பால் புவாமீது இன்று பூர்வாங்க விசாரணை

யாருக்கு  ஆதரவாக  உள்துறை  அமைச்சர்  அஹ்மட்  ஜாஹிட்  ஹமிடி  அமெரிக்க  புலனாய்வுத்  துறைக்குக்  கடிதம்  எழுதினார்  எனக்  கூறப்படுகிறதோ  அந்த  பால்  புவாமீது  இன்று  பூர்வாங்க  விசாரணை  தொடங்குகிறது. இந்தப்  பூர்வாங்க  விசாரணையில்  அரசுத்தரப்பும்  எதிர்த்தரப்பும்  நீதிபதியைச்  சந்திப்பார்கள். நீதிபதி  வழக்கின்  தன்மையை  ஆராய்வார். வழக்குக்கு  அடிப்படையான  ஆதாரங்களும் …

பிரதமர்: ஜிஎஸ்டி அமலாக்கத்துக்கு இதுவே சரியான தருணம்

எரிபொருள்  விலை  படுவீழ்ச்சி  கண்டிருக்கும்  இந்த  நேரம்தான்   பொருள், சேவை  வரியைக்  கொண்டுவர  சரியான  நேரமாகும்  என்கிறார்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக். “ரோன் 97, ரோன் 95, டீசல் ஆகியவற்றின்  விலைகள்  குறைந்திருப்பது  ஒரு  காரணம். விலைக் குறைவினால்  மலேசியப்  பயனீட்டாளர்களிடம்  செலவுசெய்ய  கூடுதல்  பணம்  கைவசம் …

ஆர்ஒஎஸ் மீது சினமடைந்துள்ள மஇகா தலைமைச் செயலாளர் உண்ணாவிரதம் தொடங்குகிறார்

  நாளை பிற்பகல் மணி 2.00 க்கு புத்ராஜெயாவில் சங்கங்கள் பதிவகத்தின் தலைமையகத்தில் மஇகாவின் புதிய தலைமைச் செயலாளர் ஜி. குமார் அமன் கட்சியைக் காப்பாற்றுவதற்காக உண்ணாவிரதம் தொடங்கவிருக்கிறார். சங்கங்கள் பதிவாளரை சந்திப்பதற்கு குமாருக்கு வாய்ப்பளிக்க ஆர்ஓஎஸ் மறுத்து விட்டதாக தமிழ் நாளிதழ்கள் நேற்று செய்தி வெளியிட்டிருந்தன. "மத்திய…

“அல்லா” மேல்முறையீடு மனு நிராகரிக்கப்பட்டது

  த ஹெரால்ட் வார இதழ் "அல்லா" என்ற சொல்லை பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை மீது பெடரல் நீதிமன்றம் முன்னதாக அளித்திருந்த தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய அனுமதி கோரி அந்நீதிமன்றத்திடம் ரோமன் கத்தோலிக்க தேவாலய பேராயர் செய்திருந்த மனுவை இன்று ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு தள்ளுபடி…

கூடுதல் நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கான தேவாலயத்தின் மனு நிராகரிக்கப்பட்டது

  ரோமன் கத்தோலிக்க தேவாலய பேராயரின் மனுவை விசாரிக்கும் பெடரல் உச்சநீதிமன்ற அமர்வில் நீதிபதிகளின் எண்ணிக்கை ஏழு அல்லது ஒன்பதற்கு விரிவாக்கப்பட வேண்டும் என்ற மனுவை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. ஏழு நீதிபதிகள் அடங்கிய முன்னைய அமர்வு வழங்கிய தீர்ப்பை ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரிப்பது…

சிருல் ஆஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்டுள்ளார்

  மங்கோலிய பெண் அல்தான்துயாவை கொலை செய்த குற்றத்திற்காக மரண தண்டணை விதிக்கப்பட்டுள்ள இரு குற்றவாளிகளில் ஒருவரான சிருல் அஸ்ஹார் உமார் ஆஸ்திரேலிய குடிநுழைவுத்துறை அதிகாரிகளால் பிரிஸ்பேனில் கைது செய்யப்பட்டார். இண்டர்போல் சிருலின் பெயரை சிவப்பு நோட்டீஸ் பட்டியலில் சேர்க்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டதாக எபிசி செய்தி…

மின்கட்டணத்தைக் குறைப்பீர்: பிகேஆர் கோரிக்கை

பிகேஆர், இவ்வாண்டில்  மின்கட்டண  உயர்வு  இல்லை  என்று  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  அறிவித்திருப்பதை  ஏளனம்  செய்துள்ளது. எண்ணெய்  விலை  படுவீழ்ச்சி  கண்டுள்ள  வேளையில்   மின்கட்டணத்தைக்  குறைக்காமல்  கட்டண  உயர்வைத்  தள்ளி  வைப்பதாகச்  சொல்வது   என்ன  நியாயம்  என்று  அது கேட்கிறது. “பிரதமர்  மின்கட்டணத்தை  உடனடியாகக்  குறைக்க  வேண்டும்.…

மஇகா-வின் புதிய நியமனங்களை ஏற்பதற்கில்லை- ஆர்ஓஎஸ்

மஇகா  மறுதேர்தல்  விவகாரத்துக்குத்  தீர்வு  காணாதவரை  அக்கட்சித்  தலைவர்  ஜி.பழனிவேல்  செய்துள்ள  புதிய  நியமனங்களை  ஏற்பதற்கில்லை  எனச் சங்கப்  பதிவகம்  திட்டவட்டமாக  அறிவித்து விட்டது. நேற்று  மஇகா-வுக்கு  அனுப்பிவைத்த  கடிதத்தில், சங்கப்  பதிவாளரைச்  சந்திக்க  மஇகா  தலைமைச்  செயலாளர்  ஜி.குமார்  அம்மான்  விடுத்திருந்த  கோரிக்கையை  ஆர்ஓஎஸ்  நிராகரித்து  விட்டதாக …

நீதிமன்றம்: வழக்குரைஞர்களின் கைது சட்டவிரோதமானது

ஆறாண்டுகளுக்கு  முன்பு  மெழுகுதிரி  போராட்டம்  நடத்திய  14 பேருக்குச்  சட்ட  உதவி  வழங்க  முன்வந்த  ஐந்து  வழக்குரைஞர்கள்  கைது  செய்யப்பட்டது  சட்டவிரோதமானது  என  உயர்  நிதிமன்றம்  வழங்கிய  தீர்ப்புக்கெதிராக  போலீசும்  அரசாங்கமும்  செய்திருந்த  மேல்முறையீட்டை  முறையீட்டு  நீதிமன்றம் இன்று  தள்ளுபடி  செய்தது. நீதிபதி  ஸஹாரா  இப்ராகிம்  தலைமையில்  மேல்முறையீட்டை …

ரபிஸி: அரசாங்க விமானங்களை விற்கலாமே

பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக், சிக்கன  நடவடிக்கைகளில்  ஒரு  பகுதியாக  அரசாங்க  ஜெட்  விமானங்களை  விற்று  விடலாம்  என  பிகேஆர்  தலைமைச்  செயலாளர்  ரபிஸி  ரம்லி  கூறினார். ரிம400 மில்லியனை  மிச்சப்படுத்த தேசிய  பயிற்சித்  திட்டத்தை  நிறுத்தி வைப்பதாக  நஜிப்  இன்று  காலை  அறிவித்ததற்கு  எதிர்வினையாக  பிகேஆர்  உதவித் …

முகாம்கள் மூடப்பட்டாலும் பணியாளர்களுக்கு சம்பளம் உண்டு

தேசிய  சேவையை  ஒராண்டுக்  காலம்  நிறுத்திவைக்க  பிரதமர் நஜிப்  அப்துல்  ரசாக்  முடிவு  செய்திருந்தாலும்  தேசிய  சேவை  முகாம்  நடத்துனர்கள்,  பயிற்றுனர்கள் ஆகியோரின்  நிலை  பாதிக்கப்படாது  எனத்  தற்காப்பு  அமைச்சர்  ஹிஷாமுடின்  உசேன்  கூறினார். “முகாம்கள்  மூடப்படுவதால்  நடத்துனர்கள்,  பயிற்றுனர்கள்  பாதிக்கப்பட  மாட்டார்கள். அவர்கள்  நிரந்தரப்  பணியாளர்கள்”, என …

தேசிய சேவை தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது

தேசிய  சேவை  பயிற்சித்  திட்டம்(பிஎல்கேஎன்)  இவ்வாண்டு தற்காலிகமாக  நிறுத்தி  வைக்கப்படும். நாட்டின்  வருமானம்  வீழ்ச்சி கண்டு  வருவதைச்  சமாளிக்க  அரசாங்கம்   இம்முடிவை  எடுத்துள்ளது. இதன்வழி  சுமார் ரிம400 மில்லியனை மிச்சப்படுத்தலாம்  என்கிறார்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்.

இவ்வாண்டு மின் கட்டணம் உயராது

பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்,  திருத்தி  அமைக்கப்படும்  2015- பட்ஜெட்டின்  ஒரு  பகுதியாக  இவ்வாண்டு  மின் கட்டணம்  உயர்த்தப்படாது  என  அறிவித்துள்ளார். இவ்வாண்டுக்கான  உள்நாட்டு  உற்பத்தி  ஐந்திலிருந்து ஆறு  விழுக்காடாக  இருக்கும்  என்று  எதிர்பார்க்கப்பட்டது. இப்போது அது  திருத்தப்பட்டு  4.5-இலிருந்து  5 விழுக்காடாக  இருக்கும்  என எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டின் …

டிவி 3 அன்வாருக்கு இடமளிக்கிறதே என சைபுல் ஆத்திரம்

எதிரணித்  தலைவர் அனவார்  இப்ராகிம்  அடிக்கடி  டிவி3-இல்  வருவதைக்  கண்டு  அவரின்  முன்னாள்  உதவியாளர்  சைபுல்  புகாரி   அஸ்லான்  எரிச்சலடைந்திருக்கிறார். முன்னாள்  நிதி  அமைச்சர்  டயிம்  சைனுடின் மீது  பிகேஆர்  நடத்தும்  தாக்குதல்கள்  பற்றிய  செய்திகளுக்கு  முக்கியத்துவம்  கொடுக்க  வேண்டும்  என்று  டிவி3  “பெரிய  போஸ்”  உத்தரவிட்டிருப்பதாக சைபுல்,…

நிக் அசீஸ் நலமே உள்ளார், ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார்

பாஸ்  கட்சியின்  பெருமதிப்புக்குரிய  ஆன்மிகத்  தலைவர்  நிக்  அப்துல்  அசீஸ்  நிக்  மாட்  கடுமையாக  நோயுற்றிருப்பதாகக்  கூறப்படுவதை  அவரின்  மகன்  மறுக்கிறார். “அவர்  வீட்டில்  நலமாக  ஓய்வெடுத்துக்  கொண்டிருக்கிறார். படிக்கிறார், நடக்கிறார்”, என  நிக்  அப்டு  கூறினார். ஆனால், அவர்  உடல்  சற்றே தளர்ச்சியுற்றிருப்பதையும்  அவர்  ஒப்புக்கொண்டார். தளர்ச்சியின் …

எண்ணெய் விலைவீழ்ச்சியைச் சமாளிக்கும் வழிமுறைகள்: பிரதமர் அற்விப்பார்

அதிர்ச்சிதரும்  வகையில்  வீழ்ச்சி  கண்டிருக்கும்  உலக  எண்ணெய்  விலைகளைச்  சமாளிக்கும்  புதிய  வழிமுறைகளைப்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  நாளை  அறிவிப்பார். கடந்த  சில  மாதங்களில்  எண்ணெய்  விலை  பாதியாகக்  குறைந்துள்ளது.  இதனால்,  எரிபொருள்  விலைகள்  குறைந்திருப்பது  பயனீட்டாளர்களுக்கு  நல்ல  செய்திதான். ஆனால், அது  நாட்டின்  வருமானத்தைப் பாதிப்பதுதான் …

குறைபாட்டைச் சரிக்கட்ட கடன் வாங்கக் கூடாது: நஜிப்புக்கு எச்சரிக்கை

பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்,  2015 பட்ஜெட்டில்  மிகப் பெரிய  தொகை  துண்டு  விழுவதைச்  சரிக்கட்ட   கடன் வாங்கக்,   கூடாது  என்றும்  கடன்சுமையை  நாடு  தாங்காது  என்றும்  எச்சரிக்கப்பட்டுள்ளது. உலக  எண்ணெய்  விலை  வீழ்ச்சி, ரிங்கிட்  மதிப்பு  குறைந்தது, வெள்ளப்  பேரிடர்  செலவு   ஆகியவற்றால்  பட்ஜெட்டில்  ரிம25 பில்லியன் …

‘பீதியைப் பரப்பிய’ வலைப்பதிவருக்கு ஈராண்டுச் சிறை

ஈராண்டுகளுக்குமுன்  லாஹாட்  டத்துவில்  ஊடுருவல்  நிகழப்போவதாக  மக்களிடையே  அச்சத்தைப்  பரப்பியதற்காக  பக்கத்தான்  ரக்யாட்  ஆதரவாளரும்  ‘மிலோசுவாம்’ என்ற  பெயரில்  பிரபலமாக  விளங்கும்  பதிவாளருமான  யூசுப்  அல்-சித்திக்குக்கு  ஈராண்டுச்  சிறைத்  தண்டனை  விதிக்கப்பட்டது. இரகசிய  ஆவணம்  என்று  கூறி,  போலீசார்  சாபா  ஊடுவருலை  எதிர்கொள்ள  ஆயத்தமாகி  வருகிறார்கள்  என்று  கூறும் …

மகாதிர்: பெர்காசாவுடன் கருத்துவேறுபாடு இல்லை

டாக்டர்  மகாதிர்  முகம்மட்,  வலச் சாரி  இயக்கமான  பெர்காசாவுடன்  உறவுகளைத்  துண்டித்துக்  கொண்டிருப்பதாக  வெளிவந்துள்ள  செய்தியை  மறுத்துள்ளார். “நான்  பெர்காசாவைவிட்டு  விலகியிருக்க  வேண்டிய  அவசியமே  இல்லை.  ஏனென்றால்,  நான்  முறைப்படி  அதில்  இணைந்திருக்கவில்லை. “ஆனாலும்,  அவர்களின்  கருத்துகளை,  குறிப்பாக,  மலாய்க்காரர்-அல்லாதாரின் தீவிரவாத  கருத்துகளுக்கு  அவர்களின்  எதிர்வினைகளை  ஆதரிக்கிறேன்  என்பதை…

எப்பிஐ கடிதம் தொடர்பில் ஜாஹிட்டுக்கு முன்னாள் ஐஜிபி கண்டனம்

சூதாட்ட  மன்னர்  எனக் கூறப்படும்  பால்  புவாவுக்குப் பரிந்து உள்துறை  அமைச்சர்  அமெரிக்கப்  புலனாய்வுத்  துறை(எப்பிஐ)க்கு  எழுதிய  கடிதத்துக்கு மேலும்  கண்டனம்  தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்கடிதம்  எழுதியது  ஒரு தவறான  செயல்  அல்லவென்று  கடந்த வாரம்   கூறிய   அஹ்மட் ஜாஹிட்  ஹமிடி, அதிகாரத்துவ  இரகசியச்  சட்டத்தைச்  சுட்டிக்காட்டி  அது பற்றி …

‘மலேசியாவுக்காக உயிர் கொடுப்பேன். ஆனால் அம்னோவுக்காக பொய் சொல்ல மாட்டேன்’

மலேசியாவுக்காக  உயிரைக் கொடுப்பதற்கும்  தயாராக  இருக்கிறார்  மேஜர்  ஜைடி.  ஆனால், ஆளும்  கட்சியின்  நன்மையைக்  கருதி  மோசடி  நடைமுறைகளைப்  பார்த்துக்கொண்டு  அவரால்  சும்மா  இருக்க  முடியாது. நாட்டுக்கு  விசுவாசமாக  இருக்க  உறுதிமொழி  எடுத்துக்கொண்டது  உண்டு  என்று  கூறும்  அரச  மலேசிய  ஆகாயப்படை  விமானியான   மேஜர், அம்னோவுக்கு  விசுவாசமாக  இருத்தல் …

எம்ஏசிசி டயிமுக்கு எதிராக அன்வாரிடம் வாக்குமுலம் பெறும்

முன்னாள்  நிதி  அமைச்சர்  டயிம்  சைனுடின், அதிகாரத்தைத்  தவறாகப்  பயன்படுத்தியதாகக்   கூறப்படுவதன்  தொடர்பில்  எதிரணித்  தலைவர் அன்வார் இப்ராகிமிடமிருந்து வாக்குமூலம்  பதிவு  செய்யப்படும்  என  மலேசிய  ஊழல்  தடுப்பு ஆணையம்(எம்ஏசிசி)  கூறியது. டயிமுக்கு எதிராக “வலுவான  ஆதாரம்”  வைத்திருப்பதாக  அன்வார்  இப்ராகிம்  கூறியிருப்பதை  அடுத்து எம்ஏச்சி  இம்முடிவுக்கு  வந்துள்ளது.…

நஜிப்: ஜிகாட் என்றால் என்ன என்று ஜாக்கிம் சொல்லிக் கொடுக்க…

மலேசிய இஸ்லாமிய மேம்பாட்டு இலாகா (ஜாகிம்) போன்ற அரசாங்க அமைப்புகள் ஜிகாட் என்றால் என்ன என்பதையும் ஷரியா சட்டங்களையும் முஸ்லிம்கள் கற்றுக்கொள்வதற்கு அவர்களுக்கு விளக்க வேண்டும் என்று பிரதமர் நஜிப் இன்று கூறினார். இன்று டாதாரான் பிரதானாவில் அரசாங்க ஊழியர்களின் மாதாந்தர சந்திப்பில் பேசிய நஜிப் முஸ்லிம்கள் "எதைச்…