தியன், தாம்ரின், ஹேரிஸ் மீண்டும் கைது

பிகேஆர் உதவித் தலைவர் தியன் சுவா, பாஸ் உறுப்பினர் தாம்ரின் அப்துல் காஃபார் மற்று எபியு தலைவர் ஹேரிஸ் இப்ராகிம் ஆகியோரை போலீசார் மீண்டும் கைது செய்துள்ளனர். தாம் கைது செய்யப்பட்டதை உறுதிப்படுத்திய தாம்ரின், போலீசார் தமது வீட்டிலிருப்பதாகவும், அவர்கள் இரவு மணி 7.5 க்கு தமது வீட்டிற்கு…

‘வாக்காளர் பட்டியலில் வாக்காளர் படத்தைச் சேர்க்க வேண்டும்’

வாக்களிக்க வருவோரின் அடையாளத்தை உறுதிப்படுத்திக்கொள்ள வாக்காளர்களின் படங்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக்கொள்வது பற்றி தேர்தல் ஆணையம் (இசி) அலோசிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. சாபாவில் சட்டவிரோதக் குடியேறிகள்மீது நடைபெறும் அரச ஆணைய விசாரணையில் விசாரணையை நடத்தும் அதிகாரி மனோஜ் குருப் (இடம்) இந்த ஆலோசனையை முன்வைத்தார். இது, ஒரே…

என்ஜிஓ: பேரணி அரசாங்கத்தைக் கவிழ்க்கும் முயற்சி அல்ல

13வது பொதுத் தேர்தலை அடுத்து தொடர்ச்சியாக பேரணிகள் நடத்தப்படுவது அரசாங்கத்தைக் கவிழ்க்கும் முயற்சி அல்ல என்று  ஒரு என்ஜிஓ-வான சுதந்திரத்துக்கான வழக்குரைஞர்கள் அமைப்பு கூறியது. மக்கள் தங்களுக்கும் அதிகாரிகளுக்குமிடையில் தொடர்பில் பெரிய இடைவெளி நிலவுவதை உணர்ந்து பேரணிகள் மூலமாக அரசாங்கத்துக்குத் தங்கள் எதிர்ப்பைக் காட்டிக்கொள்கிறார்கள் என்று அதன் பேச்சாளர் …

தேர்தல் மோசடி தொடர்பில் ரபிஸியைச் சந்திக்க இசி தயார்

மே 5 பொதுத்தேர்தலில் மோசடி நிகழ்ந்திருப்பதாக புகார் செய்யும் அல்லது அதற்கான ஆதாரங்களைக் காண்பிக்கும் தரப்பு எதுவானாலும், அது பிகேஆர் வியூக இயக்குனர் ரபிஸி ரம்லியாக இருந்தாலும்கூட அவர்களைச் சந்திக்க தேர்தல் ஆணையம் (இசி) தயாராக உள்ளது. ஆணையம் அதன் கடமையைச் செய்யவில்லை என்ற தப்பான எண்ணம் ஏற்பட்டு…

ஐந்தாண்டுகளில் அரசாங்கம் கார் விலைகளைக் குறைக்கும்

பிஎன் தேர்தல் கொள்கை அறிக்கையில் வாக்குறுதி அளித்ததுபோல், இன்னும் ஐந்தாண்டுகளில் அரசாங்கம் கார்களின் விலைகளை 20-இலிருந்து 30 விழுக்காடுவரை குறைக்கும் என அனைத்துலக வாணிக, தொழில் அமைச்சர் முஸ்தபா முகம்மட்  தெரிவித்துள்ளார். . தம் அமைச்சின் மாதாந்திரக் கூட்டத்தில் உரையாற்றிய முஸ்தபா, “ஒரே முறையில் கார் விலைகள் குறைக்கப்படாது”,…

தர்மேந்திரன் இறப்பு தொடர்பில் போலீஸ்காரர்கள் விசாரிக்கப்படுகிறார்கள்

போலீஸ் காவலில் இருந்த என். தர்மேந்திரனின் இறப்பு மீதான புலன் விசாரணை தொடர்பில் போலீஸ் அதிகாரிகள் உள்பட பலர் விசாரிக்கப்பட்டு வருகின்றனர். விசாரணையில் போலீசார் எதையும் விட்டு வைக்கமாட்டார்கள், எதிலும் சமரசம் செய்துகொள்ள மாட்டார்கள் என புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) துணை இயக்குனர் ஹாடி…

இரண்டு தடவை வாக்களித்த பாகிஸ்தானியர் ; வாக்காளர் பட்டியலில் பெயர்…

சந்தேகத்துக்குரிய வழியில் மலேசிய அடையாள அட்டையைப் பெற்ற பாகிஸ்தான் குடிமகன் ஒருவர், மலேசிய பொதுத் தேர்தல்களில் இரண்டு தடவை வாக்களித்துள்ளாராம். அவருடைய பெயர் இன்னமும் வாக்காளர் பட்டியலில் உள்ளதாம். 1992-இல், கோட்டா கினாபாலுவில் ஒரு உணவகத்தில் அடையாள அட்டையைப் பெற்றதாகக் கூறிய அப்துல் லத்திப் ஜுமானி, சிலாங்கூரில் அம்பாங்கிலும்…

ஆட்சிக்குழுப் பட்டியலுக்கு சிலாங்கூர் சுல்தான் ஒப்புதல்

சிலாங்கூரில் 2013-18 தவணைக்கான மாநில ஆட்சிக்குழு பட்டியலுக்கு சிலாங்கூர் சுல்தான் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ்ஷா ஒப்புதல்  கொடுத்திருப்பதாக  மந்திரி புசார்  அப்துல் காலிட் இப்ராகிம் இன்று அறிவித்தார். இதனை அடுத்து  நாளைக் காலை மணி 9.30க்கு மாநில ஆட்சிக்குழு  உறுப்பினர்கள்   கிள்ளான் இஸ்தானா ஆலம் ஷாவில் பதவி…

‘சிலர் எல்லைமீற விரும்பினாலும் பேரணிகள் அமைதியாகவே நடக்கும்’

கண்டனக் கூட்டங்களில் கலந்துகொள்ளும் சிலர் எல்லைமீறிச் செல்ல முடியாமல் இருப்பது குறித்து வெறுப்புற்றிருந்தாலும் தேர்தல் மோசடிக்கு எதிராக நடத்தப்படும் பேரணிகள் எப்போதும் அமைதிப் பேரணிகளாகவே இருக்க வேண்டும் என விரும்புகிறார் பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம். “நாம் (பேரணிகளில்) ஊர்வலம் செல்லப்போவதில்லை என அறிவித்தவுடன் ஏமாற்றமடைந்த சில…

மின்தடை ஏற்பட்ட மேலும் ஒரு இடம் பற்றி பிகேஆர் போலீசில்…

பொதுத் தேர்தலின்போது கெடாவில் ஒரு வாக்களிப்பு மையத்தில் நிகழ்ந்த மின் தடை குறித்து போலீஸில் புகார் செய்யப்பட்டிருப்பதாக  பிகேஆர்  இயக்குனர் ரபிஸி ரம்லி இன்று தெரிவித்தார். கெடா, சிடிமில் வாக்குகள் எண்ணப்பட்டுக் கொண்டிருந்தபோது மின் தடை ஏற்பட்டதாக  ரபிஸி கூறினார். அது கூலிம் பண்டார் நாடளுமன்றத் தொகுதியில் உள்ள…

கேஎல்ஐஏ2 தாமதம்: எம்ஏஎச்பி ‘பொய்யர்கள்’ என பக்காத்தான் குற்றச்சாட்டு

புதிய குறைந்த கட்டண விமானப் பயண முனையமான கேஎல்ஐஏ2-இன் கட்டுமானச் செலவையும் அது ஏன் கட்டிமுடிக்கத் தாமதமாகிறது என்பதையும் போக்குவரத்து அமைச்சும் மலேசிய விமான நிலையங்கள் ஹோல்டிங் பெர்ஹாட் (எம்ஏஎச்பி) டும் தெரியப்படுத்த வேண்டும் என பக்காத்தான் ரக்யாட் கோரியுள்ளது மார்ச் மாதம் வெளியிட்ட அறிக்கையில் அம்முனையம் இவ்வாண்டு…

பேரணி தொடர்பில் பக்காத்தான் தலைவர்கள் நால்வர்மீது குற்றச்சாட்டு

பக்காத்தான் தலைவர்கள் நால்வர்- பேராக்கில் இருவர், நெகிரி செம்பிலானில் ஒருவர், பினாங்கில் ஒருவர்- மாற்றரசுக் கட்சி பேரணி  நடத்தியதன் தொடர்பில் அந்தந்த மாநில செஷன்ஸ் நீதிமன்றங்களில் நிறுத்தப்பட்டனர்.  பேரணி பற்றி 10 நாள்களுக்கு முன்கூட்டியே போலீசுக்குத் தகவல் தெரிவிக்கவில்லை என 2012ஆம் அமைதிப் பேரணி சட்ட(பிஏஏ) த்தின்கீழ் அவர்கள்மீது…

யாஸிட் மீண்டும் கைது : காரணம் தெரியாமல் மனைவி தவிப்பு

2012-ஆம் ஆண்டு பாதுகாப்புச் சட்டத்தின்கீழ்(சொஸ்மா) சுமத்தப்பட்ட குற்றச்சாட்டிலிருந்து விடுதலை செய்யப்பட்ட யாஸிட் சுபாட், ஏழு நாள் கழித்து மீண்டும் கைதுசெய்யப்பட்டுள்ளார். இதன் தொடர்பில் அவரின் மனைவி சோமல் முகம்மட்டைத்  தொடர்புகொண்டு விசாரித்தபோது கைது செய்யப்பட்டதற்கான காரணம் அவருக்கும் தெரியவில்லை. “போலீசார் காலை எட்டு மணிக்கு வீட்டுக்கு வந்து புக்கிட்…

போலீஸ் காவல் மரணங்கள் குறித்து வேதா மெளனம் காப்பது ஏன்?,…

போலீஸ் காவலில் இருக்கும்போது நேரும் இறப்புகள் குறித்து துணை அமைச்சர் பி. வேதமூர்த்தி “வாயை இறுக்கமாக மூடிக்கொண்டிருப்பது” அந்த வகை மரணங்கள் நிற்க வேண்டும் என்ற இண்ட்ராபின் கோரிக்கை கைவிடப்பட்டிருக்கிறது என்பதைத்தான் காண்பிக்கிறது. ஈப்போ பாராட் டிஏபி எம்பி எம்.குலசேகரன் இவ்வாறு சாடியுள்ளார். என். தர்மேந்திரன், 31,  மே…

வேதமூர்த்திக்கு வேண்டும் நாவடக்கம்!

-மு. குலசேகரன், நாடாளுமன்ற உறுப்பினர், மே 26, 2013. புதிதாக துணை அமைச்சர் பொறுப்பேற்றிருக்கும் வேதமூர்த்திக்கு நாவடக்கம் தேவை என்பது தெரிய வேண்டிய ஒன்று. அவர் மட்டுமே இந்தியர்களின் தீர்க்கதரிசியெனவும், அவர்களின் உரிமைகளையும்,, நலன்களையும் தேவைகளையும் இரட்சிக்க வந்த இறை தூதர் என்ற  கற்பனையில் மிதந்து கொண்டிருக்கின்றார். அவருக்கு…

டாத்தாரான் பிஜேயில் மக்கள் வெள்ளம் கரைபுரண்டோடியது

நாடுதழுவிய அளவில் வெற்றிகரமாக நடத்தப்பட்ட எட்டு தொடர் வரிசை கறுப்பு 505 பேரணியின் ஒன்பதாவதும் இறுதியுமான "மக்கள் கூட்டம்" என்று பெயர் இடப்பட்ட பேரணி நேற்று (சனிக்கிழமை) டாத்தாரான் பிஜேயில் மாலை மணி 5.00 க்கு தொடங்கி இரவு மணி 11.45 க்கு அங்கு குழுமியிருந்த மக்கள் நெகாராகு…

சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு எங்கே?

நாட்டின் 13 ஆவது பொதுத் தேர்தல் முடிவுற்று இரண்டு வாரங்களுக்கு மேலாகி விட்டது. மத்திய அரசாங்கம் அமைக்கப்பட்டு விட்டது. பல மாநிலங்கள் அவற்றின் மாநில ஆட்சிக் குழுவை அமைத்து விட்டன. ஆனால், சிலாங்கூர் மாநிலத்தில் இன்னும் ஆட்சிக் குழு அமைக்கப்படவில்லை. சிலாங்கூர் மாநில மந்திரி புசாராக நியமனம் பெற்று…

‘தற்கொலை தொகுதிகள்’ கொடுக்கப்பட்டதாக பிகேஆர் மகளிர் முறையீடு

பிகேஆர் காங்கிரஸ் நேற்று பிகேஆர் மகளிர் கூட்டத்தில் கலந்துகொண்ட பேராளர்களில் சிலர், அண்மைய தேர்தலில் தங்கள் வேட்பாளர்கள் ‘தற்கொலைப் பணிக்கு’ அனுப்பி வைக்கப்பட்டதாகக் குறைப்பட்டுக்கொண்டார்கள். பாகாங் பேராளர் முரினி ஹிடாயா அனுவார், “மகளிர் பகுதிக்கு வெற்றிபெறக்கூடிய தொகுதிகள் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், போட்டி கடுமையாக இருந்த இடங்கள்தாம் கொடுக்கப்பட்டன”,…

ஜாஹிட்: பிஜே பேரணி ‘ஒரு சினமூட்டும் நடவடிக்கை’

இன்று பெட்டாலிங் ஜெயாவில் நடத்தத் திட்டமிட்டுள்ள பேரணியைக் கையாளும் திறமை போலீசுக்கு உண்டு என்று உள்துறை அமைச்சர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி கூறினார். திட்டமிடப்பட்டுள்ள அப்பேரணி 2012 அமைதிப் பேரணிச் சட்டத்தைப் பின்பற்றவில்லை என்றாரவர். இன்று மாலை மணி 5-க்கு எம்கோர்ப் மால் அருகில் உள்ள திடலில் அப்பேரணிக்கு…

‘சீரமைப்புக்காக பெரும்பான்மை மக்களுடன் பிஎன் ஒத்துழைக்க வேண்டும்’

தேசிய இணைக்கத்துக்கு அறைகூவல் விடுக்கும் பிஎன் முதலில் ஜனநாயக சீரமைப்புகளைச் செய்வதில் மாற்றரசுக் கட்சியை ஆதரித்த “பெரும்பான்மை மக்களுடன்’ ஒத்துழைக்க வேண்டும் என பிகேஆர் தலைவர் அசிசான் வான் இஸ்மாயில் வலியுறுத்தினார். “இணக்கம் காண்பதற்குமுன் பெரும்பான்மை மக்களின் குரல் என்ற முறையில், அரசியல் சீரமைப்பு, தேர்தல் சீரமைப்பு, நாடாளுமன்ற…

வேதமூர்த்தி செய்வாரா?

மு. குலசேகரன், நாடாளுமன்ற உறுப்பினர், மே 23, 2013. என். தர்மேந்திரன் அநியாயமாகக் காவல் துறையினரால்  கொடூரமாகக் தாக்கப்பட்டு இறந்துள்ளார் என்பதை அறிந்து வேதனை அடைகிறேன். குகனுக்கு பிறகு மிகவும் மோசாமன கொலை என்று பிகேஆர் துணைத் தலைவர் என். சுரேந்திரன் இக் கொலையை வருணித்திருக்கின்றார். மக்களுக்கு பாதுகாப்பு…

தியான் சுவா, தாம்ரின், ஹேரிஸ் ஆகியோர் விடுவிக்கப்பட்டனர்

பத்து நாடாளுமன்ற உறுப்பினர் தியான் சுவா, எபியு தலைவர் ஹேரிஸ் இப்ராகிம் மற்றும் பாஸ் உறுப்பினர் தாம்ரின் காஃபார் ஆகியோரை போலீஸ் ரிமாண்டில் வைப்பதற்கு இன்று போலீஸ் செய்து கொண்ட மனுவை மஜிஸ்திரேட் நிராகரித்ததைத் தொடர்ந்து அவர்கள் விடுவிக்கப்படவிருக்கின்றனர். அந்த மூவரும் ஜிஞ்ஜாங் போலீஸ் நிலையத்திலிருந்து விடுவிக்கப்படுவதற்கு தயாராகிக்…

அஸ்மின்: கைது நடவடிக்கை மகாதிரிசம் திரும்புவதைக் காண்பிக்கிறது

அண்மையில் மாற்றரசுக் கட்சித் தலைவர்களும் ஜனநாயக-ஆதரவு சமூக ஆர்வலர்களும் கைது செய்யப்பட்டது, மாற்றுக்கருத்துக் கொண்டோருக்கு வாய்ப்பூட்டு போடப்பட்ட ‘மகாதிரிசம்’ மறுபடியும் தலையெடுப்பதற்கான அறிகுறியாகும் என பிகேஆர் கூறுகிறது. முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் காலத்தில் “சிவில் உரிமை பற்றிப் பேசியவர்கள்” தடுத்து வைக்கப்பட்டனர். நேற்று பலர் கைது செய்யப்பட்ட…