கோபால்: பரஸ்பர உடன்பாட்டுடன்தான் பிரிந்தோம்

முன்னாள்  கூட்டரசு நீதிமன்ற  நீதிபதியும் மூத்த  வழக்குரைஞருமான  கோபால்  ஸ்ரீராம், பரஸ்பரம் இணக்கத்துடனேயே மிங் அண்ட் நிஷ்ரா  வழக்குரைஞர்  நிறுவனத்தின்  ஆலோசகர்  பொறுப்பிலிருந்து விலகிக்  கொண்டதாகக்  கூறினார். அன்வார்  இப்ராகிமின்  குதப்புணர்ச்சி  வழக்கில்  அவருக்காக  கூட்டரசு  நீதிமன்றத்தில் வழக்காட  முடிவு  செய்ததால்  அந்நிறுவனத்திலிருந்து  வெளியேற  வேண்டிய  நெருக்குதலுக்கு  ஆளானார் …

யுஎம்: அரசியலுக்குத் தடை ‘நட்புமுறை நினைவூட்டல்’ மட்டுமே

பணியாளர்கள் உள்நாட்டிலோ வெளிநாட்டிலோ  அரசியல்  சம்பந்தப்பட்ட  நடவடிக்கைகளை  ஏற்பாடு  செய்வதற்குத்  தடை  விதிக்கும்  சுற்றறிக்கை  ஒரு “நட்புமுறை  நினைவூட்டல்” மட்டுமே  என்று  மலாயாப்  பல்கலைக்கழகம்  விளக்கமளித்துள்ளது. இது  ஒன்றும்  புதிய  விதிமுறை  அல்ல  என்றும்  ஏற்கனவே  எல்லா  அரசாங்கம்  அமைப்புகளிலும்  அமலில்  உள்ள  ஒன்றுதான்  என்றும்  யுஎம்  அனைத்துலக …

பாரிஸ் தாக்குதல் மலேசியாவிலும் நடக்கலாம்: எச்சரிக்கிறார் ஹிஷாம்

பாரிசில்  நடந்ததுபோன்றதொரு  பயங்கரவாதத்  தாக்குதல்  மலேசியாவிலும்  நடக்கலாம்  என்று  எச்சரிக்கிறார் தற்காப்பு  அமைச்சர்  ஹிஷாமுடின்   உஅசேன். அத்தாக்குதலில் 12பேர் கொல்லப்பட்டனர். “கடந்த  மாதம் பாரிஸ், லண்டன்  சென்று  திரும்பினேன். அங்கு  உளவுத்  துறைகளுடன் பேசினேன். அங்கு  நடந்த  சம்பவம்  எதிர்பாராமல்  நடந்த  ஒன்று  அல்ல. “அதை  மிதமாக  நினைத்து…

ராணுவ வீரர் உலோகத்துக்கு ஆசைப்பட்டு வெடிகுண்டு திருடியிருக்கலாம்

கெடாவில்  ஒரு  இராணூவ  முகாமிலிருந்து  வெடிகுண்டுகளைத்  திருடிய  படைவீரர்  அவற்றில்  உள்ள  செம்பை  விற்று  பணம் பண்ணும்  நோக்கத்தில்  அவற்றைத்  திருடியிருக்கலாம். யாரையும்  கொல்லும்  நோக்கம்  அவருக்கு  இருந்திருக்காது. “அவற்றில்(கவச வாகன- எதிர்ப்பு ராக்கெட்டுகள்) செம்பு  இருக்கும். அதை  எடுத்து விற்பதற்காக  அவர்  அவ்வாறு  செய்திருக்கலாம்”, எனத்  துணை…

ஜாஹிட் எப்பிஐ-க்கு அனுப்பிய கடிதம் பற்றி கருத்துச்சொல்ல ஹிஷாம் மறுப்பு

மலேசிய  சூதாட்டக் கும்பல்  தலைவர்  என்று  கூறப்படும்  பால்  புவா-வுக்கு  ஆதரவாக  உள்துறை  அமைச்சர் ஜாஹிட் ஹமிடி அமெரிக்கப்  புலனாய்வுத்  துறை(எப்பிஐ)க்கு  கடிதம்  எழுதி  அது  சர்ச்சைக்குரிய  விவகாரமாக  மாறியிருப்பது  பற்றிக் கருத்துரைப்பதைத்  தற்காப்பு  அமைச்சர்  ஹிஷாமுடின்  உசேன்  தவிர்த்தார். “அதை ஜாஹிட்டிடம்தான்  நீங்கள்  கேட்க  வேண்டும்”, என்றார்.…

டிஏபி: எண்ணெய் விலைவீழ்ச்சியைச் சமாளிக்க திட்டம் என்ன? நஜிப் விளக்க…

பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்,  சிறப்பு  நாடாளுமன்ற  அமர்வைக்  கூட்டி  உலகளவில்  வீழ்ச்சி  கண்டுவரும்  எண்ணெய் விலை  மலேசிய  நிதிநிலைமையை  எவ்வாறு  பாதிக்கிறது  என்பதையும் அதைச்  சமாளிக்கும்  திட்டம்  என்னவென்பதையும்  விவரிக்க  வேண்டும்  என டிஏபி  வலியுறுத்தியுள்ளது. நஜிப்பின்  2015  பட்ஜெட்,  ரிம235.2 பில்லியன்  என  மதிப்பிடப்பட்டிருக்கும்  அரசாங்கத்தின்…

யுயுசிஏ-யைவிட மோசமாக இருக்கிறது யுஎம் சுற்றறிக்கை

மலாயாப் பல்கலைக்கழக(யுஎம்)ப்  பணியாளர்கள்  அரசியல்  நடவடிக்கையை  ஏற்பாடு  செய்யத்  தடை  விதிக்கப்பட்டிருப்பது  கட்டுப்பாடுமிக்க  பல்கலைக்கழக, பலகலைக்கழகக்  கல்லூரிச்  சட்ட(யுயுசிஏ)த்தை விடவும் கொடுமையாக  இருக்கிறது  என  பிகேஆர்  எம்பி  என்.சுரேந்திரன்  கூறினார். “1971-இல்  கொண்டுவரப்பட்ட  யுயுசிஏ  20120-இல்  செய்யப்பட்ட  திருத்தங்களால்  மாணவர்கள்  பல்கலைக்கழக  வளாகத்துக்கு  வெளியில்  அரசியல்  நடவடிக்கைகளில்  ஈடுபட …

சீண்டி விடுவது சார்லி ஹெப்டோ-வின் வேலை, அதற்காகக் கொலைசெய்வது தப்பு

முன்னாள்  பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகம்மட்,  கொலை  செய்வது  தவறான செயலாகும்  என்று கூறி  அதேவேளை,  சினமூட்டுவதைத் தவிர  வேறு   எதையும்  செய்யாத  ஒரு  செய்தித்தாள்  சார்லி  ஹெப்டோ  என்பதையும்  குறிப்பிட்டார். நையாண்டி  செய்வதையே  வழக்கமாகக்  கொண்ட  அசெய்தித்தாள்  இஸ்லாத்தையும்  நபிகள் நாயகத்தையும்  மதிப்பதில்லை  என்று மகாதிர்  கூறியதாக …

சரவாக்கில் சட்டமன்றத் தொகுதிகள் மட்டும் அதிகரிக்கப்பட்டது ஏன்?

சரவாக்கில் நாடாளுமன்றத்  தொகுதிகளின்  எண்ணிக்கையை  அதிகரிக்காமல்  சட்டமன்றத்  தொகுதிகளை  மட்டும்  அதிகரித்ததன்  நோக்கம்  என்னவென  டிஏபி   செர்டாங்  எம்பி  ஒங்  கியான்  மிங் கேள்வி  எழுப்பியுள்ளார். வாக்காளர்  எண்ணிக்கை  கூடியுள்ளதால்  சட்டமன்றத்  தொகுதிகளின்  எண்ணிக்கை  அதிகரிக்கப்பட்டது  என்றால் .அதே  காரணத்தின்  அடிப்படையில்  நாடாளுமன்றத்  தொகுதிகளின்  எண்ணிக்கையும்  கூட்டப்பட  வேண்டியதுதானே …

யுஎம் பணியாளர்கள் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடத் தடை

மலாயாப்  பல்கலைக்கழக(யுஎம்)த்தில்  மாணவர் செயற்பாட்டுவாதம்  அதிகரித்துவரும்  வேளையில்,  பல்கலைக்கழகப்  பணியாளர்கள் எந்தவித  அரசியல்  நடவடிக்கையையும்  ஏற்பாடு  செய்யத்  தடை  விதிக்கப்பட்டிருக்கிறது. இதன்  தொடர்பில்  யுஎம்  பதிவாளர்  யூசுப்  மூசா.  பல்கலைக்கழகப்  பணியாளர்களுக்கு  அனுப்பிய  கடிதத்தை  மூத்த  பொருளியல்  விரிவுரையாளர்  லீ  ஹ்வொக்  ஆன்  முகநூலில்  பதிவிட்டிருக்கிறார். அக்கடிதம்,  எல்லாப் …

கேலிச்சித்திரக்காரர்களுடன் சேர்ந்து பணியாற்றுவீர்: இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு ஸுனார் அறிவுறுத்து

பிரான்சின் சார்லி ஹெப்டோ  செய்தித்தாள்  அலுவலகம்  தாக்கப்பட்டுச்  செய்தியாளர்கள்  பலர்  கொல்லப்பட்ட  சம்பவத்தைக்  கண்டித்த  மலேசிய  அரசியல்  கேலிச்சித்திரக்காரரான  ஸுனார், இஸ்லாமிய  தீவிரவாதிகள்  இஸ்லாத்தில்  உள்ள  நல்ல  விசயங்களை  எடுத்துக்காட்ட  கேலிச்  சித்திரங்களைப்  பயன்படுத்திக்கொள்ளலாம்  என்று  கூறினார். “கேலிச்சித்திரங்களுக்கு  எதிராகக்  கருத்துவேறுபாடுகள்  தெரிவிக்கப்பட்டால்  அவற்றையும்  நாகரிகமான  முறையில்தான்  எதிர்கொள்ள …

தெமர்லோவில் நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் சூறையாடப்பட்டன

பகாங்  நகரமான  தெமர்லோவில்  வெள்ளத்தின்போதும்  அதன்  பின்னரும் பல  கடைகள்  சூறையாடப்பட்டன.  சூறையாடியவர்கள்  உணவுதேடி  அக்கடைகளுக்குச்  செல்லவில்லை. அவர்களின்  குறி, விலை  உயர்ந்த  கணினிகள்,  துளையிடும்  கருவிகள், குக்கர்கள்  போன்றவை. தெமர்லோவில்  உள்ள  சூப்பர்  கெளபாய்  சூப்பர்மார்க்கெட்டின்  பொறுப்பாளர்,  வெள்ளப் பெருக்கு  ஏற்பட்ட  நேரத்தில்  தம்  பேரங்காடி  உள்பட …

பலவீனமானவர் என்பதால் எம்சிஎம்சி தலைவரின் பதவி நீட்டிக்கப்படவில்லையாம்

இணையத்  தளத்தை  இரும்புப்  பிடியால்  கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளத்  தவறிவிட்டாராம்  மலேசிய  தொடர்பு,  பல்லூடக  ஆணைய (எம்சிஎம்சி) தலைவர் முகம்மட்  ஷரில்  தர்மிஸி. அதனால் டிசம்பர்  31-உடன்  முடிந்த  அவரது  பணிஒப்பந்தம்  நீட்டிக்கப்படவில்லையாம். உத்துசான் மலேசியாவில்  அதன்  செய்தி ஆசிரியர்  சுல்கிப்ளி  ஜலில் எழுதிய  கட்டுரையில்  இவ்வாறு  கூறியுள்ளார். 11-ஆண்டுகள்…

பொருள்களின் விலை குறையவில்லையே: அம்னோ இளைஞர்கள் ஆத்திரம்

எரிபொருள்  விலை 30-இலிருந்து 35  சென்  குறைந்தபோதிலும் வணிகர்கள்  பொருள்  விலைகளைக் குறைக்காதிருப்பது  கண்டு  அம்னோ  இளைஞர்கள்  ஆத்திரமடைந்துள்ளனர். கடந்த  ஆண்டு  உதவித்தொகை  நீக்கப்பட்டதைத்  தொடர்ந்து  எரிபொருள்  விலை  உயர்ந்தவுடன்  பொருள் விலைகளை  உயர்த்துவதில்  வேகம்  காட்டிய  வணிகர்கள்  இப்போதும்  அதே  வேகத்தைக்  காட்ட வேண்டும்  என்று அம்னோ …

1எம்டிபியின் புதிய தலைவர் கந்தா “பெர்அஹாமா இஸ்லாம்”

  அருள் கந்தா கந்தசாமி அரசாங்கத்திற்கு சொந்தமான 1மலேசியா டிவலப்மெண்ட் பெர்ஹாட்டின் (1எம்டிபி) புதிய தலைவராகவும் குழுமத்தின் செயல்முறை இயக்குனராகவும் நியமிக்கப்பட்டிருப்பது ஊடகங்கள் மற்றும் தொழில் துறை ஆகியவற்றில் மிகுந்த பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. கந்தாவின் நியமனம் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து தோல்வி கண்ட வணிகங்களை மீண்டும் சிறப்பாக இயங்க…

15 வருடங்களுக்கு முன் மும்பை ஓட்டலில் பாத்திரம் கழுவினேன்: ஸ்மிரிதி…

புதுடெல்லி: 15 வருடத்திற்கு முன்பு மும்பை ஹோட்டலில் தான் பாத்திரம் கழுவும் வேலையில் ஈடுபட்டிருந்தாகவும் அதற்காக தான் வெட்கப்படவில்லை என்றும் நாம் செய்யும் வேலையைக் கெளரவமாக கருத வேண்டும் என்றும் மத்திய மனித வளத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறியுள்ளார். நேற்று டெல்லியில் நடந்த மாநிலக் கல்வி அமைச்சர்கள்…

ஏர் ஏசியா விமானத்தின் வால் பகுதி கண்டுப்பிடிக்கப்பட்டது

ஏர்  ஏசியா விமானத்தின்  உடைந்த  பகுதிகளைத்  தேடி  எடுக்கும்  பணியில்  ஈடுபட்டுள்ள  இந்தோனேசியாவின்  தேடல், மீட்புக்  குழு  விமானத்தின்  வால்  பகுதி  கிடக்கும்  இடத்தைக்  கண்டுபிடித்துள்ளது. “வால்  பகுதி  இருக்கும்  இடத்தைக்  கண்டுபிடித்து விட்டோம்.  அதைக்  கண்டுபிடிப்பதே இன்று  எங்களின்  முக்கிய  குறிக்கோளாகும்”, என  தேடல், மீட்புத்  துறை …

தீபா வழக்கின் தீர்ப்புக்கு மஇகா வரவேற்பு

முஸ்லிமாக  மதம்  மாறிய  இஸ்வான்  அப்துல்லா  தம்  மகனை  அவரின்  தாயார்  தீபா  சுப்பிரமணியம்  சந்திப்பதற்காக  நீதிமன்றத்துக்கு  அழைத்துவர  வேண்டும்  என்று  நீதிமன்றம்  அளித்த  தீர்ப்பை  மஇகா  இளைஞர்  பிரிவு  வரவேற்றது. நீதிமன்றத்தின்  தீர்ப்பு மதிக்கப்பட  வேண்டும். அது செயல்படுத்துவதை  அதிகாரிகள்  உறுதிப்படுத்த  வேண்டும்  இல்லையேல்  அது  பொருளற்றதாகிவிடும் …

அஸிலா, சிருள் ஆகியோரின் நிலை அடுத்த செவ்வாய் தெரியும்

மங்கோலிய  பெண்  அல்டான்துன்யா  கொலையில்  குற்றம்சாட்டப்பட்ட  போலீஸ்  சிறப்பு  நடவடிக்கைப்  பிரிவைச் சேர்ந்த  இருவரின்  நிலை  என்னவென்பது   அடுத்த  செவ்வாய்க்கிழமை  தெரியவரும். கொலைக் குற்றச்சாட்டிலிருந்து  விடுவிக்கப்பட்ட  தலைமை  இன்ஸ்பெக்டர்  அஸிலா  ஹட்ரி,   கார்ப்பரல்  சிருள்  அஸ்ஹார்  ஒமார்  ஆகியோருக்கு  எதிராக  அரசுத்தரப்பு  செய்துகொண்ட  மேல்முறையீடு  மீது  அன்று  கூட்டரசு …

1எம்டிபி போஸ்: சிக்கல்களை அறிந்தே பொறுப்பேற்கிறேன்

அரசாங்கத்துக்குச்  சொந்தமான 1மலேசியா மேம்பாட்டு  நிறுவனம் (1எம்டிபி)  நிதிப்  பிரச்னைகளால்  தட்டுத்  தடுமாறிக்  கொண்டிருக்கிறது. பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  மிகுந்த நம்பிக்கையுடன்  தோற்றுவித்த  அந்த  முதலீட்டு  நிறுவனத்துக்குப்  புதிய  தலைமை  செயல்  அதிகாரியாக  நியமிக்கப்பட்டிருக்கிறார் அருள் கந்தா  கந்தசாமி. 1எம்டிபி  எதிர்நோக்கும்  சிக்கல்கள்  ஒன்றல்ல, இரண்டல்ல. அதன் …

ஸைட் இப்ராகிம்: சிவில் நீதிமன்றத்தை விட உயர்ந்த நீதிமன்றம் இல்லை

  ஒரு சிவில் நீதிமன்ற நீதிபதி உயர்நீதிமன்றத்தில் ஒரு தீர்வு காண முடியாது என்று சொல்லக்கூடாது என்று முன்னாள் சட்டத்துறை அமைச்சர் ஸைட் இப்ராகிம் கூறினார். கல்விமான் காசிம் அஹமட் விவகாரத்தில் வழங்கப்பட விருந்த தீர்ப்பை கேட்பதற்காக கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்திற்கு வந்திருந்த ஸைட், தாம் மலேசியாவில் ஒரே ஒரு…

மஇகா-வின் கடிதங்களை ஆர்ஓஎஸ் இனிமேல் ஏற்காது

2013 கட்சித்  தேர்தலின்போது  நிகழ்ந்ததாகக் கூறப்படும்  முறைகேடுகள் தொடர்பில்   மஇகா  கொடுக்கும்  கடிதங்களை   சங்கப் பதிவகம் (ஆர்ஓஎஸ்) இனிமேல்  ஏற்கப்  போவதில்லை  ஆர்.ரமணன்  கூறினார். இன்று  பிற்பகல் ஆர்ஓஎஸ் மஇகாவுக்கு  அனுப்பிய  கடிதத்தில்  இதைத்  தெளிவாகக்  குறிப்பிட்டுள்ளதாக  அந்த  முன்னாள்  மத்திய  செயல் குழு  உறுப்பினர்  கூறினார். தலைமைச் …

கைருடின்: 1எம்டிபி பற்றி நல்ல விதமாகத்தான் நஜிப்பிடம் எடுத்துரைத்தேன்

“நீங்கள்  நல்லவர். மற்றவர்கள்  உங்களைப் பயன்படுத்திக்கொள்ள  இடமளிக்காதீர்கள்”. பிரதமர்  நஜிப்  அப்துல் ரசாக்கை  அவரது  வீட்டில்  சந்தித்தபோது  பத்து  கவான்  அம்னோ  தொகுதித்  துணைத்  தலைவர்  கைருடின்  அபு ஹசான் இப்படித்தான்  அறிவுரை  பகர்ந்தார். நஜிப்  அமெரிக்கா  செல்வதற்குமுன்  இருவரும்  சந்தித்து  1மலேசியா  மேம்பாட்டு  நிறுவனம் (1எம்டிபி) பற்றி …