PKR மகளிர் பிரிவு மற்றும் பெண்கள் உரிமை அமைப்பான SIS Forum, பேராக் அரசு திட்டமிட்டுள்ள ரிம 500 முதன்முறை திருமண ஊக்கத்தொகையை 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளன. இந்தத் திட்டம் 15 வயதுடைய சிறுவர்களுக்கும் பொருந்தும் வகையில் முன்மொழியப்பட்டதைத்…
சிருலைத் தேடிப் பிடிப்போம்: ஐஜிபி சூளுரை
தப்பியோடிய கொலையாளியும் போலீஸ் அதிரடிப் படைப்பிரிவின் முன்னாள் உறுப்பினருமான சிருல் அஸ்ஹார் உமர் எங்கிருந்தாலும் போலீஸ் அவரைத் தேடிப் பிடிக்கும் என்று போலீஸ் படைத் தலைவர் (ஐஜிபி) காலிட் அபு பக்கார் கூறினார். சிருல், இதற்குமுன் விடுவிக்கப்பட்டபோது அதை வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்டு நாட்டை விட்டுத் தப்பியோடி விட்டாரா என்பதையும் …
சிருல் எங்கே? வெளிநாட்டுக்கு ஓடிவிட்டாரா?
மங்கோலிய பெண் அல்டான்துயா ஷாரிபு கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அஸிலா ஹட்ரி, சிருல் அஸ்ஹார் உமர் இருவருமே குற்றவாளிகள் எனக் கூட்டரசு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆனால், போலீஸ் சிறப்பு அதிரடிப் பிரிவைச் (யுடிகே) சேர்ந்த சிருல்,43, இன்று நீதிமன்றம் வரவில்லை. அவரின் வழக்குரைஞரான அஹ்மட் ஸைடி சைனலுக்கும் அவரது …
1எம்டிபி கேய்மன் தீவிலிருந்து ரிம8.2பில்லியனையும் மீட்டுக்கொண்டது
அரசாங்க முதலீட்டு நிறுவனமான 1மலேசியா மேம்பாட்டு நிறுவனம் (1எம்டிபி), கேய்மன் தீவில் செய்திருந்த மொத்த முதலீட்டையும், ரிம8.24பில்லியன் ரிங்கிட்டையும், மீட்டுக்கொண்டிருப்பதாக ஒர் அறிக்கையில் கூறியது. கடந்த மாதம் எதிரணி எம்பிகள், கேய்மன் தீவில் அந்நிறுவனத்தின் நடவடிக்கைகளில் வெளிப்படைத்தன்மை இல்லை எனக் குறைகூறியபோது அதை மறுத்த 1எம்டிபி அதன் முதலீடுகளில் …
ஜாஹிட்டின் கடிதத்துக்கு மறுப்பு தெரிவித்தது மலேசியா அல்ல, அமெரிக்கா
சூதாட்ட மன்னர் என அழைக்கப்படும் பால் புவாவுக்கு ஆதரவாக அமெரிக்க புலனாய்வுத் துறை)எப்பிஐ)க்கு உள்துறை அமைச்சர் அனுப்பிய கடிதம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதற்கு மறுப்புத் தெரிவித்தவர்கள் அமெரிக்க அரசுத்தரப்பு வழக்குரைஞர்கள். மற்றபடி அஹமட் ஜாஹிட் ஹமிடி எழுதிய கடிதத்துக்கு ஆட்சேபம் தெரிவித்ததில் புத்ரா ஜெயாவுக்கு எந்தத் தொடர்புமில்லை என …
ஐஜிபி: பால்சன் கைது செய்யப்பட்டதை அரசியல் ஆக்காதீர்
சமூக ஆர்வலர் ஏரிக் பால்சன் நேற்றிரவு கைது செய்யப்பட்டதை “அரசியலாக்க வேண்டாம்” என போலீஸ் படைத் தலைவர் காலிட் அபு பக்கார் எல்லாத் தரப்பினரையும் எச்சரித்துள்ளார். கடந்த வாரம் டிவிட்டரில் செய்திருந்த ஒரு பதிவுக்காக அவர் தேச நிந்தனைச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டிருப்பதாக அவர் சொன்னார். “பல்லினச் சமுதாயத்தில் …
அல்தான்துயா கொலை: அஸிலா, சிருல் மரண தண்டனை நிலைநிறுத்தப்பட்டது
பெடரல் உச்சநீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகளின் அமர்வு அல்தான்துயா கொலை மேல்முறையீட்டில் அஸிலா மற்றும் சிருல் ஆகியோரை கொலைக் குற்றச்சாட்டிலிருந்து விடுவித்த மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை தள்ளுபடி செய்து அவர்கள் குற்றவாளிகள் என இன்று காலையில் தீர்ப்பளித்தது. பெடரல் நீதிமன்றத்தின் ஒருமித்த தீர்ப்பை நீதிபதி சுரியாடி வாசித்தார். "அரசு தரப்பு…
வழக்குரைஞர் பால்சன் தேச நிந்தனைக்காக கைது செய்யப்பட்டார்
எல்எப்எல் இயக்குனர் எரிக் பால்சன் இன்று பிரிக்பீல்ட்ஸ்சில் கைது செய்யப்பட்டார். அவரது கைது இஸ்லாமிய மேம்பாட்டு இலாகா (ஜாகிம்) தீவிரவாதத்தை வளர்க்கிறது என்று அவர் செய்திருந்த டிவிட்டுடன் தொடர்புடையதாக நம்பப்படுகிறது. தேச நிந்தனைச் சட்டம் செக்சன் 4 இன் கீழ் கைது செய்யப்பட்டிருப்பதாக லத்தீபா கோயா மலேசியாகினியிடம்…
அல்தான்துயா கொலை: அஸிலா மற்றும் சிருல் விதி நாளை நிர்ணயிக்கப்படும்
மங்கோலிய பெண் அல்தான்துயா கொலை வழக்கு சம்பந்தமான இறுதி முறையீட்டு தீர்ப்பை பெடரல் உச்சநீதிமன்றம் நாளை வெளியிடும். அல்தான்துயா 2006 ஆம் ஆண்டு அக்டோபர் 19 இரவு மணி 10.00க்கும் அக்டோபர் 20 நள்ளிரவு மணி 1.00க்கும் இடையில் இரண்டு போலீஸ் சிறப்பு நடவடிக்கை அதிகாரிகளால் ஷா…
மேஜர் பதவி நீக்கம்: தீர்ப்புக்கு எதிராக முறையிட மாட்டார்
13வது பொதுத் தேர்தலில் அழியா மை பயன்படுத்தப்பட்டது பற்றி ஆயுதப்படைகள் மன்றத்தின் ஒப்புதலின்றி ஊடகங்களிடம் பேசியதற்காக மேஜர் ஜைடி அஹ்மட் ஆகாயப்படையிலிருந்து நீக்கப்பட்டார். பொதுத் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மையை எளிதில் அழிக்க முடிகிறது என போலீசில் புகார் செய்ததற்காக அவர்மீது இராணுவ நிதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இன்று இராணுவ …
எரிக் பால்சன்மீதான விசாரணைக்கும் அம்னோவுக்கும் தொடர்பில்லை
வழக்குரைஞர் எரிக் பால்சன் தேச நிந்தனைச் சட்டத்தின்கீழ் விசாரிக்கப்படுவதற்கு அம்னோ கொடுத்த அழுத்தம்தான் காரணம் என்பது தவறு என்கிறார் அக்கட்சி உதவித் தலைவர் ஹிஷாமுடின் உசேன். பலரையும் போலவே பால்சனும் கூறுவது அம்னோவுக்கு எதிராக “எதிர்மறையான கருத்தை”த் தோற்றுவிக்கிறது என்று ஹிஷாமுடின் கூறினார். “எதிர்மறையான விவகாரங்களுக்கு அம்னோமீது பழி …
சூதாட்ட மன்னருக்கு ஆதரவாக ஜாஹிட் அனுப்பிய கடிதம் பற்றி அமைச்சரவைக்குத்…
உள்துறை அமைச்சர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி, கடந்த ஆண்டு லாஸ் வெகாஸில் கைது செய்யப்பட்ட சூதாட்ட மன்னர் பால் புவா குறித்து அமெரிக்க அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியது பற்றி அமைச்சரவைக்குத் தெரியாது. அமைச்சரவை முன்கூட்டியே “அதை விவாதிக்கவில்லை” என்று கூறிய துணைப் பிரதமர் முகைதின் யாசின், அவ்விவகாரத்தை நன்கு …
ஆறு மாதங்களில் கார் விலை உயரலாம்
உலகளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்து கொண்டும் அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்ந்து கொண்டுமிருந்தால் கார்களின் விலை உயரும் என்கிறது மலேசிய மோட்டார் வாகனக் கழகம். “ஆண்டின் நடுப்பகுதியில், கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து குறைந்துகொண்டும் யுஎஸ் டாலர் மதிப்புயர்ந்து கொண்டும் அதற்கெதிராக நாம் எதுவும் செய்யாதிருந்தால் (கார்களின்)…
பாஸ்: நாங்களின்றி டிஏபி-யால் வெற்றிபெற முடியாது
ஹுடுட் உள்பட, பல்வேறு விவகாரங்களில் பாஸ் கட்சியுடன் கருத்திணக்கம் காண முடியாத டிஏபி அந்த இஸ்லாமியக் கட்சியுடன் உறவுகளைத் துண்டித்துக்கொள்ளவும் தயாராக இருப்பதுபோல் தோன்றினாலும் அக்கட்சியால் தனித்து நின்று கூட்டரசு அரசாங்கத்தை அமைக்க இயலாது. சின் சியு டெய்லியின் நேர்காணலில் இவ்வாறு தெரிவித்த பாஸ் தலைமைச் செயலாளர் முஸ்தபா …
முக்குளிப்பாளர்கள் ஏர் ஏசியாவின் விமானத் தடப் பதிவியைத் தேடி எடுத்தனர்
இரண்டு வாரங்களுக்குமுன் 162 பேருடன் இந்தோனேசியக் கடலில் விழுந்த ஏர் ஏசியா விமானத்தின் விமானத் தடப் பதிவியை இந்தோனேசிய கடல்படையின் முக்குளிப்பாளர்கள் இன்று மீட்டெடுத்தனர். “இன்று காலை தேசிய போக்குவரத்துப் பாதுகாப்புக் குழுவிடமிருந்து ஒரு அறிக்கை கிடைக்கப்பெற்றது” என்று தேடல், மீட்புக் குழு அமைப்பின் தலைவர் பிரான்ஸிஸ்கஸ் பம்பாங்…
இறைவனின் நீதிமன்றத்தில் சந்திப்போம்: ஜைடி நீதிபதிகளிடம் கூறினார்
ஆகாயப் படை மேஜர் ஜைடி அஹ்மட், நீதிபதிகளை நோக்கி அவர்களின் செயலுக்கு இறைவனின் மன்றத்தில் தீர்ப்பளிக்கப்படும் என்றார். 13வது பொதுத் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட அழியா மை பற்றி ஊடகங்களிடம் பேசியது குற்றமே என இராணுவ நீதிமன்றம் தீர்ப்பளித்தை அடுத்து ஜைடி இவ்வாறு கூறினார். தண்டனையைக் குறைப்பதற்காக முறையிடும் வேளையில்…
மேஜர் ஜைடி குற்றவாளியே: இராணுவ நீதிமன்றம் முடிவு
ஒரு இராணுவ நீதிமன்றம், மேஜர் ஜைடி அஹமட், ஆயுதப்படை மன்றத்தின் ஒப்புதலின்றி அழியா மை பற்றி ஊடகங்களிடம் பேசியது குற்றமே என்று தீர்ப்பளித்துள்ளது. ஆனால், அக்குற்றத்துக்கு ஜைடி-க்கு என்ன தண்டனை கொடுப்பது என்று அது இன்னும் முடிவு செய்யவில்லை
மாபிம்: முஸ்லிம்களை தாராண்மைவாதிகள் அல்லது இல்லை என்று முத்திரை குத்தாதீர்
இஸ்லாத்தை தீவிரமானது அல்லது தாராண்மைவாதமானது என்று முத்திரை குத்தி முஸ்லிம் சமூகத்தை பிளவுபடுத்த முயற்சித்தவர்கள் பதற்றத்தையும் விபரீதமான சம்பங்களையும் தவிர்க்க அவ்வாறு செய்வதை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டனர். மாபிம் என்ற மலேசிய இஸ்லாமிய அமைப்புகளின் ஆலோசனை மன்றத்தின் தலைவர் முகமட் அஸ்மி அப்துல் ஹமிட் மேற்கூறப்பட்டவர்கள்…
ஐஜிபியின் மௌனம் போலீஸ் படையின் நன்பகத்தன்மைக்கு ஊறுவிளைவிக்கிறது
கள்ளச் சூதாட்ட பெரும்புள்ளி என்று கூறப்படும் பால் புவா குறித்து மலேசிய போலீஸ் படை அமெரிக்காவுக்கு தவறான தகவல் அளித்துள்ளது என்ற கூறப்படுவது பற்றி போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதால் அதன் மீதான நம்பகத்தன்மை பாதிக்கப்படுவதை அனுமதிக்ககூடாது. இதனால் போலீஸ் படையின் மீதான நம்பிக்கை உள்நாட்டில்…
‘எனக்குத் தெரியாமலேயே என் வீடு ஏலம் விடப்பட்டிருக்கிறது’
1மலேசியா மேம்பாட்டு நிறுவன(1எம்டிபி)த்துக்கு எதிராக போலீஸ் புகார் செய்ததால் அம்னோ உறுப்பினர்களின் கோபத்துக்கு ஆளான கைருடின் அபு ஹசான் அவருக்குச் சொந்தமான வீடு அவருக்குத் தெரியாமலேயே விற்பனைக்கு வந்திருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். கோலாலும்பூரில் அவருக்குச் சொந்தமான ஒரு வீடு ஏலத்தில் விடப்படுவதாக வலைப்பதிவர்கள் சொல்லித்தான் தெரிய வந்ததாக …
எப்பிஐ-க்கு ஜாஹிட் எழுதிய கடிதம் குறித்து ஏஜி மவுனம்
உள்துறை அமைச்சர் ஜாஹிட் ஹமிடி 14கே இரகசிய கும்பல் உறுப்பினர் என்று சந்தேகிக்கபப்டும் ஒருவருக்கு நற்சான்று கடிதம் ஒன்றை அமெரிக்கப் புலனாய்வுத் துறை(எப்பிஐ)க்கு அனுப்பி வைத்தது பற்றிக் கருத்துரைக்க சட்டத்துறைத் தலைவர் அப்துல் கனி பட்டேய்ல் மறுத்தார். இன்று, புத்ரா ஜெயாவில். நீதிபதிகள், வழக்குரைஞர்கள், நீதித்துறை அதிகாரிகள் கலந்துகொண்ட …
நீதித் துறையை ‘அநியாயமாக’க் குறை சொல்கிறார்கள்: சிஜே-யும் ஏஜி-யும் சாடல்
சில மூத்த வழக்குரைஞர்கள் நியாயமற்ற முறையில் நீதித் துறையையும் சட்டத்துறைத் தலைவர் அலுவலகத்தையும் குறை கூறி வருவதாக தலைமை நீதிபதி (சிஜே) அரிப்பின் ஜக்கரியாவும் ஏஜி அப்துல் கனி பட்டேய்லும் கூறினர். பெயர் குறிப்பிடப்படாத ஒரு செய்தித்தளத்தில் ‘சட்ட ஆளுமையை மதிக்காத நீதித்துறைக்குக் கண்டனம்’ என்ற தலைப்பில் வெளிவந்த …
எம்யுவில் கல்விச் சுதந்திரத்துக்கு ‘உத்திரவாதம்’ உண்டு
மலாயாப் பல்கலைக்கழகம் அதன் பணியாளர்கள் அரசியல் நடவடிக்கைகளை ஏற்பாடு செய்வதைத் தடுக்கும் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தாலும் பல்கலைக்கழகத்தில் கல்விச் சுதந்திரத்துக்கு உத்திரவாதமுண்டு என்று துணை வேந்தர் முகம்மட் அமின் ஜலாலுடின் கூறினார். அரசாங்கப் பல்கலைக்கழகமான அது மலேசிய அரசமைப்புச் சட்டங்களை மதிக்கிறது என அமின் கூறினார். அதில் கல்விச் …
ஐஜிபி: பாரிஸ் தாக்குதல் நமக்கு தேச நிந்தனைச் சட்டம் தேவை…
பாரிசில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்கள் 1948 தேச நிந்தனைச் சட்டத்தை வைத்திருப்பது அவசியம் என்பதைக் கோடிட்டுக் காட்டுகிறது என்கிறார் போலீஸ் படைத் தலைவர். “அதிலிருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். அதனால்தான் நமக்கு தேச நிந்தனைச் சட்டம் தேவைப்படுகிறது. யாரும் சமயத்தை இழிவுபடுத்த போலீஸ் இடமளிக்காது”, என டிவிட்டரில் ஐஜிபி …


