கேஎல் மக்கள்தொகை இரண்டு மில்லியன்; எலிகள் 8 மில்லியன்

கோலாலும்பூரில் ஒரு மனிதருக்கு நான்கு எலிகள் வீதம் இருக்கின்றன. எலிகளால் ஏற்படும் சுகாதாரக் கேடுகளை விளக்கும் இயக்கத்தைத் தொடக்கிவைத்த மாநகர் மேயர் அஹமட் பீசல் தாலிப் இதனைத் தெரிவித்தார். கோலாலும்பூரில் இரண்டு மில்லியன் மக்களுடன் எட்டு மில்லியன் எலிகளும் வாழ்ந்து கொண்டிருக்கின்றன என டிபிகேஎல் மதிப்பிட்டிருப்பதாக பெரித்தா ஹரியான்…

அம்னோ இளைஞர் தலைவர் பதவிக்கு நால்வர் போட்டி

அம்னோ இளைஞர் பகுதித் தலைவர் பதவிக்கான தேர்தல் நான்கு-முனை போட்டியாக உருவெடுத்துள்ளது. அதன் இப்போதைய தலைவரான இளைஞர், விளையாட்டுத் துறை அமைச்சர் கைரி ஜமாலுடின் அபு பக்காரை எதிர்க்கப் போவதாக முன்னாள் அம்னோ தலைமைச் செயலாளரான சனுசி ஜூனிட்டின் புதல்வர் அக்ராம்ஷியா உபைடா சனுசி ஏற்கனவே கூறியிருந்தார், இப்போது…

டோனி புவா: நஜிப்பின் நிஜ முகம் வெளிப்பட்டுள்ளது

நஜிப் அப்துல் ரசாக்கை, பிஎன் ஆதரவாளர்கள் “சீர்திருத்தவாதி” என்று போற்றிப் புகழ்ந்தார்கள். எதிர்த்தரப்பு ஆதரவாளர்கள்கூட அம்னோவில் உள்ள சுறாமீன்கள் கூட்டத்தில் அவர் சாதுப் பிராணி, ஒரு மிதவாதி,  என்றே நினைத்தார்கள். ஆனால், அடுத்தடுத்து வந்த இரண்டு அறிவிப்புகள் அவருடைய உண்மை முகத்தைத் தோலுரித்துக் காட்டிக் கொடுத்து விட்டன என்கிறார்…

லேனாவுக்கு எதிரான குற்றச்சாட்டை அரசாங்கம் கைவிட வேண்டும்

-மு. குலசேகரன், நாடாளுமன்ற உறுப்பினர், செப்டெம்பர் 20, 2013. கோமாஸ் என்ற மலேசிய அரசு சார்பற்ற அமைப்பின் அதிகாரி லேனா ஹென்றி 2002ம் ஆண்டு தணிக்கைச் சட்டத்தின் 6 (1)(B) பிரிவின் கீழ் , தணிக்கை செய்யப்படாத காணொளி  ஒன்றிணை திரையிட்டதிற்காக கைது செய்யப்பட்டு  மாஜிஸ்ட்ரெட் நீதி மன்றத்தில்…

பினாங்கு-கெடா நீர்ப் பிரச்னை நாசி காண்டா விருந்தில் பேசித் தீர்க்கப்படும்

கெடாவிலிருந்து பெறப்படும் நீருக்கு பினாங்கு கட்டணம் செலுத்த  வேண்டுமா, வேண்டாமா என்று தொடர்கின்ற வாதம்  விரைவில் முடிவுக்கு வரலாம். நாசி காண்டா சாப்பிட்டுக்கொண்டே அவ்விவகாரத்தைப் பேசித் தீர்க்கலாம் என பினாங்கு முதலமைச்சர், கெடா மந்திரி புசார் முகிரிஸ் மகாதிருக்கு அழைப்பு விடுத்துள்ளார். நாசி காண்டா உணவகத்தை முக்ரிஸே தேர்ந்தெடுக்கலாம்…

69 விழுக்காட்டு வாக்காளர்கள் பிஎன்னும் பக்காத்தானும் இணக்கம் காண்பதை விரும்புகிறார்கள்

மலேசிய வாக்காளர்கள் பெரும்பகுதியினருக்கு அரசியல் சர்ச்சைகளைக் கேட்டுக் கேட்டுப் புளித்துப் போய்விட்டது. அவர்கள் பிஎன்னும் பக்காத்தானும் தேசிய அளவில் முரண்பாடுகளை மறந்து இணக்கம் காண வேண்டும் என்பதையே விரும்புகிறார்கள் என மலாயாப் பல்கலைக்கழக ஜனநாயக, தேர்தல் ஆணையம் (Umcedel) கூறுகிறது. அம்மையம் 1,546 வாக்காளர்களிடம் நடத்திய ஆய்வு ஒன்றில், …

பக்காத்தான் கேட்கிறது: Apa lagi Umno mahu?

மாற்றரசுக் கட்சியுடன் பேச்சு நடத்தத் தொடர்ந்து மறுத்துவரும் பிஎன் நிலை குறித்து வியப்புத் தெரிவித்த அதன் தலைவர் அன்வார் இப்ராகிம், அம்னோவுக்குச் சொந்தமான நாளேடான உத்துசான் மலேசியா முன்பு கேட்ட கேள்வியை இப்போது திருப்பிப் போட்டார் : “Apa lagi Umno mahu? (அம்னோவுக்கு வேறு என்னதான் வேண்டும்?)”.…

வங்காள தேசிகள் வந்ததாக உறுதியாகக் கூற முடியுமா? தெங்கு அட்னானுக்கு…

பிஎன் தலைமைச் செயலாளர் தெங்கு அட்னான் தெங்கு மன்சூர் இன்று காலையில் சொன்னதைப் பார்க்கும்ப்போது புத்ராஜெயாவுக்கு வங்காள தேசி வாக்காளர்கள் வந்ததை ஒப்புக்கொள்வதுபோல் இருக்கிறது என்று பெர்சே 2.0 இணைத் தலைவர் அம்பிகா ஸ்ரீநிவாசன் கூறினார். மே 5 தேர்தலின்போது பெர்சேதான் வங்காள தேசிகளை புத்ரா ஜெயாவுக்கு அழைத்து…

அம்னோ சாகிறதா? மகாதிரின் கருத்துக்கு நஜிப் மறுப்பு

அம்னோ செத்துக்கொண்டிருக்கிறது என்று அக்கட்சியின் முன்னாள் தலைவர் டாக்டர் மகாதிர் முகம்மட், கட்சி  கூறியுள்ளதை இந்நாள் தலைவர் நஜிப் அப்துல் ரசாக் மறுக்கிறார். 2008 பொதுத் தேர்தலில் 79 இடங்களை மட்டுமே வென்ற அக்கட்சி 2013-இல் 88 இடங்களை வென்றிருப்பதை நஜிப் சுட்டிக்காட்டினார். “பிஎன்னின் அரணாக அம்னோ விளங்குகிறது”,…

பிகேஆர் வேட்பாளர்: வாக்களிப்பு மையத்தின் தலைவர் மஇகா உறுப்பினர்

தம் தொகுதியில் வாக்களிப்பு மையத்தின் தலைவராக இருந்தவர் மஇகா தலைவிகளில் ஒருவர் என பிகேஆர்  வேட்பாளர்  ஒருவர் கூறினார். இன்று, 13வது பொதுத் தேர்தல் மீதான மக்கள் நடுவர் மன்றத்தில் சாட்சியமளித்த தாப்பா தொகுதி பிகேஆர் வேட்பாளர்  கே.வசந்தகுமார் இவ்வாறு தெரிவித்தார். “அவர் தாப்பா தொகுதி மஇகா மகளிர்…

‘சுத்தமற்ற’ பெர்சே நடத்தும் நடுவர் மன்றத்துக்கு தெங்கு அட்னான் போக…

பிஎன் தலைமைச் செயலாளர் தெங்கு அட்னான் தெங்கு மன்சூர், பெர்சே ஏற்பாடு செய்துள்ள நடுவர் மன்றத்துக்குச்  செல்லப்போவதில்லை என அறிவித்துள்ளார். தேர்தல் சீரமைப்பைக் கோரும் அந்த என்ஜிஓ-வின் நடவடிக்கை ‘bersih’-ஆக (சுத்தமாக) இல்லை என்றாரவர். பெர்சே, புத்ரா ஜெயா நாடாளுமன்றத் தொகுதியில்   வெளிநாட்டவரை வாக்களிக்க அனுப்பி வைத்தது தமக்குத்…

மனமுடைந்த சஞ்சீவன் மைவாட்ச்-இலிருந்து விலக முடிவு

மரணத்தின் விளிம்புவரை சென்று மீண்டுள்ள மைவாட்ச் தலைவர் ஆர்.ஸ்ரீசஞ்சீவன்,  அந்தக் குற்ற-எதிர்ப்புக் கண்காணிப்பு அமைப்பிலிருந்து விலகுவதற்கு ஆயத்தமாகி வருகிறார். “மைவாட்ச் தானாகவே செத்துப்போகும் என நினைக்கிறேன். நாட்டுப்பற்றுள்ள மலேசியன் என்ற முறையில்  என் பங்கை நான் செய்தேன்.  அதற்காக அடிஉதை பட்டேன். சுடப்பட்டேன்”,  என சஞ்சீவன் நேர்காணல் ஒன்றில்…

அன்வார்: மகாதிர்தான் முழுக் காரணம் என்று சொல்வதற்கில்லை

அன்வார் இப்ராகிம் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர்மீது எவ்வளவு பகையுணர்வு கொண்டவர் என்பது ஊரறிந்த விசயம்தான்.  ஆனாலும் ,  அவர் சாபாவில் வெளிநாட்டவருக்குக் குடியுரிமை வழங்கப்பட்ட விவகாரத்தில் மகாதிரைத் தற்காத்து பேசினார். “ஊடகங்களில் எல்லாவற்றுக்கும் மகாதிர்தான் காரணம் என்று பழி போடுகிறார்கள். அது சரியல்ல. “அது அவருக்கு முன்னிருந்தே செயல்பட்டுக்…

வாருங்கள் விவாதம் செய்யலாம்: கைரிக்கு சுரேந்திரன் அழைப்பு

பிகேஆர் உதவித் தலைவர் என்.சுரேந்திரன், அண்மையில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்  அறிவித்த பூமிபுத்ரா பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தின்மீது அம்னோ இளைஞர் தலைவர் கைரி ஜமாலுடினுடன் விவாதம் நடத்த விரும்புகிறார். “வறுமை ஒழிப்புப் பிரச்னைக்குத் தீர்வுகாண தேவையின் அடிப்படையில் முயல்வது நல்லதா, இன அடிப்படையில் முயல்வது நல்லதா என்பதன்மீது…

பூமிகளுக்கு தனி வங்கி தேவை

பூமிபுத்ராக்களுக்கு தனி வங்கி ஒன்றை அமைக்க வேண்டும் என மலேசிய மலாய் வணிகர் சங்கம் (டிபிஎம்எம்) கோரிக்கை விடுத்துள்ளது. அரசாங்கம் அண்மையில் அறிவித்த பூமிபுத்ராக்களின் பொருளாதார மேம்பாட்டுக்கான கொள்கையில் நடுத்தரத் தொழில் முனைவர்களுக்கு உதவும் திட்டம் இல்லை என்பதால் அப்படி ஒரு வங்கி தேவைப்படுவதாக டிபிஎம்எம் தலைவர் சைட்…

நாடற்ற மூவருக்கு முடிவில் மைகார்ட் கிடைத்தது

குடியுரிமை மீது மலேசியாவில் பிறந்த மூன்று இந்தியர்கள் தொடுத்த வழக்கு இன்று கோலாலும்பூர் உயர் நீதிமன்றத்தில் ஒரு நல்ல முடிவைக் கண்டது. வழக்கில் சம்பந்தப்பட்ட இரு தரப்பினரும் ஒரு சமரசத்துக்கு வந்திருப்பதாக நீதிபதி ஸகேகா யூசுப்பிடம் தெரிவித்துக்கொண்டனர்.   தேசிய பதிவுத்துறை (என்ஆர்டி) செப்டம்பர் 6-இல், எஸ்.லட்சுமிக்கும் அவரின்…

உதவித் தொகை குறைப்பு பணவீக்கத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தாது என்கிறது…

எரிபொருளுக்கான உதவித் தொகை குறைக்கப்பட்டதால் எரிபொருள் விலை உயர்ந்திருந்தாலும் நாட்டின் பணவீக்கத்தில் அது பெருந் தாக்கத்தை ஏற்படுத்தாது எனக் கருவூலத் தலைமைச் செயலாளர் முகம்மட் இர்வான் செரிகார் அப்துல்லா கூறுகிறார். எரிபொருள் விலை உயர்வால் பணவீக்க உயர்வு  குறைந்த விகிதத்தில்தான் இருக்கும் என்பது  நிதி அமைச்சின் கணிப்பு என்றாரவர். …

‘மேல்முறையீட்டில் ஷாபி அரசுதரப்பு வழக்குரைஞராக வாதாடலாம்’

இரண்டாவது குதப்புணர்ச்சி வழக்கில் அன்வார் இப்ராகிம் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து செய்யப்படும் மேல்முறையீட்டில் வழக்குரைஞர் முகம்மட் ஷாபி அப்துல்லா அரசுத்தரப்பைப் பிரதிநிதிக்கலாம்  என முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மூவரடங்கிய நீதிபதிகள் குழுவுக்குத் தலைமை வகித்த நீதிபதி ரம்லி அலி, தீர்ப்பு ஏகமனதானது என்றார். அக்குழுவில் இருந்த மற்ற இருவர், நீதிபதி…

பிகேஆர், டிஏபி ஆகியவற்றுடன் ஒத்துழைப்பதால் பாஸ் நன்மை அடைந்துள்ளது

பாஸ் பக்காத்தான் ரக்யாட்டில்  இருப்பதை ஆலோசிக்க வேண்டும் என்று ஏற்கனவே முன்மொழிந்திருந்த அக் கட்சியின் டேவான் உலாமா, இப்போது அக்கருத்தை  மறுபரிசீலனை செய்வதாகக் கூறியிருப்பதை சிலாங்கூர் பாஸ் வரவேற்றுள்ளது. “பிகேஆருடனும் டிஏபி-யுடனும் ஒத்துழைப்பதால் பாஸுக்கு நட்டம் ஏதுமில்லை. பக்காத்தானில் இருப்பதால் பாஸ் நிறைய பயனடைந்துள்ளது”, என மாநில ஆணையர்…

இசி, வெளிநாட்டு வாக்காளர்கள் என்ற சந்தேகத்தைத் தீர்த்துவைக்க மறுத்தது: எம்பி…

இன்று பெர்சே தேர்தல் நடுவர் மன்றத்தில் சாட்சியமளித்த கிள்ளான் எம்பி சார்ல்ஸ் சந்தியாகு, வாக்களிப்பு நாளில் ஒரு பேருந்து காணப்பட்ட வெளிநாட்டுத் தொழிலாளர்கள் ஆவி வாக்காளர்களாக இருக்கலாம் என்று மக்களுக்கு ஏற்பட்ட சந்தேகத்தைத் தீர்த்து வைக்க தேர்தல் ஆணையம்(இசி) மறுத்துவிட்டதாகக் கூறினார். “அவர்கள் வாக்களித்தனரா என்பதைக் கண்டறிந்து சொல்ல…

அசிஸ் பாரி: சின் பெங்கிற்கு அளித்த வாக்குப்படி நடந்து கொள்ளுங்கள்

அளித்த வாக்குறுதிகளை மதியுங்கள். கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சின் பெங்கின் மரணத்தை தங்களுடைய அரசியல் நோக்கத்திற்காக பயன்படுத்த முயற்சிக்க வேண்டாம் என்று அரசமைப்புச் சட்ட நிபுணர் இன்று அம்னோ-பாரிசான் அரசாங்கத்திற்கு அறிவுரை வழங்கினார். தமது சுடலை நீறை மலேசியாவில் அடக்கம் செய்ய வேண்டும் என்ற சின் பெங்கின் இறுதி…

ஹாடி: பூமிபுத்ராக்கள்மீது மட்டும் கவனம் செலுத்துவது சரியல்ல

பொருளாதார உதவியை பூமிபுத்ராக்களுக்கு மட்டும் கொடுப்பது முறையல்ல, அது எல்லா இனங்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட  வேண்டும் என்கிறார் பாஸ் தலைவர் ஹாடி ஆவாங். “பூமிபுத்ராக்களின் உரிமை என்ற பெயரில் உதவியை வழங்கிவிட்டு மற்ற இனங்களை விட்டுவிடுவது சரியல்ல”, என இன்று பாஸ் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் ஹாடி கூறினார்.…

வெளியார்தான் கேண்டீன் விவகாரத்தைப் பெரிதாக வளர்த்து விட்டார்கள்: இட்ரிஸ் குற்றச்சாட்டு

ஸ்ரீபிரிஸ்தானாவில் குளியலறை கேண்டீனாக பயன்படுத்தப்பட்ட விவகாரம் முடியும் நிலையில் இருந்த வேளையில், அதில் சம்பந்தப்படாதவர்கள் அதை ஊதி ஊதி பெரிதாக்கி விட்டார்கள்  என கல்வி அமைச்சர் II இட்ரிஸ் ஜூஸொ இன்று  குற்றம் சாட்டினார். அவர் இன்று அப்பள்ளிக்கு திடீர் வருகை மேற்கொண்டார். “பெற்றோர் உண்மைநிலையைப் புரிந்துகொண்டு  அதைப்…