சபா இழுபறி தொடர்பில் நாடாளுமன்றம் கூட வேண்டும் என பக்காத்தான்…

அண்மையில் கிழக்கு சபாவில் நிகழ்ந்துள்ள பாதுகாப்பு சம்பந்தப்பட்ட சம்பவங்கள் பற்றி விவாதிப்பதற்காக சிறப்பு நாடாளுமன்றக் கூட்டம் நடத்தப்பட வேண்டும் என பக்காத்தான் ராக்யாட் தலைவர்கள் அறைகூவல் விடுப்பதாக எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார். அத்துடன் பக்காத்தான் ராக்யாட்டுக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் "அந்த விவகாரம் மீது புரிந்துணர்வு ஏற்படுவதற்கு"…

அரை மில்லியன் புதிய வாக்காளர்களில் 28விழுக்காட்டினரின் அடையாளம் தெரியவில்லை

2008-க்குப் பிறகு சிலாங்கூரில் பதிவுசெய்து கொண்டிருக்கும் 500,000 புதிய வாக்காளர்களில் 28 விழுக்காட்டினரை அடையாளம் காண இயலவில்லை என சிலாங்கூர் மந்திரி புசார் அப்துல் காலிட் இப்ராகிம் கூறுகிறார். “வாக்காளர் பட்டியலைச் சுத்தப்படுத்த ஒத்துழைக்கத் தயார் எனத் தேர்தல் ஆணையத்துக்குக் கடிதம் எழுதினோம், ஆனால் அவர்கள் அது சிலாங்கூர்…

இயல்புநிலைக்குத் திரும்பத் தடுமாறுகிறது லாஹாட் டத்து

அதன் கடற்கரைப் பகுதிகளில் சூலு அரச இராணுவம் ஊடுருவல் செய்ததால் நிலைகுலைந்துபோன லாஹாட் டத்து வழக்கநிலைக்குத் திரும்பத் தடுமாறிக்கொண்டிருக்கிறது. 130கிலோ மீட்டர் தொலைவில் கம்போங் தண்டுவோவில் 17-நாள்களுக்குமுன் வந்திறங்கிய ஊடுருவல்காரர்களுக்கும் மலேசியப் பாதுகாப்புப் படைகளுக்குமிடையில் துப்பாக்கிச் சண்டை நிகழ்ந்ததை அடுத்து சாரிசாரியாக இராணுவ ஊர்திகள் வரத் தொடங்கியதைக் கண்டு…

‘ரத்தம் சிந்தப்படுவதை நிறுத்துவதற்கு முதலில் வழியைப் பாருங்கள்’

"பாதுகாப்பு கடுமையாக மீறப்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதை அரசாங்கம் அரசியலாக்க வேண்டுமா ?" அன்வார்: லஹாட் டத்துவுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை சின்ன அரக்கன்: சபாவில் ஆயுதமேந்திய ஊடுருவல்காரர்கள் நமது இராணுவ, போலீஸ் வீரர்களை கொன்றுள்ள வேளையில் அந்த ஊடுருவலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிம் ஆதரவு அளிப்பதாகக் கூறி பிரச்னைக்கு…

மனோகரன்: தெய்வம், கோயில் உண்டு; நீதி கேட்க இடம் இல்லை

"இன்பமே சூழ்க, எல்லோரும் வாழ்க" என்று  நாம் வாழ்த்துகிறோம். ஆனால் நாம் நடுத்தெருவில் தள்ளப்படுகிறோம் என்று இன்று நண்பகல் ஸ்கோட் தெரு கந்தசாமி கோயிலின் முன் நடுச்சந்தியில் நடந்த சிறீலங்காவுக்கு எதிரான கண்டனப் பேரணியின் இறுதி நிகழ்ச்சியில் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் எம். மனோகரன் மிகுந்த வருத்தத்துடன் கூறினார். "எனக்குப்…

சிறீலங்காவுக்கு எதிராக மலேசியா உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்

இன்றைய உலகில் மிகக் கொடூரமான இன ஒழிப்பு, தமிழ் இன ஒழிப்பு, அரசாங்கமான சிறீலங்கா அரசாங்கத்திற்கு கண்டனம் தெரிவிக்கவும், அக்கொடிய சிறீலங்கா அரசாங்கத்திற்கு எதிராக ஐநா மனித உரிமை மன்றத்தில் மலேசிய அரசாங்கம் ஒரு தீர்மானத்தை முன்வைக்க வேண்டும் என்று மலேசிய அரசாங்கத்தை கேட்டுக்கொள்ளவும் கோலாலம்பூர், பிரிக்பீல்ட்ஸ் லிட்டல்…

ராஜபக்சே தூக்கிலிடப்பட்டார்!

இன்று நண்பகல் மணி 12.35 க்கு சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சே  கோலாலம்பூர், ஸ்கோட் தெருவில், கந்தசாமி கோயிலின் முன் நடுச்சந்தியில் தூக்கிலிடப்பட்டார்! ( Video | 4:59min ) சிறீலங்கா அரசாங்கத்தையும், அதன் அதிபர் மகிந்த ராஜபக்சேயையும் கண்டித்து, சிறீலங்காவுக்கு எதிரான தீர்மானத்தை தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஜெனிவா மனித…

இலங்கை தமிழின அழிப்புக்கு நீதி வேண்டும்; மலேசியா அதை முன்னெடுக்க…

இன்று காலை 11.00 மணியளவில் கோலாலம்பூரின் பிரிக்பீல்ட்ஸ் வளாகத்தில் கருப்பு உடை கண்டன ஊர்வலம் ஒன்று நடைபெற்றது. செம்பருத்தி இணையத்தளம் எற்பாடு செய்திருந்த இந்த கண்டன ஊர்வலத்தில் சுமார் 800-க்கும் அதிகமானவர்கள் கலந்துகொண்டனர். இதில் ஜொகூர், பேராக், நெகிரி செம்பிலான், மலாக்கா, பகாங், கேமரன் மலை, சிலாங்கூர் மற்றும்…

ஐஜிபி: அதிகமான ஆயுதமேந்திய ஊடுருவல்காரர்கள் தரையிறங்கியுள்ளனர்

மலேசியப் பாதுகாப்புப் படைகளுக்கு சுலு சுல்தான் ஆதரவாளர்களுக்கும் இடையில் நிகழ்ந்த மோதல்களைத் தொடர்ந்து மேலும் அதிகமான அதிகமான ஆயுதமேந்திய ஊடுருவல்காரர்கள் தரையிறங்கியுள்ளனர். செம்பொர்ணாவுக்கும் லஹாட் டத்து-வுக்கும் இடையில் உள்ள குனாக் நகரத்தில் இரண்டு கிராமங்களில் ஊடுருவல்காரர்கள் ஊடுருவியுள்ளதை தேசிய போலீஸ் படைத் தலைவர் இஸ்மாயில் ஒமார் இன்று உறுதிப்படுத்தினார்.…

ஜெனரல்: ஊடுருவல்காரர்கள் நன்கு ‘பயிற்சி-பெற்றவர்கள்’

சாபாவில் ஊடுருவல் செய்துள்ள ஆயுதங்தாங்கிய கும்பல் போரிடும் அனுபவம் உள்ளது என்றும் ஊடுருவல் தந்திரங்கள் அறிந்தது என்றும் கூறுகிறார் இராணுவ ஜெனரல் சுல்கிப்ளி சைனல் அபிடின். “அவர்களின்  செயல்பாட்டைக் கண்காணித்ததிலும் எங்களுக்குக் கிடைத்த உளவுத் தகவல்களிலிருந்தும் போரிடும் அனுபவம் அவர்களுண்டு  என்பது புலனாகிறது.  தலைமறைவுப் படையினரின் போர்முறைகளில் தேர்ச்சி…

ஐஜிபி: செம்பூர்னாவில் திடீர்தாக்குதலில் போலீசார் ஐவர் கொல்லப்பட்டனர்

சாபா, செம்பூர்னாவில் ஆயுதக்கும்பல் ஒன்று பதுங்கியிருந்து தாக்கியதில் ஐந்து போலீஸ் அதிகாரிகள் கொல்லப்பட்டதை தேசிய போலீஸ் படைத் தலைவர் இஸ்மாயில் ஒமார் இன்று உறுதிப்படுத்தினார். “நேற்று மாலை செம்பூர்னாவின் கம்போங் ஸ்ரீஜெயா சிமுனுலில் ஆயுதக்கும்பல் ஒன்று நடமாடுவதாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது. “அத்தகவலைக் கேட்டு செம்பூர்னா போலீஸ் தலைமையகத்திலிருந்து…

நாம் விதைத்ததை அறுவடை செய்கிறோம்

"மலேசியா பல ஆண்டுகளாக முஸ்லிம் சகோதரத்துவத்தை வலுப்படுதுவது என்ற பெயரில் மொரோ தேசிய விடுதலை முன்னணிக்கு ஆயுதங்களையும் பயிற்சிகளையும்  கொடுத்து வருகின்றது." லஹாட் டத்து தாக்குதல் 'உள்நாட்டுப் போராக' விரிவடையலாம் பெர்ட் தான்: லஹாட் டத்து சம்பவம் 'உள்நாட்டு' போராக மாறலாம் என மொரோ தேசிய விடுதலை முன்னணி…

அன்வார்: லஹாட் டத்து-வுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை

சுலு துப்பக்கிக்காரர்களுடைய ஊடுருவலுக்கும் தமக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுவதை எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் வன்மையாக மறுத்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை அந்த ஊடுருவல்காரர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் நிகழ்ந்த துப்பாக்கிச் சண்டையில் 14 பேர் கொல்லப்பட்டனர். அவர்களில் இருவர் போலீஸ் அதிகாரிகள். அந்தக் குற்றச்சாட்டுக்களினால் அவர் பெரிதும் வருத்தமடைந்துள்ளது தெளிவாகத்…

‘லாஹாட் டத்து ஊடுருவலுக்கும் அன்வாருக்கும் தொடர்புண்டாம்’

மையநீரோட்ட ஊடகங்களின் செய்தியறிக்கைகள், மாற்றரசுக் கட்சியை அதுவும் குறிப்பாக அன்வார் இப்ராகிமை பிலிப்பினோ கும்பலின் ஊடுருவலுடன் தொடர்புப்படுத்துகின்றன. அம்னோவுக்குச் சொந்தமான உத்துசான் மலேசியா நாளேடு, பிலிப்பினோ ஊடகமான   Inquirer News-சை மேற்கோள்காட்டி எம்பிபி வலைத்தளத்தில் இடம்பெற்ற ஒரு செய்தியை வெளியிட்டிருந்தது. “பிலிப்பின்ஸ் செய்தித்தளமான  Inquirer News அன்வாருடன் நெருங்கிய…

‘அமெரிக்காவில் அன்வார் எதிர்ப்புப் பிரச்சாரத்துக்கு பிஎன் நிதி அளித்தது

முக்கிய அமெரிக்க வெளியீடுகளில் பிரச்சார கட்டுரைகளை எழுதுவதற்காக பல எழுத்தாளர்களுக்கு பிஎன் பணம் கொடுத்ததாக கூறப்பட்டுள்ளது. அந்தக் கட்டுரைகளில் பெரும்பாலானவை பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் மீது கவனம் செலுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்நிய ஏஜண்டுகள் தங்களைக் கட்டாயம் பதிந்து கொள்ள வேண்டும் என்ற அமெரிக்கச் சட்டத்தின் கீழ்…

பக்காத்தான் கொள்கை அறிக்கையில் இந்தியர் விவகாரத்தையும் சேர்த்துக்கொள்ள வலியுறுத்து

அரசுசார்பற்ற அமைப்புகள் பல, பக்காத்தான் அதன் தேர்தல் கொள்கைவிளக்க அறிக்கையை மறுஆய்வு செய்து மலேசிய இந்திய சமூகத்தின் தேவைகளையும் அதில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளன. அது கவனக்குறைவாக விடுபட்டிருக்கலாம் என்று கூறிய மக்கள் நலன் மற்றும் உரிமை அமைப்பின் (பவர்) தலைவர் எஸ்.கோபிகிருஷ்ணா கூறினார். பொதுத் தேர்தலுக்குமுன்…

தைவானிய சுற்றுச்சூழல் போராளி மலேசியாவுக்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை

தைவானிய சுற்றுச்சூழல் போராளி மலேசியாவுக்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை. அவர் இன்று பின்னேரத்தில் திருப்பி அனுப்பப்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. கடந்த ஜுலை மாதம் ரபிட் எதிர்ப்பு இயக்கத்துக்காக ஜோகூர் பெங்கெராங் சென்றிருந்த கிரேஸ் கான் என்ற அந்தப் போராளியை தற்போது கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் குடிநுழைவுத் துறை அதிகாரிகள்…

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை மலேசியா முன்மொழிய கோரிக்கை

தற்போது ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை மன்றப்பேரவை கூட்டப்பட்டுள்ளது. அதில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை மலேசியா முன்மொழிய வேண்டும் என்ற கோரிக்கை (இங்கே சொடுக்கவும்) நேற்று மலேசிய வெளியுறவு அமைச்சிடம் வழங்கப்பட்டது. இந்த சந்திப்பில் மலேசிய வெளியுறவு அமைச்சரை பிரதிநிதித்து இலங்கை தொடர்புடைய மனித உரிமை…

மின்னல் படை வீரர்கள் மரணமடைந்ததற்கு யார் காரணம் ?

"ஊடுருவல்காரர்களுடன் நடத்தப்பட்ட குளறுபடியான பேச்சுக்கள் மீது பொது விசாரணை நிகழ வேண்டும். அப்போது தான் பாடம் கற்க முடியும்" லாஹாட் டத்து துப்பாக்கிச் சண்டையில் இரு மலேசியர்கள் உட்பட 14 பேர் கொல்லப்பட்டனர் மலேசிய இனம்: இராணுவ வியூக அடிப்படையில் பார்த்தால் தொடக்கத்திலிருந்தே அது பெரும் பேரிடராகும்.  ஆயுதங்களை…

லஹாட் டத்து தாக்குதல் ‘உள்நாட்டுப் போராக’ விரிவடையலாம்

லஹாட் டத்துவில் நேற்று மலேசியா படைபலத்தைப் பயன்படுத்தியுள்ளது சபாவில் பகைமை நடவடிக்கைகளாக விரிவடைந்து உள்நாட்டுப் போராக மாறக் கூடும் என மோரோ தேசிய விடுதலை முன்னணி (MNLF) எச்சரித்துள்ளது. "சபாவில் உள்நாட்டுப் போர் மூளக் கூடும் என நான் அஞ்சுகிறேன். ஏனெனில் சபாவில் ஆயிரக்கணக்கான பாங்சாமொரோ இன மக்கள்…

ஹிண்ட்ராப் கேட்பது விளக்கங்கள் அல்ல, உரிமைக்கான உறுதிமொழி

-என். கணேசன், தேசிய ஆலோசகர், ஹிண்ட்ராப், மார்ச் 1, 2013. இந்தியர்களின் சமூக பொருளாதார பின்னடைவுகளுக்கு நிரந்தர தீர்வுகளை முன்வைத்து உருவாக்கப்பட்ட ஹிண்ட்ராப் அமைப்பின் ஐந்தாண்டு செயல் திட்டத்தை எழுத்து பூர்வமாக ஆதரித்தால் பக்கதானுடன் இணைந்து ஆட்சி  மாற்றத்திற்கான வேலைகளை முடுக்கி விடலாம் என்று ஹிண்ட்ராப் அமைப்பு தொடர்ந்து…