கோவிட் இருக்கா, இல்லையா? எப்படிக் கண்டு பிடிக்கிறார்கள்!

கவிதா கருணாநிதி - நாம் கோவிட் 19-ஆல் பாதிக்கப்பட்டுள்ளோமா என்று மூன்று பரிசோதனைகளின் வழி தெரிந்து கொள்ளலாம்.இந்த மூன்று கோவிட் பரிசோதனைகளும் வெவ்வேறு வகைப்படும். முதல் பரிசோதனை வகை மொலெகுலர் டெஸ்ட்(Molecular Test) எனப்படுவதாகும். பி.சி.ஆர் டெஸ்டிங் (PCR Testing) இந்த வகையைச் சார்ந்ததாகும்.  நம் மூக்கின் வழியே  அடித்தொண்டையைப்…

தமிழ் மொழி செய்த பாவம்தான் என்ன? – இராகவன் கருப்பையா

எனக்கு ஆங்கிலம் பேச வராது என எந்த அமெரிக்கரோ பிரிட்டன்வாசியோ சொல்லியிருக்க மாட்டார். எனக்குச் சீன மொழியில் பேசத் தெரியாது என எந்தச் சீனரும் சொல்லியதாகத் தெரியாது. எனக்குக் கொஞ்சம் கொஞ்சம்தான் மலாய் தெரியும் என எந்த ஒரு மலாய்க்காரரும் சொல்லியதாக நாம் கேள்விப்பட்டதில்லை. ஆனால் நம் இனத்தவர்…

மூக்கால் நுகர முடியவில்லையா? – உடனே கோவிட் டெஸ்ட் செய்யுங்கள்…

கவிதா கருணாநிதி - கோவிட்-19 பெரும்பாலோரின் மத்தியில் நுகர்வுத் தன்மையைச் செயலிழக்க (Anosmia) செய்கின்றது. மற்ற அறிகுறிகளான காய்ச்சல் மற்றும் இருமுபவளைக் காட்டிலும் நுகர்வுத் தன்மையின் செயலிழப்பு சற்று அதிகமாகவே காணப்படுகிறது என்கிறார் சாபீர். அவர் கட்டுரையின் சாரம் வருமாறு. மேலும், நுகர்வுத் தன்மையோடு சுவையின் தன்மையும் செயலிழந்துவிடும்.…

கோலஸ்ட்ரோல் புற்றுநோயை அதிகப்படுத்தும்

கவிதா கருணாநிதி - இவ்வருடத்தில் அமெரிக்காவின் டியுக் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் எலிகளைக் கொண்டு நடத்திய ஆராய்ச்சியின் மூலம் நம் உடலில் புற்றுநோய் மேலும் பரவக் கொலஸ்ட்ராலின் பங்களிக்கிறது என்று  கண்டுபிடித்துள்ளனர். புற்றுநோய் என்பது இயல்புக்கு மாறாகக் கட்டுப்பாடின்றி உயிரணுக்களின் எண்ணிக்கை அதிகரிப்பதாகும். கொலஸ்ட்ரால் என்பது நம் உடலில் இருக்கும் கல்லீரல்…

மலேசிய குடும்பத்தை உருவாக்க மக்கள் தயார், பிரதமர் தயாரா? –…

டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் நாட்டின் ஒன்பதாம் பிரதமராகப் பதவியேற்றதும் மலேசியர்களை நோக்கி முதல் வேண்டுகோள் விடுத்தார். அது வேண்டுகோளா அல்லது அவரின் தனிப்பட்ட அபிப்பராயமா, இரண்டில் எது என்பதைக் கிரகிக்க முடியவில்லை. ஏனெனில், அரசியல்வாதிகள் பொதுவாகவே ஒன்றைச் சொல்லிவிட்டுப் பிறகுதான் சிந்திப்பார்கள்.  சிந்தித்துப் பேசும் பழக்கம்…

மாமன்னரின் அதிகாரம் குறித்த  ஏஜி ட்ருஸ் ஹருன் கருத்தில் குழப்பம் –  குலசேகரன்

பிரதமர்  இஸ்மாயில் சப்ரியை நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உட்படுத்தப்படத்     தேவையில்லை என்று   இட்ருஸ் ஹருன் கூறியிருப்பது  வியப்பாக இருக்கிறது. அவரின் கூற்றுப்படி  பிரதமர் இஸ்மாயில் சப்ரி அரசியலமைப்புச் சட்டப்படி  நிமியக்கப் பட்டிருக்கிறார். அப்படி  அவர் நாடாளுமன்றத்தில்  நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு   உட்படுத்தப்படுவாரேயானால்   அது பேரரசரின் அதிகாரத்தை  அவமதிப்பதாக   கருதப்படும் என்று அவர்  கூறியிருக்கின்றார். பேரரசரைத் தவிர்த்து வேறு யாரேனும் பிரதமரின் பதவியை  மறு…

ஏனோ தானோ அமைச்சரவையில் – ஹிரோவாகும் கைரி!

இராகவன் கருப்பையா - தனது புதிய அரசாங்கத்திற்கு அமைச்சர்களை நியமனம் செய்ததில் பிரதமர் இஸ்மையில் செய்த உருப்படியான ஒரே காரியம் கைரி ஜமாலுடினை சுகாதார அமைச்சராக நியமித்ததுதான். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நாட்டைச் சீர்குலைத்த அதே அமைச்சர்களை மீண்டும் உள்ளே கொண்டு வந்ததால் பல்வேறு தரப்பினரின் கண்டனத்திற்குள்ளான பிரதமரை…

புதிய இருதய சிகிச்சை –  ஐஜேன்-னின் புத்தாக்க கண்டு பிடிப்பு…

தேசிய இருதய சிகிச்சை மையம் (IJN) ட்ரைஸ்குபிட் ரிகர்ஜிடேஷன் (tricuspid regurgitation) அல்லது கசிவு இதய வால்வுகளால் (leaky heart valves) பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஒரு சிகிச்சை முறையை வெற்றிகரமாக கண்டுபிடித்துள்ளது. இச்சிகிச்சை ட்ரிக்வால்வு ® டிரான்ஸ்காதீட்டர் பைகாவல் வால்வுகள் சிஸ்டம் (பயோப்ரோஸ்டெசிஸ்) (Tricvalve® Transcatheter Bicaval Valves…

இனவாத அரசியலில் இலவு காத்த கிளிகளாக இந்தியர்கள்!

இராகவன் கருப்பையா - திங்கள்கிழமை (30/8/21) பதவியேற்ற நாட்டின் புதிய அமைச்சரவையில் மனிதவள அமைச்சராகச் சரவணனும் சுற்றுலாத்துறை துணையமைச்சர் சந்திரக் குமாருமாக 2 இந்தியர்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளனர். இதில் அதிர்ச்சியோ ஆத்திரமோ ஆச்சரியமோ படுவதற்கு ஒன்றுமில்லை. ஏனெனில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முன்னாள் பிரதமர் மஹியாடின் அறிவித்த அமைச்சரவையிலும்…

அவதிப்படும் ஆசிரியர்களும் – பள்ளிப்பிள்ளைகளின் எதிர்காலமும்

இராகவன் கருப்பையா -  கோறனி நச்சிலினால் கடுமையாகப்  பாதிக்கப்பட்டிருந்த போதிலும் உலகின் பல நாடுகளில் பள்ளிக் கூடங்கள் கிட்டதட்ட வழக்க நிலைக்குத் திரும்பிவிட்டன.ஆனால் நமது பிள்ளைகள் இன்னமும் இலக்கற்ற நிலையில் தடுமாறிக் கொண்டிருப்பது பரிதாபகரமான நிலைதான். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஆசிரியர் - மாணவர் உறவுகளில் மிகப் பெரிய விரிசல் ஏற்பட்டுள்ள…

இஸ்மாய்லின் அமைச்சரவை – புதிய பானையில் பழைய சோறு

இராகவன் கருப்பையா - பிரதமர் இஸ்மாய்ல் சப்ரி இன்று அறிவித்த அமைச்சரவை நாட்டு மக்களை எந்த அளவுக்குத் திருப்தி படுத்தியிருக்கும் என்று தெரியாது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாகத் தங்களுடைய சுயநலத்தையே முன்வைத்து நாட்டின் பொருளாதாரத்தையும் சுகாதாரத்தையும் இதர பல விசயங்களையும் சீரழித்த அதே நாடாளுமன்ற உறுப்பினர்களை 'மறு சலவை' செய்து…

புற்றுநோய் கண்டுபிடிப்பில் சாதனை- மலேசிய விஞ்ஞானி டாக்டர் சிரேனா நிக்…

யூகெவில் இருக்கும் மலேசியா விஞ்ஞானி டாக்டர் சிரேனா நிக் சைனால் புற்றுநோயையை விளைவிக்கும் மரபணு காரணங்களைப் பற்றிய ஆராய்ச்சியை மேற்கொண்டு மருந்து அறிவியல் வளர்ச்சிக்குப் பங்களித்ததால் அவர்களுக்குப் பிரான்சிஸ் கிரி மெடல் மற்றும் லெக்சர் 2022 (Francis Crick Medal and Lecture 2022) விருது வழங்கப்பட்டது. கீச்சகத்தில்(Twitter)…

தலிபானை வாழ்த்தியது அரசியல் முதிர்ச்சியின்மை! – இராகவன் கருப்பையா

கடந்த 20 ஆண்டுகளாக ஆஃப்கானிஸ்தான் மக்களின் மகிழ்ச்சியான வாழ்வுக்கு அரணாக இருந்த அமெரிக்கா தனது கூட்டுப் படைகளுடன் அந்தாட்டை விட்டு வெளியேறியது ஒரு சோகமான நிகழ்வு. அமெரிக்கத் துருப்புகள் வெளியான மறு கணமே தலிபான் தீவிரவாதிகள் நாட்டைக் கைப்பற்றியதால்  சுதந்திரமாக, உல்லாசமான வாழ்க்கையை அனுபவித்து வந்த அந்நாட்டு மக்களின்…

தீதும் நன்றும் பிறர் தர வாரா – கபட அரசியலில்…

கடந்த ஆகஸ்ட் 16-இல் டான் ஶ்ரீ முகைதீன் யாசின் பிரதமர் பதவியைத் துறந்தார். மாமன்னரும் அதை ஏற்றுக்கொண்டு புதிய பிரதமரை நியமிக்கும் வரை முகைதீனையே பராமரிப்புப் பிரதமராக நியமித்துள்ளார். பதவி துறந்த பின், முகைதீன் யாசின் நாட்டுக்கு ஆற்றிய தமது உரையில், சில முக்கியத் தகவல்களை வெளியிட்டுள்ளார். அந்த…

புதிய அமைச்சரவைக்கு திறமைசாலிகள் வேண்டும்!

இராகவன் கருப்பையா -நாட்டின் 9ஆவது பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள இஸ்மாய்ல் சப்ரிக்கு அடுத்து வரும் சில தினங்கள் மிகவும் முக்கியமான நாள்களாகக் கருதப்படுகிறது. இவ்வாரத்தில் தனது புதிய அமைச்சரவையை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படும் அவர் யார் யாருக்கு எந்தெந்தப் பொறுப்புகளை வழங்கவிருக்கிறார் என்பதை அறிவதற்குப் பொது மக்கள் கழுகுப் பார்வையைக்…

இஸ்மாயில் சப்ரி மஹியாடின் செய்யாததை செய்யவேண்டும் – குலா. நாடாளுமன்றத்தில் ஆதரவை நிரூபிக்கவேண்டும்.

இந்த அற்புதமான  மலேசியத்  திருநாட்டிற்குப் புதிதாக 9வது பிரதமராகப் பதவி ஏற்றிருக்கும்  அம்னோ துணைத்தலைவர் டத்தோ ஸ்ரீ  இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பிற்கு   எனது  மனமார்ந்த  வாழ்த்துகள். இந்த  கோவிட் 19  நாட்டை  அலைக்கழித்துக்கொண்டிருக்கும் சூழலில்  அவர் ஏற்றிருக்கும் இப்பொறுப்பானது  மிகவும் சவாலும் சோதனைகளும்   நிறைந்ததாக இருக்கும் . அற்புதமான ஒரு வாய்ப்பு இஸ்மாயில் சப்ரிக்கு  எதிர்பாராத விதமாக அமைந்துள்ளது.   இதனை  உறுதிசெய்து கொள்ள, உடனடியாக அவர்  நாடாளுமன்றத்தைக் கூட்டி  தன்னுடைய  பெரும்பான்மை ஆதரவை  நிரூபிக்க வேண்டும். இது மாமன்னரின் விருப்பம்…

கிளாசிக் சுப்பையா காலமானார் – இந்தியச் சமூகம் ஒரு தமிழ் உணர்வாளரை  இழந்தது!

நமது நாட்டின் தமிழ்ப்பள்ளி வளர்ச்சிக்கும் தமிழ்மொழி மேம்பாட்டுக்கும்  உணர்வுப் பூர்வமாக பங்காற்றிய சிலாங்கூர் மாநில தமிழ்ப்பள்ளி வாரியங்களின் ஒருங்கிணைப்பு அமைப்பின் தலைவர் கிளாசிக் சுப்பையா இன்று மாலை (21.8.2021)  காலமானர். கோவிட்-19 தொற்றால் கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் செயற்கை சுவாசமுறை வழி தீவிர  சிகிச்சை பெற்று வந்த…

மக்கள் விரும்பும் ஆட்சிக்கு காலம் கணிவது எப்போது? – இராகவன்…

மலேசிய அரசியல் வரலாற்றில் 2ஆவது முறையாக மக்கள் விரும்பாத ஒருவர் பிரதமராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதுவும் வெறும் 18 மாதங்களில் இரு முறை நாடு தலைமைத்துவ  மாற்றங்களுக்கு இலக்காகியுள்ளது சரித்திரத்தில் நிச்சயம் இடம்பெறும் என்பதில் ஐயமில்லை. கடந்த 2018ஆம் ஆண்டில் நடைபெற்ற 14ஆவது பொதுத் தேர்தலின் போது பிரதமராவதற்கானப்…

இலங்கையில் காணாமல் போகும் தமிழ் மொழி; அதிகரிக்கும் சீன மொழி…

இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருகின்ற பின்னணியில், இலங்கையின் அரசு அலுவல் மொழியான தமிழ் மொழி சீன தூதரகத்தினால் தொடர்ச்சியாக புறக்கணிக்கப்பட்டு வருவதாக தெரிகிறது. இலங்கையில் சீனாவினால் முன்னெடுக்கப்படும் நலத்திட்டங்களில் பெரும்பாலான இடங்களில் சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் அதேவேளை, சீன மொழிக்கும் அதே அளவிலான…

பகாங் மாநில, சவ அடக்க உதவியில் இனப்பாகு வேண்டாம்!

இராகவன் கருப்பையா- கோறனி நச்சிலின் கோரத்திற்குப் பலியாகும் பகாங் மாநில மக்களின் சவ அடக்கச் செலவுகளை மாநில அரசாங்கம் ஏற்றுக்குக் கொள்ளும் என இவ்வாரம் வெளியான தகவல் நமக்குச் சற்று ஏமாற்றத்தையே அளிக்கிறது. மரணமடைவோரின் குடும்பங்கள் எதிர்நோக்கும் சுமைகளைக் கருத்தில் கொண்டு மாநில அரசாங்கம் இம்முடிவை எடுத்ததாக மந்திரி பெசார்…