ஏழைகள் மற்றும் சிறுபான்மையினருக்கான நீதியை அரசாங்கம் ஒருபோதும் விட்டுக்கொடுக்காது, எந்தவொரு இனக்குழு மக்களையும் ஒடுக்குவதை பொறுத்துக்கொள்ளாது என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் கூறினார். "சமீபத்தில் மூன்று இந்திய ஆண்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை, ஒரு விசுவாசியாக, நான் ஏற்றுக்கொள்வது அல்லது மன்னிப்பது கடினம்" என்று அவர் இன்று மலேசிய…
ஹுடுட் : முடிவெடுக்க பக்காத்தானுக்குக் கூடுதல் அவகாசம் தேவை
கிளந்தானில் ஹுடுட்டை அமல்படுத்த நாடாளுமன்றத்தில் தனி சட்ட முன்வரைவைத் தாக்கல் செய்யும் பாஸின் முயற்சி குறித்து பக்காத்தான் ரக்யாட் ஒன்றுபட்ட நிலைப்பாட்டை எடுப்பதற்குமுன் கலந்து பேச வேண்டும் என்றும் அதற்குக் “கூடுதல் அவகாசம் தேவை” என்றும் எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார். அவ்விவகாரம் குறித்து முன்னெச்சரிக்கையுடன் பேசிய …
ஜாஹிட்டுக்குப் பாராட்டு, நஜிப்புக்குக் குட்டு
முஸ்லிம்- அல்லாதாருக்குச் சமவாய்ப்புகள் வழங்காவிட்டால் மலேசியாவால் வெற்றிபெற இயலாது என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா குறிப்பிட்டதற்கு மறுப்புத் தெரிவித்து அறிக்கை விடுத்த உள்துறை அமைச்சர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடியை நியு ஸ்ரேய்ட்ஸ் டைம்ஸ் முன்னாள் தலைமை செய்திஆசிரியர் ஏ.காடிர் ஜாசின் பாராட்டியுள்ளார். அமெரிக்க அதிபரின் கூற்று மலேசிய …
மகாதிர்: தெரு ஆர்ப்பாட்டங்களால் தீமையே
தெரு ஆர்ப்பாட்டங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களைக் கவிழ்க்கும் நோக்கம் கொண்டவை என்கிறார் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட். “இதுவரை மலேசியாவை நிலைகுலைய வைக்கும் அளவுக்குப் பெரிய ஆர்ப்பாட்டங்கள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டதில்லை. ஆனால், நடக்கும் என்பதற்கான அறிகுறிகள் தெரிகின்றன. “தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை ஆர்ப்பாட்டங்கள்வழி கவிழ்க்க விரும்பும் மலேசியர்களும் இருக்கிறார்கள் என்பது …
பொருளாதாரம் முஸ்லிம்-அல்லாதாரின் கட்டுப்பாட்டில் இருப்பது எப்படி?
நாட்டில் முஸ்லிம்-அல்லாதாருக்குச் சமவாய்ப்பு வழங்கபப்டுவதில்லை என்று கூறப்படுவதை மறுத்த பெர்காசா அமைப்பின் தலைவர் இப்ராகிம் அலி, மலேசியப் பொருளாதாரத்தில் பெரும்பகுதி முஸ்லிம்-அல்லாதாரின் கட்டுப்பாட்டில் இருப்பதாகக் கூறினார். நாடு முன்னேற மலேசியாவில் உள்ள முஸ்லிம்-அல்லாதாருக்கு சமவாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும் என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா குறிப்பிட்டிருப்பதற்கு மறுப்புத் தெரிவித்து …
முஸ்லிம் மருத்துவர்கள் ஹுடுட் சட்டப்படி உறுப்புகளை வெட்டி எடுக்க முடியாது
ஹுடுட் சட்டப்படி உறுப்புகளை வெட்டி எடுக்கும் தண்டனையை அறுவை சிகிச்சை நிபுணர்களால் நிறைவேற்ற இயலாது என மலேசிய இஸ்லாமிய மருத்துவச் சங்கம் தெரிவித்துள்ளது. மயக்க மருந்து கொடுக்காமல் உறுப்புகளை வெட்டி எடுத்தல் முஸ்லிம் மருத்துவர்கள் எடுத்துக்கொண்டுள்ள தொழில்உறுதிமொழிக்கு விரோதமானது என அச்சங்கத்தின் இமாம் தலைவர் டாக்டர் அப்துல் ரகிம் …
அம்பிகா: ஒபாமாவிடம் நஜிப் சொல்லாததை நாங்கள் சொன்னோம்!
நேற்று அமெரிக்க அதிபர் ஒபாமாவுடன் நடைபெற்ற ஒரு மணி நேர சந்திப்பில் மலேசிய சிவில் சமூக உறுப்பினர்கள் நாட்டின் உண்மையான நிலவரத்தை அவரிடம் கூறினர். அச்சந்திப்பில் கலந்து கொண்ட மனித உரிமை குழுவான ஹகாம் தலைவர் எஸ். அம்பிகா அந்த வரலாற்றுப்பூர்வமான சந்திப்பில் என்ன விவாதிக்கப்பட்டது என்பதை…
ஹுடுட்டுக்கு வாக்களிக்காதீர்: முஸ்லிம் எம்பி-களுக்கு மசீச வேண்டுகோள்
மசீச சமய விவகாரப் பிரிவுத் தலைவரும் கட்சியின் மத்திய செயல்குழுத் தலைவருமான டி லியான் கெர், பாஸ் கொண்டுவரத் திட்டமிட்டுள்ள ஹுடுட், உண்மையான இஸ்லாத்துக்கு ஏற்புடையதல்ல என்றும் பாஸ் அவ்விவகாரத்தைக் “குழப்புகிறது” என்றும் கூறியுள்ளார். “பாஸின் ஹூடுட் சட்டம் பற்றி தொடர்ந்து குழப்பம்தான் நிலவுகிறது. பாஸ் கொண்டுவர நினைக்கும் …
எம்எச்370: தேடும்பணி அடுத்த கட்டத்துக்குச் செல்வதாக ஆசி பிரதமர் அறிவிப்பு
காணாமல் போன மலேசிய விமானத்தின் உடைந்த பகுதிகள் மிதப்பதைக் கண்டுபிடிக்கும் வாய்ப்பு குறைந்துகொண்டே வருகின்ற நிலையில் அடுத்த கட்டமாக இந்தியப் பெருங்கடலின் அடியில் முன்னிலும் பரந்த பகுதியில் தேடிப்பார்ப்பதற்கு கவனம் செலுத்தப்படும். ஆஸ்திரேலியப் பிரதமர் டோனி அப்பட் இன்று இதனைத் தெரிவித்தார். அதிநவீன கருவிகளைக் கொண்ட கடலடிச் சாதனங்களின் …
‘நாங்கள்தான் ஆள வேண்டும்’: அமெரிக்காவிடம் கூறினர் பக்காத்தான் தலைவர்கள்
கடந்த மே மாதப் பொதுத் தேர்தலில் கூடுதல் வாக்குகள் பெற்றபோதிலும் எதிரணியினரால் ஆட்சிக்கு வரமுடியாமல் போயிற்று என்று பக்காத்தான் தலைவர்கள் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சூசன் ரைஸிடம் தெரிவித்துள்ளனர். அமெரிக்க- பக்காத்தான் தலைவர்களுக்கிடையில் இன்று கோலாலும்பூரில் 45-நிமிட சந்திப்பு ஒன்று நடந்தது. அது பற்றி செய்தியாளர்களிடம் விவரித்த…
அரசாங்கம் எல்லாரிடமும் நியாயமாகவே நடக்கிறது: ஒபாமாவின் கூற்றுக்கு ஜாஹிட் எதிர்வினை
மலேசியாவில் முஸ்லிம்களைப்போலவே முஸ்லிம்-அல்லாதாருக்கும் சமவாய்ப்பு வழங்கப்படுவதாக உள்துறை அமைச்சர் ஜாஹிட் ஹமிடி கூறினார். முஸ்லில்-அல்லாதாருக்கும் சமவாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்று மலேசியாவுக்கு வருகை தந்த அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தம் அறிக்கையில் குறிப்பிட்டிருந்ததற்கு எதிர்வினையாற்றிய அஹமட் ஜஹிட், அரசாங்கம் “எல்லாச் சமயங்களிடமும் நியாயமாக நடந்துகொள்கிறது” என்றார். “யாரும் …
ராம் கர்பாலுக்கு இடம் கேட்டு விண்ணப்பிக்கவில்லை எனக் குடும்பத்தார் மறுப்பு
புக்கிட் குளுகோர் இடைத் தேர்தலில் கர்பால் சிங்கின் புதல்வரும் வழக்குரைஞருமான ராம் கர்பாலைக் களமிறக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளும் விண்ணப்பத்துக்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என்று அவரின் குடும்பத்தினர் கூறுகின்றனர். ராம் கர்பாலுக்கு ஆதரவாக நடைபெறும் கையெழுத்து திரட்டும் இயக்கத்தில் தங்களுக்கு சம்பந்தமில்லை என டத்தோ கிராமாட் சட்டமன்ற உறுப்பினர் …
ஜிஎஸ்டி எதிர்ப்பில் ஈடுபட்ட மூன்று மாணவர்கள் கைது
சாபாவில், ஜிஎஸ்டி-எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதற்காக மூன்று சமூக ஆர்வலர்கள் அரசமைப்புக்குவிரோதமான ஒரு சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. போலீசார் அமைதிப்பேரணிச் சட்டம் 2012, பகுதி 9(5)இன் கீழ் அவர்களைக் கைது செய்திருக்கிறார்கள் என்றும் அச்சட்டம் அரசமைப்புக்கு விரோதமானது என முறையீட்டு நீதிமன்றத்தால் கடந்த வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டது என்றும் மலேசிய …
‘அமெரிக்காவில் அன்வாரின் செல்வாக்கை செல்லாக் காசாக்கி விட்டார் நஜிப்’
அமெரிக்காவிடமும் அதன் அதிபர் பராக் ஒபாமாவிடமும் எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிமுக்கு இருந்த செல்வாக்கை நீர்த்துப்போக வைத்துவிட்டாராம் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக். பெருமைப்பட்டுக் கொள்கிறது அம்னோவுக்குச் சொந்தமான உத்துசான் மலேசியா. “பலர் இதை உணராமல் இருக்கலாம், நஜிப் அமெரிக்காமீது அன்வாருக்கு இருந்த செல்வாக்கை நீர்த்துப்போக வைத்துவிட்டார். “பல …
எம்எச்370: வானிலை காரணமாக தேடும்பணி இரத்து
காணமல்போன மலேசிய விமான நிறுவனத்தின் எம்எச்370 விமானத்தைத் தேடும்பணி மோசமான வானிலை காரணமாக இரத்துச் செய்யப்பட்டிருப்பதாகக் கூட்டு ஒருங்கிணைப்பு மையம் (ஜேஏசிசி) அறிவித்துள்ளது. கடலின் மேற்பரப்புத் தேடல்தான் இரத்துச் செய்யப்பட்டது. சிறுரக நீர்மூழ்கிச் சாதனமான புளுபின் -21 வழக்கம்போல கடலடித் தேடலைத் தொடர்கிறது.. ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட பகுதியில் தேடும்பணியை …
தமிழ்ப் பாலர் பள்ளி: நிதி உண்டு! ஆனால், செய்வார் இல்லை!
-மு. குலசேகரன், ஏப்ரல் 27, 2014. கடந்த அக்டோபர் 2013 இல் தாக்கல் செய்யப்பட்ட 2014 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் பிரதமர் நஜிப் பாலர் பள்ளிகள் அமைப்பது பற்றி குறிப்பிட்டிருந்தார். அதில் தேசியமாதிரி சீன மற்றும் தமிழ் தொடக்கப்பள்ளிகளில் 93 பாலர் பள்ளிகள் அமைப்பதற்கு கணிசமான தொகையையும், மலேசிய இந்தியர்களை தேசிய நீரோட்ட வளர்ச்சியில் இணைப்பதற்காக ரிம100 மில்லியனும், 176…
சிறைச்சாலை அதிகாரத்தினருக்கு எதிராக உதயா சட்ட நடவடிக்கை எடுக்கிறாரர்
மனித உரிமை கட்சியின் தலைவர் பி. உதயகுமார் காஜாங் சிறைச்சாலையின் இயக்குனர் மற்றும் இதர இரு அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்துள்ளார். அவர் இதற்கான மனுவை நேற்று கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அம்மனுவில் கோலாலம்பூர் உயர்நீதிமன்ற நீதிபதி அஸ்மான் ஹுசின் சிறையிலடைக்கப்பட்டிருக்கும் அவரை அவரது…
குலா: மலேசிய தேர்தல் ஆணையம் நாடாளுமன்றத்தின் அதிகாரத்திற்கு உட்படுத்தப்பட வேண்டும்
இந்திய நாடாளுமன்றத்திற்கான பொதுத் தேர்தல் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. கட்டங்கட்டமாக நடத்தப்படும் அப்பொதுத் தேர்தல் ஏப்ரல் 12 தொடங்கியது. 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான அத்தேர்தல் மே 12 இல் முடிவுக்கு வரும். 500 மில்லியன் தகுதி வாய்ந்த வாக்காளர்கள் சம்பந்தப்பட்ட அத்தேர்தல் உலகில் மிக அதிகாமான வாக்காளர்…
மருந்துகள் கட்டுப்படியாகும் விலையில் கிடைக்க வேண்டும்: ஒபாமாவுக்கு என்ஜிஓ-கள் கோரிக்கை
வணிக ஒப்பந்தங்களில் மருந்துகளின் விலைகள் நோயாளிகளும் எழைகளும் வாங்க முடியாத அளவுக்கு உயர இடமளிக்கக் கூடாது என மலேசிய மருத்துவ அமைப்புகளும் என்ஜிஓ-களும் சேர்ந்து அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்குக் கோரிக்கை விடுத்துள்ளன. அமெரிக்க முயற்சியில் உருவாகியுள்ள பசிபிக் வட்டார பங்காளித்துவ ஒப்பந்தம் (டிபிபிஏ), மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் …
மே 1 பேரணி இடத்தில் பிடிவாதமாக இருக்கிறார்கள் ஏற்பாட்டாளர்கள்
மே 1 பொருள், சேவை வரி(ஜிஎஸ்டி)- எதிர்ப்புப் பேரணியை டாட்டாரான் மெர்டேகாவில் நடத்த அனுமதிப்பதில்லை என்ற முடிவுடன் இருக்கிறார்கள் போலீசார். ஆனால், பேரணி ஏற்பாட்டாளர்களோ அங்குதான் அதை நடத்துவது என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். கூட்டரசு அரசமைப்பின் பகுதி 10, அமைதியாக பேரணி நடத்த அனுமதிப்பதாக பேரணி பேச்சாளரும் பிஎஸ்எம் தலைமைச் …
காலிட்: நீர்ப் பங்கீடு அடுத்த வாரம் முடிவுறலாம்
ஈயக்குட்டைகளில் நிரம்பியுள்ள நீரை, அணைக்கட்டுகளுக்குக் கொண்டுவரும் முயற்சி வெற்றிகரமாக நடந்தால் சிலாங்கூரிலும் கோலாலும்பூரிலும் அமலில் உள்ள நீர்ப் பங்கீடு அடுத்த வாரம் முடிவுக்கு வரலாம். “அது நடந்தால் நீர்ப் பங்கீடு நிறுத்தப்படுவதாக அடுத்த வாரம் அறிவிக்க முடியும்”, என சிலாங்கூர் மந்திரி புசார் அப்துல் காலிட் இப்ராகிம் இன்று …
சுஹாகாம்: மே தினப் பேரணியை அனுமதிப்பீர்
தேசிய மனித உரிமை ஆணையம் (சுஹாகாம்), மே 1 பேரணி நடப்பதை போலீஸ் அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. “மே 1 நிகழ்வுக்கு போலீசார் (பேச்சு நடத்த) ஏற்பாட்டாளர்களை அழைத்திருப்பது நம்பிக்கை அளிக்கிறது”, என சுஹாகாம் துணைத் தலைவர் காவ் லேக் டீ கூறினார். பிரச்னைகளுக்குத் தீர்வுகண்டு மே1 …
ஒபாமாவை பெர்சே, இஸ்லாமிய முன்னணி தலைவர்கள் சந்திப்பர்
மலேசிய வருகையின்போது அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, பெர்சே, இஸ்லாமிய மறுமலர்ச்சி முன்னணி முதலிய சமூக அமைப்புகளையும் மலேசிய வழக்குரைஞர் சங்கத்தையும் சந்திப்பார். ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் அச்சந்திப்புக்கு, அமெரிக்கத் தூதரகம் சுமார் 10 பேரை அழைத்திருப்பதாக ஒரு என்ஜிஓ பிரதிநிதி கூறினார். சந்திப்பு நடைபெறும் இடம், நேரம் ஆகியவற்றை …
ஹுடுட் பற்றி அன்வார் வாயைத் திறக்காதது ஏன்?
கிளந்தானில் ஹுடுட்டை அமல்படுத்துவதற்கு, பாஸ் நாடாளுமன்றத்தில் தனி உறுப்பினர் சட்டவரைவு ஒன்றைக் கொண்டுவரும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ள வேளையில் அதைக் கண்டுக்கொள்ளாமல் இருக்கும் பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம் கண்டனத்துக்கு ஆளானார். “பிகேஆர் அலோசகரும், நாடாளுமன்றத்தில் எதிரணித் தலைவருமான அன்வார், அவ்விவகாரம் பற்றிப் பேசாதிருப்பது ஏன்? “எதற்காக …


