பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
மயங்கி சுருண்டு விழுந்தும், தனி ஈழம் வேண்டும் என உச்சரித்த…
பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும், ராஜபக்சேவை போர் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும், தனி ஈழம் வேண்டும் போன்ற கோரிக்கைகளை உள்ளடக்கி சேலத்தில் மத்திய சட்ட கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். சட்ட கல்லூரி வளாகத்திலேயே நடந்த இந்த உண்ணாவிரதம் இன்று 7வது நாளை எட்டியது. இதில்…
இந்திய மத்திய அரசில் இருந்து திமுக விலகல்; கருணாநிதி அறிவிப்பு
சென்னை: இலங்கை விவகாரத்தில் இந்திய மத்திய அரசு கூடவே இருந்து குழி பறிக்கும் வேலையைப் பார்ப்பதால் மத்திய அமைச்சரவையில் இருந்தும், ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்தும் திமுக உடனடியாக விலகிக்கொள்வதாக திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி இன்று அறிவித்தார். மேலும் மத்திய அமைச்சரவையிலிருந்து திமுக அமைச்சர்கள் அனைவரும் ராஜினாமா…
சென்னை சென்ட்ரலில் சிக்கிய புத்த பிட்சு- ஓட ஓடத் தாக்குதல்!
சென்னை: தமிழகத்தில் இலங்கைக்கு எதிரான போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் ஒரு சில இடங்களில் சிங்களவர் மீதான தாக்குதல் சம்பவங்களும் நடைபெற்றுவருகின்றன. தஞ்சாவூர் பெரிய கோயிலை பார்வையிட வந்த இலங்கை குழுவில் இடம் பெற்றிருந்த புத்த பிட்சுவை விரட்டி விரட்டி உணர்வாளர்கள் நேற்று தாக்கினர். அவர்கள் அங்கிருந்து தப்பி…
ஒருங்கிணையும் மாணவர்கள் : ஈழத்திற்காக வலுப்பெறும் போராட்டம்
சென்னை: இலங்கை தமிழர் பிரச்னையில் அரசியலை துளியும் அண்டவிடாமல் தமிழகத்தில் அனைத்து கல்லூரி மாணவர்கள் ஒருங்கிணைப்பு போராட்டம் தீவிரமடைந்து வருகிறது.இலங்கையில் நடந்த இனப்படுகொலையை கண்டித்தும் இலங்கை அதிபர் ராஜபக்ஷேயை போர்க்குற்றவாளியாக அறிவிக்க கோரியும், ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக இந்தியா தீர்மானம் கொண்டுவர வழியுறுத்தியும், சென்னை…
‘சர்வதேச விசாரணை இல்லாவிட்டால் மத்திய அரசில் தொடரமாட்டோம்’ – கருணாநிதி
ஐநா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்காவினால் கொண்டுவரப்படும் தீர்மானத்தில் இலங்கை Read More
கலாட்டா கல்யாணம்! நடிகர் விஜய் சுவர் ஏறிகுதித்து தப்பி ஓட்டம்!
புதன்கிழமை காலை 9 மணிக்கே நடிகர் விஜய் வருவார் என்று விழுப்புரம் ஆனந்தா திருமண மண்டபத்தில் ரசிகர்கள் காத்திருந்தனர். விஜய் மக்கள் இயக்கம் சார்பில் 11 ஏழை ஜோடிகளுக்கு 51 சீர்வரிசை பொருட்களுடன் திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மண்டபத்திற்குள் பத்திரிகை மீடியாக்கள் தவிர 700 பேர்களுக்கு மட்டுமே பாஸ்…
நான் தமிழ் பையன், எனக்கும் தமிழுணர்வு உள்ளது: நடிகர் சிம்பு…
சென்னை: இலங்கை விவகாரம் தொடர்பாக உண்ணாவிரதம் இருந்து வரும் சென்னை அம்பேத்கர் சட்டக்கல்லூரி மாணவர்களை நடிகர் சிம்பு சந்தித்து ஆதரவு தெரிவித்தார். இலங்கையில் நடந்த போர்க்குற்றம் குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டும், இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம்…
புலிகள் என்று சொல்லி உள்ளே தள்ளிடுவோம் – மாணவர்களை மிரட்டிய…
'இலங்கையில் நடந்தது இன படுகொலையே... ஈழத்தில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் சுதந்திரமான சர்வதேச நீதி விசாரணை வேண்டும்' என்ற கோரிக்கையோடு சேலம் அரசு கலை கல்லூரி மாணவர்கள் காலையிலேயே வகுப்பு புறக்கணிப்பு செய்து உள்ளிரிப்பு போராட்டத்தை தொடங்கினர். ஆனால் கல்லூரி முதல்வர் ராஜாமணி 'எவனோ எங்கயோ செத்தான்னா…
மாலுமிகளை திருப்பி அனுப்பாத இத்தாலி; கோபத்தில் இந்தியா!
இந்தியாவில் ஒரு கொலை வழக்கு தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டுள்ள தனது கடற்படையினர் இருவரை இந்தியாவுக்குத் திரும்ப அனுப்ப முடியாது என்று இத்தாலி அறிவித்துள்ளது இந்தியாவில் கடுமையான எதிர்ப்புக்களை தோற்றுவித்துள்ளது. இத்தாலியின் இந்த நிலைப்பாட்டை ஏற்றுக் கொள்ள முடியாது என்று பிரதமர் மன்மோகன் சிங் தம்மிடம் தெரிவித்ததாக அவரை செவ்வாய்…
டில்லி மாணவி வழக்கு: முக்கிய குற்றவாளி சிறையில் தூக்கிட்டு தற்கொலை!
டில்லி மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்டபேருந்து சாரதி ராம் சிங், திகார் சிறையில் இன்று (11) அதிகாலை 5 மணிக்கு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். டிசம்பர் 16ம் திகதி ஓடும் பேருந்தில் தனது நண்பருடன் சென்ற போது 23 வயது…
ஈழத் தமிழருக்கு ஆதரவு- தமிழகத்தில் பற்றி எரியும் மாணவர்கள் போராட்டம்!
சென்னை: ஈழத் தமிழர் பிரச்சனையில் தமிழகத்தில் மாணவர்கள் போராட்டம் பற்றி எரிந்து வருகிறது. இலங்கை இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை, தமிழீழத்துக்கான பொதுவாக்கெடுப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் உண்ணாவிரதம் மற்றும் சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இலங்கை இனப்படுகொலைக்கு சர்வதேச…
உள்ளடக்கங்களைக் கொண்டே முடிவெடுக்க முடியும் – மன்மோகன் சிங்
மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் அமெரிக்காவினால் சமர்ப்பிக்கப்படவுள்ள தீர்மானத்தில் உள்ளடக்கப்படும் Read More
இந்தியாவை இலங்கை மறைமுகமாக மிரட்டுகிறது: பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்
இலங்கையில் அப்பாவி தமிழர்களுக்கு எதிராக இலங்கை அரசு செய்த அட்டூழியங்கள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள் குரல் கொடுத்து வரும் நிலையில், மீனவர்கள் மீது துப்பாக்கி சூட்டு சம்பவம் நடந்துள்ளது. இதன்மூலம் இந்தியாவை இலங்கை அரசு மறைமுகமாக மிரட்டுகிறது என்று தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். தமிழக முதலமைச்சர்…
திமுக-வை பாரட்டியதாக வெளிவந்த தகவலை மறுக்கிறார் ‘சனல் 4’ கெலம்…
இலங்கை தமிழர்களின் விடயத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் முன்னெடுக்கும் செயற்பாடுகளுக்காக, அதன் துணைத் தலைவர் மு.க.ஸ்டாலினை, சனல் 4 தொலைக்காட்சியின் பணிப்பாளர் கெல்லம் மெக்ரே பாராட்டியதாக, திமுக பிரசாரம் செய்து வந்தது. தி.மு.கவின் இந்த போலி பிரசாரத்தை சனல் 4 தொலைக்காட்சியின் பணிப்பாளரும், இலங்கையின் கொலைக்களம் காணொளியின் தயாரிப்பாளருமான…
மதுரையிலுள்ள இலங்கை பணிமனை மீது கடும் தாக்குதல்
மதுரையில் செயல்படும் ட்ரான்ஸ்லங்கா எனும் விமானப் பயணிகள் சேவை நிறுவன பணிமனை நேற்று பிற்பகலில் தமிழ் உணர்வாளர்களால் தாக்கப்பட்டு கடும் சேதத்திற்குள்ளானது. குண்டாந்தடிகளை ஏந்தி வந்த அவர்கள், பணிமனையில் இருந்தவர்களிடம், தமிழர்கள் தொடர்ந்து இலங்கையில் தாக்கப்பட்டுவரும் வேளையில் நீங்கள் பயணிகளை அங்கே அனுப்புவதா எனக்கேட்டு மிரட்டிவிட்டு கணினி, நாற்காலி,…
ராஜபக்ச மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஈழ ஆதரவாளர் தீக்குளித்து…
போர்க்குற்றவாளியான மகிந்த ராஜபக்சே மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு கோரி கடலூர் அருகே உள்ள நல்லவாடு கிராமத்தை சேர்ந்தவர் மணி (வயது 44 ) என்பவர் தீக்குளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தீக்குளித்த மணி, மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் இரவு…
கறையான் போல் நாட்டை அரிக்கிறது காங்கிரஸ்; மோடி ஆவேசம்
காங்கிரஸ் கட்சி, கமிஷன் ஆட்சி நடத்துகிறது. தொடர்ச்சியான ஊழல்களால் கறையான் போல் நாட்டை கொஞ்சம் கொஞ்சமாக அரிக்கிறது. பிரதமர் பதவியில் இருக்கும் மன்மோகன் சிங், சோனியா குடும்பத்தின் இரவு காவலாளி போல் செயல்படுகிறார் என பா.ஜ., மூத்த தலைவர் நரேந்திர மோடி ஆவேசமாக பேசினார். பா.ஜ., தேசிய கவுன்சில்…
மீண்டும் திரையில் நடிக்கும் ஜெயலலிதா?
தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞன் இதயேந்திரன் ஒரு விபத்தில் மூளைச்சாவு அடைந்ததையொட்டி அவனது இருதயம் உள்ளிட்ட உடல் உறுப்புகளை தானம் செய்தனர் அவனது பெற்றோர்கள். இதயேந்திரன் இருதயத்தை போக்குவரத்து நெரிசல் மிகுந்த சென்னையில் துணிச்சலுடன் எடுத்துச் சென்று இன்னொரு குழந்தைக்கு பொருத்தப்பட்டது. இந்த சம்பவம் தமிழ் நாட்டில் மட்டுமல்ல இந்தியா…
இலங்கையை எதிரி நாடாகக் கருத முடியாதாம்; சொல்கிறார் இந்திய வெளியுறவு…
ஐநா மன்றத்தின் மனித உரிமைகள் பேரவையில் நடந்துவரும் இலங்கை தொடர்பான விவாதம் குறித்து இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவையில் இன்று விவாதம் நடந்தது. இதில் திமுக, அதிமுக, பாரதீய ஜனதா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் இலங்கை அரசு தொடர்பான…
கோல்கட்டா மார்க்கெட்டில் தீவிபத்து: 18 பேர் உடல் கருகி பலி
கோல்கட்டா: கோல்கட்டாவின் சந்தையில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீவிபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது. பலர் படுகாயமடைந்துள்ளனர். சம்பவ இடத்தில் இன்னும் பலர் சிக்கியிருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. கோல்கட்டாவின் சீல்டாக் பகுதியில் சூர்யாசென் என்ற பெயரில் மார்க்கெட் மற்றும் கோடவுன் இயங்கி வருகிறது. இந்த மார்க்கெட் பகுதியில்…
தீவிரவாத தாக்குதல்: உலக அளவில் இந்தியாவுக்கு 4ம் இடம்!
டெல்லி: தீவிரவாதிகளின் தாக்குதல் இந்தியாவில் அடிக்கடி நிகழ்கிறது. தாக்குதலை தடுக்க எவ்வளவோ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்தாலும் ஏதாவது ஒரு நகரத்தில் தாக்குதல் நடைபெறுவதும், பலநூறு உயிர்கள் பலியாவதும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. காஷ்மீரோ, கோவை மாநகரமோ குண்டு வெடிப்புகளுக்கு இலக்காகிக் கொண்டுதான் இருக்கிறது. நாடாளுமன்றத்தின் உள்ளேயே கூட தீவிரவாதிகள்…
நாடாளுமன்ற உறுப்பினர்களை கண்கலங்கவைத்த போர்க்குற்ற ஆவணப்படம்!
நேற்று இந்திய இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குத் திரையிட்டுக் காண்பிக்கப்பட்ட ‘போர் தவிர்ப்பு வலயம்’ ஆவணப்படம் கண்கலங்கை வைத்துவிட்டதாக தமிழகச் செய்திகள் தெரிவிக்கின்றன. (காணொளி) இலங்கைத் தீவில் தமிழர்கள் மீது சிங்கள அரசு நடத்திய இனப்படுகொலையின் வலுமிக்கதொரு சாட்சியமாகவும் சிறிலங்கா அரசுக்கு பெருந்தலையிடியாகவும் இந்த ஆவணப்படம் உள்ளது. அண்ணளவாக 20…
‘ஜெனிவாவில் இந்திய நிலைப்பாடு மாறாது’ – மன்மோகன் சிங்
ஐநாவின் ஜெனிவா மனித உரிமைகள் பேரவை மாநாட்டில் இலங்கை விடயத்தில் இந்தியா கடந்த தடவை எடுத்த நிலைப்பாட்டையே இந்தத் தடவை எடுக்கும் என்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கூறியுள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் நாடாளுமன்ற இரு அவை உறுப்பினர்களும் இந்தியப் பிரதமர்…
