விமானம் இந்தோனேசியாவுக்குள் சென்றது என்பது உறுதிப்படுத்தப்படாத தகவல்

எம்எச்370  அடையாளம்  கண்டுபிடிக்கப்படாமலிருக்க  இந்தோனேசிய  வான் எல்லை  ஒரமாக பறந்துசென்றதாகக்  கூறப்படுவதை  சிவில்  விமானப்  போக்குவரத்துத்  துறை(டிசிஏ)  “உறுதிப்படுத்தப்படாத”  தகவல்  என்று  கூறியது. “அது  உறுதிப்படுத்தப்படாத  தகவல். அதிகாரப்பூர்வ  வட்டாரத்திலிருந்து சொல்லப்பட்டதுமல்ல”,  என டிசிஏ  தலைமை  இயக்குனர்  அசாருடின்  அப்துல்  ரஹ்மான்  கூறியதாக த ரக்யாட்  போஸ்ட்  அறிவித்துள்ளது.…

பிரதமரின் சீன வருகை அடக்கமான முறையில் நடந்தேறும்

எம்எச்370 காணாமல்போன  சம்பவம்  அடுத்த  மாதம்  பிரதமர்  நஜிப்  அப்துல் ரசாக்கின்  சீன  வருகையை  நிச்சயமாக  பாதிக்கவே  செய்யும்  என்கிறார் அவரின்  அரசியல்  செயலாளர்  வொங்  நை  சீ. “பாதிக்கப்பட்ட  குடும்பத்தாரின்  உணர்வுகளை  மதிக்க  வேண்டும்.  அதனால், அதை  ஆரவாரத்துடன் கொண்டாடும்  வாய்ப்பில்லை. “விமானம்  காணாமல்  போகாமலிருந்தால்  கொண்டாட்டம் …

புதிய நெடுசாலைகள் பற்றிய தகவல்களை மறைக்காமல் வெளியிடுவாரா லவ்?

பிரதமர்துறை  அமைச்சர்  பால்  லவ்,    ரிம2.42 மில்லியன்  செலவில் கட்டப்படும்  கின்ராரா- டமன்சாரா  நெடுஞ்சாலை(கிடெக்ஸ்)  பற்றிய  விவரங்களை  வெளியிட  வேண்டும்  என  டிஏபி  சட்டமன்ற  உறுப்பினர்கள்  கோரிக்கை  விடுத்துள்ளனர்.   ஒரு  கூட்டறிக்கையில்  இயோ  பீ  இன் (டமன்சாரா  உத்தாமா), ஆர்.ராஜிவ் (புக்கிட்  காசிங்), இங்  ஸ்சே ஹான்…

வக்கற்ற ரிம300 மில்லியன் எஸ்கோமை மூடுவீர்

எல்லைக்  கடந்துவ்ந்து  ஆள்களைக்  கடத்திச்  செல்வதைத்  தடுக்க  இயலாது  என்று  கூறும்  கிழக்கு  சாபா  பாதுகாப்புத்  தளபத்யத்தை (எஸ்கோம்)  இழுத்து  மூடி  விடலாம்  என்று  டிஏபி  பெருந் தலைவர்  லிம்  கிட்  சியாங்  கூறுகிறார். “எஸ்கோமுக்காக   மலேசிய  வரிசெலுத்துவோர்  ரிம300   மில்லியனைச்  செலவிடும்போது,  செம்பூர்னாவுக்கு  அப்பால்  ஒரு  ஓய்வுத்தளத்திலிருந்து …

எம்எச்370: சமிக்ஞைகள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை

சீனக்  கப்பலான  ஹைக்சுன் 01  பதிவுசெய்த மின் துடிப்பொலிகள்  குறித்து  அவசர  முடிவுக்கு  வந்து விடக்கூடாது  என்று  எச்சரிக்கிறார்  ஆஸ்திரேலிய  பிரதமர்  டோனி  அப்பட். “மனித  வரலாற்றில்  மிகவும்  கடினமான  தேடும்பணி  இது.  ஒரு பெருங்கடலின்  மிக  ஆழமான  பகுதியில் ஒரு  விமானத்தைத்  தேடிக்  கொண்டிருக்கிறோம், மிகவும்  பரந்த …

பாலிங்கில் மழையையும் பொருட்படுத்தாமல் 10,000 பேர் திரண்டனர்

நேற்று  கெடா,  பாலிங்கில், 40 ஆண்டுகளுக்குமுன்  முற்போக்கு  மாணவர்  குழு  ஒன்று  விவசாயிகளின்  உரிமைகளுக்காக  நடத்திய போராட்டத்தை  நினைவுகூறும்  பேரணியில்    மழையையும் பொருட்படுத்தாமல்  சுமார்  10,000 பேர்    கலந்துகொண்டார்கள். பாஸ்  இளைஞர்கள்  ஏற்பாடு  செய்திருந்த  அப்பேரணி  பிற்பகல்  மூன்று  மணிக்குத்  தொடங்கி  நள்ளிரவுவரை  நடந்தது. பாஸ்  தலைவர்  அப்துல் …

காவல் துறைக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள், தவறான நடத்தை பற்றிய சுதந்திர…

-மு. குலசேகரன், ஏப்ரல் 5, 2014. மூன்று நாள்களுக்கு முன்பு கோலாலம்பூரில் மனித உரிமை கண்காணிப்பு குழு வெளியிட்ட “பதிலில்லை, மன்னிப்பும் இல்லை : காவல் துறையின் மனித  உரிமை மீறல் மற்றும் பொறுப்பு”  என்ற அறிக்கையில் 2005ல் இருந்து 2012ம் ஆண்டுகளுக்கிடையில் போலீசுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களில் வெறும் 7 விழுக்காடு  மட்டுமே விசாரணைக்கு எடுத்துக்…

தண்ணீர் கட்டணத்தை உயர்த்தும் பினாங்கின் முடிவை மசீச சாடியது

பயனீட்டாளர்கள்  நீரை  விரயமாக்குவதைத்  தடுக்க  நீர்க்  கட்டணத்தை  உயர்த்தப்போவதாக  அறிவித்துள்ள  பினாங்கு  அரசுக்கு  மசீச  கடும்  கண்டனம்  தெரிவித்தது. பினாங்கு  அரசு,  மாநில  மக்களின்  நலனைப்  புறக்கணிக்கிறது  என  பினாங்கு  மசீச  துணைத்  தலைவர்  டான்  தெக்  செங்  கூறினார். “மீண்டும்,  நீர்க் கட்டணம்  மக்களுடன்  கலந்து  ஆலோசிக்காமலேயே …

ஜோகூரின் வார இறுதி விடுமுறையில் மாற்றமில்லை

ஜோகூர்  மாநில  அரசு,  வார  இறுதி  விடுமுறை முன்பு  இருந்ததுபோல்  சனி,  ஞாயிற்றுக்கிழமைக்கு  மாற்றப்படும்  என்ற  பேச்சுக்கு  முற்றுப்புள்ளி  வைத்துள்ளது. சமூக  வலைத்தளங்களில்  அதன்  தொடர்பில்  காரசாரமாக  விவாதிக்கப்பட்டு  வந்தாலும்  வார இறுதி  விடுமுறைகளில்  மாற்றம்  செய்யப்படாது  என்பதை  மந்திரி  புசார்   முகம்மட் காலிட்  நூர்டின்  திட்டவட்டமாக  அறிவித்தார்.…

மகாதிரும் அன்வாரும்கூட மெமாலி சம்பவத்துக்குப் பதில் சொல்லியாக வேண்டும்

அரசாங்கம்  செய்யும்  முடிவுகளுக்கு  அமைச்சரவைதான்  கூட்டுப் பொறுப்பேற்க  வேண்டும். அந்த  வகையில்  மெமாலி  நிகழ்வுக்கும்  1985-இல்  இருந்த  அமைச்சரவைதான்  முழுப்  பொறுப்பு  என்கிறார்  அரசமைப்பு  நிபுணர்  அப்துல்  அசீஸ்  பாரி. முன்னாள் துணைப்  பிரதமர்  வெளியிட்ட  தகவல்  குறித்து  கருத்துரைத்த  அசீஸ்  பாரி (இடம்),   கூட்டுப்  பொறுப்பு  என்கிறபோது …

கருப்புப் பெட்டியைத் தேடுகிறது பிங்கர் லோகேட்டர்

காணாமல்போன  எம்எச்370  விமானத்திலிருந்த  கருப்புப்  பெட்டியின்   இருப்பிடத்தைக்   கண்டறிய  உதவும்  என்று  நம்பப்படும் pinger locator  என்னும்  கருவி   அதன்  பணியைத்  தொடங்கி  இருப்பதாக  சிஎன்என்  டிவிட்டரில்  கூறியுள்ளது. விமானத்தைத்  தேடும்பணியில்  ஈடுபட்டுள்ள  ஆஸ்திரேலிய கப்பலான  ஓஷன்  ஷீல்ட்  தான்  போகுமிடங்களுக்கு  இந்தக்  கருவியையும்  இழுத்துச்  செல்கிறது. இந்த …

தெங்கு ரசாலி: ஐபிபி-களுக்கு உதவித்தொகை வழங்குவது ‘மன்னிக்கமுடியாத பாவச் செயல்’

பயனீட்டாளர்களுக்கு  உதவித்தொகைகள்  குறைக்கப்படும்போது  1997-இலிருந்து  2011வரை  தனியார்  மின் உற்பத்தி  நிறுவனங்களுக்கு(ஐபிபி)  ரிம136 பில்லியன்  உதவித்தொகை  வழங்கியது  “மன்னிக்கமுடியாத  பாவச்  செயல்”  என  தெங்கு  ரசாலி  ஹம்சா  கூறினார். பயனீட்டாளர்  பொருள்களுக்கு  உதவித்தொகை  வழங்குவது  வாழ்க்கைச்  செலவினத்தைக்  குறைப்பதற்கான  சிறந்த  வழி   அல்லதான்,  என்றாலும்  அதையாவது  ஒருவகையில்  ஏற்றுக்கொள்ளலாம் …

எம்ஏஎஸ் வழக்குகளைத் தவிர்க்க இயலாது

காணாமல்போன  எம்எச்370  பற்றி  ஒரு  தடயமும்  கிடைக்காத  நிலையில்,  பயணிகளின்  குடும்பத்தார்  தொடுக்கும்  வழக்குகளை  மலேசிய விமான  நிறுவனம் (எம்ஏஎஸ்)  தவிர்க்க  இயலாது  என  வழக்குரைஞர்கள்  கூறுகின்றனர். 1999 மொண்ட்ரியோல்  ஒப்பந்தப்படி,  விமான நிறுவனம்  ஒவ்வொரு   பயணிக்கும் ரிம570,820  இழப்பீடு  கொடுக்க  வேண்டியிருக்கும்  என  பிரிஸ்பேன்  வழக்குரைஞர்  ஜோசப் …

மஇகா ஹோல்டிங்ஸ் தோல்விக்கு காரணம் அரசாங்கமா ?

-மு. குலசேகரன், ஏப்ரல் 3, 2014. மஇகா முன்னாள் தலைவர் ச. சாமிவேலு 31 -3-2014 இல் டிவி 1 க்கு அளித்த  நேர்க்கானலில் மஇகா ஹோல்டிங்ஸ்சின்  தோல்விக்கு என்ன காரணம் என்று கேட்டபொழுது, அதற்கு அவர் அன்றைய அரசாங்கம் போதிய  ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டை எழுப்பியிருந்தார்.   இந்தப் பதில் முன்பு…

கர்பால்: ஹுடுட் அரசமைப்பின்கீழ் வராத ஒரு சட்டம்

1993-இல், கிளந்தான்  சட்டமன்றம்  நிறைவேற்றிய “ஹுடுட்” சட்டம்  அரசமைப்புக்கு  உட்படாத  ஒரு  சட்டம்  என்பதால்  அதை  நடைமுறைப்படுத்த  முடியாது  என  டிஏபி  எம்பி கர்பால்  சிங்  நாடாளுமன்றத்துக்கு  நினைவுறுத்தினார். முதலில் கிளந்தான்  சட்டமன்றத்தில்  ஷியாரியா  சட்டத்தை   நிறைவேற்றியதே  சட்டப்படி  செல்லாது  என அந்த   மூத்த  வழக்குரைஞர் ஓர்  அறிக்கையில்…

என் கணவரை மறந்துவிட்டார்கள்: பிஐ பாலாவின் மனைவி ஆதங்கம்

காலஞ்சென்ற  பி.பாலசுப்ரமணியம்  நாட்டுக்கு  ஆற்றிய  பணியை  மலேசியர்கள்  மறந்துவிட்டதை  நினைத்து  மனவருத்தம்  கொண்டிருக்கிறார்  அவரின்  மனைவி. “மலேசியர்கள்  மறந்திருக்கலாம்,  அனால்  நான் மறக்க  மாட்டேன்”,என  ஏ. செந்தமிழ்ச் செல்வி  கூறினார். பாலசுப்ரமணியத்தின்  முதலாம்  ஆண்டு  நினைவாக  இன்று  ராவாங்கில்  உள்ள  தம்  இல்லத்தில்  சிறப்பு  வழிபாடு  நடைபெறுவதாக  செல்வி …

புவா: நெடுஞ்சாலைகள் கட்டுவதற்கான செலவு ரிம28.5 பில்லியன்

நாட்டில்  தனியார்  நிறுவனங்களிடமுள்ள  கட்டணம்  வசூலிக்கப்படும்  26  நெடுஞ்சாலைகளையும்  கட்டுவதற்கு  ஆன  செலவே  ரிம29 பில்லியன்  ரிங்கிட்டுக்கும்  குறைவுதான். அப்படி இருக்க,  அந்த  நெடுஞ்சாலைகளை  அரசாங்கம்  தன்வசம்  எடுத்துக்கொள்ள  விரும்பினால்  ரிம400 பில்லியன்   கொடுக்க  வேண்டும்  என்று  கூறப்படுகிறதே  அது  எப்படி  என்று  பெட்டாலிங்  ஜெயா  உத்தாரா  எம்பி …

பிரதமர்: கடத்தல் நாடகம் உறவுகளைக் கெடுக்கும் முயற்சியாக இருக்கலாம்

நேற்றிரவு  சாபா,  செம்பூர்ணாவில் ஒரு  சீன  நாட்டவரும்  ஒரு பிலிப்பினோவும்  கடத்தப்பட்ட  சம்பவம்  சீனாவுக்கும்  மலேசியாவுக்குமிடையிலான  உறவுகளைக்  கெடுக்கும்  முயற்சியாக  இருக்கலாம்  எனப்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  கருதுகிறார். கடத்தலுக்குப்  பின்னே  அப்படி  ஒரு  நோக்கம்  இருப்பதை “மறுப்பதற்கில்லை”  என  ட்விட்டரில்  நஜிப்  கூறியதாக  பெர்னாமா  அறிவித்துள்ளது.…

‘முறைகேடான வரி’ எனச் சிந்தனைக்குழு சாடல்

பொருள், சேவை  வரி (ஜிஎஸ்டி)யை  அறிமுகப்படுத்தும்  முடிவு  ஒரு “முறைகேடான” கொள்கை  என்று  சாடிய  பிகேஆருடன் தொடர்புள்ள  இன்ஸ்டிடியுட்  ரக்யாட்,  அதனால் பணக்காரர்களுக்கும்  ஏழைகளுக்குமிடையிலான  இடைவெளி  மேலும் விரிவடையும்  என்றும்   எச்சரித்துள்ளது. அடுத்த  ஆண்டில்  நடைமுறைக்கு  வரும்  அந்த  வரி,,  பணக்காரர்களைவிட  ஏழைகளுக்குத்தான்  பெரும்  சுமையாக  அமையும். ஜிஎஸ்டி-யால் …

எம்எச்370 தேடும்பணிக்கு அமெரிக்கா இதுவரை யுஎஸ்$3 மில்லியன் செலவிட்டுள்ளது

காணாமல்போன  மலேசிய  விமான  நிறுவனத்தின்  எம்எச்370  விமானத்தைத்  தேடுவதற்காக  அமெரிக்க  இராணுவம்  யுஎஸ்$3.3 (ரிம10.8) மில்லியனுக்குமேல்  செலவிட்டிருப்பதாக  பெண்டகன்  பேச்சாளர்  ஒருவர்  நேற்றுத்  தெரிவித்தார். “அது, தேடும்  பணியில்  ஈடுபட்டுள்ள  விமானங்கள்,  கப்பல்கள்,  ஹெலிகாப்டர்களுக்குச்  செலவான  தொகை”, என  கர்னல்  ஸ்டீவ்  வாரன்  கூறினார். விமானத்தைத்  தேடும்பணிக்குத்  தற்காப்பு …

சீன நாட்டுச் சுற்றுப்பயணி சாபாவில் கடத்தப்பட்டார்

சாபாவில், சீன நாட்டுச்  சுற்றுப்பயணி  ஒருவரையும்  தங்குவிடுதி  பணியாளர்  ஒருவரையும்  ஆயுதமேந்திய  நபர்கள்  கடத்திச்  சென்றனர். இச்சம்பவம்  நேற்றிரவு  சிங்காமாதா  ரீப்  ரிசோர்டில்  நிகழ்ந்ததாக  சைனா  மெட்ரோபோலிஸ்  டெய்லி  அறிவித்துள்ளது. நேற்றிரவு  சுமார்  10.30க்கு  ஆயுதமேந்திய  ஐந்து, ஆறு  ஆள்கள்  தங்குவிடுதிக்குள்  புகுந்து  இந்தக் கடத்தலை  நடத்திவிட்டு  சில …

சீனத் தூதர்: பெய்ஜிங்குக்கு மலேசியாமீது கோபமில்லை; எல்லாம் மேலைநாட்டு ஊடகங்களின்…

மலேசியாவுக்கான  சீனத்  தூதர்  ஹுவாங்  ஹுய்காங், எம்எச்370  நெருக்கடியைக் கையாண்ட விதம்  குறித்து  தம்  நாட்டு  அரசாங்கம்  மலேசியாமீது  கோபம்  கொண்டிருக்கவில்லை  என்றார். இன்று  செய்தியாளர்  கூட்டமொன்றில்  பேசிய  ஹுவாங்,  மேலை  நாட்டு  ஊடகங்கள்தான் சீன நாட்டுப்  பயணிகளின்  குடும்பத்தாரின்  உணர்வுகளைச்  சீண்டி  விட்டார்கள் என்றார். “சில  பொறுப்பற்ற …

போலீஸ் கடவுள் அல்லவே: குமுறுகிறார் 80-வயது முன்னாள் ஆசிரியர்

சி.சுகுமாரன்  இளவயதில்  தந்தையை  இழந்தார். அதன்பின்னர்  அவரின்  சிற்றப்பாவான  ஏ. குப்புசாமியின்  அரவணைப்பில்  வளர்ந்தார். குப்புசாமி  சொந்த  மகனைப்போல்  அவரைப்  பார்த்துக்  கொண்டார். ஆனால், 40-வது வயதில்  சுகுமாரன்,  தம்மைப்  பிரிந்துவிடுவார்  என்பதை  பணி ஓய்வுபெற்ற  80-வயது  குப்புசாமி  நினைத்துக்கூட  பார்த்ததில்லை.  கடந்த  ஆண்டு,  சுகுமாரன்,  சாலை  ஓரத்தில்…