ஜிஎஸ்டி-எதிர்ப்புப் பேரணி: ஏற்பாட்டாளர்களின் பதிலுக்கு போலீஸ் காத்திருக்கிறது

மே  முதல்  நாள்  நடத்தத்  திட்டமிட்டுள்ள  பொருள்,  சேவை  வரிக்கு  எதிரான  பேரணி  தொடர்பில்  அதன்  ஏற்பாட்டாளர்கள்  இன்னும்  பதில்  சொல்லாதிருக்கிறார்கள்  என  இன்ஸ்பெக்டர்-ஜெனரல்  அப்  போலீஸ்  காலிட்  அபு  பக்கார்  கூறியுள்ளார். அப்பேரணியை  கேஎல்சிசி-இல் தொடங்கி  டாட்டாரான்  மெர்டேகாவில்  முடிக்கத்  திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால்,  டாட்டாரான்  மெர்டேகாவைப்  பயன்படுத்த …

அரசாங்கம் எதை மறைக்கிறது? மீண்டும் வினவுகிறார் அன்வார்

எம்எச்370 விவகாரத்தில்  அரசாங்கம்  எதையோ  மூடிமறைப்பதாக  எதிரணித்  தலைவர்  அன்வார்  இப்ராகிம்  தொடர்ந்து  குறைகூறி  வருகிறார். அப்படிச்  சொல்லிச்  சொல்லியே  அவர்  அரசியல் லாபம் தேட  முயல்வதாக அரசாங்க  அதிகாரிகள்  குற்றம்சாட்டியபோதும்  அன்வார்  விடாமல்  அதைச் சொல்லிக்  கொண்டே  இருக்கிறார். "எவ்வளவு  காலத்துக்குத்தான்  தகவலை  வெளியில்  சொல்லாமல்  வைத்துக்கொள்ளப் …

சைபுடின்: என்னால் அஸ்மினுடனும் காலிட்டுடனும் இணைந்து பணிபுரிய முடியும்

தாம்  பிகேஆர்  துணைத்  தலைவராகத்  தேர்ந்தெடுக்கப்படாவிட்டாலும்கூட  அப்பதவிக்குப்  போட்டியிடும்  மற்ற  வேட்பாளர்களான  அஸ்மின்  அலியுடனும்  சிலாங்கூர்  மந்திரி  புசார்  காலிட்  இப்ராகிமுடனும்  சேர்ந்து  பணியாற்றுவதில்  எந்தப்  பிரச்னையும்  இராது  எனத்  தலைமைச்  செயலாளர்  சைபுடின்  நசுத்தியோன்  கூறினார். எதிர்வரும்  கட்சித்  தேர்தலில்  மூவரும்  துணைத்  தலைவர்  பதவிக்குப்  போட்டியிட்டாலும் …

எம்எச்370 இந்தியப் பெருங்கடலில் விழவில்லையா?

ஆறு வாரங்கள்  தேடியும் எம்எச்370  தொடர்பில்  சிறு  தடயம்கூட  கிடைக்காத  நிலையில்  சரியான  இடத்தில்தான்  தேடுகிறோமா  என்ற  சந்தேகம்  எழுந்துள்ளது. அதனால் தேடும்பணியை  முதலிலிருந்தே  தொடங்கலாமா  என்று  ஆலோசிப்பதாக  அனைத்துலக  விசாரணைக்  குழு (ஐஐடி) வட்டாரத்தை  மேற்கோள்காட்டி  நியு  ஸ்ரேய்ட்ஸ்  டைம்ஸ்  அறிவித்துள்ளது. அந்த  போயிங்  777  இதுவரை …

துப்பாக்கி கடத்த முயன்ற ஆகாயப்படை அதிகாரி அமெரிக்காவில் கைது

மலேசிய  ஆகாயப்படை  அதிகாரி  ஒருவர்,  மலேசியாவுக்குத்  திரும்பும்  வழியில்  ஒரு  துப்பாக்கியைக்  கடத்த  முயன்றதற்காக அமெரிக்காவின்  டெக்சாஸில்  கைது   செய்யப்பட்டார். மேஜர்  முகம்மட்  பைஸ்  அப்துல்  ஜலில், Taurus PT-22 ரக  துப்பாக்கியைப்  பகுதி  பகுதியாக  பிரித்து  தம்  பயணப்பையில்  பல  இடங்களில்  மறைத்து  வைத்துக்  கடத்த  முயன்றார் …

தண்ணீர் தட்டுப்பட்டால் பாதிக்கப்பட்ட தொழிற்சாலைகளை இழுக்கப் பார்க்கிறது நெகிரி

சிலாங்கூரில்  நீர்ப்  பங்கீட்டால்  பாதிக்கப்பட்டுள்ள  தொழிற்சாலைகள்   நெகிரி  செம்பிலானுக்கு  வரலாம்  என்று  அழைப்பு  விடுத்திருக்கிறார்  நெகிரி  செம்பிலான்  மந்திரி  புசார்  முகம்மட்  ஹசன். நீர்ப் பங்கீட்டால்  நாளொன்றுக்கு  ரிம15 மில்லியன்  இழப்பு  ஏற்படுவதாக  நெஸ்லே  மலேசியா  நிறுவனம்  பெரித்தா  ஹரியானில் கூறியிருப்பதற்கு  எதிர்வினையாக  அவர்  இந்த  அழைப்பை  விடுத்தார்.…

இரண்டு மந்திரி புசார்கள் மாற்றப்படுவார்களாம், உத்துசான் கூறுகிறது

பிரதமர்  நஜிப்  அப்துல் ரசாக், விரைவில் தீவகற்ப  மலேசியாவில், இரண்டு  மாநில  மந்திரி  புசார்களை  மாற்றப்போகிறார்  என  அம்னோவுக்குச்  சொந்தமான  உத்துசான்  மலேசியா  அறிவித்துள்ளது. அச்செய்தித்தாளில்  ஆவாங்  செலாமாட்  என்னும்  புனைப்பெயரில்  எழுதும்  பத்தி  எழுத்தாளர், அவர்களுக்குப்  பதிலாக  மந்திரி  புசார்  பொறுப்புகளை  ஏற்பதற்கு சிலர்  அடையாளம்  காணப்பட்டிருப்பதாகக் …

எம்எச்370: கடலடித் தேடல் தொடர்கிறது

மலேசிய  விமான  நிறுவனத்தின் எம்எச்370  விமானம்,   பெய்ஜிங்  செல்லும்  பயணத்தின்போது  பாதைமாறிச்  சென்று  பின்னர்  எந்தத்  தடயமுமின்றி  மறைந்துபோய்  இன்றுடன்  44 நாள்கள்  ஆகின்றன. விமானத்தை  அல்லது  அதன்  பகுதிகளையாவது   கண்டுபிடிக்க 11  விமானங்கள்,  12 கப்பல்கள்  இந்தியப்  பெருங்கடலின்  தென்பகுதியில் 48,507  சதுர  கிலோமீட்டர்  கடல்பரப்பை அலசிக் …

நீர்ப் பங்கீட்டை நிறுத்த சிலாங்கூருக்கு அமைச்சு பரிந்துரை

கிள்ளான்  பள்ளத்தாக்கில் அமல்படுத்தப்பட்டிருக்கும்  நீர்ப்  பங்கீட்டைக்  கட்டம்கட்டமாக  நீக்குமாறு  எரிபொருள், பசுமைத் தொழில்நுட்பம், நீர்வள  அமைச்சு  சிலாங்கூர்  அரசைக்  கேட்டுக்கொண்டிருக்கிறது. சிலாங்கூரில்  பல  அணைக்கட்டுகளில்  நீர்மட்டம்  பாதுகாப்பான  அளவுக்கு  உயர்ந்திருப்பதாக  துணை  அமைச்சர்  மாட்சிர்  காலிட்  கூறினார். “கிள்ளான்  கேட்ஸில்  நீரின்  அளவு  53.99  விழுக்காடு  இருப்பதாகவும்  சுங்கை …

கர்பாலுக்கு இறுதி மரியாதை தெரிவிக்க ஆயிரக்கணக்கானோர் கூடினர்

காலஞ்சென்ற கர்பால்  சிங்குக்கு மரியாதை  தெரிவிக்க மலேசியர்கள்  ஆயிரக்கணக்கில் இன்று  டேவான்  ஸ்ரீ   பினாங்கில்  கூடினர். காலை  மணி  7.30க்கே  டேவானில்  கூட்டம்  நிரம்பி  வழிந்தது. 8.15 அளவில் கர்பாலின் பிண  ஊர்வலம்  டேவான்  ஸ்ரீ  பினாங்  வந்துசேர்ந்தது. அவரது  நல்லுடல்  டேவானுக்குள்  எடுத்துச்  செல்லப்பட்டு  பொதுமக்கள்  இறுதி …

கர்பாலுக்கு 15,000 க்கு மேற்பட்டோர் இறுதி மரியாதை செலுத்தினர்

  மலேசியாவின் பெருமைமிக்க மகன் கர்பாலுக்கு மலேசியர்கள் தேவான் ஸ்ரீ பினங்கில் மாநில அரசு ஏற்பாடு செய்துள்ள அரச மரியாதையுடனான சடங்கில் கலந்து கொண்டு தங்களுடைய இறுதி மரியாதையை செலுத்தினர். அதன் பின்னர், பிற்பகல் மணி 1.00 அளவில் அவரது உடல் புக்கிட் கந்துங் சீன மின்சுடலை மையத்திற்கு…

பாஸ் ஹுடுட் சட்ட மசோதா தாக்கல் செய்வதை பாக் லா…

பாஸ் தலைமையிலான கிளந்தான் மாநில அரசாங்கம் ஹூடுட் சட்ட மீதான ஒரு தனிப்பட்ட உறுப்பினர் மசோதா ஒன்றை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வதில் தவறு ஏதும் இல்லை என்று முன்னாள் பிரதமர் அப்துல்லா அஹமட் பாடாவி கூறியுள்ளார். "அந்த விவகாரம் நாடாளுமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டால் அது என்ன தவறு இருக்கிறது?",…

பினாங்கு பவன வீதிக்கு கர்பால் பெயர் சூட்டப்படும்

  கடந்த வியாழக்கிழமை காலஞ்சென்ற புக்கிட் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் கர்பால் சிங்கை கௌரவிக்கும் பொருட்டு ஜெலுத்தோங்கிலுள்ள மக்கள் உலாவும் பகுதிக்கு பெர்சியாரான் கர்பால் என்று பெயர் இடப்படும். மாநில முதலமைச்சர் லிம் குவான் எங் இதனை இன்று அறிவித்தார். ஜாலான் உத்தாமாவிலுள்ள கர்பாலின் இல்லத்திலிருந்து செய்தியாளர்களிடம் பேசிய…

கர்பாலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினார் சாமிவேலு

  நேற்று அதிகாலையில் சாலை விபத்தில் மரணமுற்ற நாட்டின் மூத்த அரசியல்வாதி கல்பாலுக்கு இன்று மாலை (ஏப்ரல் 18 ) முன்னாள் அமைச்சர் ச.சாமிவேலு கண்ணீர் அஞ்சலி செலுத்தினார். தமது இறுதி மரியாதையைச் செலுத்த பினாங்கில் கர்பால் சிங்கின் இல்லத்தை சென்றடைந்த சாமிவேலுவை பினாங்கின் முதலமைச்சர் லிம் குவான்…

இண்ட்ராப்: எம்ஓயு-வை மதிக்கவில்லை என்பதை பிஎன் அறிவிக்க வேண்டும்

பிஎன்  கூட்டணி,  இண்ட்ராப்- பிஎன்  புரிந்துணர்வு  ஒப்பந்தத்தை(எம்ஓயு) மதிக்கப்போவதில்லை என்பதை  ஒப்புக்கொண்டு  அதை  வெளிப்படையாக  அறிவிக்கவும்  வேண்டும்  என  இண்ட்ராப்  செயலாளர்  பி.ராமேஷ் வலியுறுத்தியுள்ளார். அந்த  எம்ஓயு  கைப்பொப்பமிடப்பட்டு ஒராண்டு  நிறைவுபெறும்  வேளையில். பிஎன்  தலைமைச்  செயலாளருக்கு  எழுதிய  திறந்த  மடலில்  ராமேஷ், அரசாங்கம்  இவ்விவகாரத்தில்   தன்  நிலையை…

பிள்ளை பராமரிப்பை ஷியாரியா நீதிமன்றமே முடிவு செய்ய வேண்டும்

தேசிய  ஷியாரியா  வழக்குரைஞர்  சங்கம் (பிஜிஎஸ்எம்),  எஸ்.தீபா, முஸ்லிமாக  மாறிய  இஸ்வான்  அப்துல்லா  ஆகியோரின் வயது  வராத  பிள்ளைகளை  யாரின்  பராமரிப்பில்  விடுவது  என்பதை  முடிவு  செய்ய  வேண்டியது  ஷியாரியா  நீதிமன்றமே  தவிர  சிவில்  நீதிமன்றம்  அல்ல  என்று  கூறுகிறது. “பெற்றோரில்  ஒருவர்  இஸ்லாத்துக்கு  மாறினாலும் 18வயதுக்குக்  குறைந்த …

போலீஸ் காவலில் இறந்தவருக்கு 11-ஆண்டுகள் ஆகியும் நீதி கிடைக்கவில்லை

2003-இல்  போலீஸ்  காவலில்  வைக்கப்பட்டிருந்த  தம்  மகன் 19-வயது  உலகநாதன்  இறந்து  போனது  எப்படி  என்று   11 ஆண்டுகளாகக்  கேட்டுக்கொண்டிருக்கிறார்  அவரின்  தாயார். அந்தக் கேள்விக்கு  இன்றுவரை  பதில்  இல்லை. போலீசால்  உலகநாதனின்  கொலையாளிகளையும்  கண்டுபிடிக்க  முடியவில்லை, இறப்புக்கான  காரணத்தையும்  சொல்ல  முடியவில்லை  என்று  கண்ணீர்  மல்கக்  கூறினார் …

நீர்ப் பங்கீட்டை நிறுத்து; இல்லையேல் போராட்டம்-சிலாங்கூர் அம்னோ எச்சரிக்கை

சிலாங்கூர்  அரசு  நீர்ப்  பங்கீட்டை  முடிவுக்குக்  கொண்டுவரத்  தவறினால்  ஆர்ப்பாட்டம்  நடத்தப்  போவதாக  சிலாங்கூர்  அம்னோ  எச்சரித்துள்ளது. சிலாங்கூர்  அம்னோ  தலைவர்  நோ  ஒமார்,  மே 4 வரை  சிலாங்கூர்  அரசுக்கு  கால  அவகாசம்  வழங்குவதாகக்  கூறினார் “ஆர்ப்பாட்டங்கள்  நடத்துவோம்.  தொடர்  கூட்டங்களை  நடத்துவோம். “அம்னோ  மட்டுமல்ல, மக்கள் …

நாடாளுமன்றத்தில் கர்பாலின் இறுதிப் பேச்சு

மக்களவையில்  அனல் கக்கும்  உரைகளுக்குப்  பேர் பெற்றவர் காலஞ்சென்ற  கர்பால்  சிங். கருத்துக்களும்  ஆணித்தரமாக  இருக்கும்; குரலும்  கம்பீரமாக இருக்கும்.  இதனாலேயே ‘ஜெலுத்தோங்  புலி’  என்றும்  அவர்  அழைக்கப்பட்டார். நாடாளுமன்றத்தில்  அவர்  கடைசியாக  பேசிய  பேச்சிலும்  அந்தப்  ‘புலியின்  உருமலை’க்  கேட்க  முடிந்தது. “இரண்டாவது  தடவையாக  அவையில்  நீதிபதிகளின் …

கடலடித் தேடலில் இதுவரை பலனில்லை

நான்கு  தடவை கடலடிக்குச்  சென்று  தேடிப்  பார்த்த தானியங்கி  குட்டி  நீர்மூழ்கிக்  கப்பலான  புளுஃபின்-21(ஏயுவி)  அங்கு  எம்எச்370  விமானம்  இருப்பதற்கான  தடயங்கள்  எதையும்  காணவில்லை. இன்று  அது ஐந்தாவது  கடலடிப் பயணத்தை  மேற்கொண்டிருப்பதாக கூட்டு  ஒருங்கிணைப்பு  மையம்  தெரிவித்தது. புளுஃபின்  மிக  மெதுவாகத்தான்  செயல்படும். இதுவரை  110 சதுர …

மினி-ரோபோட்டுகளைக் கொடுத்துதவ முன்வந்தார் ஜேம்ஸ் கேமருன்

ஆழ்க்கடல்  ஆய்வாளரும்  திரைப்பட  இயக்குனருமான  ஜேம்ஸ்  கேமருன்,  டைடேனிக்  கப்பலின்  உடைந்த  பகுதிகளை  ஆராய  தமக்குப்  பயன்பட்ட  தொலைவிலிருந்து  இயக்கப்படும்  சிறு-ரக  நீர்மூழ்கிச்  சாதனங்கள்  எம்எச்370-ஐத்  தேடும்பணிக்கும்  உதவியாக  இருக்கும்  என்று  கூறியுள்ளார். “கப்பலின்  உடைந்த  பகுதிகளை  ஆராய  நாங்கள்  உருவாக்கிய  ரோபோட்டுகள்  பயன்படுமானால்  அவற்றைக்  கொடுத்துதவ  தயார்”, …

கர்பால் விபத்து : லாரி ஓட்டுநர் போதைப் பொருள் உட்கொண்டிருந்தார்

இன்று  அதிகாலை  புக்கிட்  குளுகோர்  எம்பி  கர்பால்  சிங்  கொல்லப்பட்ட  சாலை  விபத்தில்  சம்பந்தப்பட்ட  லாரியின்  ஓட்டுநர்  போதைப்  பொருள்  உட்கொண்டிருந்தார்  என்பது  தெரிய  வந்துள்ளது. தொடக்க  நிலை  ஆய்வுகள்  அவரது  உடலில்  கேன்னபிஸ்  இருப்பதைக்  காட்டின  என்று  பேராக்  போலீஸ்  தலைவர்  ஏக்ரைல்  சானி  அப்துல்லா  கூறினார்.…

பினாங்கில் கர்பாலுக்கு அதிகாரப்பூர்வ இறுதிச் சடங்கு

பினாங்கு  அரசு,  காலஞ்சென்ற  நாடாளுமன்ற  உறுப்பினர்  கர்பால்  சிங்குக்கு  அதிகாரப்பூர்வமான  முறையில்  இறுதிச்  சடங்குகளைச்  செய்யும். கர்பாலின்  நல்லுடல்  பினாங்கு  கொடியால்  போர்த்தப்படும்  என  முதலமைச்சர்  லிம்  குவான்  எங்  கூறினார். மாநில  அரசுக் கட்டிடங்களில்  பினாங்கு  கொடிகள்,  ஞாயிற்றுக்கிழமைவரை  அரைக் கம்பத்தில்  பறக்கவிடப்படும். கர்பாலின்  உடல்  பொதுமக்கள் …