"சுங்கை கோலோக் (Sungai Golok) ஆறு தொடர்ந்து வறண்டு வருவதால், சட்டவிரோத எல்லைக் கடப்புகள் குறித்து காவல்துறை கவலை கொண்டுள்ளதாக கிளந்தான் மாநில காவல்துறைத் தலைவர் யுசோஃப் மாமத் தெரிவித்துள்ளார்." சுங்கை கோலோக் ஆற்றின் நீர்மட்டம் குறைந்துள்ளதால், எல்லை தாண்டிய சட்டவிரோத ஊடுருவல்கள் அதிகரிக்கக்கூடும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.…
வெளிநாட்டவர் ஒருவர் எம்ஏஎஸ் தலைவராகலாம்
மலேசிய விமான நிறுவனம் (எம்ஏஎஸ்) வெளிநாட்டவர் ஒருவரைத் தலைமை செயல் அதிகாரியாக (சிஇஓ) அமர்த்திக்கொண்டு அந்நிறுவனத்தைச் சீரமைக்கும் பொறுப்பை அவரிடம் ஒப்படைக்கலாம். அவர் விமானப் போக்குவரத்துத் தொழிலில் அனுபவம் வாய்ந்தவர் என ஒரு வட்டாரம் தெரிவித்ததாக த ஸ்டார் அறிவித்துள்ளது. அவரைத் தலைமை செயல் அதிகாரியாக நியமிக்க, எம்ஏஎஸ்ஸில்…
பங்: தேச நிந்தனைச் சட்டத்தை எதிர்ப்போரை அதே சட்டத்தைப் பயன்படுத்தி…
தேச நிந்தனைச் சட்டத்தை இரத்துச் செய்ய வேண்டும் என்று கோருவோருக்கு எதிராக அதே தேச நிந்தனைச் சட்டத்தைப் பயன்படுத்த வேண்டும் என கினாபாத்தாங்கான் எம்பி பங் மொக்தார் ராடின் வலியுறுத்தினார். “அச் சட்டத்தை இரத்துச் செய்ய வேண்டும் என்கிறார்கள். அப்படியென்றால் அவர்கள் தீய நோக்கம் கொண்டவர்கள் என்று தெரிகிறது.…
பாஸ் எம்பி: பீர் குடிக்கும் கொண்டாட்டங்களுக்கு அனுமதி கொடுக்காதீர்
ஒவ்வொரு ஆண்டும் செப்டெம்பரிலிருந்து அக்டோபர் வரையில் நடைபெறும் ஒரு பீர் கொண்டாட்டத்தில் ஒரு பிரபல்யமான பீரை விளம்பரப்படுத்தும் விளம்பரத்தட்டிகளை அரசாங்கமும் சம்பந்தப்பட்ட இலாகாகளும் அனுமதிக்கக்கூடாது என்று பாஸ் தெமெர்லோ நாடாளுமன்ற உறுப்பினர் நஸ்ருடின் ஹாசன் தமது முகநூலில் குறிப்பிட்டுள்ளார். ஐரோப்பாவில் நடைபெறும் ஜெர்மன் பீர் கொண்டாட்டத்தைப் பின்பற்றி…
டிஎபி எம்பி: எரிபொருள் வரி போடுங்கள்
அதிக வருமானம் ஈட்டுவதற்கு ஏதுவாக எரிபொருளுக்கான மானியத்தை குறைப்பதற்கு மாற்றாக பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றுக்கு வரி விதிக்கும் முறை குறித்து அரசாங்கம் சிந்திக்க வேண்டும் என்று டிஎபி ரவுப் நாடாளுமன்ற உறுப்பினர் அரிப் சாபிரி அப்துல் அசிஸ் கூறுகிறார். 1,600சிசிக்கு மேற்பட்ட கார்களுக்கு அவற்றின் வேறுபட்ட…
எரிபொருள் விலை-உயர்வு எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பாஸ் இளைஞர்களும் கலந்துகொள்வர்
புதன்கிழமை நாடாளுமன்றத்துக்கு வெளியில் நடைபெறும் எரிபொருள் விலை-உயர்வை எதிர்க்கும் ஆர்ப்பாட்டத்தில் பாஸ் இளைஞர் பகுதியும் கலந்துகொள்ளும். அதன் தலைவர் சுஹாய்சான் காயாட், உலக முழுவதும் எண்ணெய் விலை குறைந்துவரும்போது அரசாங்கம் எரிபொருள் விலையை உயர்த்துவதற்குக் காரணம் ஏதுமில்லை என்றார். “பொதுமக்கள் கிளர்ந்தெழுந்து எரிபொருள் விலை-உயர்வுக்கு எதிர்ப்புத் தெரிவிக்க இதுவே …
எம்பி: டிபிகேஎல் வெள்ளத்துக்குத் தீர்வு காண்பதை நிபுணர்களிடம் விட்டுவிட வேண்டும்
கோலாலும்பூர் மாநகராட்சி மன்றம்(டிபிகேஎல்) அடிக்கடி ஏற்படும் திடீர் வெள்ளப்பெருக்குக்குத் தீர்வுகாணும் பொறுப்பை நிபுணர்களிடம் ஒப்படைப்பதே நல்லது என டிஏபி எம்பி ஒருவர் கூறுகிறார். “தீர்வு காண்பது எப்படி என்பது டிபிகேஎல்லுக்குத் தெரியவில்லை. எனவே, பொறுப்பை நிபுணர்களிடம் ஒப்படைக்கப் பரிந்துரைக்கிறேன்” என லிம் லிப் எங் அறிக்கை ஒன்றில் கூறினார்.…
எம்பி: கைப்பற்றப்பட்ட பைபிள் விவகாரம் பற்றி இனிமேல்தான் யோசிக்க வேண்டும்
சிலாங்கூர் மந்திரி புசார் முகம்மட் அஸ்மின் அலி, மாநில அரசால் பறிமுதல் செய்யப்பட்ட பைபிள்கள் பற்றிக் கருத்துரைக்குமுன்னர் சம்பந்தப்பட்ட துறைகளின் விளக்கமளிப்புக்காகக் காத்திருக்கிறார். “சிலாங்கூர் இஸ்லாமிய சமயத் துறை(ஜாயிஸ்),, சிலாங்கூர் இஸ்லாமிய சமய மன்றம் (மாயிஸ்) ஆகியவற்றிடமிருந்து இன்னும் விளக்கம் பெறவில்லை. “அது பற்றி நிச்சயம் விவாதிப்போம். கடந்த …
இசி தேர்தல் தொகுதிகளைத் திருத்தி அமைப்பதற்கு பக்கத்தான் எம்பிகள் எதிர்ப்பு
தேர்தல் தொகுதி எல்லைகளைத் திருத்தி அமைக்கத் தேவையில்லை என பிகேஆர் தலைவர்கள் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். அப்படியே தேர்தல் தொகுதிகளைத் திருத்தி அமைக்கும் முயற்சி எதுவும் நடந்தாலும் அது நியாயமான முறையில் நடத்தப்பட வேண்டும் என்று பந்தாய் லெம்பா எம்பி நுருல் இஸ்ஸா அன்வார் கூறினார். அதுவே, மற்ற எம்பிகளின் …
மலேசியக் கடல்படை கலமொன்றைக் காணவில்லை
ஏழு பணியாளர்களுடன் அரச மலேசிய கடல்படையின் பீரங்கிப் படகு ஒன்று நேற்றிரவு சாபா கடல்கரைக்கு அப்பால் காணாமல்போனதைக் கடல்படைத் தலைவர் அப்துல் அசீஸ் ஜாபார் டிவிட்டரில் உறுதிப்படுத்தியுள்ளார். அதைத் தேடும் பணியில் நேற்றிரவிலிருந்து ஐந்து கப்பல்கள் ஈடுபட்டிருப்பதாகவும் அவற்றுடன் இன்று காலை அரச மலேசிய ஆகாயப்படை விமானங்கள் இரண்டும் …
“ஹாடியை வீழ்த்த அனைத்துலக சதித் திட்டம்”
பாஸ் கட்சியின் தலைவர் அப்துல் ஹாடி அவாங் மற்றும் அதன் உலாமா ஸுரா மன்றம் ஆகியவற்றை "அகற்றுவதற்கான" இயக்கம் பாஸ் கட்சியின் முன்னேற்றத்தினால் மன அமைதிகுலைந்துள்ளவர்களால் மேற்கொள்ளப்படுள்ள ஓர் அனைத்துலகத் சதித் திட்டம் என்று அக்கட்சியின் நிக் முகமட் அப்து நிக் அசிஸ் நேற்று அவரது முகநூலில்…
போம்கா: எரிபொருள் விலை உயர்வால் போக்குவரத்துச் செலவு கூடும்
ரோன்95 பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை 20 சென் உயர்ந்திருப்பதை அடிப்படையாக வைத்து வணிகர்கள் பொருள் விலைகளைக் கூட்டுவது முறையாகாது என்று பயனீட்டாளர் சங்கங்கள் கருதுகின்றன. ரோன்95 பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை உயர்வைச் சாதகமாகக் கொண்டு கொள்ளை இலாபம் தேட முனைவது பொறுப்பற்ற தனமாகும் என்று அவை …
சஞ்சீவன்: சொந்த பணத்தில் BMW, அதில் என்ன தவறு?
குற்றச்செயல் எதிர்ப்பு என்ஜிஒ மைவாச் தலைவர் ஆர். ஸ்ரீசஞ்சீவன் சமீபத்தில் இரண்டு பிஎம்டபுள்யு கார் எண் தட்டுகளுக்கு - BMW8 மற்றும் BMW11 - ரிம340,000 கொடுத்து ஏலத்தில் வாங்கியதற்காக கடுமையாக குறை கூறப்பட்டார். போலீசாரின் நடத்தைகளை கடுமையாக குறைகூறி வரும் சஞ்சீவன் தாம் அந்த இரு…
உதயகுமார்: இந்தியர்கள் பக்கத்தான் பக்கம் திரும்ப வேண்டும்
தேச நிந்தனைச் சட்டத்தின் கீழ் குற்றவாளியாக்கப்பட்டு 485 நாட்களை சிறையில் கழித்து அக்டோபர் 3 இல் விடுதலையான ஹிண்ட்ராப் தலைவர் பி. உதயகுமார் ஓரங்கட்டப்பட்டு, சோர்வடைந்து நிற்கும் இந்திய சமூகத்திற்கு புத்துயிர் ஊட்டும் நடவடிக்கையில் மீண்டும் இறங்குவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், அவர் இந்தியர்களை பக்கத்தான்…
பாக் லாவைப் போல் பிரதமரும் பதவியிலிருந்து தூக்கப்படலாம்
பிரதமர் பிஎன்னின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்; தவறினால் முன்னைய தலைவர்களுக்கு ஏற்பட்ட நிலைதான் அவருக்கும். முன்னாள் பிரதமர் அப்துல்லா அஹமட் படாவி, கொடுத்த வாக்குறுதியைக் காப்பற்றவில்லை என்பதால் பதவி இழந்ததை பார்டி ரக்யாட் மலேசியா நஜிப் அரசுக்கு நினைவுபடுத்தியது. அப்துல்லா மக்களின் துன்பத்தைப் பொருட்படுத்தாமல் புதிய தாராளமய …
ஆர்ஓஎஸ்: டிஏபியின் சிஇசி-க்கு இன்னும் அங்கீகாரம் இல்லை
டிஏபியின் மத்திய நிர்வாகக் குழு(சிஇசி) அங்கீகரிக்கப்பட்ட ஒன்று என அக்கட்சி கூறிக்கொண்டாலும் இன்னும் அதற்கு முறைப்படி அங்கீகாரம் கொடுக்கப்படவில்லை எனச் சங்கப் பதிவகம் கூறுகிறது “அவர்கள் எப்படி அவ்வாறு கூறிக்கொண்டிருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. எங்களுக்கு நீதிமன்றத்திலிருந்து அதன் தொடர்பில் எந்தத் தகவலும் இல்லை”, என ஆர்ஓஎஸ் துணை இயக்குனர் …
மசீச மலேசியாகினிக்குத் தடைபோடுவது ‘ சிறுபிள்ளைத்தனமானது’
கட்சியின் ஆண்டுக்கூட்டத்தில் செய்தி சேகரிக்க மலேசியாகினியை அழைப்பதில்லை என்ற மசீச மத்திய குழுவின் முடிவு மசீச முன்னாள் தலைவர்கள் இருவருக்குப் பெரும் வியப்பைத் தந்துள்ளது. முன்னாள் மசீச தலைவர் டாக்டர் சுவா சொய் லெக், மலேசியாகினி பலமுறை தமக்கு எதிர்ப்பாகவே செய்திகளை வெளியிட்டிருந்தாலும் கட்சி நிகழ்வுகளில் செய்தி சேகரிக்க …
புது எம்பி ஜெகோவி பாணியில் செயல்படுகிறார்
குப்பைத் தொட்டியோ சாக்கடையோ அரைக்கை வெள்ளைச் சட்டை அழுக்காகி விடுமே என்று யோசிப்பதில்லை உடனே இறங்கி வேலை செய்யத் தொடங்கி விடுகிறார் சிலாங்கூர் மந்திரி புசார் அஸ்மின் அலி. நேற்று ஒரு குப்பைத் தொட்டிக்குள்ளேயே அவர் இறங்கியதைக் காண்பிக்கும் படங்களைச் சமூக வலைத்தளங்களில் நிரப்பி அசத்தி விட்டார்கள் அவரின் …
ரம் தொழிற்சங்க உறுப்பினர்களின் வேலைநீக்கம் திரும்பப் பெறவேண்டும், எம்டியுசி
வேலைநீக்கம் செய்யப்பட்ட மலாயா ரயில்வே தொழிலாளர் சங்க (ரம்) உறுப்பினர்களை மீண்டும் வேலைக்கு சேர்த்துக் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கைக்கு மலேசிய தொழிற்சங்க காங்கிரஸ் நேற்று அதன் ஆதரவை அறிவித்தது. சுமார் 70 எம்டியுசி உறுப்பினர்களும் 100 ரயில்வே ஊழியர்களும் நேற்று கெரித்தா அப்பி தானா மலாயு…
தமிழ் நாளிதழ்கள் குறித்து இளஞ்செழியன் கூறிய கருத்து தவறுதலாக புரிந்துக்…
இன்று மலேசியாவின் முக்கிய தமிழ் நாளேடுகளில், திரு. இளஞ்செழியன் தமிழ் நாளேடுகள் குறித்து வெளியிட்ட கருத்து குறித்த எதிர்வினைகள் வெளிவந்திருந்தன. அவரைக் கருத்துக் குருடர் என்றும் தமிழ்ப்பத்திரிகைகள் குறித்து கருத்துரைப்பதற்கு அவருக்கு என்ன அருகதை இருக்கிறது என்றெல்லாம் எதிர்வினைகள் முன்வைக்கப்பட்டிருந்தன. இது குறித்து கருத்துரைக்கையில், தமிழ் நாளேடுகள் இந்நாட்டில்…
போலீசின் தோற்றத்தைப் பாதுகாக்க குற்றவியல் சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தக் கூடாது
போலீஸ் அதைக் குறைகூறுவோருக்கு எதிராக குற்றவியல் சட்டத்தைத் “தவறாகப் பயன்படுத்துவதாக” சுதந்திரத்துக்கான வழக்குரைஞர்கள் அமைப்பு(எல்எப்எல்) சாடியுள்ளது. அண்மையில் அச்சட்டத்தைப் பயன்படுத்தி பல கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பது குறித்து கருத்துரைத்த அவ்வமைப்பின் செயல்முறை இயக்குனர் எரிக் பால்சன், அச்சட்டம் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும் அச்சட்டத்தின் நோக்கம் குறைகூறலிலிருந்து போலீசைப் பாதுகாப்பதல்ல …
மசீச ஏஜிஎம்-முக்கு மலேசியாகினிக்கு அழைப்பில்லை
மசீச அடுத்த வாரம் நடைபெறும் அதன் ஆண்டுக் கூட்டத்தில் (ஏஜிஎம்) செய்திகள் சேகரிக்க மலேசியாகினியை “அழைப்பதில்லை” என முடிவு செய்துள்ளது. இன்று அதன் மத்திய செயல்குழுக் கூட்டத்தில் அம்முடிவு எடுக்கப்பட்டதைத் தலைமைச் செயலாளர் ஒங் கா சுவான் உறுதிப்படுத்தினார். “சில செய்தியாளர் கூட்டங்களில் தலைவர்கள் கூறியதை நீங்கள் திரித்து …
எரிபொருள் விலை உயர்ந்தாலும் சந்தை விலையைவிட அது குறைவுதான்
எரிபொருள் விலை அண்மையில் உயர்த்தப்பட்டிருந்தாலும் உலகச் சந்தை விலைப்பருவத்துடன் ஒப்பிட்டால் ரோன்95, டீசல் ஆகியவற்றின் விலை குறைவுதான். “ரோன் 95-க்கு பிஎன் அரசாங்கம் இன்னமும் உதவித் தொகை வழங்கிக் கொண்டுதான் இருக்கிறது. ஒவ்வொரு லிட்டருக்கும் ரிம0.28 வழங்கப்படுகிறது. டீசலுக்கு ரிம0.32”, என நிதி துணை அமைச்சர் அஹ்மட் மஸ்லான் …
எரிபொருளுக்கு ஜிஎஸ்டி உண்டா? டிஏபி கேட்கிறது
எரிபொருளுக்கு பொருள், சேவை வரி விதிக்கப்பட்டால், மலேசியர்கள் சந்தை விலையைவிட அதிக விலை கொடுக்க நேரிடும் என்கிறார் பேராக் டிஏபி பொருளாதார மேம்பாட்டுப் பிரிவு தலைவர் சோங் ஸெமின். உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து வீழ்ச்சி காணூம் என ராய்ட்டர்ஸ் செய்தி கூறுவதை அவர் சுட்டிக்காட்டினார்.…


