தடுப்புக் காவல் மரணம்: சடலத்தை குடும்பத்தினர் சோதனை செய்வதற்கு அனுமதிக்கப்படவில்லை

கம்பார் மாவட்ட போலீஸ் நிலையத்தில் தடுப்புக் காவலில் இருந்த போது மரணமடைந்த எம் ரகு-வின் சடலத்தை தாங்கள் சோதனை செய்யவும்  தங்கள் கண்டுபிடிப்புக்களை கேமிராவில் பதிவு செய்யவும் அனுமதிக்கப்படாததால் ஏதோ தவறு நிகழ்வதாக அவரது குடும்பத்தினர் கருதுகின்றனர். சடலத்தை சோதனை செய்வதற்கு கம்பார் மருத்துவமனை சவக் கிடங்கிற்கு தாம்…

முன்னாள் MNLF தளபதி சுட்டுக் கொல்லப்பட்டதை போலீஸ் உறுதிப்படுத்துகிறது

கடந்த வாரம் பாதுகாப்புப் படைகள் கொன்ற சுலு 'ஜெனரல்' மோரோ தேசிய விடுதலை முன்னணியின் (MNLF) முன்னாள் தளபதி ஹாஜி மூசா என்பதை சபா போலீஸ் தலைவர் ஹம்சா தாயிப் இன்று உறுதிப்படுத்தியுள்ளார். "தஞ்சோங் பத்துவில் பாதுகாப்புப் படைகள் ஹாஜி மூசா எனப் பெயருடைய 'ஜெனரல்' ஒருவரை சுட்டுக்…

சபாவில் போலீஸ் நடவடிக்கையைத் தொடர்ந்து அங்கிருந்து பிலிப்பினோக்கள் வெளியேறுகின்றனர்

சபா செம்போர்ணாவிலிருந்து பிள்ளைகள் உட்பட 57 பிலிப்பினோக்கள்  சிறிய படகுகள் மூலம் நேற்று பிலிப்பின்ஸில் உள்ள தாவி தாவி தீவுகளைச் சென்றடைந்தனர். மலேசியப் பாதுகாப்புப் படைகள் தங்களை விரட்டியதாக அவர்கள் கூறிக் கொண்டனர். ஞாயிற்றுக் கிழமை இரவு எட்டு மணி வாக்கில் தாங்கள் செம்போர்ணாவிலிருந்து புறப்பட்டதாகவும் ஒர் இரவு…

உள்துறை அமைச்சர் அவர்களே, அவர்கள் இப்போது பயங்கரவாதிகளா ?

'உண்மையில் பெரிய நேர்மாற்றம்- முஸ்லிம் சகோதரர்கள் என்ற நிலையிலிருந்து பயங்கரவாதிகள் என்ற நிலைக்கு. இப்போது யாரை நம்புவது உள்துறை அமைச்சரையா அல்லது சபா முதலமைச்சரையா ? ஊடுருவல்காரர்கள் பயங்கரவாதிகள் என அழைக்கப்படுவதை புத்ராஜெயா ஏற்றுக் கொள்கிறது சின்ன அரக்கன்: லஹாட் டத்து 'ஊடுருவல்காரர்களை' 'பயங்கரவாதிகள்' என அதிகாரப்பூர்வமாக அழைப்பதற்கு…

ஒப்ஸ் டவுலாட்டின் ஏழாம் நாள்: இன்றுவரை 97பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்

சாபாவில் ஒப்ஸ் டவுலாட் தொடங்கி இன்று ஏழாவது நாள். இந்நடவடிக்கையின்கீழ் இதுவரை 97 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களுக்கு ‘அரச சூலு இராணுவம்’ என்று சுயமாக பிரகடனம் செய்து கொண்டிருப்போருடன் தொடர்பிருக்கலாம் என நம்பப்படுவதாக சாபா போலீஸ் கமிஷனர் ஹம்சா தாயிப் (இடம்) கூறினார். “தேசிய…

சுலு ஊடுருவல்காரர்கள் “விலகிக் கொள்வது” பற்றி சிந்திக்கின்றனர்

சபாவுக்குள் ஆயுதங்களுடன் ஊடுருவிய தமது ஆதரவாளர்கள் சண்டையிலிருந்து 'விலகிக் கொள்வது' மீது பிலிப்பின்ஸ் அரசாங்கத்துடன் பேச்சு நடத்த சுலு சுல்தான் எனத் தம்மைப் பிரகடனம் செய்து கொண்டுள்ள மூன்றாவது ஜமாலுல் கிராம் தமது பேராளர்களை அனுப்பியுள்ளார். ஜமாலுல் கிராமின் இளைய சகோதரர் இரண்டாவது சுல்தான் பாந்திலான் எஸ்மாயில் கிராமும்…

லிம் குவான் எங் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் சட்டவிரோதமானது

'அல்லாஹ்' விவகாரம் மீது பல அரசு சாரா அமைப்புக்கள் வெள்ளிக் கிழமை நடத்திய ஆர்ப்பாட்டம் சட்ட விரோதமானது எனப் போலீசார் அறிவித்துள்ளனர். அந்த ஆர்ப்பாட்டம் குறித்து மாநில அரசாங்கப் பேராளர்களும் பட்டாணி போலீஸ் நிலையத்தைச் சேர்ந்த ஒரு போலீஸ்காரரும் புகார் செய்துள்ளதை ஜார்ஜ் டவுன் ஒசொபிடி கான் கொங்…

வேதமூர்த்தி உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார்

ஒரங்கட்டப்பட்ட இந்திய சமூகத்தின் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு ஹிண்ட்ராப் வழங்கிய ஐந்தாண்டுப் பெருந்திட்டத்தை அங்கீகரிக்குமாறு பிஎன் -னுக்கும் பக்காத்தான் ராக்யாட்டுக்கும் அழுத்தம் கொடுக்கும் பொருட்டு தனி மனிதராக உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளார். "மலேசிய இந்தியர்களுடைய மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளன என்பதை அவை (பக்காத்தானும் பிஎன் -னும்) அங்கீகரிக்குமாறு செய்வதே உண்ணாவிரதப்…

‘ஊடகங்கள் ஊடுருவல்காரர்களைப் ‘பயங்கரவாதிகள்’ என்றுதான் குறிப்பிட வேண்டும்’

சாபா, லாஹாட் டத்துவில்  ஒப்ஸ் டவுலாட் குறித்து செய்தி சேகரிக்கும் செய்தியாளர்கள்  சூலு ஊடுருவல்காரர்களைப் ‘பயங்கரவாதிகள்’ என்றுதான் இனி  குறிப்பிட வேண்டும்.  அத்துடன் சூலு சுல்தான் என்றும் கூறக்கூடாது. சாபா முதலமைச்சர் மூசா அமான் (இடம்) தலைமையில் செயல்படும் சாபா பாதுகாப்புக் குழு, இன்று காலை  இந்த உத்தரவை…

சைபுலின் தந்தை பிகேஆரில் சேர்கிறார்

சைபுல் புகாரி அஸ்லானின் தந்தை மாற்றரசுக்கட்சியான பிகேஆரில் சேர முடிவுசெய்து பெட்டாலிங் ஜெயாவில் உள்ள கட்சி செயலகத்தில் அவரின் விண்ணப்பப் பாரத்தை இன்று சமர்பித்தார். அன்வார்  இப்ராகிம் தம்முடன் குதப்புணர்ச்சியில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டியவர் சைபுல்.   அக்குற்றச்சாட்டு மீது வழக்கு நடந்து இவ்வாண்டு  ஜனவரியில் அன்வார் குற்றச்சாட்டிலிருந்து  விடுவிக்கப்பட்டார். “நான்…

பயத்தின் காரணமாக மாணவர்களில் பாதிப்பேர்தான் பள்ளி செல்கிறார்கள்

சாபாவில் சூலு இராணுவம் என்று கூறிக்கொள்வோரின் ஊடுருவலை அடுத்து தேசா கெஞ்சானா பெல்டாவில் ஒரு வாரமாக மூடிக்கிடந்த பள்ளிக்கூடங்கள் இன்று மீண்டும் திறக்கப்பட்டபோது மாணவர்களில் பாதிப்பேர்தான் வகுப்புகளுக்கு வந்திருந்தனர். எஸ்எம்கே தேசா கெஞ்சானாவில், எல்லா வகுப்புகளும் பாதித்தான் நிரம்பி இருந்தன. ஊடுருவலை எண்ணிப் பெற்றோரும் மாணவரும் அச்சம் கொண்டிருப்பதுதான்…

எதிரிகளுடைய சுரங்கப் பாதைகள் ஏதும் கண்டு பிடிக்கப்படவில்லை

தெற்கு பிலிப்பின்ஸிலிருந்து ஊடுருவல்காரர்கள் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் நிர்மாணிக்கப்பட சுரங்கப் பாதை ஒன்றின் வழியாக கம்போங் தண்டுவோ-வுக்குள் நுழைந்ததாக அந்தக் கிராம மக்கள் சொல்வதை சபா போலீஸ் ஆணையாளர் ஹம்சா தாயிப் மறுத்துள்ளார். "அத்தகைய சுரங்கப் பாதை ஏதும் இருப்பதாக எங்களுக்கு இது வரை தகவல்…

மகாதீர்: பிஎன் சிலாங்கூரை மீண்டும்எடுத்துக் கொள்ளாவிட்டால் மலாய் உரிமைகள் பறிபோகும்

சிலாங்கூர் மாநிலத்தில் மலாய்க்காரர்கள், பூமிபுத்ராக்கள் ஆகியோருடைய  உரிமைகளும் நிலையும் நிலைத்திருப்பதற்கு அந்த மாநிலம் எதிர்க்கட்சிகளிடமிருந்து காப்பாற்றப்பட வேண்டும் என முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் கூறிக் கொண்டுள்ளார். சிலாங்கூரில் பொருளாதாரத்தை தங்கள் கட்டுக்குள் எடுத்துக் கொண்ட எதிர்த்தரப்புக் கூட்டணி அந்த மாநிலத்தில் அரசியலையும் தன் கட்டுக்குள் வைத்திருக்கும்…

பராமரிப்பு அரசாங்கப் பிரதமர் நஜிப் இப்போது காய நேரம் (injury…

"13வது பொதுத் தேர்தலுக்குக் காத்திருப்பது  காய நேரத்துக்குள் (injury time) சென்று விட்ட காற்பந்து போட்டியைப் போன்றதாகும். ஒவ்வொருவரும் நடுவர் விசிலை ஊதி ஆட்டத்தை நிறைவு செய்வதற்கு அவரை பார்த்துக் கொண்டிருக்கின்றனர்" லிம் கிட் சியாங்: இப்போது மார்ச் 9, நஜிப் தவணைக் காலம் முடிந்து விட்டது ஸ்டார்ர்:…

பிரதமர்: கிள்ளான் பள்ளத்தாக்கில் தாங்கக் கூடிய விலையில் 80,000 வீடுகள்…

கிள்ளான் பள்ளத்தாக்கிலும் கூட்டரசுப் பிரதேசத்திலும் நடுத்தர வருமானத்தை கொண்ட மக்களுக்கு தாங்கக் கூடிய விலையில் 80,000 வீடுகள் கட்டப்படும் என பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் இன்று அறிவித்தார். ஒரே மலேசியா மக்கள் வீடமைப்புத் திட்டத்தின் ( PR1MA )கீழ் கிள்ளான் பள்ளத்தாக்கில் 50,000 வீடுகள் கட்டப்படும் என்றும்…

தியான் சுவா கட்டுரை மீது போலீசார் பிகேஆர் ஏட்டிடம் விசாரித்தனர்

லஹாட் டத்து பூசல் மீது பிகேஆர் உதவித் தலைவர் தியான் சுவா தெரிவித்த கருத்துக்கள் சம்பந்தப்பட்ட கட்டுரை ஒன்றின் மீது போலீசார் இன்று பிகேஆர் ஏடான Keadilan Daily-யின் ஆசிரியரையும் நிருபரையும் விசாரித்தனர். பெட்டாலிங் ஜெயா போலீஸ் தலைமையகத்தில் அந்த ஏட்டின் ஆசிரியர் பாஸால்லா பிட்-டும் நிருபரான ஆயிஷா…

‘சிவப்பு பகுதியில்’ நிருபர்கள் துப்பாக்கிக்காரனைக் கண்டனர்

பாதுகாப்புப் படையினர் ஆயுதமேந்திய ஊடுருவல்காரர்களை வேட்டையாடி வரும் 'சிவப்பு பகுதியில்' உள்ள தஞ்சோங் லாபியான் கிராமத்துக்குள் இன்று காலை நுழைந்த நிருபர்கள் துப்பாக்கிக்காரன் ஒருவனைக் கண்டார்கள் அந்தக் கிராமத்திலிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் அமைக்கப்பட்டிருந்த போலீஸ் சாலைத் தடுப்பில் யாரும் இல்லாததால் அந்தப் பகுதி பாதுகாப்பாக உள்ளது என…

சதித் திட்டம் எனக் கூறப்படுவதை பிலிப்பின்ஸ் விசாரிக்கும்

சபாவில் சுலு சுல்தான் ஊடுருவலுக்குப் பின்னணியில் சதித் திட்டம் இருக்கலாம் எனக் கூறப்படுவதை விசாரிக்கப் போவதாக பிலிப்பின்ஸ் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். அந்த வன்முறைக்கான காரணத்தை ஆய்வு செய்ய சதித் திட்டம் பற்றி புலனாய்வு செய்யப்படும் என அந்த நாட்டின் துணை அதிபர் அலுவலகப் பேச்சாளர் சொன்னார். சபாவில் உருவாகியுள்ள…

லிம் கிட் சியாங்: இப்போது மார்ச் 9, நஜிப் தவணைக்…

கடந்த பொதுத் தேர்தல் நடந்து ஐந்து ஆண்டுகளுக்கு மேலாகி விட்ட நிலையில் நஜிப் அப்துல் ரசாக் இனிமேலும் சட்டப்பூர்வப் பிரதமர் எனக் கருதப்பட முடியாது என மூத்த நாடாளுமன்ற உறுப்பினரான லிம் கிட் சியாங் கூறுகிறார். "மார்ச் 9 முக்கியமான நாள் ஏனெனில் இன்றைய தினத்திலிருந்து நமக்கு உள்ள…

சபா குளறுபடிக்கு அம்னோவே காரணம்

"இதற்கு எல்லாம் அம்னோ/பிஎன் -னே காரணம். பல ஆண்டுகளாக அவர்கள் சட்ட விரோதக் குடியேற்றக்காரர்களை அவை அனுமதித்தன. அடையாளக் கார்டு திட்டத்தின் கீழ் அவர்களுக்குக் குடியுரிமையும் வழங்கின" சபா பூசல் நஜிப்புக்கு சிக்கலை அதிகரித்துள்ளது ஸ்டார்ர்: லஹாட் டத்து ஆயுதமேந்திய ஊடுருவலும் ஊடுருவல்காரர்களுக்கு எதிராக மலேசிய ஆயுதப் படைகள்…

கவலைப்படவே வேண்டாம், நஜிப் இந்த விஷயத்திலும் மௌனமாகத் தான் இருப்பார்

"அத்தகைய கடுமையான குற்றச்சாட்டு மீது மௌனமாக இருப்பது ஒரு தேர்வாக இருக்க முடியாது. அது அவருடைய தோற்றத்துக்கு மேலும் களங்கத்தை ஏற்படுத்தி அது தீர்க்க முடியாத அளவுக்குப் போய் விடக் கூடும்" இரண்டாவது குதப்புணர்ச்சி  வழக்கு தொடர்பான சதி எனக் கூறப்படுவதற்கு நஜிப் பதில் அளிக்க வேண்டும் கிம்…

12 ஆவது உலகத் தமிழ் இணைய மாநாடு – 2013

உலகத் தமிழ்த் தகவல் தொழில் நுட்ப மன்றம் (உத்தமம்)  அமைப்பு 12ஆவது உலகத் தமிழ் இணைய மாநாட்டை மலேசியாவின் முதன்மைப்  பல்கலைக்கழகமான மலாயாப் பல்கலைக் கழகத்துடன் இணைந்து நடத்துகிறது. மலாயாப்  பல்கலைக்கழகத்தின் மொழி மொழியியல் புலம், தகவல் தொழில்நுட்ப நடுவம்  ஆகியவற்றுடன் இணைந்து திதியான் டிஜிட்டல் திட்டத்தின் ஆதரவுடனும்…

அன்வார்: சைபுல் தந்தை கேட்டுக் கொண்ட மன்னிப்பால் எதுவும் மாறப்…

எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம், சைபுல் புஹாரியின் தந்தை அஸ்லான் முகமட் லாஸிம், தாம் குதப்புணர்ச்சிக் குற்றச்சாட்டுக்களில் நிரபராதி எனக் கூறி மன்னிப்புக் கேட்டுக் கொண்டதைத் தொடர்ந்து தாம் பழி வாங்கப்பட்டு விட்ட உணர்வைப் பெற்றுள்ளதாக கூறுகிறார். "தொடக்கத்திலிருந்தே நான் நிரபராதி என வலியுறுத்தி வருகிறேன். நீதி மன்றமும்…