷரோமுக்கு எதிராகச் சுமத்தப்பட்டிருக்கும் தேச நிந்தனைக் குற்றச்சாட்டை உயர்நீதிமன்றத்திற்கு அனுப்புவதென்று கோலாலம்பூர் செசன்ஸ் நீதிமன்றம் இன்று தீர்மானித்துள்ளது. இது சம்பந்தமாக அஸ்மியின் வழக்குரைஞர் கோபிந்த் சிங் டியோ தாக்கல் செய்திருந்த மனுவை செசன்ஸ் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டதை தொடர்ந்து இவ்வழக்கு…
அரசமைப்புச் சட்ட நிபுணர் அசிஸ் பாரி தேச நிந்தனை குற்றத்திற்காக…
சிலாங்கூர் மாநில மந்திரி புசார் நெருக்கடியின் உச்சகட்டத்தில் தெரிவித்த கருத்துக்காக அரசமைப்புச் சட்ட வல்லுனர் அப்துல் அசிஸ் பாரி தேச நிந்தனைக் குற்றத்திற்காக விசாரிக்கப்படும் இரண்டாவது அறிவுக்கழகத்தினராகிறார். மலேசியன் இன்சைடர் இணையதளத்தில் அசிஸ் பாரி தெரிவித்திருந்த கருத்துகளுக்காக நாளை காலை மணி 11.00 க்கு சபாக் பெர்ணம்…
அம்னோ போல் பாஸ் பக்கத்தானுக்கு தலைமை ஏற்க வேண்டும், இப்ராகிம்…
இரு-கட்சி முறையின் கீழ் பாரிசானுடன் போட்டியிட வேண்டுமென்றால், பாஸ் கட்சி பக்கத்தானுக்கு தலைமை ஏற்க வேண்டும் enRu பெர்காசா தலைவர் இப்ராகிம் அலி இன்று கூறினார். ஏன்? அம்னோவைப் போல் பாஸ் மலாய்க்காரர்களை பெரும்பான்மையாகக் கொண்ட கட்சி. அம்னோ பாரிசானை வழிநடத்துகிறது. மலேசிய இன அடிப்படையிலான மக்கள் தொகையை…


