ஏழைகள் மற்றும் சிறுபான்மையினருக்கான நீதியை அரசாங்கம் ஒருபோதும் விட்டுக்கொடுக்காது, எந்தவொரு இனக்குழு மக்களையும் ஒடுக்குவதை பொறுத்துக்கொள்ளாது என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் கூறினார். "சமீபத்தில் மூன்று இந்திய ஆண்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை, ஒரு விசுவாசியாக, நான் ஏற்றுக்கொள்வது அல்லது மன்னிப்பது கடினம்" என்று அவர் இன்று மலேசிய…
பிள்ளைகளின் மதமாற்றத்தை இரத்துச் செய்ய விரும்புகிறார் தாயார்
தம் பிள்ளைகளின் மதமாற்றத்தை இரத்துச் செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார் எஸ்.தீபா. கடந்த வாரம் சிரம்பான் உயர் நீதிமன்றம், பிள்ளைகளைப் பராமரிக்குக் பொறுப்பைத் தம்மிடம் ஒப்படைத்தபோதுக்கூட அவருக்கு இந்த எண்ணம் வரவில்லை. ஆனால், முன்னாள் கணவர் இஸ்வான் அப்துல்லா, தம் ஆறு-வயது மகனைக் கடத்திச்சென்றதை அடுத்து பிள்ளைகளின் …
பிங் ஒலி நின்ற பின்னரும் தேடும் பணி தொடர்கிறது
எம்எச்370 ஆறு நாள்களாக கருப்புப் பெட்டியிலிருந்து எந்த சமிக்ஞைகளும் இல்லை. ஆனாலும், விமானத்தைத் தேடும்பணி நிற்கவில்லை. 12 விமானங்களும், 15 கப்பல்களும் 47,644 சதுர கிலோமீட்டர் பரப்பில் தேடும்பணியைத் தொடர்கின்றன. கருப்புப் பெட்டியின் மின்கலங்கள் செயலிழந்து சமிக்ஞைகள் வெளியிடப்படுவது அடியோடு நின்று போனால் அடுத்து என்ன நடக்கும்? வேறு…
காலிட்: பிகேஆர் அன்வாரை வெளியேற்றுவதா? அதற்கு இது தருணமல்ல
பிகேஆர் துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் அப்துல் காலிட் இப்ராகிம், கட்சியின் தலைமைப் பொறுப்பிலிருந்து அன்வார் இப்ராகிமை அகற்றும் நேரம் வந்துவிட்டதாகக் கூறப்படுவதை ஏற்கவில்லை. “அதற்கு இது நேரமும் அல்ல, அது கட்சிக்கு நல்லதுமல்ல”, என்று நேற்று அவர் செபராங் ஜெயாவில் செய்தியாளர் கூட்டமொன்றில் கூறினார். காலிட், கட்சி …
சிறுவன் கடத்தல் தொடர்பில் போலீசுக்கு மேலும் கண்டனங்கள்
பிள்ளையைப் பராமரிக்கும் உரிமையை சிரம்பான் உயர் நீதிமன்றம் அவனின் தாயார் எஸ்.தீபாவுக்குக் கொடுத்திருந்தும் அவனைக் கடத்திச் சென்ற அவனின் தந்தை இஸ்வான் அப்துல்லாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க மறுக்கும் இன்ஸ்பெக்டர்-ஜெனரல் அப் போலீஸ் காலிட் அபு பக்காரின் செயலை மஇகா மகளிர் பகுதி கண்டித்துள்ளது. அதன் தலைவர் மோகனா …
முனைவர் முரசு நெடுமாறன் வழிநடத்தும் கவிதைப் பயிலரங்கு
வருகிற 16.4.2014 புதன் கிழமை காலை 10.00 முதல் 12.00 வரை, மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறையில், அத்துறையின் ஏற்பாட்டில் ‘கவிதை ஓர் அறிமுகம்’ என்னும் ‘கவிதைப் பயிலரங்கு’ நடைப்பெறவுள்ளது. இக்கவிதை பயிலரங்கினை முனைவர் முரசு நெடுமாறன் அவர்கள் வழிநடத்துவார். கவிதை குறித்துப் பல்லூடக முறையில், இயல்…
பினாங்கு பிகேஆர் தேர்தலில் போட்டி தீவிரமடைகிறது
பினாங்கு பிகேஆரில், கடந்த 15 ஆண்டுகளில் முதல்முறையாக 13 தொகுதிகளிலும் உயர்பதவிகளுக்குக் கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று பெனாந்தியில் உள்ள யயாசான் அமானில் வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களைச் சமர்ப்பித்தனர். பிகேஆர் பினாங்கின் 500,001 உறுப்பினர்களில் 496,923 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். வாக்களிப்பு ஏப்ரல் 27-இலிருந்து …
எம்எச்370-உடன் சிஐஏ-க்குத் தொடர்பிருப்பதாக உத்துசான் கூறியதை மறுக்கிறார் ஹிஷாம்
எம்எச்370 காணாமல்போனதில் அமெரிக்காவின் மத்திய உளவுத் துறை(சிஐஏ)க்குத் தொடர்புண்டு என்று சொல்லப்படுவதை இடைக்காலப் போக்குவரத்து அமைச்சர் ஹிஷாமுடின் உசேன் புறந்தள்ளினார். “அது உண்மையாயின் இங்கு இவ்வளவு பெரிய அமெரிக்க பிரசன்னம் இருக்காது”, என்று ஆசிய தற்காப்புச் சேவைக் கண்காட்சியைச் சுட்டிக்காட்டி அவர் கூறினார். எம்எச்370 காணாமல் போனதில் சிஐஏ-க்குத் …
அஸ்மின்: பிகேஆர் மலாய்க்காரர்-சார்ந்த கட்சி அல்ல
பிகேஆர், பிகேஆர் மலாய்க்காரர்-சார்ந்த கட்சி என அதன் தலைமைச் செயலாளர் சைபுடின் நசுதியோன் கூறி இருப்பதை கட்சியின் துணைத் தலைவர் அஸ்மின் அலி மறுக்கிறார். “பிகேஆர் என்றும் மலாய்க்காரர்-சார்ந்த கட்சியாக இருந்ததில்லை”, என இன்று காலை பிகேஆர் தலைமையகத்தில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் அஸ்மின் கூறினார். “பல இனங்களையும் …
மதமாற்ற விவகாரத்தில் நஜிப் முடிவெடுக்க வேண்டும்
பிள்ளைகளைப் பராமரிக்கும் உரிமை தொடர்பில் சியாரியா நீதிமன்றமும் சிவில் நீதிமன்றமும் முரண்பாடான உத்தரவுகளை வெளியிட்டிருப்பதால் நடவடிக்கை எடுப்பதற்கில்லை என இன்ஸ்பெக்டர்-ஜெனரல் அப் போலீஸ் காலிட் அபு பக்கார் கூறிவிட்ட நிலையில் இனி, இவ்விவகாரத்தில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்தான் ஒரு நிலைப்பாட்டை மேற்கொள்ள வேண்டும் என்கிறார் அரசமைப்புச் சட்ட …
மலேசியாகினி பொறுப்பற்ற ஊடகம் என உத்துசான் கடும்தாக்கு
அம்னோவுக்குச் சொந்தமான உத்துசான் மலேசியா மீண்டும் மலேசியாகினிமீது குற்றப்பத்திரிகை வாசித்துள்ளது. அந்த இணையச் செய்தித்தளம் அதன் சந்தாதாரர்களின் கருத்துக்களைத் தணிக்கை செய்யாமல் அப்படியே போட்டு விடுகிறதாம். மலேசியாகினியைக் குற்றம்சொல்லி நீண்ட கட்டுரை வரைந்துள்ள அதன் ஆசிரியர்களில் ஒருவரான சுல்கிப்ளி பக்கார், அவ்விணையத் தளம், அதன் “மாற்றணி-ஆதரவு” வாசகர்கள் எப்படிப்பட்ட …
ஜயப் புத்தாண்டு வாழ்த்துகள்
-டாக்டர் சேவியர் ஜெயக்குமார், ஏப்ரல் 13, 2014. ஜயச் சித்திரைப் புத்தாண்டை வரவேற்கும் இந்நாட்டு இந்திய மக்கள் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். இந்த ஜயப் புத்தாண்டு, இந் நாட்டுக்கும், மக்களுக்கும், குறிப்பாக இந்தியர்களுக்கும், ஜெயத்தை அளிக்க வேண்டும் என்று வேண்டுகிறேன். நாட்டின்…
எம்எச்370: புதிதாக சமிக்ஞை ஒலிகள் இல்லை என்றாலும் தேடும்பணி தொடர்கிறது
காணாமல்போன மலேசிய விமானமான எச்எம்370-ஐத் தேடும்பணி தொடங்கி இன்றுடன் 37நாள்கள் ஆகின்றன. 11 இராணுவ விமானங்கள், ஒரு சிவில் விமானம், 14 கப்பல்கள் தேடும்பணியில் ஈடுபட்டிருப்பதாக கூட்டு ஒருங்கிணைப்பு மையம் (ஜேஏசிசி) அறிவித்தது. தேடும்பணி பெர்த்துக்கு 2,200கி.மீ. தொலைவில் 57,506 சதுர கி.மீ.பரப்பில் மேற்கொள்ளப்படுவதாகக் கூறிய ஜேஏசிசி, கடந்த …
பிகேஆர் தலைவர் பதவிக்கு போட்டியிடாததற்கு காரணம் கூறுகிறார் அஸ்மின்
பிகேஆரின் தற்போதைய துணைத் தலைவர் அஸ்மின் அலி கட்சியின் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம்மையோ, தலைவர் டாக்டர் வான் அசிஸாவையோ எதிர்த்துப் போட்டியிடுவதற்கு வலுவான காரணம் இல்லை என்று கூறுகிறார். இச்சவால் மிக்க காலக்கட்டத்தில், அன்வாரும் வான் அசிஸாவும் கட்சியை வழிநடத்துவதற்கு போதுமான திறமையுடையவர்களாக இருக்கிறார்கள் என்றாரவர்.…
தீபாவின் மகன் கடத்தல்: ஐஜிபி கடுமையாகச் சாடப்பட்டார்
இந்து தாயார் தீபாவின் மகனை இஸ்லாமியராக மதம் மாறி விட்ட அவரது முன்னாள் கணவர் இஸ்வான் என்ற வீரன் கடத்திச் சென்று விட்ட சம்பவம் மீது போலீஸ் படையின் தலைவர் காலிட் அபு பக்காரின் நிலைப்பாடு கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது. இரு நீதிமன்றங்கள், ஒன்று சிவில் நீதிமன்றம் மற்றொன்று…
குலா: இந்திய சமூக பிரச்சனைகளைக் கையாள்வதற்கு நாடாளுமன்ற சிறப்புக் குழு…
-மு. குலசேகரன், ஏப்ரல் 11, 2014. நேற்றைய தமிழ் நாளிதழ் செய்தியில் ம.இ.கா தலைவர்களின் இந்திய சமூக சேவைகளைப் பற்றி பிரதமர் கேள்வி எழுப்பியிருந்தது ம.இ.கா தலைவர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்திருந்தாலும், இது எதிர்பார்த்த ஒன்றுதான் என்பதை அவர்கள் இப்பொழுது உணர்ந்திருப்பார்கள். பிரதமர் சுட்டிக்காட்டிய 20 தீர்க்கப்படாத பிரச்சனைகளை அவர் வாயாலேயே கேட்ட போது…
தீபா விவகாரத்தில் போலீஸ் கைகட்டிக் கொண்டிருப்பதை மஇகாவும் மசீசவும் சாடின
மகனைக் கடத்திச் சென்ற, முஸ்லிமாக மதம் மாறிய தம் முன்னாள் கணவருக்கு எதிராக எஸ்.தீபா புகார் செய்திருந்தாலும் போலீஸ் நடவடிக்கை எடுக்காது என்று கூறிய இன்ஸ்பெக்டர்-ஜெனரல் அப் போலீஸ் காலிட் அபு பக்காரை மஇகா தலைவர் ஒருவர் கடுமையாக சாடியுள்ளார். அதைப் “பொறுப்பற்ற நிலைப்பாடு” என்றுரைத்த கட்சி வியூக …
ஏஜி வெளியாள்களைக் கொண்டு கர்பாலையும் டிஏபியையும் முடிக்கப் பார்க்கிறாரா?
டிஏபி தொடுத்துள்ள வழக்கில் சங்கப் பதிவதிகம்(ஆர்ஓஎஸ்) சார்பில் வாதாட அம்னோ-தொடர்புள்ள வழக்குரைஞர் அமர்த்தப்பட்டிருப்பது டிஏபி-யை ஒரேயடியாக தீர்த்துக் கட்டும் அரசியல்நோக்கம் கொண்ட செயல் என அக்கட்சித் தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் இன்று கூறினார். “பிஎன்-னின் அரசியல் எதிரிகளை எதிர்க்க வெளியாள்களைக் கொண்டுவர வேண்டியிருக்கிறதே, சட்டத்துறைத் தலைவர் …
மூன்று தவறான பிரம்படிக்கு ரிம3 மில்லியன் கேட்டு வழக்கு
அந்த 28-வயது வங்காளதேசி தொழிலாளரிடம் வேலைசெய்யும் அனுமதி இருந்தும்கூட கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கூடவே, மூன்று பிரம்படிகளும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. கடந்த ஆண்டு ஜூலை 19-இலிருந்து நவம்பர் 18வரை அவர் சிறையில் இருந்தார். அக்டோபர் 9-இல் பிரம்படி கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அக்டோபர் 25-இல், வழக்கை மீள்பார்வை செய்த பினாங்கு உயர் …
மசீசவுக்கு பாலர்பள்ளி பயிற்சி வழங்க முன்வந்தது டிஏபி
டிஏபி, ஹுடுட் சட்ட அமலாக்கம் குறித்து அதன் நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை எழுப்பும் மசீச-வுக்கு “பாலர்பள்ளி பயிற்சி” ஒன்றை இலவசமாக நடத்த முன்வந்துள்ளது. மசீச தலைவர் லியோ தியோங் லாய், துணைத் தலைவர் வீ கா சியோங் உள்பட அக்கட்சியின் தலைவர்கள் பலரும் ஹுடுட்…
கருப்புப் பெட்டியைக் கண்டுபிடிக்க முடியும் என்பதில் ஆசி பிரதமருக்கு நம்பிக்கை
மலேசிய விமான நிறுவனத்தின் எம்எச்370-ஐத் தேடும்பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் விமானத்தின் கருப்புப் பெட்டி இருக்கும் இடத்தை ஏறத்தாழ அடையாளம் கண்டுகொண்டதாக நம்புகிறார்கள் என ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அப்பட் இன்று கூறினார். சீனாவின் வணிக மையமான ஷங்காய் நகரில் அவர் இதனைத் தெரிவித்தார். ஆனால், தேடும்பணியை ஒருங்கிணைக்கும் ஆஸ்திரேலிய …
மகனைத் கடத்திச் சென்ற மதமாறிய தந்தைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க…
மகனைக் கடத்திச் சென்ற, முஸ்லிமாக மதம் மாறிய தம் முன்னாள் கணவருக்கு எதிராக எஸ்.தீபா போலீசில் புகார் செய்திருந்தாலும் போலீஸ் நடவடிக்கை எடுக்காது. இரண்டு நீதிமன்றங்கள் குழந்தைகளைப் பராமரிக்கும் பொறுப்பைத் தாயிடமும் தந்தையிடமும் ஒப்படைத்திருப்பதுதான் இதற்குக் காரணம். “இங்கு இரண்டு நீதிமன்றங்கள். ஒன்று சிவில், இன்னொன்று ஷரியா நீதிமன்றம்.…
நீதிபதி: ஏஜிக்கு சட்ட விலக்கு உரிமை கிடையாது
சட்டத்துறை தலைவர் (ஏஜி) சட்ட நடவடிக்கைகளில் இருந்து விலக்கு உரிமை பெற்றவர் அல்லர் என்று கோலாலும்பூர் உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. குற்றப் புலன் விசாரணைத் துறை முன்னாள் இயக்குனர் ரம்லி யூசுப்பும் அவரின் வழக்குரைஞர் ரோஸ்லி டஹ்லானும் தொடுத்துள்ள வழக்குகளை இரத்துச் செய்ய வேண்டும் எனச் சட்டத்துறைத் …
சிறையில் கொல்லப்பட்ட கைதியின் தந்தைக்கு ரிம4 இலட்சம் இழப்பீடு வழங்க…
ஆறு ஆண்டுகளுக்கு முன்பு சுங்கை பூலோ சிறைச்சாலையில் சக கைதிகளால் கொல்லப்பட்ட 23 வயதான ஒரு கைதியின் தந்தை எம். கவுர் சந்தரத்திற்கு ரிம4 இலட்சத்திற்கு மேல் வழங்கும்படி உள்துறை அமைச்சு, சிறைசாலை இலாகா மற்றும் அரசாங்கம் ஆகியவற்றுக்கு கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. இவ்வாண்டு பெப்ரவரி…


