ஐஜிபி: ஹுடுட் மீது சட்ட ரீதியான வாதங்கள் புரியலாம்

ஹுடுட்  அரசமைப்புக்கு  ஏற்ப  உள்ளதா  என்று  வாதமிடலாம். அதற்கு  அனுமதியுண்டு  ஆனால், ஹுடுட்  சட்டம்  பற்றி  விவாதிப்பதற்கு அனுமதியில்லை  என்கிறார் போலீஸ்  படைத்  தலைவர்  காலிட்  அபு  பக்கார். “இஸ்லாமிய  சட்ட  விவகாரங்கள்  பற்றிக்  கருத்துச்  சொல்லக்  கூடாது. அது  அரசமைப்புக்கு  ஏற்புடையதா  என்று விவாதிக்கலாம். பிரச்னையில்லை. “ஆனால்,…

கித்தா லவான் சனிக்கிழமை மிகப் பெரிய பேரணியை நடத்தும்

கித்தா  லவான்,  எதிர்வரும் சனிக்கிழமை  சோகோ  விற்பனை  வளாகத்தில்  மிகப்  பெரிய  பேரணி  ஒன்றுக்கு  ஏற்பாடு  செய்துள்ளது. அப்படியே  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கின்  மகள்  திருமணக்  கொண்டாட்டத்தில்  கலந்துகொள்ளவும்  அது  திட்டமிட்டுள்ளது. மார்ச்  28-இல்,  சோகோவிலிருந்து  கோலாலும்பூர்  மாநாட்டு  மையம்(கேஎல்சிசி)வரை  ஊர்வலம்  செல்லும்  திட்டமிருக்கிறது  என்றும்  ஆனால், …

கெராக்கான் தொடர்ந்துள்ள ஹூடுட் வழக்கில் கோபால் ஸ்ரீ ராம்

  கிளந்தான் மாநில அரசு இயற்றியுள்ள ஹூடுட் சட்டம் அரசமைப்புச் சட்டத்திற்கு முரணானது என்று அறிவிக்க வேண்டும் எனக் கோரி கெராக்கான் தொடர்ந்துள்ள வழக்கில் பெடரல் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி கோபால் ஸ்ரீ ராம் சட்ட ஆலோசகராக நியமிக்கப்பட்டிருக்கிறார். இதனை கெராக்கான் கட்சியின் இளைஞர் பிரிவு துணைத் தலைவரும்…

விசாரணை படுவேகம், குற்றவாளிக் கூண்டில் ஜிஎஸ்டி-எதிர்ப்பாளர்கள் 25 பேர்

திங்கள்கிழமை   கிளானா  ஜெயாவில்  உள்ள  கூட்டரசுப்  பிரதேச  சுங்கத்  துறை  வளாகத்தில்  உள்ளமர்வுப்  போராட்டம்  நடத்திய  சமூக  ஆரவலர்களில்  25-பேர்  இன்று  நீதிமன்றத்தில்  நிறுத்தப்பட்டனர். அவர்கள்  கைதான 48-மணி  நேரத்தில்  இது  நடந்துள்ளது. 2012 அமைதிப்  பேரணிச்  சட்டத்தின்  பிரிவு 21(1) (டி)-இன்  கீழும்  அத்துமீறலுக்காக குற்றவியல்  சட்டத்தின் …

ஜி25: ஹுடுட்டை ஏற்பது மிதவாதத்தைக் கைவிடுவதாக பொருள்படும்

கூட்டரசு  அரசமைப்பை  நிலைநிறுத்தி ஹுடுட்  சட்டம்  கொண்டு  வருவதைத் தடுக்க  வேண்டும்  என  மலாய்ச்  சான்றோர்கள்  25-பேரடங்கிய  குழு  புத்ரா  ஜெயாவைக்  கேட்டுக் கொண்டிருக்கிறது. நாடு  சுதந்திரம்  பெற்றதிலிருந்து  மலேசியா  மிதவாதப்  பாதையைத்  தேர்ந்தெடுத்து  அந்தப்  பாதையில்தான்  புத்ரா  ஜெயா  நாட்டைச்  செலுத்திக்  கொண்டிருக்கிறது  என  அக்குழு இன்று …

பிரதமர்: தேச நிந்தனைச் சட்டத்துக்காக ‘வருத்தப்பட வேண்டியதில்லை’

பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  1948  தேச  நிந்தனைச்  சட்டம்  தொடர்ந்து   பயன்படுத்தப்படுவதை  இன்று  தற்காத்துப்  பேசினார். இதே  சட்டத்தைத்தான் 2012-இல்  எடுத்தெறியப்  போவதாக  அவர்  கூறினார். பிறகு  கடந்த  ஆண்டில்  முடிவை  மாற்றிக்  கொண்டார். இன்று,  கோலாலும்பூரில்  208-வது  போலீஸ்  தினக்  கொண்டாட்டத்தில்  உரையாற்றிய  நஜிப்,  அச்சட்டத்தைத் …

ஐஜிபி-யை விலக்கக் கோரும் அவசரத் தீர்மானம்: பிகேஆர் தாக்கல் செய்தது

பிகேஆர்,  போலீஸ்  படைத்  தலைவர்  காலிட்  அபு  பக்காரின்  நடத்தைப்  பற்றி  விவாதிக்கவும்  நாடாளுமன்ற  உறுப்பினர்களுக்கு  எதிராக  அவர்  தேச  நிந்தனைச்  சட்டத்தைப்  பயன்படுத்துவதற்காக  அவரைப்  பதவி  நீக்கம்  செய்யவும் அவசரத்  தீர்மானமொன்றைப்  பதிவு  செய்திருக்கிறது. பிகேஆர்  பாயான்  பாரு  எம்பி  சிம்  ட்ஸே  ட்ஸின்  அத்தீர்மானத்தை  மக்களவைத் …

விசாரணையை 24-மணி நேரத்தில் செய்து அரசியல் கைதுகளை முடிவுக்குக் கொண்டு…

போலீசார்  அவர்களின்  விசாரணைகளை  விரைவாக  நடத்தி  24-மணி  நேரத்தில் முடித்துக்  கொள்ளப்  பார்க்க  வேண்டும். அப்படிச்  செய்தால்  யாரையும்  கைது  செய்ய  வேண்டிய  அவசியம்- குறிப்பாக  எதிரணியினரையும்  சமூக  ஆர்வலர்களையும்  பல நாள்களுக்கு  விசாரணைக்காக  தடுத்து  வைக்க  வேண்டிய  அவசியமிருக்காது என  பிகேஆர்  இளைஞர்  பிரிவு  கூறுகிறது. இதற்கு …

சுங்கத்துறை ஜிஎஸ்டி கேள்விகளுக்குப் பதிலளிக்கும்

பொருள்,  சேவை  வரி  தொடர்பில் 106-கேள்விகளுடன்  சிலாங்கூர்  கிளானா  ஜெயாவில்  உள்ள  சுங்கத்துறை  வளாத்தை  முற்றுகையிட்ட  சமூக ஆர்வலர்களில்  80பேரை  போலீஸ்  கைது  செய்ததை  அடுத்து  அரச மலேசிய  சுங்கத்  துறை கேள்விகள்  அனைத்துக்கும்  பதிலளிக்க முன்வந்துள்ளது. “அக் கேள்விகளுக்குப் பதிலளிப்போம். “முடிந்த  விரைவில்  எல்லாக்  கேள்விகளும்  அவற்றுக்கான …

விவேகனந்தா ஆசிரம்: பாரம்பரிய சொத்தாக அறிவிக்க ஆட்சேபம்

  கோலாலம்பூர், பிரிக்பீல்ட்ஸ்சில் அமைந்திருக்கும் விவேகனந்தா ஆசிரம நிலத்தில் பல மாடிகளைக் கொண்ட கொண்டோக்களும் வாணிப மையமும் அமைக்க அந்த ஆசிரமத்தின் அறங்காவலர்கள் எடுத்திருந்த முடிவிற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்த ஆசிரமத்தை பாரம்பரிய சொத்தாக அறிவிக்கும் நோட்டீஸை கடந்த ஜனவரி 14 இல் பாரம்பரிய சொத்து…

ஐஜிபி: ஹுடுட் பற்றிக் கேள்வி எழுப்புவது ஐஎஸ்ஸுக்கு கோபத்தை உண்டு…

ஹுடுட்  பற்றிக்  கேள்வி  எழுப்ப  வேண்டாம்  என்று  போலீஸ்  படைத்  தலைவர் (ஐஜிபி) காலிட்  அபு  பக்கார் கேட்டுக்கொண்டிருக்கிறார். அதனால் பயங்கரவாத  அமைப்பான  இஸ்லாமிய  அரசு(ஐஎஸ்)  சினமடைந்து  பதில் நடவடிக்கையை  மேற்கொள்ளலாம்  என்றவர்  எச்சரித்தார். “இஸ்லாம்  பற்றியும்  ஹுடுட்  பற்றியும்  வெறுமனே  கருத்துச்  சொல்லிக்  கொண்டிருக்க  வேண்டாம்  என்பதை …

மஸ்லான்: ஜிஎஸ்டி எதிர்ப்பாளர்கள் முறையாக கேட்டிருந்தால் பதில் கிடைத்திருக்கும்

ஜிஎஸ்டி எதிர்ப்பாளர்கள்  சுங்கத்  துறை வளாகத்தை  முற்றுகை  இடாமல்  இருந்திருந்தால்  அவர்களின்  106  கேள்விகளுக்கும்  விடை  கிடைத்திருக்கும்  என  நிதி  துணை  அமைச்சர்  அஹ்மட்  மஸ்லான்  கூறினார். “அவர்கள்  முறையாகக்  கேட்டிருந்தால்  அவர்களின்  கேள்விகளுக்கு  விடை  கிடைத்திருக்கும்”. மஸ்லான்  இன்று  புத்ரா  உலக வாணிக  மையத்தில் ஜிஎஸ்டி-க்கும்  மற்ற …

ஜிஎஸ்டி எதிர்ப்பாளர்கள் விசாரணைக்காக 2நாள் தடுத்து வைக்கப்படுவர்

நேற்று கிளானா  ஜெயா  சுங்கத்  துறை வளாகத்தில் ஜிஎஸ்டி- எதிர்ப்பு  ஆர்ப்பாட்டத்தில்  கைது  செய்யப்பட்ட  29  பேரை  2 நாள்களுக்குத்  தடுத்து வைக்க  நீதிமன்ற  ஆணையைப்  போலீசார்  பெற்றுள்ளனர். 29 பேரில்  25 பேர்  சமூக  ஆர்வலர்கள். நேற்றைய  உள்ளமர்வுப்  போராட்டத்தின்போது  கைது  செய்யப்பட்டவர்கள்.  ஏனைய நால்வர்  நேற்றிரவு …

‘சீனர்கள் குர்ஆனை எரித்ததாக சொன்னாரே, அவர்மீதான விசாரணை என்னவாயிற்று?

போலீஸ்  படைத்  தலைவர் (ஐஜிபி) காலிட்  அபு  பக்கார்  இருபத்து  நான்கு மணி  நேரமும்  டிவிட்டரைச்  சுற்றிச்  சுற்றி  வ்ருகிறார். எதிரணி  அரசியல்வாதிகளும்  சமூக  ஆர்வலர்களும்  ஏதாவது  தவறு  செய்வதாக  தெரிந்தால்  விரைந்து  நடவடிக்கை  எடுக்கிறார். சில  மணி  நேரங்களில்  அவர்கள்  அள்ளிக்  கொண்டு செல்லப்பட்டுத்  தடுத்து  வைக்கப்படுகின்றனர்.…

ஜிஎஸ்டி ஆர்ப்பாட்டத்தில் நான்கு எம்பிகளுக்குக் காயம்; இருவர் கைது

நேற்று கிளானா  ஜெயா  சுங்கத்  துறை வளாகத்தில் ஜிஎஸ்டி- எதிர்ப்பாளர்கள் 80-பேர்  கைது  செய்யப்பட்ட  சம்பவத்தின்போது  தங்கள்  சகாக்கள்  சிலர்  நடத்தப்பட்ட   விதத்துக்கு  பக்கத்தான் ரக்யாட்  எம்பிகள்  கண்டனம்  தெரிவித்துக்  கொண்டனர். இரு எம்பிகள்- பிஎஸ்எம்-இன்  சுங்கை  சிப்புட்  எம்பி  டாக்டர்  மைக்கல்  ஜெயகுமார், பாஸ்  கோலா  கிராய் …

ஜிஎஸ்டியைத் தள்ளி வைப்பீர்: பெர்காசா இளைஞர்கள் கோரிக்கை

பொருள், சேவை  வரியின்  தாக்கம்மீது  விரிவான  ஆய்வு  செய்யப்பட  வேண்டும்  அதுவரையில்  அதன்  அமலாக்கத்தைத்  தள்ளிவைக்க  வேண்டும்  என  பெர்காசா  இளைஞர்  பிரிவு  கேட்டுக்கொண்டிருக்கிறது. இவ்வரியினால்  நடுத்தர,  குறைந்த  வருமானம்  பெறுவோர்  பாதிக்கப்படாதிருக்க  அதை  முறையாக  ஆராய்ந்து   திருத்தங்கள்  செய்யப்பட  வேண்டும்  என்று   பெர்காசா  இளைஞர் பிரிவின்  தகவல்…

ஹுடுட் சட்டம் சாத்தியமில்லை என்கிறார் சட்ட அமைச்சர்

இந்நாட்டில்  ஹுடுட்  சட்டம்  கொண்டுவருவது  பொருத்தமற்றது  எனச்  சுற்றுலா  அமைச்சர்  நஸ்ரி  அப்துல் அசீஸ்  மொழிந்ததை  வழிமொழிந்திருக்கிறார் நடப்பில்  சட்ட  அமைச்சர்  நன்சி  ஷுக்ரி. நஸ்ரி, நேற்று  இந்நாட்டில்  ஹுடுட்  கொண்டு  வருவது  சாத்தியமிலலை  என்றும்  அதனால்  அதைப்  பற்றிப்  பேசுவது  தேவையற்றது  என்றும்  கூறியதாக  அறிவிக்கப்பட்டிருந்தது. “நஸ்ரி …

ஹாடியுடன் உறவுகளை முறித்துக் கொண்டது டிஏபி

டிஏபி  பாஸ்  தலைவர்  அப்துல்  ஹாடி  ஆவாங்குடன்  உறவுகளைத்  துண்டித்துக்  கொண்டிருக்கிறது. “நேர்மையற்ற” ஒருவருடன்  இணைந்து பணியாற்ற  முடியாது  என்று  அது  கூறியது. நேற்றிரவு  நடைபெற்ற மத்திய  நிர்வாகக்  கூட்டத்தில்  இம்முடிவு  எடுக்கப்பட்டது. இம்முடிவினால்  “பக்கத்தான் ஓர்  இக்கட்டான  நிலைக்குத் தள்ளப்படும்”  என்பதை  அது  உணர்ந்தே  உள்ளது. பிகேஆரும் …

ஜிஎஸ்டி 80 எதிர்ப்பாளர்கள் கைது செய்யப்பட்டனர்

  ஜிஎஸ்டி சம்பந்தப்பட்ட தங்களுடைய 106 கேள்விகள்களுக்கு பதில் வேண்டும் எனக் கோரி பெட்டாலிங் ஜெயாவிலுள்ள கூட்டரசுப் பிரதேச கஸ்டம்ஸ் வளாகத்தில் கூடி உட்கார்ந்து போராட்டம் நடத்தியவர்களில் மொத்தம் 80 பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களில் எதிர்ப்புக் கூட்டத்தினரின் தலைவர் எஸ். அருள்செல்வம், சோலிடேரிட்டி அனாக்…

சிலாங்கூர் புத்ரா ஜெயாவுடன் நீர் உடன்படிக்கை மீதான பேச்சுகளை மீண்டும்…

கூட்டரசு  அரசாங்கம்  நீர்  உடன்படிக்கையில்  உள்ள  நிபந்தனைகள்படி  நடந்துகொள்ள  இணக்கம்  தெரிவித்ததால்  நிர்  உடன்படிக்கை  மீதான  பேச்சுகளைத்  தொடர  சிலாங்கூர்  மாநிலம்  ஒப்புக்கொண்டதாக  அம்மாநில மந்திரி  புசார்  அஸ்மின்  அலி  கூறினார். “முதன்மை உடன்படிக்கையின்படி நடந்துகொள்ள  கூட்டரசு  அரசாங்கம் ஒப்புக்கொண்டிருப்பதாக  எரிபொருள், பசுமைத் தொழில்நுட்பம், நீர்வள  அமைச்சிடமிருந்து  கடிதம்…

ஐஜிபி-யை நாடாளுமன்றக் குழு விசாரணைக்கு உட்படுத்த பக்கத்தான் கோரிக்கை

பக்கத்தான்  ரக்யாட்,  போலீஸ்  படைத்  தலைவர்(ஐஜிபி)  காலிட்  அபு  பக்கார்  நாடாளுமன்ற  உறுப்பினரின்  சலுகையைமீறி  நடந்து  கொண்டார்  என்பதால் அவரை  நாடாளுமன்ற  விசாரணைக்கு  உட்படுத்த  அனுமதி  கோரியுள்ளது. லெம்பா  பந்தாய்  எம்பி  நூருல்  இஸ்ஸா  அன்வார் நாடாளுமன்றத்தில்  ஆற்றிய  உரைக்காக  அவரைக்  கைது  செய்த  காலிட்,  நூருலின்  நாடாளுமன்றச் …

ஜிஎஸ்டி எதிர்ப்பாளர்கள் இரவை லாக்-அப்பில் கழிக்க நேரலாம்

பொருள், சேவை வரி  தொடர்பில்  106  கேள்விகளுக்கு  விடை  கோரி,  பெட்டாலிங்  ஜெயாவில்  உள்ள  கூட்டரசுப்  பிரதேச  சுங்கத் துறை  வளாகத்தில் உள்ளிருப்புப் போராட்டம்  நடத்திய ஆர்ப்பாட்டக்காரர்கள் பலர் கைது  செய்யப்பட்டனர். ஆர்ப்பாட்டத்துக்குத்  தலைமைதாங்கிய  எஸ். அருட்செல்வனும்  கைதானவர்களில்  ஒருவர். “கேள்விகளுக்குப்  பதில் கிடைக்கும்வரை  இரவையும்  இங்கேயே  கழிக்கத் …

பாஸ் தலைவர்: கிட் சியாங்கின் யோசனை ‘அவசரப்பட்டுத் தெரிவிக்கப்பட்டது’

அரசமைப்பையும்  சட்ட  ஆளுமையையும்  பாதுகாக்க இரு  தரப்புகளையும்  சேர்ந்த  எம்பிகள்  சேர்ந்து  கூட்டு  அரசாங்கம்  அமைக்க  வேண்டும்  என்ற  டிஏபி  பெருந் தலைவர்  லிம்  கிட் சியாங்கின் கருத்து  “அவசரப்பட்டுத்  தெரிவிக்கப்பட்ட கருத்து”  என்கிறார்  பாஸ்  எம்பி  முஜாஹிட் யூசுப்  ராவா. ஹுடுட்  சட்டத்தின்  அமலாக்கம்  அரசமைப்புக்கு  உட்பட்டதா …