‘அலியாஸ் அவர்களே தயவு செய்து பாஸ்போர்ட் சட்டத்தைப் படியுங்கள்’

உங்கள் கருத்து : 'அகோங்/அல்லது மலேசிய அரசாங்கத்துக்கு எதிராக செயல்படுகின்றவர்களுக்கு மட்டுமே தேச  நிந்தனைச் சட்டம் பொருந்தும்' வெளிநாடுகளில் 'நாட்டின் தோற்றத்துக்கு' களங்கம் விளைவிக்கின்றவர்கள் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்படுவர். சோபிமோர்: முதலாவதாக வெளிநாடுகளில் பேரணிகளில் கலந்து கொண்டதற்காக மலேசிய பிரஜை  ஒருவருடைய பாஸ்போர்ட்டை குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர்…

ஸாஹிட் பதவி துறக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை

உள்துறை அமைச்சர் அகமட் ஸாஹிட் ஹமிடி பதவி துறக்க வேண்டும் எனக் கோரி உள்துறை அமைச்சுக்கு வெளியில் 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரசியல் நோக்கத்துடன் அண்மைய காலமாக அரசியல்வாதிகளும் சமூகப் போராளிகளும் கைது செய்யப்பட்டதாக கூறிக் கொண்டு  அதற்காக  ஸாஹிட் பதவி விலக வேண்டும் என…

நுருல்: அன்வார், கிட் சியாங் ஆகியோரும் சாபா கறுப்புப் பட்டியலில்…

லெம்பா பந்தாய் எம்பி நுருல் இஸ்ஸா அன்வார், சாபா குடிநுழைவுத்துறையின் கறுப்புப் பட்டிலில் பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம், டிஏபி பெருந் தலைவர் லிம் கிட் சியாங் ஆகீயோரின் பெயர்களும் இருக்கும் என நம்புகிறார். நேற்றிரவு கோட்டா கினாபாலு விமான நிலையத்தில் தம்மைத் தடுத்து நிறுத்திய குடிநுழைவுத்…

ஆர்ஒஎஸ் இயக்குநர் ‘பொய்யர்’ என டிஏபி வருணனை

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நிகழ்ந்த டிஏபி கட்சித் தேர்தல்கள் மீதான தனது விசாரணைகள்  தொடர்பில் கட்சிக்கு எதிராக 'விருப்பம் போல் குற்றச்சாட்டுக்களை' அடுக்கும் 'பொய்யர்' என டிஏபி  ஆர்ஒஎஸ் என்ற சங்கப்பதிவதிகாரி அலுவலக இயக்குநர் அப்துல் ரஹ்மான் ஒஸ்மானை  வருணித்துள்ளது. விசாரணைகள் நிறைவு பெறுவதற்கு முன்னரே அந்தப்…

இடைநீக்கம் செய்யப்பட வேண்டும் என்ற வேதா யோசனையை ஸாஹிட் ஒப்புக்…

போலீஸ் தடுப்புக் காவல் மரணங்கள் தொடர்பில் விசாரிக்கப்படும் போலீஸ் அதிகாரிகள்  படையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட வேண்டும் என ஹிண்ட்ராப் தலைவர் பி வேதமூர்த்தி  தெரிவித்த யோசனையை உள்துறை அமைச்சர் அகமட் ஸாஹிட் ஹமிடி ஒப்புக் கொள்கிறார். "அந்தக் கருத்து நியாயமானது என நான் நினைக்கிறேன்," என காஜாங்கில் இன்று…

பலிகடா ஆக்கப்பட்டதாகக் கூறிக்கொள்கிறார் கீர்

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் அரசாங்கம்  கைச்சுத்தமானது எனக் காண்பித்துக்கொள்ள தாம் பலிகடா ஆக்கப்பட்டிருப்பதாகக் கூறுகிறார் சிலாங்கூரின் முன்னாள் மந்திரி புசார் டாக்டர் முகம்மட் கீர் தோயோ. அவருக்கு விதிக்கப்பட்டிருந்த 12-மாதச் சிறைத்தண்டனையை மேல்முறையீட்டு நீதிமன்றம் நேற்று உறுதிப்படுத்தியதை அடுத்து இன்று தம் வலைப்பக்கத்தில் பதிவிட்டிருந்த கீர், கூட்டரசு…

சாப்வான் இரண்டு நாட்கள் சிறையில் இருந்த பின்னர் ஜாமீனில் விடுதலை

மாணவர் போராளி முகமட் சாப்வான் அனாங், 5,000 ரிங்கிட் ஜாமீன் தொகை செலுத்திய பின்னர் இன்று  விடுவிக்கப்பட்டதாக அவரது மனைவி மஸ்துரா அபு பாக்கார் தெரிவித்துள்ளார். இன்று காலை மணி 10.30 வாக்கில் ஜாலான் டூத்தா நீதிமன்ற வளாகத்தில் சாப்வானை அவரது இளைய  சகோதரர் ஜாமீனில் எடுத்ததாக மஸ்துரா…

சிஇசி தேர்தல் குறித்து டிஏபி உறுப்பினர் பலருக்குத் தெரிவிக்கப்படவில்லை

கடந்த ஆண்டு டிசம்பர் 15-இல் நடைபெற்ற டிஏபி தேசிய காங்கிரசில் கலந்துகொள்ள தகுதிபெற்ற உறுப்பினர்கள் பலருக்குக் கூட்டம் பற்றித் தகவல் தெரிவிக்கப்படவில்லை.  இது சங்கப் பதிவதிகாரி (ஆர்ஓஎஸ்) அலுவலகம் மேற்கொண்ட விசாரணையிலிருந்து தெரிய வந்துள்ளதாக ஆர்ஓஎஸ் தலைமை இயக்குனர் அப்துல் ரஹ்மான் ஒத்மான் கூறினார். கூட்டம் பற்றிய அறிவிக்கைகளைப்…

குற்றச்செயல்களைத் தடுக்க மோட்டார்சைக்கிள்-அற்ற பகுதிகள்

குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நகரங்களில் மோட்டார்சைக்கிள்-அற்ற பகுதிகளை உருவாக்க போலீஸ் அரசாங்கத்திடம் பரிந்துரைக்கும். நேற்று, எஸ்ட்ரோ அவானியில் ஒரு நேர்காணலில் கலந்துகொண்ட தேசிய போலீஸ் படைத் தலைவர் காலிட் அபு பக்கார், குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்துவதற்கு உதவும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ள பல்வேறு “கடுமையான” நடவடிக்கைகளில் இதுவும் ஒன்றாகும் என்றார். “தெருக்…

“உண்மை கசக்கிறது. அதனால் மலேசியாகினியைத் தடை செய்யுங்கள்”

"சுல்கர்னெயின் அறிக்கை மலேசிய இளம் பத்திரிக்கையாளர் மன்றத்தின் (KWMM) நிலைக்களன்களாக  இருக்க வேண்டிய இதழியல் துறையையும் சுதந்திரமான ஊடக முறையையும் கேலிக் கூத்தாக்கியுள்ளது." "மலேசியாகினியை தடை செய்யுங்கள் அல்லது அதற்கு கட்டுப்பாடுகளை விதியுங்கள்" இனி என்ன ?: மலேசியாகினி செய்திகளை வெளியிடுவதில் பாகுபாடு காட்டுவதாகவும் அதனால்  நாட்டின் நிலைத்தன்மையை…

அம்னோ எம்பி: 13வது பொதுத் தேர்தல் பிஎன் கூட்டணியின் ‘பலவீனத்தை’…

பிஎன் கூட்டணியில் காணப்படுகின்ற 'பலவீனத்தை' அண்மைய 13வது பொதுத் தேர்தல்  அம்பலப்படுத்தி விட்டதாக அம்னோ பூலாய் எம்பி நூர் ஜஸ்லான் கூறுகிறார். தேர்தல் பிரச்சாரச் செய்திகளை வழங்குவதற்கு பிஎன் -னைக் காட்டிலும் பக்காத்தான் ராக்யாட் சமூக  ஊடகங்களை மிகவும் நன்றாகப் பயன்படுத்திக் கொண்டது என அவர் கோலாலம்பூரில் சொன்னார்.…

‘சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழுவில் இரண்டு இந்தியர்கள் இருக்க வேண்டும்’

பொதுத் தேர்தல் முடிந்து கிட்டத்தட்ட மூன்று வாரங்களுக்குப் பின்னர் இன்று (30.05.2013) சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. அப்பட்டியலில் ஒரே ஒரு இந்தியர் மட்டுமே இடம் பெற்றுள்ளார். இது பெருத்த ஏமாற்றம் அளிக்கிறது என்று இன்று பின்னேரத்தில் கோலாலம்பூரில் நடைபெற்ற ஒரு செய்தியாளர் கூட்டத்தில்…

கீர் தோயோ குற்றவாளி என்ற தீர்ப்பு நிலைநிறுத்தப்பட்டது

மேல்முறையீட்டு நீதிமன்றம், முன்னாள் மந்திரி புசார் டாக்டர் முகம்மட் கீர் தோயோ, ஷா ஆலமில் விலைமிக்க   இரண்டு வீட்டு மனைகளையும் ஒரு வீட்டையும் பெற்றதில் ஊழல் செய்துள்ளார் என்ற தீர்ப்பை நிலைநிறுத்தியுள்ளது. நீதிபதி அபு சாமா நோர்டின் தலைமையில் கூடிய மூவரடங்கிய மேல்முறையீட்டு நீதிமன்றம் ஒருமுகமாக  அத்தீர்ப்பை வழங்கியது.…

சம்பந்தப்பட்ட போலீசாரைப் பணி இடைநீக்கம் செய்ய வேதா கோரிக்கை

தடுப்புக் காவலில் நிகழ்ந்த என். தரமேந்திரன் மரணம் தொடர்பில் விசாரிக்கப்பட்டு வரும் போலீஸ் அதிகாரிகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட மென்மையான நடவடிக்கையைச் சாடிய பிரதமர்துறை துணை அமைச்சர் பி.வேதமூர்த்தி,  இப்படிப்பட்ட நடவடிக்கை போலீஸ்மீதுள்ள மக்களின் நம்பிக்கையைக் குறைத்து விடும் என்று கூறியுள்ளார். கொலை என்பது  பிணையில் விடமுடியாத ஒரு கடுமையான…

ஜிஎஸ்டி அண்மைய எதிர்காலத்தில் அமல்படுத்தப்படாது

பொருள், சேவை வரியை அண்மைய எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்த அரசாங்கம் எண்ணவில்லை. ஏனென்றால், அந்த வரியால் ஏற்படக்கூடிய தாக்கத்தையும் வரியின் விகிதாசாரம் பற்றியும் அது இன்னமும்  ஆராய்ந்து கொண்டிருக்கிறது. அதன்மீது ஒரு முடிவுக்கு வருமுன்னர், அரசியல்வாதிகள், தனியார் துறையினர், பொதுமக்கள் ஆகிய தரப்புகளுடன் அரசாங்கம் கலந்து ஆலோசித்து வருவதாக இரண்டாவது…

வெளிநாடுகளில் நாட்டின் பெயரைக் கெடுக்கும் மலேசியர்கள் கறுப்புப் பட்டியலிடப்படுவார்கள்

மற்றவற்றோடு  “நாட்டின் தோற்றத்துக்குக் களங்கம் உண்டுபண்ணிய” 6,564 மலேசியர்களின் கடப்பிதழ்கள் இரத்துச் செய்யப்படும். சம்பந்தப்பட்டவர்கள், 1966 கடப்பிதழ் சட்டத்தின்படி மூன்றிலிருந்து ஐந்தாண்டுகள்வரை நாட்டைவிட்டு வெளியேறத் தடை விதிக்கப்படும் என குடிநுழைவுத் துறை தலைமை இயக்குனர் அலியாஸ் அஹ்மட் கூறினார். வெளிநாட்டுக் குடிநுழைவுச் சட்டங்களை மீறியவர்கள், வெளிநாடுகளில் குற்றம் செய்தவர்கள்…

இசி, பேசுவதற்கு நேரமில்லை, நீதிமன்றத்தில் சந்திப்போம்

உங்கள் கருத்து:  ‘சமசரத்துக்கு இடமில்லை. இசி தலைவர்கள் போகத்தான் வேண்டும். அவர்களுடன் பேச்சு நடத்துவதில் பயனில்லை.  அதுதான் பேச வேண்டியதையெல்லாம் தேர்தலுக்குமுன்பே பேசி விட்டோமே’ தேர்தல் மோசடி என்று கூறப்படுவதன் தொடர்பில் ரபிஸியைச் சந்திக்க இசி தயார் நியாயவான்: தேர்தல் ஆணையம் (இசி) உண்மையிலேயே பிகேஆர் வியூக இயக்குனர்…

சிலாங்கூரில் நாட்டின் முதலாவது பெண் சட்டமன்றத் தலைவர் நியமனம்

டிஏபி-இன் ஹன்னா இயோ (சுபாங் ஜெயா), சிலாங்கூர் சட்டமன்றத் தலைவராகி ஒரு வரலாறு படைத்துள்ளார். பிகேஆரின் நிக் நஸ்மி நிக் அஹ்மட் (ஸ்ரீசித்தியா) சட்டமன்றத் துணைத் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சிலாங்கூர் அரசு இன்று காலை அதன் ஆட்சிக்குழுவை அறிமுகப்படுத்தியது. மந்திரி புசார் அப்துல் காலிட் இப்ராகிம், அவரது…

தர்மேந்திரனின் தகப்பனாருக்கு “இரகசிய” அழைப்பு

போலீஸ் தடுப்புக் காவலில் இறந்து போன என். தர்மேந்திரனின் குடும்பத்தினருக்கு தமது அதிகாரி ஒருவர் தொலைபேசி வழியாக தொடர்பு கொண்டது வழக்கை நீதிமன்றத்திற்கு வெளியில் தீர்ப்பதற்காக அல்ல, உதவு வழங்குவதற்காகத்தான் என்று பிரதமர் துறை அமைச்சர் விளக்கம் அளித்தார். "அடிப்படை மனித உரிமை அனைவரின் உரிமையாகும். இதன் அடிப்படையில்தான்…

பெர்சே: பெர்சே 4.0 பேரணிக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை

பெர்சே 4.0 பேரணியை ஏற்பாடு செய்வதாகக் கூறப்படுவதைத் தூய்மையான, நியாயமான தேர்தல்களுக்காக போராடும் பெர்சே 2.0 அமைப்பு மறுத்துள்ளது. பேரணி ஏற்பாடு செய்யும் நோக்கம் எதுவும் தங்களுக்கு இல்லை என பெர்சே 2.0 இயக்கக்குழு உறுப்பினர் வொங் சின் ஹுவாட்(கீழே) மலாய் மெயில் நாளேட்டிடம் கூறினார். அதற்குப் பதிலாக…

வேதாவின் நியமனத்துக்கு என்ஜிஓ-கள் ஆதரவு

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் தம் அமைச்சரவையில் பி.வேதமூர்த்தியை ஒரு துணை அமைச்சராக நியமனம் செய்திருப்பதை இந்திய என்ஜிஓ-கள் அடங்கிய குழு ஒன்று வரவேற்றுள்ளது. வேதமூர்த்தி துணை அமைச்சராக நியமிக்கப்பட்டதற்குப் பலர் கண்டனமும் தெரிவித்துள்ளனர். அவரின் சகோதரர் உதயகுமார் அதைக் கடுமையாகக் குறைகூறியதுடன் அவர் “புதிய சாமிவேலு” என்றும்…

தடுப்புக்காவல் மரணம் பற்றி விசாரிக்க தனி போலீஸ் வாரியம் ஏற்கத்தக்கதல்ல

தடுப்புக் காவல் மரணங்களைத் தடுக்க போலீசிலேயே தனி வாரியம் அமைக்கும் ஆலோசனை அபத்தமானது என்று ஒதுக்கித் தள்ளும் டிஏபி ஆலோசகர் லிம் கிட் சியாங், தேவை போலீஸ் புகார்கள் மற்றும் ஒழுக்கக்கேட்டை விசாரிக்கும் சுயேச்சை ஆணையம் (ஐபிசிஎம்சி) தான் என்பதை வலியுறுத்தியுள்ளார். இன்ஸ்பெக்டர் ஜெனரல் அப் போலீஸ் (ஐஜிபி)…

பக்காத்தான் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள்மீது தேச நிந்தனைக் குற்றச்சாட்டு

பிகேஆர் உதவித் தலைவர் தியன் சுவா, பாஸ் உறுப்பினர் தாம்ரின் அப்துல் காப்பார், எபியு தலைவர் ஹேரிஸ் இப்ராகிம்,சமூக ஆரவலர் ஹிஷாமுடின் ரயிஸ், மாணவப் போராளி சஃபான் ஆனாங் ஆகியோர் தேச நிந்தனை கருத்துகளைத் தெரிவித்தார்கள் என இன்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டனர். இன்று முன்னேரம் கேஎல் செஷன்ஸ்…