தேசிய முன்னணி அறிக்கையில், ‘யானை’ மட்டும் கண்களுக்கு தெரியவில்லை

பிலிப் ரோட்ரிக்ஸ்- பாரிசான் நேஷனல், நாட்டின் சில முக்கியப் பிரச்சனைகளைச் சரிசெய்வதற்காக,  சக்கரை கலந்த அறிக்கையை வெளியிட்ட பிறகு, மார்தட்டும் நிலையில் உள்ளார்கள் . மக்களுக்கான ஒரு "புதிய ஒப்பந்தம்" என்று விவரிக்கப்படும் இந்த அறிக்கையானது, "நாட்டை வளர்ந்த நாடு நிலைக்குக் கொண்டு செல்வது" என்று விளம்பரப்படுத்தப்பட்ட பழைய கருப்பொருளையே மீண்டும் கொண்டுள்ளது. காரணம், மலேசியா இன்னும் சிக்கலில் சிக்கியிருப்பது போல் தெரிகிறது, மேலும்…

வாக்குரிமையைப் பயன் படுத்த ஊக்குவிக்கப்பட  வேண்டும். – மு. குலசேகரன்

மலேசியர்களின் வாக்குரிமையைப் பயன் படுத்த அனைத்து தரப்பினரும் ஊக்குவிக்கப்பட  வேண்டும். மக்களாட்சி என்பது வாக்குரிமையில் இருந்து தொடங்கிகிறது. புதிய அரசை அமைக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் அனைத்து மலேசியர்களும் இருக்கின்றோம். சிலருக்கு வெளியில் சென்று வாக்களிப்பதில் சிக்கல்கள்  இருக்கலாம். சிலர் வேலை முடிந்து நூற்றுக்கணக்கான கிலோ மீட்டர் பிரயாணம் செய்ய வேண்டிய கட்டாயமும் இருக்கலாம். சனிக்கிழமை…

அரசியல் அறிமுகம்: துளசி மனோகரன்

இராகவன் கருப்பையா -அரசியல்வாதியாகும் துடிப்பும் பொறுப்புணர்வும் கொண்ட இளம் வழக்கறிஞர் துளசி திவானி மனோகரன், அதை ஓர் அத்தியாவசிய மனித உரிமை உணர்வின் வெளிப்பாடாகும் என்கிறார். பேராக் மாநிலத்தின் புந்தோங் சட்டமன்றத் தொகுதியில் ஜ.செ.க.வைப் பிரதிநிதித்துக் களமிறங்கும் துளசி, தெலுக் இந்தான் தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மனோகரனின்…

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள்  – கி.சீலதாஸ்

பணத்திற்கு வாக்களிப்பதால்தான் ஊழல்வாதிகள் உருவாகிறார்கள். நாடு குட்டிச்சுவராகிறது. இலஞ்சம் வாங்காத நீதிபதியாக மக்கள் திகழ வேண்டும் என்கிறார் கட்டுரையாளர் -ஆர் ஜனநாயகம் என்றால் மக்களின் ஆட்சி என்று பொருள். தங்களை ஆளுபவர்களைத் தேர்ந்தெடுக்கும் உரிமையைக் கொண்டிருப்பவர்கள் மக்கள். அந்த உரிமையை மக்கள் பயன்படுத்தும்போது எந்த ஒரு தவறான போக்கை…

சார்ல்ஸ் சந்தியாகோவை நீக்கியது, கணபதிராவுக்கு பாதிப்பாகுமா?

இராகவன் கருப்பையா- தொடர்ந்தாற்போல் 3 தவணைகளுக்கு கிள்ளான் தொகுதியில் மக்களின் நாயகனாக விளங்கிய சார்ல்ஸ் சந்தியாகோ எதிர்வரும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டது தொர்பான சர்ச்சைகள் இன்னும் ஓயவில்லை. சந்தியாகோவிற்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகக் குமுறும் அத்தொகுதி மக்களின் கோபம் இன்னமும் தனியாத நிலையில் ஜ.செ.க.வுக்கு எதிர்பாராத அளவு அங்குப் பின்னடைவு…

தேர்தலில் இந்திய பெண்களின் பங்கெடுப்பு புறக்கணிக்கப்படுகிறது

இராகவன் கருப்பையா - நாடு தழுவிய நிலையில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள சூழலில் வேட்பாளர் அறிவிப்புப் படலம் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. பக்காத்தான் ஹராப்பானும் தேசியக் கூட்டணியும் மாநில வாரியாக தங்களுடைய வேட்பாளர்களை அறிவித்து வரும் வேளையில் பாரிசான் இன்னமும் மவுனமாகவே உள்ளது. எனினும் இதுவரையில்…

எத்தனை காலம் தான் ஏமாற்றுவார்? – கி.சீலதாஸ்

மலைக்கள்ளன் திரைப்படத்தைப் பார்க்காதவர்களோ அறியாதவர்களோ மிகக் குறைவாகத்தான் இருக்க வேண்டும். ஏறத்தாழ இரண்டு தலைமுறைகளுக்கு முன்பு வெளிவந்த திரைப்படம். கடந்த நூற்றாண்டில் தமிழ் இலக்கிய உலகில் மிகச் சிறந்ததாகச் சொல்லப்பட்ட, ஏற்றுக்கொள்ளப்பட்ட, போற்றப்பட்ட நாமக்கல் கவிஞர் எனப் புகழ்வாய்ந்த இராமலிங்க பிள்ளையின் படைப்பு தான் அது. இராமலிங்க பிள்ளை…

தேர்தல் காலங்களில் மட்டுமே தோசை சுடும் அரசியல்வாதிகள்

இராகவன் கருப்பையா- பிரதமர் சப்ரி தனது பெரா தொகுதியில் இந்தியர் ஒருவரின் இல்லத்தில் தோசை சுடுவதைப் போலவும் முறுக்குப் பிழிவதைப் போலவும் பாசாங்கு செய்தக் காட்சிகளை கடந்த வாரத்தில் பத்திரிகைகளிலும் சமூக வலைத் தலங்களிலும் காண முடிந்தது. இத்தகைய அரசியல் 'டிராமா'க்கள் மலேசியர்களைப் பொறுத்த வரையில் புதுமையான ஒன்றல்லை. காலங்காலமாக…

15வது பொதுத் தேர்தல் – தேசிய முன்னணிக்குக் கடுமையான பரீட்சை

கி. சீலதாஸ் -மலேசிய கூட்டரசின் பதினைந்தாம் பொதுத் தேர்தலை உடனடியாக நடத்திட வேண்டுமென அம்னோ தலைவர்கள் கடுமையாக வற்புறுத்துவதை அறிந்திருப்பீர்கள். இன்றையப் பிரதமர் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி அம்னோவின் துணைத்தலைவர், அம்னோவின் தலைவர் டத்தோ ஶ்ரீ சாஹிட் ஹமீடி பல குற்றவியல் வழக்குகளில் தொடர்புடையவர். ஒரு வழக்கில்…

இந்திய அமைப்புகளின் 15ஆம் பொதுத் தேர்தலுக்கான கோரிக்கைகள்

‘இந்தியர்கள் 25’ (I25) என்ற இந்திய சமூக அமைப்புகளின் கூட்டமைப்பு 15 -வது பொதுத்தேர்தலை முன்னிட்டு இந்திய சமூக மேம்பாட்டுக்கான தேர்தல் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். இந்த கோரிக்கை மனு அனைத்து அரசியல் தரப்பினர்களிடமும் சமர்பிக்கப்படும் என்று கூறுகிறார் இந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் குணசேகரன் கருப்பையா. “எங்களின் நோக்கம் இந்திய…

காற்றுள்ள போதே தூற்றவில்லை: நட்டாற்றில் வேதமூர்த்தியின் கட்சி

இராகவன் கருப்பையா - முன்னாள் ஒற்றுமைத்துறை அமைச்சர் வேதமூர்த்தி தொடக்கிய மக்கள் முற்போக்குக் கட்சி தற்போது இலக்கற்றுத் தவிப்பதாகத் தெரிகிறது. அக்கட்சியின் அரசியல் சித்தாந்தம் அறிவு பூர்வமாக இருந்தாலும் அதன் பின்னணியில் ஒரு மக்கள் விழிப்புணர்ச்சி நிலையும் அதன் உந்துதலுக்கு ஏற்ற காரணிகளும் வேண்டும். மலேசிய சோசியலிஸ்ட் கட்சி அடித்தளத்தில்…

தமிழை வளர்க்கும் மாணவர்களை உதாசீனப்படுத்துகிறது சமுதாயம்

இராகவன் கருப்பையா - இந்நாட்டில் தமிழ் மொழி தொடர்ந்து செழித்தோங்கி இருப்பதற்கு அயராது பாடுபடும் தரப்பினரில் உயர் கல்வி மாணவர்களின் பங்கு அளப்பரியது. ஆனால் அவர்களுக்கு ஊக்கமளித்து உற்சாகப்படுத்தக் கடப்பாடு கொண்டுள்ள நம் சமூகத்தின் பங்கு, குறிப்பாக அரசியல் தலைவர்களின் அலட்சியப் போக்கு பெருத்த ஏமாற்றமளிக்கும் வகையில் உள்ளது. மலாயா…

தேசிய நீரோட்டத்தில் மீண்டும் இனத்துவேசம்!

இராகவன் கருப்பையா - ஒரு நாட்டின் வரவு செலவுத்திட்டம் இன ரீதியாக வரையப்படுவது மலேசியாவில் மட்டுமே நிகழும் ஒரு அதிசயம் என பொருளாதார வல்லுநர்கள் அண்மைய காலமாக கருத்துரைத்து வருவதில் எவ்வளவு உண்மை இருக்கிறது என்பதை தெள்ளத் தெளிவாகக் காண முடிகிறது. 'சத்து மலேசியா', 'கெலுவார்கா மலேசியா', போன்ற…

இந்தியர்களுக்கென்றே ஒரு ‘லோ யாட் 3’ சாத்தியமாகுமா?

இராகவன் கருப்பையா - சுமார் 7 ஆண்டுகளுக்கு முன், தலைநகர் புக்கிட் பிந்தாங் பகுதியில அமைந்துள்ள 'லோ யாட்' பேரங்காடியில் நிகழ்ந்த ஒரு கசப்பான சம்பவத்தை நம்மில் யாரும் மறந்திருக்க வாய்ப்பில்லை. அவ்வளாகத்தில் மின்னியல் பொருள்களை வியாபாரம் செய்யும் ஒரு கடையில் விவேகக் கைத் தொலைபேசி ஒன்றைத் திருடியதற்காக…

வெள்ளத்திலும் தேர்தலா? – முற்றிலும் அறிவிலிதனம்!

இராகவன் கருப்பையா - வெள்ளம் வந்தால் என்ன, மக்கள் எக்கேடு கெட்டால்தான் என்ன, பொதுத் தேர்தலை நடத்தியே ஆகவேண்டும் என ஒற்றைக்காலில் நிற்கும் சில சுயநல  அரசியல்வாதிகளின் அறிவிலித்தனத்தால் மக்கள் கொதிப்படைந்துள்ளனர். கடந்த ஆண்டு இறுதியில் நாட்டை உலுக்கிய வரலாறு காணாத வெள்ளம் மக்கள் மனங்களிலிருந்து  இன்னமும் அகலவில்லை. 50க்கும்…

அரசு அறிவித்த உதவித்தொகை உருப்படியாகச் சென்று சேருமா?

இராகவன் கருப்பையா - இந்தியச் சமூகத்தின் மேம்பாட்டுக்குப் பல்வேறு முன்னெடுப்புகளை அரசாங்கம் அங்கீகரித்துள்ளது எனப் பிரதமர் சப்ரி யாக்கொப் கடந்த வாரம் செய்த அறிவிப்பு நம்மில் எத்தனை பேரை உற்சாகப்படுத்தியிருக்கும் என்பது ஒரு கேள்விக்குறி. வறுமையில் வாடுவோரின் இன்னல்களைத் துடைத்தொழிப்பதற்கும் இதர வளர்ச்சித் திட்டங்களுக்கும் மித்ராவின் வழி ஒதுக்கப்பட்டுள்ள 100…

ஊழலை விரட்டுவோம், நியாயப்படுதுவதை நிறுத்துவோம் – பேராக் சுல்தான்

"ஊழல்" மற்றும் "போலித்தனம்" ஆகிய சொற்களை மலாய் அரசியலுடன் இணைத்து தனது புத்தகத்திற்கு பெயரிடும் ஒரு ஆசிரியரின் நடவடிக்கை தைரியமானது என்று பேராக் சுல்தான் நஸ்ரின் முய்சுதீன் ஷா கூறுகிறார். பேராக் ஆட்சியாளர் மலாய் அரசியலில் ஊழல் மற்றும் போலித்தனம் என்று தவறுகளை அம்பலப்படுத்த முயலும் போது ஒருவரின்…

திருமண விருந்தும் – தர்மசங்கடமும் – இராகவன் கருப்பையா

நம் குடும்பத்தில் ஒரு திருமண வைபவம் நடைபெறும் போது, அந்நிகழ்ச்சிக்கு நிறைய பேர் வர வேண்டும், ஆரவாரத்துடன் மகிழ்ச்சி ததும்ப அந்நிகழ்வு அமைய வேண்டும் என்று நாம் எதிர் பார்ப்பது இயல்பான ஒன்றுதான். முன்பெல்லாம் உறவினர்கள், நண்பர்கள் ஆகிய எல்லாருடைய இல்லங்களையும் அதிகச் சிரத்தை எடுத்துத் தேடிச் சென்று…

மலேசியாவின் எதிர்காலம் –  கி.சீலதாஸ்

அறுபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு, 31.8.1957ஆம் நாள், அப்போது மலாயாவில் வாழ்ந்த எல்லா இன மக்களும் இன, சமய, மொழி, கலாச்சார வேறுபாடுகளைக் களைந்து ஏற்றத்தாழ்வு மனப்பான்மைக்கு இடம் தராது தோளோடு தோள் நின்று, கூட்டொருமையோடு சூழ்ச்சியான முறைகளால் பிற நாடுகளை ஆக்கிரமித்து அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றி, மக்களை அடக்கி,…

சாமானியரைக் கவனித்த சாமிவேலு, சமுதாயத்தை எவ்வாறு கவனித்தார்!

இராகவன் கருப்பையா - ம.இ.கா.வின் முன்னாள் தலைவர் மறைந்த சாமிவேலு அக்கட்சியின் கடந்த காலத் தலைவர்களிலேயே தனித்துவம் வாய்ந்த ஒருவர் என்பதில் எவ்வித ஐயப்பாடும் இல்லை. தனது 31 ஆண்டுகாலத் தலைமைத்துவத்தில் நிறைய பேருக்குத் தனிப்பட்ட முறையில் உதவிகளை வாரி வழங்கியுள்ளார் என்பதும் எல்லாருக்கும் தெரியும். ஆனால் அவருடைய…

ஹிண்ட்ராப் பேரணி உருவாக்கமும், சாமிவேலுவின் சரிவும்

இராகவன் கருப்பையா- கடந்த 2007ஆம் வருஷம் இந்நாட்டு இந்தியர்களின் வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய ஒரு ஆண்டாகும். ஏனெனில் அவ்வாண்டின் பிற்பகுதியில் நிகழ்ந்த இரு சம்பவங்கள் தெரிந்தோ தெரியாமலோ நம் சமூகத்தைச் சேர்ந்த பலருடைய வாழ்க்கையை நிரந்தரமாக மாற்றியமைத்தது. தீபாவளிப் பண்டிகைக்கு இன்னும் 3 நாள்களே இருந்த வேளையில், சிலாங்கூரின் கிளேங் மாவட்டத்தில் உள்ள பாடாங் ஜாவா பகுதியில் அமைந்திருந்த மாரியம்மன் ஆலயம்…

நஜீப்பை மாமன்னர் மன்னிப்பாரா? – கி.சீலதாஸ்

நஜீப் ரசாக் பிரதமராக இருந்த காலத்தில் நிதி அமைச்சர் பதவியையும் தன் வசமே வைத்துக் கொண்டார். அச்சமயம் அவர் நம்பிக்கை மோசடி செய்தார் என்று உயர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டு, குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டு பன்னிரண்டு ஆண்டு காலம் சிறைத்தண்டனையும், இருநூற்றுப்பத்து மில்லியன் ரிங்கிட் அபராதமும் விதிக்கப்பட்டது. அவரின்…

இரும்புக் கரங்களில் ம.இ.கா: சாமிவேலு ஒரு சகாப்தம்தான்

இராகவன் கருப்பையா - தனது 86ஆவது வயதில் இயற்கை எய்திய முன்னால் ம.இ.கா. தலைவர் சாமிவேலு நம் சமுதாய மேம்பாட்டிற்குச் செய்த, செய்யாத சேவைகளை விட 31 ஆண்டுகளாக இரும்புக் கரங்களைக் கொண்டு எவ்வாறு கட்சியை வழிநடத்தினார் மற்றும் நாடாளுமன்றத்தில் எப்படிப் பேசுவார்  என்பதை வைத்தே பலரும் அவரை…