மலேசிய நாடாளுமன்றத்தில் மனநலப் பணியாளர்கள் பற்றாக்குறை குறித்த விவாதம் நாட்டில் நிலவி வரும் மனநலப் பணியாளர்களின் கடுமையான பற்றாக்குறை இன்று காலை நாடாளுமன்றத்தில் முக்கிய விவாதப் பொருளாக மாறியது. அதிகரித்து வரும் மனநலப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண புத்ராஜெயா (அரசாங்கம்) தனது முயற்சிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று நாடாளுமன்ற…
ஜாயிஸ் இயக்குனர் ஷா அலாம் புதிய மேயர்
ஷா அலாமின் புதிய மேயராக சிலாங்கூர் இஸ்லாமிய சமய இலாகா (ஜாயிஸ்) இயக்குனர் அஹமட் ஸாகிரின் முகமட் ஷாஆட் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நியமனம் கடந்த வெள்ளிக்கிழமையிலிருந்து அமலுக்கு வந்துள்ளது. கடந்த இரண்டு மாதங்களாக காலியாக இருந்த இப்பதவியை நிரப்பு வதற்காக இந்நியமனம் செய்யப்பட்டது என்று சிலாங்கூர் மாநில செயலாளர்…
தலைவரின் ஒப்புதலுடனோ ஒப்புதலின்றியோ மஇகாவில் மறுதேர்தல் நடப்பது உறுதி
கட்சித் தலைவர் ஜி.பழனிவேல் ஒப்புதல் கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் 15 உச்சமன்ற உறுப்பினர்களைக் கொண்டு மறுதேர்தல் நடத்துவதற்காக சிறப்புக் குழு ஒன்றை அமைக்கப்போவதாக உதவித் தலைவர் எம். சரவணன் கூறியுள்ளார். “ஒரு சிறப்புக் குழுவை அமைத்து மறுதேர்தலை நடத்தும்படி ஆர்ஓஎஸ் (சங்கப் பதிவகம்) பரிந்துரைத்துள்ளது. இதைத் தலைவரிடம் எடுத்துச் சொல்வேன்.…
மஇகா தனிப்பட்ட ஒருவரின் சொத்தல்ல: பழனிவேலுக்கு அறிவுறுத்து
மஇகா முன்னாள் வியூக இயக்குனர் எஸ்.வேள்பாரி, மஇகா கட்சித் தலைவர் ஜி.பழனிவேலின் தனிப்பட்ட சொத்தல்ல என்பதை அவருக்கு நினைவுறுத்தியுள்ளார். சங்கப் பதிவகம் (ஆர்ஓஎஸ்) கட்சியின் பதிவை இரத்துச் செய்ய அனுமதிக்கப்போவதில்லை என்று பழனிவேல் நேற்று கூறியதற்கு வேள்பாரி இவ்வாறு எதிர்வினையாற்றினார். “அவரது கூற்றிலிருந்து சட்ட நீதியில் மோதிப்பார்க்கத் தயாராகி…
நஜிப்புக்கு ஈ கோலாய் பாதிப்பு
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், ஈ கோலாய் பெக்டீரியாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார் என பிரதமர் அலுவலகத்தின் டிவிட்டர் செய்தி கூறுகிறது. நஜிப், கடந்த வாரம் வெள்ளப் பெருக்கு ஏற்பட்ட பல மாநிலங்களுக்கு வருகை மேற்கொண்டதன் விளைவாக ஈகோலாய் பாதிப்புக்கு ஆளானார் என அது கூறிற்று. “ஓய்வு எடுத்துக்கொள்ளுமாறு மருத்துவர்கள் ஆலோசனை …
புவா பற்றி எப்பிஐ-க்கு எழுதப்பட்ட கடிதம் வழக்கிலிலிருந்து அகற்றப்பட்டது
உள்துறை அமைச்சர் ஜாஹிட் ஹமிடி அமெரிக்க புலன் விசாரணைப் பிரிவு(எப்பிஐ)க்கு எழுதிய ஒரு கடிதம் சூதாட்டத் தலைவர் என்று கூறப்படும் ஒருவரின் எதிர்வாதத்துக்குப் பயன்படுத்தப்படுவதற்கு புத்ரா ஜெயா ஆட்சேபம் தெரிவித்ததை அடுத்து அக்கடிதம் நெவாடா மாவட்ட நீதிமன்றத்திலிருந்து மீட்டுக்கொள்ளப்பட்டது. டிசம்பர் 18-இல், ஜாஹிட் எழுதிய எப்பிஐ துணை இயக்குனர் …
மஇகா பதிவு ரத்து ஆகாது, பழனிவேலு உறுதியளிக்கிறார்
கட்சியின் தேர்தல் முறைகேடுகள் சம்பந்தமாக சங்கங்கள் பதிவகம் ம இகாவின் பதிவை ரத்து செய்வதற்கு தாம் அனுமதிக்கப் போவதில்லை என்று கட்சியின் தலைவர் ஜி. பழனிவேலு உறுதியளித்தார். பழனிவேலு கட்சியின் பதிவு ரத்து செய்யப்படுவதை விரும்புகிறார் என்று எழுந்த ஏராளமான குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, அவற்றில் கட்சியின் முன்னாள் பொருளாளர்…
1எம்டிபிக்கு எதிரான நடவடிக்கையைத் தொடர்கிறார் அம்னோ உறுப்பினர் கைருடின்
மலேசிய நிதி அமைச்சுக்கு சொந்தமான 1எம்டிபிக்கு எதிராக போலீஸ் புகர் செய்து ஒரு சர்ச்சையை கிளப்பியுள்ள கைருடின் அபு ஹசான் தற்போது அந்நிறுவனத்தில் காணப்படும் முறைகேடுகள் குறித்தும் நடவடிக்கை எடுப்பதில் தீவிரமாக இருக்கிறார். பத்து கவான் அம்னோ தொகுதி துணைத் தலைவரான ஹைருடின் விரைவில் தமது அறிக்கையை புக்கிட்…
பழனிவேலுவை தொடர்புகொள்ள முடியாததால் துணைத் தலைவர் ரோஸை சந்திக்கிறார்
மஇகாவின் மறுதேர்தல் விவகாரத்திற்கு இதுவரையில் எவ்வித தீர்வும் காணப்படவில்லை. சங்கங்களின் பதிவக அதிகாரி அவரது கடிதத்தில் இரு மஇகா கிளைகளின் பதிவு நாளை ரத்து செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார். ஆனால், இவ்விவகாரம் குறித்து கட்சியின் தலைவர் ஜி. பழனிவேலு எவ்விதத் திட்டவட்டமான நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறார். மேலும், அவருடன்…
சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் மீது கவனம் செலுத்துவீர், கள்ளச் சூதாட்ட பெரும்புள்ளிக்கு…
அமெரிக்காவில் குற்றம் சாட்டப்பட்டு விசாரனிக்காக வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருக்கும் கள்ளச் சூதாட்ட பெரும்புள்ளி பால் புவா அவருக்கு எதிராகச் சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகள் மீது கவனம் செலுத்துமாறு மலேசிய போலீஸ் படையின் தலைவர் காலிட் அபு பாக்கார் ஆலோசனை கூறியுள்ளார். அனைத்துலக குண்டர் கும்பலின் உறுப்பினர் என்று குற்றம் சாட்டப்படும்…
மஇகாவுக்கு புதிய தலைமைச் செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளார்
மஇகாவின் புதிய தலைமைச் செயலாளராக ஜி. குமார் அம்மன் மற்றும் புதிய வியூக இயக்குனராக ஆர். கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முறையே எ. பிரகாஷ் ராவ் மற்றும் ச.வேள்பாரி ஆகியோருக்கு மாற்றாக நியமிக்கப்பட்டுள்ளனர். இன்று வெளியிட்ட ஒரு செய்தி அறிக்கையில் மஇகா தலைவர் ஜி. பழனிவேலு இதனை அறிவித்தார்.…
ஹிண்ட்ராப் தலைவர் சரவாக்கில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது
முன்னாள் செனட்டரும் ஹிண்ட்ராப்பின் தலைவருமான பி.வேதமூர்த்தி சரவாக்கில் ஒரு கருத்தரங்கில் தேச நிந்தனைச் சட்டம் குறித்து உரையாற்றுவதற்கு இன்று காலை கூச்சிங் விமான நிலையத்தில் வந்திறங்கினார். ஆனால், அவர் குடிநுழைவுத்துறை அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார். அத்துறையின் மூத்த அதிகாரி வேதமூர்த்தி சரவாக்கில் நுழைவதற்கு சரவாக் மாநில முதலமைச்சர்…
முன்னாள் தலைமை நீதிபதி: சீனர்கள் அரசியலில் ஆதிக்கம் பெறுவதைத் தடுக்க…
கிளந்தானை தாக்கிய வெள்ளம் பாஸ் தலைமையிலான அம்மாநில அரசாங்கம் அம்னோவில் இருக்கும் அதன் சகோதர மலாயக்காரர்களுடன் இணைந்து கொள்வதற்கு தூண்ட வேண்டும் என்று முன்னாள் தலைமை நீதிபதி அப்துல் ஹமிட் முகம்மட் கூறுகிறார். பாஸ் கட்சியும் அம்னோவும் ஒன்றுபடுவதன் மூலம் சீனர்களின் வளர்ந்து வரும் அரசியல் ஆதிக்கத்தை…
சீசர் அல்லது ரோம், இரண்டில் ஒன்றை அம்னோ தேர்வு செய்ய…
ரோம் வேண்டுமா அல்லது சீசர் வேண்டுமா என்று ரோமர்கள் தேர்வு செய்ய வேண்டியிருந்ததைச் சுட்டிக் காட்டிய மூத்த செயதியாளர் காடிர் ஜாசின், அம்னோவும் பாரிசானும் அதே போன்ற சூழ்நிலையில் தற்போது இருப்பதாகக் கூறினார். நஜிப் வேண்டுமென்றால், அடுத்தப் பொதுத் தேர்தல் புத்ராஜெயாவை இழக்க வேண்டும். இதில் எது வேண்டும்…
உலகை வலம் வந்த பின்னர் விஐபி ஜெட் விமானம் பேங்கோக்கில்…
இரண்டு வார இடைவெளிக்குப் பின்னர் 9M-NNA என்ற பதிவு எண்ணைக் கொண்ட அரசாங்க விஐபிகளுக்கான விமானம் உலகைச் சுற்றி வந்த பின்னர் இன்று பிற்பகலில் பேங்கோக் வந்து சேர்ந்தது. இந்த இடைக்காலத்தில் பிரதமர் நஜிப்பின் துணைவியார் ரோஸ்மா மன்சூர் எங்கிருக்கிறார் என்ற கேள்வியும் எழுந்திருந்தது. நாட்டின் வெள்ளப் பேரிடரை…
கடும் மழையினால் சாபாவில் வெள்ளம்
தீவகற்ப மலேசியாவில் வெள்ள நிலைமையில் சற்று முன்னேறம் ஏற்பட்டிருக்கையில், சாபாவில் பெய்த கடும் மழையினால் பல நகரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. தாவவ் மற்றும் கோத்தா பெலுட் ஆகியவை பெரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. உயர் அளவிலான வெள்ளப் பெருக்கால் சாலைகள் பயன்படுத்தப்பட முடியாத நிலையில் இருக்கின்றன. வெள்ளப் பெருக்கால் தாவவ்,…
என்யுபிக்கு எதிரான அவதூறு வழக்கில் மே பேங்க் தோல்வி கண்டது
தேசிய வங்கி தொழிலாளர்களின் சங்கம் (என்யுபி) அதன் அகப்பத்தில் மே பேங்க் குறித்து அவதூறான அறிக்கைகளைப் பதிவேற்றம் செய்திருந்திருந்ததாகக் கூறி அச்சங்கம் மற்றும் அதன் தலைமைச் செயலாளர் ஜே. சோலமன் ஆகியோருக்கு எதிராக மே பேங்க் தொடுத்திருந்த வழக்கில் அது தோல்வி கண்டது. தொழிற்சங்கத்திற்கு எதிரான இவ்வழக்கை கடந்த…
ஏர்ஏசியா விபத்து: 16 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன
ஏர்ஏசியா சுரபாயா-சிங்கப்பூர் பயணித்தின் போது விபத்திற்குள்ளாகி மரணமடைந்த 162 பயணிகளில் இதுவரையில் 16 சடலங்கள் கடலிலிருந்து மீட்கப்பட்டுள்ளன. நேற்று ஒரு பயணியின் சடலம் கிழக்கு ஜாவாவில் வாழும் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை மணி 5.30 க்கு சுரபாயாவிலிருந்து புறப்பட்டு சிங்கப்பூர் நோக்கி பறந்து கொண்டிருந்த…
வெள்ளப் பேரிடர்: அன்வார் மன்னிப்பு கோரினார்
வெள்ளப் பேரிடரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்கு உடனடியாக நாடு திரும்ப இயலாமல் போனதற்காக எதிரணித் தலைவர் மன்னிபு கோரினார். ஆனால், இதனை ஒரு பிரச்சனையாக்க வேண்டாம் என்று அவர் கேட்டுக்கொண்டார். ஒத்துழைப்பு மற்றும் உதவி செய்ய விரும்புபவர்களுக்கு இடமளித்தல் ஆகியவற்றின் மீது கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொண்ட அன்வார்,…
ஏர்ஏசியா விபத்து: முதல் சடலம் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது
சுரபாயா-சிங்கப்பூர் பயணத்தின் போது விபத்திற்குள்ளான ஏர்ஏசியா பயணிகள் மற்றும் விமானப் பணியார்கள் ஆகிய 162 பேரில் முதலில் மீட்கப்பட்ட சடலம் இன்று அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஹயாதி லுட்பியா ஹமிட் என்பவரின் சடலம் சுரபாயா மருத்துவமனையிலிருந்து கிழக்கு ஜாவா, செடாத்தி மாவட்டத்திலுள்ள அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டதை கமாண்டர்…
பாஸ்: மரங்கள் வெட்டப்பட்டதுதான் கிளந்தான் வெள்ளத்துக்குக் காரணம் என்பது சரியல்ல
மரங்கள் பெருமளவில் வெட்டப்பட்டது கிளந்தானில் வெள்ளப் பெருக்கு ஏற்பட காரணமாக இருந்திருக்கலாம் என்பதை ஒப்புக்கொண்ட பாஸ் உதவித் தலைவர் சலாஹுடின் ஆயுப் ஆனால், அதுவே தலையாய காரணமாக இருக்க முடியாது என்பதையும் வலியுறுத்தினார். ஏனென்றால் மற்ற மாநிலங்களிலும் கடுமையான வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது என்றாரவர். “ஜோகூரில் பெரிய வெள்ளப்பெருக்கு …
பிகேஆர்: அரசாங்க உதவி நிபந்தனையற்று வழங்கப்பட வேண்டும்
பாஸ் கட்சியின் ஆட்சியில் உள்ள கிளந்தான் வெள்ளத்தால் சீர்குலைந்து கிடக்கும் வேளையில் கூட்டு அரசாங்கம் அமைக்கலாம் என்றொரு கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது. இக்கருத்தை முன்வைத்தவர் ஓர் அரசியல்வாதி அல்ல. அதே மாநிலத்தைச் சேர்ந்த ஒரு நிறுவனத் தலைவர். ஆனால், பிகேஆர் தலைமைச் செயலாளர் ரபிஸி ரம்லி அப்பரிந்துரையை ஒதுக்கித் தள்ளினார்.…
அன்வார்: இதுவே வரலாற்றில் மிக மோசமான வெள்ளம்
பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம், தம் புத்தாண்டுச் செய்தியில் கடந்த ஆண்டில் நிகழ்ந்த பல துயரச் சம்பவங்களைக் குறிப்பாக வெள்ளப் பேரிடரை நினைவுகூர்ந்தார். “2014, துன்பமும் துயரமுமாக, அதுவும் கிழக்குக்கரையை குறிப்பாக கிளந்தானை வெள்ளக்காடாக்கிவிட்டு முடிவுக்கு வந்துள்ளது. “நூறாயிரம் பேருக்குமேல் பாதிக்கப்பட்ட இவ்வெள்ளப் பேரிடரை வரலாற்றின் மிக …
மரங்களை வெட்டாதீர்:நஜிப் எச்சரிக்கை
ஆதாயம் கிடைக்கிறது என்பதற்காக மரங்களை விருப்பம்போல் வெட்டிச் சாய்க்கக் கூடாது; சுற்றுச்சூழலைப் பொறுத்தவரை அனைவரும் கூடுதல் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் எனப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் நினைவுறுத்தியுள்ளார். “மரங்களை ஆதாயம்தரும் பொருள்களாகப் பார்க்காதீர்கள். மரங்களுக்கென பணிகள் உண்டு. இயற்கை அன்னைக்குத் துரோகம் இழைத்தால் இதுபோன்ற பேரிடரைத்தான் …


