நம்பிக்கை …வை 

நம்பிக்கை …வை 

நம்பிக்கையில்தான் 
நகருகிறது 
வாழ்க்கை …! 

உன் 
நாடி ..நரம்புகளில் 
இரத்தவோட்டத்தை 
மாற்று… 

இளமையாய் 
நம்பிக்கையை 
ஊற்று… 

வறண்ட பொழுதினில் 
வாழ்வின் எல்லைவரை 
செல்லும் மனது … 

அப்பொழுதினில் 
நாளைய உலகினை 
நம்பிக்கை வேர்களே 
நன்றியுடன் உரைக்கும் 

விடிவோம் என்றுதானே 
வீழ்கிறான் சூரியன் … 

வளர்வோம் என்றுதானே 
தேய்கிறான் சந்திரன் … 

வீழ்ச்சியும்… 
தேய்தலும்… 
தேகத்திற்குத்தான்..? 
ஆனால் 
மனதிற்கு …! 

தவறெனில் 
‘தாய்’ புவியின் 
தலைவிதியை 
மாற்றிவிடு … 

‘தரணி’ ஆள 
தளிர்களுக்கு 
தன்னம்பிக்கை 
ஊற்றிவிடு … 

காயங்கள் 
ஆறிவிடும்… 
கவலைகள் 
ஓடிவிடும்… 

கனவுகள் 
கூடிவரும்… 
காவிரியிலும் 
நீர்வரும்… 

மாற்றங்கள் 
துளிர்விடும் … 
மறைவுகள் 
உயிர்பெறும்… 

மனித மனம் 
என்று 
ஒளிபெறும் …? 

தும்பிக்கைதான் 
பலம் 
யானைக்கு 
நமக்கு 
நம்பிக்கை … 

நாளைய 
உலகினை 
வழிநடத்த 
வந்தவன் 
நீ …! 

நம்பிக்கை…வை 

நம்பிக்கையில் தான் 
நகருகிறது 
வாழ்க்கை …! 

(குமரேசன் கிருஷ்ணன்)

-eluthu.com

TAGS: