துணைப் பிரதமர் டக்ளஸ் உக்கா எம்பாஸ்(Douglas Uggah Embas) கூறுகையில், காற்று மாசுபாட்டு அளவீடுகள் 500-ஐத் தாண்டினால், அரசு மற்றும் தனியார் துறை அலுவலகங்களை மூடுவதற்கான வழிகாட்டுதல்கள் உள்ளன. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் நிகழ்ச்சிகளை நடத்துவதா அல்லது ரத்து செய்வதா என்பதைத் தாங்களே முடிவு செய்யலாம்; ஆனால் அதிகாரிகள் ஏதேனும் உத்தரவு…
தீவிரவாதிகளே நாட்டின் நெம்.1 எதிரிகள்
தீவிரவாதிகள், அதுவும் சமுதாயத்துக்கு அச்சத்தை ஊட்டுபவர்களே நாட்டின் முதல் எதிரிகள் என்று பிரதமர்துறை அமைச்சர் ஜோசப் குருப் கூறினார். “தீவிரவாத தரப்பினரைத் தடுத்து நிறுத்தாவிட்டால் தேசிய ஒற்றுமைக்குத் தடையாக விளங்குவார்கள்”. ஆசிய வியூக, தலைமைத்துவ கழகம் (அஸ்லி) ஏற்பாடு செய்திருந்த ஒரு மாநாட்டில் உரையாற்றியபோது குருப் இவ்வாறு கூறினார்.…
இஸ்மா அரண்மனை பெயரைச் சொல்லி சிறுபான்மையினரை மிரட்டுகிறது
ஈக்காத்தான் முஸ்லிமின் மலேசியா (இஸ்மா) 117-ஆண்டுகள் பழமைவாய்ந்த ஸ்ரீசுந்தரராஜப் பெருமாள் கோயில் புதுப்பிக்கப்பட்டதற்கு அரண்மனை பெயரைச் சொல்லி எதிர்ப்புத் தெரிவிப்பதன்வழி “நாட்டில் இனங்களுக்கிடையில் பதற்றத்தை உண்டுபண்ண முயல்கிறது” என சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர் வி.கணபதி ராவ் சாடினார். இஸ்மா, இனவாதப் பேச்சுகளின் மூலமாக மலேசியர்களின் ஒற்றுமையை உடைத்தெறிய முயல்கிறது …
இஸ்மா, ஆலய-எதிர்ப்பை மீண்டும் கிளப்பிவிட்டு ஆத்திரமூட்டியுள்ளது
ஈக்காத்தான் முஸ்லிமின் மலேசியா (இஸ்மா), சமூக வலைத்தளத்தில் கிள்ளான் ஆலய-எதிர்ப்பு விவகாரத்தை மீண்டும் கிளறிவிட்டிருப்பது இந்து சமூகத்தை ஆத்திரமடைய வைத்துள்ளது. அந்த வலச்சாரி அமைப்பைத் தேச நிந்தனைச் சட்டத்தின்கீழ் விசாரிக்க வேண்டும் என மலேசிய இந்தியர் முற்போக்குச் சங்கத் தலைமைச் செயலாளர் எஸ்.பாரதிதாசன் கேட்டுக்கொண்டிருக்கிறார். “எதற்காக இஸ்மா வேண்டுமென்றே …
புதிய சட்டம் ஐஎஸ்ஏ போன்றிருக்கிறது எனக் கண்டனம்
இரத்துச் செய்யப்பட்ட உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தில் இருந்த விசாரணையின்றித் தடுப்புக்காவலில் வைக்கும் வசதி புதிதாக கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாதத்துக்கு எதிரான சட்டத்தில் இடம்பெறுவதைப் பல தரப்பினர் குறைகூறியுள்ளனர். புதிய சட்டம் அதற்கு வகை செய்யும் என உள்துறை துணை அமைச்சர் வான் ஜுனாய்டி துவாங்கு ஜப்பார் கூறியதாக மலேசியன் இன்சைடர் …
அஸ்மின்: பாஸ்- டிஏபி சில்லறை சண்டை ஓய வேண்டும்
பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலி, ஊராட்சித் தேர்தல்மீது டிஏபியும் பாஸும் சர்ச்சையிடுவதற்கு விரைவில் தீர்வு காண வேண்டும் என விரும்புகிறார். “இதற்கு பக்கத்தானுக்குள்ளேயே தீர்வு காண வேண்டும். பக்கத்தான் ரக்யாட் தலைமைத்துவ மன்றக் கூட்டம் கூட்டப்படும்போது இவ்விவகாரமும் விவாதிக்கப்படுவது நிச்சயம். “பக்கத்தான் ரக்யாட்டின் பலமே ஒரு கருத்துடனும் …
அன்வாரின் குதப்புணர்ச்சி வழக்கு தீர்ப்பு பிப். 10-இல்
அன்வார் இப்ராகிம் மீதான குதப்புணர்ச்சி குற்றச்சாட்டில் கூட்டரசு நீதிமன்றம் அதன் இறுதித் தீர்ப்பை இன்னும் இரண்டு வாரங்களில் வழங்கும். உச்ச நீதிமன்றம், பிப்ரவரி 10ஆம் நாள் தீர்ப்பு வழங்கும் என மலேசிய நீதித்துறை டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு அன்வார், "Que sera sera (என்ன நடக்க வேண்டுமோ, …
‘அக்கறையற்ற’ கிளந்தான் அரசாங்கம், பிஎஸ்எம் சாடல்
கிளந்தான் அரசு இயற்கைச் சுற்றுச்சூழல் குறித்து “கவலை கொள்வதில்லை, அக்கறை காட்டுவதில்லை” என பார்டி சோசலிஸ் மலேசியா (பிஎஸ்எம்) சாடியுள்ளது. அதுதான் அம்மாநிலத்தில் வெள்ள நிலைமை மோசமானதற்குக் காரணம். “அந்த அரசால் மலைச்சாரல்களில் பொறுப்பற்ற முறையில் மேற்கொள்ளப்பட்ட மேம்பாட்டுப் பணிகளின் கடும் விளைவுகளை 2014 வெள்ளத்தின்போதே கிளந்தான் மக்கள் …
மலேசியாகினி பிரதமர் அலுவலகத்திற்குள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது
மலேசிய பிரதமர் அலுவலகம் மற்றும் அதன் வளாகத்திற்குள் செல்வதற்கு மலேசியாகினிக்கு மீண்டும் இன்று தடை விதிக்கப்பட்டது. துணைப் பிரதமர் முகைதின் யாசின் பங்கேற்கும் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்ற போது அங்கிருந்த பாதுகாவலர்கள் மலேசியாகினியை உள்ளே விட உடனடியாக மறுத்து விட்டனர். "மலேசியாகினி உள்ளே செல்லவே முடியாது",…
அன்வார்: மே 13 எச்சரிக்கை ஹாடியின் தனிப்பட்ட கருத்து
உள்ளூர் மன்றங்களுக்கான தேர்தல் இன்னொரு மே 13 இனக் கலவரத்திற்கு வழிவகுக்கும் என்று பாஸ் கட்சி தலைவர் அப்துல் ஹாடி அவாங் விடுத்துள்ள எச்சரிக்கை அவரது "தனிப்பட்ட கருத்து" ஆகும் என்று எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம் கூறுகிறார். உள்ளூர் மன்ற தேர்தலுக்கான அதன் நிலைப்பாடு என்ன…
குழந்தைகளை பிரம்பால் அடிப்பது குற்றமாக்கப்படலாம்
தற்போதைய குழந்தை சட்டம் 2001க்கு மாற்றாக விரைவில் இயற்றப்படவிருக்கும் புதிய சட்டத்தின் கீழ் குழந்தைகளை பிரம்பால் அடிப்பது கிரிமினல் குற்றமாக்கப்படலாம் என்று மகளிர், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சர் ரோஹாணி அப்துல் கரிம் கூறினார். மலேசியாவில் குழந்தைகளை நல்வழிப்படுத்துவதற்கு பிரம்படி கொடுப்பது வழக்கமானது என்றாலும், நாடு…
சிருல் வழக்கில் ஆஸ்திரேலியாவைக் குற்றம் சொல்வது நியாயமல்ல
சிருல் அஸ்ஹார் உமர் விவகாரத்தில் ஆஸ்திரேலியாவைக் குறை சொல்வது நியாயமாகாது என்கிறார் ஆஸ்திரேலிய அரச வழக்குரைஞர் மார்க் ட்ரோவல். சிருல் நாட்டைவிட்டு வெளியேற முடியாதபடி கடுமையான பிணை நிபந்தனைகளை மலேசிய அரசுத்தரப்பு வழக்குரைஞர்கள் போட்டிருக்க வேண்டும். மேற்கு ஆஸ்திரேலியாவில் வழக்குரைஞர் தொழில் செய்யும் ட்ரோவல், அல்டான்துன்யா ஷரீபு கொலை …
ஊழல் பேயை ஒழிப்பதில் பிஎன்னுக்கு அக்கறை இல்லை
ஊழலை அம்பலப்படுத்துவதில் தீவிரம் காட்டுவதில்லை என பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் பிஎன் வழிநடத்தும் கூட்டரசு அரசாங்கத்தைச் சாடினார். “அது மேலும் ஊழல் செய்யவே பசி கொண்டு அலைவதுபோல் தோன்றுகிறது”. நேற்றிரவு பினாங்கு கழகமும் சி4 ஊழல்- தடுப்பு கண்காணிப்பு அமைப்பும் ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் லிம் …
சிருல் பாதுகாப்புமிக்க சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்
புதன்கிழமை ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் கைது செய்யப்பட்ட சிருல் அஸ்ஹார் உமர், கூடினபட்ச பாதுகாப்பைக் கொண்ட சிட்னி வில்லாவூட் தடுப்பு மையத்துக்கு மாற்றப்பட்டிருக்கிறார். அவர் பிரிஸ்பேனின் வடக்கே உறவினர்களுடன் வசித்து வந்ததாக ஏபிசி இணையச் செய்தித்தளம் கூறிற்று. அல்டான்துன்யா ஷரீபு கொலை வழக்கில் உச்ச நீதிமன்றம் சிருலுக்கும் இன்னொரு போலீஸ் …
கேலிக்கூத்தான உண்ணாவிரதம்
மஇகாவின் குமார் அம்மான் “சாகும்வரை” என்று கூறி வியாழக்கிழமை உண்ணாநோன்பு ஒன்றைத் தொடங்கினார். ஆனால். மறுநாள் 30-மணி நேரத்துக்குள்ளாகவே அவரது உண்ணாவிரதம் முடிவுக்கு வந்தது. இந்தக் குறுகிய கால உண்ணாவிரதத்துக்கு இந்திய சமூகத்தின் ஆதரவு எப்படி? இந்திய சமூகத்தைப் பொருத்தவரை மஇகா தனக்குச் சம்பந்தமில்லாத ஒன்று என்பது போலவே …
மஇகா தலைமைச் செயலாளர் குமார் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார்
தமது இறுதி மூச்சு இருக்கும் வரையில் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்து உண்ணாவிரதத்தை நேற்று பிற்பகல் மணி 2.00 க்கு தொடங்கிய தமது உண்ணாவிரத்தை குமார் அம்மன் இன்றிரவு முடித்துக் கொண்டார். புத்ராஜெயாவில் சங்கங்கள் பதிவக தலைமையகத்திற்கு வெளியில் தொடங்கிய குமாரின் உண்ணாவிரதத்தை நிறுத்தும்படி மஇகா தலைவர்…
ஊராட்சித் தேர்தல்கள் இன்னொரு மே13-க்கு வழிகோலும்: ஹாடி எச்சரிக்கை
ஊராட்சித் தேர்தல்களைத் திரும்பவும் கொண்டுவரும் டிஏபி-இன் ஆசை இன்னொரு மே 13 இனக் கலவரத்துக்குத்தான் இட்டுச் செல்லும் என்று பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங் எச்சரிக்கிறார். “நிலைத்தன்மையைக் கெடுக்ககூடிய, கிராமங்களுக்கும் நகரங்களுக்குமிடையில் இடைவெளியை விரிவடையச் செய்யக்கூடிய எதையும் செய்ய எண்ணக்கூடாது. அது பதற்றத்தைப் பெருக்கி அதன் விளைவாக…
டயிம்: பூமிபுத்ரா-அல்லாதார் ஓரங்கட்டப்படவில்லை
முன்னாள் நிதி அமைச்சர் டயிம் சைனுடின், பூமிபுத்ரா-அல்லாதார் ஓரங்கட்டப்படுகிறார்கள் என்று கூறப்படுவதை மறுக்கிறார். அரசியல்வாதிகள்தான் அப்படிக் கதை கட்டி விடுகிறார்கள் என்கிறார் அவர். இந்த அரசியல்வாதிகள் நாட்டில் இனங்களுக்கிடையில் நிலவும் நல்லுறவுகளைச் சீரழித்து விடுவார்கள் என்றவர் எச்சரித்தார். சைனா பிரஸ் செய்தித்தாளுக்கு வழங்கிய சிறப்பு நேர்காணலில் டயிம், கல்வி …
சிருல் இன்னமும் தடுப்புக் காவலில்தான் உள்ளார்
சிருல் அஸ்ஹார் உமர் விடுவிக்கப்படவில்லை, இன்னமும் தடுப்புக் காவலில்தான் வைக்கப்பட்டிருக்கிறார் என்பதை ஆஸ்திரேலிய குடிநுழைவு, எல்லைப் பாதுகாப்புத் துறை உறுதிப்படுத்தியது. “அந்த ஆள் இன்னமும் குடிநுழைவுத் துறை காவலில்தான் உள்ளார். மேல் விவரம் எதையும் அளிப்பதற்கில்லை”, என அத்துறை பேச்சாளர் ஒருவர் மலேசியாகினிக்கு அனுப்பிய மின்னஞ்சலில் கூறினார். மலேசிய …
குமார் அம்மான் உயிருக்கு மருட்டலா?
புத்ரா ஜெயாவில், சங்கப் பதிவகத்துக்கு வெளியில் உண்ணாவிரதம் இருக்கும் மஇகா தலைமைச் செயலாளர் ஜி.குமார் அம்மான், ஒரு டெக்சியில் வந்த நால்வரால் தம் உயிருக்கு ஆபத்து ஏற்படவிருந்ததாகக் கூறுகிறார். அதிகாலை, மணி 4.30-க்கு அச்சம்பவம் நிகழ்ந்ததாம். “நான் கழிப்பறைக்குச் செல்லும்போது ஒரு டெக்சியில் ஒருசிலர் இருப்பதைப் பார்த்தேன். என்னைப் …
பிஎல்கேஎஸ் முகப்புகள் மீண்டும் திறக்கப்பட்டன
குடிநுழைவுத் துறை விசிட் பாஸ்( தற்காலிக வேலை அல்லது பிஎல்கேஎஸ்) நீட்டிப்புக்கு விண்ணப்பிக்கும் முகப்புகளை மீண்டும் திறக்க முடிவு செய்துள்ளது. அவை இன்று தொடங்கி பிப்ரவரி 28-வரை திறந்திருக்கும். அன்னிய தொழிலாளர்களின் வேலை அனுமதிகளை இணையவழி நிர்வகிக்கும் பொறுப்பை வெளி நிறுவனமான MyEG சர்வீசஸ் பெர்ஹாட்டிடம் ஒப்படைத்ததைப் பொதுமக்கள் …
ஆஸ்திரேலியாவில் சிருல் விடுதலை ஆனால், கண்காணிக்கப்படுகிறார்
மங்கோலிய பெண் அல்டான்துன்யா ஷரீபூ-வைக் கொலை செய்ததற்காக மரண தண்டனை விதிக்கப்பெற்ற சிருல் அஸ்ஹார் உமர், ஆஸ்திரேலியாவில் குடிநுழைவுத் துறையால் கைது செய்யப்பட்ட பின்னர் நிபந்தனையுடன் விடுவிக்கப்பட்டார். “இப்போதைக்கு அவர் விடுவிக்கப்பட்டிருக்கிறார். ஆனால், அவரது கடப்பிதழை ஆஸ்திரேலிய அதிகாரிகள் பிடுங்கி வைத்திருக்கிறார்கள். சுதந்திரமாக நடமாடுவதற்கு அனுமதிக்கும் நிபந்தனை அட்டை …
ஐஎஸ்ஐஎஸ்-க்கு எதிராக ஆதரவு திரட்ட இந்தியா சென்றுள்ள யாசிதி குழு…
இந்தியாவில் சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ள யாசிதி இன குழுவினர் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளால் படும் துன்பங்களை எடுத்துக்கூறி ஆதரவு திரட்டி வருகின்றனர். ஈராக்கில் கணிசமாக வசிக்கும் யாசிதி இன மக்கள் ஈராக்கில் எழுச்சி பெற்ற ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளால் படும் துன்பங்களில் இருந்து மீள இந்தியாவிடம் ஆதரவு திரட்ட வந்துள்ளனர். இந்தியாவிடம் ஆதரவு…
ஜாஹிட்: சிருலை மலேசியாவிடம் ஒப்படைக்க முறைப்படி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
சிருல் அஸ்ஹார் உமரை ஒப்படைக்கும்படி ஆஸ்திரேலியாவுக்கு முறைப்படி கோரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாக உள்துறை அமைச்சர் அஹமட் ஜாஹிட் ஹமிடி கூறினார். “அரச மலேசிய போலீசார் விஸ்மா புத்ராவழி அக்கோரிக்கையை விடுத்துள்ளனர்”, என ஜாஹிட் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். “இதற்கு, ஆஸ்திரேலிய அரசாங்கத்துடன் கலந்து பேசுதல் போன்று சில நடைமுறைகள் உண்டு. “ஆஸ்திரேலிய …



