காலிட்: பிகேஆர், டிஏபி இன்றியே சிலாங்கூரை வழிநடத்துவேன்

நான்கு  ஆட்சிக்குழு  உறுப்பினர்கள்  போதும்,  தம்மால்  மாநில  அரசை வழிநடத்த  முடியும்  என  மார்தட்டுகிறார் சிலாங்கூர்  மந்திரி  புசார் அப்துல்  காலிட்  இப்ராகிம். பாஸ் கட்சியின்  நால்வர்  நடப்பு  ஆட்சிக்குழுவில்  உள்ளனர். அவர்கள் தம்மை  ஆதரிக்கிறார்கள்  என்றும்  அவர்  சொன்னார். ஆட்சிக்குழுவில்  நால்வர் பாஸ்  கட்சியினர்.  மூவர்  பிகேஆரையும் …

நஸ்ரி: நிர்வாணக் களியாட்டம் பற்றிப் பதிவிட்டவர் ஒரு ‘மடையர்’

பினாங்கில்  நடந்த  நிர்வாணக் களியாட்டம்  பற்றிப்  பதிவிட்ட  அம்னோ-ஆதரவு  வலைப்பதிவர்  அதில்  தம்  பெயரையும்  இழுத்து  விட்டிருப்பது  சரியான  “மடத்தனம்”  எனச்  சுற்றுலா, பண்பாட்டு  அமைச்சர்  நஸ்ரி அப்துல்  அசீஸ்  சாடியுள்ளார். ஆகஸ்ட்  3-இல்  ஜார்ஜ் டவுன்  விழாவுக்காக  பினாங்கு  சென்றிருந்த  அமைச்சருக்கு  நிர்வாணக்  களியாட்டத்துடன் தொடர்புண்டு  என …

காலிட் பதவியில் தொடர சுல்தான் அனுமதி

பிகேஆரிலிருந்து வெளியேற்றப்பட்டாலும்,  தாம்  தொடர்ந்து  மாநில  மந்திரி  புசாராக இருக்க சிலாங்கூர்  சுல்தான் அனுமதி  அளித்துள்ளதாக  அப்துல்  காலிட்  இப்ராகிம்  கூறினார். அவர் இன்று  காலை  கிள்ளானில்  இஸ்தானா  ஆலம்  ஷா-வில் சுல்தான்  ஷராபுடின்  இட்ரிஸ்  ஷா-வைச் சந்தித்தார். பிற்பகல்  மாநிலச்  செயலகக்  கட்டிடத்தில்   செய்தியாளர்களிடம்  பேசிய  காலிட்,…

சிலாங்கூரில் நிர்வாகத்துக்கு இடையூறு ஏதுமில்லை

அப்துல்  காலிட்  இப்ராகிம் சிலாங்கூர்  மந்திரி புசாராக  தொடர்வது  பற்றிச்  சர்ச்சையிடப்பட்டாலும்  சிலாங்கூரில் நிர்வாகம்  இடையூறு ஏதுமின்றி செயல்படுவதாக  பிகேஆர்  உதவித்  தலைவர்  என்.சுரேந்திரன் இன்று  கூறினார். அப்துல்  காலிட்  பிகேஆரிலிருந்து  நீக்கப்பட்டதை  அடுத்து  ஆட்சிக்குழு  உறுப்பினர்கள்  பதவி  விலக  வேண்டும்  என்ற  அரசமைப்பு  விதி  எதுவும்  இல்லை…

பிகேஆருக்கு காலிட் சட்ட அறிவிக்கை

சிலாங்கூர்  மந்திரி புசார்  அப்துல்  காலிட்  இப்ராகிம்,  தாம்  கட்சிநீக்கம்  செய்யப்பட்ட  முறையை  ஆட்சேபித்து   பிகேஆருக்கு  சட்ட  அறிவிக்கை  அனுப்பி  வைத்துள்ளார். அவ்வறிவிக்கை  நேற்று  பிகேஆர்  தலைவர்  வான்  அசீசாவிடம்  ஒப்படைக்கப்பட்டதாக  உத்துசான்  மலேசியா  கூறியது. பிகேஆர்  ஒழுங்கு  வாரியம்  காலிட்டைக்  கட்சிநீக்கம்  செய்வதில்  அவசரப்பட்டு  நடந்து  கொண்டதென …

கிளந்தான் எம்பி: பாஸில் சேர காலிட்டை அழைக்கவில்லை

கிளந்தான்  மந்திரி  புசார் அஹ்மட்  யாக்கூப்,   பிகேஆர்  தலைவர்  அப்துல்  காலிட்  இப்ராகிமுக்கு  பாஸில்  சேர  அழைப்பு  விடுத்ததாகக்  கூறும்  செய்தியை  மறுக்கிறார். “(நேற்றைய த ஸ்டாரில்) ‘காலிட்டுக்கு  பாஸ்  கதவுகள்  திறந்திருக்கின்றன  என்கிறார் கிளந்தான் எம்பி’  என்று  வெளிவந்த   செய்தியில்  கொஞ்சமும்  உண்மையில்லை”, என  அஹ்மட்  யாக்கூப்பின் …

காலிட் எம்பி பதவியைக் காப்பாற்றிக் கொள்ள சுல்தானை சந்திக்கிறார்

பிகேஆர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ள அப்துல் காலிட் இப்ராகிம் தமது மந்திரி புசார் பதவியின் எதிர்காலம் குறித்து பேசுவதற்கு இன்று சிலாங்கூர் சுல்தானை சந்திக்கிறார். காலை மனி 8.45 க்கு கிள்ளான், இஸ்தானா அலாம் ஷாவுக்கு காலிட் வந்து சேர்ந்தார். சுல்தான் மணி 9.00 க்கு வந்தார். சுல்தான் காலை…

டிஏபி-இன் இணக்கத்தைப் பெற்ற அன்வார் அடுத்து பாஸ்ஸைச் சந்திப்பார்

சிலாங்கூர்  மந்திரி  புசார்  விவகாரத்தில்  டிஏபி-யைச்  சந்தித்த  பிகேஆர்  நடப்பில்  தலைவர்  அன்வார்  இப்ராகிம்  அடுத்து  பாஸ்  தலைவர்களைச்  சந்திக்கவுள்ளார். மந்திரி  புசார்  தொடர்பான   விவகாரங்களை  விவாதிப்பதற்காகக்  கூட்டப்பட்ட டிஏபி  மத்திய  செயல்குழுக்  கூட்டத்தில்  கலந்துகொண்ட  அன்வார், டிஏபி-க்கு  நன்றி  தெரிவித்ததுடன்   அவ்விவகாரத்தில்  இரு  கட்சிகளும்  கருத்தொற்றுமை கண்டுள்ளதாகவும் …

எம்பி நிலை பற்றி சிலாங்கூர் அரச மன்றம் நாளை விவாதிக்கும்

சிலாங்கூர்  சுல்தானின்  ஆலோசனை  மன்றம் நாளை  கூடுகிறது  என மந்திரி  புசார்  காலிட்  இப்ராகிம்  தெரிவித்தார். இஸ்தானா  காயாங்கானில்  நடக்கும்  அக்கூட்டத்தில்  சுல்தானின்  ஆலோசகர்கள்  தாம் பிகேஆரிலிருந்து   விலக்கப்பட்டது பற்றி  விவாதிப்பார்கள்  என்று காலிட்  கூறினார். பதவிநீக்கம்  பற்றி  மேற்கொண்டு  அறிக்கை  எதுவும்  வெளியிட  வேண்டாம்  எனத்  தம் …

சுவாராம்: குகனின் சாவுக்காக ஐஜிபியைப் பதவிநீக்கம் செய்ய வேண்டும்

முறையீட்டு  நீதிமன்றம், ஏ.குகன்  லாக்-அப்பில்  இறந்ததற்கு  இன்ஸ்பெக்டர்-ஜெனரல்  அப் போலீஸ்  காலிட்  அபு  பக்காரும்  அவரின்  அதிகாரிகளுமே  பொறுப்பு  என்ற தீர்ப்பை  நிலைநிறுத்தி  உள்ளதை  அடுத்து  பல  தரப்புகள் போலீஸ்  படைத்  தலைவரைப்  பணிநீக்கம்  அல்லது  பணி இடைநீக்கம்  செய்ய  வேண்டும்  எனக்  கோரியுள்ளன. மனித  உரிமை  போராட்ட …

காலிட் இப்ராகிம்: கட்சியிலிருந்து நீக்கியது சட்டவிரோதமானது, எம்பியாக தொடர்வேன்

  பிகேஆர் கட்சியிலிருந்து தாம் நீக்கப்பட்டதில் குறைபாடுகள் இருப்பதோடு அது சட்டவிரோதமானது என்று கூறிய சிலாங்கூர் மாநில மந்திரி புசார், தாம் தொடர்ந்து மந்திரி புசாராக இருக்கப் போவதாக சூளுரைத்தார். "பிகேஆர் கட்சியின் உறுப்பியத்திலிருந்து என்னை நீக்கியதில் குறைபாடுகள் இருப்பதோடு அது சட்டவிரோதமானது", என்று காலிட் கூறினார். "இப்பிரச்சனை…

காலிட் இப்ராகிம் பிகேஆர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்

  சிலாங்கூர் மந்திரி புசார் பதவியிலிருந்து விலக மறுத்ததற்காக பிகேஆர் அப்துல் காலிட் இப்ராகிம்மை கட்சியிலிருந்து நீக்கியுள்ளது. இம்முடிவு பக்கத்தானின் பங்காளி கட்சி பாஸுடனான உறவைப் பாதிக்கும் என்று கூறப்படுகிறது. கட்சியின் ஒழுங்குமுறை வாரியத்தின் தலைவர் டான் கீ குவோங் இந்த முடிவை அறிவித்தார். அவ்வாரியத்தின் கூட்டம் இன்று…

இலவச உணவளிக்கும் அமைப்புகளுக்கு தடை நீக்கப்பட்டது

தலைநகரில்  இலவச  உணவளிக்கும்  அமைப்புகள்  தடையின்றி  அவற்றின்  பணியைத்  தொடரலாம். அவை  சுத்தப்பத்தமாக  செயல்பட வேண்டும். அந்த  விசயத்தில்  மாநராட்சி  மன்றம் கண்டிப்பாக  இருக்கும். இதற்குமுன்,  இலவச  உணவளுக்கும்  அமைப்புகள்  ஆகஸ்ட்  16-வரை  செயல்படுவதற்கு மட்டும்  அனுமதி  அளிக்கப்பட்டிருந்ததாகக்   கூட்டரசு  பிரதேச அமைச்சர்  தெங்கு  அட்னான் தெங்கு  மன்சூர் …

பெர்சே விருந்தில் ரிம500,000 திரண்டது

தேர்தல்  சீரமைப்பு  இயக்கமான  பெர்சே 2.0 நேற்றிரவு  நடத்திய  நிதிதிரட்டும்  விருந்தில்  சுமார்  ஆயிரம்  பேர்  கலந்துகொண்டனர். ரிம 500,000  நன்கொடையாகக்  கிடைத்தது. விருந்துக்கு  பெர்சே 2.0-இன்  முன்னாள்  ஒருங்கிணைப்பாளர்களான  அம்பிகா ஸ்ரீநிவாசன்,  ஏ.சமட்  சைட், இஸ்லாமிய  மறுமலர்ச்சி  முன்னணி  இயக்குனர்  அஹ்மட்  பாரூக் மூசாம், நாடாளுமன்ற  உறுப்பினர்கள் …

முகநூல் மூடப்படுமா?

முகநூலைத்  தவறாகப்  பயன்படுத்துவதாக  புகார்கள்  வந்திருப்பதை  அடுத்து  அச்  சமூக  வலைத்தளத்தை  மூடுவது  பற்றி  அரசாங்கம்  ஆராயும்  என்கிறார்  தொடர்பு, பல்லூடக  அமைச்சர்  அஹ்மட்  சப்ரி  சிக். அதன்மீது  அமைச்சு  பொதுமக்களின்  கருத்தை  அறிய  விரும்புவதாக  அவர்  கூறினார். “மக்கள்  முகநூலை  மூட  வேண்டும்  என்று  நினைத்தால்  அதைப்…

பக்கத்தான் சிலாங்கூர் சட்டமன்ற உறுப்பினர்கள் உறுதிமொழியில் கையொப்பமிட வேண்டும்

  சிலாங்கூர் சட்டமன்றத்தில் பக்கத்தான் கூட்டணிக்கு 43 சட்டமன்ற உறுப்பினர்கள் (மந்திரி புசார் காலிட் இப்ராகிம்மை சேர்க்காமல்) இருக்கின்றனர். மந்திரி புசார் அப்துல் காலிட் இப்ராகிம் மீது நம்பிக்கை இழந்து விட்டனர் என்ற உறுதிமொழி பத்திரத்தில் கையொப்பமிட வேண்டும் என்று பிகேஆர் அவர்களைக் கேட்டுக் கொண்டுள்ளது. சிலாங்கூர் பிகேஆர்…

அன்வார்: இது ’98 அல்ல; காலிட் எனக்கு எதிரியும் அல்ல

பிகேஆர், சிலாங்கூர்  மந்திரி  புசாரை  அநியாயமாக  பதவிநீக்கம்  செய்து  ஒரு  எதிரியை  உருவாக்கிக்  கொள்ளாது  என  அன்வார்  இப்ராகிம்  இன்று  கூறினார். ஜனவரி  15-இலிருந்து  தாம்  மாற்றப்படலாம்  என்பதை  காலிட்  அறிவார்  என்று  தெரிவித்த  பிகேஆர்  நடப்பில்  தலைவர், பக்கத்தானின்  ஒருமித்த  கருத்துடன்தான்   இறுதி முடிவு எடுக்கப்படும்  என்றார்.…

மெக்டோனல்ட் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் மூன்றே ஆர்ப்பாட்டக்காரர்கள்

இஸ்ரேல்-காசா சண்டை  தொடர்பில்  கோலாலும்பூரில் இரண்டு மெக்டோனல்ட்  கடைகளுக்கு  வெளியில்  ஏற்பாடு  செய்யப்பட்டிருந்த  ஆர்ப்பாட்டத்தில்  மூன்றே  மூன்று  ஆர்ப்பாட்டக்காரர்கள்தான்  கலந்து  கொண்டனர். பங்சாருக்கு  வந்திருந்த  இருவர், “நூற்றுக்கணக்கானவர்” காசாவுக்கு  ஆதரவு  தெரிவித்து  ஆர்ப்பாட்டம்  செய்வதாக  இருந்தது  என்றும்  ஆனால், போலீஸ்  வந்ததால்  அவர்கள்  வரவில்லை  என்றும்  தெரிவித்தனர். “குறைந்தது …

முன்னாள் அம்னோ இளைஞர் தலைவர் ஓராங் அஸ்லிகளிடம் மன்னிப்பு கேட்டார்

ஸ்டர்ஜன்  மீன் வளர்ப்புத்  திட்டத்தை  எதிர்க்கும்  ஓராங்  அஸ்லி  சமூகத்தினரை ‘சகாய்’ என்று குறிப்பிட்டதற்காக  முன்னாள்  ஜெராண்டுட்  அம்னோ  இளைஞர்  தலைவர்  வான்  ஸம்சுரி  வான் ஹசினான்  மன்னிப்பு  கேட்டார். தெம்பெலிங்  வட்டாரத்தில்  விசயம்  தெரியாதவர்களை  அல்லது  ஆணவக்காரர்களை  சகாய்  என்று  குறிப்பிடுவதுண்டு  என்றும்  மற்றபடி   ஒராங்  அஸ்லிகளை …

உடல் பிடிப்பு நிலையங்களைத் தொடாதீர்: ஜயிஸுக்கு சுல்தான் உத்தரவு

சிலாங்கூர்  இஸ்லாமிய  விவகாரத்  துறை(ஜயிஸ்)க்கு  உடல்பிடிப்பு  நிலையங்களில்  அதிரடிச்  சோதனை  நடத்தும்  எண்ணம்  இருந்தால்  அதைக் கைவிட  வேண்டும்  என  சிலாங்கூர்  சுல்தான்  ஷராபுடின்  இட்ரிஸ்  ஷா  கூறினார். இன்று  ஜயிஸ் பணியாளர்களிடையே  உரையாற்றிய  சுல்தான், ஜயிஸ்  அதன்  வேலை  என்னவோ  அதைத்தான்  செய்ய  வேண்டுமே  தவிர  ஊராட்சி …

காரணம்கோரும் கடிதத்துக்குப் பதிலைத் தாக்கல் செய்தார் காலிட்

சிலாங்கூர்  மந்திரி  புசார்  அப்துல்  காலிட் இப்ராகிம்,  பிகேஆர்  ஒழுங்கு  வாரியத்தின் காரணம்கோரும்  கடிதத்துக்கு  எழுத்துப்பூர்வமான  பதிலை இன்று  சமர்பித்தார். அதை  காலிட்டின்  அரசியல்  செயலாளர்  முஸ்தபா  முகமட்  தாலிப்  நேரில் வந்து  ஓப்படைத்ததாக  ஒழுங்கு வாரியத்  தலைவர்  டான்  கீ  குவோங்  கூறினார். டான்  இன்னொன்றையும்   தெரிவித்தார்.  இன்று …

நீதிமன்றம்: போலீஸ் காவலில் நிகழும் மரணங்களைப் பொறுத்துக்கொள்வதற்கில்லை

போலீஸ்  காவலில்  நிகழும்  மரணங்கள்மீது  நடவடிக்கை  எடுக்காமல்  விட்டுவிடக்  கூடாது  என்று முறையீட்டு நீதிமன்றம் கூறியுள்ளது. அந்த  மரணங்கள்மீது  சுயேச்சையான  பொது  விசாரணை  நடத்தப்பட வேண்டும்  என்றும்  அது  பரிந்துரைத்தது. ஐந்தாண்டுகளுக்குமுன் நிகழ்ந்த  குகனின்  இறப்புக்கு இழப்பீடு  வழங்க  வேண்டும்  என்ற  உயர்  நீதிமன்றத்  தீர்ப்பை  முறையீட்டு  நீதிமன்றம் …

விசாரணைக்கு அழைக்கப்பட்டார் காலிட்

பல்வேறு  விவகாரங்களுக்கு  நேரில்  வந்து  பதிலளிக்க  பிகேஆர் ஒழுங்கு  வாரியம்  சிலாங்கூர்  மந்திரி  புசார்  அப்துல்  காலிட்  இப்ராகிமைக்  கூப்பிட்டுள்ளது. காலிட்  நாளை  பிற்பகல்  3 மணிக்கு  பிகேஆர்  தலைமையகத்துக்கு  வர  வேண்டும்  என  வாரியத்  தலைவர்  டான்  கீ  குவோங்  கூறினார். வாரியத்தின்  காரணம்-கோரும்  கடிதத்துக்கு  காலிட் …