மைகாட் இல்லாத இந்தியர்கள் பணிக்குழுவில் பதிந்துகொள்ளலாம்

மலேசிய  அடையாள  அட்டை(மைகாட்)  இல்லாதிருக்கும்  இந்தியர்கள், இந்தியர்  சமூகம்  மீதான  சிறப்பு  அமலாக்கப்  பணிக்குழு (எஸ்ஐடிஎப்)வில்  தங்களைப்  பதிந்துகொள்ள  வேண்டும்  என  அக்குழுத்  தலைவர்  டாக்டர்  எஸ்.சுப்ரமணியம்  கேட்டுக்கொண்டுள்ளார். 1957-க்கு  முன்னதாக  மலேசியா  வந்தவர்களும்  1957-க்குப்  பிறகு  மலேசியாவில்  பிறந்தவர்களும்  மைகாட் இல்லாதிருப்பதற்குக்  காரணம்  ஏதுமில்லை  என  மஇகா …

அம்பிகா தீவிரவாதத்தை ஈர்க்கக்கூடும், உத்துசான் உளறுகிறது

  இனவாதத்தை எதிர்ப்பதற்காக சமீபத்தில் அம்பிகா அறிவித்த புதிய அரசு சார்பற்ற அமைப்பு அநோக்கத்திற்கு மாறாக இனவாதத்தை ஈர்க்கக்கூடும் என்று அம்னோவுக்கு சொந்தமான உத்துசான் மலேசியா உளறிக்கொட்டியுள்ளது. "அவருக்கு (அம்பிகாவுக்கு) எதிரான மலேசிய மக்களின் சினம், குறிப்பாக முஸ்லிம்களுக்கிடையில் பல்வேறு பிரச்சனைகளில், இன்னும் அடங்காமல் இருக்கிறது", என்று அந்நாளிதழின்…

நஜிப் சாபா சென்ற வேளையில் மாபுள் தீவில் துப்பாக்கிச் சூட்டுச்…

பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  நேற்றிரவு  கோத்தா  கினாபாலுவில்  கால்  பதித்த வேளையில்  செம்பூர்னாவில்  துப்பாக்கிச்  சண்டை  நிகழ்ந்திருக்கிறது. அச்சம்பவத்தில்  போலீஸ்காரர்  ஒருவர் கொல்லப்பட்டதாகவும்  இன்னொருவர்  கடத்தப்பட்டதாகவும்  சாபா  வட்டாரமொன்று  தெரிவித்தது. நேற்றிரவு  சுமார்  11.30  மணி  அளவில்,  பிலிப்பினோக்கள்  என்று  நம்பப்படும்  எண்மர் இராணுவ   சீருடையில்  செம்பூர்னாவுக்கு …

செம்பூர்னா துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் நஜிப்பை அவமதிக்கும் செயலாகும்

நேற்றிரவு  செம்பூர்னாவில்  நிகழ்ந்த  துப்பாக்கிச்  சூட்டுச்  சம்பவம்  மலேசியப்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்குக்கு  மதிப்போ,  மரியாதையோ  இல்லை  என்பதைக்  காண்பிப்பதாக  பினாங்கு  முதலமைச்சர்  லிம்  குவான்  எங்  கூறினார். “பிரதமர்  சாபாவில்  கால்வைத்த  வேளையில்  பயங்கரவாதிகள்  தாக்குதல்  நடத்தியிருக்கிறார்கள்  என்றால்,  அவர்கள்  என்ன  சொல்ல  வருகிறார்கள்? “அவர்கள் …

கோபிந் சிங்: காலணியை வீசிய ஆசிரியர் மீது சட்ட நடவடிக்கை…

  நெகிரி செம்பிலான் மாநிலத்தில் ஒரு தொடக்கப்பள்ளி மாணவி மீது தமது காலணியை வீசி அம்மாணவிக்கு காயம் விளைவித்தாக கூறப்படும் ஆசிரியர் மீது அரசாங்கம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் கோபிந்த் சிங் அரசாங்கத்தை கேட்டுக் கொண்டுள்ளார். சம்பந்தப்பட்ட அந்த ஆசிரியை நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு…

போலீஸ் அதிகாரி மீது பாலியல் குற்றம் சாட்டிய சஞ்சீவன் விசாரிக்கப்படுகிறார்

  குற்ற எதிர்ப்பு அரசு சார்பற்ற அமைப்பான மைவாச் (MyWatch) தலைவர் ஆர். சஞ்சீவன் பெயரிடப்படாத ஒரு மூத்த போலீஸ் அதிகாரியின் (ஆட்சியாளரிடமிருந்து சிறப்புமிக்க பட்டமும் பெற்றுள்ளவர்) மீது சாட்டிய பாலியல் விவகாரம் குறித்த குற்றச்சாட்டிற்காக போலீசாரால் தாம் விசாரிக்கப்படுவதாக கூறுகிறார். போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் அலுவலகம் (ஒழுங்கு…

அம்பிகா, சாமாட் தலைமையில் நாட்டை புணரமைக்க நெகாரா-கு மக்கள் இயக்கம்

  இன மற்றும் இனவாத சர்ச்சைகள் மலேசிய பல்லின மக்களுக்கிடையில் இதுவரையில் நிலவிய வந்த அமைதி மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றுக்கு பெரும் மிரட்டலை உருவாக்கி வரும் இக்காலகட்டத்தில் மக்களுக்கு நம்பிக்கையை ஊட்டி, ஆளுமை அளித்து நாட்டை புணரமைக்கும் நோக்கத்தைக் கொண்ட ஒரு மக்கள் இயக்கம் பெர்சேயின் முன்னாள் கூட்டு…

சிலாங்கூர் எம்பி-யும் நஜிப்பும் இரகசிய சந்திப்பு?

பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கும்  சிலாங்கூர்  மந்திரி  புசார்  அப்துல்  காலிட்  இப்ராகிமும்  நேற்று  ஒன்றாக  நோன்பு  திறந்த  பின்னர் இரகசியமாக  சந்திப்பு  நடத்தினார்கள்  என  அம்னோ-ஆதரவு  வலைத்தளம்  ஒன்று  கூறியுள்ளது. புக்கிட்  ஜெலுத்தோங்,  தெங்கு  அம்புவான்  ஜுமா  பள்ளிவாசலில்  அச்சந்திப்பு  நிகழ்ந்ததாக  MyKmu.net  கூறியது. ஆனால், அச்சந்திப்பில் …

முறையீட்டை விசாரிக்க அவசரம் காட்டப்படுவதாக அன்வாரின் வழக்குரைஞர்கள் புகார்

குதப்புணர்ச்சி II  வழக்குமீதான  முறையீடுகளை  விசாரித்து  முடிக்க  கூட்டரசு  நீதிமன்றம்  அவசரம்  காட்டுவதாக  அன்வார்  இப்ராகிமின்  வழக்குரைஞர்கள்  குறைகூறியுள்ளனர். நீதிமன்ற  துணை  பதிவதிகாரி  ஹஸ்பி  ஹசான்  மூன்று முறையீடுகளையும்  ஒன்றாக  விசாரிப்பதற்கு  ஏற்பாடு  செய்திருப்பதாக   பாடாங்  செராய்  எம்பி  என்.சுரேந்திரன்  மலேசியாகினியிடம்  தெரிவித்தார். “அரசுதரப்பு  வழக்குரைஞர்  குழுவிலிருந்து  முகம்மட் …

பிரதமர் அர்ஜெண்டினாவுக்கு ஆதரவு தெரிவிக்காமல் இருக்க வேண்டும்: கேஜெ வேண்டிக்கொண்டார்

‘ஜோக்’ஒன்று  இப்போது  வலம்  வந்து கொண்டிருக்கிறது. பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  உலகக்  கிண்ணக்  கால்பந்து  போட்டியில்  எந்தக்  குழுவை  ஆதரிக்கிறாரோ  அது  தோற்றுப்போகுமாம். நஜிப்  ஸ்பேய்னை,  இங்கிலாந்தை,  பிரேசிலை  ஆதரித்துப் பேசினார். மூன்றும்  மண்ணைக்  கவ்வின. இக்கால்பந்து  போட்டியின்  இறுதி  ஆட்டத்தில் அர்ஜெண்டினாவும்  ஜெர்மனியும்  போதுகின்றன. அந்த …

கொல்லப்பட்ட மாடல் அழகியின் காதலர் தடுப்புக் காவலில்

எஸ்டோனிய  மாடல்  அழகி  ரெஜினா  சூசலு  கொலை   விசாரணைக்கு  உதவியாக  அவரின்  காதலர்  துங்கு  அலாங்  ரேஸா  துங்கு  இப்ராகிம்  தடுத்து  வைக்கப்பட்டுள்ளார். அந்த  28-வயது  ஆடவர், அவரின்  நண்பர்  என்று  கூறப்படும்  ஆகஸ்டினுடன்  ஒரு  வாரத்துக்குத்  தடுத்து  வைக்கப்பட்டிருப்பார்  என  த  ஸ்டார்  கூறிற்று. இவர்களையும்  சேர்த்து …

இஸ்மா, பெர்காசாவைவிட ஆபத்தானது: பாஸ் தலைவர்

மலாய்  மேலாதிக்கத்துக்காக  போராடும்  பெர்காசாவைவிட  ஈக்காத்தான்  முஸ்லிமின்  மலேசியா (இஸ்மா)  அமைப்பு  “ஆபத்தானது,  இனவாதம் மிக்கது”  என்கிறார்  பாரிட்  புந்தார்  எம்பி  முஜாஹிட்  யூசுப்  ராவா. பாஸ்  கட்சியின்  தேசிய  ஒற்றுமை  பிரிவுத்  தலைவருமான  அவர், “அவர்கள்  சமயப்  போர்வை  போர்த்திய  இனவாதிகள்” என்றார். “பெர்காசாவைவிடவும்  இனவாதம்  மிக்கது …

இஸ்மா தலைவர்: இஸ்லாத்தைப் பாதுகாப்பது இனவாதமா?

இஸ்லாத்தைப்  பாதுகாக்க  முனையும்  அமைப்புக்கு  இனவாத  அமைப்பு  என  முத்திரை  குத்துவது  சரியா  என்று  சீறுகிறார்  ஈக்காத்தான்  முஸ்லிமின்  மலேசியா (இஸ்மா) தலைவர். பாஸ்  தலைவர்  முஜாஹிட்  ராவா  மலேசியாகினியிடம் தெரிவித்த  கருத்துக்கு  எதிர்வினை  அளித்தபோது  இஸ்மா  தலைவர்  அப்துல்லா  ஷேக்  அப்துல் ரஹ்மான்,   இவ்வாறு  சீற்றமடைந்தார். “நாங்கள் …

எம்பி: பிரதமர்துறை இலாகாக்கள் ஒன்றை மற்றொன்றை ‘விழுங்கப் பார்க்கிறது’

பிரதமர்துறையில்  உள்ள  சில  இலாகாக்கள்  ஒரே  மாதிரியான  பணியில்  ஈடுபட்டிருப்பதால் ஒன்றுகொன்று  போட்டிபோட்டுக்கொண்டு  ஒன்றை  மற்றொன்றை  “அடித்துச் சாப்பிடப் பார்க்கின்றது”  என  குளுவாங்  எம்பி  லியு  சின்  தொங்  கூறினார். பொருளாதாரத்  திட்டப்  பிரிவு (இபியு)  ஒன்றிருக்கிறது. அடைவுநிலை  மேலாண்மை, சேவைப்  பிரிவு  ஒன்றிருக்கிறது. இந்த இரண்டின்  பணியுமே …

மகாதிருக்கு வயது 89: அவர் நலம்வாழ வாழ்த்தினார் அன்வார்

டாக்டர்  மகாதிர்  முகம்மட்  இன்று  89-வது  பிறந்த  நாளைக்  கொண்டாடுகிறார். இவ்வளவு  வயதாகியும்  இரண்டு  தடவை இருதய  அறுவைச் சிகிச்சை  செய்து  கொண்டிருந்தும்  இன்னும் அவர்  பழைய  மாதிரியே  சுறுசுறுப்பாக  இருக்கிறார். முன்னாள்  பிரதமருக்கு  இன்று  பலரும்  வாழ்த்துச்  சொன்னார்கள். அவர்களில்  எதிரணித்  தலைவர்  அன்வார்  இப்ராகிமும்  ஒருவர்.…

அம்பிகாவின் ‘நெகராகூ’ பழைய பல்லவிதான்: இஸ்மா தாக்கு

நெகராகூ  என்ஜிஓ  அமைந்து  ஒரு  நாள்தான்  ஆகிறது.  அதற்குள்  இஸ்மா (ஈக்காத்தான்  முஸ்லிமின்  மலேசியா) அதைச்  சாடத் தொடங்கிவிட்டது. அந்த  என்ஜிஓ இஸ்லாத்துக்கும்  மலாய்க்காரர்  உரிமைக்கும்  நேரடி  மிரட்டலாம். இஸ்மா,  மலேசிய  வழக்குரைஞர்  மன்றத்தின்  முன்னாள்  தலைவர்  அம்பிகா  ஸ்ரீநிவாசனின்  நிழற்படத்தை  அதன்  வலைத்தளத்தில்  வெளியிட்டு  அவரை   ஏமாற்றுக்காரர் …

பங், ஹிட்லர் வாழ்க என டிவிட் செய்தது தப்பு: நஜிப்

பிரேசிலுக்கு  எதிரான  ஆட்டத்தில்  ஜெர்மனியின்  வெற்றியை   பங்  மொக்தார்  ரடின் பாராட்டியது  தவறல்ல;  ஆனால், ஹிட்லர் வாழ்க  என்று  சேர்த்திருந்ததுதான் தப்பு  எனப்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  குறை  கூறினார். “பங்கின்  கருத்து  ஏற்கத்தக்கதல்ல. அதை  அவர்  மீட்டுக்கொள்வார்”, என்றாரவர். பங்,  நேற்று “Well done... bravo...…

அமைதியை நிலைநிறுத்துங்கள்: மலாய்க்காரர்-அல்லாதாருக்கு ரோஸ்மா நினைவூட்டல்

நாட்டில்  அமைதியைக்  கட்டிக்காக்கும்  பொறுப்பு  அனைத்து மலேசிய  இனத்தவருக்கும்  உண்டு  எனப்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கின்  துணைவியார்  கூறியுள்ளார். “மலாய்க்காரர்கள்  மட்டும்தான்  அந்தக்  கடமை  இருப்பதாகச்  சீனர்களும்  இந்தியர்களும்  நினக்கக்கூடாது”, என  ரோஸ்மா  மன்சூர்  கூறினார். “அவர்கள் (சீனர்களும் இந்தியர்களும்)  அதைச்  செய்வதில்லை  என்று  நான்  சொல்லவில்லை.…

இனவாதத்தை எதிர்க்க புதிய என்ஜிஓ: பாக் சமட்டும் அம்பிகாவும் அமைத்தனர்

தேசிய  இலக்கியவாதி  ஏ.சமட்  சைட்டும்  வழக்குரைஞர்  மன்றத்தின்  முன்னாள்  தலைவர்  அம்பிகா  ஸ்ரீநிவாசனும்  சேர்ந்து  இனவாதத்தையும்  தீவிரவாதத்தையும்  எதிர்க்க  ஒரு  புதிய  அரசுசாரா  அமைப்பை(என்ஜிஓ)  உருவாக்கியுள்ளனர். “நாட்டை  மீட்டெடுக்கும்  மக்கள்  இயக்கம் (நெகாரா கூ)”  என  அதற்குப்  பெயரிடப்பட்டிருக்கிறது. அதன்  தொடக்கவிழாவில்  பேசிய  அம்பிகா,  பொதுத்  தேர்தலுக்குப்  பின்னர், …

பாலாவின் மனைவி தொடுத்துள்ள வழக்கைத் தள்ளுபடி செய்ய நஜிப் மனு…

காலஞ்சென்ற  பி.பாலசுப்ரமணியத்தின்  மனைவியும்  அவரின்  பிள்ளைகளும்  தொடுத்துள்ள  வழக்கைத்  தள்ளுபடி  செய்யக்  கோரி  மனு  தாக்கல்  செய்யப்போவதாக  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கையும்  அவரின்  துணைவியார்  ரோஸ்மா  மன்சூரையும்  பிரதிநிதிக்கும்  வழக்குரைஞர்கள்  கோலாலும்பூர் உயர்  நீதிமன்றத்தில்  இன்று  தெரிவித்தனர். நஜிப்பின்  இளவல்கள்  இருவரின்  வழக்குரைஞர்களும்   அதேபோன்ற  மனுவைத்  தாக்கல் …

ஜோகூர் அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு அணுக்கமான எஸ்டோனிய பெண்…

ஜோகூர்  அரச  குடும்பத்தைச்  சேர்ந்த  ஒருவரின்  காதலி  என்று  கூறப்படும்  எஸ்டோனிய  மாடல்  அழகி  ஒருவர்  கொல்லப்பட்டிருக்கலாம்  எனப்  போலீசார்  நம்புகின்றனர். ரெஜினா  சூசலு  என்ற  அப்பெண்  முதலில்  நீரில் மூழ்கி  இறந்திருக்கலாம்  என்றுதான்  கருதப்பட்டது. ஆனால்,  அவரது  உடலில்  “சந்தேகத்துக்குரிய”  காயங்கள்  காணப்பட்டதை  அடுத்து  அவர்  கொல்லப்பட்டிருக்கலாம் …

வீடற்றோர் நிலையைக் கண்டறிய வீதி உலா வந்தார் நஜிப்

தலைநகரில்  ஆறு  மாதங்களில்   வீடற்றிருப்போரும்  பிச்சைக்காரர்களும்  தங்குவதற்கு  வசதியாக  ஒரு  இடம்  தயாராகி  விடும்  என்று  நஜிப்  அப்துல்  ரசாக்  கூறினார். அதில்  படுப்பதற்கும்  குளிப்பதற்கும்  அவர்களின்  பொருள்களை  வைத்துக்கொள்வதற்குமான  வசதிகள்  இருக்கும். “அவர்களுக்கு  அடுக்குமாடி  வீடு  தேவையில்லை. இரவில்  படுப்பதற்கு  ஓர்  இடம் தேவை”, என்றாரவர். பிரதமர், …

இராமசாமியின் கொடும்பாவியை எரிக்கப் போவதாக பெர்காசா மிரட்டல்

பினாங்கு துணை முதலமைச்சர் II பி. இராமசாமி மே 13 பற்றிய கூறிய கருத்து குறித்து விவாதிக்க முன்வராவிட்டால் அவருடைய கொடும்பாவியை எரிக்கப் போவதாக பினாங்கு பெர்காசா மிரட்டல் விடுத்துள்ளது. அவருக்கு தைரியமிருந்தால் பெர்காசா உறுப்பினர்களுடன் விவாதம் நடத்த வருமாறு மாநில பெர்காசா தலைவர் பாட்ஸில் சுய்ப் சவால்…