இயற்கை அன்னையே போற்றி போற்றி!!!

எல்லாம் அசையச் செய்தாய் – உயிர்கள்
எதினும் அசைவைச் சேர்த்தாய்.
சொல்லால் இசையால் இன்பம் – எமையே
துய்க்கச் செய்தாய்! அடடா!
கல்லா மயில், வான்கோழி – புறவுகள்
காட்டும் சுவைசேர் அசைவால்
அல்லல் விலக்கும் “ஆடற் கலை” தான்
அமையச் செய்தாய் வாழி!

– 🖤பாவேந்தர் பாரதிதாசன்❤️

TAGS: