"சுங்கை கோலோக் (Sungai Golok) ஆறு தொடர்ந்து வறண்டு வருவதால், சட்டவிரோத எல்லைக் கடப்புகள் குறித்து காவல்துறை கவலை கொண்டுள்ளதாக கிளந்தான் மாநில காவல்துறைத் தலைவர் யுசோஃப் மாமத் தெரிவித்துள்ளார்." சுங்கை கோலோக் ஆற்றின் நீர்மட்டம் குறைந்துள்ளதால், எல்லை தாண்டிய சட்டவிரோத ஊடுருவல்கள் அதிகரிக்கக்கூடும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.…
குண்டு வெடிப்புக்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்படுவர்: நஜிப் சூளுரை
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், இன்று அதிகாலை புக்கிட் பிந்தாங்கில் நிகழ்ந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தைக் கண்டித்துள்ளார். அச்சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டு 13 பேர் காயமடைந்தனர். “இன்று காலை நிகழ்ந்த வன்செயலைக் கடுமையாகக் கண்டிக்கிறேன். “இப்படிப்பட்ட சட்டவிரோதச் செயல்களைப் பொறுப்பதற்கில்லை. “இதற்குக் காரணமானவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்படுவர்”, என்றாரவர். குண்டர் கும்பல்களின் …
அரசியலுக்காக சீனப் பள்ளிகளைப் பலியிடாதீர்
அம்னோ அரசியல் ஆதாயத்துகாக சீனத் தாய்மொழிப் பள்ளிகளைப் “பலிகடா” ஆக்கக் கூடாது என கெராக்கான் வலியுறுத்தியுள்ளது. அம்னோ செராஸ் தொகுதித் தலைவர் சைட் அலி அல்ஹாப்ஷி சீன மொழிப் பள்ளிகளை மூட வேண்டும் என்று மொழிந்திருப்பது குறித்து எதிர்வினையாற்றிய கெராக்கான் தலைமைச் செயலாளர் லியாங் டெக் மெங், பள்ளிகளை …
ஸுனாரின் இரண்டு கேலிச் சித்திர நூல்களுக்கான தடை அகற்றப்பட்டது
மேல்முறையீட்டு நீதிமன்றம், ஸுனாரின் இரண்டு நூல்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை ஏகமனதாக அகற்றியது. பறிமுதல் செய்யப்பட்ட ‘1 Funny Malaysia’ ‘Perak Darul Kartun’ ஆகிய இரண்டு நூல்களையும் அவரிடமே திருப்பிக் கொடுக்குமாறு நீதிபதி முகம்மட் அரிப் முகம்மட் யூசுப் உத்தரவிட்டார்.. அவரது முடிவை நீதிபதி தெங்கு மய்முன் துவான்…
பைபிளைக் கொளுத்தப்போவதாக மிரட்டுவது இஸ்லாத்தைப் பாதுகாப்பதாகாது
இஸ்லாத்தைப் பாதுகாக்கும் நோக்கில்தான் பைபிளைத் தீயிட்டுக் கொளுத்தப்போவதாக மிரட்டினார் என பெர்காசா தலைவர் இப்ராகிமை அதிகாரிகள் தற்காத்திருப்பதை எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம் சாடினார். “இது அம்னோவின் நிலைப்பாடு அல்லது அமைச்சரின் நிலைப்பாடு. (இஸ்லாம்) அதை (பைபிள் கொளுத்தப்படுவதை) என்றும் ஆதரித்ததில்லை. “நான் அறிந்தவரை இஸ்லாம் சமய நம்பிக்கைகளை,…
அதிகாலை குண்டு வெடிப்பில் புக்கிட் பிந்தாங் அதிர்ந்தது
இன்று அதிகாலை கோலாலும்பூர் புக்கிட் பிந்தாங்கில் ஓர் இரவு விடுதிக்கு வெளியில் நிகழ்ந்த ஒரு வெடிப்பில் குறைந்தது 14 பேர் காயமடைந்தனர். சன் கொம்ளெக்ஸுக்கு வெளியில் ஒரு காருக்கு அடியில் குண்டு வெடித்ததுதான் இதற்குக் காரணம் என ஊடகத் தகவல்கள் கூறின. குண்டு வைத்தவர்கள் குண்டர் கும்பலைச் சேர்ந்தவர்கள் …
பிரதமர் தலையிட்டு ஆகாயப் படைத் தளத்தைக் காக்க வேண்டும்
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், தெலோக் ஆயர் தாவாரில் உள்ள அரச ஆகாயப் படைத் தளத்தில் தனியார் மேம்பாட்டுப் பணியைத் தடுத்து நிறுத்தி அத்தளத்தைப் பாதுகாக்க வேண்டும் என அம்னோ தாசெக் குளுகோர் இளைஞர் பகுதித் தலைவர் முகம்மட் நஷ்ரோல் ஹிஷாம் அப்துல்லா கேட்டுக்கொண்டிருக்கிறார். அத்தளத்தை மேம்பாட்டு நிறுவனம் …
மலேசியா தேச நிந்தனைச் சட்டம் 1948 ஐ மீட்டுக்கொள்ள வேண்டும்,…
ஐநா மனித உரிமை நிபுணர்கள் குழு மலேசியா அதன் தேச நிந்தனைச் சட்டம் 1948 ஐ மீண்டுக்கொள்ள வேண்டும் என்று மலேசிய அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது என்ற செய்தியை ஐநா மனித உரிமைகள் மன்ற ஆணையர் அலுவலகம் இன்று பின்னேரத்தில் ஜெனிவாவில் வெளியிட்டது. அச்சட்டம் மாற்றுக் கருத்து கூறுதலை…
ஐஜிபி : போலீசிடம் இரட்டை நியாயம் இல்லை; ஜாஹிட்டையும் விசாரிப்போம்
தேச நிந்தனைச் சட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்படும் விசாரணைகளில் போலீசார் இரட்டை நியாயம் கடைப்பிடிப்பதாகக் கூறப்படுவதை போலீஸ் படைத் தலைவர்(ஐஜிபி) காலிட் அபு பக்கார் நிராகரித்தார். போலீஸ், உள்துறை அமைச்சர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி-இடமும் விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்யும். “குற்றம் நிகழ்ந்திருந்தால் விசாரணை தொடக்கப்படும். “யாரிடம் வாக்குமூலம் பதிவு …
நிக் நஸ்மி: சீனப்பள்ளிகள்தாம் பல்லினங்களும் பயிலும் பள்ளிகளாக விளங்குகின்றன
தாய்மொழிப் பள்ளிகள் இனங்களைப் பிரித்துவைப்பதாகக் கூறும் அம்னோ தலைவர்களின் வாதங்களை உடைத்தெறியும் வகையில் சீனப் பள்ளிகள்தாம் “பல்லினப் பள்ளிகளாக”க் காட்சி தருகின்றன என்கிறார் பிகேஆர் இளைஞர் தலைவர் நிக் நஸ்மி.. மலாய்காரப் பிள்ளைகள் உள்பட பல்லின பிள்ளைகளும் அங்கு பயில்வதைக் காண முடிகிறது என நிக் நஸ்மி கூறினார். பல்வகை கல்விமுறைகள் …
டிஏபி தலைமையகத்தைக் கொளுத்துவோம் என்ற மிரட்டலுக்கு எதிராக வழக்கு இல்லை:…
டிஏபி தலைமையகத்தைக் கொளுத்தப்போவதாகக் கூட்டரசு பிரதேச அம்னோ இளைஞர் பகுதி விடுத்த மிரட்டலுக்கு எதிராக “மேல்நடவடிக்கை இல்லை” என முடிவு செய்து சட்டத்துறைத் தலைவர் (ஏஜி) அலுவலகம் வழக்கை மூடியுள்ளது. உள்துறை அமைச்சர் ஜாஹிட் ஹமிடி, நாடாளுமன்றத்தில் எழுத்து வடிவில் தமக்களித்த பதிலின்வழி இத்தகவல் தெரிய வந்ததாக டிஏபி …
எம்எச்17 ஆய்வுக்குழு ஏப்ரலில்தான் விமானம் விழுந்த இடத்துக்குச் செல்லும்
மலேசிய விமான நிறுவன(எம்ஏஎஸ்)த்தின் எம்எச்17 விழுந்து நொறுங்கிய சம்பவத்தைப் புலனாய்வு செய்துவரும் அனைத்துலகக் குழு அடுத்த ஆண்டு ஏப்ரலில்தான் விமானம் விழுந்து நொறுங்கிய இடத்துக்கு மறுபடியும் செல்லும் எனத் தெரிகிறது. மலேசியா, ஆஸ்திரேலியா, நெதர்லாந்து ஆகிய மூன்று நாடுகளைக் கொண்ட அனைத்துலகக் குழு, குளிர்காலத்தையும் அப்பகுதியில் தொடரும் சண்டைகளையும் …
டிபிகேஎல்: வெள்ளத்துக்குத் தீர்வுகாணும் பொறுப்பை நிபுணர்களிடம் விடுவதற்கில்லை
கோலாலும்பூரில் ஏற்படும் திடீர் வெள்ளத்துக்குத் தீர்வுகாண வல்லுனர்களை அமர்த்த சாத்தியமில்லை என கோலாலும்பூர் மாநகராட்சி (டிபிகேஎல்) தலைமைச் செயலாளர் முகம்மட் அமின் நோர்டின் கூறினார். “திடீர் வெள்ளத்துக்குத் தீர்வு காண்பது எளிதான காரியமல்ல. அது பல தரப்பினர் சம்பந்தப்பட்ட வேலை”, என்றாரவர். டிஏபி செகாம்புட் எம்பி லிம் லிப் …
எம்பிகளுக்கு விரைவில் சம்பள உயர்வு
அடுத்த ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் சம்பள உயர்வு பெறுவர். அவர்களின் சம்பள உயர்வுக்குக் கொள்கை அளவில் ஒப்புக்கொண்டிருப்பதாக பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் நேற்று பிஎன் எம்பிகள், செனட்டர்கள் அடங்கிய கூட்டமொன்றில் கூறினார். சம்பள உயர்வு எவ்வளவு என்பது தெரியவில்லை. கேட்டதற்கு அதைத் தெரிவிக்க மறுத்தார் பிரதமர்துறை …
நாடாளுமன்றத்துக்கு வெளியில் எரிபொருள் விலை உயர்வு, ஜிஎஸ்டி எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்
இன்று காலை சுமார் 100 பேர் சிவப்பு உடை தரித்து நாடாளுமன்ற இல்லத்துக்கு வெளியில், எரிபொருள் விலை உயர்வுக்கும் பொருள், சேவை வரிக்கும் எதிர்ப்புத் தெரிவித்தனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் பாடல்கள் பாடியும் சுலோகங்களை முழக்கியும் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். பின்னர் அவர்களில் பாஸ் இளைஞர் தலைவர் சுஹாய்சான் காயாட்டும் என்ஜிஓ-களின் பிரதிநிதிகளும் …
குதப்புணர்ச்சி-2: அன்வாரின் மேல்முறையீடு விசாரணை நெருங்கி வருகிறது
எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம், அவரது குதப்புணர்ச்சி மீதான மேல்முறையீட்டு விசாரணைகான நாளை எண்ணத் தொடங்கியுள்ளார். அவரது முகநூல் பக்கம் விசாரணைக்கு இன்னும் 21 நாள்கள் இருப்பதாகக் கூறுகிறது. மேல்முறையீட்டு விசாரணைக்கு அக்டோபர்-28 தொடங்கி இரண்டு நாள்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதில், பெர்மாதாங் பாவ் எம்பி-யின் தலைவிதி தீர்மானிக்கப்படும். அவர் …
வல்லினத்தின் விருது
2.11.2014-ல் வல்லினம் இலக்கியக்குழு முதன் முறையாக 'வல்லினம் விருது' வழங்கும் நிகழ்வை நடத்துகிறது. விருது தொகையாக 5000 ரிங்கிட்டுடன் அ.ரெங்கசாமி அவர்களின் ஆவணப்படம் மற்றும் அவரது வாழ்வைச் சொல்லும் நூலும் இந்நிகழ்வில் வல்லினம் குழுவினர் மூலம் வெளியீடு காண்கிறது. இதே நிகழ்வில் இயக்குனர் லீனா மணிமேகலையும் கலந்துகொண்டு தனது…
அஸ்ரி: முஸ்லிம்-அல்லாதவர்கள் இஸ்லாமிய பள்ளிகளில் அனுமதிக்கப்பட வேண்டும்
முஸ்லிம்கள் மற்றும் முஸ்லிம் அல்லாதவர்களுக்கிடையில் நல்லுறவை பேணுவதற்கு முஸ்லிம் அல்லாதவர்கள் இஸ்லாமிய பள்ளிகளில் சேருவதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என்று முன்னாள் பெர்லிஸ் முப்தி அஸ்ரி ஸைனோல் அபிடின் பரிந்துரைக்கிறார். தற்போது ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் ஓர் உறுப்பினராக இருக்கும் அஸ்ரி, பல்லின மற்றும் பல்சமய சமுதாயங்களுக்கான தலைவர்களை உருவாக்குவதற்கு…
ஸைட்: ஐஎஸ் இருக்கட்டும், உங்கள் வீட்டு கொல்லைப்புறத்தில் நடக்கும் வன்முறையைப்…
முன்னாள் சட்டத்துறை அமைச்சர் ஸைட் இப்ராகிம் "மலேசிய இஸ்லாமிய நாடு" ஒரு வேளை இஸ்லாமிய நாட்டை விட (ஐஎஸ்) அதிக வன்முறையுடையதாக இருக்கலாம் என்று கூறுகிறார். அவர்களுடைய கொல்லைப்புறத்தில் நடத்தப்படும் வன்முறைகளைப் பார்க்குமாறு ஸைட் இப்ராகிம் பிரதமர் நஜிப்பையும் எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிமையும் கேட்டுக்கொண்டார். இஸ்லாமிய…
அம்னோ தலைவர்: தாய்மொழிப் பள்ளிகள் ஒற்றுமைக்குத் தடையாய் உள்ளன
ஒரே வகைப் பள்ளிகள் மட்டுமே இருப்பதை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும்.இவ்வாறு வலைப்பதிவில் பதிவிட்டிருக்கும் செராஸ் அம்னோ தலைவர் சைட் அலி அல்ஹாப்ஷி. தாய்மொழிப் பள்ளிகள் இன உணர்வுகளைத் தூண்டிவிடுவதாகவும் அவற்றை ஒழித்துக்கட்ட வேண்டிய தருணம் வந்து விட்டதாகவும் கூறினார். “இனங்களைப் பிரித்துவைக்க நினைத்த பிரிட்டிஷ் காலனிய நிர்வாகத்தில் உருவான …
கோபிந் சிங்: ரிஸால்மான் விவகாரத்தில் நஜிப் உண்மையைக் கூற வேண்டும்
பாலியல் வன்முறை குற்றச்சாட்டை எதிர்கொள்வதற்காக முகம்மட் ரிஸால்மான் நியுசீலாந்துக்கு அனுப்பப்படுவதில் காணப்படும் தாமதம் குறித்து பிரதமர் நஜிப் ரசாக் விளக்கம் அளிக்க வேண்டும் என்று டிஎபி பூச்சோங் நாடாளுமன்ற உறுப்பினர் கோபிந்த் சிங் டியோ கூறினார். விசாரணை மேற்கொள்ளப்படுவதற்கு வசதியாக மலேசியா ரிஸால்மானை நியுசீலாந்துக்கு திருப்பி அனுப்பும்…
உஷ்….அது இரகசியம்
கோடீஸ்வரர்கள் செலுத்தும் வரிப்பணத்தை வெளியிட முடியாது. அது இரகசியமானது என்கிறார் நிதி துணை அமைச்சர் அஹ்மட் மஸ்லான். “வருமான வரி வாரியம் வருமான வரி சட்டம் 1967, செக்சன் 138 க்குக் கட்டுப்பட்டு அதை வெளியிட முடியாதிருக்கிறது”, என்றவர் கூறினார். ஒவ்வொருத்தரும் செலுத்தும் வருமான வரி இரகசியமானது என …
ஏப்ரல் 1-இல் ஜிஎஸ்டி அமலாக்கத்தில் எந்த மாற்றமுமில்லை
பொருள், சேவை வரியால் பொருள் விலைகளில் ஏறபடக்கூடிய தாக்கம் குறித்து மக்கள் கவலை கொண்டிருந்தாலும் அதன் அமலாக்கம் திட்டமிட்டபடியே அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் தேதி நடைபெறும் என்பதை அரசாங்கம் மீண்டும் வலியுறுத்தியது. அரசாங்கமும் வணிகத்துறையும் ஜிஎஸ்டி-யை அமலாக்கத் தயாராக இருப்பதாய் லிம் லிப் எங்(டிஏபி- செகாம்புட்)-குக்கு வழங்கிய …
சிங்கப்பூரிலிருந்து புறப்பட்டுச் சென்ற வியட்நாமிய கப்பலைக் காணோம்
18 பணியாளர்களுடனும் 5,000 டன் எண்ணெயுடனும் மலேசியாவுக்கும் இந்தோனேசியாவுக்குமிடையில் பயணித்துக் கொண்டிருந்த வியட்நாமிய சரக்குக் கப்பலொன்றைக் காணவில்லை. வியாழக்கிழமை சிங்கப்பூரிலிருந்து புறப்பட்டுச் சென்ற அக்கப்பல் ஞாயிற்றுக்கிழமை வியட்நாமிய துறைமுகம் சென்றிருக்க வேண்டும் என வியட்நாம் கடலோர மீட்புப்பணி ஒருங்கிணைப்பு மைய துணை இயக்குனர் லூ டக் தங் தெரிவித்தார்.…


