‘பாதிக்கும் மேற்பட்ட மலேசியர்கள் பிஎன்-னை நிராகரித்துள்ளனர்’

உங்கள் கருத்து : "நகர்ப்புற-கிராமப்புற பிளவு தெளிவாகத் தெரிகிறது. நகரங்களில் வசிக்கும் எல்லா இனங்களையும் சமயங்களையும் சார்ந்த மக்களுடைய வாக்குகளை பக்காத்தான் பெற்றுள்ளது. அதே வேளையில் பிஎன் கிராமப்புறங்களில் உள்ள எல்லா இனங்களையும் சமயங்களையும் சார்ந்த மக்களுடைய வாக்குகளை வென்றுள்ளது. பிஎன் புத்ராஜெயாவை தக்க வைத்துக் கொண்டது அடையாளம்…

சிலாங்கூரில் பக்காத்தான் மூன்றில்-இரண்டு பங்கு பெரும்பான்மை பெற்றது

பிகேஆர்-டிஏபி-பாஸ் கூட்டணியான பக்காத்தான் ரக்யாட், சிலாங்கூரில் 56 சட்டமன்ற இடங்களில் 46-ஐக் கைப்பற்றி ஆட்சியை நிலைநிறுத்திக்கொண்டுள்ளது. இந்த 13வது பொதுத் தேர்தலில் பிஎன்னால் 12 இடங்களை மட்டுமே பெற முடிந்தது. அம்மாநிலத்துக்கான முழு முடிவும் வெகு நேரம் கழித்துத்தான் தெரிய வந்தது. ஆகக் கடைசியாக அறிவிக்கப்பட்டது சுங்கை பினாங்…

பேராக் பக்காத்தான்: ‘ஆவி வாக்காளர்களே’ தோல்விக்குக் காரணம்

பேராக்கில் குறுகிய தோல்விகண்டு பக்காத்தான் ரக்யாட், மாநிலத் தேர்தல் முடிவுகள் குறித்து வழக்கு தொடுக்கலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறது. மாநில பக்காத்தான் தலைவர் முகம்மட் நிஜார் ஜமாலுடின் ‘ஆவி வாக்காளர்களும்'   வாக்காளர்கள் தொகுதி மாற்றம் செய்யப்பட்டதும்தான் தங்கள் தோல்விக்கு முக்கிய காரணம் என்றார். பேராக் சட்டமன்றத்தின் 59 இடங்களில்…

நஜிப் இஸ்தானா நெகாராவில் பிரதமராகப் பதவி உறுதி மொழி எடுத்துக்…

நஜிப் அப்துல் ரசாக் இஸ்தானா நெகாராவில் உள்ள பாலாய் ரோங் ஸ்ரீ-யில் யாங் டி பெர்துவான் அகோங் துவாங்கு அப்துல் ஹலிம் முவாட்ஸாம் ஷா முன்னிலையில் இன்று மாலை மணி 4.07க்கு பிரதமராக பதவி உறுதி மொழி எடுத்துக் கொண்டார். அந்தச் சடங்கின் போது ராஜா பரமைசுரி அகோங்…

அன்வார்: என்னுடைய வேலை இன்னும் முடியவில்லை

பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் அரசியலிலிருந்து ஒய்வு பெறுவது குறித்து இன்னும் சிந்திக்கத் தொடங்கவில்லை. காரணம் நேற்றைய சர்ச்சைக்குரிய தேர்தலில் பக்காத்தான் ராக்யாட் தோல்வி கண்ட பின்னர் மலேசிய அரசியல் களத்தில் தமது வேலை 'இன்னும் முடியவில்லை' என அவர் கருதுகிறார். பொதுத் தேர்தலுக்கான தேர்தல் ஆணைய…

சொய் லெக் கட்சித் தேர்தலில் மீண்டும் போட்டியிட மாட்டார்

விரைவில் நடைபெறவிருக்கும் மசீச கட்சித் தேர்தலிலிருந்து தாம் ஒதுங்கியிருக்கப் போவதாக அதன் தலைவர் டாக்டர் சுவா சொய் லெக் அறிவித்துள்ளார். இன்று வெளியிட்ட பத்திரிக்கை குறிப்பில் அதனைத் தெரிவித்த சுவா, தமது பதவியைத் தக்க வைத்துள்ள போட்டியிடாததற்கான காரணத்தைக் கூறவில்லை. அவர் தேர்தலில் மோசமான அடைவு நிலைக்கு மசீச…

பாலாவின் மனைவி : ஒரு மறைக்கப்பட்ட உண்மை…

அல்தாந்துயா விவகாரத்தில் பதினைந்து மாதங்கள் காணாமல் போன தனியார் துப்பறிவாளர் பாலசுப்ரமணியம் மீண்டும் வெளிவந்து பல உண்மைகளை வெளியிடத்தொடங்கினார் என்பது நாம் அறிந்தது.. அண்மையில் தனது முன்னாள் வழக்குரைஞர் அமெரிக் சிங் மூலம் நேர்காணல் ஒன்றை நடத்தியதன் மூலம் 15 மாதங்கள் பேசப்படாமல் இருந்த பாலாவின் கதை மீண்டும்…

13வது பொதுத் தேர்தல் : தற்போதைய அதிகாரப்பூர்வமற்ற நிலவரம்

இரவு மணி 2.30: நாடாளுமன்ற இருக்கைகள் பாரிசான் 129, பக்கத்தான் 80. பேராக் மற்றும் திரங்கானு மாநிலங்கள் இரவு மணி 2.03: மிகக் குறைவான பெரும்பான்மையில் பாரிசான் பேராக்  மாநில ஆட்சியை தொடரும் (பிஎன் 31, பக்கத்தான் 28).  திரங்கானு மாநிலத்தில் அதற்கு  இரண்டு பக்கத்தானைவிட இரு கூடுதல் இருக்கைகள் மட்டுமே கிடைத்துள்ளன (பிஎன் 17, பக்கத்தான் 15).  மஇகா வேட்பாளர்கள்…

‘சந்தேகத்துக்குரிய வாக்காளர் வாக்களித்த பின்னர் பணம் கோரினார்’

வாக்களித்த பின்னர் தங்கள் சாவடியில் பணம் கேட்ட சபாவைச் சேர்ந்த சந்தேகத்துக்குரிய வாக்காளர் ஒருவரை சிலாங்கூர் பண்டானில் உள்ள பக்காத்தான் ராக்யாட் தேர்தல் ஊழியர்கள் விசாரித்துள்ளனர். Taski Abim Taman Mawar வாக்குச் சாவடிக்கு வெளியில் அமைக்கப்பட்டிருந்த பிகேஆர் சாவடியில் பிற்பகல் ஒரு மணி வாக்கில் மஸ்லான் சுல்கிப்லி…

தேர்தல் ஆணையம் : வாக்காளர் பட்டியலில் சந்தேகத்துக்குரிய வாக்காளர்கள் யாருமில்லை

வாக்குச் சாவடிகளில் சந்தேகத்துக்குரிய வாக்காளர்கள் காணப்பட்டதாக புகார்கள் கொடுக்கப்பட்ட போதும் வாக்காளர் பட்டியலில் உள்ள பெயர்களைக் கொண்ட அனைவரும் குடிமக்கள் என்றும் அதனால் அவர்கள் சட்டபூர்வ வாக்காளர்கள் என்றும் தேர்தல் ஆணையத் தலைவர் (இசி) வலியுறுத்துகிறார். "எங்கள் பட்டியலில் சந்தேகத்துக்குரிய வாக்காளர்கள் யாரும் இல்லை. நாங்கள் எங்கள் வாக்காளர்…

‘வாக்களிக்கும் என் உரிமையை யாரோ திருடி விட்டார்கள்’

கூலாயிலும் கிள்ளானிலும் பல வாக்காளர்கள் தங்கள் பெயரில் யாரோ ஒருவர் வாக்களித்து விட்டதால் தாங்கள் வாக்களிக்க முடியாமல் போய் விட்டதாக கூறிக் கொண்டுள்ளனர். அவர்கள் இசி என்ற தேர்தல் ஆணையத்தில் புகார் செய்கின்றனர். கூலாயில் வாக்களிப்பதற்காக காலை 10 மணிக்கு SJK(C) Batu வாக்குச் சாவடிக்கு 42 வயதான…

பண்டானில் சந்தேகத்துக்குரிய வாக்காளரை பிகேஆர் முறியடித்தது

சிலாங்கூர் பண்டானில் பிகேஆர் தேர்தல் ஏஜண்டுகள் ஆட்சேபித்ததைத் தொடர்ந்து சந்தேகத்துக்குரிய வாக்காளர் ஒருவர் திருப்பி அனுப்பப்பட்டார். அந்தத் தகவலை பிகேஆர் பண்டான் வேட்பாளர் ராபிஸி இஸ்மாயில் வெளியிட்டார். சியோக் லியிங் இயூ என்ற பண்டான் வாக்காளர் ஒருவர்,  பதிவு செய்யப்பட்ட தமது முகவரியில் சந்தேகத்துக்குரிய வாக்காளர் ஒருவர் இருப்பதாக…

சிலாங்கூரில் பிற்பகல் ஒரு மணி வரையில் 58.95 விழுக்காட்டினர் வாக்களித்துள்ளனர்

சிலாங்கூரில் பிற்பகல் ஒரு மணி வரையில் 1.2 மில்லியன் அல்லது 58.95 விழுக்காடு வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை செலுத்தியுள்ளனர். அந்த விவரத்தை இசி என்ற தேர்தல் ஆணையம் பெர்னாமாவிடம் தெரிவித்தது. நெகிரி செம்பிலானில் பிற்பகல் ஒரு மணி வரையில் மொத்தமுள்ள 555,982 வாக்காளர்களில் 58.35 விழுக்காட்டினர் வாக்களித்து விட்டனர்.…

புல்லைக் கொண்டு கூட அழியா மையை நீக்கி விட முடியும்!

13வது பொதுத் தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் அழியா மை உண்மையில் அழிக்க முடியாது என தேர்தல் ஆணையம் வாக்குறுதி அளித்த போதிலும் நாடு முழுவதும் வாக்காளர்கள் அதனை எளிதாக அகற்றியுள்ளனர். சிலர் புல்லைப் பயன்படுத்திக் கூட அந்த மையை அழித்துள்ளனர். சபா பெனாம்பாங்கில் வாக்குச் சாவடிகளிலிருந்து வெளியில் வந்த வாக்காளர்கள்…

13வது பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு நாடு முழுவதும் தொடங்கியுள்ளது

புதிய அரசாங்கத்தை தேர்வு செய்ய 13வது பொதுத் தேர்தலில் வாக்களிப்பு நாடு முழுவதும் தொடங்கியுள்ளது. 15 நாள் பிரச்சாரக் காலம் நேற்று நள்ளிரவுடன் முடிவுக்கு வந்தது. எல்லா வாக்குச் சாவடிகளிலும் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்தத் தேர்தல் நாட்டு வரலாற்றில் மிக நெருக்கமான போட்டியாக இருக்கும்…

‘காரணமின்றி 2 மணிநேரம் தடுத்துவைத்த காவல்துறை மன்னிப்பு கோரவேண்டும்’

இலங்கையில் போரின் பின்னர் கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள சமாதான சூழலை சீர்குலைக்கும் வேலைகளில் ஈடுபடவேண்டாம் என்று நாட்டின் தலைமை நீதியரசர் மொஹான் பீரிஸ் காவல்துறையை எச்சரித்துள்ளார். நிந்தவூரைச் சேர்ந்த முஸ்லிம் பிரஜை ஒருவர் தாக்கல் செய்திருந்த மனுவொன்றை பரிசீலித்தபோதே தலைமை நீதியரசர் இந்தக் கருத்தைக் கூறினார். நியாயமான காரணமின்றி…

நஜீப் எனும் நல்லவர்…!

"நானும் மாற்றம் வேணுமுன்னு நினைக்கிறேன்... ஆனா நஜீப் நல்லவர். அதனால் பாரிசானுக்கு வாக்களிக்கிறேன்" கோழைகளின் ஆகக் கடைசியான சமரசக் கூற்று இதுவாகத்தான் இருக்கும். இவர்கள் 'நல்லவர்' எனச் சொல்ல மிக முக்கியக் காரணி பாரிசான் அரசாங்கம் கொடுத்த 500 ரிங்கிட். நன்றி உணர்ச்சிக்குப் பெயர் பெற்ற நமது இந்தியர்களின்…

‘இலங்கை மாநாட்டில் ஆஸ்திரேலியா கலந்துகொள்ளும்’

ஆஸ்திரேலியாவுக்கு அடுத்ததாக இலங்கை பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் மாநாட்டை இந்த ஆண்டின் பிற்பகுதியில் நடத்துவதை தாம் ஆதரிப்பதாக தெரிவித்துள்ள ஆஸ்திரேலியா அதில் தாம் கலந்துகொள்வோம் என்றும் கூறியுள்ளது. ஆஸ்திரேலியாவின் குடிவரவு மற்றும் பிரஜாவுரிமை அமைச்சரான பிரண்டன் ஓ கொன்னர் அவர்கள் தற்போது இலங்கைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். இலங்கையின்…

உதட்டுச்சாயத்தில் உலோகங்களால் ஆபத்து – ஆய்வு

அமெரிக்காவில் பரவலாக விற்கப்படும் 30க்கும் மேற்பட்ட உதட்டுச்சாயங்களில் விஷத்தன்மை வாய்ந்த உலோகங்கள் இருப்பதைக் காட்டுவதாக அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். கலிபோர்னியா பல்கலைக்கழகதின் பார்க்லி பொதுச்சுகாதாரப் பள்ளியினால் நடத்தப்பட்ட இந்த ஆய்வு, இந்த உதட்டுச்சாயத்தில் காட்மியம், க்ரோமியம் மற்றும் அலுமினியம் போன்ற உலோகங்கள் இருப்பதைக் காட்டியது. சராசரியாக நாளொன்றுக்கு இரண்டு…

‘மகிந்த அரசை வீட்டுக்கு அனுப்பும் தினத்திலேயே தமிழர்களுக்கு விமோசனம்’

மகிந்த தலைமையிலான இன்றைய அரசாங்கம் என்று வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றதோ அன்றைய தினத்தில்தான் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகம் என அனைத்துப் பகுதி மக்களுக்கும் விமோசனம் கிடைக்கும் என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். ஜனநாயக மக்கள் முன்னணி, நவ சமசமாஜ கட்சி மற்றும்…

சிங்கப்பூரில் மக்கள் தொகையை உயர்த்தும் திட்டத்துக்கு எதிர்ப்பு

சிங்கப்பூரில் மக்கள் தொகையை உயர்த்த அரசு வகுத்துள்ள திட்டத்துக்கு எதிராக நடைபெற்ற ஒரு அசாதாரணமான எதிர்ப்பு போராட்டத்தில் சுமார் 3000 பேர் பங்குபெற்றுள்ளனர். வெளிநாட்டினரைக் கொண்டு சிங்கப்பூரின் மக்கள் தொகையை உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. ஒரு நகரத்தை மட்டுமே நாடாகக் கொண்டுள்ள…

தாய்லாந்து துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் பலி

தாய்லாந்தின் தென்பகுதியில் பட்டாணி என்னும் கிராமத்தில் ஒரு ஆயுததாரி துப்பாக்கிப் பிரயோகம் செய்ததில் 3 வயது சிறுவன் ஒருவன் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர். கிராமக் கடை ஒன்றின் முன்பாக எழுந்தமானமாக துப்பாக்கிப் பிரயோகம் செய்த அந்த துப்பாக்கிதாரி, பின்னர் அங்கிருந்து மோட்டார் சைக்கிள் ஒன்றில் தப்பி ஓடியதாக…