அன்வார்: எம்எச்17 பயணிகளைக் கொன்ற கொலைகாரர்களை நீதிமுன் நிறுத்த வேண்டும்

யுக்ரேய்னில்  சுட்டு  வீழ்த்தப்பட்ட  எம்எச் 17  விமானத்தில்  பயணம்  செய்தவர்களின்  குடும்பத்தார்  தகவல்  பெறுவதற்காக  கோலாலும்பூர்  அனைத்துலக  விமான  நிலையத்தில்  திரள்கின்றனர். பெயர்கள்  பதிந்துகொள்ளப்பட்டு  அவர்கள்  புத்ரா  ஜெயா   மரியோட்  ஹோட்டலுக்கு  அனுப்பி  வைக்கப்பட்டனர். அங்கு  எம்ஏஎஸ்  அவர்களுக்கு  விளக்கம்  அளிக்கும். எதிரணித்  தலைவர்  அன்வார்  இப்ராகிம்,  எம்எச்…

298 பேருடன் மலேஷிய விமானம் யுக்ரெய்னில் ஏவுகணையால் சுட்டு வீழ்த்தப்பட்டதா?

  மலேஷியன் ஏர்லைன்ஸ் விமானங்கள் (ஆவணப்படம்)   மலேஷியன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று யுக்ரெய்னில் விழுந்து நொறுங்கியிருக்கிறது. அந்த விமானத்தில் 298 பயணிகள் இருந்தனர். இந்த விமானம் ஆம்ஸ்டர்டாமிலிருந்து கோலாலம்பூருக்கு வந்துகொண்டிருந்த வழியில் இப்படி நடந்திருக்கிறது. தனது விமானத்துடனான (எண் எம்எச்17) தகவல்தொடர்பு அனைத்தும் துண்டிக்கப்பட்டுவிட்டதாக மலேஷியன் ஏர்லைன்ஸ்…

தாவோ சமயத்தின் பாதுகாப்பு தெய்வமான நெஸாவின் சிலை உடைக்கப்பட்டது

  ஜொகூர், கம்போங் தெம்பியோவில் அமைந்திருந்த சீன தாவோ சமயத்தின் பாதுகாப்பு தெய்வம் என்ற நெஸாவின் 10 மீட்டருக்கும் கூடுதலான உயரமும் 38 டன் எடையும் கொண்ட சிலை கோட்டா திங்கி அம்னோ இளைஞர் பிரிவு தெரிவித்த அதிருப்தியைத் தொடர்ந்து நேற்று உடைக்கப்பட்டது. அச்சிலை அமைந்திருந்த கோயில் அங்குள்ள…

மகாதிர்: அசிசா மந்திரி புசார் ஆவதில் தவறில்லை

அன்வார்  இப்ராகிமின்   பரம  வைரியான டாக்டர்  மகாதிர்  முகம்மட்,  அவரின்  துணைவியார்  டாக்டர்  வான்  அசிசா  வான்  இஸ்மாயில்  சிலாங்கூர் மந்திரி  புசார்  ஆவதற்கு  ஆதரவு  தெரிவித்துள்ளார். பெண்கள்,  மந்திரி  புசார்  உள்பட  தலைமைப் பொறுப்பேற்பதில்  தவறில்லை  என  முன்னாள் பிரதமர்  கூறினார். வான்  அசிசா, சிலாங்கூர்  மந்திரி …

தீபக்கின் கடனில் எல்லாம் சட்டப்படியே நடந்துள்ளது

கம்பள  வியாபாரி  தீபக்  ஜெய்கிஷனுக்குக்  கடனளிக்கப்பட்டதில்  எல்லாம்  சட்டப்படியே  நடந்துள்ளது  என்று  கூறுகிறார்  உள்நாட்டு  வாணிக, கூட்டுறவு,  பயனீட்டாளர்  விவகார  அமைச்சர்  ஹசான்  மாலேக். அவரின் கடனில்  எஞ்சியிருப்பது  ரிம32 மில்லியன்  மட்டுமே  என்று ஹசான்  ஓர்  அறிக்கையில்  கூறினார்.  அது திருப்பிச் செலுத்தப்படாத கடன்  என  வகைப்படுத்தப்பட்டுள்ளது.…

தமிழ் பாலர்பள்ளிகள்: கமலநாதன் பதில் சொல்லியே ஆக வேண்டும், குலா

  பாலர்பள்ளிகள் குறித்து தாம் கேட்டிருந்த கேள்விகளுக்கு  துணைக் கல்வி அமைச்சரான கமலநாதன் இது வரை மௌனம் காப்பது ஏன் என்று தெரியவில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் மு.குலசேகரன் கூறுகிறார்.   “கல்வி அமைச்சின் பிரதிநிதியாக இருக்கும் ஒருவர், தமிழர் என்ற முறையில் தமிழ் கல்வி வளர்ச்சிக்கு பொறுப்பாக இருக்க வேண்டியவர், தமிழ் பாலர்பள்ளிகள் இந்த நாட்டில்…

பங்: நான் சொன்னது சரியே என்பதை கிக்கி நிரூபித்திருக்கிறார்

ஹிட்லர்  வாழ்க  என்று  டிவிட்  செய்து  சர்ச்சையில்  சிக்கிக்கொண்ட  அம்னோ  எம்பி,  பங்  மொக்தார்  ரடின்  மறுபடியும்  ஒரு  சர்ச்சையைக்  கிளப்பத் தயாராகி  விட்டார். ஆனால்,  இப்போது  அவர்,  தாம்  முன்னர்  ஒரு முறை  சொன்னது  சரிதான்  என்பதை  கிக்கி  என்ற  பெயரில் பிரபலமாக  விளங்கும்  சித்தி  ஃபைரா …

பிணைப்பண விவகாரத்தில் ஜாஹிட்டும் ஐஜிபி-யும் முரண்படுகின்றனர்

சாபா,  பூலாவ்  மாபுளில்  கடத்தப்பட்ட  போலீஸ்காரரை  விடுவிக்கக்  கடத்தல்காரர்கள்  ரிம10 மில்லியன்  பிணைப்பணம்  கோரியதாக  வந்துள்ள  தகவல்  குறித்து  உள்துறை  அமைச்சர்  அஹமட் ஜாஹிட்  ஹமிடி   ஒன்று  சொல்கிறார்,  இன்ஸ்பெக்டர்- ஜெனரல்  அப்  போலீஸ்  காலிட்  அபு  பக்கார்    வேறு   ஒன்று  சொல்கிறார். நியு  ஸ்ரேய்ட்ஸ்  டைம்சில் வெளிவந்த …

‘மாய்ஸ்மீது குறைசொல்வது சிலாங்கூர் சுல்தானைக் குறை சொல்வதாகாது’

சிலாங்கூர்  இஸ்லாமிய  விவகார  மன்றம் (மாய்ஸ்)  சிலாங்கூர்  சுல்தானின் மறுவடிவம்  அல்ல  என்கிறார்  அரசமைப்பு  வல்லுனர்  அப்துல்  அசீஸ்  பாரி. இஸ்லாத்தின்  தலைவரான  சுல்தான்  அவரது  பொறுப்புகளை  நிறைவேற்ற  மாய்ஸ்  உதவியாக  இருக்கிறது. எனவே, மாய்ஸைக்  குறை  சொல்வது  சுல்தானைக்  குறை  சொல்வதாகாது  என  அசீஸ்  மலேசியாகினியிடம்  தெரிவித்தார்.…

ஐஜிபி: என்எஸ்டி கடத்தப்பட்ட அதிகாரிக்கு ஆபத்தை உண்டுபண்ணப் பார்க்கிறது

சாபாவின்  பூலாவ்  மாபுளில்  கடத்தப்பட்ட  போலீஸ் அதிகாரியை  விடுவிக்க  பிணைப்பணம்  கோரப்பட்டிருப்பதாக  செய்தி  வெளியிட்டதன்வழி  ஆங்கில  நாளேடான  நியு  ஸ்ரேய்ட்ஸ்  டைம்ஸ்,  அவரை  அபாயத்துக்கு  உள்ளாக்கி  இருக்கிறது  என  போலீஸ்  படைத்  தலைவர்  காலிட்  அபு  பக்கார்  சாடியுள்ளார். அச்செய்தியைத்  தள்ளுபடி  செய்த  காலிட்,  மக்கள்  “வதந்திகளை  நம்பக் …

காலிட்டின் தலைவிதியை கட்சி நிர்ணயிக்கும்

  கட்சியின் தலைமைத்துவப் பொறுப்பில் எவரும் "நிரந்தரமாக" இருப்பாரா என்பதை கட்சிதான் முடிவு செய்யும், எந்த தனிப்பட்டவரும் அல்ல என்று பிகேஆர் கட்சியின் நடப்பியல் தலைவர் அன்வார் இப்ராகிம் இன்று காலிட் இப்ராகிம் தமது மந்திரி புசார் பதவின் இரண்டாவது தவணை முடிவடையும் தொடர்ந்து இருக்கப் போவதாக கூறியிருந்தது…

காலிட் : அடுத்த தேர்தல்வரை நானே மந்திரி புசார்

காலிட்  இப்ராகிம்  அடுத்த  பொதுத்  தேர்தல்வரை  தாமே  சிலாங்கூரின்  மந்திரி  புசார்  என்பதை  மீண்டும்  வலியுறுத்தியுள்ளார்.  ஆனால்,  ஹரி ராயாவுக்குப்  பின்  அவர்  இருக்க  மாட்டார்  என்று  ஒரு  செய்தி  உலா  வந்துகொண்டிருக்கிறது. இன்று  செய்தியாளர்  கூட்டமொன்றில்  பேசிய  காலிட்,  கடந்த  பொதுத்  தேர்தல்  வெற்றிக்குப்  பின்னர்  மக்களுக்கு …

ஐஜிபி: சஞ்சீவன் போலீசைக் களங்கப்படுத்துகிறாரே தவிர, ஆதாரம் காண்பிப்பதில்லை

குற்றச்செயல்  கண்காணிப்பு  என்ஜிஓ-வான  மைவாட்ச்-இன்  தலைவர்  ஆர்.ஸ்ரீசஞ்சீவன்,  போலீஸ்  அதிகாரிகளின்  தவறான  நடத்தைகள்  பற்றிக்  குற்றம்  சொல்கிறாரே  தவிர  ஆதாரங்களைக்  கொடுப்பதில்லை  என்கிறார்  இன்ஸ்பெக்டர்-ஜெனரல்  அப்  போலீஸ்  காலிட்  அபு  பக்கார். அவரைச்  சந்திக்க  அதிகாரிகளை  அனுப்பி  வைத்தபோது  சஞ்சீவன்  ஒத்துழைக்க  மறுத்தார்  என்றும்  காலிட்  கூறினார்.இதன்  விளைவாக, …

ரபிஸி: தீபக்கின் கடனில் அமைச்சருக்கு சம்பந்தம் உண்டு என்பதற்குக் கடிதமே…

ரபிஸி  ரம்லி  ஒரு  ஆவணத்தைக் காண்பித்து  அது,  பேங்க்  ரக்யாட்டின்  நிர்வாகத்தில்  உள்நாட்டு  வணிக, கூட்டுறவு,  பயனீட்டாளர்  விவகார  அமைச்சர் ஹசான்  மலேக்  தலையிட்டிருப்பதற்கான  சான்று  எனக்  கூறியுள்ளார். அந்த  வங்கி,  கம்பள  வியாபாரியான  தீபக்  ஜெய்கிஷனுக்குச்  சிறப்புச்  சலுகை  காட்ட  அதுதான்  காரணம்  என்றும்  பிகேஆர்  வியூக …

அம்னோவில் சேராதீர்: காலிட்டுக்கு ஜைட் அறிவுரை

சர்ச்சையில்  சிக்கிக்  கொண்டிருக்கும்  சிலாங்கூர்  மந்திரி  புசார்  காலிட்  இப்ராகிமுக்கு முன்னாள்  அமைச்சர்  ஜைட் இப்ராகிம்  அறிவுரை  ஒன்றை  முன்வைத்துள்ளார். என்ன  நடந்தாலும்,  அம்னோவில்  மட்டும்  சேராதீர்கள்  என்பதுதான்  அது. அது  காலிட்டின்  புகழுக்குக்  களங்கமாக  அமையும், அவரது  எதிர்காலமும்  இருண்டுபோகும்  என்றவர் எச்சரித்தார். “காலிட் அம்னோவில்  சேர்ந்தால் …

மாட் சாபு: எம்பி மாற்றத்தில் பிரச்னை ஏதுமில்லை

பாஸ்  துணைத்  தலைவர்  முகம்மட்  சாபு  சிலாங்கூர்  அரசின்  தலைமைத்துவதில்  மாற்றம்  செய்யப்படுவதை  வரவேற்பதுபோல்  தெரிகிறது. தலைமையில்  மாற்றங்கள்  நிகழ்வது  ஒன்றும்  புதிதல்லவே  என்கிறார்  அவர். “தலைவர்  மாற்றப்பட்டால்  என்ன, அது  ஒரு  பிரச்னையே  அல்ல. திரெங்கானுவில்  நடக்கவில்லையா.  அப்போது ஊடகங்கள்  அதைப்  பெரிதுபடுத்தவில்லையே”, என  நேற்று  கப்பாலா …

‘யூதர்கள் தயாரிக்கும் சிகரெட்டுகளைப் புகைப்பவர்கள் இஸ்ரேலுக்கு உதவுகிறார்கள்’

யூதர்  நிறுவனங்கள்  தயாரிக்கும்  சிகரெட்டுகளைப்  புகைக்கும்  முஸ்லிம்கள்  பாலஸ்தீன  மக்கள்  கொல்லப்படுவதற்கு  உடந்தையாக  இருக்கிறார்கள்  என  பினாங்கு  பயனீட்டாளர்  பாதுகாப்புச்  சங்கம்  கூறுகிறது. அதன்  தலைவர்  கொரிஸ்  அடான்,  அந் நிறுவனங்கள்,  அவற்றின்  ஆதாயத்தில்  10 விழுக்காட்டை  இஸ்ரேலுக்குக்  கொடுத்து  அதன்  முஸ்லிம்  அண்டை  நாடுகளுடன் போரிட  உதவுகின்றன …

எம்டியுசி வாரத்தில் ஐந்து-நாள் வேலை கோருகிறது

  தனியார்துறையில் உற்பத்தி திறணை அதிகரிக்கும் பொருட்டு வாரத்தில் ஐந்து-நாள் வேலை முறையை கட்டாயமாக்குமாறு மலேசிய தொழிற்சங்க காங்கிரஸ் அரசாங்கத்தை வேண்டிக்கொண்டுள்ளது. அவ்வாறு செய்வது அரசாங்க இலாகாவின் வேலை நாட்களுடன் சுமுகமான நடைமுறைகளைப் பின்பற்ற உதவியாக இருக்கும் அந்த அமைப்பின் துணைத் தலைமைச் செயலாளர் எ.பாலசுப்ரமணியம் பெர்னாமாவிடம் கூறினார்.

பாஸ்: இஸ்ரேலுடனான வாணிகத்தை நிறுத்துங்கள்

  பாலஸ்தீனத்திற்கு எதிராக இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களை நிறுத்துவதற்கு அழுத்தம் கொடுக்கும் நோக்கத்தோடு மலேசியா அந்நாட்டுடன் கொண்டிருக்கும் கோடிக்கணக்கான ரிங்கிட் மதிப்புள்ள வாணிகத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று பாஸ் இளைஞர் பிரிவு அரசாங்கத்தை கேட்டுக் கொண்டுள்ளது. கூட்டரசு பிரதேச பாஸ் இளைஞர் பிரிவு துணத் தலைவர்…

மகாதிர் நஜிப்பைக் குறைகூறுவது தவறு என்கிறார் அம்னோ எம்பி

பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  ஒரு  வலுவான  தலைவர்  அல்லர்  என்று  முன்னாள்  பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகம்மட்  குறிப்பிட்டிருப்பதை அம்னோ  எம்பி  நவாவி  அஹ்மட்  மறுக்கிறார். நஜிப், வலுவான  தலைவராக  இருந்தால்  பசிபிக் வட்டார  பங்காளித்துவ  ஒப்பந்தத்தை (டிபிபிஏ) நிராகரித்திருப்பார்  என்றும்  அந்நிய  நெருக்குதலுக்கு  வளைந்து  கொடுத்திருக்க …

பாஸ்: தீபக்கின் கடன் ரிம215 மில்லியன்

கம்பள வியாபாரி  தீபக்  ஜெய்கிஷன்  பேங்க்  ரக்யாட்டுக்குக்  கொடுக்க  வேண்டிய  கடன்  எல்லாரும்  நினைப்பதுபோல்  ரிம32 மில்லியன்  அல்ல, அவருக்கு  மேலும்  இரு  கடன்கள்  உள்ளன, அவற்றையும்  சேர்த்தால்  மொத்த  கடன்  ரிம215 மில்லியனைத்  தாண்டும். இவ்வாறு  தெரிவித்த  பாஸ்  தகவல்  பிரிவுத்  தலைவர்  மாபுஸ்  ஒமார்,  மூன்று …

சுரேந்திரன்: எஸ்ஐடிஎப் ஏற்கனவே இந்தியர்களை ஏமாற்றிய ஒன்றுதான்

நாடற்ற  இந்தியர்கள்,  இந்திய  சமூகம்  மீதான  சிறப்பு  அமலாக்கப்  பணிக்குழு (எஸ்ஐடிஎப்)வில்  பதிந்துகொள்ளுமாறு  மஇகா  துணைத்  தலைவர்   டாக்டர்  எஸ்.சுப்ரமணியம்  கேட்டுக்கொண்டிருப்பதை  எதிரணி  எம்பி  ஒருவர்  சாடியுள்ளார். மலேசிய  அடையாள  அட்டை(மைகாட்)  இல்லாதிருக்கும்  இந்தியர்களுக்கு  மைகாட்  கிடைப்பதற்கான ஏற்பாடுகளைச்  செய்யும்  பொறுப்பு ஏற்கனவே  இக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டதையும்   அது  அதைச் …

கட்சியில் சேர காலிட்டை அழைக்கவில்லை: பாஸ் மறுப்பு

சனிக்கிழமை  நடந்த  சந்திப்பின்போது சிலாங்கூர்  மந்திரி  புசார்  அப்துல்  காலிட்  இப்ராகிமைத்  தன்னுடன்  சேர்ந்துகொள்ளுமாறு  அழைத்ததாகக்  கூறப்படுவதை  பாஸ்  மறுக்கிறது. நோன்பு  மாதம்  என்பதால்   பாஸ்  தலைவர்  அப்துல் ஹாடி  ஆவாங்கும்  தாமும்  மந்திரி  புசாரைப்  பார்க்கப்போனதாக அக்கட்சியின்  தலைமைச்  செயலாளர்  முஸ்தபா  அலி  கூறினார். “நோன்பு  மாதம் …