இராஜம்மா கருப்பையா காலமானார்

மலேசியா இன்று-வின் படைப்பாளர் இராகவன் கருப்பையா அவர்களின் அன்பு தயார் இன்று காலமானார். வயது மூப்பின் காரணமாகக் காலமடைந்த இராஜம்மா கருப்பையாவின் வயது 91 ஆகும். அம்மையாரின் இறுதிச் சடங்குகள் நாளை (23.10.2021) காலை மணி 11.00க்கு எண் 37 ஜாலான் சுங்கை மானவ் 27/76, தாமாம் அலாம்…

பினேங் மாநில முதல்வராக இந்தியர் ஒருவர் வேண்டும்!

இராகவன் கருப்பையா- அடுத்த பொதுத் தேர்தலுக்கு ஏறக்குறைய இன்னும் ஒன்றரை ஆண்டுகளே இருக்கும் இவ்வேளையில் பினேங் மாநில அரசியலில், குறிப்பாக அம்மாநில ஜ.செ.க.வில் உள்ள இந்தியர்களிடையே நிலைமை சற்றுச் சூடு பிடிக்கத் தொடங்கிவிட்டது. கடந்த 2008ஆம் ஆண்டிலிருந்து பினேங்கின் துணை முதல்வராக இருந்து வரும் பேராசிரியர் இராமசாமி அடுத்த பொதுத்…

இந்து மதத்தை இழிவு படுத்துபவர்கள் ஏன் தண்டிக்கப்படுவதில்லை?  

இராகவன் கருப்பையா- எப்படிப்பட்ட குற்றமாக இருந்தாலும் சம்பந்தப்பட்ட குற்றவாளி தண்டிக்கப்படவில்லை என்றால் குற்றச் செயல்களுக்கு முடிவே இருக்காது. இழைக்கப்படும் குற்றத்திற்கு ஏற்ப அந்தக் குற்றவாளி ஏதாவது ஒரு வகையில் அவசியம் தண்டிக்கப்பட வேண்டும். இல்லையேல் அத்தகைய குற்றங்கள் தொடர்வதற்கு அது உந்துதலாகத்தான் அமையும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.…

கோலாலம்பூரை யார் கண்டுபிடித்தார்? சீனரா? மலாய்காரரா?

இராகவன் கருப்பையா-  ஆ லோய் எனும் ஒரு சீன வணிகர்தான் கோலாலம்பூரைக் கண்டுபிடித்தவர் எனக் காலங்காலமாக நாம் சரித்திரப் புத்தகங்களில் படித்திருக்கிறோம். ஆனால் வெவ்வேறு ஆய்வுகளில் மேலும் இருவரின் பெயர்களும் அந்தப்பட்டியலில் இருப்பதைச் சற்று அலசி ஆராய்கிறார் வரலாற்றாசிரியர் ரஞ்சிட் சிங். இந்தோனேசியாவின் வட சுமத்ராவில் உள்ள மண்டய்லிங்ஙைச்…

மித்ராவை சீரமைக்க தனி அறவாரியம் தேவை – குணராஜ்

இந்தியர்களுக்கு அரசாங்கம் ஒதுக்கும் நிதி நல்ல பலனை அளிக்க வேண்டுமானால், அதன் பயன்பாட்டு வழிமுறைகள் முழுமையாக மாற்றப்பட் வேண்டும். அரசாங்கத்தின் கடமையாக இருக்கும் கல்வி, திறன் பயிற்சி,  இளைஞர் பயிற்சி போன்றவை அவை சார்ந்த அமைச்சுகளின் வழி மேற்கொள்ளப்படவேண்டும். மித்ரா நிதியின் நோக்கம், வறுமையில் சிக்கியுள்ள  இந்திய குடும்பங்களின்…

இலக்கியம் சாடும் பாசியின் மறுபக்கம், அல்கா அபரிதமானது – கவிதா கருணாநிதி

இலக்கியங்கள் பாசி என்ற சொல்லை ஒரு குறைபாடாகவே காட்டியுள்ளன. உதாரணமாக, “...நாட்பட நாட்பட நாற்றமும் சேறும் பாசியும் புதைந்து பயன்நீர் இலதாய்..” என்கிறார் பாரதியார். “ ….கலங்கும் பாசி நீர் அலை கலாவ, ஒளிறு வெள் அருவி ஒள் துறை மடுத்து..” என்கிறது நற்றிணை. இந்தப் பாசியின் மறுபக்கம்தான் என்ன, அறிவியல் பார்வையில்…

மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும் – கி.சீலதாஸ்

மரண தண்டனை முழுமையாக அகற்றுவதா வேண்டாமா என்பதே இன்றைய நாகரிக உலகின் வருத்தும் கேள்வியாக உள்ளது. அக்டோபர் பத்தாம் தேதியை உலக மரண தண்டனை எதிர்ப்பு தினமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகளின் 192 உறுப்பு நாடுகளில் 140 நாடுகள் மரண தண்டனையைத் தடைசெய்துவிட்டன. மூன்று முறை, ஐக்கிய நாடுகளின்…

மித்ராவின் செயல்பாடு அவசியமானது – ஊழல் வேண்டாம்!  

இராகவன் கருப்பையா - மலேசிய இந்தியர்களின் மேம்பாட்டுக்கு அரசாங்கம் ஒதுக்கிய 100 மில்லியன் ரிங்கிட், தேவைப்படுவோரைச் சென்றடையும் முன்னரே முடிந்துவிட்டதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 'மித்ரா' எனப்படும் இந்தியச் சமூக உருமாற்று பிரிவின் வழி அரசாங்கம் ஆண்டுதோறும் அத்தொகையை இந்தியர்களின் மேம்பாட்டுக்கு ஒதுக்குகிறது. இது குறித்துக் கடந்த வாரம்…

மனித குலத்தை காப்பாற்றும் மர்மமான நுண்ணுயிர்கள் – கவிதா கருணாநிதி

நுண்ணுயிர்களை பெக்டிரியா, வைரஸ், புரொடொசொவ, அல்கெ என்று பலவகையாகப் பிரிக்கலாம்.  நம் கண்களுக்குத் தென்படாமல் காற்றிலும் நீரிலும் உடம்பிலும் நுண்ணுயிர்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றது. டிசென்ட்ரி (Dysentery), கொலெரா(Cholera),  டைபோய்ட்(Typhoid) போன்ற நோயினால் பாதிப்படைவதால் நாம் நுண்ணுயிர்கள் ஆபத்தானவை என்று கருதுகிறோம். ஆனால், தீய நுண்ணுயிர்களைக் காட்டிலும் நன்மை அளிக்கக்கூடும் நுண்ணுயிர்கள்தான், இவ்வுலகம் இயங்கிக் கொண்டிருக்கக் காரணமாக அமைகின்றது. நம் உடம்பில் உணவு செரிமானம் ஆவதற்கும், மருந்துகளும் உணவுகளும் தயாரிப்பதற்கும்,…

அரசாங்கப் பணம் விரயம்: சப்ரியும் சளைத்தவரல்ல!

இராகவன் கருப்பையா - நம் நாட்டில் ஊழல்வாதிகள்தான் மக்கள் பணத்தைச் சூறையாடுகிறார்கள் என்றால் அரசாங்கம் கண்மூடித்தனமாகச் செய்யும் பல செலவுகளும் கூடப் பொது மக்களின் விரக்தியைச் சம்பாதிக்கிறது. மேம்பாடு கண்டுள்ள பல நாடுகளோடு ஒப்பிடுகையில் மலேசியாவின் போக்கு முற்றிலும் வியக்கத்தக்க ஒன்றாகவே உள்ளது. குறிப்பாகக் கனடா, பிரிட்டன், நெதர்லாந்து, ஜெர்மனி…

இந்தியர்களின் பிரச்சனைகளைக் களைய நிதி அமைச்சருடன் சந்திப்பு – குலசேகரன்  

எதிர்க்கட்சி கட்சிகளும்  ஆளும் கட்சியும் இணைந்து செய்துகொண்ட  புரிந்துணர்வு அடிப்படையின் கீழ், நிதி அமைச்சர் தெங்கு சாப்ருல் அஜிசை சந்திப்பதற்கு   பாக்காத்தான் ஹரப்பான் கட்சி  30 செப்டம்பர் அன்று ஒரு சந்திப்பு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது. இந்த கலந்துரையாடலில் , விடுபட்டுப் போன   சமூக பொருளாதார  பிரச்சனைகள்,   முறையாகச் செயல் படுத்தாமல்  தோல்வியுற்ற  திட்டங்கள்.…

பயங்கரவாத அச்சுறுத்தல்: மெத்தனப் போக்கு கூடாது

இராகவன் கருப்பையா- தென் கிழக்காசியாவில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படக் கூடும் என அண்மையில் ஜப்பான் விடுத்த எச்சரிக்கையை நாம் சாதாரணமாகக் கருதக்கூடாது. மலேசியாவில் உள்ள ஏறக்குறைய 31,000 ஜப்பானியர்கள் உள்படத் தாய்லாந்து, சிங்கப்பூர், இந்தோனேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில்  உள்ள தனதுப் பிரஜைகள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என ஜப்பானிய அரசாங்கம்…

பள்ளிகளைத் திறப்பது பிள்ளைகளுக்கு ஆபத்தா?

இராகவன் கருப்பையா - நாடளாவிய நிலையில் பள்ளிக்கூடங்கள் திறக்கப்படவுள்ள நிலையில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இன்னும் தடுப்பூசிப் போட்டுக் கொள்ளவில்லை எனும் தகவல் நமக்குப் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எதிர்வரும் அக்டோபர் 3ஆம்  தேதி தேசிய அளவில் பள்ளிகள் திறக்கப்படும் என அரசாங்கம் ஏற்கெனவே அறிவித்துள்ளது. இதுவே இறுதி முடிவு எனவும் தெரிகிறது. இத்தகைய சூழலில் சுமார் 2100 ஆசிரியர்கள் தடுப்பூசிப் போட்டுக்…

அயல் நாட்டவரை திருமணம் செய்யும் பெண்களின் வழி குழந்தைகளுக்கும் குடியுரிமையை…

 கி.சீலதாஸ் - சமீபத்தில் உயர்நீதிமன்றம் மலேசிய குடிமகளின் கணவர் வெளிநாட்டவர் என்றபோதிலும் அவர்களுக்குப் பிறக்கும் குழந்தையானது ஆணுக்குக் கொடுக்கப்படும் அதே பாதுகாப்பை, உரிமையை அதாவது மலேசிய குடிமகன் வெளிநாட்டு பெண்ணை மணந்து பிள்ளை பெற்றால் அந்தக் குழந்தை இயல்பாகவே மலேசிய குடியுரிமை பெறுவது போல், மலேசிய பெண்ணுக்கும் அந்த உரிமை…

இனத்துவேசம் குற்றம், என்ற சட்டம் தேவை! – இராகவன் கருப்பையா

பள்ளிகளில் நமது மாணவர்கள் எதிர்நோக்கும் இனப் பாகுபாடு ஒரு புதிய விசயமில்லை என்பது நம் எல்லாருக்குமே நன்றாகத் தெரிந்த ஒன்றுதான். இக்கொடுமையைக் காலங்காலமாக அனுபவித்துவரும் நம் இன மாணவர்களில் பெரும்பாலோர் கண்ணீரை மட்டுமே துணைக்கழைத்து மௌனமாகவே காலத்தைக் கடத்திவருவதும் வெள்ளிடை மலை. சம்பந்தப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் பலதரப்பட்ட காரணங்களினால்…

இளைஞர்கள் அரசியலில் ஈடுபட முன்வரவேண்டும் – கி.சீலதாஸ்

“சிறு பிள்ளை செய்த வேளாண்மை வீடு வந்து சேராது” என்பது பழமொழி. இதன் பொருள், இளைஞர்களிடம் அனுபவம் குறைந்து காணப்படும். எனவே, அவர்களின் முயற்சி பலன்தராமல் போகலாம் என்பதாகும். விஞ்ஞான வசதிகள் இல்லாத காலத்தில் இந்த விவசாயத்தை ஒட்டிய பழமொழியில் பிழை காண்பது முறையல்லதான்; ஆனால், இப்பொழுது விஞ்ஞானத்தின்…

பக்காத்தானுடன் உறவு: சப்ரியின் சாமர்த்தியம்! – இராகவன் கருப்பையா

எதிர்க்கட்சிக் கூட்டணியான பக்காத்தான் ஹராப்பானுடன் கடந்த வாரம் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றைச் செய்து கொண்டுள்ளதன் வழி தனது அரசியல் சாணக்கியத்தை வெளிப்படுத்தியுள்ளார் பிரதமர் இஸ்மாய்ல் சப்ரி. 'சாட்சிக்காரன் காலில் விழுவதை விடச் சண்டைக்காரன் காலில் விழுவதே மேல்' எனும் கூற்றுக்கு ஏற்பப் பக்காத்தானை அரவணைத்துத் தனது நிலையை அவர்…

முழு உறைவிடப் பள்ளிகளில் அனைத்து வகை பள்ளி மாணவர்களும் கற்க…

குணசேகரன் கந்தசுவாமி - முழு உறைவிடப் பள்ளிகள் (Sekolah Berasrama Penuh) 80-களில் இருந்து மலேசியாவில் செயல்படுகின்றன. புறநகர் மாணவர்களுக்கு நிலையான மற்றும் உகந்த பள்ளிச் சூழலை வழங்குவதன் மூலம் கல்வி அமைப்பில் சமத்துவத்தை மேம்படுத்துவதற்காக முதலில் இப்பள்ளி திட்டம் உருவாக்கப்பட்டது. நாட்டில் முழு உறைவிடப் பள்ளிகள் நிறுவப்பட்டு 30…

 வீழ்ந்த அம்னோ, எழுமா? – டோமி தோமஸ்

கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேல் இரும்புப் பிடியாக நாட்டை ஆண்டு வந்த மலாய்க்காரர்களின் தாய்க் கட்சியாகக் கருதப்படும் அம்னோ தற்போது 3 பிரிவுகளாகப் பிரிந்து கிடக்கின்றது எனப் பரவலாகப் பேசப்படுகிறது. மூன்று ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற 14ஆவது பொதுத் தேர்தலில் ஆட்சியை நழுவவிட்ட அக்கட்சி சில அரசியல் தவளைகளின்…

தலைகள் ஒட்டிப் பிறந்த இரட்டையர்களை பிரிப்பதில் இஸ்ரேல் வெற்றி –…

உலக அளவில் இரட்டையர்கள் பிறப்பின் சதவிகிதம் சுமார் 1.1% ஆகும். ஒரே கருமுட்டையில் ஒரே உருவம் (Identical twins) கொண்டு பிறப்பவர்களின் சதவிகிதம் 0.3% ஆகும். அதிலும், கிரேனியோபேகஸ் (Craniopagus twins) என்று அழைக்கப்படும் தலைப் பகுதி ஒட்டிய இரட்டையர்கள் 2.5 மில்லியனில் ஒன்று மட்டுமே பிறக்கின்றது. இப்பிறப்பின்…

வல்லரசுகளையே ஆட்டிப்படைக்கும் கோவிட் பெருந்தோற்றும் – கி.சீலதாஸ்

மனிதக் குலத்தைத் தாக்கும் கோவிட்-19 பெருந்தொற்று நோய் தணிவதற்கான அறிகுறிகள் தென்படவில்லை. ஆனால், இந்த நோயைத் தரும் விஷக்கிருமி பலவிதமாக மாறும் தன்மையைக் கொண்டிருக்கிறது என மருத்துவ விஞ்ஞானிகள் தெளிவுபடுத்தியுள்ளனர். குறிப்பாக, வைரஸ் துகள்கள் சராசரி முப்பது விதமாக மாறும் தன்மையைக் கொண்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அவற்றில் பெரும்பான்மை பரவும்…

ஹெபடைடிஸ்-சி கண்டுபிடித்தவர்களுக்கு  2020 மருத்துவத்திற்கான நோபல் பரிசு – கவிதா…

ஹெபடைடிஸ்- சி வைரஸை (Hepatitis C virus) கண்டுபிடித்த மூன்று விஞ்ஞானிகள் 2020 ஆம் ஆண்டு மருத்துவம் அல்லது உடலியல் நோபல் பரிசை (Nobel Prize in Medicine or Physiology) வென்றுள்ளனர். இவர்கள்   பிரிட்டிஷ் விஞ்ஞானி மைக்கேல் ஹக்டன் (Michael Houghton). மற்றும் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் ஹார்வி ஆல்டர்…

விழுதுகள் இல்லாத ஆஸ்ட்ரோ, மொட்டை மரமாகக் காட்சி தரும்! –…

ஆஸ்ட்ரோ விழுதுகள் நிகழ்ச்சி, கடந்த வாரத்தோடு ஒரு முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. 14 ஆண்டுகளாக நாட்டு நடப்பையும் அதன் காரணக் காரியங்களையும் ஆய்ந்து, மலேசிய இந்தியர்களின் சிந்தனையைத் தூண்டும் ஒரு தனித்துவம் வாய்ந்த நிகழ்ச்சியாக அமைந்த விழுதுகள், இன்று இல்லை. விழுதுகளுக்கு மாற்றாக, அதினும் சிறப்பான ஒரு நிகழ்ச்சி விரைவில் நம்மைச் சந்திக்குமெனச் சொல்லப்படுகிறது.…